தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கமும் சென்னை அண்ணாப் பல்கலைக்கழுகமும் இணைந்து 23 ஜீன் 2023 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழரின் கட்டடக்கலை என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டுக்கருத்தரங்கில் பேராசிரியர்கள் முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் மீனா சந்திரசேகரன் மூவரும் முத்தைரையர் மன்னர்களில் கல்வெட்டுக்குறித்து ஆய்வுக்கட்டுரை வழங்கிய நிகழ்வு.
செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் 2023, மார்ச் 14 முதல் 23 வரை பத்து நாட்கள் இயற்கை மொழி ஆய்வில் செம்மொழித் தமிழ் என்ற பொருணமையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன. இந்தப் பத்து நாள் பயிலரங்கில் 18 -3- 2023 அன்று இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் ’மின் ஊடகங்களில் சங்க இலக்கிய உருவாக்கமும் பயன்பாடுகளும்’ என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார். இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் 30 பேர் கலந்து கொண்டனர்
இப்பயிற்சியில் சங்க இலக்கியங்களை எவ்வாறு நாம் மின்னூடகங்களில் பதிவேற்றம் செய்வது என்பது குறித்து பயிற்சியாகவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
இப்ப பயிற்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் ஒரு வலைப்பதிவை உருவாக்கி அதில் சங்க இலக்கிய நூற்பாக்களையும், உரைகளையும் உள்ளீடு செய்து பயன்பெற்றனர்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் தேவி, நிரலாளர்கள் முனைவர் இரா. அகிலன், முனைவர் கார்த்திக் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை ஒருங்கிணைத்தார்கள்
அன்றைய நிகழ்வில் காலை ஆய்வாளர் பட்டாபிராமன் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார்.
நிரலாளர் முனைவர் கார்த்திக் NIT பேராசிரியர் முனைவர் ஆனந்தகுமார் முனைவர் பட்டாபிராமன் முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் இரா.அகிலன்
இந்நிகழ்வில் உரை வழங்குவதற்காக மங்களூர் NIT பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் முனைவர் ஆனந்தகுமார், பட்டாபிராமன், இரா.அகிலன், கார்த்திக் அவர்களோடும் கணினித்தமிழ் குறித்து விவாதித்தோம்.
குளித்தலை (ஐயர்மலை) அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லூரியில் தமிழ்துறையின் சார்பாக 17 -03- 2023 அன்று
இணையதமிழ் குறித்து மாணவர்களுக்கு உரை வழங்கினேன்.
இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் அர.ரவிச்சந்திரன்
அவர்கள் தலைமை உரையாற்றினார்.
பேராசிரியர் வைரமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். அறிமுக உரையாக முனைவர் பெ.
முருகானந்தம் அவர்கள் வழங்கினார்கள்.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வரவேற்புரை ஆற்றிய தமிழ் துறை
தலைவர் முனைவர் ஆ. ஜெகதீசன் அவர்கள் இன்றைய தொழில்நுட்பத்தின் பயன்கள்
குறித்துச் சுறுக்கமாக வழங்கினார். நிறைவாக இணைய தமிழ்
ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் அறிவு மேம்படுத்தழில் தமிழ் மென்பொருள்கள்
என்ற தலைப்பில் உரை வழங்கினேன். இனி வரும் காலங்களில் மாணவர்களுடைய படைப்புகளை
இணையம் வாயிலாக வெளியிட்டு மாணவர்களது ஆழ்ந்த சிந்தனைகளை வெளிக்கோண்டுவர வேண்டும் என்று
பேசினேன்.
அனைவருக்கும் இனிய வணக்கம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இப்பயிலரங்கில் கலந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்
கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி
காமஞ் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவு முளவோநீ யறியும் பூவே.
Center for Development of Tamil in Engineering and Technology Anna University Chennai. 600 025
தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநரகம் மற்றும்
அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ்
வளர்ச்சி மையம் இணைந்து இரண்டு நாட்கள்(03,04 -03-2023) தொழில்நுட்ப தமிழ்ப்
பயிலரங்கினை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆடா லவ்லஸ்
அரங்கத்தில் நடத்தினார்கள்.
இந்நிகழ்வில்
அண்ணா பல்கலைகழகத்தில் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட தமிழ் பேராசிரியர்களுக்குத் தொழில்நுட்பம் குறித்த
விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறியியல் மாணவர்களுக்கு எவ்வாறு தொழில்நுட்பங்களைக் கொண்டு பாடம் கற்றுக்கொடுக்க
வேண்டும் என்ற பொருண்மையில் நிகழ்வு நடந்தது.
இணையத்தமிழ்ப்
பயன்பாடுகள் குறித்து நான் காணொலி(ளி) வழி பயிற்சி அளித்தேன். இப்பயிற்சியில் இணையத்தமிழ்
வரலாறு, தமிழ் எழுத்துரு வரலாறு, தமிழ் வலைப்பதிவின் முக்கியத்துவம், தமிழ் விக்கிப்பீடியாவைப்
பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்துதல் போன்ற உட் பிரிவுகளில் விளக்கம்
அளித்தேன்.
இந்நிகழ்வில்
அண்ணாப் பல்கலைக்கழகத்தால் தேர்வு செய்யப்பட்ட தமிழ் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு
மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சிப்பெற்றனர்.
நிகழ்வைத் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் பா. உமாமகேஸ்வரி அவர்கள்
ஒருங்கினைப்பு செய்தார். நிகழ்வில் கணினித்தமிழ் விருதாளரும் பேரா. நா.தெய்வசுந்தரம்
அவர்களும் சிறப்புரை வழங்கினார்.
மேலும் பேரா.ஜானகி, மணிகண்டன் மற்றும் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.
தமிழ்நாடு
அரசின் தமிழ்வளர்ச்சித்துறை ஏற்பாடு செய்திருந்த தமிழ் ஆட்சிமொழிச் சட்டவார
நிகழ்வில் பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் அரசு
அலுவலர்களுக்குக் கணினித்தமிழின் இன்றையத்தேவை விளக்கிக் கூறினேன். பயிற்சியில்
கலந்துகொண்ட அலுவலர்கள் ஒவ்வொருவரும் பயிற்சியின் மூலம் தெளிவுபெற்றனர்.
1. ஒருங்குறிப் பயன்பாடு
2. தமிழ் எழுத்துரு செயலி பதிவிறக்கம் செய்தல்
3. தமிழ்99 விசைப்பலகையின் முக்கியத்துவம்
5. பல்வேறு தமிழ் எழுத்துருக்களை யூனிகோடு
எழுத்துருவிற்கு மாற்றுதல்
தொடர்பான
கருத்துருவில் பயற்சி வழங்கினேன்.
தொடர்ந்து கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜ. பரசுராமன் அவர்கள் தொழில்நுட்பங்களில் இன்றைய வளர்ச்சி குறித்துச் சுருக்கமாக தெளிவுப் படுத்தினார்.
முதல் அமர்வில், முனைவர் துரை. மணிகண்டன் அவர்கள் தமிழ் மென்பொருள்களின் உள்ளடக்கங்கள் என்ற தலைப்பில் உரை வழங்கினார்.
தமிழ் மென்பொருள்களின் வரலாறு, அதன் தோற்றம் வளர்ச்சி குறித்தும், இன்று தமிழ் மென்பொருளாக வளம் வந்து கொண்டிருக்கின்ற மென்தமிழ் சொல்லாளர், பொன்மொழி, பொன்விழி, ஒற்றன், அழகி, யாப்பு மென்பொருள், ஓவன், போன்ற மென்பொருள்களின் பயன்பாடுகளை இணைவழியில் மாணவர்களுக்குப் பயிற்சி மூலம் வழங்கினார்.
தொடர்ந்து இரண்டாவது அமர்வில் திருவாடனை அரசு கலைக்கல்லூரி தமிழ்த் துறை தலைவர் மு. பழநியப்பன் அவர்கள் இணையதமிழ் கடல் என்ற தலைப்பில் உரை வழங்கினார். இன்று இணையத்தில் கிடைக்காத எந்த செய்தியும் இல்லை என்பதை மிகச் சுருக்கமாக பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார். தொடர்ந்து இரண்டாவது நாள் நிகழ்வு கல்லூரியின் உதவி பேராசிரியர் முனைவர் சு.வாசகி அவர்கள் இணையத்தமிழ் வலைப்பக்கம் உருவாக்கமும் விரிவாக்கம் என்ற தலைப்பில் உரை வழங்கினார். திரு கார்த்திகேயன் வலைப்பக்கம் உருவாக்கமும் அதன் மூலம் வருமான ஈட்டுதலும் என்ற தலைப்பில் மாணவர்களுக்குப் பயிற்சியை வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் ஐந்திற்கும் மேற்பட்ட கல்லூரியைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயிற்சிப்பெற்றனர்.
ஆட்சிமொழிப் பயிலரங்கம்
தமிழ் வளர்ச்சித் துறையின்
சார்பாக கணினித்தமிழ்ப் பயிற்சி - கன்னியாகுமரி மாவட்ட அலுவலர்களுக்கு....
கன்னியாகுமரி
மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும், சிறப்புமாக 07,08- 02
– 2023 ஆகிய இரு தினங்களில் கன்னியாகுமரி (நாகர்கோவில்) மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
07-02-2023 அன்று கன்னியாகுமரி
மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி அ.சிவப்பிரியா அவர்கள்
தலைமையில் நிகழ்வு தொடங்கியது. கன்னியாகுமரி மாவட்ட தமிழ்
வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திருமதி செ.கனகலட்சுமி அவரகள்
வரவேற்புரை வழங்கினார்.
முதல் அமர்வில் முனைவர் கா. சரவணன்
அவர்கள் ஆட்சி மொழி வரலாறும் சட்டமும் என்ற தலைப்பில் அலுவலர்களுக்கு சட்டம்
குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
அன்று மதியம் தமிழ் வளர்ச்சித்
துறை உதவி இயக்குனர் திருமதி செ. கனகலட்சுமி
அவர்கள் ஆட்சி மொழி அரசாணைகளும் செயலாக்கமும் என்ற பொருள் உரை வழங்கினார்
திருவாரூர் முதுகலை
தமிழாசிரியர் இராசகணேசன் அவர்கள் தமிழில்
குறிப்புகள் வரைவுகள் செயல்முறை ஆணைகள் அணியம்மாக்கள் என்ற தலைப்பில்
அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினார்.
தொடர்ந்து 08-02-2023 இரண்டாம் நாள் நிகழ்வில் முதுகலை தமிழாசிரியர் திரு கோமல் தமிழ் முதல்வன் அவர்கள் அலுவலர்களுக்கு கோப்புகளை எழுத தேவைப்படும் மொழி பயிற்சியை வழங்கினார்.
தமிழ் வளர்ச்சித் துறையின்
உதவி இயக்குநர் திருமதி செ.கனகலட்சுமி அவர்கள் இணையத்தமிழ்
ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்களுக்குச் சிறப்புச் செய்தார்.
இணையத்தமிழ் ஆய்வாளரும்
பேராசிரியருமான முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் இணையத் தமிழக் (கணினித்தமிழ்) குறித்த உரையைப் பயிற்சியுடன் வழங்கினார்.
பயிற்ச்சியல் கலந்துகொண்டவருகள் அனைவருக்கும்
ஒருங்குறியில் தட்டச்சு செய்து கோப்புகளை அனுப்புவது? எப்படி? என்று பயிற்சி
வழங்கப்பட்டது. பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு சந்தேகங்களை என்னிடம் முன்
வைத்தனர். அனைத்திற்கும் கணினிவழியில் தெளிவான முறையில் விளக்கம் அளித்தேன்.
நிகழ்வின் இறுதியாக கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் பி. என். ஸ்ரீதர் அவர்கள் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி கருத்துரை வழங்கினார்.
நிகழ்வில் பரிசு வழங்கி சிறப்பித்த மாவட்ட ஆட்சியர்
இந்நிகழ்வில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் 100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகளைப் பெற்றனர்.
தமிழ் வளர்ச்சித் துறையின்
சார்பாக கணினித்தமிழ் பயிற்சி - திருவாரூர் மாவட்ட அலுவலர்களுக்கு....
திருவாரூர் மாவட்டம்
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும், சிறப்புமாக ஜனவரி 5,6 – 2023
ஆகிய இரு தினங்களில் திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ் வளர்ச்சித் துறையின்
உதவி இயக்குநர் திருமதி
செ.கனகலட்சுமி அவர்கள் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன்
அவர்களுக்குச் சிறப்புச் செய்தார். உடன் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக
தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் ப. வேல்முருகன் அவர்களும் உரை வழங்க
வருகைதந்திருந்தார்.
இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துறைகளில்
பணியாற்றும் அரசு அலுவலர்கள் 100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பல்வேறு துறை
சார்ந்த பயிற்சிகளைப் பெற்றனர்.
இதனடிப்படையில் இரண்டாம்
நாள் நிகழ்வின் தொடக்கமாக 06-01--2023- அன்று இணையத்தமிழ் ஆய்வாளரும் பேராசிரியருமான முனைவர் துரை மணிகண்டன் அவர்கள்
இணையத் தமிழக் (கணினித்தமிழ்) குறித்த உரையைப் பயிற்சியுடன் வழங்கினார்.
இப் பயிற்ச்சியில்
ஒருங்குறியில் எவ்வாறு தட்டச்சு செய்வது? ஒருங்குறி எழுத்துருவைப்
பயன்படுத்தி அலுவலக கோப்புகளை அனுப்பவது? தமிழக அரசு தரப்படுத்தியுள்ள
தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்தும் முறை, மருதம் ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்துதல் குறித்த இணையவழியாக
நேரடியாகப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஆர்வமுடன் பலர் எழுத்துருவைப்
பதிவிறக்கம் செய்து தட்டச்சு செய்து காட்டினார்கள்.
ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் நெல்லூர் சத்யமூர்த்தி சுப்ரமண்யன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு 19-01-2023 அன்று நடைபெற்றது. நிகழ்வின் முன்னதாக, தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ப.சண்முகம் அவர்கள் வரவேற்புரை நல்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ம.பிச்சைமணி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். துணைமுதல்வர் முனைவர் ஸ்ரீரா.சத்தியநாராயணன் அவர்கள் நிகழ்விற்கு முன்னிலை வகிக்க கலைப்புல முதன்மையர் முனைவர் ச.லெட்சுமி அவர்கள் வாழ்த்துரை நல்கினார்.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர் அரசு கலைக் கல்லூரி (நவலூர் குட்டப்பட்டு) தமிழாய்வுத்துறைத் தலைவர், இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் தொழில்நுட்பங்களில் தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் தமிழ் மென்பொருள்களின் பயன்பாடுகள் குறித்து மென்தமிழ் சொல்லாளர், பொன்விழி, யாப்பு மென்பொருள் பற்றிய விவரங்களை மாணவர்களுக்குப் பயிற்சி மூலம் விளக்கினார்.
நிகழ்வில் புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பிற துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்கள். நிகழ்வினை தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் திரு.சு.திருக்குமார் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக கணினித்தமிழ் பயிற்சி - பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட அலுவலர்களுக்கு....
தமிழ் வளர்ச்சித் துறையின் மேனாள் உதவி இயக்குநர் முனைவர் க.சிவசாமி அவர்கள் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்களுக்குச் சிறப்பு செய்தார். அருகில் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குநர் க.சித்ரா அவர்கள்
பெரம்பலூர் மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும், சிறப்புமாக டிசம்பர் 15,16 - 2022 ஆகிய இரு தினங்களில் பெரம்பலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் 100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த
பயிற்சிகளைப் பெற்றனர்.
இதனடிப்படையில் இரண்டாம் நாள் நிகழ்வின் தொடக்கமாக 16-12- 2022 அன்று இணையத்தமிழ் ஆய்வாளரும் பேராசிரியருமான
முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் இணையத் தமிழக் (கணினித்தமிழ்) குறித்த உரையை பயிற்சியுடன் வழங்கினார்.
இப்பயிற்ச்சியில் ஒருங்குறியில் எவ்வாறு
தட்டச்சு செய்வது? ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தி அலுவலக கோப்புகளை
அனுப்பவது? தமிழக அரசு தரப்படுத்தியுள்ள தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்தும்
முறை, மருதம் ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்துதல் குறித்த இணையவழியாக
நேரடியாகப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஆர்வமுடன் பலர் எழுத்துருவைப்
பதிவிறக்கம் செய்து தட்டச்சு செய்து காட்டினார்கள்.
இந்த நிகழ்வினை பெரம்பலூர் மாவட்ட தமிழ்
வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி க.சித்ரா அவர்கள் ஒருங்கிணைப்புச்
செய்தார்.
இந்நிகழ்வில் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள் 100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த
பயிற்சிகளைப் பெற்றனர்.
இதனடிப்படையில் இரண்டாம் நாள் நிகழ்வின் தொடக்கமாக 21-12- 2022 அன்று இணையத்தமிழ் ஆய்வாளரும் பேராசிரியருமான முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் இணையத் தமிழக் (கணினித்தமிழ்) குறித்த உரையை பயிற்சியுடன் வழங்கினார்.
இப்பயிற்ச்சியில் ஒருங்குறியில் எவ்வாறு
தட்டச்சு செய்வது? ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தி அலுவலக கோப்புகளை
அனுப்பவது? தமிழக அரசு தரப்படுத்தியுள்ள தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்தும்
முறை, மருதம் ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்துதல் குறித்த இணையவழியாக
நேரடியாகப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஆர்வமுடன் பலர் எழுத்துருவைப்
பதிவிறக்கம் செய்து தட்டச்சு செய்து காட்டினார்கள்.
நிகழ்வின் நிறைவாக அரியலூர் மாவட்ட
ஆட்சித்தலைவர் திருமதி பெ.ரமண சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்ட பயிற்சியில்
கலந்துகொண்ட அலுவலர்களுக்குச்
சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்வினை அரியலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி க.சித்ரா அவர்கள் ஒருங்கிணைப்புச் செய்தார்.