/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, August 28, 2017

கணிப்பொறி பயண்பாடும், இலக்கியமும்

|0 comments


29, 30 /08/2017 அன்று பெண்கள் அரசினர் கலைக்கல்லூரி (கும்பகோணம்) தமிழ்த்துறையில் "கணிப்பொறி பயண்பாடும், இலக்கியமும்"  என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை நடைபெற உள்ளது. ஆர்வம் இருப்பவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம்.



29-08-2017 அன்று கும்பகோணம் அரசினர் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற ”கணிப்பொறியின் பயன்பாடும் இலக்கியமும்” என்ற தலைப்பில் இரண்டுநாள் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரியின் முதல்வர் பா.ஹேமலதா அவர்களின் தலைமையில் சிறபாகத் தமிழ்த்துறை ஏற்பாடு செய்து இருந்தது. நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் ப.செந்தில்குமாரி மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சத்தியா அவர்களும் இணைந்து செயல் பட்டனர்.
நிகழ்வில் இணையத்தமிழ் குறித்த செய்திகளை விரிவாக எடுத்து விளக்கினேன்.
அடுத்து தமிழ்த்தட்டச்சு பயிற்சி, வலைப்பூ உருவாக்கம், செயற்கை அறிவின் இன்றைய நிலை, காணொளி காட்சியைப் பயன்படுத்தும் திறன், முகநூலின் நன்மைகள், பல்வேறு இலக்கியப் பதிவுகள் போன்றவற்றையும் விளக்கினேன்.
தமிழின் பயன்பாட்டு மென்பொருள்களாக பேரா.தெய்வசுந்தரம் அவர்களின் மெந்தமிழ் சொல்லாளர், பேரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மென்பொருள்களும் பயன்படுத்திக் காட்டினேன்.
இறுதியாக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சு.அகிலா நன்றியுரை வழங்கினார்..