/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Latest Post

Saturday, December 30, 2023

VSJ CITY PROPERTIES IN TRICHY. 7010058174

|0 comments


திருச்சிராப்பள்ளியில் நல்ல பிளாட்டுகள் வாங்க VSJ CITY PROPERTIES IN TRICHY. 7010058174 வாங்க. 



மனம் நிறைந்த மனைகள் வாங்கலாம்.



அனைவரின் அன்பு நிறைந்த மனைகள் வாங்கலாம்



எதிர்காலத்தின் முதலீடு மனைகள்

திருச்சிராப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் மனைகள் உள்ளன.



மனைகளை வாங்கிய உடன் புதி வீடுகள் கட்டலாம்

கைராசியான மனை விற்பனைக்கூடம்  VSJ CITY PROPERTIES.

DTCP - RERA  APPROVED PROJECT

ON RODE PROJECT ONLY



ONLY NATIONAL HIGHWAY 


Saturday, October 28, 2023

தமிழ் இணையம் 2023 இணையத்தமிழ் மாநாடு - மதுரை பல்கலைக்கழகம்

|0 comments

                



 தமிழ் இணையம் 2023  இணையத்தமிழ் மாநாடு

அன்புள்ள கணினித் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கணினித் தமிழ் ஆர்வலர்கள் அனைவருக்கும் வணக்கம்.

தமிழ் இணையக் கழகம் மார்ச் 2020-ல் இருந்து இணையத்தமிழ்ச் தொடர் சொற்பொழிவு நடத்தி அதன் தொடர்ச்சியாக சென்ற ஆண்டு கணினித்தமிழ் சார்ந்த உரைகள் நூலக்கி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற 'தமிழ் இணையம் 100' விழாவில் (ISSN) நூலாக வெளியிட்டது. மேலும் கணினித் தமிழ் ஆய்வில் சிறந்த ஒருவருக்கு விருது வழங்கி சிறப்பித்தது.

இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு 'தமிழ் இணையம் 2023' என்னும் பொருண்மையில் மொழியியல் துறை, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை மற்றும் தமிழ் அறித நுட்பியல் உலகாயம்(இலங்கை) ஆகியவற்றுடன் தமிழ் இணையக் கழகம் பன்னாட்டுக் 16 மற்றும் 17 நவம்பர் 2023 அன்று கருத்தரங்கம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி குறித்த விபரம் இதில் இணைக்கப்பட்டுள்ளது.

கணினித் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் கணினித் தமிழ் ஆர்வலர்கள் இந்நிகழ்வில் ஆய்வுக்கட்டுரை வழங்கி பங்கு பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

பான்னாட்டு மாநாடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழுக்களை அறிய பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்

https://tamilinternetacademy.com/confe_1.html

Saturday, September 23, 2023

INDUCTION PROGRAMME FOR UG STUDENTS OF MADURAI KAMARAJ UNIVERSITY

|0 comments

 மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில்  INDUCTION PROGRAMME FOR UG STUDENTS OF MADURAI KAMARAJ UNIVERSITY  24-26 - 07 - 2023 மூன்று நாள் நிகழ்வில்  இணையப்பயன்பாடுகள் என்ற தலைப்பில் உரை வழுங்கியது.





தமிழரின் கட்டடக்கலை வரலாறு - பன்னாட்டுக்கருத்தரங்கு

|0 comments

 தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கமும் சென்னை அண்ணாப் பல்கலைக்கழுகமும் இணைந்து 23 ஜீன் 2023 அன்று சென்னையில் நடைபெற்ற தமிழரின் கட்டடக்கலை என்ற தலைப்பில் நடைபெற்ற பன்னாட்டுக்கருத்தரங்கில் பேராசிரியர்கள் முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் மீனா சந்திரசேகரன் மூவரும் முத்தைரையர் மன்னர்களில் கல்வெட்டுக்குறித்து ஆய்வுக்கட்டுரை வழங்கிய நிகழ்வு.




Saturday, August 5, 2023

தமிழ் இணையப்பயன்பாடுகள் - பயிலரங்கம்

|0 comments

 விவசாயப் பல்கலைக்கழகத்தில் இணையத்தமிழ் பயிற்சி நடைபெற்றது.



Sunday, April 2, 2023

Central Institute of Classical Tamil (CICT) - இயற்கை மொழி ஆய்வில் செம்மொழித் தமிழ் பத்துநாள் பயிலரங்கம்

|0 comments

Central Institute of Classical Tamil (CICT)

                நிகழ்வில் கலந்துகொண்டு பயிற்சிப் பெற்ற மாணவர்களோடு

செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம் சென்னையில் 2023, மார்ச் 14 முதல் 23 வரை பத்து நாட்கள் இயற்கை மொழி ஆய்வில் செம்மொழித் தமிழ் என்ற பொருணமையில் பயிற்சிகள் வழங்கப்பட்டன.   இந்தப் பத்து நாள் பயிலரங்கில் 18 -3- 2023 அன்று இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் மின் ஊடகங்களில் சங்க இலக்கிய உருவாக்கமும் பயன்பாடுகளும் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கினார். இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள் 30 பேர் கலந்து கொண்டனர்


                        ஒருங்கிணைப்பாளர்களில் முனைவர் தேவி - 

இப்யிற்சியில் சங்க இலக்கியங்களை எவ்வாறு நாம் மின்னூடகங்களில் பதிவேற்றம் செய்வது என்பது குறித்து பயிற்சியாகவே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.



இப்ப பயிற்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் ஒரு வலைப்பதிவை உருவாக்கி அதில் சங்க இலக்கிய நூற்பாக்களையும், உரைகளையும் உள்ளீடு செய்து பயன்பெற்றனர்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் பணியாற்றும் முனைவர் தேவி,  நிரலாளர்கள் முனைவர் இரா. அகிலன், முனைவர் கார்த்திக் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை ஒருங்கிணைத்தார்கள்

அன்றைய நிகழ்வில் காலை ஆய்வாளர் பட்டாபிராமன் அவர்கள் கலந்துகொண்டு பயிற்சி வழங்கினார்.

    நிரலாளர் முனைவர் கார்த்திக் NIT பேராசிரியர் முனைவர் ஆனந்தகுமார்                 முனைவர் பட்டாபிராமன் முனைவர் துரை.மணிகண்டன், முனைவர்                     இரா.அகிலன்

இந்நிகழ்வில் உரை வழங்குவதற்காக மங்களூர் NIT பல்கலைக்கழகத்திலிருந்து வருகை தந்திருந்த பேராசிரியர் முனைவர் ஆனந்தகுமார், பட்டாபிராமன், இரா.அகிலன், கார்த்திக்  அவர்களோடும் கணினித்தமிழ் குறித்து விவாதித்தோம்.  


எமது தமிழ்க் கணினி இணையப்பயன்பாடுகள் நூலினை NIT பேராசிரியர் ஆனந்தகுமார் அவர்களிடம் வழங்கிய போது.

Thursday, March 23, 2023

அறிவு மேம்படுத்தலில் தமிழ் மென்பொருட்கள்- குளித்தலை அரசுக் கல்லூரியில் சிறப்புரை

|0 comments

 


குளித்தலை (ஐயர்மலை) அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறையின் சார்பாக 17 -03- 2023 அன்று இணையதமிழ் குறித்து மாணவர்களுக்கு உரை வழங்கினேன்.

இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் அர.ரவிச்சந்திரன்  அவர்கள் தலைமை உரையாற்றினார்.  பேராசிரியர் வைரமூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.  அறிமுக உரையாக முனைவர் பெ. முருகானந்தம் அவர்கள் வழங்கினார்கள்.




நிகழ்ச்சியின் தொடக்கத்தில் வரவேற்புரை ஆற்றிய தமிழ் துறை தலைவர் முனைவர் ஆ. ஜெகதீசன்  அவர்கள் இன்றைய தொழில்நுட்பத்தின் பயன்கள் குறித்துச் சுறுக்கமாக வழங்கினார். நிறைவாக இணைய தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் அறிவு மேம்படுத்தழில் தமிழ் மென்பொருள்கள் என்ற தலைப்பில் உரை வழங்கினேன்.  இனி வரும் காலங்களில் மாணவர்களுடைய படைப்புகளை இணையம் வாயிலாக வெளியிட்டு  மாணவர்களது ஆழ்ந்த சிந்தனைகளை வெளிக்கோண்டுவர வேண்டும் என்று பேசினேன்.





நிகழ்வில் 150 மேற்பட்ட மாணவிகள் மாணவர்கள் கலந்துகொண்டு இணையத்தமிழ் குறித்த செய்திகளைத் தெரிந்துகொண்டனர்.


Saturday, March 18, 2023

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்

|0 comments

 

அனைவருக்கும் இனிய வணக்கம் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இப்பயிலரங்கில் கலந்து கொண்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்






கொங்குதேர் வாழ்க்கை யஞ்சிறைத் தும்பி

காமஞ் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவு முளவோநீ யறியும் பூவே.


Center for Development of Tamil in Engineering and Technology Anna University Chennai.

|0 comments

 

Center for Development of Tamil in  Engineering and Technology Anna University Chennai. 600 025



 தமிழ் வளர்ச்சித் துறை இயக்குரகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையம் இணைந்து இரண்டு நாட்கள்(03,04 -03-2023)  தொழில்நுட்ப தமிழ்ப் பயிலரங்கினை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில்   ஆடா லவ்லஸ் அரங்கத்தில் நடத்தினார்கள்.

இந்நிகழ்வில் அண்ணா பல்கலைகழகத்தில் புதிதாகத் தேர்வுசெய்யப்பட்ட  தமிழ் பேராசிரியர்களுக்குத் தொழில்நுட்பம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொறியியல் மாணவர்களுக்கு எவ்வாறு  தொழில்நுட்பங்களைக் கொண்டு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பொருண்மையில் நிகழ்வு நடந்தது.



இணையத்தமிழ்ப் பயன்பாடுகள் குறித்து நான் காணொலி(ளி) வழி பயிற்சி அளித்தேன். இப்பயிற்சியில் இணையத்தமிழ் வரலாறு, தமிழ் எழுத்துரு வரலாறு, தமிழ் வலைப்பதிவின் முக்கியத்துவம், தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தி மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்துதல் போன்ற உட் பிரிவுகளில் விளக்கம் அளித்தேன்.

இந்நிகழ்வில் அண்ணாப் பல்கலைக்கழகத்தால் தேர்வு செய்யப்பட்ட தமிழ் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்துகொண்டு பயிற்சிப்பெற்றனர்.



நிகழ்வைத்  பொறியியல் தொழில்நுட்பத் தமிழ் வளர்ச்சி மையத்தின் இயக்குநர் முனைவர் பா. உமாமகேஸ்வரி அவர்கள் ஒருங்கினைப்பு செய்தார். நிகழ்வில் கணினித்தமிழ் விருதாளரும் பேரா. நா.தெய்வசுந்தரம் அவர்களும் சிறப்புரை வழங்கினார். 

மேலும் பேரா.ஜானகி, மணிகண்டன் மற்றும்  பேராசிரியர்கள் உடனிருந்தனர்.