/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, December 24, 2018

பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள்.

|0 comments
தமிழ்ப்பல்கலைகழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித்துறையும்  கரூர் காளியம்மாள் கல்வியியல் கல்லூரியும் செந்தமிழ் அறக்கட்டளை திருவில்லிப்புத்தூர் இணைந்த நடத்தும் ஒருநாள் கருத்தரங்கம் பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள் என்ற தலைப்பில் 29/12/2018 அன்று கல்வியியல் கல்லூரியில் நடைபெற்றது. .
29/12/2018 இந்த ஆண்டின் இறுதி நிகழ்வாக நான் கலந்துகொண்டு பன்முகநோக்கில் கல்விச்சிந்தனைகள் என்ற தலைப்பில் கரூர் காளியம்மாள் கல்வியியல் கல்லூரியில் சிறப்புரை வழங்கினேன் நிகழ்வைத் திறம்பட நடத்திய கல்லூரிக்கும், செந்தமிழ் அறக்கட்டளை நிறுவனத்தாருக்கும் , தமிழ்பபல்கலைக்கழக அறிவியில் துறைக்கும் நன்றிகள்.



நிகழ்வில் கலந்துகொண்ட பல்வேறு  கல்வியியல்  கல்லூரி மாணவர்கள்.

நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் சுபாஷினி , முனைவர் ஆ.ராஜேஸ்வரி, முனைவர் க.சிவநேசன், ஆசி.முத்துசாமி, கவிஞர் சுரா, முனைவர் ப.ராஜேஸ், முனைவர் ச.கவிதா.





Sunday, December 16, 2018

USAGE OF INTERNET TAMIL

|0 comments
இணையத்தில் தமிழ் பயன்பாடுகள்
வருகிற 18-12-2018, செவ்வாய்க்கிழமை அன்று தஞ்சாவூர், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக்கல்லூரி (தன்னாட்சி) மற்றும் தமிழ் அநிதம் (அமெரிக்கா) இணைந்து நடத்தவிருக்கும் ‘இணையத் தமிழ்ப் பயன்பாடுகள்’.



நிகழ்வில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாள திராவ்விடமணி தமிழ்த்துறைத் தலைவர் திடவிடராணி , பேராசிரியர் நெடுஞ்செழியன், தமிழ் அநிதம் நிறுவனத்தில் தலைவர் சுகந்திநாடார். முனைவர் துரை,  மாணவன் பிரதாப்.






                                                           நிகழ்வில் தேனி எம்.சுபிரமணி.




                                                 நிகழ்வில் திருமதி சுகந்திநாடார் உரை.

Tuesday, November 20, 2018

Tamil Language and Computer Use.- இணையத்தமிழ் பயிலரங்கம்

|0 comments

கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட Tamil Unlimited நிறுவனமும் இணைந்து "தமிழ்மொழியும் கணினிப்பயன்பாடும்" என்ற தலைப்பில் 14-11-2018  காரியவட்டத்தில் நடத்திய ஒருநாள் பன்னாட்டுப் பயிற்சி வகுப்பு சிறப்புடன் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். அடுத்து துறைத் தலைவர் ஹெப்சி அவர்கள் நோக்கவுரை வழங்கினார். வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் நயினார் அவர்கள்  ஆய்வு நோக்கியதாக இருந்தது. முகநூலில் தட்டச்சு செய்யும்போது ஏற்படும் சிக்கல்கள் அதை நாம் தவிற்க வேண்டிய வழிமுறைகளையும் நயமாக எடுத்து விளக்கினார்கள்.  பயிற்சியின் தொடக்கமாக செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் நிரலாளராகப் பணியாற்றி வரும் முனைவர் அகிலன் அவர்கள் தமிழ் மொழிக்கான  இயற்கை மொழி ஆய்வைப் பற்றி மிக விரிவாக எடுத்து விளக்கினார். மதியம் அமர்வில் பேராசிரியர் காமாட்சி  மொழித் தொழில்நுட்பவழி கணினித்தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

 இறுதியாக முனைவர் துரை.மணிகண்டன் வலைப்பக்கம் உருவாக்குவது எப்படி என்ற பொருண்மயில் மாணவர்களுக்குப் பயிற்சிமூலம் செய்துகாட்டி பல மாணவர்களுக்கு வலைப்பூவை  உருவாக்கிக் கொடுத்து பயிற்சி வழங்கினார். 

நிகழ்வில் பேராசிரியர் குமர செல்வா அவர்கள் தனது மாணவர்களுடன் பயிற்சிக்கு வந்திருந்தார்.

பயிற்சியில் கேரளாவில் பயிலும் தமிழ் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
  




இணையத்தமிழ் பயிற்சியில் பங்குபெற்ற முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வியல் மாணவிகள்.

தமிழ்த்துறைத் தலைவர் ஹெப்சி , முனைவர் துரை.மணிகண்டன்,  பேராசிரியர் குமரசெல்வா,  பேராசிரியர் நயினார், பேராசிரியர் ஜெயகிருஷ்ணன், முனைவர் அகிலன். 



கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் அமெரிக்காவிலுள்ள Tamil Unlimited நிறுவனமும் இணைந்து "தமிழ்மொழியும் கணினிப்பயன்பாடும்" என்ற தலைப்பில் காரியவட்டத்தில் நடத்திய ஒருநாள் பன்னாட்டுப் பயிற்சி வகுப்பில் எனது மாணவர்கள் இருவருடன் கலந்துகொண்டேன். நீண்டகாலத்திற்குப்பின் சந்தித்த பேரா.காமாட்சி, பேராசிரிய நண்பர்கள் துரைமணிகண்டன், நயினார், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் உரைநிகழ்த்தினர். தமிழ்த்துறைத்தலைவர் பேரா. ஹெப்சி நிகழ்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்.

                                                                   பேராசிரியர் நண்பர்களுடன்








இயற்கைமொழி ஆய்வு குற்த்து உரை வழ்ங்கிய முனைவர் அகிலன்.



     வலைப்பூக்கள் உருவாக்கம் குறித்த உரை வழங்கிய முனைவர் துரை.மணிகண்டன்.



இணையத்தமிழ்ப் பயிற்சியில் சான்றிதழ் பெறும் மாணவி..



                                        பயிற்சியில் சான்றிதழ் பெறும் மாணவர்.




சான்றிதழ் பெறும் மாணவன்.

Sunday, November 11, 2018

10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில், 2019

|1 comments



தகை சால் தமிழ் அறிஞர் பெருமக்களே,
வணக்கம்.
உலகத் தமிழ் ஆய்வு மன்றம் (IATR) தொடங்கப்பட்ட 1964-ஆம் ஆண்டு முதல் இதுவரை ஒன்பது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடுகள் நடைபெற்றுள்ளன. நடைபெற்ற மாநாடுகளில் பெரும்பாலானவை அரசியல் தொடர்போடும் அரசாங்கத் துணையோடும் நடத்தப்பட்டன. மன்றத்தின் முதன்மையான நோக்கமான தமிழ் ஆய்வுக்கு முதலிடம் கொடுத்து அடுத்துவரும் 10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு சிகாகோவில், 2019 ஆம் ஆண்டு, சூலைத் திங்கள் 3 முதல் 7-ஆம் நாள் வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் துணையோடு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை (FeTNA), சிகாகோ தமிழ்ச் சங்கத்துடன் (CTS) இணைந்து நடைத்த உள்ளது.
உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் முதன்மையான நோக்கம்:
“பொதுவாகத் திராவிடம் பற்றியும் சிறப்பாகத் தமிழ் பற்றியும் செய்யப்படும் ஆய்வுகள் பல்வேறு துறைகளில் அறிவியல் முறையில் செய்வதற்கான ஊக்குவித்தலும், இவற்றோடு தொடர்புடைய பிற துறைகளில் ஆய்வுகள் செய்து வரும் அறிஞர் பெருமக்களோடும், உலக நிறுவனங்களோடும் நெருங்கிப் பங்கு கொள்ளலும் ஆகும்.”
இம்மன்றத்தின் தலையாய நோக்கமே 10-ஆம் உலகத் தமிழ் மாநாட்டின் அடிப்படை நோக்கமாக அமைந்துள்ளது: “தமிழினம், தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, நாகரிகம் ஆகியவற்றின் தொன்மை, தற்கால இலக்கியம், தமிழ்க் கணிமை ஆகியன குறித்து புது வரலாற்றியல் நோக்கிலும், அறிவியல் அடிப்படையிலும், ஒப்பியல் முறையிலும் ஆய்வு செய்தல்.” இவை பற்றிய உண்மைகளை உலகம் அறிதல் வேண்டும் என்பது இம் மாநாட்டின் தலையாயக் குறிக்கோள். ஆய்வுக் கட்டுரையின் தலைப்புகளும் அதனின் கட்டுரைச் சுருக்கத்தையும் (Abstract), முழுக்கட்டுரையையும் (Full Research paper), அனுப்ப வேண்டிய முறைகளும், இம்மடலுடனும், மாநாடு பற்றிய கணினி அறிவிப்பிலும் கண்டுகொள்ள வேண்டுகிறோம். அறிஞர்கள் சிறந்த ஆராய்ச்சிகளைச் செய்து முடிக்க விழைகின்றோம்.
நீங்கள் இந்த ஆய்வுகளைச் சிறப்பாகச் செய்யவும், உங்களை மாநாட்டில் காணவும் அன்புடன் அழைக்கிறோம்.
அன்புடன்,
புலவர், முனைவர் பிரான்சிசு ச. முத்து
பொதுச் செயலாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்
தலைவர், ஆய்வுக் குழு
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு
பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம்
ஒருங்கிணைப்பாளர், அனைத்துலகத் தமிழ் ஆய்வு மன்றம்
இணைத்தலைவர், ஆய்வுக் குழு
10-ஆம் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு

ஆய்வுகள் அறிவுரைக்குழு

முனைவர் டான் மாரிமுத்து
தலைவர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்
முனைவர் மு.பொன்னவைக்கோ
உதவித் தலைவர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்
முனைவர் உலகநாயகி பழனி
செயலாளர், அனைத்துலகத் தமிழாய்வு மன்றம்
முனைவர் ஆஷர்
எடின்பர்க் பல்கலைக் கழகம், இங்கிலாந்து
முனைவர் அலக்சாண்டர் டுபின்ஸ்கி
மாஸ்கோ பல்கலைக் கழகம், உருசியா
முனைவர் ஜார்ஜ் ஹார்ட்
பெர்க்லி பல்கலைக் கழகம், அமெரிக்கா
முனைவர் ஜி. ஜான் சாமுவேல்,
தலைவர், ஆசியவியல் கழகம், சென்னை, இந்தியா
முனைவர் சாச்சா எப்ளிங்
சிகாகோ பல்கலைக்கழகம், அமெரிக்கா
முனைவர் உல்ரிக் நிக்லஸ்
கலோன் பல்கலைக் கழகம், ஜெர்மனி
முனைவர் வாசு அரங்கநாதன்
பென்சில்வேனியா பல்கலைக்கழகம், அமெரிக்கா.

தொடர்பிற்கு - https://www.icsts10.org/
நன்றி - சிகாகோ இணையம்.

Thursday, November 1, 2018

அன்னை (மதர்) தெரசா பல்கலைக்கழகம்- கொடைக்கானல்

|0 comments
 அன்னை (மதர்) தெரசா பல்கலைக்கழகம் கொடைக்கானலில் தமிழாய்வுத்துறையில் தமிழ் இணையப் பயிற்சி பணிமனைக்குச் 17/10/2018  புதன் கிழமைச் சென்றிருந்தேன். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் கமலி அவர்கள் இன்முகத்தோடு வரவேற்றார்.

                                     பேராசிரியர் கமலி அவர்கள்

ஐயா தாங்கள் இந்த பயிற்சி பணிமனைக்கு வந்தது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஐயா என்றார்கள். ஐயா தாங்கள் 2012- ல் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு வந்து இணையத்தமிழ் பயிற்சியை மாணவிகளுக்கு வழங்கினீர்கள். அதனுடைய தொடர்ச்சியாக நாங்கள் எங்கள் பல்கலைக்கழகத்தில் ஆறுமாதம் மற்றும் ஒரு ஆண்டு பட்டயப் பயிற்சி வகுப்பாக தமிழ் இணையத்தில் தட்டச்சு மற்றும் ஊடகவியல் சார்ந்த படிப்பைத் தொடங்கினோம். இதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் நீங்கள்தான் ஐயா என்றார்கள். நான் வியந்தே போனேன். நான் நினைத்த இலக்கை வெகுவிரைவாக செய்துகாட்டிய தமிழ்த்துறைத் தலைவர் பேரா.கமலி அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டேன்.

         நிகழ்வில் கல்ந்துகொண்ட முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள்.

மேலும் தமிழாய்வுத்துறையில் பதினைந்து கணிப்பொறி உள்ளது. அவையாவும் இணைய இணைப்பைப் பெற்றுள்ளது என்பது தனிச் சிறப்பான ஒன்றாகும்.
இங்கு கல்வி பயிலும் முதுகலை மாணவிகள், ஆய்வியல் நிறைஞர் மாணவிகள், முனைவர்ப்பட்ட ஆய்வாளர்கள் என 50 மேற்பட்ட மாணவிகள் தமிழில் தமிழ் 99 விசைப்பலகைப் பயன்படுத்தி விரைவாக தட்டச்சு செய்தது என்னை வியக்க வைத்தது.  அதைபோன்று தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தி தனது திட்டக்கட்டுரையை உருவாக்கி இருந்த விதம் தமிழை அடுத்தக் கட்டத்திற்கு இணையத்தின் வழி ஆய்வு செய்ய இருந்த மாணவிகளை நான் வெகுவேகப் பாராட்டினேன்.
திட்டக்கட்டுரையை அனைவரும் சொந்தமாக தமிழ்99 விசைப்பலகைக் கொண்டு அவரவர் தட்டச்சு செய்து உருவாக்கியது என்பது இன்னும் என்னை திகைக்கவைத்தது. இதற்குப் பேராசிரியர் கமலிக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. மாணவிகள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறார்.
மதியம் தமிழ் இணையம் குறித்தும் அதில் எவ்வாறு தமிழ்ப்படித்தவர்கள் வேலைவாய்ப்பை பெறுவது என்பது குறித்தும் பேசினேன். மாணவிகள் ஆர்வமுடன் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டார்கள்.



Tuesday, October 23, 2018

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரித் தமிழாய்வுத்துறை

|0 comments
முனைவர் திராவிடமணி அவர்கள் வரவேற்ப்புரை உடன் பேராசிரியர் சுகுமாறன் துறைத்தலைவர் திராவிட ராணி.

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் 15/10/2018 அன்று ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் சிறப்போடு நடத்தப்பட்டது. இந்நிகழ்வை முன்நின்று நடத்தியவர் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் திராவிடராணி அவர்கள் ஆவார். இதற்கு முழுமுயற்சி எடுத்தவர் தமிழ்த்துறைப் பேராசிரியர் திராவிடமணி ஆவார்.

       தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் திராவிடராணி அவர்கள் வாழ்த்துரை வழங்கியது.

மிக நேர்த்தியாக நடத்தப்பட்ட இந்த பயிலரங்கம் தமிழ் இணையத்தின் ஒரு மைல் கல் என்றுதான் சொல்வேன். தமிழ்த்துறைக்கு ரூசோ திட்டத்தின் மூலம் ஒரு கணினி ஆய்வுக்கூடத்தை நிறுவியுள்ளனர். 20 கணிப்பொறி மற்றும் இணைய இணைப்போடு இருந்தது. நானும் பல பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளுக்கு இணையத்தமிழ் குறித்து சிறப்புரை ஆற்ற சென்றிருக்கின்றேன். ஒரு அரசு கல்லூரியில் ஒரு கணினித் தமிழ் ஆய்வுக்கூடத்தைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. 

                             கல்லூரி பேராசிரியைகள் சிறப்புச் செய்தல்.

நான் இணையத்தில் சொல்ல சொல்ல அவர்கள் உடனுக்குடன் செய்துமுடித்த பாங்கு மாணவிகளின் ஆற்றலையும் ஆர்வத்தையும் பார்க்க முடிந்தது.
இணையம் தோற்றம் அதன் வளர்ச்சி, இணையத்தில் தமிழ்த் தட்டச்சுப்பயிற்சி, வலைப்பூ உருவாக்கம், தமிழ் இணையக்கல்விக்கழகம், மற்றும் பல இணைய இதழ்கள் ( பதிவுகள், முத்துக்கமலம், திண்ணை, தேவாரம், வல்லமை) பற்றிய அறிமுகம், அதில் எவ்வாறு ஆய்வுக்கட்டுரைகள் எழுதி வெளியிட வேண்டும் என்ற கருத்துரைகளை வழங்கினேன்.


               தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர்கள்.

அரசு கல்லூரியில் பணியாற்றிய தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் 16 மேற்பட்டோர்கள் இந்தப் பயிற்ச்சியில் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.


Thursday, October 18, 2018

Pondicherry Global Economic Summit 2018 - Fifth World Tamil Economic Conference

|0 comments

    பாண்டிச்சேரியில் உலகப் பொருளாதார உச்சிமாநாடு 2018, ஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு 12,13,14 - 10- 2018 அன்று சங்கமித்திரா விழா மன்றத்தில் இதன் தலைவர் முனைவர் வி.ஆர். எஸ்.சம்பத் அவர்களின் தலைமையில் சிறப்பாக மூன்று நாட்கள் நடைபெற்றது. தமிழ் பொருளாதார மாநாட்டில் தமிழகம், இந்தியா மற்றும் 30 உலக நாடுகளைச் சேர்ந்த பொருளாதார வல்லுநர்கள் கலந்துகொண்டு தமது நாட்டில் நடைபெறும்,  நடைபெற இருக்கின்ற பொருளாதார நிலை மற்றும் வணிகம் சார்ந்த நிகழ்வுகளைத் திறம்பட எடுத்துக்கூறினார்கள்.

    இந்நிகழ்வில் சசிந்திரன் முத்துவேலு(கயானா), கென்னத் ஈஸ்வரன் (மலேசியா), லோகிநாயுடு ( தென் ஆப்பிரிக்கா), பாலு பாலேந்திரா(ஆஸ்திரேலியா), ரோஜர் லேட்சமன் (தென் ஆப்பிரிக்கா), ஏ.எஸ்.இளவரசன் (ஐக்கிய அரபு அமீரகம்) பி.திருநாள்கரசு(சிங்கப்பூர்), பிளேஸ் கண்ணன் (அமெரிக்கா), இதயதுல்லா சுலைமான் (ஓமன்), முனைவர் பி.சண்முகராஜ் (லண்டன்), சுசீந்தரன் முத்துவேலு (நியு கினியா) பிரகி பிள்ளை(தென் ஆப்பிரிக்கா), ஜேக்கப் ரவிபாலன்(லண்டன்), திருமதி ஜெயந்தி மாலா சுரேஸ் (ஐக்கிய அரசு அமீரகம்), முனைவர் எம்.மாரிமுத்து (மலேசியா), முனைவர் வி.ஜானகிராமன் (அமெரிக்கா), முனைவர் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன், மோசஸ் வீராசாமி நாகமுத்து( கயனா நாட்டின் பிரதம மந்திரி), பரமசிவம் பிள்ள வையாபுரி (மொரிசியஸ் நாட்டின் குடியரசு தலைவர்) யோகிதா சாமிநாதன்(மொரிஷியஸ்) மற்றும் பல்வேறு நாட்டு தூதரக அதிகாரிகள், இந்தியாவைச் சார்ந்த பல்வேறு தொழில் வர்த்தகங்களில் ஈடுபட்டுள்ள நிர்வாகத் தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரை வழங்கி சிறபித்தார்கள்.


               மாநாட்டின் தொடக்க விழாவின்போது பல்வேறு நாட்டின் தலைவர்கள்.



மாநாட்டில் பேரா.மு.முத்துவேலு (மாநாட்டின் செயலாளர்)  அவர்களுக்கு மொரிசீயஸ் நாட்டு குடியரசு தலைவர் மரியாதை செய்தபோது..


முனைவர் துரை.மணிகண்டன் (Dr.Durai.Manikanadan)


முனைவர் துரை.
     இம்மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் கருத்துரைகள் வழங்கப்பட்டன. அதில்  ஒரு அமர்வாக “தமிழ் மொழியின் மூலம் வணிகத் தொடர்புகளும் விழைதொழில் வளர்ச்சியும்” (Business communication anad professional ethics through Tamil language)என்ற தலைப்பில் மாண்புமிகு தமிழக கலாச்சாரத்துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன்  தலைமையில் மலேசியாவை சேர்ந்த சர்வதேச தமிழ் ஆராய்ச்சி சங்கத்தின் தலைவர் முனைவர் எம்.மாரிமுத்து அவர்களும்,  ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கையின் அமைப்பாளர் முனைவர் வி.ஜானகிராமன் அவர்களும், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பதிவாளர் மற்றும் மாநிலக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மு.முத்துவேலு அவர்களுடன்  திருச்சிராப்பள்ளியில் இயங்கும் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லுரி தமிழ்த்துறைத் தலைவர்  முனைவர் துரை.மணிகண்டன் அவர்களும் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள்.
அதில் முனைவர் துரை.மணிகண்டன் “தொழில்நுட்ப வழியில் தமிழ்மொழியின் ஊடாக வணிகம் சிறக்க என்ன வழிமுறைகள்” என்ற தலைப்பில்  உரையாற்றினார். இதில் அவரின் கருத்தாக தமிழ்மொழியின் வழி வணிகத்தை நம்மால் பெருக்க வழியுண்டு அதற்கு நாம் முன்னெடுக்க வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன என்றார். உலகில் இருக்கும் மக்களிடம் நம் பாரம்பரிய பொருட்களை விற்பனை செய்ய தடையாக இருப்பது மொழியே. இதனை நன்கு உணர்ந்து மொழி தடையாக இருக்காமல் அவரவர் தாய்மொழியிலேயே உலகில் வாணிகம் நடந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும். அப்படி நடக்க வேண்டுமெனில் அவரவர் தாய் மொழியிலேயே (தமிழில்) உலகநாடுகளில் இருக்கும் மக்கள் பொருளை வாங்கிக்கொள்ள செல்பேசி மொழிபெயர்ப்புத்(Speech translation) தேவை அதற்கான மென்பொருளை நாம் உலக அரங்கில் உருவாக்க வேண்டும் என்றார். மேலும் உலக அளவில் தமிழ்மொழிக்கென தனியான சொற்கோவையை (Tamil word net) உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். தமிழகத்தில் சிறுகடைகளில் இருந்து பெரிய பல்பொருள் அங்காடி வரையிலும் விற்பனை செய்யும் கடைகளில்  தமிழில் பற்றுச்சீட்டை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்காத நிறுவனங்களுக்குத் தனியாக 2 சதவீதம் வரியை உயர்த்தி கட்டவேண்டுமென்று தமிழக அரசு ஆணையை வெளியிட்டால் தமிழில் தொழில்நுட்பம் வளரவும் புதிய தமிழ் மென்பொருள் உருவாகவும் வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்றார். உள்நாட்டுப் உற்பத்திப் பொருளை விற்பனைசெய்ய சிறிய குறுஞ்செயலிகளை (Smart application) உருவாக்கி ஒன்றினைக்கலாம். இதனால் வாங்குவோர் விற்போருக்கு இடையே  இருக்கும் இடைவெளி குறைய வாய்ப்பு உள்ளது. இதனால் விற்பனை மற்றும் வியாபாரம்  உலக அரங்கில் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

முனைவர் மு.முத்துவேலு,  திரு.க.பாண்டியராஜன்,  மொரீசியசு நாட்டுக் குடியரசுத் தலைவர் (மேதகு பரமசிவம் பிள்ளை வையாபுரி, முனைவர் துரை.மணிகண்டன்,  முனைவர் வி.ஆர் சம்பத் , முனைவர் வி.ஜானகிராமன், முனைவர் எம்.மாரிமுத்து.


முனைவர் மு.முத்துவேலு,  திரு.க.பாண்டியராஜன்,  மொரீசியஸ் நாட்டுக் குடியரசுத் தலைவர் (மேதகு பரமசிவம் பிள்ளை வையாபுரி, முனைவர் துரை.மணிகண்டன்,  முனைவர் வி.ஆர் சம்பத் , முனைவர் வி.ஜானகிராமன், முனைவர் எம்.மாரிமுத்து.


அமைப்பாளர் மாநாட்டுக்குழுத்  தலைவர் முனைவர் வி.ஆர்.எஸ்.சமபத் அவர்கள்.

Thursday, October 11, 2018

“International Workshop on Tamil Research through Computer Technology”

|1 comments

“International Workshop on Tamil Research through Computer Technology” was conducted on October 8, 2018 in Department of Linguistics, Bharathiyar University, Coimbatore, Tamilnadu in collaboration with TAMIL UNITED, Mechaniscburg-USA. The Inaugural Function was started at 10.15 am. Prof. V.M. Subramanian, Head of the Department of Linguistics, Bharathiar University welcomed the guests and the audience. Prof. Dr. K. Karunakaran, Former Vice-chancellor, Tamil University, Thanjavur inaugurated the workshop and Prof. A. Kamatchi , Secretary, Tami Unlimited offered felicitation. Dr. N. Ramesh, Assistant Professor, Department of Linguistics, Bharathiar University gave vote of thanks. The Inaugural Function was followed by a technical session. Prof. S. Rajendran, Amrita University, Coimbatore delivered a lecture on “Computational Lexical Semantics” by showing a demo on “Tamil Onto-thesaurus”. Prof. A. Kamatchi delivered a lecture on “Grammatical Corpus for Tamil” substantiating it with a demo. Dr. K. Umaraj Assistant Professor, Department of Madurai Kamaraj University delivered a lecture on “Making Dictionary for Sangam Tamil”. His lecture covered many aspects of Tamil computing including speech analysis. Dr. Durai Manikandan of Bharathidasan University Constituent College, Tiruchirappalli delivered a lecture on “How to create a Blog?”. It was a very useful one as many participants learned through his active demonstration how to make a blog. All the lectures were very useful and well received by the audience. The Valedictory Function was held on the same day after the technical session. Dr. N. Ramesh welcomed the gathering. Dr. P. Thirunavukkarasu, Member, Vice-Chancellor’s Committee, Bharathiar University delivered the valedictory address and distributed the certificates. Dr. K. Umaraj, delivered a special address. Dr.V.M. Subramanian gave vote of thanks. Nearly 70 registered participants attended the workshop and received certificates. According to their feedback the workshop was very useful. They wanted it to be a long one. Thanks to Mrs. Suganthi Nadar the founder of Tamil Unlimited for sponsoring the program. I have learnt that TAMIL UNLIMITED is running such programs throughout Tamil Nadu for promoting Tamil Computing. Hats off to it.








Friday, October 5, 2018

one day Workshop on Tamil Research through Computer Technology.

|0 comments
Department of Linguistics, Bharathiar University in collaboration with Tamil Unlimited,USA organize A one day Workshop on Tamil Research through Computer Technology. பாரதியார் பல்கலைக்கழக மொழியியல் துறையும் அமெரிக்காவிலுள்ள தமிழ் அன்லிமிடேட் (தமிழ் அநிதம்) என்ற நிறுவனமும் இணைந்து கணினி தொழிற்நுட்பம் வழி தமிழ் ஆய்வு என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டு பயிற்சி பட்டறையை வரும் 8/10/2018/அன்று பல்கலைக்கழக மொழியியல் துறையில் நடத்தவுள்ளனர். அனைவரும் வருக.








Tuesday, September 25, 2018

பாரதிதாசன் பல்கலைக்கழகம்.

|0 comments


பாரதிதாசன் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் உ.அலிபாவா, தமிழ் அநிதம் நிறுவனத்தின் செயலாளர் முனைவர்.அ. காமாட்சி, முனைவர் துரை.மணிகண்டன்.