/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, March 25, 2022

தமிழக அரசின் ஆட்சிமொழிப் பயிலரங்கில் இணையத்தமிழ் | இராமநாதபுரத்தில் கணினித்தமிழ்ப் பயிற்சி

|0 comments

                    நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர்  துரை மணிகண்டன்

இராமநாதபுரம்  மாவட்டத்தில்,  தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக, திருவள்ளுவர் ஆண்டு 2053  (மார்ச், 17,18 – 2022) ஆகிய  இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்  இராமநாதபுரம்   மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

18-03 -2022 அன்று இரண்டாம் நாள் நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் இணையத்தமிழ் (கணித்தமிழ்கணினித்தமிழ்)  என்ற தலைப்பில்  உரை வழங்கினார்

இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்முனைவர் பநாகராஜன் அவர்கள் அறிமுகவுரை  வழங்கினார்.


                            இயக்குநர் முனைவர் பநாகராஜன்

  அதனைத் தொடர்ந்து இணையத் தமிழ் ஆய்வாளர் துரை.மணிகண்டன்  அரசு அலுவளர்கள் கோப்புகளை ஒருங்குறியில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டும். அவ்வாறு தட்டச்சு செய்ய ஏதாவது ஒரு தமிழ் ஒருங்குறியை அவரவர் மடிக்கணினி மற்றும் மேசைக்கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார். பிறகு எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்ற செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது. தொடர்ந்து பேசினாலே தட்டச்சு செய்யும் இணையப்பக்கத்தைக் காட்டி தட்டுச்சு செய்யலாம் என்பதை விரிவாக விளக்கினார். பயிற்சியில் தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம் குறித்தும் விளக்கமளித்தார்.

                        இணையத்தமிழ் ஆய்வாளர்  துரை மணிகண்டன்

பயிற்சியில் கலந்துகொண்ட இராமநாதபுரம் மாவட்ட அரசு பணியாளர்கள்

 பயிற்சியில்  அரசு அலுவலர்கள் எவ்வாறு ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தி கோப்புகளை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்தும் ஒரு மணி நேரம் பயிற்சி வழங்கப்பட்டது.  

நிகழ்வின் இறுதியாக இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் அவர்கள் கலந்துகொண்டு பங்கேற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி தலைமையுறை வழங்கிச் சிறப்பித்தார்.

                    மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் 

Thursday, March 24, 2022

MKU- RUSA sponsored National Training Workshop on Language Technology for Tamil - மொழித்தொழில்நுட்பம்

|0 comments

MKU- RUSA sponsored National Training Workshop on Language Technology for Tamil during 22-24 March, 2022,Department of Linguistics,Madurai Kamaraj University,Madurai.

 

மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறையில் தமிழுக்கான மொழித் தொழில் நுட்பம் என்ற பயிலரங்கம் மார்ச் 22 -24 வரை நடைபெற்றது. இப்பயிலங்கில் மொழியியல் துறைப் பேராசிரியர்கள கலந்துகொண்டு பல்வேறு தலைப்புகளில் மொழித்தொழில் நுட்பம் குறித்து உரை வழங்கினார்கள்.

                                            பேரா. எல். இராமமூர்த்தி


நிரலாளர் முனைவர் இரா.அகிலன்


பேராசிரியர் திருமதி ரேணுகாதேவி


நிகழ்வின் ஒருங்கினைப்பாளர் முனைவர் கா.உமாராஜ்


மொழியியல் துறைத்தலைவர் பேரா.முனியன், முனைவர் க.பசும்பொன், பேரா.கி.கருணாகரன் 


எல் இராமமூர்த்தி அவர்களிடம் நான் எழுதிய இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் இணையவழிக் கல்வி என்ற நூலை வழங்கியபோது

 

இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் பேச்சுத் தொழில்நுட்பம் (speech technology) என்ற தலைப்பில் வழங்கிய உரையில்


                    இணையத்தமிழ் ஆய்வாளர் துரை.மணிகண்டன்

பேச்சுத் தொழில்நுட்பம் என்றால் என்ன?

பேச்சுத் தொழில்நுட்பம் என்பது ஒரு வகையான கணினி தொழில்நுட்பமாகும், இது ஒரு மின்னணு சாதனத்தை பேசும் வார்த்தை அல்லது ஆடியோவை அடையாளம் காணவும், பகுப்பாய்வு செய்யவும் மற்றும் புரிந்துகொள்ளவும் உதவுகிறது.

இது பொதுவாக டிஜிட்டல் ஒலி சமிக்ஞைகளை உள்ளீடு செய்வதன் மூலமும், சேமிக்கப்பட்ட வடிவங்களின் நூலகத்துடன் அதன் வடிவத்தை பொருத்துவதன் மூலமும் செய்யப்படுகிறது.

எவ்வாறு பேச்சுத்தொழில்நுட்பம் செயல்படுகிறது?

machine learning - artificial intelligence

frequencyஅதிர்வெண்

voice technology

பேச்சு தொழில்நுட்பம் தொடர்பு செயலாக்கம் மற்றும் இயந்திர கற்றல் ஆகிய கருத்துகளை சார்ந்துள்ளது. பேச்சாளரின் பண்புகள், பின்னணி இரைச்சல் மற்றும் அதிர்வெண் போன்ற தொடர்புடைய தகவலைப் பேச்சிலிருந்து பிரித்தெடுக்க சமிக்ஞை செயலாக்கம் பயன்படுத்தப்படுகிறது.

தானியங்கி பதிலைத் திரும்பப் பெறுவது போன்ற விரும்பிய வெளியீட்டைச் செய்ய பேச்சு சமிக்ஞைகளை அடையாளம் காணவும் பகுப்பாய்வு செய்யவும் இயந்திர கற்றல் இந்த கேட்கும் சாதனங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறது.

பேச்சுத்தொழில்நுட்பத்தின் துணைத் துறைகளாக,

1.       speech recognition

2.      speech verification

3.      real-time speech to text conversion

  1. interactive voice response (IVR)
  2. speech synthesis
  3. speech analytics

போன்றவையும் சிறப்பாக கூறலாம்.

 பேச்சுத் தொழில்நுட்பத்தை யாரெல்லாம் பயன்படுத்துகிறார்கள்?

பேச்சு தொழில்நுட்பம் மற்றும் ஒலி வெளியீடு (ஸ்பீக்கர்) சரிபார்ப்பு தளங்கள், சட்ட அமலாக்க நடைமுறைகள் மற்றும் செயல்முறைகளில் ஒரு நபரின் குரலை அடையாளம் கண்டு சரிபார்க்க பயன்படுகிறது.

வாடிக்கையாளரின் சேவை மற்றும் ஆதரவை சீரமைக்க நிறுவனங்கள் உரைக்கு உரை மற்றும் IVR (interactive voice response) செயல்பாடுகள் போன்ற பேச்சு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த முடியும்.

பார்வைக் குறைபாடு அல்லது காது கேளாத நோயாளிகளுக்கு உதவ, சுகாதார வழங்குநர்கள் பேச்சு தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தலாம். .

சிரி, கூகுள் ஹோம் மற்றும் அமேசான் அலெக்சா போன்ற தனிப்பட்ட பயன்பாட்டு குரல் உதவியாளர்கள் தனிப்பட்ட பேச்சு தொழில்நுட்ப அனுபவங்களை வழங்கும் சாதனங்கள்.

பேச்சு தொழில்நுட்ப வல்லுநர்கள், பேச்சுப் பொறியாளர்கள் மற்றும் பேச்சு நோயியல் வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள், மாதிரி விகிதம், சத்தம் விகிதத்திற்கு சமிக்ஞை மற்றும் பண்பேற்றம் போன்ற தொழில்நுட்ப ஒலிக் (ஆடியோ) கூறுகளைச் சேகரிக்க பேச்சு தொழில்நுட்பத்தைப் பெரிதும் நம்பியுள்ளன.

நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள்

உரை ஒலி – Text to speech

கோப்புகளைத் தமிழில் படித்துக்காட்டும் இணையவழி மென்பொருள்கள் இன்று அதிகமாக உருவாக்கி வெளியிடப்பட்டுப் பயன்பாடுத்தப்படுகின்றன. அவைமுறையே

https://inforobo.com/text-to-speech-online

https://www.googletexttospeech.com/p/tamil-text-to-speech-online-mp3.html

என்றும் திறந்த மூல மென்பொருளாகவும் கிடைக்கின்றன. அவை முறையே

https://www.indiadict.com/web/text-to-speech.html

Text To Speech Free
TTSFree.com

https://ttsfree.com/  இவைகளும் கிடைக்கின்றன.

Top Open Source Speech Recognition Systems என்ற அடிப்படையில் முதல் பத்து இடங்களை பெற்றவையாக  

1. Project DeepSpeech (This project is made by Mozilla, the organization behind the Firefox browser.)

2. Kaldi (Apache public license.)

3. Julius (1991 at the University of Kyoto, )

4. Wav2Letter++ (Facebook’s AI Research Team just 2 months ago.)

5. DeepSpeech2  (Chinese giant Baidu are also working on their own speech-to-text engine,)

 6. OpenSeq2Seq (Developed by NVIDIA for sequence-to-sequence models training.)

7. Fairseq (Developed by Facebook and written in Python and the PyTorch framework.)

8. Vosk

9. Athena (TensorFlow.)

10. ESPnet                             -

  Simon James  என்ற ஆய்வாளர் தனது ஆய்வுக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்

தமிழில் பேசுவதை எழுதும் பேச்சுத் தொழில்நுட்பத்தையும் உருவாக்கி வெளிவந்துள்ளது. அவை முறையே

1.       https://speechnotes.co

  1. https://dictation.io/speech
  2. https://www.speechtexter.com/
  3. https://speechtyping.com/voice-typing/speech-to-text-tamil

இவ்வாறக தமிழில் பேச்சுத்தொழில் நுட்பம் பல கட்டங்களாக இன்று வளர்ந்து வந்திருப்பது தொழில்நுட்பத்தில் தமிழ்மொழியின் வளர்ச்சியைக் காட்டுகிறது என்று தனது உரையில் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.



 பேச்சுத் தொழில்நுட்பம்  - speech technology

 


Tuesday, March 22, 2022

தமிழில் சொற்பெருக்கம் பயன்பாட்டிற்கான தரவு மேம்பாடும் - பன்னாட்டு ப் பயிலரங்கம்

|0 comments

 

                        கணினித்தமிழ் - இணையத்தமிழ்- சொற்பெருக்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழியற்புலம், தமிழியல் துறை இணைந்து மூன்று நாட்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் பல்கலைக்கழக அரங்கத்தில் தமிழில் சொற்பெருக்கம் பயன்பாட்டிற்கான தரவு மேம்பாடும் என்ற  பொருண்மையில் மார்ச் 21,22,23 -  ஆகிய நாட்களில் நடைபெற்றது. 

                 நிகழ்வில் பேரா.L.RAMAMOORTHI, DR.DURAI.MANIKANDAN

இரண்டாம் நாள் நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் கணினித்தமிழ் சொற்பெருக்கம் என்ற தலைப்பில் உரை வழங்கினார்.


ஒருங்கிணைப்பாளர் தமிழியல்துறைத் தலைவர்    முனைவர் போ.சத்தியமூர்த்தி

நிகழ்வின் தொடக்கமாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் தமிழியல்துறைத் தலைவர்    முனைவர் போ.சத்தியமூர்த்தி அவர்கள் அறிமுகம் செய்து வைத்தார்.

 இன்றைய வளர்ந்து வரும் துறையாக இருக்கின்ற கணினித்தமிழ், இணையத்தமிழ்க் குறித்த புதியச் சொற்களை நாம் எவ்வாறு தமிழில் உருவாக்குவது? அப்படி உருவாக்குகின்ற பொழுது எழும் சிக்கல்கள் என்னென்ன? என்பது குறித்துத் தெளிவாக விளக்கம் தரப்பட்டது.

மேலும் சொற்பெருக்கம் என்பது புதியச் சொற்களை ஒரு மொழியில் உருவாக்குவது என்றும், சொற்பெருக்கம் இரண்டு வகையில் தமிழில் உருவாக்கலாம். ஒன்று கடனாக சொற்களைத் வாங்கி பயன்படுத்துவது. இரண்டு புதிய சொற்களை மொழியில் தோற்றுவிப்பது ஆகும்.

இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன்

 மேலும் தமிழில் கலைச்சொற்களைச்  சொல்லாட்சி முறையிலும் நாம் உருவாக்க முயற்சி எடுக்க வேண்டும்.  அதேபோன்று சொற்களை உருவாக்குகின்றபோது பழஞ்சொற்களை எடுத்தாள வேண்டும். சொல்லில் விரிவு வேண்டும், கிளை மொழி, இனமொழி வழக்கை எடுத்தாள வேண்டும். மரபுசார் தொழில் சொற்களை எடுத்தால்தான் அந்தச் சொற்கள் காலம் காலமாக நிலைத்து நிற்க வேண்டும்.

 பிறமொழிச் சொற்களைக் கடன் வாங்குதல் வேண்டும் ஆனால் பிறகு நம் மொழியில் சொற்கள் தோன்றியவுடன் நம் மொழியில் தொகுக்கப்பட்ட சொற்களையே பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டு பேசினேன் அடுத்து கணினிக்   கலைச் சொற்களையும் எவ்வாறு  தமிழில் உருவாக்கி பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் இணையம், கணினி, கட்செவி, புலனம் எழுத்துணரி ,ஊடலை, மறைகாணி,  திறன்பேசி, மீத்திறன்பேசி என்று நாம் அழைக்கின்ற போது சொற்களுக்கான புதிய ஒரு சக்தி பிறப்பதாக இருக்கின்றது என்று குறிப்பிட்டார். நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்கள் பல புதிய தமிழ்ச் சொற்களையும் உருவாக்கினார்கள்.

                                     பயிற்சியில்  பங்கேற்பாளர்கள்

        Ocr – எழுத்துணரி , Bluetooth           ஊடலை ,Cctv – மறைகானி , Scanner    - வருடி ,Sumartphone  -            திறன்பேசி, மீத்திறன்பேசி,Broadband          -   ஆலலை, Youtube      காணொலி, வலையோளி



 

 

 

Wednesday, March 16, 2022

கரூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் - ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்

|0 comments

 

தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்  திருமதி வே.ஜோதி அவர்கள்

கரூர் மாவட்டத்தில்  தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக திருவள்ளுவர் ஆண்டு 2053  (மார்ச் 1,2– 2022) ஆகிய  இரண்டு நாட்கள் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்   ரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது.

1-03 -2022   முதல் நாள் நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் இணையத்தமிழ் (கணித்தமிழ், கணினித்தமிழ்)  என்ற தலைப்பில்  உரை வழங்கினார். இந்நிகழ்வில் ரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர்  திருமதி வே.ஜோதி அவர்கள் அறிமுகவுரை  வழங்கினார்.

  அதனைத் தொடர்ந்து இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் கணினி தமிழின் தோற்றம் குறித்தும், இணையத்தில் தமிழ்மொழி வளர்ச்சி குறித்தும், இணையத்தில் தமிழ்ப் பங்களிப்பு குறித்தும், இணையத்தில் எவ்வாறு தமிழில் தட்டச்சு செய்வது குறித்தும் பயிற்சி வழங்கினார்.  மேலும் தமிழில் தொழில்நுட்பம் வளர்ந்த வரலாறும் எடுத்துரைக்கப்பட்டது. தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தமிழ் வலைப்பூக்கள் எவ்வாறு பயன்பட்டது என்றும் அதனை எவ்வாறு இணையத்தில்  உருவாக்கம் செய்வது என்பது குறித்து விரிவான பயிற்சி வழங்கப்பட்டது. மேலும் தமிழ்விக்கிப்பீடியாவின் வளர்ச்சியும் அதில் பங்களிப்பு செய்துவரும் பங்களிப்பாளர்களையும் அறிமுகம் செய்து பேசினார்.


                இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன்

 பயிற்சியில்  அரசு அலுவலர்கள் எவ்வாறு ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தி கோப்புகளை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்தும் ஒரு மணி நேரம் பயிற்சி வழங்கப்பட்டது.  


திருமதி க.பவானி,   புலவர் ப. ஆறுமுகம், திருமதி வே.ஜோதி துரை.மணிகண்டன்

இந்நிகழ்வில் மண்டல தமிழ்வளர்ச்சித் துறை துணை இயக்குநர்  திருமதி க.பவானி  அவர்களும்  சேலம் மேனாள் தமிழ்வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் புலவர் ப. ஆறுமுகம் அவர்களும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.


            நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயிற்சிப் பெற்ற அரசு அலுவலர்கள்

நிகழ்வின் இறுதியாக நிகழ்வில் கலந்துகொண்டு பங்கேற்ற அரசு அலுவலர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பித்தார்கள்.






Saturday, March 12, 2022

ஆய்வுக்கட்டுரை 2.0 - SRM University சிறப்புரை - 12-03-2022 IEEE - Wikipedia - தமிழில் கட்டுரை

|0 comments

 SRM வள்ளியம்மை பொறியியல் கல்லூரியும் பாரிவேந்தர் மாணவர் தமிழ் மன்றம்- கணினித்தமிழ்பெ பேரவை இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் 12-03-2022 அன்று மாலை இணையவழியில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் அறிவியல் பொறியியல் தொழில்நுட்பங்களைத் தமிழில் எழுதுதல் எவ்வாறு என்ற தலைப்பில் உரை வழங்கினார்.


நிகழ்ச்சியில் ஆய்வுக்கட்டுரை எழுதும் பயிற்சி வழங்கப்பட்டது. ஆய்வுக்கட்டுரை 2.0 - SRM University சிறப்புரை - 12-03-2022 IEEE - Wikipedia - தமிழில் கட்டுரை


நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் பேரா.சண்முகம் அவர்கள் நன்றி கூறினார்.

பத்திரிக்கைச் செய்தி



Wednesday, March 9, 2022

கோப்புகளைத் இனி ஒருங்குறியில்தான் பயன்படுத்த வேண்டும் -

|1 comments

 

                        தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் கா.பொ.இராசேந்திரன்

               திருச்சிராப்பள்ளி  மாவட்டத்தில்    தமிழ்  வளர்ச்சித்துறை  சார்பில் திருவள்ளுவர் ஆண்டு 2053  இரண்டு நாள்கள் (03.03.2022,  04.03.2022) ஆட்சிமொழிப் பயிலரங்கம்கருத்தரங்கம்  நடைபெற்றது .  இதில்  2020 ஆம் ஆண்டுக்கான  அரசு  அலுவலகங்களில் தமிழில்  சிறந்த   வரைவுகள்  குறிப்புகள் எழுதிய  அரசுப்  பணியாளர்களுக்கு   பரிசும்   மற்றும்  சிறந்த   மாவட்ட  நிலை  அலுவலகத்திற்கு கேடயமும்    திருச்சிராப்பள்ளி   மாவட்ட    ஆட்சித்தலைவர்  திரு.சு.சிவராசு  அவர்கள்   வழங்கினார். 

பரிசு வழங்கும் நிகழ்வில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் திரு.சிவராசு,      கருத்துரையாளர்கள் பேரா.மாணிக்கம்,  திரு.நீமேகநாதன் மற்றும் இணையத்தமிழ் ஆய்வாளர் துரை.மணிகண்டன்

                                                பரிசு பெற்றவர்களுடன்  

மாவட்ட  ஆட்சியர் பேசுகையில்  தமிழ்  ஆட்சிமொழி  என்பது  நிருவாக  மொழியாகும்.  நிருவாகத்தில்  மக்களுக்குத்  தெரிந்த மொழியாக  இருப்பதற்கு  வழிவகை செய்வதாகும்.  ஆட்சிமொழிச்  செயலாக்கம் என்பது  நிருவாகத்தில்  கையொப்பம், பதிவேடுகள், பயணநிரல்,  நாட்குறிப்பு, கடிதங்கள், முத்திரைகள், பட்டியல்கள், தட்டச்சுப்பொறிகள்,  கோப்புகள், கணினிகள்  போன்றவற்றில் தமழில் எழுதுவதும், பராமரிப்பதுமாகும்.

தமிழ் மொழிக்கு என்று  இயற்கையாகவே சில  சிறப்புகள் உண்டு.  தமிழ்  மொழி  மற்ற  எல்லா மொழிகளைக் காட்டிலும்  மிக எளிமையானது.  மிகச்  சிறந்த இலக்கணத்தைக்  கொண்டு   கட்டமைக்கப்பட்ட  மொழி  தமிழ்மொழி.  இன்றைக்கு  ஆங்கிலத்தை  பெருமையாக  நினைப்பவர்கள்  இதைக்  கண்டிப்பாக  உணர  வேண்டும்.  இணையத்தில் அடியேடுத்து வைத்த முதல் இந்திய மொழி தமிழ்  மொழியாகும்.

  இப்பயிலரங்கில்  ஆட்சிமொழிச்சட்டம்/ வரலாறு, மொழிப்பெயர்ப்பு,   கலைச்சொல்லாக்கம்   என்ற  தலைப்பில்    மேனாள்   தமிழ்   வளர்ச்சித்   துணை   இயக்குநர்  முனைவர் . சிவசாமி  அவர்களும்,     அலுவலகக் குறிப்புகள் ,  வரைவுகள்,  செயல்முறை   ஆணைகள்  தயாரித்தல் என்ற  தலைப்பில்  அலுவலக மேலாளர் (பொது)  . சிவசுப்ரமணியம் பிள்ளை  அவர்களும்,  மொழிப்பயிற்சி என்ற   தலைப்பில்    முனைவர்..வேங்கடேசன்  இணைப் பேராசிரியர் (தமிழ்த்துறை தந்தை  பெரியார்  கலை  மற்றும்  அறிவியல் கல்லூரி)  அவர்களும் ,  ஆட்சிமொழிச்  செயலாக்கம்,  அரசாணைகள்  என்ற தலைப்பில்   மேனாள் தமிழ் வளர்ச்சி   உதவி  இயக்குநர்   திரு.நீ. மேகநாதன்  அவர்களும்  இணையத் தமிழ்  என்னும்  தலைப்பில் இணையத்தமிழ் ஆய்வாளர்  துரை.மணிகண்டன்  அவர்களும்  (தமிழ்த்துறை அரசு  கலை  மற்றும்  அறிவியல் கல்லூரி,  திருவரங்கம்)      பயிற்சி   அளித்தார்கள்.  04.03.2022   அன்று  மாலை  மாவட்ட  ஆட்சித்தலைவர்  அவர்கள்  ஆட்சிமொழி  கருத்தரங்கத்தை   தலைமையுரை  ஆற்றி  தொடங்கிவைத்தார்.   அப்போது  பேசுகையில், அலுவலகக்  கோப்புகளை அனைவரும்  தமிழில்   எழுத  வேண்டும்.   தமிழ் ஆட்சிமொழிச் சட்டசத்தின்படி கோப்புகள், கடிதப்போக்குவரத்துகள்  பிற மொழிக்  கலப்பின்றி  முழுமையும் தமிழில்  மட்டுமே எழுதவேண்டும்  என்று  கூறினார்.


                                       இணையத்தமிழ் குறித்து உரை வழங்கியது

 செய்தி மக்கள் தொடர்பு  உதவி   இயக்குநர்      திரு..செந்தில்குமார்  அவர்கள்   நன்றியுரை  ஆற்றினார்.   தமிழ்    வளர்ச்சித்  துணை இயக்குநர்  திரு.கா.பொ. இராசேந்திரன்  அவர்கள்  வரேற்புரை ஆற்றினார். .மாணிக்கம்    இணைப்   பேராசிரியர்  தேசியக்   கல்லூரி,
திரு.சே. . பாண்டியன் (உதவி நிருவாக  அலுவலர்   தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம்)  இருவரும் கருத்துரை  வழங்கினர். 

#இணையத்தமிழ்ஆய்வாளர்

#மணிவானதி