/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, March 7, 2022

தேரழகு திருவாரூர் மாவட்டத்தில் தமிழ் நுட்பவியல் அறிமுகப் பயிற்சி.


 தேரழகு திருவாரூர்  மாவட்டத்தில்  தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக திருவள்ளுவர் ஆண்டு 2053  (மார்ச்,  02,03 – 2022) ஆகிய  இரண்டு நாட்கள் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்தரங்கம்   திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது.

    இணையத்தமிழ் ஆய்வாளர் #மணிகண்டன்                         அவருகளுக்குத் திருவாரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை           இயக்குநர்  முனைவர் க.சித்ரா அவர்கள்   சிறப்புச் செய்வது. 

03-03 -2022   இரண்டாம் நாள் நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் இணையத்தமிழ் (கணித்தமிழ், கணினித்தமிழ்)  என்ற தலைப்பில்  உரை வழங்கினார். இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர்  முனைவர் க.சித்ரா அவர்கள் அறிமுகவுரை  வழங்கினார்.


  திருவாரூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை                       இயக்குநர்  முனைவர் க.சித்ரா அவர்கள்  

  அதனைத் தொடர்ந்து இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் கணினி தமிழின் தோற்றம் குறித்தும், இணையத்தில் தமிழ்மொழி வளர்ச்சி குறித்தும், இணையத்தில் தமிழ்ப் பங்களிப்பு குறித்தும், இணையத்தில் எவ்வாறு தமிழில் தட்டச்சு செய்வது குறித்தும் பயிற்சி வழங்கினார்.  தமிழில் தொழில்நுட்பம் வளர்ந்த வரலாறும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தமிழ் வலைப்பூக்கள் எவ்வாறு பயன்பட்டதுஎன்றும் அதனை எவ்வாறு இணையத்தில்  உருவாக்கம் செய்வது என்பது குறித்து விரிவான பயிற்சி வழங்கப்பட்டது.

                                    இணையத்தமிழ் ஆய்வாளர் #முனைவர் துரை

மேலும் தமிழ்விக்கிப்பீடியாவின் வளர்ச்சியும் அதில் பங்களிப்பு செய்துவரும் பங்களிப்பாளர்களையும் அறிமுகம் செய்து பேசினேன்.


                     இணையத்தமிழ் ஆய்வாளர் #முனைவர் துரைமணிகண்டன்

 பயிற்சியில்  அரசு அலுவலர்கள் எவ்வாறு ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தி கோப்புகளை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்தும் ஒரு மணி நேரம் பயிற்சி வழங்கப்பட்டது.  

இந்நிகழ்வில் முனைவர் இரா.அறிவழகன்,  மொழிபெயர்ப்பு மற்றும் கலைச்சொல்லாக்கம்  குறித்தும் முனைவர் க.சிவசாமி அலுவலக குறிப்புகள் என்ற தலைப்பிலும்  உரை வழங்கினார்கள்.

நிகழ்வின் இறுதியாக நிகழ்வில் கலந்துகொண்டு பங்கேற்ற அரசு அலுவலர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

#மணிவானதி

#துரைமணிகண்டன்

#கமலினி ப


 

 

 

0 comments: