/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, March 19, 2020

தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் ஆட்சிமொழிச் சட்டவாரம்.

|3 comments

                         பயிற்சியில் கலந்துகொண்டவர்களில் பலர்
2019-2020 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27-12-1956 ஆம் நாளை நினைவு கொள்ளும் வகையில் ஆட்சி மொழிச் சட்ட வாரம் ஆண்டுதோறும் சிறப்பாக  அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட ஆணையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆட்சி மொழிச் சட்ட வாரத்தினை 20-3-2020 ஆம் நாளுக்குள் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டுமென்று அனுப்பிய குறிப்பாணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
    தஞ்சாவூர் மாவட்டம் தமிழ்வளர்ச்சித்துறைத் துணை இயக்குநர் முனைவர் இராஜேந்திரன் 
தஞ்சாவூர் மாவட்டத்தில் 09- 03-2020 முதல் 15-03-2020 வரையிலான காலத்திற்கு ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 10-03-2020  காலை 10.00 மணி முதல் 12.45-00 மணி வரைத் தமிழ்ப்பல்கலைக்கழக கருத்துறை கூட்ட அரங்கில நடைபெற்றது. 

   துணை இயக்குநர் முனைவர் இராஜேந்திரன் அவரக்ள் துரை.மணிகண்டனுக்குச் சான்றிதழ் வழங்கியபோது அருகில் மேனாள் திருச்சிராப்பள்ளித் தமிழ்வளச்சித்துறைத் துணை இயக்குநர் திரு. மேகநாதன்.

இந்த பயிற்சியில்அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் மற்றும் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் ஆகியோர்களும் தமிழ்ப்பல்கலைக்கழக முனைவர்பட்ட ஆய்வாளர்களும் கலந்துகொண்டு கணினித் தமிழ் வளர்ச்சி, கணினித் தமிழ் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளைப் பெற்றனர்.

மேலும்  தமிழ் ஒருங்குறி எழுத்துரு பயன்பாடு, அம்மா மென் தமிழ் சொல்லாளர் பயன்படுத்துதல், தமிழில் விரிதிரை பயிற்சி மற்றும்  ஆட்சிமொழி குறித்துப் பயிற்சியையும் எடுத்து விளக்கினேன்.

இப்பயிற்சியில் இணையத்தமிழ் வரலாறு அதன் வளர்ச்சி மற்றும் தமிழில் இதுவரைத் தோன்றியுள்ள தமிழ் மென்பொருள்கள் என பலவகைப்பட்ட பயன்பாட்டு மென்பொருள்களையும் வந்திருந்தவர்களுக்குப் பயிற்சியாக வழங்கினேன். பயிற்சியில் கலந்துகொண்ட அனைவரும் கணினித்தமிழைப் பருகிச்சென்றனர்.

தகவல் தொழில்நுட்ப பூங்கா - யாழ்ப்பாணம்

|1 comments
                                    தகவல் தொழில்நுட்ப பூங்கா - யாழ்ப்பாணம்


 தகவல் தொழில்நுட்ப பூங்காவின் விரிவுரையாளர் செந்தூரன், பேராசிரியர் துரை.மணிகண்டன், தமிழறிதம் நிறுவனத்தின் செயாலாளர் திரு. சரவணபாவானந்தன் IT-park  நிறைவேற்று அலுவலர் த.அரவிந்தன், பேராசிரியர் க. உமாராஜ்

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) என்ற பன்னாட்டு தமிழ் இணைய அமைப்பின் சார்பாக 07-03 2020 தகவல் தொழில்நுட்ப பூங்கா (IT - park) நிறைவேற்று அலுவலர் த. அரவிந்தன் தலைமையில் காலை 11 மணிக்குப் பயிற்சி வழங்கினோம். இந்தத் தகவல் பூங்கா படிப்பகத்தில் சுமார் 70 மாணவர்களுக்கு இணையத் தமிழ்ப் பயிற்சி வழங்கப்பட்டது. அங்கு படிக்கும் மாணவர்களுக்குத் அடிப்படை கணினி மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த படிப்பினைப் படிப்பித்துக் கொடுத்து வந்தனர். அதில் தமிழ்ச் சார்ந்த இணையச் செய்திகளை எடுத்து விளக்கும் போது அங்கிருந்த மாணவர்கள் வியந்து போனார்கள்.
                    மாணவர்களுக்கு இணையத்தமிழ்  பயிற்சி வழங்கியபோது.

தமிழில் இவ்வளவு வளங்கள் இருக்கின்றதா என்றும் இவ்வளவு காலமாக இவைகள் தெரியாமல் இருந்ததாகவும் கூறினார்கள். மேலும் நான் நீங்கள் தொழில்நுட்பங்களை இனி தமிழில்தான் பயன்படுத்த வேண்டும் என்றேன். அதில் சில பணப்பொறி இயந்திரத்தில் இனி தமிழில் பணப்பரிவர்த்தனைச் செய்யுங்கள் அடுத்து கூகுளில் தமிழில் தேடுங்கள், ஜீ மெயிலைத் தமிழில் பயன்படுத்துங்கள் முகநூல், கட்செவி போன்ற சமூக ஊடகங்களையும் தமிழில் பயன்படுத்த வேண்டும் என்று விளக்கினேன். இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப பூங்காவின் விரிவுரையாளர் S. செந்தூரனும் உடனிருந்தார்.  






Tuesday, March 17, 2020

தினக்குரல் பத்திரிக்கை ஊடகத்தில் இணையத்தமிழ்ப் பயிற்சி - யாழ்ப்பாணம்

|0 comments


 அம்மா மென்பொருளை நான் கொடுக்க தினக்குரல் பத்திரிக்கையின் இயக்குநர் திரு.பீ.கேசவராஜா பெற்றுக்கொள்கிறார். அருகில் பேராசிர்யர் க.உமாராஜ், மற்றும் தமிழறிதம் அமைப்பின் செயலாளர் திரு.சரவணபவானந்தன் மற்றும் உறுப்பினர் திரு.யாழ்பாவாணன்.

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) என்ற பன்னாட்டு தமிழ் இணைய அமைப்பின் சார்பாக 08-03 2020 யாழ்ப்பாண செய்தி ஊடகத்தில் தனக்கான இடத்தைப் பெற்று வளர்ந்து வரும் தினக்குரல் பத்திரிக்கை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு எவ்வாறு ஒருங்குறியைப் பயன்படுத்தி பத்திரிக்கைத் துறையில் செயல்பட வேண்டும் என்ற நோக்கில் கருத்துரை மற்றும் பயிற்சிகள் அங்கு பணியாற்றும் சுமார் 20 நபர்களுக்கு வழங்கப்பட்டது.  எங்கள் அன்பிற்கினிய அன்பர், நண்பர் தினக்குரல் பத்திரிக்கையின் தலைமை நிர்வாகி திரு.பீ.கேசவராஜா (இயக்குநர்)  அவர்களின் அன்பு கட்டளையால் எங்கள் பணியாளர்களுக்கும் இந்தத் தமிழ் தொழில்நுட்பஙகளைக் கற்றுக்கொடுங்கள் பேராசிரியரே என்றார். 
                         பயிற்சியில் கலந்துகொண்ட பத்திரிக்கை ஊழியர்கள்கள்

அதன் விளைவாக தமிழறிதம் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் அனுமதியுடன் இப்பயிற்சி வழங்கப்பட்டது.இதில் பத்திரிக்கைத் துறையில் அங்கு வானவில் மற்றும் ஸ்ரீரிலீப்பி எழுத்துருவைப் பயன்படுத்தி வந்துள்ளனர். நாங்கள் ஒருங்குறியில் இயங்கும் எழுத்துருவை இனி பயன்படுத்துங்கள் என்று விளக்கினோம். அங்கு பேசினாலே தமிழில் தட்டச்சு செய்யும் மென்பொருளையும் அறிமுக செய்து பேசினேன்.


குறிப்பாக பேராசிரியர் ந,தெய்வசுந்தரம் அவர்களின் அம்மா தமிழ் மென்பொருளை அறிமுகம் செய்து அதில் உள்ள நல்ல பல தகவல்களை வழங்கினேன். நான் கையில் வைத்திருந்த ஒரு அம்மா மென்பொருளை இயக்குநர் அவர்களிடம் கொடுத்து உடனே அவர்களது கணினியில் உள்ளீடு செய்து பயன்படுத்திக் காட்டினேன். பலருக்கும் மகிழ்ச்சி. இப்படி ஒரு தமிழ் மென்பொருளா என்று என்னிடம் வினாவினார்கள். மேலும் இந்நிகழ்ச்சியில் தினக்குரல் ஆசிரியர்கள் ரொஷான் நாகலிங்கம், நெடுந்தீவு ஜெயபாலன் மற்றும் தமிழறிதம் அமைப்பின் செயலாளர் திரு.சரவணபவானந்தன் உறுப்பினர் திரு.யாழ்பாவாணன் பேராசிரியர் க.உமாராஜ், போன்றோர் கலந்துகொண்டனர்.






யாழ்ப்பாண ஊடகவியலாளர்கள் சந்திப்பு

|4 comments

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் - தமிழறிதம் உறுப்பினர் திரு யாழ்பாவாணன், பேராசிரியர் க.உமாராஜ், செயலாளர் திரு.சரவணபவானந்தன், துரை.மணிகண்டன்.

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) என்ற பன்னாட்டு தமிழ் இணைய அமைப்பின் சார்பாக 07-03 2020 அன்று யாழ்ப்பாண ஊடகவியலாளர்களுடான சந்திப்பு காலை 10 மணிக்கு நடந்தது. இச்சந்திப்பில் தமிழ்மொழி இணையத்தில் கடந்துவந்த வரலாற்று நிகழ்வுகளையும் இன்னும் இது கடந்து செல்ல வேண்டிய வழிமுறைகளையும் எடுத்து விளக்கினோம். இனிவரும் காலங்களில் தமிழ்மொழியைத் தகவல் தொழில்நுட்பங்களில் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினோம். மேலும் புதிய தமிழ் மென்பொருள்கள் அதிகம் உருவாக வேண்டும். அப்படி உருவாக்கியதை தமிழர்கள் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினோம்.
ஊடக சந்திப்பு நிகழ்வில் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) அமைப்பின் செயலாளர் திரு.சரவணபவானந்தன் மற்றும் அதன் உறுப்பினர் திரு.யாழ்பாவாணன், பேராசிரியர் க.உமாராஜ், பேராசிரியர் துரை.மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Monday, March 16, 2020

தமிழறிதம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் சந்திப்பு

|2 comments

                       

கலந்துரையாடளில் முனைவர் துரை.மணிகண்டன், பேராசிரியர் கலாநிதி தபோதரன், பேராசிரியர் க.உமாராஜ், தமிழறிதம் அமைப்பின் பொருளாளர் க.விக்னேஸ்வரானந்தன்,  செயலாளர் திரு.சரவணபவானந்தன், பதிவாளர் கலாநிதி வி. காண்டீபன்.

         தமிழறிதம் நிருவாகிகள் அன்று  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலகத்தில் மொழியியல்துறை, கணினித்துறைப் பேராசிரியர்கள், தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த பேராசிரியர்கள் ஆகியோரிடையேயான சந்திப்பு - 06-03-2020, தமிழறிதம் அமைப்பின் சார்பாக 06-03-2020 அன்று மாலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பதிவாளர் அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தோம். இந்த சந்திப்பில் மொழியியல் துறைப் பேராசிரியர்  கலாநிதி சுபதினி ரமேஸ் மற்றும் கணினி அறிவியல்த்துறைப் பேராசிரியர் கலாநிதி  தபோதரன் ஆகியோருடன் பல்கலைக்கழகப் பதிவாளர் திரு. வி.காண்டீபன் அவர்களுடன் கலந்துகொண்டு ரையாடினோம். 
இக் கலந்துரையாடலில் பேராசிரியர் தபோதரன் அவர்களிடம் தமிழறிதம் அமைப்புடன் இணைந்து பல்கலைக்கழகத்தில் ஒரு தமிழ்க் கணினிப் பயிலரங்கு நிகழ்வை ஒழுங்குபடுத்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அதற்கு அவரும் சில பேராசிரியர்களுடன் கலந்து ஆலோசித்துவிட்டுக் கூறுவதாகக் கூறினார்கள். தொடர்ந்து  கலாநிதி சுபதினி அவர்களுடனும் லந்துரையாடினோம். அவர்களும் தமிழறிதம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை, மொழியியல்துறை, கணினி அறிவியல் துறைகளுடன் இணைந்து பணியாற்றுவதை விரும்புவதாகக் கருத்துக் கூறினார்கள். மேலும் மதுரை காமராசர் பல்கலைக்கழக மொழியியல்துறை பேராசிரியர் .உமாராஜ் அவர்கள் இரண்டு பல்கலைக் கழகத்திலிருக்கும் மொழியியல்துறை இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்று தனது கருத்தாக முன்வைத்தார்.
 
தமிழறிதம் அமைப்பின் பொருளார் திரு. க.விக்னேஸ்வரானந்தன் பலகலைக்கழகத் துறைகளுடன் மேற்கோண்ட விடயங்கள் தொடர்பான ஆரம்பக்கட்ட செயல்பாடுகளாக பல்கலைக்கழகத்தின் வெளியே ஒரு கலந்துரையாடலை ஏற்பாடு செய்வது பொருத்தமாக இருக்குமென்று கூறினார். இதனை அனைவரும் கலந்து ஆலோசித்து முடிவு செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

பல்கலைக் கழகம் சார்ந்த துறையினரையும் செயற்திட்டத்துடன் ஆர்வமுடைய ஒரு சில நிபுணர்களையும் ஆர்வலர்களையும் தமிழறிதம் இணைப்புச்செய்து கலந்துரையாடலை நடாத்த ஏற்பாடுகளை மேற்கொள்வது சிறப்பானது என்று கருத்துக் கூறப்பட்டது. இது தொடர்பாக பல்கலைக்கழகத் துணைவேந்தர் அவர்களிடம் ஒப்புதல் பெறவேண்டும். என்று முடிவு எட்டப்பட்டது..

Saturday, March 14, 2020

தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) இலங்கை.

|1 comments

                       தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) இலங்கை.




05,06 - 03- 2020 அன்று  இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பான தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) என்ற பன்னாட்டு தமிழ் இணைய அமைப்பானது யாழ்ப்பாணத்தில் ”உலக இணையத்தமிழ் மற்றும் அதன் பயன்பாடுகள்- பயிலரங்கம்”  BCAS Campus தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியில் 05, 06 - 03 -2020 இரண்டு நாட்கள் வெகு சிறப்பாக நடத்தியது.   இப்பயிலரங்கில் பயிற்சியாளர்களாகப் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் துரை.மணிகண்டன் மற்றும் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக மொழியியல் துறை பேராசிரியர் முனைவர் க.உமாராஜ் இருவரும் பயிற்சி வளவாளர்களாக கலந்துகொண்டு பயிற்சி வழங்கினர்.
பயிற்சியில் கலந்துகொண்ட மாணவி ஒருவருக்குச் சான்றிதழ் வழங்குகிறார் பேராசிரியர் க.உமாராஜ், அருகில் திரு. மயூரநாதன், தமிழறிதம் தலைவர் திரு.நகுலேஸ்வரன், செயலாளர் திரு.சரவணபவானந்தன், துரை.மணிகண்டன், திரு.ரசாக் அகமது.

முதல் நாள் நிகழ்வின் தொடக்கமாக மாணவர் ஒருவர் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.  BCAS முகாமையாளர் திரு. எஸ். றஸாத் அகமத் சிறப்புரையாக இன்றைய நவீனத் தொழில்நுட்பத்தில் தமிழ்மொழியை நாம் பயன்படுத்த வேண்டும் அதற்கு இந்த இரண்டு வளவாளார்கள் தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ளார்கள். அனைவரும் பயன்பெற வேண்டுகின்றேன் என்றார். அடுத்து தமிழ் அறிதநுட்பியல் உலகாயத்தின் (தமிழறிதம்) தலைவர் திரு.இ.நகுலேஸ்வர ராஜா அவர்கள் தமிழ்மொழியின் சிறப்பை பாரதிதாசன் மற்றும் பலரது கவிதைகள் மூலம் எடுத்துக்காட்டி இன்றைய தொழில்நுட்ப அறிவையும் எடுத்து விளக்கினார். தொடர்ச்சியாக தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) நிறுவனத்தின் செயலாளர் திரு சரவணபவானந்தன் அவர்கள் பயிலரங்க குறிக்கோள்களாக கருத்து வழங்கினார். அதில் தமிழ் அறிதநுட்பியல் உலகாயம் (தமிழறிதம்) நிறுவனம் தொடங்கப்பட்டதன் நோக்கத்தையும் அது தமிழ்மொழியின் அடுத்தக் கட்ட வளர்ச்சிக்கு இணையவழியே நம் மொழியை கொண்டு செல்ல வேண்டும் அதற்கு தமிழறிதம் அமைப்பானது முழுமையாக பாடுபடும் என்று கூறினார். மேலும் இலங்கையில் இதற்கு முன்னமே மூன்று பயிற்சிகளை (தமிழ் விக்கிப்பீடியா எழுதுவது தொடர்பாக) வழங்கியுள்ளதாகவும் இந்த அமைப்பில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.

 அமர்வின் தொடக்கமாக முனைவர் துரை.மணிகண்டன் இணையத்தமிழ் வரலாறு குறித்தச் செய்திகளை எடுத்து வழங்கினார். அமெரிக்காவில் பாதுகாப்பிற்காகத் தொடங்கப்பட்ட இணையம் பின் நாட்களில் ஆராய்ச்சிக்காகத் தொடங்கப்பட்டது. இது உலக அளவில் இன்று மிக முக்கிய இடத்தைப் பிடித்து வளர்ந்து வந்துள்ளது. மேலும் இணையத்தில் தமிழ்மொழியின் பயன்பாடுகள் 1984 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது என்றும் அதற்காக  கலாநிதி சீனிவாசன், ஜார்ஜ்.எல்.ஹார்ட், முத்துநெடுமாறன், பாலாப்பிள்ளை போன்றோர்களின் பங்களிப்பையும்ம் எடுத்து விளக்கினார். அதனைத் தொடர்ந்து தமிழ் இணையம் வளர்வதற்கு உலகளாவிய அளவில் நடைபெற்ற தமிழ் இணைய மாநாடுகள் குறித்தும் அதில் விவாதிக்கப்பட்ட கருத்துரு குறித்தும் எடுத்துரைத்தார்.

அடுத்த அமர்வில் தமிழ்த்தட்டச்சு குறித்து விரிவான வரலாற்றைக் குறிப்பிட்டார். மேலும் எவ்வாறு தமிழ்த்தட்டச்சு செயலியை தங்களது கணினியில் பதிவிறக்கம் செய்வது என்று மாணவர்களுக்குப் பயிற்சியின் மூலம் காட்டினார்.  மாணவர்கள் அதனை உடனடியாக தங்களது கணினியில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தி பயன்பெற்றனர். தொடர்ந்து தமிழ் வலைப்பூக்களின் வரலாற்றையும் அதன் தொடர்ச்சியான வளர்ச்சியையும் எடுத்துரைத்தார். பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் முடிவாக ஒவ்வொருவரும் ஒரு வலைப்பூவைத் தமிழில் உருவாக்கி தமிழில் தட்டச்சு செய்து செய்திகளை வெளியிட்டனர். 

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரையை எழுதுவது எப்படி என்றும் தமிழ் விக்கிப்பீடியாவின் தமிழ் முகப்பு பக்கத்தை உருவாக்கியவர் இலங்கையைச் சார்ந்த திரு.மயூரநாதன் என்றதும் அனைவரும் பரவசம் அடைந்தனர். திரு.மயூரநாதன் நிறைவுவிழாவிற்கு வருகை தருகிறார் என்றதும் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.  வலைப்பதிவை உருவாக்காத மாணவர்கள் அடுத்தநாள் பயிற்சியில் கலந்துகொள்ளும்போது அவரவர் ஒரு வலைப்பதிவை உருவாக்கி வரவேண்டும் என்று கூறினேன்.

முதல் நாள் நிகழ்வில் பேராசிரியர் முனைவர் க.உமாராஜ் அவர்கள் கணினி மொழியில் என்ற பொருண்மையில் பயிற்சி வழங்கினார். இப்பயிற்சியில் இயந்திர மொழிபெயர்ப்பும், பேச்சுமொழித் தொழில்நுட்பம் குறித்து உரை வழங்கினார். இதில் பயிற்சியாக கூகுள் மொழிபெயர்ப்பில் உள்ள சிக்கல்களை விளக்கி அதனைப் போக்குவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கினார். பேச்சுத்தொழில் நுட்பத்தில் உரையிலிருந்து பேச்சுவழக்கிற்கும், பேச்சுவழக்கிலிருந்து உரை வழக்கிற்கும் இதுவரை கடந்துவந்த மென்பொருள்களின் பயன்பாடுகளை விளக்கினார்.


06-03-2020 அன்று அதன் தொடர்ச்சியாக காலை 9.30 மணிக்குப் பயிற்சி தொடங்கியது. பயிற்சித் தொடங்கிய உடனே முதல்நாள் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் பயிற்சியில் வலைப்பதிவை உருவாக்காதவர்கள் வீட்டில்  வலைப்பூக்களை உருவாக்கி வந்திருந்தார்கள். அதில் தமிழில் தட்டச்சு செய்து தமிழ்ச்சாரல் வலைப்பதிவு திரட்டியில் இணைத்தும் வந்து காட்டினார்கள். அதனைத் தொடர்ந்து சமூக ஊடகங்களில் வேலைவாய்ப்பை பெறும் வழிகள் குறித்து விளக்கினேன். எவ்வாறு முகநூலில் சின்ன, சின்னப் படங்களை இணைத்து பணம் பெறுவது காணொளியில் எவ்வாறு புதிய காணொளி பக்கத்தை உருவாக்கி அதில் நல்ல செய்திகளை வெளியிட்டு நல்ல வருமானம் பெறுவது என்றும் பயிற்சி வழங்கினேன். மேலும் சமூக ஊடகங்களை எவ்வாறு நாம் கையாள்வது என்பது பற்றியும் தெரிவித்தேன்.
                                      பயிற்சியில் கலந்துகொண்ட மாணவிகள்

அடுத்து தமிழில் குறுஞ்செயலிகள் உருவாக்குவதின் பயன்களையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக் கூறினேன். பயிற்சியின் நிறைவாக மாணவர்கள் கலந்துரையாடல் நடைபெற்றது. இதில் மாணவர்கள் இனி தமிழில் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறினர். அடுத்து பல புதிய காணொளிகளை உருவாக்கி யாழ்ப்பாணத்தின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளைக் காட்சிப்படுத்த தயாராகிவிட்டதாகவும் கூறினார்கள். அடுத்து இனி தகவல் தொழில்நுடபங்களைத் தமிழில்தான் பயன்படுத்துவோம் என்றும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 நிறைவு விழாவில் தமிழ் விக்கிப்பீடியாவின் முகப்பு பக்கத்தை உருவாக்கிய இலங்கையைச் சார்ந்த திரு.மயூரநாதன் அவர்கள் கலந்து மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரை வழங்கினார். அதில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதுவது மட்டுமின்றி விக்சனரி, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்கிப்பயணம், விக்கிசெய்தி, விக்கிமேற்கோள், விக்கிநூல்கள், பொதுவகம் போன்ற பல தலைப்புகளிலும் விக்கிப்பீடியா பயனளிக்கின்றது என்று விவரித்தார்.
திரு.மயூரநாதன் அவர்கள் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவருக்குச் சான்றிதழ் வழங்குதல்

நிகழ்வில் தமிழறிதம் நிறுவனத்தின் தலைவர் திரு.இ.நகுலேஸ்வரராஜா மற்றும் செயலாளர் திரு.சரவணபவானந்தன் உறுப்பினர்கள் யாழ்பாவாணன், தமிழறிதம்  பொருளார் திரு. க.விக்னேஸ்வரானந்தனும் நிகழ்வில் பங்கேற்றார்.


                       BCAS முகாமையாளர் திரு. எஸ். றஸாத் அகமத்