/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, October 29, 2017

உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் - கனடா

|4 comments
உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் - கனடா சார்பில் கனடாவின் டோரண்டோ நகரில் ‘இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலின் இன்றைய நிலை’ எனும் தலைப்பிலான ’உலகத் தமிழ் இணைய மாநாடு 2017’ இன்று (27-10-2017 - கனடா / 28-10-2017 - இந்தியா) தொடங்கி 29-10-2017 வரை மூன்று நாட்கள் நடைபெறவிருக்கிறது.


இதில் 50க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், இணையவழி கற்றல் கற்பித்தலில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து கட்டுரை வழங்கவிருந்தனர். அவர்களுக்குக் கனடா நாடு விசா தராமல் காலம் தாழ்த்தியதால், அங்கு செல்லவிருந்த தமிழ் அறிஞர்கள் / ஆர்வலர்கள் கனடா செல்ல இயலாமல் போனது. எனவே, அதே நாளில் அதே வேளையில் இந்தியாவிலும் இந்தக் கருத்தரங்கத்தினை நடத்துவது எனத் தீர்மானித்த இம்மாநாட்டுக் குழுவினர், திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் இன்று (27-10-2017 - கனடா / 28-10-2017 - இந்தியா - அதிகாலை 4 மணி) இணையவழிக் காணொலிக் காட்சிகள் வழியாக இரண்டு கருத்தரங்கங்களும் இணைக்கப்பட்டு நடத்தப் பெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக உத்தமத்தின் துணைத் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன்  (Durai.Manikandan) நிகழ்வை வரவேற்றுப் பேசினார்.

இணையவழிக் கருத்தரங்கில் மாநாட்டுக் கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது. அதில் பேரா.க.உமாராஜ், முனைவர் துரை.மணிகண்டன், பேரா.பத்மநாபபிள்ளை, கருத்தரங்க ஆய்வுக்குழுத் தலைவர் பேரா.க.காமாட்சி, பேராசிரியர் விஜயராணி, பேரா.சி.சிதம்பரம், பேரா.பிரகதி.
வாழ்த்துரை வழங்கிய பேரா.விஜயராணி
நன்றியுரை வழங்கிய பேரா.சிதம்பரம்.
இணையவழ்க் கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராளர்கள் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்.
கருத்தரங்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜேந்திரன் எழுதிய ஊடகங்களில் தமிழ் என்ற நூலை முத்துக்கமலம் இணைய இதழ ஆசிரியர் தேனி சுப்பிரமணி பெற்றுக்கொண்டபோது...
மாநாட்டில் வழங்கப்பட்ட பேக் மற்றும் நினைவுப்பரிசு.(முனைவர் துரை.மணிகண்டன், பேரா.காமாட்சி, தகவல் தொடர்பு வினோத்,)
மாநாட்டில் இணையத்தோழி மின்னிதழின் ஆசிரியருக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் தேனி சுப்பிரமணி.