/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, November 20, 2018

Tamil Language and Computer Use.- இணையத்தமிழ் பயிலரங்கம்


கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட Tamil Unlimited நிறுவனமும் இணைந்து "தமிழ்மொழியும் கணினிப்பயன்பாடும்" என்ற தலைப்பில் 14-11-2018  காரியவட்டத்தில் நடத்திய ஒருநாள் பன்னாட்டுப் பயிற்சி வகுப்பு சிறப்புடன் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை பேராசிரியர் ஜெயகிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். அடுத்து துறைத் தலைவர் ஹெப்சி அவர்கள் நோக்கவுரை வழங்கினார். வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் நயினார் அவர்கள்  ஆய்வு நோக்கியதாக இருந்தது. முகநூலில் தட்டச்சு செய்யும்போது ஏற்படும் சிக்கல்கள் அதை நாம் தவிற்க வேண்டிய வழிமுறைகளையும் நயமாக எடுத்து விளக்கினார்கள்.  பயிற்சியின் தொடக்கமாக செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் நிரலாளராகப் பணியாற்றி வரும் முனைவர் அகிலன் அவர்கள் தமிழ் மொழிக்கான  இயற்கை மொழி ஆய்வைப் பற்றி மிக விரிவாக எடுத்து விளக்கினார். மதியம் அமர்வில் பேராசிரியர் காமாட்சி  மொழித் தொழில்நுட்பவழி கணினித்தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.

 இறுதியாக முனைவர் துரை.மணிகண்டன் வலைப்பக்கம் உருவாக்குவது எப்படி என்ற பொருண்மயில் மாணவர்களுக்குப் பயிற்சிமூலம் செய்துகாட்டி பல மாணவர்களுக்கு வலைப்பூவை  உருவாக்கிக் கொடுத்து பயிற்சி வழங்கினார். 

நிகழ்வில் பேராசிரியர் குமர செல்வா அவர்கள் தனது மாணவர்களுடன் பயிற்சிக்கு வந்திருந்தார்.

பயிற்சியில் கேரளாவில் பயிலும் தமிழ் மாணவர்கள் பலர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
  




இணையத்தமிழ் பயிற்சியில் பங்குபெற்ற முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஆய்வியல் மாணவிகள்.

தமிழ்த்துறைத் தலைவர் ஹெப்சி , முனைவர் துரை.மணிகண்டன்,  பேராசிரியர் குமரசெல்வா,  பேராசிரியர் நயினார், பேராசிரியர் ஜெயகிருஷ்ணன், முனைவர் அகிலன். 



கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடன் அமெரிக்காவிலுள்ள Tamil Unlimited நிறுவனமும் இணைந்து "தமிழ்மொழியும் கணினிப்பயன்பாடும்" என்ற தலைப்பில் காரியவட்டத்தில் நடத்திய ஒருநாள் பன்னாட்டுப் பயிற்சி வகுப்பில் எனது மாணவர்கள் இருவருடன் கலந்துகொண்டேன். நீண்டகாலத்திற்குப்பின் சந்தித்த பேரா.காமாட்சி, பேராசிரிய நண்பர்கள் துரைமணிகண்டன், நயினார், ஜெயகிருஷ்ணன் ஆகியோர் உரைநிகழ்த்தினர். தமிழ்த்துறைத்தலைவர் பேரா. ஹெப்சி நிகழ்சிக்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தார்.

                                                                   பேராசிரியர் நண்பர்களுடன்








இயற்கைமொழி ஆய்வு குற்த்து உரை வழ்ங்கிய முனைவர் அகிலன்.



     வலைப்பூக்கள் உருவாக்கம் குறித்த உரை வழங்கிய முனைவர் துரை.மணிகண்டன்.



இணையத்தமிழ்ப் பயிற்சியில் சான்றிதழ் பெறும் மாணவி..



                                        பயிற்சியில் சான்றிதழ் பெறும் மாணவர்.




சான்றிதழ் பெறும் மாணவன்.

0 comments: