/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, February 26, 2026

இணையத்தமிழ் பயிற்சி. அழகப்பா பல்கலைக்கழகம்

 



வி வி எல் மோட்டார் யமஹா- வி விஜயலட்சுமி வீரபாண்டியன் நினைவு அறக்கட்டளை கணினி தமிழ்ப் பயிலரங்கு பாரம்பரியமிக்க அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த்துறையில் இனிதே இன்று தொடங்கி நிகழ்வு சீரும் சிறப்புமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வில் வரவேற்புரை வழங்கிய மூத்த பேராசிரியர் மற்றும் தமிழ்த் துறை தலைவர் முனைவர் சு.இராசாராம் அவர்கள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் செந்தில் ராஜன் அவர்கள் நொடிக்கு நொடி இந்த நுட்பம் மேன்மை அடைந்து கொண்டிருக்கின்றது என்பதை குறிப்பிட்டார். தொடர்ந்து  வீரபாண்டியன் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குனர் திரு வி வீரபாண்டியன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இப்பயிற்சியில் ஏராளமான தமிழ் துறை சார்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் பயன் பெற்றனர். எனவே எதிர்கால திட்டத்தில் இணையத்தில் தமிழை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று இணையத் தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் குறிப்பிட்டார்.



0 comments: