/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, February 10, 2023

தொழில்நுட்பங்களில் தமிழ்


 

ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழாய்வுத்துறையில் நெல்லூர் சத்யமூர்த்தி சுப்ரமண்யன் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு 19-01-2023 அன்று நடைபெற்றது. நிகழ்வின் முன்னதாக, தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ப.சண்முகம் அவர்கள் வரவேற்புரை நல்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ம.பிச்சைமணி அவர்கள் தலைமையுரை ஆற்றினார். துணைமுதல்வர் முனைவர் ஸ்ரீரா.சத்தியநாராயணன் அவர்கள் நிகழ்விற்கு முன்னிலை வகிக்க கலைப்புல முதன்மையர் முனைவர் ச.லெட்சுமி அவர்கள் வாழ்த்துரை நல்கினார். 

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர் அரசு கலைக் கல்லூரி (நவலூர் குட்டப்பட்டு) தமிழாய்வுத்துறைத் தலைவர், இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் தொழில்நுட்பங்களில் தமிழ் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.  

இந்நிகழ்வில் தமிழ் மென்பொருள்களின் பயன்பாடுகள் குறித்து மென்தமிழ் சொல்லாளர், பொன்விழி, யாப்பு மென்பொருள் பற்றிய விவரங்களை மாணவர்களுக்குப் பயிற்சி மூலம் விளக்கினார்.

நிகழ்வில் புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பிற துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்கள்.  நிகழ்வினை தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் திரு.சு.திருக்குமார்  ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.



0 comments: