/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, February 10, 2023

அரசு அலுவலர்களுக்கு இணையத்தமிழ்ப் பயிற்சி

   


தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக கணினித்தமிழ் பயிற்சி  - திருவாரூர்  மாவட்ட அலுவலர்களுக்கு....

திருவாரூர் மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும்சிறப்புமாக ஜனவரி 5,6 – 2023  ஆகிய இரு தினங்களில் திருவாரூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது.

தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி செ.கனகலட்சுமி அவர்கள் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்களுக்குச் சிறப்புச் செய்தார். உடன்  திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக தமிழாய்வுத்துறைப் பேராசிரியர் ப. வேல்முருகன் அவர்களும் உரை வழங்க வருகைதந்திருந்தார்.

இந்நிகழ்வில் திருவாரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள்  100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகளைப் பெற்றனர்.

இதனடிப்படையில் இரண்டாம் நாள் நிகழ்வின் தொடக்கமாக 06-01--2023-   அன்று இணையத்தமிழ் ஆய்வாளரும் பேராசிரியருமான முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் இணையத் தமிழக் (கணினித்தமிழ்) குறித்த உரையைப் பயிற்சியுடன் வழங்கினார்.



இப் பயிற்ச்சியில் ஒருங்குறியில் எவ்வாறு தட்டச்சு செய்வது? ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தி அலுவலக கோப்புகளை அனுப்பவது? தமிழக அரசு தரப்படுத்தியுள்ள தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்தும் முறை, மருதம் ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்துதல் குறித்த இணையவழியாக நேரடியாகப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஆர்வமுடன் பலர் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து தட்டச்சு செய்து காட்டினார்கள்.






0 comments: