/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, December 22, 2022

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக கணினித்தமிழ் பயிற்சி - பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட அலுவலர்களுக்கு....

   தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக கணினித்தமிழ் பயிற்சி  - பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட அலுவலர்களுக்கு....



தமிழ் வளர்ச்சித் துறையின் மேனாள் உதவி இயக்குநர் முனைவர் க.சிவசாமி அவர்கள் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்களுக்குச் சிறப்பு செய்தார். அருகில் பெரம்பலூர் மாவட்ட உதவி இயக்குநர் க.சித்ரா அவர்கள்

பெரம்பலூர்  மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும், சிறப்புமாக டிசம்பர் 15,16 - 2022 ஆகிய இரு தினங்களில் பெரம்பலூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் பெரம்பலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள்  100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகளைப் பெற்றனர்.

இதனடிப்படையில் இரண்டாம் நாள் நிகழ்வின் தொடக்கமாக 16-12- 2022  அன்று இணையத்தமிழ் ஆய்வாளரும் பேராசிரியருமான முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் இணையத் தமிழக் (கணினித்தமிழ்) குறித்த உரையை பயிற்சியுடன் வழங்கினார்.

இப்பயிற்ச்சியில் ஒருங்குறியில் எவ்வாறு தட்டச்சு செய்வது? ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தி அலுவலக கோப்புகளை அனுப்பவது? தமிழக அரசு தரப்படுத்தியுள்ள தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்தும் முறை, மருதம் ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்துதல் குறித்த இணையவழியாக நேரடியாகப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஆர்வமுடன் பலர் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து தட்டச்சு செய்து காட்டினார்கள்.


                                        பயிற்சியில் கலந்து கொண்ட அரசு அலுவலர்கள்

இந்த நிகழ்வினை பெரம்பலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி க.சித்ரா அவர்கள் ஒருங்கிணைப்புச் செய்தார்.

 


 அரியலூர்  மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும், சிறப்புமாக டிசம்பர் 20,21 - 2022 ஆகிய இரு தினங்களில்  அரியலூர்  மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு துறைகளில் பணியாற்றும் அரசு அலுவலர்கள்  100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகளைப் பெற்றனர்.

                இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் சிறப்புரை

இதனடிப்படையில் இரண்டாம் நாள் நிகழ்வின் தொடக்கமாக 21-12- 2022  அன்று இணையத்தமிழ் ஆய்வாளரும் பேராசிரியருமான முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் இணையத் தமிழக் (கணினித்தமிழ்) குறித்த உரையை பயிற்சியுடன் வழங்கினார்.

இப்பயிற்ச்சியில் ஒருங்குறியில் எவ்வாறு தட்டச்சு செய்வது? ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தி அலுவலக கோப்புகளை அனுப்பவது? தமிழக அரசு தரப்படுத்தியுள்ள தமிழ் 99 விசைப்பலகையைப் பயன்படுத்தும் முறை, மருதம் ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்துதல் குறித்த இணையவழியாக நேரடியாகப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஆர்வமுடன் பலர் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து தட்டச்சு செய்து காட்டினார்கள்.

நிகழ்வின் நிறைவாக அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பெ.ரமண சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்ட பயிற்சியில் கலந்துகொண்ட  அலுவலர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    அரியலூர் மாவட்ட ஆட்சியாளர் திருமதி பெ.ரமண சரஸ்வதி  சான்றிதழ்                வழங்கினார்

இந்த நிகழ்வினை அரியலூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குநர் திருமதி க.சித்ரா அவர்கள் ஒருங்கிணைப்புச் செய்தார்.

0 comments: