/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, December 16, 2022

இணையத்தமிழ் வகுப்பு - நாமக்கல்- கரூர்

  நாமக்கல் மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும், சிறப்புமாக டிசம்பர் 06,07 - 2022 ஆகிய இரு தினங்களில் நாமக்கல்  டிரினிடி கல்லூரி கலையரங்கத்தில்  நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாமக்கல்மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு அலுவலர்கள்  100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகளைப் பெற்றனர்.

இதனடிப்படையில் இரண்டாம் நாள் நிகழ்வின் தொடக்கமாக 07-12- 2022  அன்று இணையத்தமிழ் ஆய்வாளரும் பேராசிரியருமான முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் இணையத் தமிழக் குறித்த உரையை பயிற்சியுடன் வழங்கினார்.

 நாமக்கல் மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் திருமதி ஜோதி அவர்கள்.

                            பயிற்சியில் இணையத்தமிழ் ஆய்வாளர்.

கரூர்  மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும், சிறப்புமாக டிசம்பர் 08,09 - 2022 ஆகிய இரு தினங்களில் கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு அலுவலர்கள்  100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பல்வேறு துறைச் சார்ந்த பயிற்சிகளைப் பெற்றனர்.

இதனடிப்படையில் இரண்டாம் நாள் நிகழ்வின் தொடக்கமாக 09-12- 2022  அன்று இணையத்தமிழ் ஆய்வாளரும் பேராசிரியருமான முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் இணையத் தமிழக் குறித்த உரையைப் பயிற்சியுடன் வழங்கினார்.


            கரூர் மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குநர் திருமதி ஜோதி அவர்கள்.



                                                      பயிற்சியில் கலந்துகொண்ட அரசு அலுவலர்கள்.


0 comments: