/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, July 8, 2016

மாநாட்டில் கலந்துகொள்ள பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.

|2 comments
தமிழ் இணைய மாநாட்டு இணையதளம். பார்க்க... மாநாட்டில் கலந்துகொள்ள பதிவுகள் வரவேற்கப்படுகின்றன.

tamilinternetconference.org

Friday, June 24, 2016

கட்செவி (வாட்சாப்- whats app)

|4 comments
கட்செவி (வாட்சாப்- whats app)

 “வாயிருந்த வாழச் சொன்னாங்க இல்லைன்னா வந்திரச் சொன்னாங்க” என்பது முதுமொழி. அதைப்போல  ‘வாட்சப் இருந்த வாழச்சொன்னாங்க இல்லைன்னா வந்திரச் சொன்னாங்க’  என்பது புது மொழி. இன்று அனைவரும் உச்சரிக்கும் இரண்டு மந்திரம் ஒன்று முகநூல், மற்றொன்று வாட்சப் என்ற .கட்செவி’ ஆகும்.
வாட்சாப் என்பது ஆன்லைனில் செய்திகளை இலவசமாக வழங்கும் ஒரு செயலி. இஃது அலைபேசிகளில் இருந்து செய்திகள், குறுஞ்செய்திகள், முழுப்படங்கள், புகைப்படங்கள்  என நண்பர்களுக்கு உடனுக்குடன் சுடச்சுட வழங்கும் ஒரு செயலியாகும். இது மேலும் நண்பர்கள் குழுவாக இணைந்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும் உதவும். சுறுக்கமாகச் சொன்னால் இன்றைய இளைய தலைமுறை,  இல்லை,  பழைய தலைமுறையையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

வாட்சப் வரலாறு
ஜேன் கோம்,(JAN KOUM) பிரையன் ஆக்டன் (BRIAN ACTON) இருவரும் வாட்சபின் நிறுவனர்கள். ஜேன் கோம், உக்கரைன் நாட்டைச் சார்ந்தவர். அந்நாட்டில் வறுமையில் பிறந்தவர் சொந்த நாட்டில் வாழத் தகுதியில்லாமல் தனது பதினாறாவதுவயதில் அமெரிக்காவின்  கலிஃபோர்னியா மாகாணத்தின் மவுண்டெயின் வியூ என்கிற இடத்திற்கு தனது தாயுடன் வந்தவர். அமெரிக்க அரசாங்கம் தரும் இலவச உணவுக்காக காத்திருந்து உணவை வாங்கிப் பங்கிட்டு உண்டுள்ளனர். அந்த அளவிற்கு வறுமையின் பிடியில் இருந்தவர் ஜேன் கோம்.
 கோமுக்கு தனது பத்தொன்பதாவது வயதில் சொந்தமாக ஒரு கணிப்பொறிக் கிடைத்துள்ளது. அதோடு இணைய இணைப்பும் கிடைத்துள்ளது. கோம் எந்நேரம் கணினி, இணையம்தான். இவர் தொடக்கத்தில் இணைய உலகில் ஹேக்கிங்கில் கில்லாடியாக இருந்து வந்துள்ளார்.  இதனைத் தொடர்ந்து உலகெங்கிலும் இருக்கும் ஹேக்கிங் குழுவுடன் இணைந்து பணியாற்ற தொடங்குகிறார். பிறகு பெரிய நிறுவனங்கள் இவரது ஹேக்கிங் தொடர்பான உதவிகளுக்கு நாட ஆரம்பித்தன. (குறிப்பு- ஹேக்கிங் என்பது இதுவரை கெட்டதற்கு என்று இக்கட்டுரையைப் படிக்கும் வரை நினைத்தேன். இல்லை பெரிய நிறுவனங்களுக்கு இது  பல நன்மைகள் செய்கின்ற ஒரு தொழில்நுட்பம் என்பதை உணர்ந்தேன்.) எர்னஸ்ட்  & யங் என்ற நிறுவனத்தில் மென்பொருள் பாதுகாப்பு சோதனையில் பணியாற்றிக் கொண்டே கல்லூரியில் கணினி அறிவியலை படித்து வந்துள்ளார். பிறகு யாஹூ நிறுவனத்தின் இயக்குநர் டேவிட் ஃபைல் தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற அழைத்தபோது தன் படிப்பை பாதியில் விட்டு விட்டு பணியில் சேர்கிறார்.

இங்குதான் நண்பரும் வாட்சாப் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனரான பிரையன் ஆக்டனைச் சந்திக்கின்றார். 1996 இருவரும் சந்தித்துக்கொள்ள நட்பு மலர்கிறது. இருவரும் இணை பிரியாத வாட்சாப் நண்பர்களாகின்றனர். பிரைன் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் பிறந்து வளர்ந்தவர். ஸ்டாண் ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் பட்டம் பெற்றவர். ‘ஆப்பிள் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளாராகப் பணியாற்றியவர்..

ஜேன் கோம், எர்னஸ்ட் யங் கில் பணியாற்றியபோதே அவர் யாஹூ நிறுவனத்திற்கு வருவது தொடர்பாக பிரையன் சந்திக்கிறார். அப்பொழுது கோமுடை புத்திக்கூர்மையும் நேர்மையும் ஆக்டனைக் கவர்கிறது. இருவரும் அடிக்கடிச் சந்திக்கின்றனர். பின்பு ஆக்டைன் 1996 ல் யாஹூ நிறுவனத்திற்குப் பணிக்கு வருகிறார்.
ஆக்டைன் பணியில்சேர்ந்த நாள்முதல் இருவரும் இரட்டையர்களாக வளம் வந்தனர். 2007 ஆம் ஆண்டு இருவரும் ஒன்றாகவே யாஹூ நிறுவனத்திலிருந்து வெளியேறுகின்றனர். பிறகு இருவரும் தென் அமெரிக்காவிற்குப் புறப்பட்டனர்.

வாட்சாப் பிறந்தது
 இருவரும் முகநூல் நிறுவனத்திற்கு விண்ணப்பம் செய்து காத்திருந்தனர். ..ஏனோ இருவரையும் முகநூல் நிறுவனம் பணிக்கு எடுத்துக் கொள்ளவில்லை. மனம் தளராமல் இருவரும் இருந்துள்ளனர். ஏற்கனவே யாஹூவில் வாங்கி ஊதியம் மெல்ல மெல்ல செலவாகத் தொடங்கியது. இப்படி இருக்கும் போது ஒருநாள் ஜனவரி 2009 -ல் நண்பர் வீட்டில் கோம் சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது ஆக்டைனுடன் பல நண்பர்களும் உடன் இருந்துள்ளனர்.  அவர்கள் ஒருவருக்கொருவர் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருந்தனர். அலைபேசியிலிருந்து செய்தியை அனுப்பும்போது சில தொழில்நுட்பப் பற்றாக்குறை இருப்பதை ஊகிக்கின்றார் கோம். மேலும் அன்றையச் சூழலில் ஒவ்வொரு குறுஞ்செய்திக்கும் பணம் செலவளிக்க வேண்டி இருந்தது.  ‘இணையத்தில் மெயில் பார்க்க  இணையம் வசதி இருந்தால் போதும். ஏன் அதனைப் பயன்படுத்தி காசு இல்லாமல் செய்தி அனுப்பும் வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம்’ கோமுக்கு சட்டென்று தோன்றுகிறது. இது தொடர்பாக நண்பர் ஆக்டைனிடம் பேசுகிறார். பிறகு இருவரும் கலந்து ஆலோசித்து  வேறு சில இணைய வடிவமைப்பாளர்களுடன் இது தொடர்பாக பேசுகின்றனர். அப்பொழுது தான் புதியதாக உருவாக்க இருக்கும் குறுஞ்செயலிக்கு (application) வாட்சாப்( கட்செவி- whatsapp) என்று கோம் பெயரிடுகிறார். யாராவது இருவர் அல்லது மூவர் பேசும்போது அப்புறம் என்ன என்று கேட்போம் அல்லவா? அதைதான் whats app என்று ஆங்கிலத்தில் அழைப்பர்.

ஜேன் கோம் பிறந்த நாளான பிப்ரவரி 24, 2009 அன்று வாட்சாப்  நிறுவனத்தைத் தொடங்கினார். தொடக்கத்தில் வாட்சாப் சரிவர இயங்கவில்லை. பயணர்களிடமிருந்தும் ஆதரவு கிடைக்கவில்லை. பலர் அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பும் முறை இருக்க இது எதற்கு என்று பலர் நினைத்தனர்.

இதனால் இருவரும் இதை விட்டுவிட்டு மீண்டும் வேறு பணிக்குச் செல்லலாமா? என்று  யோசித்த கோம் இதுபற்றி ஆக்டனிடம் கேட்க ஆக்டையன் பொறுமையாக இருப்போம். இஃது ஒரு பெரிய நிறுவனமாக வளரும் என்று எனக்குத் தோன்றுகிறது என்று கூறினார். நண்பனின் பேச்சிற்கு மறுப்புக் கூறாமல் கோம் அமைதி காத்தார்.
இதற்கிடையில் கோம், ஆக்டையன் இருவரும் டிவிட்டரில் வேலைக்குச் சேர விண்ணப்பம் போட்டனர். பலனில்லை. அந்த நிறுவனம் இருவரையும் வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இருந்தாலும் தாம் உருவாக்கிய வாட்சப் செயலியில் இருக்கும் குறைகளை அவ்வப்போது மேன்மைப்படுத்திக் கொண்டே இருந்தார். அப்பொழுது ஒரு அதிசயம் நிகழ்ந்தது. ஆப்பிள் பயனாளிகள் பலர் இந்த வாட்சாப் செயலியைப் தங்களது அலைபேசியில் தரவிறக்கம் செய்யத் தொடங்கினர். இரவும் பகலும் வாட்சாப்பில் செய்தியை அனுப்பியவாறு இருந்தனர்.  சில நாட்களில் சுமார் இரண்டரை லட்சம் பேர் வாட்சாப் பயனாளிகளனார்கள். மேலும் பல நண்பர்களிடம் இது தொடர்பாக பேசி ஒருகோடி ரூபாய் திரட்டி நிறுவனத்தை பெரிய அளவில் செயல்பட முனைந்தனர். தற்பொழுது ஆப்பிளைத் தொடர்ந்து பிளாக்பெரி அலைபேசிகளுக்கும்  வாடசாப் வசதியை நீட்டித்தனர். பலன் பலர் தரவிறக்கம் செய்யத் தொடங்கினார்கள். தற்பொழுது வாட்சாப் சாதிக்கத் தொடங்கிவிட்டது எனலாம்.

பயன்பாடு
2009 ல் தொடங்கப்பட்ட வாட்சாப் செயலியில்  இன்று ஒவ்வொரு நாளும் சுமார் பத்து லட்சம் பேர் புதிதாக  இணைகிறார்கள். நாளொன்றுக்கு 4000 கோடி புகைப்படங்கள் பரிமாற்றம் நடைபெறுகிறது. நம்பமுடியாத கணக்காக இருக்கலாம். இதுதான் இன்றைய உண்மை. வாட்சாப்பின் பயன்பாடு பிப்ரவரி 2013 ல் 200 மில்லையன், டிசம்பர் 2013 ல் 400 மில்லியன், 2014 ல் 600 மில்லியன்,  ஏப்ரல் 2015 ல் 800 மில்லியன், பிப்ரவரி 2016 ல் 900 மில்லியன்   நூல் ஆச்சாகும் தேதிவரை( ஜூலை 2016 வரை ) சுமார் 1000 மில்லியன் பயனாளர்களைக் கொண்டு இயங்குகிறது.
வாட்சாப்பில் குழு உருவாக்கி அக்குழுவில் கலந்துரையாடும் ஒரு செயல்பாட்டை வெளியிட்டது தொடக்கத்தில் இக்குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. பின்பு 100. அடுத்து 125 என இருந்தது தற்பொழுது 256 நபர்களை உறுப்பினர்களாகக் கொண்டு குழு அமைத்து உரையாடலாம்  என்று வாட்சாப் அறிவித்திருக்கிறது. வாட்சாப்பும் கணினியில் இன்று இயங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகு சிறப்பு வாய்ந்த வாட்சப் நிறுவனத்தை முகநூல் நிறுவனம் பிப்ரவரி 2014 லில் 19 பில்லியன் டாலருக்கு விலைக்கு வாங்கியது. (நமது பணத்திற்கு சுமார் 99,584 கோடிக்கு “ஒரு லட்சத்து இருபதாயிரம் கோடிக்கு” விலை கொடுத்து வாங்கியுள்ளது.)

இத்தகு சிறப்பு வாய்ந்த வாட்சாப் நிறுவனத்தை முகநூல் வாங்கியிருந்தாலும் தற்பொழுது வாட்சாப் நிறுவனத்தினைத் தலைமை தாங்கி நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஜேன் கோம், பிரையன் ஆக்டன் இருவரும்தான். கோம் வாட்சாப் தொடர்பான மென்பொருளைக் கவனித்துக் கொள்கிறார். ஆக்டன் தொழில் தொடர்பானவையைப் பார்த்துக் கொள்கிறார். பிரையன் ஆக்டன் எழுதி வைத்திருக்கும் மந்திரச்சொல் இதுதான் No Ads! No Games! No Gimmicks! என்பதுதான் வாட்சாப்பின் வெற்றிக்குக் காரணம் என்கிறார்கள்.

அவர்கள் இருவரும் சொன்ன தாரக மந்திரம் இதுதான் “ சிலிக்கான் பள்ளத்தாக்கில்  எங்கள் வாட்சாப் நிறுவனத்தைப் போல நீங்கள் வேறெந்த நிறுவனத்தையும் பார்க்க முடியாது. பெரியதாக மிகப்பெரியதாக வளரவேண்டும் என்று நினைப்பதைவிட  எங்களது அவ்வப்போதைய வெற்றியை  தக்கவைத்துக் கோள்ளவே நாங்கள் கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறோம். கிடைத்த வெற்றியைத் தக்கவைத்துக் கொண்டால்,அதுவே நம்மை மிகப்பெரிய வெற்றியை நோக்கிக் கொண்டு செல்லும். எங்கள் தயாரிப்பை முன்னிலைப் படுத்திக் கொண்டு எங்களை பின்னணியில் மறைத்துக்  கொள்கிறோம். இதைத் தவிர எங்களுக்கு வேறெந்த தொழில் ரகசியமும் இல்லை என்கிறார்கள் இருவரும். தற்பொழுது குழந்தைகள் பயன்படுத்தும் விதமாக வாட்சாப்பை கொண்டுவரும் முயற்சியில் இருவரும் முனைப்புடன் செயல்படுகிறார்கள். ஏன் நம் நாட்டில் இருக்கும் தொழில்நுட்ப ஆய்வாளர்கள் இவர்களைப் போல உருவாகக் கூடாது. காலம் வெகுவிரைவில் இதற்குப் பதில் சொல்லும்.






Wednesday, June 15, 2016

15வது உலகத் தமிழ் இணைய மாநாடு – கட்டுரை வழங்குதல் பற்றிய அறிவிப்பு

|2 comments
15வது உலகத் தமிழ் இணைய மாநாடு 2016
மாநாட்டில் பங்கு பெற ஆய்வுச் சுருக்கம் அனுப்புவதற்கான அறிவிப்பு
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) (15வது) உலகத் தமிழ் இணைய மாநாடு 2016 செப்டம்லர் 9,10,11 ஆகிய தேதிகளில் திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளதை நாம் அனைவரும் அறிவோம்.
ஒவ்வொரு மாநாட்டிலும் ஒரு தலைப்பு முதன்மைத் தலைப்பாகக் கொடுக்கப்படும். இவ்வகையில் 2016 மாநாட்டிற்கு “”கணினியெங்கும் தமிழ், கணினியெதிலும் தமிழ்” என்பது முதன்மைத் தலைப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
மாநாட்டிற்கான கட்டுரைகள் கீழ்க்கண்ட தலைப்புகளில் ஏதாவது ஒன்றில் அமையும் வகையில் தங்களது கட்டுரைச் சுருக்கத்தை அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.
•     இயல்மொழிப் பகுப்பாய்வு – தமிழ்ச்சொல்லாளர் (சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, இலக்கணத்திருத்தி..) இயந்திர மொழிபெயர்ப்பு, தமிழ் எழுத்துருப் பகுப்பான்கள், தமிழ்ப் பேச்சுப் பகுப்பாய்வு, தேடுபொறிகள், தமிழ்த் திறனாய்வு நிரல்கள், மின்னகராதி அமைத்தல்…
•     ஒளியெழுத்துணரி, கையெழுத்துணரி.
•     கையடக்கக் கணினிகளில் தமிழ்ப் பயன்பாடும் அவற்றின் செயலிகளைத் தரப்படுத்தலும், இக்கருவிகளில் பயன்படுத்தத் தேவையான தமிழ்க்கணினி குறுஞ்செயலிகள் (முக்கியமாக ஆப்பிள், ஆண்ட்ராய்டு, விண்டோஸ்)
•     திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கம்.
•     தமிழ் இணையம், தமிழ் வலைப்பூக்கள், விக்கிபீடியா, சமூக இணையதளங்கள், தமிழ் மின்நூலகங்கள், மின்பதிப்புகள், இணைய, கணினிவழி தமிழ்நூல்கள் ஆய்வு, கையடக்க மின்படிப்பான்களில் தமிழ் நூல்கள், தமிழ் மின்வணிகம் மற்றும் பிற தமிழ்ப் பயன்பாட்டு நோக்குடன் தயாரிக்கப்பட்ட கணினி மென்பொருள்கள்.
மாநாட்டு ஆய்வரங்குகளில் கட்டுரை படைக்க விரும்புவோர் தாங்கள் படைக்க இருக்கும் கட்டுரையினை  A4 தாள் அளவில் ஒரு  பக்கத்திற்குள் ஜூன் 22 தேதிக்குள்cpc2016@infitt.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு தொழில்நுட்பத் திட்டப்பணியைப் பற்றிய முக்கியத் தகவல்கள் கொண்டிருக்க வேண்டும். 
சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை பற்றிய இது போன்ற கருத்துக்களை மாநாட்டுக் குழு, தங்களுக்கு அனுப்பி வைக்கும். புதிய கருத்து, சிந்தனை கொண்ட கட்டுரைகள் படிக்கவும் (oral presentation), பிற கட்டுரைகள் சுவரொட்டி விளக்கங்களாகவும் (poster presentation) ஒப்புக்கொள்ளப்படும்.
கட்டுரையைத் தமிழ் ஒருங்குறி அல்லது தமிழ் அனைத்து எழுத்துருத் தரப்பாடு (டேஸ்) ஆகிய குறியேற்றங்களில் மட்டுமே பெற்றுக்கொள்ள இயலும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரைச் சுருக்கம் ஆங்கிலத்திலோ (அ) தமிழிலோ (அ) தமிழும் ஆங்கிலமும் கலந்தோ நீங்கள் படைக்கலாம்.
மாநாட்டுக்குழு உங்களின் படைப்புகளை ஆய்ந்தறிந்து மாநாட்டில் படைக்கும் தரம்கொண்ட கட்டுரைகளைத் தேர்வு செய்யும். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளின் விவரம் அதற்கான ஆசிரியர்களுக்கு ஜுலை 15-ஆம் தேதிக்குள் உறுதிப்படுத்தப்படும்.
முழுக் கட்டுரையை 4-6 பக்கங்களுக்கு மிகாமல் எங்களுக்கு உரிய தேதிக்குள் அனுப்பவேண்டும்.
கட்டுரை எழுதும் கட்டுரையாளர்களுள் ஒருவரேனும் மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரையை ஆய்வரங்குகளில் நேரிடையாகப் படைக்க வேண்டும். மாநாட்டில் பங்குபெறாமல் அல்லது ஒருவருக்காக வேறு ஒருவர் கட்டுரைகளைப் படைக்க இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மாநாட்டில் படைக்கப்படவுள்ள கட்டுரைகள் அச்சிட்ட மாநாட்டு மலராகவும் மின்பதிப்பாகக் குறுந்தகடு வழியாகவும் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டுக் கட்டுரைத் தொகுப்பு நூலகங்களுக்கான பன்னாட்டு தொடர்திரவு (ISSN) எண்ணுடன் வெளியிடப்படவுள்ளது.
தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரைகள் சிறப்பு வெளியீடாக உத்தமத்தின் வாயிலாக வெளிவரவிருக்கும் இதழிலும், உலகக் கணினிமொழியியல் ஆய்விதழிலும் வெளியிடப்படும்.

முக்கியமான நாட்கள்

முழுக் கட்டுரை அனுப்ப இறுதி நாள் : ஜூன் 22
தேர்வு செய்யப்பெற்ற கட்டுரை பற்றிய அறிவிப்பு : ஜுலை 15
திருத்தப்பெற்ற முழுக் கட்டுரை அனுப்ப இறுதி நாள் : ஜுலை 31
மாநாடு நடைபெறும் நாட்கள் : 2016 செப்டம்பர் 9,10,11
தமிழ் இணைய மாநாடு 2016இல் கட்டுரையைப் படைப்பது பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் இருப்பின் அவற்றை cpc2016@infitt.org என்ற  முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Friday, March 4, 2016

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் கணித்தமிழ் ஆய்வுகள்

|0 comments
27 - 2016 அன்று திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் தமிழாய்வுத்துறை ஏற்பாடு செய்திருந்த கணித்தமிழ் ஆய்வுகள் என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் மாணவ மாணவிகளுக்கு கணினியில் எவ்வாறு தமிழ் ஆய்வுகளை மேற்கொள்ளலாம், இணையத்தை நாம் எவ்வாறு கையால்வது என்று உரை நிகழ்த்தினேன். மாணவிகள் ஆர்வமுடன் செய்திகளை கேட்டறிந்து கொண்டனர்.

இதில் தமிழில் தட்டச்சு
தமிழ் வலைப்பதிவை உருவாக்குவது
தமிழ் இணையதளங்களைப் பார்வையிடுதல்
தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிடுதல்
தரவுகளைச் சரியானதாக எடுத்து ஆய்வில் பயன்படுத்துவது  உள்ளிட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.



ஜமால் முகமது கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஹபிபுர் ரஹுமான், பேரா.நாகூர்கனி, பேரா.இஸ்மாயில், பேரா.யூனூஸ் அவர்களுடன் Dr.Durai.Manikandan

திருச்சிராப்பள்ளி பிஷ்ப்ஹீபர் கல்லூரியில் தமிழ் இணைய அறிமுகம்

|1 comments
பிப்ரவரி 22 - 2016 திருச்சிராப் பள்ளி பிஷ்ப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறையும் கணினி அறிவியல் துறையும் இணைந்து ஒருநாள் தமிழ் இணையப்பயிலரங்கம் ஏற்பாடு செய்து இருந்தனர்.

 இதில் Dr.Durai Manikanadan தமிழ் இணைய அறிமுகத்தை வழங்கி எவ்வாறு தமிழ் தட்டச்சு செய்வது என்பதை மாணவர்கள் கொண்டு பயிற்சி வழங்கினேன். பிறகு வலைப்பதிவை உருவாக்கி மாணவர்கள் தங்கள் துறைசார்ந்த கருத்துக்களை எழுத வேண்டும் என பயிற்சி கொடுக்கப்பட்டது. அடுத்து தமிழில் குறுஞ்செயலி உருவாக்குவது எப்படி அதன் பயன்கள் என்ன என்பதையும் எடுத்து விளக்கினார்.

 நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறைத் தலைவர் பேரா.தாமைரைச்செல்வி மற்றும் கல்லூரி முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர் பேரா. விஜ்யராணியுடன் Dr.Durai.Manikandan.
 நிகழ்வில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள்


கணினித் தமிழ்த் தொடக்க விழா- GTN கல்லூரி , KLN பொறியியல் கல்லூரி

|3 comments
ஜனவரி 22 - 2016 தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பாக திண்டுக்கல் GTN கல்லூரியிலும்  மதுரை KLN  பொறியியல் கல்லூரியிலும் தமிழ்க் கணினித் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் நானும்(Dr. Durai.Manikanadan, k.umaraj) க.உமாராஜ் அவர்களும் கலந்துகொண்டு  மாணவர்களுக்குக் கணினித்தமிழின் இன்றையத் தேவைகளை எடுத்து விளக்கினோம்.

மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்துகொண்டனர். சிலர் உடனே தனது பங்களிப்பைச் செய்வதற்கு முன்வந்தனர்.

 GTN கல்லூரியில் நானும் பேரா.க.உமாராஜ் அவர்களும். அருகில் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி நிர்வாகிகள்.
  GTN கல்லூரியில் மாணவ மாணவிகள்
 மதுரை  K.L.N பொறியியல் கல்லுரியில் குத்துவிளக்கு ஏற்றுதல் அருகில் பேரா.க.உமாராஜ், மற்றும் கல்லூரி முதல்வர், கணினித்துறை பேராசிரியர்கள்.
                                                             K.L.N பொறியியல்

K.L.N பொறியியல்  மாணவிகள் மற்றும் மாணவர்கள்






Wednesday, February 17, 2016

தழிழ்ச் சிறுகதைகளின் பன்முகத்தன்மை - பன்னாட்டுக் கருத்தரங்கம்.

|0 comments

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரி, நவலூர்குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி
பன்னாட்டுக் கருத்தரங்கம்.
அழைப்பிதழ்.
அனைவரும் வாரீர்.







Saturday, February 13, 2016

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம்( INFITT) நடத்திய செல்பேசிக் கணிமை 2016 – பன்னாட்டுப் பயிலரங்கம்

|2 comments

உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் நடத்திய
செல்பேசிக் கணிமை 2016 – பன்னாட்டுப் பயிலரங்கம் – 

                          தொடக்க விழா


உத்தமம் என்றழைக்கப்படுகின்ற உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் தமிழ்இணையக் கல்விக் கழகத்தின் கூட்ட அரங்கில் செல்பேசிக் கணிமை 2016 என்னும் பொருண்மையில் பன்னாட்டுப் பயிலரங்கத்தின் தொடக்க விழா 05.02.2016ஆம் நாள் காலை 10.00 மணிக்குத் தொடங்கியது.
தொடக்க விழாவிற்கு முனைவர் நாகராசன் தலைமை தாங்கினார். திரு லோகசுந்தரம் முன்னிலை வகித்தார். உத்தமத்தின் தலைவர் இனியநேரு வரவேற்புரை ஆற்றினார். பன்னாட்டுப் பயிலரங்கின் நோக்கங்களை உத்தமத்தின் செயல் இயக்குநர் செல்வமுரளி எடுத்துரைத்து அறிமுகவுரையாற்றினார். தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் இணை இயக்குநர் முனைவர் தனலெட்சுமி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து மாலை வரை பல்வேறு அமர்வுகள் நடைபெற்றன.

தொடக்கவிழாவில் திரு.செல்வமுரளி,திரு.பாலசுப்பிரமணியம், திரு.லோகசுந்தரம்,பேராசிரியர் நாகராஜன் கேட்கேர் இளங்கோவன், திருமதி தனலெட்சுமி, உத்தமம் தலைவர் திரு.இனியநேரு. 

                  இயக்குநர் வ.தனலட்சுமி அவர்களைச் சிறப்பு செய்கிறார்.

இதில் திரு. இளங்கோவன் செல்பேசியில் பதிப்பங்கள் சந்தை மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் “மின்பதிப்பில் இன்றையச் சந்தை நிலவரம் அதில் குறுஞ்செயலிகளுக்கான தேவை முதலியவற்றை விரிவாக எடுத்துரைத்ததோடு அவரின் Cadcarf நிறுவனத்தினர் தினகரனுக்கும் மற்றைய பத்திரிகைகளுக்கும் தற்பொழுது செய்து கொடுத்திருக்கும் குறுஞ்செயலிகளைச் செயல்படுத்திக் காட்டினார். மேலும், குறுஞ்செயலிகள் தயாரிப்பில் உள்ள பல்வேறு உத்திகளை எடுத்துரைத்தார். 


திரு. பாலசுப்பிரமணியம் தமிழ்க் குறுஞ்செயலிகளின் சந்தை மற்றும் வேலை வாய்ப்புகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில் மூர்ஸ் விதிகளின் அடிப்படையில் ஒரு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, வீழ்ச்சி அதனைப் புரிந்துகொண்டு சந்தைப்படுத்துதலின் தேவை ஆகியவற்றை விரிவாக விளக்கினார். தொழில்நுட்ப அறிவோடு மென்திறன்கள், நல்ல நுண்ணறிவுத் திறன் அதோடு குறிக்கோள் உள்ளவர்களால் மட்டுமே இன்றைய சந்தை நிலவரத்தில் வெற்றிபெற இயலும் என்பதனை எடுத்துரைத்தார்.

பிரபல பத்திரிக்கையாளர் திரு. ஆழி. செந்தில்நாதன் செல்பேசிக் கணிமையும் மொழிக் கணிமையும் என்னும் தலைப்பில் பல்வேறு அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.தொழில்நுட்ப வல்லுநர்கள் நுட்பவியலாளர்களுக்குச் செலவு செய்கிறார்களே தவிர, மொழிபெயர்ப்பாளர்களுக்கோ உள்ளடக்க உருவாக்குநர்களுக்கோ செலவு செய்ய முன்வருதில்லை. உலக வணிகவியலாளர்கள் சந்தைப்படுத்துதலில் தாய்மொழியின் பங்கினை உணர்ந்து அவரவர் மொழியில் கொடுக்கவேண்டும் என்பதைப் புரிந்திருக்கிறார்கள். தமிழ்நுட்ப வணிகத்தினர் இதனைப் புரிந்துகொள்ளவில்லை எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.  மைக்ரோ சாப்ட் நிறுவனம் சார்ந்த வெங்கடரங்கன் குறுஞ்செயலிகள் உருவாக்கத் தொழில்நுட்பம் என்னும் தலைப்பில் உரையாற்றினார். அதில் குறுஞ்செயலி உருவாக்கத் தொழில்நுட்பம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். எந்த இயங்குதளத்தைத் தேர்ந்தெடுப்பது, எந்த நிரல்மொழியில் எழுதுவது என்பது குறித்தும் பொது இயங்குதள நிரல் மொழிகள் எவை முதலான பல்வேறு தொழில் நுட்ப தகவல்களை எடுத்துரைத்தார்.

                              ஆழி செந்தில்நாதன் அவர்கள்

     எழுத்தாளர்  திரு. என்.சொக்கன் தமிழ் ஆர்வலர்களும் செல்பேசி கணிமையும் என்ற தலைப்பில் உரையாற்றினார். குறுஞ்செயலி உருவாக்கத்திற்கும் சந்தைப்படுத்துதலுக்குமான தகவல்கள் 24 கருத்துகளாகப் பட்டியலிட்டு விளக்கினார். பல ஆயிரம் மனிதர்கள் ஈடுபட்டுள்ள குறுஞ்செயலி உருவாக்கக் களத்தில் அதனை எவ்வாறு உற்றுநோக்கி சந்தையைப் புரிந்து தேவையானவற்றை உருவாக்குவதன் தேவையை விளக்கினார். பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி அலைபேசிகளில் ஒளியுணரிகளை (OCR) இணைப்பது குறித்துப் பேசினார். OCR, ICR தமிழில் உருவாக்குவதில் தன்முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கும் பேராசிரியர் OCRஐ செல்பேசிகளில் இணைப்பதின் இன்றியமையாத் தேவையையும் தமிழ் ஓசிஆர் செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள் அதில் தொடர்ந்து செயல்பட்டு வெற்றிகாண்பதன் தேவை ஆகியவற்றை விரிவாக எடுத்துரைத்தார். காணொலி-- https://www.youtube.com/watch?v=P8kppRBmBb8

                               திரு சொக்கம் அவர்கள்

     உத்தமத்தின் தலைவர் திரு இனிய நேரு அவர்கள் நன்றி கூறினார். அன்றைய நிகழ்ச்சிகளைப் பேராசிரியர் சாசலின் பிரிசிலில்டா தொகுத்து வழங்கினார்.. இந்த விழாவில் இலங்கையிலிருந்து சிவாஅனுராஜ், மலேசியாவிலிருந்து கிங்ஸ்டன், உத்தமத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் முனைவர் தி.நெடுஞ்செழியன், பன்னிருகை வடிவேலன், இல.சுந்தரம்,  அரவிந்தன் கிருஷ்ணமூர்த்தி, குணசீலன், பேராசிரியர்கள் காமாட்சி, பத்மநாபபிள்ளை, சிதம்பரம், பிரிசில்டா, கீதா, இரமேஷ் சாமியப்பா, ஆரோக்கிய செல்வி, , செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தின் முருகசுவாமிநாதன், அகிலன் மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் சார்ந்தவர்கள், அண்ணாப் பல்கலைக்கழகத் தொழில்நுட்பத் துறை மாணவர்கள் என சுமார் 100 பேர் இத் தொடக்கவிழாவில் கலந்துகொண்டனர்.


        06.02.2016 சனிக்கிழமை பயிலரங்கின் 2ஆம் நாள் நிகழ்வுகள் நடைபெற்றன. உத்தமத்தின் செயல் இயக்குநர் திரு. செல்வமுரளி அவர்கள் செல்பேசி நிரலாக்க அடிப்படை என்னும் பொருண்மையில் கருத்துரை வழங்கினார். திறன்பேசியின் பயன்பாடு, தேவைகள், அடிப்படைத் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி அளித்தார். அடுத்து, விஷூவல் டெக்னாலஜியின் ஆண்டிரய்டு நிரலாளர் திரு லோகேஷ்குமார் ஆண்டிரய்டு மென்பொருள் உருவாக்கப் பயிற்சி வழங்கினார். ஆண்டிராயிடின் வரலாறு, வளர்ச்சி, பயன்பாடு, தொழில்நுட்பம் குறித்து கருத்துரைகள் வழங்கினார். இந்தியா டு டேயின் கலைவடிவ இயக்குநரும் எழுத்துரு வல்லுநருமான திரு நாராயணன் அவர்கள் கணினியில் எழுத்துருவின் வளர்ச்சி தமிழ் எழுத்துருக்களின் வடிவமைப்பு குறித்து கருத்துகளை எடுத்துரைத்தார்.
                    திரு செல்வமுரளி மற்றும் திரு. லோகேஸ்குமார்


                               திரு நயனம் அவர்கள்(நாராயணன்)

        நீச்சல்காரன் தமிழ்க்கணினி பிழைத்திருத்திகள் வாணி மற்றும் நாவி குறித்து விளக்கினார். மேலும் தமிழர்களின் தொண்மை விளையாட்டான ஆடுபுலி ஆட்டம், மென்கோலங்கள் என்று பல்வேறு கலைகளைக் கணினி மயமாக்கும் உத்திகள் பற்றியும் கூறினார். தொடர்ந்து கணினி உத்திகள் ஆலோசகர் திரு ஜி,வி,முத்துக்குமார் பொது நிறுவன தமிழ்க்கணிமைக் குறித்துக் கருத்துரை வழங்கினார். தேடல், தேவை, புதியச்சிந்தனை, கணிமையாக்கம், சந்தைப்படுத்துதலின் அவசியம் பற்றியும் உரையாற்றினார்.
                              திரு ஜீ.வி.முத்துக்குமார்

     SSN கல்லூரி பேராசிரியர் திரு. நாகராஜன் “அலைபெசிகளின் TTS நுட்பத்தினை இணைக்கும் முறைக்குறித்து பயிற்சி வழங்கினார். செல்பேசிகளின் ஒலி நுட்பத்தின் அவசியம்பற்றியும் தெளிவுப்படுத்தினார்.


       இறுதியாக நிறைவு விழாவில லண்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு சிவாப்பிள்ளை, இலங்கை கணிப்பொறியியல் நிறுவனர் திரு அனுராஜ் அவர்கள் நிரைவுரை வழங்கினார். மென்பொருளையும் குறுஞ்செயலியையும் இலவசமாகக் கொடுக்க வேண்டாம். குறைந்த பணத்தில் வெளியிட வேண்டும் என்றார். 

திரு சிவாப்பிள்ளை அவர்களிக்கு உத்தமம் தலைவர் திரு இனியநேரு சிறப்பு செய்கிறார்.அருகில் திரு அனுராஜ் மற்றும் நான்(துரை.மணிகண்டன்)




  திரு அனுராஜ் அவர்களின் உரை  உடன் திரு சிவாப்பிள்ளை. மற்றும் திரு இனியநேரு

       பயிற்சியில் கலந்துகொண்ட  100 க்கும் மேற்பட்டோர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக உத்தமம் செயற்குழு உறுப்பினர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் நன்றியுரையாற்றினார். இக்கருத்தரங்கில் பெரியார் பல்கலைக்கழகம், அண்ணாத் தொழில்நுட்ப கல்லூரி, அண்ணாப் பல்கலைக்கழகம், ஜெருசலம் பொறியியல் கல்லூரி சவிதா பொறியியல் கல்லூரி மாணவ மாணவிகள் விழாவில் கலந்துகொண்டனர்.

 பொறியாளர் திரு அகிலன் அவர்களுக்குச் சான்றிதழ் வழங்குதல்
                                                                 பேராசிரியர் கீதா
                                                           பேராசிரியர் குணசீலன்
                                   பேராசிரியர் தி.நெடுஞ்செழியன்
                         நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராளர்கள்.

Thursday, January 28, 2016

செல்பேசி கணிமை 2016.

|0 comments

2016, பிப்ரவரி மாதம்  5மற்றும் 6 ஆம்தேதி இரண்டு நாட்களும் சென்னைத் தமிழ் இணையக் கல்விக்கழகத்தில் தமிழ்க்குறுஞ்செயலி உருவாக்க மாநாடு நடைபெற உள்ளது.  இந்த நிகழ்வில் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

Saturday, January 9, 2016

பன்னாட்டுக்கருத்தரங்கம் - “தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத் தன்மை

|5 comments
தமிழ்ச் சிறுகதைகளின் பன்முகத் தன்மை என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம் 2016, பிப்பரவரி 25,26 ஆகிய தினங்களில் எமது கல்லூரி தமிழ்த்துறையின் சார்பாக நடத்தத் திட்டுமிட்டுள்ளோம். கட்டுரைகள் பிப்பரவரி 5 ஆம் தேதிக்கு முன்பே வரவேண்டும். எனவே சிறந்த ஆய்வுக்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.  சிறுகதைகள் பற்றிய  சிறந்த, கருத்தாழமிக்க கட்டுரைகளும் புலம்பெயர் சிறுகதை ஆசிரியர்களின் படைப்புகள் பற்றி கட்டுரைகளும் அமைந்திருந்தால் நலம் பயக்கும். சிறந்த கட்டுரைய்யே தேர்ந்தெடுக்கப்படும் என்பதையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். கட்டுரை எழுதுபவர்கள் கீழே அழைப்பிதழில் உள்ள பக்கத்தை நகல் எடுத்து அனுப்பலாம்.

Wednesday, January 6, 2016

இயல் விருது

|1 comments
கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது ( இயல் விருது ) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் திரு இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.

இலங்கையில் வண்ணார்பண்ணை என்னுமிடத்தில் பிறந்த திரு மயூரநாதன் . கட்டடக்கலையில் முதுநிலை பட்டம் பெற்றபின்னர் கொழும்பில் 17 ஆண்டுகள் பணியாற்றினார். 1993-ல் துபாய்க்குப் புலம்பெயர்ந்தவர் தமிழ் அறிவியல் துறையில் கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். 2001ம் ஆண்டு ஆங்கிலத்தில் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டபோது, அதன் பின்னணியில் உள்ள தொழில்நுட்பம் கொடுக்கும் ஆற்றலையும், அறிவு உருவாக்கத்தில் அதன் மகத்தான பங்களிப்பையும் உணர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவை 2003ம் ஆண்டிலேயே தொடங்கினார்.. முதல் 12 மாதங்கள் தனியாளாக அதன் அடிப்படை வசதிகளைச் செய்து வலுவான தளமாக அமைப்பதற்கு உழைத்தார். பின்னர் சிறிது சிறிதாக இணையத்தளத்தை விரிவாக்கி திறமையான பங்களிப்பாளர்களை இணைத்து மிகச் சிறப்பாக இயங்கும் ஒரு கூட்டுக்குழுமமாக அதை நிறுவினார். 

தமிழ் விக்கிப்பீடியாவே முதன்முதலாக அனைத்துலக பங்களிப்பாளர்கள் கூட்டாக இயங்கி ‘’Web 2.0’’ என்னும் முறையில் உருவாக்கப்பட்ட மாபெரும் படைப்பு. இதில் ஓரளவிற்குக் கணிசமாகப் பங்களித்திருப்பவர்கள் ஏறத்தாழ 100 பேர்தான் எனினும், இன்று 88,000 பேருக்கும் அதிகமானவர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளனர்.  கலைக்களஞ்சியத்தில் ஏற்றப்பட்ட கட்டுரைகளின் எண்ணிக்கை 83,000.  இதில் 80 வீதம் கட்டுரைகளை ஒதுக்கிவிட்டாலும்கூட 16,600 தரமான கட்டுரைகள் என்பது 24 தொகுதிகள் அடங்கிய அச்சுக் கலைக்களஞ்சியத்திற்கு சமமானது. இம்மாபெரும் படைப்பில் மயூரநாதன் மட்டுமே முதல் கட்டுரையிலிருந்து இன்றுவரை 4200-க்கும் மேற்பட்ட தரமான கட்டுரைகளைத் தொடங்கி உருவாக்கியுள்ளார்.  இவற்றை அச்சிட்டால், குறைந்தது 500 பக்கங்கள் கொண்ட எட்டு நூல்களாக அமையும். இந்தத் திட்டத்தை இவ்வளவு நேர்த்தியாக முன்னெடுத்துச் சென்றதிலும், கூட்டுழைப்பையும் நல்லுறவையும் மேம்படுத்துவதிலும் இவருடைய  இடையறாத உழைப்பும் நல்லறிவும் உதவியிருக்கிறது என்பது உண்மை. இன்று தமிழ் விக்கிப்பீடியா மாதந்தோறும் 3.5 மில்லியன் பார்வையாளர்களை எட்டும் பிரபல தளமாகவுள்ளது. உலகப் பன்மொழி  திட்டத்தில் இன்று 291 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் இயங்குகின்றன. இதில் தமிழ் மொழியின் இடம் 61. இந்திய மொழிகளில் உள்ள விக்கிப்பீடியாவை அலசியதில், எண்ணிக்கை அடிப்படையில் தமிழ் இரண்டாவதாக வந்தாலும்,  தரத்தின் அடிப்படையில் பல வகைளில் தமிழ் விக்கிப்பீடியா முதலாவதாக நிற்கின்றது ( சிச்சு ஆலெக்சு Shiju Alex 2010 இல் செய்த தர ஒப்பீடு ). இப்படிப்பட்ட தமிழ் விக்கிப்பீடியாவை தனியொருவராகத் தொடங்கி வளர்த்தெடுத்த மயூரநாதன் அவர்களின் பங்களிப்பு பெரும் பாராட்டுதலுக்குரியது. மனித குலத்தின் அறிவு உருவாக்கத்தில் விக்கிப்பீடியாவின் தோற்றம் ஒரு பாய்ச்சல் எனலாம்.  தமிழ் மொழியை நவீன அறிவுத் தேவைகளுக்கு ஈடுகொடுக்கக்கூடிய ஒரு மொழியாக வளர்த்தெடுப்பதிலும், தமிழ் மூலமான அறிவு உருவாக்கம் பரவல்  தொடர்பிலும் தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கியத்துவம் பல மட்டங்களிலும் உணரப்பட்டு வருகிறது. அண்மைக் காலங்களில், தமிழ்மொழி வளர்ச்சி தொடர்பான மாநாடுகளிலும், தமிழ் இணையத் தொழில்நுட்ப கருத்தரங்குகளிலும், அரசு சார்ந்த சில நிறுவனங்களின் தமிழ் வளர்ச்சிக்கான முன்னெடுப்புக்களிலும் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இன்று, தமிழ் விக்கிப்பீடியா மூலமான பங்களிப்புகள் மரபுவழியான பிற இலக்கிய முயற்சிகளுக்கு ஈடான முக்கியத்துவம் கொண்டவையாக வளர்ந்துள்ளன. அத்துடன் இது எதிர்காலத் தமிழ் வளர்ச்சிக்கான நம்பிக்கையாகவும் விளங்குகிறது. அதன் வளர்ச்சியில் முனைப்புடன் ஈடுபட்ட குழுமத்தை பாராட்டுவதுடன் விக்கிப்பீடியா  நிறுவுநரான திரு இ.மயூரநாதனுக்கு வாழ்நாள் சாதனயாளர் விருதை வழங்கி கௌரவிப்பதில் கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் பெருமையடைகிறது. விருது வழங்கும் விழா ரொறொன்ரோவில் 2016 ஜூன் மாதம் நடைபெறவிருக்கிறது.  அப்போது இயல் விருது கேடயமும் பரிசுத்தொகைப் பணம் 2500 டொலர்களும் வழங்கப்படும்.

தகவல்: அ.முத்துலிங்கம் amuttu@gmail.com
நன்றி: பதிவுகள் இணைய இதழ்.

Wednesday, October 14, 2015

தமிழ் இணையப் பயிலரங்கம் - பூண்டி வாண்டையார் கல்லூரி

|4 comments
தஞ்சாவூர் பூண்டி வாண்டையார் திரு புட்பம் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக 13-10-2015  செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற ”தமிழ்க்கணினிப் பயன்பாடுகள்” என்ற பொருண்மையில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் முதலில் தமிழ்த்துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி.சிவபாதம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். அடுத்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.உதயகுமார் அவர்கள் கணினிப்பொறியின் வரலாற்றை மிகத் தெளிவாக விளக்கினார். உலகில் வளர்ந்த மொழிகளாக இருக்கும் சீனா, ஜெர்மனி, ஆங்கிலம், ஸ்பானிஸ் மொழிகளில் அவரவர் தாய்மொழியில்தான் தொழில்நுட்பத்தைக் கற்று மேலோங்கி உள்ளனர். அதைபோல நம் தாய்மொழியான தமிழில் தொழில்நுட்ப அறிவுகளை கற்கவேண்டும் என்றார்.

கல்லூரி முதல்வர் பேராசிரியர் சோ.உதயகுமார் அவர்கள்.



தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் நா.சிவாஜிகபிலன் அறிமுகம் செய்துவைக்கின்றார்.  வரிசையில் தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர்முனைவர் வீ.சிவபாதம், கல்லூரி முதல்வர் சோ.உதயகுமார், பேராசிரியர் இராபர்ட் அலைக்சாண்டர் மற்றும் நான்(Dr.Durai.Manikandan.)

அடுத்து முன்னிலை உரையாற்றி அறிவியல் புலத்தலைவர் முனைவர் இராபர்ட் அலைக்சாண்டர் அவர்கள் கணிப்பொறியின் இன்றையப் பயன்பாட்டையும் தமிழ் இணையதளங்களில் பேரா.நா.கோவிந்தசாமியின் பங்களிப்பையும் எடுத்து விளக்கினார்.
நிகழ்வில் என்னை அறிமுகம் செய்து பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைபாளர் பேராசிரியர் நா. சிவாஜிகபிலன் அவர்கள் முனைவர் துரை.மணிகண்டன் தமிழ்த்துறைச் சார்ந்தவர். இவர் கணினித்தமிழுக்கும் இணையத்தமிழுக்கு ஆற்றிய தொண்டாக நான்கு நூல்களை எழுதி வெளியிட்டு உலக மக்களுக்கு வழங்கியிருப்பது நமக்கெல்லாம் வியப்பே என்றார். நூல் விபரங்களையும் கூறினார்.( இணையமும் தமிழும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள், தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள்) அடுத்து நான் உரை நிகழ்த்தினேன்.  சுமார் 40 நிமிடம் மாணவர்களுக்குச் சிறப்புரை வழங்கினேன்.

இரண்டு மணிநேரம் மாணவர்களுக்குப் பயிற்சிமுறையில் விளக்கினேன். பயிற்சியில் 100 மாணவிகள் மற்றும் 15 மாணவர்கள் 20 மேற்பட்ட பல்வேறு துறையைச் சார்ந்த பேராசிரியர்கள் கலந்துகொண்டன்ர். இதில் சுமார் பத்து மாணவிகள் தமிழ் எழுத்துருவை பதிவிறக்கம் செய்து தேடுதலில் தேடினார்கள்.  பல மாணவர்களும் இப்பயிற்சியை மேற்கொண்டனர். மிகச்சிறப்பாக மாணவார்களும் மாணவிகளும் ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டனர்.

 மாணவி தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து தமிழில் வலைப்பதிவை உருவாக்கி எழுதும் காட்சி

ஒரு மாணவன் தமிழ் விக்கிப்பீடியாவில் தச்சன்வயல் என்ற அவனது ஊரைப்பற்றி எழுதினார். 

ஒரு சிறப்பாக அங்கு பணிபுரியும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சிவாஜிகபிலன் அவர்கள் மாணவிகளுக்குப் பயிற்சி கொடுத்து வைத்துள்ளார். அஃது இப்பயிற்சிக்கு பெரும் உதவியாக இருந்தது. ஒரு மாணவனுக்கு அவனது ஊரான தச்சன்வயல் என்ற ஊரைப்பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதினார். மற்றவர்களும் எங்கள் ஊரைப் பற்றி எழுதுகின்றோம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
                   நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

இப்பயிற்சியும் எனக்கு மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. விழாவினை ஏற்பாடு செய்திருந்த பேரா. சிவாஜிகபிலன் அவர்களுக்கும் தமிழ்த்துறைத் தலைவர் அவர்களுக்கும் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், கணினித்துறை, பொருளாதாரத்துறைப் பேராசிரியர் என அனைவரும் கலந்து பயன்பெற்றனர். இவர்களுக்கு என நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்த்துறையில் பேரா.சிவாஜிகபிலனின் முயற்சியால் பல மாணவிகள் ஒருங்குறியில் தட்டச்சு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர். நன்றி திரு சிவாஜிகபிலன் அவர்களே

சிறந்த கட்டுரைக்குப் பரிசும் பாராட்டும்.

|2 comments
புதுக்கோட்டையில் நான்காம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழா வெகு சிறப்பாக 11/ 10/ 2015 அன்று நடைபெற்றது.  இவ்விழாவில்  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ. சுப்பையா அவர்கள், தமிழ் இணையக்கல்விக் கழக உதவி இயக்குநர் மா.தமிழ்ப்பரிதி, தமிழ் விக்கிப்பீடியா அ. இரவிசங்கர், வலைப்பதிவர் நிர்வாகிகள், கணினித்தமிழ்ச்சங்க நிர்வாகி் நா.அருள்முருகன். திரு.முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன். எழுத்தாளர் எஸ்.இரமகிருஷ்ணன் போன்றோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில்   கட்டுரை, கவிதை, மரபுக்கவிதை, சுற்றுச்சூழல் சார்ந்த படைப்புகளிக்கு விருது வழங்கி சிறப்பித்தனர். அதில்  தமிழ்க்கணனி சார்ந்த கட்டுரைப் போட்டியில் முதல் பரிசை (ரூ.5000, மற்றும் நினைவுப் பரிசும்) எனக்கு வழங்கினார்கள். நான் அதை பெருமையுடன் ஏற்றுக்கொண்டேன். 

முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் தனது வலைப்பதிவைப் பற்றி விளக்கும்போது. அருகில் கவிஞ்சர் தங்க.மூர்த்தி, எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், திரு.முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன்.




விருதை பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதியிடமிருந்த (Dr.Durai.Manikandan) பெறும் காட்சி. அருகில் காரைக்குடி பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ.சுப்பையா,  வலைப்பதிவர் நிர்வாகிகள், கணினித்தமிழ்ச்சங்க நிர்வாகி் நா.அருள்முருகன். திரு.முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன்

Monday, October 12, 2015

திரு புட்பம் தன்னாட்சிக் கல்லூரி, பூண்டி, தஞ்சாவூர். -தமிழ்க் கணினி பயன்பாடுகள்

|4 comments
ஐந்து நூற்றாண்டுகள் அசைக்க முடியாத ஆட்சிப்புரிந்த சோழனின் தஞ்சை மண்ணில் ஏழை எளிய மக்களின் கல்விக் கண்ணைத் திறந்த பூண்டி வாண்டையார்  அவர்களால் திரு புட்பம் தன்னாட்சி  கல்லூரியில் தமிழ்க் கணினிப் பயன்பாடுகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெறுகிறது.  தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் புது முயற்சியில் 12/10/2015 திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு இனிதே தொடங்க இருக்கிறது. அனைவரும் வாரீர். தமிழ் இணையத்தை அறிந்துகொள்வீர்கள்.


Thursday, October 1, 2015

Roever college tamil internet seminar

|2 comments
1-10-2015, வியாழக்கிழமை பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் தமிழ் இணையம் என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் காலை 9.30 மணிக்கு கல்லூரி குளிர்மை அரங்கில் இனிதே தொடங்கியது.
தொடக்க அமர்வில் தேனி எம்.சுப்பிரமணி அவர்கள் இணையத்தமிழ் அறிமுகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
 இணையம் அறிமுகம், தமிழ் எழுத்துரு பிரச்சனை, தமிழ் இணைய இதழ்களில் எழுதுவது எப்படி, தமிழ் விக்கிப்பீடியாவின் இன்றைய நிலை என்ன? இந்திய அளவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே உள்ளது என பல புள்ளி விபரங்களுடன் விளக்கம் தந்தார். இறுதியில் மாணவரகள் கேட்ட வினாக்களுக்குத் தக்க பதிலும் தந்து உதவினார்.
                                                       பயிற்சியில் மாணவிகள்
தேனி எம் சுப்பிரமணியத்திடம் வினா எழுப்பும் கல்லூரி ஆசிரியர்.


அடுத்த அமர்வில் நான் (Dr.Durai.Manikandan) உரை நிகழ்த்தினேன். அதில் தமிழ் எழுத்துருவை எவ்வாறு கணினியில் பதிவிறக்கம் செய்து தமிழில் தட்டச்சு செய்வது என்பதை செய்முறைப் பயிற்சியுடன் விளக்கினேன். அதில் ஒரு மாணவர் மற்றும் இரண்டு மாணவிகள் செய்முறையில் கலந்துகொண்டனர். மேலும் தமிழ் வலைப்பதிவையும் மூவரும் உருவாக்க கற்றுக்கொடுத்தேன். மிக அருமையாக இருந்தது. இப்பயிலரங்கம் நான் பேசிய இடங்களுள் சிறப்பானதாக இருந்தது. ஏனெனில் சுமார் 59 மாணவ மாணவிகள் தமிழில் தட்டச்சு செய்வதற்குக் கற்றுக்கொண்டனர். இதுவே  இப்பயிலரங்கத்தின் வெற்றி என்றே சொல்லாம்.


பயிலரங்கில் தமிழ் எழுத்துருவையும், தமிழ் வலைப்பதிவையும் உருவாக்கும் மாணவர்கள்.


கல்லூரி பேராசிரியர்கள் பயிற்சியில்

இறுதியாக கல்லூரி முதல்வர் முனைவர் அயோத்தி அவர்கள் உரை நிகழ்த்தினார். மிக் அருமை. அவர் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களையும் பேராசிரியர்களையும் பார்த்து இந்த ஆண்டு நமது கல்லூரி தமிழ்த்துறையில் ஆய்வு மேற்கொள்ளும் அனைத்து ஆய்வாளரும் இணைய இதழைப் பற்றி ஆய்வுக்கட்டுரை  வழங்க வேண்டுமென்று கூறினார். அப்பொழுதுதான் இந்தப் பயிலரங்கம் வெற்றியடைந்ததாக இருக்கும். இதை அனைத்துப் பேராசிரியர்களும் கடைபிடிக்கவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார். பயிற்சி வழங்கிய எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது.

இந்நிகழ்வை தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஜெ.ரஜ்ஜனி  தலைமையில் நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மேலும் இப்பயிலரங்கில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் மாணவர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் என எழுபது மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Wednesday, September 30, 2015

தமிழ் இணையத்தின் வளர்ச்சி

|23 comments
 தமிழ் இணையத்தின்  -  வளர்ச்சி 

                                                                              முனைவர் துரை.மணிகண்டன்
                                           
முன்னுரை
கற்றது  கைமண்ணளவு கல்லாதது உலகளவுஎன்பது பழமொழி. இப் பழமொழிக்கேற்ப இன்று அறிவியலின் பரிணாமம் பல வழிகளில் வளர்ந்து வந்துள்ளன. காலத்தை வென்றவன் யார் என்றால் பதில்சொல்ல மனித இனம் எதுவுமே இல்லை. இயற்கை நம்மை வெற்றிக்கொண்டிருக்கிறது. காலத்தின் ஓடையில் நாம் கரைந்து வளர்ந்து வந்துள்ளோம். மனித இனம் ஒரு தொடர் போராட்டக் களத்திலிருந்து தன்னை மீட்டு எடுத்து வந்துகொண்டிருக்கிறது என்றால் அஃது உண்மையேதொடக்கத்தில் இயற்கையை நேசித்த மனித இனம் படிப்படியாக தன்னையும் தன் சுய இருப்பையும் வெளிக்காட்டிக்கொள்ள வளர்ச்சி என்ற போர்வையில் அறிவியல் தொழில்நுட்பங்களை தன்னோடு இணைத்துக்கொண்டது. விளைவு இன்று எதெற்கெடுத்தாலும் அறிவியல் அணுகுமுறைகள்.அதன பின்விளைவுதான் இன்று கணினி, இணையம்.
தமிழ் இணைய வரலாறு
     உலகில் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் இணையப் பயன்பாடுகள் வளர்ந்து வந்துகொண்டிருக்கிறது. அது தமிழ்மொழிக்கும் பொருந்தும். ஒரு காலத்தில் தமிழ்மொழி ஒரு மாநிலமொழியாக இருந்தது. பின்பு ஒருசில நாட்டுமொழியாக உருமாறின. இன்று இதன் வளர்ச்சி மிகப்பெரிய வளர்ச்சி. இதனைத்தான் முனைவர் வா.செ.குழந்தைசாமி தமிழ்மொழி ஒரு குவளயத்தின் தாய்மொழி என்கின்றார். மேலும் அவர் குறிப்பிடுகையில் “ஒரு சமுதாயம் இன்றைய  பணிகளை, இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும். இன்றைய பணியை நேற்றைய கருவிக்கொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும். இது தவிர்க்க  முடியாதது”. இதனைக் கருத்தில்கொண்டுதான் தமிழ்மொழி இணையத்தில் தனக்கென ஓர் இடத்தைத் தக்க வைத்துள்ளது.
இணையத்தில் தமிழ்
      இணையம் பயன்படுத்த முதலில் தமிழ் எழுத்துருக்கள் தேவை. தொடக்க காலங்களில் ஆங்கில குறியீட்டு முறையில் பயன்படுத்தி வந்த கணினிகள் தாய்மொழியில் பயன்படுத்த வேண்டும் என்ற முயற்சியில் உலகில் வாழும் தமிழ் அறிஞர்கள் பலர் முயற்சி எடுத்து வந்துள்ளனர். அவர்களில் கனடாவில் வசிக்கும் கலாநிதி சீனிவாசன் என்பவரால் 1984 – ல் ‘ஆதமி’, ’ஆதவின்’, ‘திருவின் என்ற தமிழ் எழுத்துருக்கள் உருவாக்கப்பட்டுக் கணினிகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.(தமிழ் விக்கிப்பீடியா) 1985 –ல் சுவிட்சர்லாந்தைச் சார்ந்த முனைவர் கு.கல்யாணசுந்தரம் உருவாக்கிய ‘மயிலை’,  அமெரிக்காவை சார்ந்த மருத்துவர் பெரியண்ணன் குப்புசாமி உருவாக்கிய ‘ அணங்கு’, பேராசிரியர் ஜார்ஜ்.எல்.ஹார்ட் உருவாக்கிய ‘தமிழ் லேசர்’  பிறகு மலேசியாவைச் சார்ந்த முத்தெழிலன் எனபவரால் ‘அஞ்சல்’, ‘முரசு’ என்ற தமிழ் குறியீட்டுமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டது. பிறகு பல்வேறு தமிழ் எழுத்துக் குறியீடுகள் தோன்றலாயின. இதனை அறிஞர் மனவை.முஸ்தபா, தம் ‘காலம்தேடும் தமிழ்’ என்னும் நூலில் “இந்தியாவில் உள்ள IBM நிறுவனம் பாரதி என்னும் தமிழ்ச்சொல் தொகுப்புச் சாதனைத்தைக் கண்டறிந்து வடிவமைத்தது. அதேபோன்று மலேசியாவிலுள்ள இரவீந்திரன் என்னும் தமிழ் இளைஞர் ‘துணைவன்’ என்னும் சொற்றொகுப்புச் சாதனத்தை கண்டறிந்துள்ளார். அதே நாட்டைச் சார்ந்த முத்தெழிலன்(முத்து நெடுமாறன்) என்னும் தமிழ் இளைஞர் ‘முரசு’ என்னும் தமிழ்ச் சொற்றொகுப்புச் சாதனத்தை வடிவமைத்துள்ளார். இவையனைத்தும் ஆங்கிலத்தோடு தமிழும் இயங்கு வண்ணம் அமைத்துள்ளனவாகும். இத் தமிழ்ச் சொற்றொகுப்புச் சாதனங்களில் சிறுசிறு வேறுபாடுகள் இருந்தபோதிலும்  கணிப்பொறியில் தமிழைப் பயன்படுத்தும் முயற்சியில் மாபெரும் வெற்றி கிடைத்துள்ளது என்பது மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியாகும்” என்கிறார்.
  இவ்வாறு பல்வேறு வகையான தமிழ் எழுத்துருக்கள் தோன்றியக் காலங்களில் தமிழ் இணையதளங்களும் தோன்றலாயின.  அவ்வாறு தோன்றிய இணையதளங்களில் முதலில் ஏற்றம் பெற்றது சிங்கப்பூர் என்று விக்கிப்பீடியா கூறுகிறது. அது கிட்டத்தட்ட என் ஆய்வின் படி உண்மையே. ஏனெனில் நான் இத்துறையில் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக இயங்கி வருகின்றேன். அந்த அடிப்படையிலும் மேலும் பல தமிழ்க் கணினி அறிஞர்களின் கருத்துருவாக்கங்களின் அடிப்படையிலும் இதனை உண்மை என்று கூறுகின்றேன்.
      1995 ஆண்டில் சிங்கப்பூரைச் சார்ந்த அதிபர் ஓங்டாங் சாங் துவங்கிவைத்த (Journey words homenana nation – andhology of Singapore poetry lry 1984-1995) நான்கு தேசியமொழிக்கான கவிதை வலையகத்தில் தமிழ்மொழி ஏற்றம் பெறுகிறது. இதற்கு முழுமுதல் காரணமாக இருந்தவர் சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய முனைவர் நா. கோவிந்தசாமி ஆவார். இவரே இணையத்தமிழ் முன்னோடி என்று அழைக்கப்படுகிறார்.
தமிழ் இணையதளங்கள்
தமிழில் தோன்றிய முதல் இணையதளம் “தமிழ் சினிமா”(www.tamilcinema) தான் என்று கூறுகின்றார் ஆசிரியர் மா.ஆண்டோபீட்டர். ஆனால் 1992-93 ஆண்டுகளில் எஸ்.டி.தமிழ் இலக்கிய மன்றம், “ஆ” என்ற ஒரு மின்னிதழை நடத்தியது என்று முனைவர் கு.கல்யாணசுந்தரம் குறிப்பிடுகிறார். எனவே தமிழில் தோன்றிய முதல் இணையதளம் எவையென்று இதுவரையும் தெரியவில்லை. அவரவர்களுக்குத் தெரிந்ததை முதலில் தோன்றியது என்று கூறி வருகின்றனர். நான் தேடிய மற்றும் தொகுத்த கருத்துக்கள் அடிப்படையில் முனைவர் கு.கல்யாணசுந்தரம் அவர்கள் குறிப்பிட்ட “ஆ” மின்னிதழே முதலில் தோன்றியதாகும்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தமிழ் இணையதளங்களை உருவாக்கி அதில் தமிழ் இலக்கியங்கள் , வரலாறு, கலை, பண்பாடுகளை எழுதத் தொடங்கினர்.
முதல் தமிழ் வலைப்பூ(பதிவுகள்)
        தமிழ் மொழியிலான முதல் வலைப்பூவை நவன் என்கிற வலைப்பதிவர் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி 26-ல் உருவாக்கினார் என்று அவருடைய வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் தேதியன்றே கார்த்திக் ராமாஸ் என்பவர் முதல் வலைப்பூவை உருவாக்கினார் என்று சிந்தா நதி எனும் இணைய இதழில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த இரு வலைப்பூக்களில் நவன் வலைப்பூ பிளாக்கர்ஸ்.காம் தளத்திலும்,(www.navan.name/blog/?p=18) கார்த்திக் ராமாஸ் வலைப்பூ பிளாக்டிரைவ் எனும் தளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
     கார்த்திகேயன் ராமசாமி (கார்த்திக் ராமாஸ்) எனும் வலைப்பதிவர் தமிழில் செய்த முதல் வலைப்பூ என்று பேராசிரியர் மு. இளங்கோவன் எட்டாவது தமிழ் இணைய மாநாட்டு மலரில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் கார்த்திகேயன் ராமசாமி வலைப்பூதான் முதல் தமிழ் வலைப்பூ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (karthikramas.blogdrive.com/archive/21.html)
தமிழ் வலைப்பூக்கள் வளர்ச்சி
      தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம் மற்றும் பயன்கள் குறித்த கட்டுரை ஒன்று திசைகள் எனும் இணைய இதழில் வெளியானதைத் தொடர்ந்து தமிழ் வலைப்பூக்கள் குறித்துப் பலருக்கும் தெரியத் தொடங்கியது. தமிழ் வலைப்பூக்களின் தொடக்கக் காலத்தில் தமிழ் எழுத்துருப் பிரச்சனைகள் இருந்ததால் இதன் வளர்ச்சி சற்றுக் குறைவாகவே இருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை சுமார் 1000 வலைப்பூக்கள் வரையே தோன்றியிருந்தன. அதற்கடுத்து 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இந்த எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்தது என்று பேராசிரியர் .துரையரசன் எழுதிய இணையமும் இனிய தமிழும்என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கடுத்து தமிழ் வலைப்பூக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து 12000-ஐத் தாண்டிவிட்டது. இது இன்னும் பன்மடங்காக உயரக் கூடும். 
தமிழ் இணையக் கல்விக்கழகம்.
ஓலைச்சுவடிகளில் இருந்த தமிழ் இலக்கியம் இன்று மின் ஊடகங்களில் வெளி வருகின்றன. இதற்காக உழைத்த உத்தமர்கள் பலர். அவர்களில் முனைவர் மு.பொன்னவைக்கோவும் ஒருவர் ஆவார். இவர் கணினி மற்றும் தமிழ் இணையதளங்களில், தொழில்நுட்பங்களில் ஆழமாக தன்னை நிலை நிறுத்திக்கொண்டவர். இவரின் அறிய முயற்சியால் 17-02-2001-ல் உருவானதுதான் தமிழ் இணையப் பல்கலைக்கழகம். (தற்பொழுது தமிழ் இணையக் கல்விக்கழகம் www.tamilvu.org).இவ் வலைப்பக்கத்தில் சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை இடம் பெற்றிருக்கிறது. மேலும் பல்வேறு தமிழ் அகராதிகள், உலகு தழுவி வாழும் தமிழ் மக்களின் குழந்தைகள் தமிழ்க் கல்வியைக் கற்றுக்கொடுக்கும் முறையில் மின்னம்பலத்தில் வெளியிட்டு வருகிறது. மேலும் தமிழ் பாரம்பரிய கலை, பண்பாடுகள் மற்றும் விளையாட்டுக்களை ஒலி, ஒளி அமைப்பில் வெளியிட்டு வருகிறது. இத்தகு சிறப்பு வாய்ந்த தமிழ் இணையக் கல்விக்கழகத்தை நிறுவுவதற்கு முழுநேரமாக உழைத்த முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களை தமிழ் இலக்கியம் இருக்கும் வரை பேசும்.       
தமிழ் விக்கிப்பீடியா (www.ta.wikipedia.org)     
   இணையத்தில் தரவு தளங்களில் குறிப்பிட்டுச் சொல்வோமானால் அது விக்கப்பீடியாவாகத்தான் இருக்க முடியும்.  எந்த தலைப்புகளாக இருந்தாலும் சரி குறித்த நேரத்தில் தகவல்களை நமக்குக் கொடுக்கும் சிறந்த தளம் விக்கிப்பீடியாவாகும். இந்த தளம் இன்றைய ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் செய்தியாளர்களுக்கும் கிடைத்த செய்திப் புதையல் என்றே கூறலாம். 267 மொழிகளுக்கு மேல் இடம் பெற்றிருக்கும் விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியிலான தமிழ் விக்கிப்பீடியாவும் ஒன்று
      தமிழ் மொழியில் விக்கிப்பீடியா 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியில்மனித மேம்பாடுஎன்ற தலைப்புடன் தொடங்கியுள்ளனர். இதனைத் தொடங்கியவர் தனது பெயரைத் தெரிவிக்கவில்லை என்கிற கருத்து உள்ளது. ஆனால் இது உண்மையல்ல. இது ஒரு விளம்பரமாக இருந்ததால் அதை பிற்காலத்தில் ஒரு பயனர் நீக்கி விட்டார். இலங்கையில் பிறந்து வளைகுடா நாடு ஒன்றில் கட்டிடக்கலைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் .மயூரநாதன் என்பவர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான முகப்புப் பக்கத்தை (முதற்பக்கம்) தமிழில் உருவாக்கியுள்ளார். இவையன்றி விக்கிப்பீடியாவும் அதன் பிற இணையத்திட்டங்களுக்கும் ஆதாரமாக உள்ள மீடியா விக்கி என்னும் மென்பொருளின் அனைத்துப் பக்கங்களையும் அதற்குரிய இடைமுகத்துக்குத் தேவையான தகவல்களையும் தமிழில் மொழி பெயர்த்து தந்துள்ளார். என்று தமிழ் விக்கிப்பீடியா நூலின் ஆசிரியர் தேனி.எம்.சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்.
      இதனால் தமிழில் விக்கிப்பீடியாவின் பக்கம் உலகத் தமிழர்களின் பார்வைக்குச் சென்றது. இன்று பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் முயற்சியால் 14000 க்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு 63,437 -க்கும் அதிகமான கட்டுரைகளைத் தமிழ் விக்கிப்பீடியா அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களில்  62            வது இடத்தில் உள்ளது.
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம் - http://www.infitt.com/)
         தமிழர்கள் கூடிவாழ்ந்தால் கோடி நன்மைகள் பெறுவார்கள் என்ற உயர்ந்த எண்ணத்தில் விளைந்ததுதான் உத்தமம் அமைப்பாகும். உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த தமிழ் இணையக் கனவை நனவாக்கியதுதான் இந்த உத்தமம். இது தொடங்கிய நாள் முதலாக இன்று வரை இணையத்தமிழுக்காக எண்ணிலடங்கா வளர்ச்சிப் பணிகளை செய்து வருகின்றன. இந்த உத்தமம் அமைப்பான  இதுவரை 14-தமிழ் இணைய மாநாடுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன. அவை முறையே ஆண்டுவாரியாக
1. 1997 –
சிங்கப்பூர், 2. 1999 - சென்னை, தமிழ்நாடு, 3. 2000 – சிங்கப்பூர், 4. 2001 - கோலாலம்பூர் (மலேசியா), 5. 2002 - சான் பிரான்சிஸ்கோ, கலியோர்னியா, 
6. 2003 -
சென்னை, தமிழ்நாடு, 7. 2004 - சிங்கப்பூர், 8. 2009 - கொலோன் பல்கலைக்கழகம் ஜெர்மனி, 9. 2010 - கோயம்புத்தூர், தமிழ்நாடு, 10. 2011 –  சான் பிரான்ஸ் அமெரிக்கா
11. 2012 சிதம்பரம், 12. 2013 மலேசியா, 13. 2014  புதுச்சேரி, 14. 2015 சிங்கப்பூர் ஆகிய நாடுகள் ஆகும். இம்மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் இணையதளத்தில் மாநாடுகள்  ஆண்டுவாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுயிருகிறது. இம்மாநாடுகளில்  வழியாக தமிழ்க்கணிமைக்கான வளர்ச்சித்திட்டங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
முடிவுரை
பாதுகாபிற்காகத் தொடங்கபட்ட  இணையம் இன்று பல நாட்டுப் பண்பாடுகளைக் காக்கும் பாதுகாப்புப் பெட்டகமாக இருக்கிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற சொல்லுக்கு இன்று இணையம் மூலம் நாம் பொருள் உணர்ந்து கொண்டோம். தமிழில் இணையம்  வளர்ந்த விதம் அதனால் நாம் தமிழ்மொழியின் வளர்ச்சி மற்றும் தமிழ் இணையதளங்கள், தமிழ் வலைப்பூக்கள், தமிழ் இணையக் கல்விக்கழகம்,  தமிழ் விக்கிப்பீடியா, உத்தமம் என தமிழ் இணையப் பரப்பு விரிந்தாலும் நாம் இந்த இணையத்தளப் பரப்பில் கடக்க வேண்டியப் பயணம் வெகுதூரம் உள்ளன. அதில் கணிப்பொறியே நாம் பேசினால்  எழுதவேண்டும், ரோபோக்கள் நாம் நினைப்பதை நிறைவேற்ற வேண்டும். அனைத்து நம் தாய்மொழியில் இருக்கவேண்டும். அதற்கு நாம் எடுத்துக்கொள்ளும் காலம் அதிகம் இல்லை. மிக விரைவில்

இக்கட்டுரை எமது முயற்சியால் பல ஆதாரத் தகவல்களுடன் எழுதப்பட்டது. இந்த ஆய்வுக்கட்டுரை வலைப்பதிவர் திருவிழா – 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள் 2015” க்காக எழுதப்பட்டது என்று உறுதியளிக்கின்றேன். மேலும் இந்தப் படைப்பு இதற்குமுன்பு எதிலும் வெளியிடபடவில்லை என்று உறுதியளிக்கின்றேன்.
இப்போட்டிக்கான முடிவு வெளிவரும் வரை வேறு எதிலும் வெளியிடமாட்டேன் என்று உறுதியளிக்கின்றேன்.