மதுரைக்கு அருகில் உள்ள கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் உத்தமம் சார்பாக ஒரு நாள் நுட்பவியல் பயிலரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரி முதல்வர் அவர்கள் தொடங்கி வைக்க பேராசிரியர் சி.சிதம்பரம் அவர்கள் முதல் அமர்வில் அலைபேசியில் குறுஞ்செயழில்கள் என்ற பொருண்மையில் மாணவர்களுக்குச் சிறப்புரை வழங்கினார். அடுத்த அமர்வில் நான்(Dr. DURAI.MANIKANSAN) தமிழ் இணைய அறிமுகம் செய்த பின்னர் மாணவிகளுக்குத் தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து தமிழில் அடிக்க கற்றுக்கொடுத்தேன்.
அடுத்த அமர்வில் அக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியை திருமதி ஜாஸ்லின் பிரில்ஸ்டா கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பங்கு பற்றி குறிப்பிட்டார். அடுத்து நான் தமிழ் வலைப்பதிவை எவ்வாறு உருவாக்குவது என்பதையும் அதனால் தமிழ் சமுதாயத்திற்கு என்ன பயன் என்பதைப் பற்றியும் எடுத்து விளக்கினேன். இப்பயிற்சியில் ஐந்து மாணவர்கள் தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்வதைக் கற்றுக்கொண்டனர். ஐந்து மாணவிகள் தமிழில் வலைப்பதிவை உருவாக்கக் கற்றுக்கொண்டனர். ஒருசிலர் தமிழ் விக்கிப்பீடியா பற்றி பேசி அதில் எழுத கற்றுக்கொண்டனர்.
இப்பயிலரங்கம் பல வழிகளில் பயிற்சியில் ஈடுபட்ட மாணவ மாணவிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக பின் குறிப்புரையில் குறிப்பிட்டனர்.
வாழ்த்துக்கள் நண்பரே
நுட்பவியல் பயிலரங்கம்
இனிதே இடம் பெற
எனது வாழ்த்துகள்!
http://www.ypvnpubs.com/
மிக்க நன்றிங்க ஐயா.
மிக்க நன்றிங்க ஐயா.
மிக்க நன்றிங்க ஐயா