/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, January 24, 2012

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு

|0 comments

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று ஐந்தாவது நாளில் கலை அமர்வில் மேணான் பேராசிரிவயர் கி.அரங்கன் அவர்கள் தொடரியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.



தொடரியியல் என்றால் என்ன என்பதையும் அது தொடர்பான விளக்கத்தையும் கூறினார். தொடரியியலில் அமைப்பு மொழியில் அமையும் ஆய்வும் நோம்சாம்ஸ்கியின் தொடரியல் கோட்பாட்டைக்கொண்டு தெளிவாக விளக்கினார்.
அவ்வாறு அமைப்பு மொழியியல் செய்த ஆய்வுகளையும் மாற்றிலக்கணக் கோட்பாடுகள் என்பது மொழியின் இயல்பை புரிந்துகொள்வது என்று விளக்கினார்.
மாற்றிலக்கண முன்மாதிரியை முதன் முதலில் தொடங்கியவர் நோன்சாம்ஸ்கி என்றார்.மேலும் இலக்கணம் என்றால் என்ன? மாற்றுவிதிகளை எவ்வாறு உருவாக்கி அதனை நடைமுறைப்படுத்துவது போன்ற செய்திகளை விளக்கினார்.


அடுத்த அமர்வில் திராவிடப் பல்கலைக்கழகக் கணினிமொழித் துறைப்பேராசிரியர் முனைவர் செல்வராஜ் அருள்மொழி அவர்கள் சொல்வளங்கள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



சொல்வளங்களின் பயன்பாடு இயற்கைமொழியாய்விற்கு மிக முக்கியமானது, ஒரு மொழியின் சொற்களை எடுத்து பிற இந்திய மொழிகளுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது என்ற முறையில் சொல்வளம் பயன்படுகிறது. தற்பொழுது இந்திய மொழிகளில் 11 மொழிகளுக்கு மட்டும் சொல்வளம் செய்ய மத்திய அரசு முன்வந்திருப்பதாகவும், இது 2012 பிப்ரவரி முதல் மத்திய அரசு இணையத்தில் வெளியிட உள்ளனர் என்றும் கூறினார். பல இணையதளங்களுக்குச் சென்று சொல்வளம் குறித்தச் செய்திகளைப் பயிலரங்கில் கலந்துகொண்டவர்களுக்கு நேரடிக்காட்சிமூலம் எடுத்துக்காட்டினார்.


மதிய அமர்வில் பாரதியார் பல்கலைக்கழக மேணான் மொழியியல் துறைத் தலைவர் சி.சண்முகம் அவர்கள் பொருணமையியல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.




பொருண்மையியல் என்றால் என்ன்? பொருளின் திறன் என்ன என்று விணா எழுப்பி விளக்கினார்.
பொருண்மையியலின் ஆராய்ச்சி மொழியைச்சார்ந்த ஆராய்ச்சி, மனதை சார்ந்த மொழி ஆராய்ச்சி, பொறி அடிப்படையிலான மொழி ஆராய்ச்சி என்ற முறையில் அமைந்துள்ளது.
உடலியியல்,உளவியல், சமூதாயவியல், உலகவியல், பண்பாட்டுக்கூறுகள் அடிப்படையில் பொருண்மையிலை ஆராயும் உத்தியையும் கையாண்டால் நாம் கணினிமொழிக்குத் தேவையான பொருண்மைக்கூறுகளை நாம் எழிதில் உருவாக்கிவிடலாம் என்றார்.

இறுதியாக விவேகானந்த கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர் மு.முத்தையா அவர்கள் நன்றி கூறினார்.

பயிலரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள்.


நிகழ்ச்சியில் பேராசிரியர் மு.முத்தையா மற்றும் பேராசிரியர்கள் கி.அரங்கன்,சி.சண்முகம். தென்கிழக்குப் பல்கலைக்கழகக் கணினிதத்துறை விரிவுரையாளர் சு.லெ.அப்துல்ஹலீம்.


சிறப்பு சொற்பொழிவாளர்களுடன் மலேயா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள்







Monday, January 23, 2012

23-01-2012 அன்று நடந்த பயிலரங்கின் அமர்வுகள்.

|2 comments
SRM பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத்தலைவர், முனைவர் வ. தனலெட்சுமி அவர்கள் தொடரியல் பகுப்பாய்வி என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.



இயற்கை மொழியின் அடிப்படைக்காரணம் மற்றும், விரிதரவு சார்பின் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
சொற்றொடர் பகுப்பி, உருபனியல் பகுப்பாய்வின் நோக்கம் அதனால் கணினிமொழிக்கு எவ்வாறு பயன்படும் என்ற நோக்கில் தொகுத்து வழங்கினார்.

அடுத்த அமர்வில் அண்ணா பல்கலைக்கழக மேனாள் கணினித்துறைப் பேராசிரியர் வெ.கிருட்ணமூர்த்தி அவர்கள் ஓளிவழி எழுத்துரு அறிதல் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.



இயற்கை மொழியின் அடிப்படைக்காரணம் மற்றும், விரிதரவு சார்பின் அவசியத்தையும் குறிப்பிட்டார்.
சொற்றொடர் பகுப்பி, உருபனியல் பகுப்பாய்வின் நோக்கம் அதனால் கணினிமொழிக்கு எவ்வாறு பயன்படும் என்ற நோக்கில் தொகுத்து வழங்கினார்.எளிமையான விசைப்பலகை உருவாக்கம் மற்றும் எழுத்துணரியின் பயன்பாடுகள், அச்சுப்பிரதியைக் கணினித்திரையில் தோற்றம் செய்தல், எழுத்துப்பிழையைச் சரிபார்த்தல் என தமிழின் முக்கிய செயல்பாடுகளையும் மென்பொருளையும் விளக்கிக்காட்டினார்.


மதியம் அமர்வில் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் மொழித் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் உரையை முன்வைத்தார்.



கணினிமொழி உருவாக்க வேண்டுமெனில் தமிழ்மொழியில் புதிய ஆய்வுகளை நாம் செய்ய வேண்டும் என கூறினார்.
பொருளடைவை உருவாக்க வேண்டும், விகுதிகளைப் பிரித்து அதற்குத் தனியாகப் தொகுப்புச் செய்யவேண்டும்.
புணர்ச்சி இலக்கணத்தையும் பிரித்து ஆய்வு செய்யவேண்டும் என்று கூறினார்.

அடுத்த அமர்வில் முனைவர் இரா.சண்முகம் உருபனியல் பகுப்பாய்வி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
இதில் ஒரு சொல்லைப் பிரித்து அதன் இலக்கணக் கூறுகளைப் பிரிக்கும் வசதியைக் கணினி எவ்வாறு செய்கிறது என்று விளக்கினார்.


பயிலரங்கில் கலந்து கொண்ட மயிலாடுதுறை அ.வ.கல்லூரித் தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன்

மதுரை விவேகானந்த கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் மு.முத்தையா அவர்கள் பயிற்ச்சியில் கலந்துகொண்ட காட்சி


Sunday, January 22, 2012

22-01-2012 அன்று நடந்த பயிலரங்கின் அமர்வுகள்.

|1 comments
குமரகுரு பொறியியல் கல்லூரி கணினித்துறைத் தலைவர் முனைவர் ஆ. முத்துக்குமார் அவர்கள் நிரலாக்க மொழிகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



நிரலாக்கம் என்றால் என்ன?
நிரலாக்கத்தின் தொடக்க நிலையைச் சுட்டினார்.
உலக அளவில் ஆசிரியர்கள் ஒன்றுகூடி ஒரு இதழ் தொடங்கவேண்டும் என்று கூறினார்.

புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் க.இரவிசங்கர் அவர்கள் பேச்சொலியியல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


பேச்சொலிகள் என்றால் என்ன? உயிரொலிகள், மெய்யொலிகள், ஓருயிர்கள், ஈருயிர்கள் தோன்றும் விதம் பற்றி விளக்கினார்.

பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லூரி, (புதுச்சேரி)தமிழ்த்துறைப்பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் இணையத்தமிழ் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.


இணையம் என்றால் என்ன்? அதன் தோற்றம், வளர்ச்சி, தமிழ் இணையம் தோற்றம் அதன் வளர்ச்சிக்குப் பங்காற்றிய வெளிநாட்டு அறிஞ்சர்களின் பங்களிப்பு என விளக்கம் தந்தார். பிறகு வலைப்பூ என்றால் என்ன? அதன் பயன்பாடுகள் நாம் எவ்வாறு வலைப்பூவை உருவாக்குவது என்று கூறினார்.

இறுதியாக விக்கிப்பீடியாவில் பல கட்டுரைகளை எழுதிய தகவலுழகன்(ரெ.லோகநாதன்)விக்கிப்பீடியாவைப் பற்றி சிறு உரை நிகழ்த்தினார்.


பயிற்சியில் கலந்துகொண்டவர்கள்.


ஒருங்கிணைப்பாளர் இல.சுந்தரம் மற்றும் பேராசிரியர்கள்.






Saturday, January 21, 2012

SRM பல்கலைக்கழகத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு

|2 comments

Srm பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இனிதே 20-01-2012 அன்று முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களாளும்,நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியத்தின் தலைவர் முனைவர் எல். இராமமூர்த்தி அவர்களாலும் srm பல்கலைக்கழக வேந்தர் திரு.பச்சமுத்து தலைமையில் தொடங்கியது.


21-01-2012 சனிக்கிழமைக் காலையில் குறியாக்கம் என்ற தலைப்பில் மேனாள் கணினித்தமிழ்ச் சங்கத் தலைவர் திரு.ப.செல்லப்பன் அவர்கள் உரை நிகழ்த்தினார்.


தமிழ்க் குறியீட்டுமுறைகளின் தோற்றம் அதன் வளர்ச்சி, இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்க் குறியீடுகள் எவ்வாறு உள்ளன. யூனிகோடு எழுத்துருவின் தோற்றம் அதில் தமிழ்மொழி இடம்பிடித்தச் சூழல் என அழகாகவும் தெளிவாகவும் விளக்கிக் கூறினார்.

அடுத்த அமர்வில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழியியல் பேராசிரியர் முனைவர் மா.கணேசன் அவர்கள் மொழித்தரவுத் தொகுப்பு என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.


மொழித்தரவுகள் என்றால் என்ன? மொழித்தரவுகள் முதன்முதலில் 1987 ல் தொடங்கப்பட்டது என்று கூறினார்.
ஆங்கிலத்தில் 4000 மில்லியன் கோடி மொழித்தரவுத் தொக்குப்புகள் செய்துள்ளனர்.தமிழ்மொழியிலும் 500 மில்லியன் தமிழ் சொற்கள் தொகுத்து வெளியிடவேண்டும் என்று கூறினார்.இறுதியாக மொழித்தரவுகளின் பயன்பாடுகளைப் பற்றியும் எடுத்து விளக்கினார்.

மதியம் தொடங்கிய அமர்வில் முனைவர் ந.நடராசபிள்ளை அவர்கள் சொல்வகை விளக்கம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.



தொல்காப்பியர் குறிப்பிடும் சொல்வகையைக் கொண்டு மொழியியல் கோட்பாடுகளோடு விளக்கினார். மேலும் கணிப்பொறிக்கு எவ்வாறு சொற்களை உள்ளீடு செய்வது அதில் உள்ள சிக்கல்கள் என்ன என்பதும் அவற்றைப் போக்க என்ன வழிமுறைகளைக் கையாள்வது என்ற விளக்கத்தையும் தெளிவுப்படுத்தினார்.

இறுதியாக முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் இலக்கணம், மொழியியல் இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகள் பற்றியும் மொழியியலின் தேவையையும் விளக்கினார்.

கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் முனைவர்ப்பட்ட ஆய்வாளர்களில் ஒரு பகுதி






Friday, January 13, 2012

பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிர் கல்லூரியில் தமிழ் இணையம்- பயிலரங்கம்

|1 comments


ஒரத்தநாட்டில் இயங்கிவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகக் மகளிர் கல்லூரியில் 11-01-2012 புதன் அன்று தமிழ்த்துறையின் சார்பாகத் தமிழ இணையம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன்.விழாவின் தொடக்கமாகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் சரளா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.





கல்லூரி முதல்வர் திருமதி மணிமேகலை அவர்கள் தொடக்க உரை நிகழ்த்தினார்.



கல்லூரி முதல்வர் முனைவர் மணிமேகலை மற்றும் தமிழ்த்துறைத் தலைவி முனைவர் சரளா அவர்கள்.

அடுத்து நான் தமிழில் இணையத்தின் தோற்றம், அது கடந்து வந்த பாதை, வளர்ச்சி நிலை மற்றும் தமிழ் இணையாதளங்கள், அவற்றில் நாம் எவ்வாறு எழுதமுடியும் என்பதையும், அதற்கு எந்தெந்த தமிழ் எழுத்துருவை நாம் கணினியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் விரிவாக எடுத்து விளக்கினேன்.

பிறகு தமிழ் வலைப்பூ என்றால் என்ன? அதனை எவ்வாறு உருவாக்கமுடியும் என்பதையும் விளக்கினேன்.
இறுதியாக முதுகலை மாணவிகளுக்குத் தேவையான தமிழ் நூல்கள் தமிழ் இணையக்கல்விக் கழகம் இணையப்பக்கத்தை காட்டி அதில் உள்ள தமிழ் நூல்களை எடுத்துக்காட்டினேன்.



பயிர்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகள்,பேராசிரியைகள்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் வளர்ச்சிப் பணியையும் அவர்கள் சேகரித்துள்ள ஓலைச்சுவடிகளையும் எடுத்துக் காட்டினேன்.மின்குழுமத்தின் இன்றையத் தேவைகளையும் குறிப்பிட்டுக் காட்டினேன்.
தமிழ்விக்கிப்பீடியாவின் இன்றையத் தேவையினையும் அதில் நாம் எவ்வாறு எழுதுமுடியும் என்ற வழிமுறையையும் விளக்கினேன்.



இறுதியாகத் தமிழ் துறைப் பேராசிரியை முனைவர் சுமதி அவர்கள் நன்றி கூறினார்.






தமிழ் இணையம் சிறப்பு சொற்பொழிவில் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மற்றும் பேராசிரியைகள் கலந்துகொண்டனர். நண்பரும், பேராசிரியருமான திரு. துரைமுருகன்,மற்றும் கண்ணன் எம்மை வழி அனுப்பி வைத்தனர்.

Thursday, January 12, 2012

உலகத் தமிழர்களுக்குப் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

|0 comments
உலகம் உயரவேண்டும்
உண்மை விளங்க வேண்டும்
தமிழர்களின் வாழ்வு ஒளிர்வுபடவேண்டும்
தை மாதம் தமிழ் புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்ப்போம்
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் என் இனிய போங்கல் நல்வாழ்த்துக்கள்.














அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.




Friday, January 6, 2012

பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில்இணையமும் தமிழும் தலைப்பில் சொற்பொழிவு

|0 comments
இணையமும் தமிழும் என்ற தலைப்பில் ஒரத்தநாட்டில் இயங்கிவரும்
பாரதிதாசன் பல்கலைக்கழகக் கல்லூரியில் 11-01-2012 புதன் அன்று காலை 10-30 மணிக்குத் தமிழ்த்துறையில் சிறப்புரையாற்ற உள்ளேன்.

Wednesday, December 21, 2011

SRM பல்கலைக்கழத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கம்

|0 comments
அன்புடையீர் வணக்கம்

SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து தமிழ்க் கணினிமொழியியல் (Tamil Computational Linguistics) துறையில் ஆர்வமுடைய கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் பயிற்சியளிக்க, சிறப்புப் பயிலரங்கத்தை ஏற்பாடு செய்கிறது.


பயிலரங்கில் தமிழியல், பிற மொழிகள், மொழியியல், கணினியியல் துறைகளைச் சேர்ந்தவர்களே பங்கேற்கமுடியும்.

மொழித் தொழில்நுட்பம் (Language Technology), பேச்சுத் தொழில்நுட்பம் (Speech Technology) ஆகிய துறைகளைச் சார்ந்த பேராசிரியர்களும் பிற வல்லுநர்களும் பயிற்சியளிப்பார்கள்.

பயிலரங்கம் 20.01.2012 முதல் 30.01.2012 வரை 11 நாட்கள் சென்னை SRM பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
பதிவுக் கட்டணங்கள் ஏதும் இல்லை,

பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 06.01.2012-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு
பேராசிரியர் இல.சுந்தரம்
அலைபேசி எண் 9842374750


Wednesday, December 14, 2011

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வலைப்பூ உருவாக்கம்

|2 comments
14-12-2011 மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. அதில் வலைப்பூ என்றால் என்ன? அதன் பயன்பாடுகள், இணையத்தில் எவ்வாறு தமிழ் வலைப்பூக்களை உருவாக்குவது என்ற முறையையும் உருவாக்கிக் காட்டியுள்ளேன்.

கூட்டத்தில் செண்பகத்தமிழ் அரங்கு பொறுப்பாளர் திரு இராச.இளங்கோவன்,


சங்க துணை அமைச்சர் பெ.உதயகுமார்,புலவர் சி.சிவக்கொழுந்து,கீ அரங்கராசன் மற்றும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள்.



கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.


கூட்டத்தில் கலந்துகொண்ட மாரிமுத்து என்ற மாணவனுக்குப் பாரதி என்ற பெயரில் வலைப்பூ ஒன்று உருவாக்கிக்காட்டப்பட்டது. அதனை அந்த மாணவனே உருவாக்கும் படம்.





Friday, December 2, 2011

இணையத்தில் வலைப்பூக்கள் உருவாக்குதல்

|2 comments
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் வருகிற 14-12-2011 புதன் கிழமை மாலை 6-30 மணிக்கு வலைப்பூக்கள் உருவாக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளேன். பங்குபெருபவர்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


Friday, November 25, 2011

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

|0 comments
தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.போட்டியில் அனைவரும் கலந்து்கொள்ள வேண்டுகின்றேன்.

போட்டி நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர்

http://ta.wikipedia.org/wiki/contest என்ற இணையமுகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

நன்றி திண்ணை.காம்

Monday, November 21, 2011

சென்னையில் இணையத்தமிழ் கருத்தரங்கம்

|2 comments

முத்தரையர் எழுச்சிச் சங்கத்தின் இருபதாவது மாதாந்திர கூட்டம் சென்னையில் 20-11-2011 அன்று ஞாயிற்றுக்கிழமை கோடம்பாக்கத்தில் NTR சாலையில் மாலை 6-00 மணிக்குத் தொடங்கியது. கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் சங்கத்தின் தலைவர் திரு.மாறன் அவர்கள் ஆவார்.


சென்னை முத்தரையர் எழுச்சிச் சங்கத்தின் தலைவர் திரு.மாறன், செயலர் திரு. ராமன் அவர்களுடன் நான்





கூட்டத்தின் தொடக்கமாக இணையத்தில் தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன். இச் சிறப்புரையில் கலந்து கொண்டவர்கள் அரசு அலுவளர்கள், தொழிலாளர்கள், தொழில் நிருவனத் தலைவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் என நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர்.



இச் சிறப்புரையில் இணையத்தின் தோற்றம் வளர்ச்சி மற்றும் தமிழ் வலைப்பூக்களின் பயன்பாடுகள் ,எதிர்வரும் காலங்களில் இணையத்தின் உதவியுடன் தமிழை வளர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும் வழிமுறைகள் பற்றியச் செய்திகளையும் எடுத்து விளக்கினேன்.
மேலும் முத்துக்கமலம், பதிவுகள்,திண்ணை,வார்ப்பு இணைய இதழ்களைக் காட்டி இணைய இதழ்களுக்கு எவ்வாறு எழுதுவது என்று சுட்டிக்காட்டினேன்.

தமிழ் விக்கிப்பீடியாவின் இன்றைய அவசியத்தையும் அதனால் தமிழ் மொழியின் வளர்ச்சிக் குறித்தும் பேசப்பட்டது.
வலைப்பூக்களை எவ்வாறு உருவாக்குவது என்ற படிநிலைகளை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கினேன்.


மின்குழுமங்களின் பங்களிப்பையும் அதில் நாம் தொடுக்கும் வினாவிற்கு தகுந்த விடையை கொடுக்கும் உலகத்தமிழர்களையும்(மின் குழுமம், அன்புடன் குழுமம்,அழகி குழுமம், கீற்றுக்குழுமம், தமிழ் விக்சனரி குழுமம்) காணும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தேன்.
நிறைவாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இணையம் தொடர்பான வினாக்களைக் கேட்டார்கள்.


1.இணையத்தில் எவ்வாறு தமிழில் எழுதுவது?
2. இணையத்தில் எந்த தலைப்பைத் தேடினாலும் பதில் கிடைக்குமா?
3. நம் கருத்தை எவ்வாறு இணையத்தில் பதிவேற்ற இயலும்?
4.மின்னஞ்சலை உருவாக்குவது எப்படி?
5.வலைப்பூ என்றால் என்ன? அதனை உருவாக்கும் முறைகளைப் பற்றிக் கூறுங்கள்.

இதுபோன்ற பல வினாக்களுக்கு செய்முறையில் விளக்கிக் காட்டினேன்.




இறுதியாக சங்கத்தின் துணைத்தலைவர் திரு.பார்வேந்தன் அவர்கள் நன்றி கூறினார்.


இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இடம் கொடுத்த சங்கத்தின் செயலாளர் திரு ராமன், பொருளாலர் திரு.கன்னியப்பன், துணைச்செயலாளர் திரு.செந்தில்குமார் மற்றும் மனித தெய்வங்களும் மற்றும் சில சேகரிப்புகளும் வலைப்பூவின் ஆசிரியருமான சென்னையைச் சேர்ந்த திரு.சேதுபாலா அவர்களும் கலந்துகொண்டார்.



கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.


















Wednesday, November 16, 2011

முத்தரையர் எழுச்சி சங்க கூட்டத்தில் இணையத்தில் தமிழ் வளர்ச்சி

|1 comments
முத்தரையர் எழுச்சிச் சங்கம் அமைப்பின் கூட்டத்தில் இணையத்தி தமிழ் வளர்ச்சி சிறப்புரை.





முத்தரையர் எழுச்சிச் சங்கம் அமைப்பின் இருபதாவது மாதாந்திர கூட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை(20-11-2011) மாலை சரியாக 4-30 மணியளவில் சென்னையில், கோடம்பாக்கத்தில் இணையத்தில் தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
அவரைத்தொடர்ந்து தமிழக அரசியல் வாரப்பத்திரிக்கையின் துணை ஆசிரியர் திரு.பி. அரங்கநாதன் அவர்கள் உள்ளாட்சி தேர்தல் ஓர் விமர்சனம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.
கூட்டத்தில் சென்னையைச்சேர்ந்த முத்தரையர்கள் மற்றும் இணையத்தமிழ் ஆர்வளர்கள் பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இடம்: 120/131, NTR.தெரு,ரங்கராஜபுரம்,கோடம்பாக்கம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

திரு.மாறன்.
அலைபேசி: 9840882829

Thursday, October 27, 2011

தமிழ் மென்பொருள்களும் எழுத்துருக்களும்

|0 comments

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்ற பாரதி அச்சத்திற்கு எச்சமிட்டாற்போல தொழிற்நுட்பத்திலும் தேக்கநிலைதான் ஒருசில ஆண்டுகள் இருந்தன.ஆனால் இன்று இணைய வெளியில் தமிழ் வளங்கள் கணிச்சமாக உயர்ந்துள்ளது.”காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு” என்பதுபோல தமிழுக்கும் பல மென்பொருள்கள் பொன்குஞ்சுகளாக இருந்து வருகின்றன. புதிதாக கணினி உலகிற்கு வருபவர்கள் தமிழில் உள்ள மென்பொருட்கள் பற்றி அறிந்துகொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரிக்க இந்த பதிவு பயன்படும்.
தமிழில் நீங்கள் கணினி பயன்படுத்தி ஏதேனும் எழுத விரும்பினால் முதலில் உங்களுக்கு தேவைப்படுவது ஃபான்ட்ஸ் (Fonts) என ஆங்கிலத்தில் கூறப்படும் எழுத்துரு. நவீன கணினி இயங்குதளங்களில் (ஆப்பிரேட்டிங் சிஸ்டம்களில்) தமிழில் தட்டச்சு செய்ய இது ஒன்றே போதுமானது.

தமிழ் மென்பொருள் என்றால் என்ன?

பல கணினி இயங்குதளங்கள் நேரடியாக தமிழில் உள்ளீடு செய்வதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருப்பதில்லை. ஆங்கிலத்திற்கும் தமிழ் போன்ற மொழிகளுக்கும் கணினியில் கையாள்வதில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. எளிமையாக கூறுவதென்றால், நாம் பயன்படுத்தும் விசைப்பலகைகள் ஆங்கில மொழியில் உள்ளீடு செய்வதற்கு ஏற்றவாறு, ஆங்கில எழுத்துக்களின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள்தான் ஆனால் தமிழில் 247 மற்றும் சில வடமொழி எழுத்துக்களை நாம் உள்ளீடு செய்யும் வகையில் விசைப்பலகைகளின் அமைப்பு இல்லை. இத்தகைய பிரச்சினைகளை கையாள சில உத்திகள் மென்பொருட்களின் மூலம் செய்யப்படுகின்றன. இத்தகைய மென்பொருட்களின் உதவி இல்லாமல் நம்மால் தமிழில் உள்ளீடு செய்ய முடியாது.
மேலும் அங்கிலத்திற்கு ஒரே உள்ளீட்டு முறைதான் உள்ளது (Typing method). ஆனால் தமிழுக்கு பல்வேறு உள்ளீட்டு முறைகள் (typewriter, typewriter old, phonetic, transliteration, tamilnet99, போன்றவை) உள்ளன. ஒரு முறையில் பழகியவர்களால் வேறு முறைகளில் உள்ளீடு செய்ய முடியாது. ஆகவே இவற்றிற்கு ஏற்ப எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கு மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
இவை தவிர ஆங்கில இலக்கணமும் தமிழ் இலக்கணமும் வேறானவை என்பதால், பிழைதிருத்தி, பக்க வடிவமைப்பு போன்ற தமிழ்சார்ந்த கணினி வேலைகளுக்கென சிறப்பான மென்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

முடிவாக கூறுமிடத்து எழுத்துரு என்பதும் ஒரு வகையில் ஒரு சிறு மென்பொருள்தான். அதனை நேரடியாக பயன்படுத்துவதில் குறிப்பாக வின்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்துவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை திறமையுடன் கையாள்வதற்காகவும், ஆங்கில மொழியில் உள்ளீடு செய்யும் பொழுது அது தரும் மொழிசார்ந்த துணைக்கருவிகளைப் போல் (இலக்கணத் திருத்தி, சொல்திருத்தி, போன்றவை) தமிழுக்கும் உருவாக்கப்பட்டவையே தமிழ் மென்பொருட்களாகும் என இரா. கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு என்றால் என்ன?

ஒரு மொழியில் உள்ள எல்லா எழுத்துக்களையும் விருப்பபட்ட வடிவில் (style, design) வடிவமைத்து, கணினி ஏற்றுக் கொள்ளும் முறையில் உருவாக்கப்பட்ட ஒரு சிறு மென்பொருளாகும். டிரெடில் அச்சுக்கோர்க்கும் முறையில் கூறுவதென்றால் அஞ்சறைப்பெட்டி வடிவத்தில் பல எழுத்துக்களின் பிளாக்குகளை போட்டு வைத்திருக்கும் சட்டகங்களை போன்றதே எழுத்துரு எனப்படுவது.

தொடக்கத்தில் கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளைக் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், படம் வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என கணினியில் திறமையாக பாவித்துச் சிறப்பாக இயங்குமாறு ஆங்கில மூல மென் பொருள்களை உருவாக்கி செயல்படுத்தி வந்தனர்.இம்மென்பொருள்கள் மக்களின் பல தேவைகளை மிகச் சுலபமாக செய்து முடித்தன
.
ஆதமி மென்பொருள்

ஆங்கில மென்பொருள்போல தமிழிலும் மென்பொருள்கள் உருவாக்கவேண்டுமென பல கணிப்பொறி வல்லுனர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் விளைவாக முதலில் கனடாவில் வசிக்கும் திரு.கலாநிதிசீனிவாசன் என்பவரால்1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆதமி தமிழ் மென்பொருளாகும். இதன் மூலம் கணிபொறியில் தமிழில் எழுதி அதனை அச்சுப்பதிவு செய்துகொள்ள முடிந்தது.

மயிலை

இதனைத் தொடர்ந்து1985-ஆம் ஆண்டு சுவட்சர்லாந்தில் உள்ள முனைவர் கு.கல்யாண்சுந்தரம் என்பவரால் உருவமைத்த மயிலை எனும் மென்பொருள் ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு உருவமைக்கப்பட்டது. இம்மென்பொருள் ஆங்கில எழுத்தாகிய A-வைத் தட்டினால் அது அ-என்ற தமிழ் எழுத்து தோன்றும் விதமாக உருவாக்கப்பட்டது. இதைபோன்று K-க, O- கொ என உருவாகும் முறையில் அமைந்திருந்தன.




முரசு அஞ்சல்

“தமிழ் மூலம் மின்னஞ்சல்” பிரச்சினைகளுக்குத் தீர்வு முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின. 1986 ஆம் அண்டில் மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால் முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். இதில் எழுத்துரு (font), எழுதி (editor), மின்னஞ்சல் செயலி (e-mail application), விசைப்பலகை (keyboard) என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இதன் மூலம், இந்தச் செயலியை நிறுவியுள்ள கணினிகளின் பயனர்களிடையே மின்னஞ்சல் தொடர்பாடல் போன்ற செயல்கள் இலகுவாக்கப்பட்டன.


தமிழ் லேசர்

அமெரிக்காவில் உள்ள பெர்க்லி பல்கலைகழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜார்ஜ்.எல்.ஹார்ட் என்பவர் உருவைமைத்த ’தமிழ் லேசர்’(tamil laser) எனும் குறியீட்டு முறையில் அமைந்த மென்பொருளை உருவாக்கியுள்ளார்.

ISCII-83

இந்திய அரசால் நிருவப்பட்ட Centre for Developments for Advanced Computing (CDAC)என்ற அமைப்பால் ISCII-83 என்ற தமிழ் மெபொருள் உருவாக்கப்பட்ட
.
பிற தமிழ் மென்பொருள்கள

அமெரிக்கத் தமிழர் மருத்துவர் பெரியண்ணன் குப்புசாமியால் தொடங்கப்பட்ட அணங்கு,மதுரைத்திட்டக் குழுவினரால் வடிவமைத்த TSCII,கனடாவில் வசிக்கும் தமிழ் ஆர்வலர் திரு.விஜயகுமாரின் சரஸ்வதி போன்ற தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன.
1990-இல் அமெரிக்கவைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் T.கோவிந்தராசு என்பவர் உருவமைத்த பல்லாடம், சிங்கப்பூரைச் சார்ந்த தமிழ் பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் கணியன் போன்ற மென்பொருள்கள் தமிழில் உருவாகி தமிழ் மொழி இணையத்திலும் கணிப்பொறியிலும் வளர்ந்த நிலையில் உள்ளது.

தாரகை

சிங்கப்பூரில் உள்ள ஆர்.கலைமணி என்பவரால் வடிவமைக்கப்பட்டதுதான் தாரகை எழுத்துரு மென்பொருளாகும்
இவைகள் மட்டுமன்றி தமிழகத்தைச் சார்ந்த கணிப்பொறி வல்லுனர்களும் மென்பொருள்களை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்களில் திரு.செல்லப்பனின் asian printers,க.இளங்கோவனின் CAD Graph, டாக்டர். கூப்பர் modular infotech, திரு துளுக்காணம் அவர்களின் lastech, மா.ஆண்டோபீட்டர் அவர்களின் softview(inscript fonts), திரு.தியாகராசனின் வானவில் போன்றவையும் அடங்கும்
.
இ-கலப்பை

முரசு 2000-த்தை தொடர்ந்து பெங்களூரில் பணியாற்றிவரும் மென்பொருள் தயாரிப்பாளர் திரு.முகுந்தராஜாவின் முயற்சியால் இ-கலப்பை என்னும் மென்பொருள் ஒருங்குறியீட்டில் பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் இ-கலப்பையைக் கணினியில் நிறுவுதல்,தொடர்ந்து யூனிக்கோடு எழுடத்துருக்களை நிறுவுதல் என்ற இரு செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இம்மென்பொருள் உருவாக்கப்பட்டு வெளிவந்தது.



கூகிள் தமிழ் ஒலிமாற்றி மென்பொருள்

கூகிள் தமிழ் ஒலிமாற்றிப் பற்றி அநேகமானவர்கள் அறிந்திருக்கக்கூடும். அதன் பரவிறக்க பதிப்பாக Input Method Editor [IME] என்கிற மென்பொருளை வழங்குகிறது. இதில் தமிழ் மூலபதிப்பை தரவிறக்கி விளக்கம் கூறியப்படி நிருவிக்க் கொள்ளலாம். அதன் பின் வேண்டிய இடங்களில் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம் அவை நோட்பேடோ அல்லது MS வேர்டாகவோ இருக்கலாம். தட்டச்சிடும் ரோமன் எழுத்துக்களின்[English] ஒலிகளுக்குத் தகுந்த தமிழ் எழுத்தை தட்டச்சிடும். சொந்த கணினியாக வைத்திருப்பவர்கள் இதை ஒருமுறை பதிப்பதன் மூலம் வலை தளங்கள் முதல் கணினி படங்கள் வரை தமிழில் அடிக்கலாம்.
http://www.google.com/ime/transliteration/

அகபே தமிழ் எழுதி

அகபே தமிழ் எழுதி தமிழில் எளிமையாகத் தட்டச்சு செய்ய உதவும் தமிழ் எழுதி மென்பொருள். இந்த தமிழ் எழுதியை இலவசமாக வலைப்பூக்களிலும், வலைத்தளங்களிலும் நிறுவிக் கொள்ள முடியும்

என்.எச்.எம் மென்பொருள்(new Horizon media)

சென்னையில் உள்ள கிழ்க்குப்பதிப்பக திரு.பத்திரிசேசாத்திரி அவரகளின் முழுமுயற்சியோடு திரு.கே.எஸ்.நாகராஜன் அவர்களால் இம்மென்பொருள் உருவாக்கப்பட்டது.இதுவரை வந்துள்ள தமிழ்ஒருங்குறியீட்டு மென்பொருள்களில் முதன்மையானது என்று கூறலாம்.இதனை இலவசமாக கணிப்பொறியில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.இம்மென்பொருள் தமிழ்மொழித் தவிர பிற இந்திய மொழிகளிலும் பயன்படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

அழகி மென்பொருள் (azhagi.com/docs.htm)

விஷி (எ) விஸ்வநாதன் தமிழ்க்கணினி உலகிற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல, அவரிடமிருந்து இளைய தலைமுறை கற்க எவ்வளவோ இருக்கிறது. தன்னை நோக்கிக் காலம் விடும் சவால்களை ஆன்மீகப் பலத்தோடு எதிர்நோக்கி வெற்றியடையும் இவரது மனோதிடம் வியக்கத்தக்கது.இவரது அயராத முயற்சியால் உருவான மென்பொருள்தான் அழகி ஆகும்.
மிகவும் சுலபமான, வேகமான, இடத்திற்கேற்ப மாறி அமையும் (Easy, fast and flexible) ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பே (English-to-Tamil Phonetic Key'mappings) அழகியின் தனிச்சிறப்பு* ஆகும். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த 'ஒலியியல் அமைப்பு' (transliteration scheme) மூலம், உங்கள் தமிழ் தட்டச்சு செயல்திறனை (productivity) அழகி இயல்பாய் அதிகரிக்கிறது (அதாவது, குறைந்த நேரத்தில் நிறைய தட்டச்சு செய்ய உதவுகிறது). உதாரணத்திற்கு, 'ஸ்ரீதர்' என்று தட்டச்சிட sridhar, Srithar, sreedhar, shridhar என்று பல வகைகளில் டைப் செய்யலாம் (flexible transliteration). 'நீங்க', 'விஸ்வம்', 'நன்றி', 'கஸ்தூரி', 'பொய்', 'மஞ்சு', 'கற்று' என்று தட்டச்சிட neenga, viswam, nandri, kasthoori, poi, manju, katru என்று அப்படியே இயல்பாக டைப் செய்திடலாம் (easy, natural, intuitive and straightforward transliteration).
ஒலியியல் முறையில், தமிழில் மட்டுமல்லாது, பிற இந்திய மொழிகளான ஹிந்தி (சம்ஸ்கிருதம், மராத்தி, கொங்கனி, ..., ...), தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பெங்காலி (வங்காளம்), பஞ்சாபி, ஒரியா, அசாமீஸ் முதலியவற்றிலும் தட்டச்சு செய்ய வல்லது.

செல்லினம் மென்பொருள்

என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும். இம்மென்பொருளை மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான முரசு நிறுவனம் உருவாக்கிதைப்பொங்கற் திருநாளான ஜனவரி 15, 2005 முதல் சிங்கப்பூரில் அறிமுகமாக வணிகப்பயன்பாட்டுக்காக வெளியிடபட்டது.
சர்மா சொற்பிழைச்சுட்டி மென்பொருள் (http://sarma.co.in/tamil/index.htm)
சொற்பிழைச் சுட்டிக்கான இம்மென்பொருட்கள் சொற்களின் எழுத்துப் பிழைகளை மட்டும் சுட்டுவதாக அமைந்துள்ளன.
சொற்பிழைச்சுட்டி மென்பொருள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருட்களிள் 35 வகையான (பட்டியலிலுள்ள, Unicode) எழுத்துருக்களையும் தானாகவே இனம் கண்டு சொற்பிழைகளைக் கண்டறிந்து மைக்ரோசாப்ட் வேர்டு மென்பொருளில் உள்ளவாறு (English spell checking) தவறான வார்த்தைகளின் அடியில் சிவப்பு நிறத்தில் அடிக்கோடிட்டிடும். எனவே பயனாளர் குறிப்பிட்ட எழுத்துருவில் மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. ஆங்கிலம், தமிழ் இரண்டு உள்ளீடுகளையும் இனம் கண்டு தானாகவே சொற்பிழைகளைக் கண்டறியும்.









Tuesday, October 25, 2011

தீபத்திருநாள் வாழ்த்துகள்

|0 comments
நல்லதை எண்ணவோம்
நல்லவை நடக்கும்.

தீபத்திருநாளில் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும்
என் இதயம் கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துகள்...








அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.




Saturday, October 1, 2011

சங்க இலக்கியப் புலவர்களின் மன ஆளுமைகள்

|2 comments



உலக இலக்கியங்களில் செம்மொழி இலக்கிய வரிசையில் தமிழ்மொழியும் ஒன்று. இத்தகு சிறப்பு வாய்ந்த மொழியில் எண்ணிலடங்கா இலக்கியங்கள் குவிந்து கிடக்கின்றன. உலகமொழிகளில் எத்தனையோ மொழி இலக்கிய வரலாற்றைப் படித்துள்ளேன். அனால் தமிழில் புறநானூற்றில் இருக்கும் வரலாற்றுச் செய்தியைப் போல வேறு எந்தமொழி இலக்கியத்திலும் காணக்கிடைக்கவில்லை என்று பெர்க்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ்.எல்.ஹார்ட் குறிப்பிடுவதன் மூலம் உலக அளவில் தமிழ்மொழி பெற்றுள்ள செல்வாக்கினை நாம் நன்கு உணரலாம்.
நமது இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியத்தை மூன்று பெரும்பிரிவாகப் பிரித்துள்ளார்கள். அவை முதல்,இடை,கடை என்பவயைகும்.இச்சங்கங்களில் உருவாகிய நூல்களின் எண்ணிக்கைக் கணக்கிட இயலாதது.இத்தகு சிறப்புப் பெற்ற தமிழ் மொழியில் இலக்கியப் பாடல்கள் பல புலவர்களால் பல காலக்கட்டத்தில் பாடப்பெற்றவையாகும். இவ் இலக்கியங்களில் பொதிந்துள்ள் கருத்துக்கள் மிக அதிகம். மனித வாழ்வு, உலகப் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், மனிதனின் தேவை, ஒழுக்க நெறி என பரப்பு விரிகின்றன.இருந்தாலும் சங்க இலக்கியப் புலவர்களின் மன ஆளுமைக்கோட்பாடுகள் என்ற தலைப்பில் இக்கட்டுரை விரிகிறது.

சங்கைலக்கியப் புலவர்களின் எண்ணிக்கை.

சங்ககாலம் என்பது சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனலாம். இச்சங்ககாலங்களில் மூன்று சங்களிலும் புலவர்களால் பாடப்பெற்ற தொகுப்பு நூல்கள் உள்ளன. இவைகளில்
முதல் சங்கத்தில் 4449 புலவர்களும்
இடைச்சங்கத்தில் 3700 புலவர்களும்
கடைச்சங்கத்தில் 449 புலவர்களும்
இருந்துள்ளனர் என்று இலக்கிய வரலாறு கூறுகிறது.
மொத்தம் 8598 புலவர்கள் சங்க இலக்கியத்தைப் பாடியுள்ளதாக வரலாறு உள்ளது.
இவற்றில் பாடிய புலவர்கள் பல இனக்குழுவைச் சார்ந்தவர்கள். இவர்களின் மனநிலை ஒவ்வொருவருக்கும் வேறுப்பட்டு இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் சொல்ல வந்த கருத்தை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக
கூறியுள்ளனர். இவர்களின் மன அளுமை எவ்வாறு இருந்திருக்கும். புலவர்கள் மக்களையும் ,அரசனையும் ,இயற்கையையும், காதல் வீரம் ,கொடை என பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.இவர்களின் மன ஆளுமையைக் கண்டு வியக்கதாவர்கள் இல்லை.

மனம்

மனம் என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.

சிந்தனை

சிந்தித்தல் அல்லது சிந்தனை சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு. ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மொழி, கணிதம், ஓவியம், இசை, கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.
சிந்தித்தலின் உயர்வே கணியன் பூங்குன்றனின் உலகப்பார்வையைச் சற்று உயர்வாக எண்ணத் தூண்டுகிறது. மேலும் அவரது மன அளுமையையும் இப்பாடல் வெளிக்காட்டிகிறது.இன்றைய உலகம் சுயநலம் மிக்க மனிதர்கள நிறைந்ததாகும்.இந்த உலகத்தில் சுயநலம் சிறிதும் இல்லாத மனிதர்களின் மேன்மைப் பண்பினை இப்பாடல் விளக்குகிறது.இந்த உலகம் ஏன் இன்றளவும் நிலைப்பெற்றிருக்கிறது?என்ற வினாவை எழுப்பிக்கொண்டு இவவாசிரியர் விடை கூறுகிறார். தேவர்கள் அருந்தக்கூடிய அமிழ்தம் கிடைத்தபோதும் தனக்கு மட்டும் உரியது என்று தனித்து உண்ணாமல் மனிதர்கள் உள்ளத்தால் இந்த உலகம் இன்றளவும் திகழ்கிறது. சினப்பண்பு சிறிதும் இல்லாதவர்கள், சோர்வடையாதவர்கள்,மற்றவர்களின் கருத்துக்களுடன் இயைந்து செல்பவர்கள்,புகழுக்காக உயிரயையும் தரத் தயங்காதவரகள், தமக்கு என எதனையும் பெற முயற்சி செய்யாதவார்கள், பிறருக்காகவே எப்போதும் முயற்சி செய்து உழைப்பவர்கள் போன்றன் மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இன்றளவும் நிலைப்பெற்று உள்ளது என்ற சிந்தனையை கூறியுள்ளார். மேலும் மனித உள்ளத்தினை மேம்பாடடையச் செய்யக்கூடிய கருத்ஹ்டுக்களைக் கொண்ட பாடல்.
தீமையும் நல்லதும் அவரவரின் மனதைப்பொறுத்தது. அது மற்றவர்களால் நிகழக்கூடியது அல்ல என்கிறார்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தரவாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்




இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண் துளி தலை இ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே(புறம்.192)

தெளிந்த மன சிந்தனையுடையோரால் மட்டுமே இதுபோன்ற மன ஆளுமைச் செய்திகளை கூறச்செல்லமுடியும். எனவே தெளிந்த மனசிந்தனை வேண்டும்.
தன்னை ஆளுகின்றவன் எவனோ அவனால்தான் நல்ல சிந்தனைப் பிறக்கும் அப்பொழுதுதான் உலகை ஆளுகின்ற சக்தியைப் அவனால் பெறமுடியும்.
இதைப்போன்றே
“பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந்தத்தங், கருமமே கட்டளைக் கல்” (குறள், 505)
என்ற;உலக ஆசான் வள்ளுவன் கூறியிருக்கிறார்.அவனவன் செய்கின்றே செயலே அவனை நல்லவனாக உயர்த்துகின்றது என்ற மன் ஆளூமையை வெளிப்படுத்தியுளார்.
மேளும் தம் ஆளுமைப்பன்மை அவ்வையார் குறிப்பிடும்போது எந்த நிலமாக இருந்தாலும் அந்த நிலத்தில் நல்ல ஆடவர்கள் இருந்தால் அநிலம் வளமையடையும் என்ற உயரிய சிந்தனையை தன் ஆலுமையின் மூலம் எடுத்துக்காட்டுகிறார்

நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ் வழி நல்லவர் ஆடவர்,
அவ் வழி நல்லை; வாழிய நிலனே!.(புறம் 187)

நோக்கு(க்கம்)

மன ஆளுமைக்கு அடுத்த சிறப்பு என்று கூறுவோமானால் நோக்கம் நல்லவையாக அமைந்திருக்க வேண்டும்.அரசன் சட்டம் இயற்றலாம். அது மக்களுக்குப் பயன்படும் விதத்தில் அமைய வேண்டும். அதைவிடுத்து மக்களை துன்பப்படுத்தும் விதமாக இருத்தல் கூடாது. மன்னன் ஒருவன் வரி வசூல் செய்ய படைவீரர்களை அனுப்பி வைக்கின்றான். அதிகமான வரியை மக்களுக்கு விதிக்கின்றான். இதனைக்கண்டு மக்கள் மனதை நன்கு அறிந்த புலவர் மன்னனுக்குத் தன் அறிவுரையாகவும், மன ஆளுமையை
காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
……… ……… ……… ……….. ……… ………. ……… ……… …….. ………. ….
யானை புக்க புலம்போலத்
தானு முண்ணா உலகமொங் கெடுமே (புறம்-184)
என்று பாண்டியன் அறிவுடைநம்பிக்கு மக்களிடம் எவ்வாறு வரிவசூல் செய்ய வேண்டும் என்று பிசிராந்தையார் தரும் உலக நோக்கு கருத்தைக் மன்னனுக்குத் தெளிவுபடுத்தும் காட்சி.இது இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. உலக நாடுகள் பல இன்று பொருளாதரத்தில் சிக்கித் தவிக்கும் சூழல் நமக்கு நன்றாகத் தெரியும்.

உணர்ச்சி

மனிதர் உணரும் சிந்தனை அல்லது மன அல்லது உடல் நிலைகளை உணர்ச்சி (Emotion) எனலாம்.இலக்கியம் உணர்ச்சிகளின் விளையாட்டுக் களம் என்பதுஅனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பேறுண்மை.
மனித உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிகளைப் பல இடங்களில் பல புலவர்கள் மன ஆளுமையாகப் பதிவு செய்துள்ளனர். பல மன்னர்களின் இறப்பை ஏற்றுக்கொள்ளாத புலவர்கள் கையறுநிலைப்பாடல்களாகப் பாடியுள்ளனர்.நம்மி நெடுஞ்செழியன் இறப்பை பேரெயின் முறுவலார் என்ற புலவர் தன் மன உணர்ச்சியின் பிழிவாகப் (புறம்-239) பாடியுள்ளார். கபிலர் பாரி மறைந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளாமல் வருந்திப்பாடிகிறார். ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீர்த்தனார் பாடிய பாடல்

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆன்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே. (புறம் -242)
மன்னன் இறந்தபோது அவனது இறப்பை ஏற்றுக்கொள்ளாமல் மங்கலப் பொருளான மலரை-முல்லை மலரை எவரும் அணிய முன்வரவில்லை. மக்கள் இவ்வாறுகொடிய அவலத்தில் இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க இயற்கைப் பொருள்களான மலைக்கும்,நதிக்கும், மலருக்கும் செடிக்கும் என்ன தெரியும்? மலர் இயல்பாக பூக்கிறது, தென்றல் இயல்பாக வீசுகிறது, மரங்கள் இயல்பாக அசைகின்றன.இயற்கையின் இயல்பான செயல்கள் கூட மன்னனை இழந்தும் வருந்தும் குடிமக்களுக்குத் துன்பத்தைத் தருகின்றன என்று உணர்ச்சியின் உச்சக்கட்டமாக முல்லைப்பூவைப் பார்த்து கேட்கும் புலவனின் மன நிலையை நாம் என்னவென்று கூறுவது.இது புலவனின் மன ஆளுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்
.
மன உறுதி..

ஒரு செயலை செய்துமுடிக்க மன உறுதி மிக அவசியம். இது மன ஆளுமைக்கு அடுத்த அறன். மனம் ஒரு குரங்கு என்பர் ஒரு இடத்தில் நிலையாக நிற்காது. அதனை நிலை நிறுத்தியவர்கள் வாழ்வில் பல முன்னேற்றேங்களை அடைந்துள்ளனர்.பெருஞ்சாத்தன்
என்ற புலவர் வெளிமான் துஞ்சுவான் தம்பியிடம் சென்று பாடிவிட்டு பரிசில் கேட்கிறார். அவன் சிறிது கொடுக்க அதனை வாங்காது சூழுரை செய்கின்றான். உனது பரிசிலை நீயே வைத்துக்கொள். இதனைவிட அதிகமாக பரிசிலைப்பெற்று நான் மீண்டுவருவேன்.
அவ்வாறு கூறீயப்படியே பெருஞ்சாத்தன் குமணனைப்பாடிப் பரிசில் பெற்று வருகின்றான். வந்தவன் வெளிமான் துஞ்சுவான் தம்பியிடம் சென்று இதோ நான் உனக்குத் தரும் மிக உயர்ந்த பரிசாக இந்த யானையை வைத்துக்கொள் என்று அவனது கடிமரத்தில் யானையைக் கட்டிவைத்துவிட்டு திரும்புகின்றான். இது பெருஞ்சித்திரனாரின் மன உறுதியை வெளிப்படுத்தி நிற்கிறது.
இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க்
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடு நல் யானை எம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே. (புறம்-162)


இதுபோன்றே அவ்வையார் அதியமான் நெடுமான் அஞ்சி பரிசிலை காலம் தாழ்ந்து கொடுத்தான் என்ற காரணத்திற்காகப் பரிசிலைப் பெற்றுக்கொள்ளாமல் திரும்புகிறார். அப்பொழுது எமக்கு எந்த திசைக்கு சென்றாலும் பரிசிலும் உணவும் கிடைக்கும் என்று கூறி செல்கிறார். இச்செயல் அவரின் மன உறுதியைக் காட்டுகிறது.
எத்திசைச் செலினு மத்திசைச் சோறே.(புறம் 206)
கற்பனை
கற்பனை மனிதனுக்கு இயல்பாகவே வாய்ந்த ஒரு அணிகலன். அது மனிதனிடம் செயற்கையாக உருவாக்கப்படவில்லை. கற்பனை மனிதனின் எண்ணங்களைச் செதுக்குகிறது.
மனிதனிடம் இயல்பாக புதைந்து கிடக்கின்ற கனவு காணூம் பன்புதான் கற்பனைக்கு அடிப்படை. கனவு கற்பனை இரண்டுமே நிகழ்காலத்தில் மனிதனுக்கு ஏற்படும் சொல்ல முடியாதா துன்பங்களிலிருந்து விடுதலை தருகிறது.இத்தகைய கற்பனையை சங்கப் புலவர்கள் மன ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக பாடியுள்ளார்கள்.
பாலைப் பாடிய பெருங்கடுங்கோ பாலை நிலத்தில் நடந்துசெல்லும் தலைவனும் தலைவியும் காணும் நிகழ்வுகளை ஆசிரியர் தனது கற்பனைத் திறத்தினால் வெளிப்படுத்துகிறார். ஆண் மானின் நிழலில் பெண் மான் படுத்துறங்கும் நிகழ்வைக்காட்டி தலைவனின் நிழலில் தலைவி ஓய்வு எடுக்கும் அன்பினைக் காட்டுகிறார்.
குறுந்தொகையில் தேவகுலத்தார் என்னும் புலவர் காதலை இயற்கையோடும், நிலத்தைவிட பெரியது வானத்தைவிட உயரமானது,கடலைவிட ஆழமானது என காதலை உயர்வாகத் தன்கற்பனைத்திறத்தினால் செதிக்கியுள்ளார். இது புலவனின் மன ஆளுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே; சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே."(குறு-3)

இவ்வாறாக சங்க இலக்கியப்புலவர்கள் மன் ஆளுமைக்கருத்துக்களை உலகிற்கு வழங்கியுள்ளனர் மனம் நல்லவையாக இருந்தால் செயல் நல்லவயாக அமையும். இதனை சங்க இலக்கியப்புலவர்களின் பாடல்கள் வழியாக நாம் கண்டுகொள்ளமுடிகின்றது
.
கட்டுரைக்குப் பயன்பட்ட நூல்கள்

1.புறநானூறு மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதர்
2.கலித்தொகை, சக்திதாசன் சுப்பிரமணியம்.
3.குறுந்தொகை மூலம்,
4.www.wikipedia.org
5.www.tamilvu.org















































.






Saturday, September 17, 2011

திரு.பாலகுருசாமியும் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியும்(இனாம்குளத்தூர்)

|4 comments
பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியில்(இனாம்குளத்தூர்) அண்ணாப் பல்கலைக்கழக மேணான் துணைவேந்தரும்,தமிழகத் திட்டக்குழு உறுப்பினருமான திரு.பாலகுருசாமி அவர்கள் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டார்.அவரை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருமதி கே.மீனா அவர்கள் வரவேற்றார். திரு பலகுருசாமி மாணவர்களிடம் உரைநிகழ்த்தும்போது நல்ல முறையில் மாணவர்களாகிய நீங்கள் படிக்கவேண்டும். இன்றைய அறிவியல் காலக்கட்டத்தோடு இணைந்து பாடங்களைப் பயிலவேண்டும் என்றார். மேலும் இக்கல்லூரியில் மூன்றாண்டு பட்டப்படிப்பின் இறுதியில் முதல் இடம் பிடித்த மாணவ மாண்வியருக்கு 25000 பணமுடிப்பு எனது சொந்த செலவிலிருந்து வழங்கப்ப்டும் என்று மாணவர்களிடம் கூறினார். இது மாணவ மாணவிகளிடம் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளன
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்றல்.அருகில் பாரதிதாசன் பல்கைக்கழகத் தொலைதூர கல்வி மையத்தின் இயக்குநர் முனைவர் அறுமுகம். . அதனைத் தொடர்ந்து பாரதிதாசன் பலகலைக்கழக துணைவேந்தர் அவர்கள் உரை நிகழ்த்தினார். மாணவ மாணவியர்கள் கணிப்பொறி அறிவை நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்று அனைத்துத் துறைகளிலும் கணினிப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன்.எனவே உங்கள் படிப்பு எதிர்கால தேவையைப் பூர்த்தி செய்யும் வண்ணம் அமைய வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரைக் கூறினார்.
சிறப்பு விருந்தினர் தமிழகத் திட்டக்குழு உறுப்பினரும் துணைவேந்தருமான திரு.குருசாமி அவர்கள் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடியது.
துணைவேந்தர் கே.மீனா அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி.

Saturday, September 3, 2011

இணையமும் தமிழும் நூல் பார்வை

|0 comments

பேரன்புடையீர் வணக்கம்.
தங்களது இணையமும் தமிழும் என்ற தலைப்பிலான நூலை வாசித்தேன்.
காலத்திற்கு ஏற்ற நூலைச் செதுக்கித்தந்துள்ள தங்களுக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.
இயல்களும் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.நிறைவுப்பகுதியில் உள்ள இணையத்தமிழ் இதழ்களின் முகவரிகள் பயன்பல தரும்.புரவலர் கணிப்பொறி (server computer)என்ற சொற்றொடர் புதுமையானது.குலோத்துங்கன் கவிதை இயலினூடே மின்னுகிறது. அதிக இணையப்பக்கங்களை ஆங்கிலத்திற்கு அடுத்து தமிழ் பெற்றுள்ள செய்தியும், இணையக்கல்வி முயல்வுகள் பற்றிய(பக்.45-47)செய்திகளும் படிப்பாருக்கும் உதவும்.இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல, வணக்கம்.

அன்புடன்
முனைவர் அ.அறிவுநம்மி
முதன்மையர்
சுப்பிரமணிய பாரதியார் பல்கலைக்கழகம்
புதுச்சேரி-605014


அன்பர் சீராசை சேதுபாலா அவர்கள் அவரது வலைப்பூவில் இணையமும் தமிழும் நூல் பற்றி எழுதியுள்ள மதிப்புரையும் கீழே உள்ளன.

முனைவர் துரை மணீகண்டன் எழுதிய இணையமும் தமிழும் புத்தகம், சென்னை-17-ல் 17/3சி மேட்லி சாலயிலிருந்து வெளியிடப் பட்டுள்ளதைப் பார்த்து வியப்படைந்தேன்.

லேனா தமிழ்வாணன் கண்ணில் படாமல் போன தலைப்பு என வியந்தேன். திருச்சிக்காரரின் துணிச்சல் பாரட்டத்தக்கது.

இணயம் ஓர் அறிமுகம், இணயத்தின் வரலாறு, இணய்த்தில் தமிழ், இணயம் தொடர்பான மாநாடுகள்-கருத்தரங்குகள், இணயத்தில் தமிழில் பயன்பாடு, இணயத்தில் தமிழ்க்கல்வி, இணையத்தில் தமிழ் மின் இதழ்கள், இணயத்தில் தமிழ் மின் நூலகம், இணயம் வழி கணினி ஆய்வுகள் என்று ஆரம்பப் பள்ளி மாணவன் கூடப் புரிந்துகொள்ளுமாறு விளக்கமாக எழுதியுள்ளார்.

இணய அகராதி குறித்த விள்க்கம் சற்றுச் சிந்திக்கத் தக்கது. விக்கி பீடியாவை கட்டற்ற களஞ்சியம் என்று மொழியாக்கம் செய்துதான் தீர வேண்டுமா? லாரி, கார், மோட்டார், ரெயில், போன்று மக்கள் மத்தியில் பழ்க்கமாகிவிட்ட சொற்களுக்குப் புதிய தமிழ்ச் சொற்களைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்ல்லை என்ற டாக்டர்.மு.வரதராசனார் காட்டிய வ்ழியைப் பின்பற்றினால் நன்றாக இருக்குமே?

சுமார் 150 இணையத் தமிழ் இத்ழ்களின் முகவரியைத் தேடித்தந்திருப்பது நல்ல சாதனை!

18 தமிழ் கணிமை நிறுவனங்களச் சுட்டியுள்ளார். இலவசங்களாகத் தருவதையும், விலைக்கு விற்பதையும் பிரித்துக் காட்டியிருக்கலாம்.

பல்கலைத்த் தளங்கள், தமிழ் இணைய நூலகங்கள், தமிழ் கணிமச் சுவடிகள், ஆய்வுக் கட்டுரை, சிறு விளக்கங்கள் கொடுத்திருந்தால் என் போன்று துவக்க நிலையில் இருப்போருக்கு பேருதவியாய் அமைந்திருக்கும்.

தமிழ் இணைய வானொலி நிறைய விடுபட்டுள்ளன். அதற்கென்றெ தனி இதழ் வருகின்றது. ஆசிரியரும் அமிஞ்சிக்கரையிதான் உள்ளார். இந்த் வலைப்பூவில் தேடினாலே கிடைக்கும் குறைவாகக் கூறவில்லை. அடுத்த நூலில் சேர்த்துக் கொள்ளலாம்.

worldtamilnews.com உலகின் முதல் தமிழ் இணைய வானொலி முகவரி சென்னை எழும்பூரிலிருந்து 8 ஆம் வ்குப்பு மட்டுமே படித்த vkt பாலன் அவர்களால் நடத்தப் படுகின்றது.9841078674

தமிழ் இணய்தளத் தேடும் எந்திர முகவரி எனக்குப் புதிய தகவல்.


நல்ல புதிய முயற்சிக்கு முனைவர். துரை மணிகண்டனுக்கு வாழ்துக்க்கள்!.

அன்புடன்
சீராசை சேதுபாலா
http://rssairam.blogspot.com/

Thursday, September 1, 2011

தமிழ் மின்னியல் நூலகம் (Digital Library)

|0 comments


பல பொருள் விரிந்த கருத்துக்களை ஒருங்கே சுருக்கிக் கூற எழுந்ததுதான் வெண்பாவும், ஆசிரியப்பாவும் ஆகும். அதைப் போன்று தமிழ் நூல்கள் அனைத்தையும் ஒருங்கே தொகுத்துத் தருவதுதான் தமிழ் மின்னியல் நூலகம் மற்றும் இணைய நூலகம் ஆகும். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற பவனந்தி முனிவரின் கருத்திற்கேற்ப ஒரு காலத்தில் கருத்துக்களைக் கருவாக சுமந்தது ஓலைச்சுவடிகள். காலமாற்றத்தின் சூழலுக்கேற்ப அச்சு இயந்திரம் காகிதமாகின. பின்பு நூல்களைத் தொகுத்து வெளியிட அல்லது பாதுகாப்பாக படிக்க ஒரு நூலகம். அவ்வாறு பாதுகாத்து வைத்த நூல்களை, நூலகம் சென்று படிக்கும் ஆர்வம் சற்று குறைந்து வரும் இக்காலத்தில் இணையத்தில் பல மின்னியல் நூலகம் உருவாகி வருகின்றன. இந்த மாற்றம் நிகழ்கால எதிர்கால அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரியக் கூடும்.

மின்னியல் நூலகம்

“மின்னியல் நூலகம் என்பது, தற்போது வழக்கில் உள்ள அச்சு வடிவம் அல்லது மைக்ரோபிலிம் (Micro Film)வடிவத்தில் உள்ள புத்தகங்களை அல்லது அவற்றுள் ஒரு பகுதியை மாற்று வழியாகவோ, மறு பிரதியாகவோ, துணைப் பொருளாகவோ மின்னியல் வடிவில் பாதுகாத்து வைக்கும் நூலகமாகும்” என்று மலேசியாவைச் சேர்ந்த எஸ். இளங்குமரன் என்பவர் விளக்கம் தந்துள்ளார். இவையன்று பெரிய நூல்களையும் அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களையும் ஒளி அச்சு முறையில் எடுத்தும் மின்னியல் நூலகத்தில் சேர்த்துள்ளார். மின்னியல் நூலகத்தில் அதிகமான தமிழ் நூல்களே மின்பதிப்பாக்கம் பெற்றுள்ளன என்பது நமக்கெல்லாம் பெருமையாகும்

உலக மின்னியல் நூலகம்

உலக மின்னியல் நூலகம் என்பது, UNESCO மற்றும் அமெரிக்க காங்கிரஸ் நூலகம் இணைந்து வழிநடத்தும் அனைத்துலக மின்னியல் நூலகமாகும். இதன் பயனாக

1. அனைத்துலக மற்றும் பல்வேறு கலாச்சாரப் புரிந்துணர்வை வெளிப்படுத்துதல்.
2. கலாச்சாரம் சார்ந்த தகவல்களை இணையத்தில் அதிகரித்தல்.
3. கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதோடு இணை இயக்கங்களின் தரத்தை மேம்படுத்தி, நாடுகளுக்கு இடையிலான தொழில் நுட்பப் பிரிவினைகளைக் குறைத்தல்.
4. இலவசப் பன்மொழி வடிவிலான உலகளாவிய கலாச்சாரத்தின் முக்கியத் தகவல்களான எழுத்து வடிவம், வரைபடம், அரிதான நூல்கள், இசை, பதிவுகள், திரைப்படங்கள், அச்சுகள், புகைப்படங்கள், கட்டடக்கலை வரைபடங்கள், முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சார பதிவுகள் போன்றவற்றை இணையத்தில் கிடைக்க வழி செய்தல் போன்றவையாகும்.

உலக மின்னியல் நூலகத்திற்கு உலகளாவிய அளவில் 30 - மேற்பட்ட தேசிய நூலகங்களோடும், கல்வி நூலகங்களோடும் ஒப்பந்த இணைப்பும் உள்ளன. இவையன்றி உலக மைய நூலகத்தில் (Center for Research Libraries an International Consortium of University, College and Independent Research Libraries) http://catalog .crl.edu/171 -நாடுகளிலுள்ள 72,000 நூலகங்களை இணைத்து உலக மக்களுக்கு வழங்கி வருகிறது என்று முனைவர் கு. கல்யாணசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மின்னியல் நூலகம்

உலக மொழிகளில் கணிப்பொறியையும் இணையத்தையும் அதிகமாகப் பயன்படுத்தும் மொழிகளில் செம்மொழித் தமிழும் ஒன்று. இன்று இணையத்தில் மின்னியல் நூலகம் உருவாக்கி அதனை வெளியிட்டு உலகத் தமிழ் மக்களுக்கும் பிற மொழியாளர்களுக்கும் முன்னோடியாகத் திகழ்வது தமிழ் மொழியாகும். அந்த வகையில் தமிழ் மின்னியல் நூலகம் இணையத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளன.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

தமிழ் மொழி ஆராய்ச்சிக்கென்று சிகாகோ பல்கலைக்கழகத்தால் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்ற பெயரில் 1994-ல் தொடங்கினர். இதில் பலதரப்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், தமிழ்க் கட்டுரைகள் முதலானவைகளைத் தொகுத்துத் தந்துள்ளனர். இந்த ஆராய்ச்சி நூலகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான நூல்கள் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியர், நூலின் தலைப்பு, நூல் வெளிவந்த ஆண்டு போன்றவைகளில் செய்திகள் இடம் பெற்றுள்ளன. இஃது இணையத்தில் 1996 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நூலகத்தின் மூலம் உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் விரைவாக நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து விடுகின்றனர். முக்கியமான, அரிய நூல்களும் இந்நூலகத்தில் இடம் பெற்றிருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுடையதாக அமைந்துள்ளது.

மதுரைத் திட்டம் (Project Madurai)

உலகில் வாழும் 12 கோடி தமிழர்களையும் இணையம் வழி ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களை மின் பதிப்புகளாக உருவாக்கி அவற்றை இணையம் வழியே வெளியிட்டது இம் மதுரைத் திட்டம். இதனால் உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக நூல்களைப் பெற வசதி செய்யும் ஒரு தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டமே மதுரைத் திட்டமாகும். கே. கல்யாணசுந்தரம், முனைவர் பி. குமார் மல்லிகாருசுணன் என்ற இருவரால் 1998ஆம் ஆண்டு தமிழர் திருநாளன்று தொடங்கப்பட்டது.

மதுரைத் திட்டம் நூலகமானது எவ்வித எதிர்பார்ப்புமின்றி தமிழ் அறிஞர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. தொடக்க காலத்தில் இணைமதி, மயிலை போன்ற எழுத்துருக்களில் இயங்கிய இந்நூலகம் பின் திங்கியில் செயல்பட்டு வந்துள்ளது. 2003-லிருந்து ஒருங்குறி எழுத்துருவில் இயங்கி வருகிறது.

இந்நூலகத்தில் திருக்குறள், ஔவையார் பாடல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை (நெடுநல்வாடை, திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டுப் பாடல்கள், பாரதியார், வைரமுத்து கவிதைகள் படைப்புகள், உரைநூல்கள்) சுமார் 350லிருந்து 450 நூல்கள் இடம்பெற்றுள்ளன.

இத்திட்டத்தின் சிறப்பு கூறுகள் யாதெனில் யார் வேண்டுமானாலும் தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புச் செய்து இவர்களின் அனுமதியோடு அம்மின்தொகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். இவையல்லாமல் இத்தொகுப்பில் உள்ள அனைத்து நூல்களும் ஒருங்குறியில் கிடைப்பதால் எழுத்துருப் பிரச்சனை என்பது இல்லை. மதுரைத் திட்டம் அமெரிக்கா, கனடா, இந்தியா, இலங்கை, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றது. தற்போது நூலகம் தமிழ்.நெட் இணையதளத்துடன் இணைந்து செயல்படுகிறது.

தமிழ் இணையக் கல்விக்குழுமம்
உலகு தழுவிய தமிழர்களின் அக்கறையினால் 17.02.2001 அன்று தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தோற்றம் பெற்றது. இது பல நாட்டு மாணவர்கள் தமிழ்மொழியைப் பயிலும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இவற்றில் மின்நூலகம் என்ற பகுதியில் தமிழ் நூல்கள் மட்டுமின்றி தமிழ் நூல்களின் ரோமன் வடிவம், அகராதிகள், கலைக்களஞ்சியம், கலைச்சொல் தொகுப்புகள், சுவடிக் காட்சியகங்கள், பண்பாட்டுக் காட்சியகங்கள், பயணியர் போன்ற உட்தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன.

இந்நூலகத்தில் இலக்கண நூல்கள், சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நீதிநெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியங்கள், தமிழ் உரைநடை நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. இன்று கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பரவலாக இந்நூலகத்தைப் பயன்படுத்தியே ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கின்றனர். அனைத்து நூல்களும் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

சிறப்புக் கூறுகள்

பிற மின்நூலகத்ததை விட தமிழ் இணையக் கல்விக் கழக (தற்போது பெயர் மாற்றம்) நூலகத்தில் பல சிறப்புக் கூறுகளைப் பெற்றுத் திகழ்கிறது.
1. இலக்கண, இலக்கிய நூல்களுக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள் கிடைக்கின்றன.
2. சங்க இலக்கியப் பாடுபொருள்கள் எண், சொல், பக்கம், பாடினோர், வள்ளல்கள், மன்னர்கள், திணை கூற்றும், பாடல் முதற்குறிப்பு, மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள், விலங்குகள், மீன்கள் என்னும் தலைப்புகளில் வேண்டிய செய்திகளை உடனடியாகத் தேடிப் பெற்றுக் கொள்ளலாம்.
3. அகராதிகளில், தமிழ் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களும், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் தேடிப் பெறும் வசதியுள்ளது.
4. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை உலகத்தார்க்கு எடுத்து விளக்கும் வகையில் அமைந்த சைவ, வைணவ, இசுலாமிய, கிறித்துவ கோயில்களின் ஒலி, ஒளி காட்சிப் பதிவுகள் மற்றும் நாட்டியம், பொம்மலாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம், ஜல்லிக்கட்டு முதலான பண்பாட்டுக் காட்சியகம் வியக்கத்தக்க வகையில் இடம்பெற்றுள்ளது.
5. திருத்தலங்கள் என்னும் வரிசையில் 14-சமணத் தளங்கள், 101 சைவத் தளங்கள், 93-வைணவத் தளங்கள், 9-இசுலாமிய தளங்கள், 13-கிறித்துவத் தளங்கள் காட்சியாக்கப்பட்டுள்ளன.

6. தேவாரப் பாடல்களை இசையுடன் கேட்கும் வசதி உள்ளது.

இவ்வாறு பல வசதிகளைக் கொண்ட இம்மின்நூலகம் பல ஆராய்ச்சி மாணவர்களுக்கும், தமிழ் இலக்கிய நூல்களைக் கண்டு படிப்பவர்களுக்கும் பயன்படும். இதில் 350 மேற்பட்ட தமிழ் நூல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இலக்கிய வரலாற்று அடிப்படையில் நூல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள விதம் படிப்பவர்களையும், நூல்களைத் தேடி எடுப்பவர்களையும் இலகுவாக கவர்ந்திழுக்கின்றது.

தமிழ் மரபு அறக்கட்டளை

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டூழிய நிறுவனம் 2001-ஆம் ஆண்டு உலகு தழுவிய ஒரு இயக்கமாக உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் மின் பதிப்பில் உலகில் இருக்கும் ஓலைச்சுவடிகள், அரும்பெரும் பழைய நூல்களை நகல் எடுத்து இணையத்தில் வெளியிடுவது ஆகும்.

மின்பதிப்பாக்கம், மின்னூலாக்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக இணையத்தில் மின் நூல்களுக்கான அட்டவணை ஒன்றை உருவாக்கியுள்ளது. இவற்றில் அரக்குமாளிகை நாடகம், அமெரிக்க அன்னையான பிள்ளைத் தமிழ், சபரி மோட்சம், சுபத்திரை மாலையிடு போன்ற அரிய நூல்கள் இம்மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

நூலகம்.நெட்

ஈழத்தில் வெளிவந்துள்ள தமிழ் நூல்களையும், இதழ்களையும் மின் வடிவமாக்கி பாதுகாத்து அனைவரும் காணும் வகையில் நூலகம்.நெட் செயல்படுகிறது. இஃது ஓர் இலாப நோக்கமற்ற தன்னார்வ கூட்டு முயற்சியாகும். மதுரைத்திட்டம், தமிழ்மரபு அறக்கட்டளை போலவே இதுவும் அமைந்துள்ளது. இம்மின் நூலகத்தை உருவாக்கியவர்கள் தி. கோபிநாத் மு.மயூரன் ஆகியோர் ஆவர். 2005-ல் தொடங்கி இடையே சில காரணங்களால் தடைப்பட்ட இத்திட்டம் 2006 தை மாதம் மீண்டும் புதுப்பொழிவுடன் பல புதிய மின்நூல்களைக் கொண்டு வெளிவந்தது. வாரம் ஒரு மின்னூல் என்ற குறிக்கோளுடன் செயற்பட்டு வருகிறது. 30.10.2010 முடிய 6100 நூல்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் ஆவண வகைகள், பகுப்புகள், பட்டியல்கள் என மூன்று பெரும் தலைப்புகளில் செயல்படுகிறது. ஆவண வகைகள் என்பதில் நூல்கள், சஞ்சிகைகள் பத்திரிக்கைகள், பிரசாரங்கள், ஆய்வேடுகள் என்னும் பகுப்புகள் உள்ளன. பகுப்புகள் என்பதில் எழுத்தாளர்கள், வெளியிட்ட ஆண்டு, பதிப்பகங்கள், நூல்வகை ஆகியவை இடம்பெற்றுள்ளன. பட்டியல்கள் என்ற மூன்றாவது தலைப்பில் நூறு எண்கள் கொண்ட தொகுப்புகளாக 6100 நூல்கள் உள்ளன. மேலும் பிற மின் நூல்கள் என்ற தேடலில் பிற நிறுவனங்களின் மின் நூல்களையும் இந்த நூலகம்.நெட்டில் காண முடிகிறது.

இந்திய மின்நூலகம் (Digital Library of India)

தமிழ் இணைய மாநாட்டுக் குழுவால் தோற்றுவிக்கப்பட்ட இந்திய மின் நூலகமாகும். இதில் பலதரப்பட்ட நூல்களை மின்பதிவேற்றம் செய்துள்ளனர். ஞானாமிர்தம், வேதாந்த நூல்கள், சைவசித்தாந்த நூல்கள், சோதிட நூல்கள், குணவாகடம், ஜெகசிற்பியின் புதினங்கள், பயண இலக்கிய நூல்கள் என 223-தலைப்புகளில் நூல்களை மின்பதிப்பாக்கி வெளியிட்டுள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள நூல்கள் அனைத்தும் தமிழ் வாசகர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரிதும் பயன்படும் வகையில் இருக்கும்.

சென்னை நூலகம்

கோ. சந்திரசேகரன் என்கிற தனி நபர் எந்த அமைப்புகளின் துணையுமின்றி 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய மின் நூலகம் சென்னை நூலகம். இம்மின் நூலகத்தில் சங்க கால இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை நூல்கள் உள்ளன. அதுவும் ஒருங்குறியில் இருக்கின்றன.
சில சங்க இலக்கிய நூல்களின் நூற்பா மட்டும் இடம்பெற்றுள்ளன. புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுமையாக இத்தளத்தில் பார்வையிடலாம்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், ஐஞ்சிறுகாப்பியங்கள் இடம் பெற்றுள்ளன. யாப்பருங்கலக்காரிகை, நால்வர் நான்மணிமாலை, திருவிசைப்பா, திருவுந்தியார் கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி போன்ற நூல்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன. இவற்றை எண்கள் அடிப்படையில் தேடிப்பெற்றுக் கொள்ளலாம்.

இவையன்றி கம்பர், திருஞானசம்பந்தர், திரிகூடராசப்பர், குமரகுருபரர், ஔவையார், பாரதியார், பாரதிதாசன், அண்ணா, மு. வரதராசன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன் ஆகியோரின் படைப்புகளும் இதில் கிடைக்கின்றன.

இம்மின் நூல்கள் அன்றி தெற்காசிய நூலகம் Digital South Asia Library என்ற பெயரில் சிக்காக்கோ பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவருகின்றது www.dsal.uchicago.edu. மேலும் மலாயாப் பல்கலைக்கழக மின்னியல் நூலகமும் வெளிவருகிறது.

உலகத் தமிழாராய்ச்சி

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்படும் ஆய்விதழ் தமிழியல் - Journal of Tamil Studies இல் 1972 முதல் வெளியான ஆய்வுக் கட்டுரைகளும், புத்தக மதிப்பரைகளும் சுமார் 9000 பக்கங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் நிலையில் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழியல் என்ற பக்கத்தில் இதனைப் பார்க்கலாம். இதுவரை ournal of Tamil Studies இல் 76 இதழ்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் கடைசி 4 இதழ்கள் நீங்கலாக, அதாவது முதல் (001-September 1972) இதழ் தொடக்கம் எழுபத்திரண்டாவது (072 – December 2007) வரையிலான இதழ்களில் இருந்து ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தையும் நீங்கள் தரவிறக்கம் செய்யலாம்.

306 முதன்மைக் கட்டுரையாளர்களால் எழுதப்பட்ட 611 கட்டுரைகளும் 55 கட்டுரைப் பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடைசி 4 இதழ்களில் உள்ளடக்க அட்டவணை மட்டும் கிடைக்கும். 77-வது இதழ் வெளியாகும் போது 73 இதழின் கடடுரைகள் தரவிறக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் ஆய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் பெரும் துணை புரியும்.

மின்னியல் நூலகப் பயன்பாடு

1. நூலகத்திலிருந்து பெற விழையும் தகவல்களை, நூலகத்திற்குச் செல்லாமலேயே வீட்டிலிருந்தே கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள இயலும்.
2. உலகில் எங்கு நூல்கள் உருவாகியிருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் நாம் அந்நூல்களை வாசிக்க இயலும்.
3. நூலகச் சாதனங்களை இரவல் பெறுவது போன்ற செயல்முறை மற்றும் சேவையை மேம்படுத்த உதவும்.
4. நூலகச் சாதனங்கள் பற்றிய தகவல்களை பயனீட்டாளர்கள் எளிதில் தெரியப்படுத்துவது.
5. பல உரையாசிரியர்களின் உரையை ஒரே நேரத்தில் ஒரே நூலுக்குப் பெற்றுக் கொள்ளுதல்.
6. நூல் இரவல் என்பது முற்றிலும் நிறுத்தம் பெறும்.