/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, August 26, 2018

ஊடகவியல் -- நூல் வெளியீடு.

|0 comments
சென்னையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் 24/08/2018 என் ஊடகவியல் நூலை கௌதம் பதிப்பக நிறுவனர் கோ. சந்திரசேகரன் வெளியிட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரலாக்க பணியில் பணிபுரியும் எனது அன்பு நண்பர் முனைவர் அகிலன் பெற்றுக்கொண்டார்.


கோ. சந்திரசேகரன் வெளியிட செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் கணினி நிரலாக்க பணியில் பணிபுரியும் எனது அன்பு நண்பர் முனைவர் அகிலன் பெற்றுக்கொண்டார். இடையில் நூலின் ஆசிரியர் முனைவர் துரை.மணிகண்டன்.




தமிழ் இணையம் 2018 - விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

|0 comments
                                                            தமிழ் இணையம் 2018

24/08/2018 வெள்ளிக்கிழமை விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சென்னையில் (பையனூர்) நடைபெற்ற “தமிழ் இணையம் 2018” என்ற தலைப்பில் உரை வழங்கினேன்.
நிகழ்வில் பல்கலைக்கழக முதன்மை கல்வி அதிகாரி தமிழ் இணையத்தின் தந்தை முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்களும் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.ஜெயபாரதி இயக்குநர் ஆர்.சண்முகவள்ளியும் கலந்துகொண்டனர். நிகழ்வில் மாணவ மாணவிகள் கலந்துகொண்டு இணையத்தமிழ்ப் பயிற்சி பெற்றனர்.
முனைவர் மு.பொன்னவைக்கோ எனக்கு மரியாதை செய்தபோது..



 தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ப.ஜெயபாரதி , முனைவர் துரை.மணிகண்டன்,  பல்கலைக்கழக முதன்மை கல்வி அதிகாரி  மு.பொன்னவைக்கோ   இயக்குநர் ஆர்.சண்முகவள்ளி



மாணவ மாணவிகளுக்கு வகுப்பு எடுத்தபோது..

Sunday, July 29, 2018

பத்மவாணி மகளிர் கல்லூரி- சேலம்

|1 comments
அமெரிக்காவில் பதிவுசெய்யப்பட்ட தமிழ் அன்லிமிடேட் நிறுவனமும் சேலம் பத்மவாணி மகளிர் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்திய ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் 27/07.2018 அன்று கல்லூரி அரங்கில் சிறப்பாக  நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் செயலாளர் முனைவர் அ.காமாட்சி உறுப்பினர்கள் முனைவர் க.உமாராஜ், முனைவர் துரை.மணிகண்டன் கலந்துகொண்டு மாணவிகளுக்குப் பயிற்சி வழங்கினார்கள். 


நிகழ்ச்சியில் பத்மவாணி கல்லூரி தாளாளர் திரு.கா.சத்தியமூர்த்தி, முனைவர் க.உமாராஜ், முனைவர் துரை.மணிகண்டன், முனைவர் அ.காமாட்சி, கல்லூரி இயக்குநர் ச.நிவிதா மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் அ.பழனியம்மாள்...

பயிற்சியில் முனைவர் துரை.மணிகண்டன் தமிழ்கணினி இணையம் அறிமுகம்  என்ற தலைப்பில் உரைவழங்கினார்.


அடுத்து முனைவர் அ.காமாட்சி தரவுதளங்கள் மற்றும் மொழியியல் நோக்கிம் கணினி என்ற பொருண்மையில் விளக்கம் நந்தார்.


முனைவர் க.உமாராஜ்  கணினி மொழியிலும் கணிப்பொறியும் என்ற தலைப்பில் உரை வழங்கினார்.







காவேரிக் கல்லூரி தமிழ்த்துறை- திருச்சிராப்பள்ளி.

|0 comments
25/07/2018 புதன்கிழமை திருச்சிராப்பள்ளி காவேரி மகளிர் கல்லூரி  “பாரதி தமிழ்மன்றத் தொடக்கவிழாவில்”  "தமிழும் இணையப் பயன்பாடும்" என்ற தலைப்பில் சிறப்புரை.
உடன் தமிழ்த்துறைத் தலைவியும் கல்லூரியின் துணை முதல்வருமான முனைவர் ராமலெடசுமி  கல்லூரி செயற்குழு உறுப்பினர், பேராசிரியர் கவிதா மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.



காவேரி கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் மதிப்புறு பேராசிரியர் ராமர்லெட்சுமி கல்லூரி செயற்குழு உறுப்பினர்....



தமிழ் இணையம் அறிமுகம், தமிழ்த்தட்டச்சுப் பயிற்சி, மற்றும் தமிழ் மென்பொருள்களின் பயன்கள் குறித்து விளக்கினேன்.

கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி பயிலரங்கம் -- சிதம்பரம்.

|0 comments

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி வரலாற்றுத்துறை சார்பாக 24/07/2018 நடைபெற்ற கல்வெட்டு எழுத்துக்கள் மற்றும் ஓலைச்சுவடி தொடர்பான ஏழுநாள் பயிற்சியின் நிறைவுநாள் நிகழ்வில் கணிப்பொறி எழுத்துக்கள் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கியது.





Thursday, July 19, 2018

ஊடகவியல் - Media Studies

|2 comments



பொருளடக்கம்
அலகு – 1
ஊடகங்கள் – அறிமுகமும் விளக்கமும் (1 – 29)
1.0. முகவுரை – 1.1 ஊடகங்கள் பற்றிய விளக்கங்கள் – 1.2. தகவலும் அவற்றின் தொடர்புகளும் – 1.3. தகவல் தொடர்பியல் ஊடகங்களின் பங்குகள் – 1.4. ஊடக வலைகள் – 1.4.1. மரபு வழிப்பட்ட ஊடகங்கள் – I. ஒற்றர்கள் மற்றும் தூதுவர்கள் – II. பறவைகளும் பிற உயிரினங்களும் – III. நாட்டுப்புறப் பாடல்களும் கதைகளும் – IV. தெருக்கூத்து – V. பண்பாட்டுக் கூறுகள் – 1.4.2. அச்சு வழி ஊடகங்கள் – 1.4.3. மின்வழி ஊடகங்கள் – 1.4.4. மின்னணு வழி ஊடகங்கள் – 1.5. ஊடகங்களின் கொள்கைகளும் கோட்பாடுகளும் – 1.6. ஊடகங்களினால் உருவாகும் பயன்கள் – 1.6.1. அறிவித்தல் (Information) - 1.6.2. அறிவுறுத்தல் (Instruction) – 1.6.3. மகிழ்வித்தல் (Entertainment) – 1.6.4. சமூகச் சார்புடையவராக்குதல் (Involvement) – 1.6.5. வணிக உறவுகள் (Business relationship) – 1.7. ஊடக நுகர்வோர் கடமைகள் – 1.8. முடிவுரை.

அலகு – 2
அச்சுவழி ஊடகங்கள் இதழ்கள் (30 - 66)
2.0. முகவுரை – 2.1. தமிழகத்தில் அச்சு ஊடகங்கள் – 2.2. ஊடகங்கள் மிகச்சிறப்பாகக் கருதப்படும் இதழ்கள் – 2.2.1. 1947 முதல் 2000 வரை இதழ்கள் – 2.3. தற்கால தமிழ் இதழ்களின் வகைகள் – 2.4. கால பாகுபாட்டில் இதழ்கள் - I. நாளிதழ்கள் – II. வாரம் இருமுறை இதழ்கள் – III. வார இதழ்கள் – IV. மாதம் இருமுறை இதழ்கள் – V. மாத இதழ் – VI. காலாண்டு இதழ் (மூன்று மாதத்திற்கு ஒருமுறை) - VII. ஆறு மாத இதழ் – VIII. ஆண்டு இதழ் – 2.5. கருத்தின் அடிப்படையில் இதழ்கள் - I. அரசியல் (துப்பறியும் பணியுடன்) – II. ஆன்மீகம் – III. இலக்கியம் – IV. சோதிடம் – V. மகளிர் – VI. கதைகள், நெடுங்கதைகள், குறுங்கதைகள் - VII. அறிவியல் – VIII. பொது அறிவு – 2.6. இதழ்களின் பணிகள் – 2.6.1. அறிவித்தல் பணி – 2.6.2. அறிவுறுத்தல் – 2.6.3. மகிழ்வித்தல் – 2.6.4. வணிகச் செய்திகள் – 2.7. பொதுப்பணிகள் – 2.8. தமிழ் இதழ்களின் அமைப்பு முறை – 2.9. இதழ்களின் தலையங்கம் – 2.10. இதழ்களின் கட்டுரைகள் – 2.11. இதழ்களில் இலக்கியம் – 2.12. இதழ்களில் விமர்சனங்கள் – 2.13. இதழ்களில் கருத்துப்படங்கள் – 2.14 இதழ்களில் விளம்பரங்கள் – 2.15. இதழ்களின் நடைகள் – 2.16. இதழாளருக்குரிய தகுதிகள் – 2.16.1. நிறுவனர்  மற்றும் நிர்வாகக்குழு – 2.16.2. முதன்மை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் குழு – 2.16.3. செய்தி சேகரிப்போரும் உதவியாளர்களும் – 2.16.4. அச்சுத்துறை உழைப்பாளர்கள் – 2.17. இதழ் நுகர்வோர் கடமைகள் – 2.18. முடிவுரை.

அலகு – 3
வானொலியும் தொலைக்காட்சியும் (67 - 114)
3.0. முகவுரை – 3.1. வானொலி மற்றும் தொலைக்காட்சியின் சிறப்புகள் – 3.2. வானொலியின் தோற்றமும் வளர்ச்சியும் – 3.3. மார்க்கோனியின் முதல் ரேடியோ – 3.4. இந்தியாவில் வானொலி – 3.5. பண்பலை வானொலி – 3.6. மாதமிரு இதழ் – 3.7. உலக வானொலி நாள் – 3.8. தேசிய ஒலிபரப்புகள் – 3.9. மாநில ஒலிபரப்புகள் – 3.10. பேச்சுமொழி நிகழ்ச்சி – 3.11. இசை நிகழ்ச்சிகள் – 3.12. எஃப்.எம்.கோல்டு மற்றும் எஃப்.எம்.ரெயின்போ – 3.13. விவத்பாரதி – 3.14. பிரச்சார் பாரதி – 3.15. சில விதிமுறைகளும், மசோதாக்களும் – 3.16. தமிழக வானொலி நிலையங்கள் – 3.17. பல்வேறு நிகழ்ச்சிகள் – 3.17.1. செய்திகள் – 3.17.2. செய்தி என்றால் என்ன? – 3.17.3. கல்வி – 3.17.4. விவசாய நிகழ்ச்சிகள் – 3.17.5. இளைய பாரதம் – 3.17.6. சிறுவர் நிகழ்ச்சிகள் – 3.17.7. நலவாழ்வு – 3.17.8 மெல்லிசை – 3.17.9. கருநாடக இசை – 3.17.10. இலக்கிய ஒலிபரப்புகள் – 3.17.11. வானொலியில் தனிநபர்கள் கலந்துரையாடல்கள் – 3.18. நேர்காணலுக்கான திறன் – 3.18.1. செய்ய வேண்டியவை – 3.18.2. செய்யக் கூடாதவை – 3.19. நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குதல் – 3.20. வானொலி ஒலிபரப்பில் – சில அடிப்படைகள் – 3.20.1. நோக்கம் – 3.20.2. ஒலிவாங்கி குறித்த கவனமின்மையால் நேரும் சில தவறுகள் – 3.20.3. அறிவிப்பாளரின் கடமையும் – பொறுப்புகளும் – 3.21. நேரடித் தொலைபேசி நிகழ்ச்சிகள் – 3.21.1. நேயர் விருப்பம் – 3.21.2. வல்லுநர் பங்கேற்பு – 3.21.3. உரையாடல் நிகழ்ச்சிகள் – 3.21.4. நேரடித் தொலைபேசி நிகழ்ச்சியை நடத்தும்போது, நாம் கவனிக்க வேண்டியவை – 3.21.5. நேரடித் தொலைபேசி நிகழ்ச்சிகளில் ஏற்படக்கூடிய சிக்கல்கள் – 3.21.6. அப்படியே படிக்காதீங்க – 3.21.7. பேச்சுத்திறனின் முக்கியத்துவம் – 3.22. தகவல் தொடர்புத் திறன் – 3.23. உங்கள் குரல் – அது வானொலியின் குரல்! – 3.24. ஒலிபரப்பு மொழியில் தவிர்க்க வேண்டியவையும் கவனிக்க வேண்டியவையும் – குரல் கறைபாடுகளைத் தவிர்க்க, வேண்டுவன, வேண்டாதன உண்டு. I. வேண்டுவன – II. வேண்டாதன – 3.25. தொலைக்காட்சி – 3.25.1. தொலைக்காட்சி தோற்றமும் வளர்ச்சியும் – 3.25.2. அரசின் நோக்கம் – 3.26. அறிவுசார், பல்சுவைசார் நிகழ்ச்சி – 3.26.1. வரிவடிவப்படியான மனமகிழ்வு நிகழ்ச்சிகள் – 3.26.2. வரிவடிவமிடப்படாத மனமகிழ்வு நிகழ்ச்சிகள் – 3.26.3. தகவல் நிகழ்ச்சிகள் – 3.27. முடிவுரை.

அலகு – 4
கணிப்பொறி – இணையம் (115 – 167)
4.0. கணிப்பொறியின் வரலாறு (History of Computer) – 4.2. கணிப்பொறியின் வளர்ச்சி (Growth of Computer) – 4.3. கணிப்பொறியின் குணங்கள் (Characteristics of Computer) – 4.4. கணிப்பொறியின் தலைமுறைகள் (Generation of Computer) I. முதலாம் தலைமுறை (1940 – 1956) – II. இரண்டாம் தலைமுறை (1956 – 63) – III. மூன்றாம் தலைமுறை (1964 – 71) – IV. நான்காம் தலைமுறை (1971 லிருந்து) – V. ஐந்தாம் தலைமுறைக் கணிப்பொறிகள் (இன்று வரை உள்ளது) – 4.5. மேகக் கணிமை – 4.6. பல்துறைப் பயன்பாடுகள் – 4.7. இணைய அறிமுகம் – 4.8. வலைப்பின்னல் – 4.9. நிறுவன உள் இணையம் – 4.10. இணையத்தின் வரலாறு – 4.11. அமெரிக்காவும் இணையமும் – 4.12. இணைய இதழ்கள் – 4.13. இணையத்தில் இதழ்கள் தோன்றக் காரணம் – 4.14. இணையத்தில் தமிழ் மின் இதழ்கள் – 4.15. மின் இதழ்களின் சிறப்புகள் – 4.16. இணையத்தில் அச்சு இதழ்கள் – 4.17. தமிழ் மின்னியல் நூலகம் (Digital Library) – 4.17.1. மின்னியல் நூலகம் – 4.18. உலக மின்னியல் நூலகம் – 4.18.1. ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் (http://www.lib.unicago.edu/e/su/southasia/rmrl.html) - 4.18.2. தமிழ் இணையக் கல்விக்கழகம் (http://www.tamilvu.org/library/libindex.htm) - 4.18.3. சிறப்புக் கூறுகள் – 4.18.4. தேவாரம் (www.thevaaram.org) - 4.18.5. நூலகம். நெட் (http://www.noolaham.org) - 4.18.6. சென்னை நூலகம் (http://www.chennailibrary.com/) - 4.18.7. மின்னியல் நூலகப் பயன்பாடு – 4.19. தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள் – வலைப்பதிவு – (Tamil Blogs) – 4.19.1. வலைப்பூ – வலைப்பதிவு – 4.19.2. தமிழ் வலைப்பூ – 4.19.3. வலைப்பூ சேவை – 4.19.4 முதல் தமிழ் வலைப்பூ – 4.20. தமிழ் வலைப்பூக்கள் வளர்ச்சி – 4.20.1. தமிழ் வலைப்பூக்களின் வகைப்பாடுகளும் வளர்ச்சிகளும் – 4.20.2. அ.ராமசாமி – 4.20.3. தொழில் நுட்ப வலைப்பூ – 4.20.4. பெண்கள் சார்ந்த வலைப்பூக்கள் – 4.22. மின் அஞ்சல் (ELECTRONIC MAIL) – 4.23. மின்னஞ்சலின் பயன்பாடுகள் (E-mail Uses) – 4.24. முதல் மின்னஞ்சல் முகவரி (First E-Mail) – 4.25. மின்னஞ்சல் உருவாக்கம் (Creation of E-Mail) – 4.26. கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் – 4.27. மின்வழிக் கற்றலின் பயன்பாடுகள் – 4.28. தொழில் நுட்ப வழிகள் எவை? – 4.28.1. PPT வழி கற்றல் – 4.28.2. இணைய தளங்கள் மூலம் கற்றல் – 4.29. தமிழ் இணையக் கல்விக்கழகம் - (http:/www.tamilvu.org) 4.29.1. தெற்காசிய மொழிவள மையம் (www.southasia.sas.upenn.edu/tamil/index.html) – 4.29.2. தமிழ் கழகம் – 4.29.3. தமிழகம்.வலை (www.thamizhagam.net/about/aboutus.html) – 4.30. அலைபேசிகள் – குறுஞ்செயலிகள் மூலம் கற்றல் – 4.30.1. வலைப்பதிவுகளின் மூலம் கற்றல் – 4.32. குரல் பதிவுகள் (Podcast) I. ஒளிக்காட்சிகள் (Vodcast) – 4.33. சமூக ஊடகங்களின் வழிக் கற்றல் – 4.34. கற்றல் கற்பித்தலில் சிக்கல்களும் தீர்வுகளும் – 4.35. நிறைவாக.

அலகு – 5
ஊடகப் பணியாளர்களுக்கான பயிற்சிகள் (168 - 205)
5.0. முகவுரை – மூவகைப் பணிகள் – 5.1. ஊடகப் பணியாளர்களுக்குத் தேவைப்படும் பொதுத் தகுதிகள் – 5.2. அடிப்படைத் தகுதிகள் – 5.2.1. அ) பண்புசார் தகுதிகள் – 5.2.2. அறிவுசார் தகுதிகள் – 5.2.3. சமூகம் சார் தகுதிகள் – 5.3. படிப்பும் பயிற்சியும் – 5.4. மொழிப்பயிற்சி (தமிழுக்குரியது) – 5.5. அச்சுப்படி சரிபார்க்கும் பயிற்சிகள் – 5.6. தலையங்கங்கள் தயாரிக்கும் பயிற்சி – 5.7. பயிற்சி வழங்கும் அல்லது எழுதும் முறையின் பயிற்சி – 5.8. செய்திகள் தயாரிக்கும் பயிற்சி – 5.9. தொலைக்காட்சியில் செய்தி வாசித்தல் – 5.10. பொதுவான விதிகள் – 5.11. செய்ய வேண்டியவை – 5.12. செய்யக்கூடாதவை – 5.13. கருத்துக்களையும் நிகழ்ச்சிகளையும் தொகுத்துக் கூறும் பயிற்சி – 5.14. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு – 5.15. நிகழ்ச்சி வர்ணனை – 5.16. நேர்முகவர்ணனைக்கான பயிற்சிகள் – 5.17. ஒளிபரப்பிற்காக நேர்காணுதல் – 5.17.1. நேர்காணலுக்கு சில யோசனைகள் – 5.17.2. உங்களுடைய திட்டம் என்ன? உங்களுடைய மையப்படுத்தல் என்ன? – 5.17.3. கேள்விகளை தெளிவாக கேளுங்கள் – 5.17.6. நேர்காணல் – 5.18. நிகழ்வுகளை செய்தியாக்குதல் – 5.19. இயற்கை ஒலிகளைப் பயன்படுத்தல் – 5.20. நேர்க்காணல் பயிற்சி மற்றும் வகைகள் – 5.20.1. வீதியில் நிற்கும் மனிதன் (Man on the street) – 5.20.2. சந்தர்ப்பச் சூழலில் பெறப்பட்ட நேர்காணல் – 5.20.3. செய்தி நேர்காணல் (Casual interview) – 5.20.4. ஆர்வமூட்டத்தக்க ஆளுமையும் குண இயல்பும் கொண்டவருடனான நேர்காணல் (Personality Interview) – 5.20.5. தொலைபேசி நேர்காணல் (Telephone Interview) – 5.20.6. தபால் மூலமான ஈ-மெயில் மூலமான நேர்காணல் – 5.21. வினாக்கள் – குறிப்புக்களின் வகைகள் – 5.22. நேர்காணல் நுட்பங்கள் – 5.23. கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான பயிற்சி – 5.24. இலக்கிய நிகழ்ச்சி செய்திகளுக்குரிய பயிற்சி – 5.25. இன்றியமையாத நிகழ்ச்சிகளைத் தயாரிக்கும் பயிற்சிகள் – 5.26. தொலைக்காட்சியின் செல்வாக்குகள் – 5.27. முடிவாக.


Thursday, March 15, 2018

GOOGLE FOR தமிழ்- நிகழ்வு

|0 comments

13-03-2018 செவ்வாய்க் கிழமை சென்னையில் ஹயாட்டா நடசத்திர அறையில் நடைபெற்ற கூகுள் தமிழ் விளமபரங்கள் GOOGLE TAMIL ADS  நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 200 மேற்பட்ட தமிழ்க் கணினி ஆர்வளர்கள் கலந்துகொண்டு கூகுள் தமிழ் பற்றிய செய்தியைத் தெரிந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சி காலை10.30 இனிதே தொடங்கியது. முதலில் உரை வழங்கிய கூகுள் குழுமத்தில் பணிபுரியும் அன்பர் கூகுள் நிறுவனத்தின் உலகளாவிய செயல்பாட்டை எடுத்து விளக்கிப் பேசினார். NMT பணியில் பதினோரு மொழிகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் தமிழொழியும் ஒன்று என்றார். அடுத்து கூகுள் வரைபடத்தில் இந்திய மொழிகளில் ஏழு செயல்பாட்டில் உள்ளன அவற்றில் ஒன்று தமிழ் என்றார். அடுத்து கூகுள் விளப்பரம் தொடர்பாக இந்தியாவில் மூன்று மொழிகள் இடம்பெற்றுள்ளன அவற்றில் ஒன்று தமிழ்மொழியென்று விளக்கம் தந்தார். எனவே தாங்கள் தமிழ்மொழியில் இருக்கும் வலைப்பக்கங்கள் மற்றும் வலைப்பதிவுகளில் இனி தமிழில் விளபரங்களைப் பெற்று வருவாய் ஈட்டலாம் என்று குறிப்பிட்டார்.
 கூகுள் தமிழ் நிகழ்வில் கலந்துரையாடலில் கலந்துகொண்ட கூகுள் ஊழியர்கள்.

அடுத்து KIILOW என்றவர் உரை வழங்கினார். கில்லாவ் தனது உரையில் உலக மொழிகளில் 800 மேல் உள்ளன. அவற்றில் ஒருசில நூறு மொழிகள் வளர்ந்த வளர்கின்ற மொழிகளாக உள்ளன. அதில் தமிழ்மொழியின் வளர்ச்சி மிகவும் அதிகாமாக உள்ளன. எனவே இனி வரும் காலங்களில் திறன்பேசியின் பயன்பாடுகள் அதிகரிக்க உள்ளன. எனவே இனி அனைத்துப் பயன்பாட்டாளர்களும் திறன்பேசியைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதற்குத் தகுந்தார்போல இனி வருங்காலங்களில் சிறுகதைகள் அனைத்தும் அலைபேசியில் உருவாக்கப்பட்டு வெளியிடப்படும். அதற்கு AMP என்ற வழிமுறையைப் பின்பற்றி நாமும் முன்னேற வேண்டும் என்றார். மேலும் அதிகமான குறுஞ்செயலிகளை (application) உருவாக்கி வெளியிடவேண்டும் என்றார். இந்தியில் இதுபோன்று செயல்பட்ட கோபால் மிஸ்ரா 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த வலைப்பதிவு நபராகத் தேர்ந்தெடுக்கப்பாட்டார் என்ற தகவலையும் தெரிவித்தார்.


google tamil india head Ajay Luther

கூகுள் தமிழ் விளமபரப் பிரிவு இந்தியத் தலைவர் அஜெய் லுத்தா அவர்கள் சிறப்பானத் தமிழில் கூகுள் விளம்பரத்தின் நன்மைகளை எடுத்து விளக்கினார். இவர் தமிழ் வலைப்பதிவு மற்றும் தமிழ் வலைப்பக்கங்களில் எவ்வாறு கூகுள் வழங்கும் விளம்பரங்களை நம் இணையப்பக்கத்தில் இணைப்பது என்று விளக்கம் தந்தார். அஜெய் கூறும்போது கூகுளின் விளம்பரம் இரண்டு வகையாகச் செயல்படுகிறது. அவற்றில் 1. Native ads 2. Auto ads என்பவையாகும் அதில் in- fued native, in artical native, metched content மிகமுக்கியமானவை ஆகும் என்று உரைத்தார். அடுத்து மிக விரைவில் அறிமுகம் செய்த  auto ads யை உடனடியாக சென்று தங்கள் வலைப்பக்கத்தில் இணைத்துவிடுங்கள் என்று கூறினார். 

அடுத்து சிங்கப்பூரிலிருந்து வருகை தந்த கூகுள் நிறுவன ஊழியர் வீனாராய் என்பர்  AMP மூலம் திறன்பேசியில் ஸ்க்ரோலிங் முறை தவிற்கப்பட்டு ஐக்கான் முறையில் செயல்படும் புதிய முறையை எடுத்து விளக்கினார்.

அடுத்து சுருதி அட்லகா என்ற கூகுள் நிறுவன பெண் ஊழியரும் கூகுள் விளம்பரத்தினால் நாம் அடையும் நன்மைகளை எடுத்துக் கூறினார்.



சையித் மாலிக்

சையத் மாலிக் என்பவர் கூகுள் தேடுபொறியில் தேடும்போது முதலில் வந்து காட்டும் பக்கங்கள் எந்த அடிப்பதையில் தோன்றுகின்றன என்பதை விளக்கினார். முதலில் நாம் உருவாக்கும் இணையப்பக்கத்தின் தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்க வேண்டும். சின்ன தலைப்பாக இருந்தால் நலம். எ,கா தமிழில் ஐந்து எழுத்திலிருந்து எட்டு எழுத்திற்குள் இருக்க வேண்டும் என்றார்.  அடுத்து நாம் எழுதும் கட்டுரை எத்தனை வார்த்தைகளைக் கொண்டும் படைக்கலாம். அதைபோல keyword  எத்தனை வேண்டுமானாலும் இருக்கலாம் என்றார். இதுபோன்று 200 மாடல்கள் உள்ளன என்றார்.
                              ரிச்சா அவர்கள்                            
அடுத்து கூகுளில் பணியாற்றும் ரிச்சா என்ற பெண் கூகுள் பாலிசை பற்றி எடுத்துக்கூறினார். கூகுள் நிறுவனத்திற்கென்று ஒருசில சட்ட வரமுறைகள் உள்ளன. அதன்படித்தான் விளபரங்கள் வழங்கப்பட்டுத் தங்கள் இணையப் பக்கங்களுக்கு வழங்கப்படுகின்றன. இதில் விதிமீறல் இருந்தால் உடனடியாக கூகுள் விளம்பரங்கள் தளத்திலிருந்து நீக்கப்பட்டுவிடும் என்றார். 

1. கூகுளின் இந்த நிகழ்வு தமிழ் இணையதளப் பயன்பாட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனலாம்.
2. இத்தனை ஆண்டுகள் நாம் எந்தவித பண வருமானம் இல்லாமல் இணையத்தில் தமிழில் எழுதிகொண்டிருந்தோம். 2018 லிருந்து நாம் நம்மொழியின் வாயிலாக பணம் ஈட்டத் தொடங்குவோம்.

3. எது எப்படியோ கூகுளில் தமிழ் விளம்பரங்களைக் கொண்டுவந்த இலங்கையைச் சேர்ந்த திரு விக்டர் அவர்களுக்கும் கூகுள் இயக்குநர் திரு சுந்தர்பிச்சை அவர்களுக்கு இந்த நேரத்தில் நாம் நன்றி சொல்லவேண்டும்.

4. இந்த கூகுள் தமிழ் விளமபரம் நமக்கு காலதாமதமாகக் கிடைத்தாலும் இனியும் நாம் ஏமாறமல் விழிப்புடன் இதில் நாம் இறங்கி பணிபுரியும் காலம் வந்துவிட்டது. அனைவரும் விழிப்புடன் இருந்து கூகுள் தரும் விளம்பரத்தினைப் பெற்று நாமும் வாழ்வோம் நம் தமிழ்மொழியும் வாழ்வேண்டும் கூகுள் நிறுவனமும் வாழவேண்டும்.

 நிகழ்ச்சியில் கூகுள் தமிழ் விளம்பரப்பிரிவு தலைவர்  Ajay Luther & Dr.Durai.Manikandan


நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மதிப்பிற்குரிய மணி மணிவண்ணன் மற்றும் திரு. இளங்கோவன்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராளர்கள்.






Thursday, March 8, 2018

தமிழ்க் கணனி இணையப்பயன்பாடுகள்

|0 comments
 28/02/2018 திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீ்பர் கல்லூரி கணினி அறிவியல் துறை மற்றும் தமிழ்த்துறை இணைந்த நடத்திய ஒரு நாள் தமிழ் இணையப்பயன்பாடுகள் பயிலரங்கம் நிகழ்வுகளின் ஒளிப்படங்கள்.


 28/02/2018 திருச்சிராப்பள்ளி பிஷப் ஹீ்பர் கல்லூரி கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் சத்தியசீலன் அவர்களுக்கு நான் எழுதிய தமிழ்க் கணனி இணையப்பயன்பாடுகள் நூலை வழங்கினேன் அருகில் தலைவர் விஜயராணி நண்பர் செல்வமுரளி உள்ளனர்






கணினித்தமிழ் ஆய்வில் அடுத்தக்கட்ட முன்னேற்றம் குறித்து விவாதித்தபோது-

மாணவிகளுக்கு விளக்கம் தரும்நிகழ்வு.

Sunday, March 4, 2018

தமிழ்மொழி இனவளர்ச்சிக்கு சமூக ஊடகங்களின் பங்களிப்பு

|0 comments


06/03/2018 செவ்வாய் அன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்தும் "தமிழ்மொழி இன வளர்ச்சிக்கு ஊடகங்களின் பங்களிப்பு" என்ற கருத்தரங்கில் தமிழ்மொழி இனவளர்ச்சிக்கு சமூக ஊடகங்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கும் காட்சி

 அகில இந்திய வானொலியின் உதவி இயக்குநர் திருமதி ஜோதிமணி இளங்கோ அவர்கள் வானொலியின் பயன்பாடுகள் என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கியபோது





 நிகழ்ச்சியில் கவிஞர் ஆண்டாள் பிரிதர்ஷினியுடன்
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பாண்டியுடன்



ஆண்டாள் பிரியதர்ஷினி உரை.

Friday, February 23, 2018

வெள்ளச்சாமி நாடார் கல்லூரி, மதுரை

|0 comments


வெள்ளச்சாமி நாடார்  கல்லூரியில்  (மதுரை) ஒருநாள்   “தமிழ்க் கணினி” பன்னாட்டுப் பயிலரங்கம்  27-02-2018  செவ்வாய்க்கிழமை காலையில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி வழங்க உள்ளனர்.









Tuesday, February 13, 2018

கணினித் தமிழ் பயன்பாடுகள் - பயிலரங்கம்-சென்னை

|0 comments



வணக்கம்.
சென்னை, மேடவாக்கத்தில் செயல்படும் எங்கள் நியூ பிரின்ஸ் ஸ்ரீ பவானி கலை அறிவியல் கல்லூரி கணித்தமிழ்ப் பேரவையின் சார்பில் 19-2-2018, திங்கள் கிழமை அன்று கணினித் தமிழ்ப் பயன்பாடுகள் - பயிலரங்கு (Workshop on Applications in Tamil Computing) நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கணிப்பொறித் துறை மாணவர்களுக்கும், தமிழ் மொழித் தொழில்நுட்பத்தில் ஆர்வமுள்ள பிற துறை மாணவர்களுக்கும், பேராசிரியப் பெருமக்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் மிகுந்த பயனளிக்கத்தக்க வகையில் இப்பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பயிலரங்குக் கட்டணம் மற்றும் விவரங்கள் அடங்கிய அறிவிப்பு மடல் - அழைப்புமடல் மற்றும் பதிவுப் படிவம் (Registration Form) இணைக்கப்பட்டுள்ளது. பதிவுப் படிவத்தை நகல் எடுத்தோ அல்லது தங்கள் கல்லூரியின் மடல் தாளில் (Letter Head) பங்கேற்கும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களின் பெயர்களைப் பட்டியலிட்டோ அனுப்பி வைக்கலாம்.
முதலில் பதிவு செய்பவருக்கே வாய்ப்பு (Fisrt Come First Serve) என்கிற அடிப்படையில் மாணவர்களின் பதிவு ஏற்றுக்கொள்ளப்படும். மாணவர் பதிவு ஏற்றுக்கொள்ளப் படுவதில் நிருவாகத்தின் முடிவே இறுதியானது.
தங்கள் கல்லூரி மாணவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்றுப் பயனடைந்திட அனுப்பிவைத்து உதவுமாறு வேண்டிக்கொள்கிறோம்.

பங்கேற்பாளர் அனைவருக்கும் WorkShop Kit, தேநீர், பகல் உணவு, மற்றும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும்.

Sunday, October 29, 2017

உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் - கனடா

|4 comments
உலகத் தகவல் தொழில்நுட்ப மன்றம் - கனடா சார்பில் கனடாவின் டோரண்டோ நகரில் ‘இணையவழி கற்றல் மற்றும் கற்பித்தலின் இன்றைய நிலை’ எனும் தலைப்பிலான ’உலகத் தமிழ் இணைய மாநாடு 2017’ இன்று (27-10-2017 - கனடா / 28-10-2017 - இந்தியா) தொடங்கி 29-10-2017 வரை மூன்று நாட்கள் நடைபெறவிருக்கிறது.


இதில் 50க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், இணையவழி கற்றல் கற்பித்தலில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து கட்டுரை வழங்கவிருந்தனர். அவர்களுக்குக் கனடா நாடு விசா தராமல் காலம் தாழ்த்தியதால், அங்கு செல்லவிருந்த தமிழ் அறிஞர்கள் / ஆர்வலர்கள் கனடா செல்ல இயலாமல் போனது. எனவே, அதே நாளில் அதே வேளையில் இந்தியாவிலும் இந்தக் கருத்தரங்கத்தினை நடத்துவது எனத் தீர்மானித்த இம்மாநாட்டுக் குழுவினர், திருச்சி பிஷப் ஹீப்பர் கல்லூரியில் இன்று (27-10-2017 - கனடா / 28-10-2017 - இந்தியா - அதிகாலை 4 மணி) இணையவழிக் காணொலிக் காட்சிகள் வழியாக இரண்டு கருத்தரங்கங்களும் இணைக்கப்பட்டு நடத்தப் பெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக உத்தமத்தின் துணைத் தலைவர் முனைவர் துரை.மணிகண்டன்  (Durai.Manikandan) நிகழ்வை வரவேற்றுப் பேசினார்.

இணையவழிக் கருத்தரங்கில் மாநாட்டுக் கருத்தரங்க மலர் வெளியிடப்பட்டது. அதில் பேரா.க.உமாராஜ், முனைவர் துரை.மணிகண்டன், பேரா.பத்மநாபபிள்ளை, கருத்தரங்க ஆய்வுக்குழுத் தலைவர் பேரா.க.காமாட்சி, பேராசிரியர் விஜயராணி, பேரா.சி.சிதம்பரம், பேரா.பிரகதி.
வாழ்த்துரை வழங்கிய பேரா.விஜயராணி
நன்றியுரை வழங்கிய பேரா.சிதம்பரம்.
இணையவழ்க் கருத்தரங்கில் கலந்துகொண்ட பேராளர்கள் மற்றும் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர்கள்.
கருத்தரங்கில் மதுரை காமராசர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ராஜேந்திரன் எழுதிய ஊடகங்களில் தமிழ் என்ற நூலை முத்துக்கமலம் இணைய இதழ ஆசிரியர் தேனி சுப்பிரமணி பெற்றுக்கொண்டபோது...
மாநாட்டில் வழங்கப்பட்ட பேக் மற்றும் நினைவுப்பரிசு.(முனைவர் துரை.மணிகண்டன், பேரா.காமாட்சி, தகவல் தொடர்பு வினோத்,)
மாநாட்டில் இணையத்தோழி மின்னிதழின் ஆசிரியருக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் தேனி சுப்பிரமணி.