/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, September 17, 2011

திரு.பாலகுருசாமியும் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியும்(இனாம்குளத்தூர்)

|4 comments
பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியில்(இனாம்குளத்தூர்) அண்ணாப் பல்கலைக்கழக மேணான் துணைவேந்தரும்,தமிழகத் திட்டக்குழு உறுப்பினருமான திரு.பாலகுருசாமி அவர்கள் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டார்.அவரை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருமதி கே.மீனா அவர்கள் வரவேற்றார். திரு பலகுருசாமி மாணவர்களிடம் உரைநிகழ்த்தும்போது நல்ல முறையில் மாணவர்களாகிய நீங்கள் படிக்கவேண்டும். இன்றைய அறிவியல் காலக்கட்டத்தோடு இணைந்து பாடங்களைப் பயிலவேண்டும் என்றார். மேலும் இக்கல்லூரியில் மூன்றாண்டு பட்டப்படிப்பின் இறுதியில் முதல் இடம் பிடித்த மாணவ மாண்வியருக்கு 25000 பணமுடிப்பு எனது சொந்த செலவிலிருந்து வழங்கப்ப்டும் என்று மாணவர்களிடம் கூறினார். இது மாணவ மாணவிகளிடம் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளன
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்றல்.அருகில் பாரதிதாசன் பல்கைக்கழகத் தொலைதூர கல்வி மையத்தின் இயக்குநர் முனைவர் அறுமுகம். . அதனைத் தொடர்ந்து பாரதிதாசன் பலகலைக்கழக துணைவேந்தர் அவர்கள் உரை நிகழ்த்தினார். மாணவ மாணவியர்கள் கணிப்பொறி அறிவை நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்று அனைத்துத் துறைகளிலும் கணினிப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன்.எனவே உங்கள் படிப்பு எதிர்கால தேவையைப் பூர்த்தி செய்யும் வண்ணம் அமைய வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரைக் கூறினார்.
சிறப்பு விருந்தினர் தமிழகத் திட்டக்குழு உறுப்பினரும் துணைவேந்தருமான திரு.குருசாமி அவர்கள் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடியது.
துணைவேந்தர் கே.மீனா அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி.

Saturday, September 3, 2011

இணையமும் தமிழும் நூல் பார்வை

|0 comments

பேரன்புடையீர் வணக்கம்.
தங்களது இணையமும் தமிழும் என்ற தலைப்பிலான நூலை வாசித்தேன்.
காலத்திற்கு ஏற்ற நூலைச் செதுக்கித்தந்துள்ள தங்களுக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.
இயல்களும் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.நிறைவுப்பகுதியில் உள்ள இணையத்தமிழ் இதழ்களின் முகவரிகள் பயன்பல தரும்.புரவலர் கணிப்பொறி (server computer)என்ற சொற்றொடர் புதுமையானது.குலோத்துங்கன் கவிதை இயலினூடே மின்னுகிறது. அதிக இணையப்பக்கங்களை ஆங்கிலத்திற்கு அடுத்து தமிழ் பெற்றுள்ள செய்தியும், இணையக்கல்வி முயல்வுகள் பற்றிய(பக்.45-47)செய்திகளும் படிப்பாருக்கும் உதவும்.இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல, வணக்கம்.

அன்புடன்
முனைவர் அ.அறிவுநம்மி
முதன்மையர்
சுப்பிரமணிய பாரதியார் பல்கலைக்கழகம்
புதுச்சேரி-605014


அன்பர் சீராசை சேதுபாலா அவர்கள் அவரது வலைப்பூவில் இணையமும் தமிழும் நூல் பற்றி எழுதியுள்ள மதிப்புரையும் கீழே உள்ளன.

முனைவர் துரை மணீகண்டன் எழுதிய இணையமும் தமிழும் புத்தகம், சென்னை-17-ல் 17/3சி மேட்லி சாலயிலிருந்து வெளியிடப் பட்டுள்ளதைப் பார்த்து வியப்படைந்தேன்.

லேனா தமிழ்வாணன் கண்ணில் படாமல் போன தலைப்பு என வியந்தேன். திருச்சிக்காரரின் துணிச்சல் பாரட்டத்தக்கது.

இணயம் ஓர் அறிமுகம், இணயத்தின் வரலாறு, இணய்த்தில் தமிழ், இணயம் தொடர்பான மாநாடுகள்-கருத்தரங்குகள், இணயத்தில் தமிழில் பயன்பாடு, இணயத்தில் தமிழ்க்கல்வி, இணையத்தில் தமிழ் மின் இதழ்கள், இணயத்தில் தமிழ் மின் நூலகம், இணயம் வழி கணினி ஆய்வுகள் என்று ஆரம்பப் பள்ளி மாணவன் கூடப் புரிந்துகொள்ளுமாறு விளக்கமாக எழுதியுள்ளார்.

இணய அகராதி குறித்த விள்க்கம் சற்றுச் சிந்திக்கத் தக்கது. விக்கி பீடியாவை கட்டற்ற களஞ்சியம் என்று மொழியாக்கம் செய்துதான் தீர வேண்டுமா? லாரி, கார், மோட்டார், ரெயில், போன்று மக்கள் மத்தியில் பழ்க்கமாகிவிட்ட சொற்களுக்குப் புதிய தமிழ்ச் சொற்களைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்ல்லை என்ற டாக்டர்.மு.வரதராசனார் காட்டிய வ்ழியைப் பின்பற்றினால் நன்றாக இருக்குமே?

சுமார் 150 இணையத் தமிழ் இத்ழ்களின் முகவரியைத் தேடித்தந்திருப்பது நல்ல சாதனை!

18 தமிழ் கணிமை நிறுவனங்களச் சுட்டியுள்ளார். இலவசங்களாகத் தருவதையும், விலைக்கு விற்பதையும் பிரித்துக் காட்டியிருக்கலாம்.

பல்கலைத்த் தளங்கள், தமிழ் இணைய நூலகங்கள், தமிழ் கணிமச் சுவடிகள், ஆய்வுக் கட்டுரை, சிறு விளக்கங்கள் கொடுத்திருந்தால் என் போன்று துவக்க நிலையில் இருப்போருக்கு பேருதவியாய் அமைந்திருக்கும்.

தமிழ் இணைய வானொலி நிறைய விடுபட்டுள்ளன். அதற்கென்றெ தனி இதழ் வருகின்றது. ஆசிரியரும் அமிஞ்சிக்கரையிதான் உள்ளார். இந்த் வலைப்பூவில் தேடினாலே கிடைக்கும் குறைவாகக் கூறவில்லை. அடுத்த நூலில் சேர்த்துக் கொள்ளலாம்.

worldtamilnews.com உலகின் முதல் தமிழ் இணைய வானொலி முகவரி சென்னை எழும்பூரிலிருந்து 8 ஆம் வ்குப்பு மட்டுமே படித்த vkt பாலன் அவர்களால் நடத்தப் படுகின்றது.9841078674

தமிழ் இணய்தளத் தேடும் எந்திர முகவரி எனக்குப் புதிய தகவல்.


நல்ல புதிய முயற்சிக்கு முனைவர். துரை மணிகண்டனுக்கு வாழ்துக்க்கள்!.

அன்புடன்
சீராசை சேதுபாலா
http://rssairam.blogspot.com/

Thursday, September 1, 2011

தமிழ் மின்னியல் நூலகம் (Digital Library)

|0 comments


பல பொருள் விரிந்த கருத்துக்களை ஒருங்கே சுருக்கிக் கூற எழுந்ததுதான் வெண்பாவும், ஆசிரியப்பாவும் ஆகும். அதைப் போன்று தமிழ் நூல்கள் அனைத்தையும் ஒருங்கே தொகுத்துத் தருவதுதான் தமிழ் மின்னியல் நூலகம் மற்றும் இணைய நூலகம் ஆகும். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற பவனந்தி முனிவரின் கருத்திற்கேற்ப ஒரு காலத்தில் கருத்துக்களைக் கருவாக சுமந்தது ஓலைச்சுவடிகள். காலமாற்றத்தின் சூழலுக்கேற்ப அச்சு இயந்திரம் காகிதமாகின. பின்பு நூல்களைத் தொகுத்து வெளியிட அல்லது பாதுகாப்பாக படிக்க ஒரு நூலகம். அவ்வாறு பாதுகாத்து வைத்த நூல்களை, நூலகம் சென்று படிக்கும் ஆர்வம் சற்று குறைந்து வரும் இக்காலத்தில் இணையத்தில் பல மின்னியல் நூலகம் உருவாகி வருகின்றன. இந்த மாற்றம் நிகழ்கால எதிர்கால அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரியக் கூடும்.

மின்னியல் நூலகம்

“மின்னியல் நூலகம் என்பது, தற்போது வழக்கில் உள்ள அச்சு வடிவம் அல்லது மைக்ரோபிலிம் (Micro Film)வடிவத்தில் உள்ள புத்தகங்களை அல்லது அவற்றுள் ஒரு பகுதியை மாற்று வழியாகவோ, மறு பிரதியாகவோ, துணைப் பொருளாகவோ மின்னியல் வடிவில் பாதுகாத்து வைக்கும் நூலகமாகும்” என்று மலேசியாவைச் சேர்ந்த எஸ். இளங்குமரன் என்பவர் விளக்கம் தந்துள்ளார். இவையன்று பெரிய நூல்களையும் அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களையும் ஒளி அச்சு முறையில் எடுத்தும் மின்னியல் நூலகத்தில் சேர்த்துள்ளார். மின்னியல் நூலகத்தில் அதிகமான தமிழ் நூல்களே மின்பதிப்பாக்கம் பெற்றுள்ளன என்பது நமக்கெல்லாம் பெருமையாகும்

உலக மின்னியல் நூலகம்

உலக மின்னியல் நூலகம் என்பது, UNESCO மற்றும் அமெரிக்க காங்கிரஸ் நூலகம் இணைந்து வழிநடத்தும் அனைத்துலக மின்னியல் நூலகமாகும். இதன் பயனாக

1. அனைத்துலக மற்றும் பல்வேறு கலாச்சாரப் புரிந்துணர்வை வெளிப்படுத்துதல்.
2. கலாச்சாரம் சார்ந்த தகவல்களை இணையத்தில் அதிகரித்தல்.
3. கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதோடு இணை இயக்கங்களின் தரத்தை மேம்படுத்தி, நாடுகளுக்கு இடையிலான தொழில் நுட்பப் பிரிவினைகளைக் குறைத்தல்.
4. இலவசப் பன்மொழி வடிவிலான உலகளாவிய கலாச்சாரத்தின் முக்கியத் தகவல்களான எழுத்து வடிவம், வரைபடம், அரிதான நூல்கள், இசை, பதிவுகள், திரைப்படங்கள், அச்சுகள், புகைப்படங்கள், கட்டடக்கலை வரைபடங்கள், முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சார பதிவுகள் போன்றவற்றை இணையத்தில் கிடைக்க வழி செய்தல் போன்றவையாகும்.

உலக மின்னியல் நூலகத்திற்கு உலகளாவிய அளவில் 30 - மேற்பட்ட தேசிய நூலகங்களோடும், கல்வி நூலகங்களோடும் ஒப்பந்த இணைப்பும் உள்ளன. இவையன்றி உலக மைய நூலகத்தில் (Center for Research Libraries an International Consortium of University, College and Independent Research Libraries) http://catalog .crl.edu/171 -நாடுகளிலுள்ள 72,000 நூலகங்களை இணைத்து உலக மக்களுக்கு வழங்கி வருகிறது என்று முனைவர் கு. கல்யாணசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மின்னியல் நூலகம்

உலக மொழிகளில் கணிப்பொறியையும் இணையத்தையும் அதிகமாகப் பயன்படுத்தும் மொழிகளில் செம்மொழித் தமிழும் ஒன்று. இன்று இணையத்தில் மின்னியல் நூலகம் உருவாக்கி அதனை வெளியிட்டு உலகத் தமிழ் மக்களுக்கும் பிற மொழியாளர்களுக்கும் முன்னோடியாகத் திகழ்வது தமிழ் மொழியாகும். அந்த வகையில் தமிழ் மின்னியல் நூலகம் இணையத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளன.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

தமிழ் மொழி ஆராய்ச்சிக்கென்று சிகாகோ பல்கலைக்கழகத்தால் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்ற பெயரில் 1994-ல் தொடங்கினர். இதில் பலதரப்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், தமிழ்க் கட்டுரைகள் முதலானவைகளைத் தொகுத்துத் தந்துள்ளனர். இந்த ஆராய்ச்சி நூலகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான நூல்கள் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியர், நூலின் தலைப்பு, நூல் வெளிவந்த ஆண்டு போன்றவைகளில் செய்திகள் இடம் பெற்றுள்ளன. இஃது இணையத்தில் 1996 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நூலகத்தின் மூலம் உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் விரைவாக நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து விடுகின்றனர். முக்கியமான, அரிய நூல்களும் இந்நூலகத்தில் இடம் பெற்றிருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுடையதாக அமைந்துள்ளது.

மதுரைத் திட்டம் (Project Madurai)

உலகில் வாழும் 12 கோடி தமிழர்களையும் இணையம் வழி ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களை மின் பதிப்புகளாக உருவாக்கி அவற்றை இணையம் வழியே வெளியிட்டது இம் மதுரைத் திட்டம். இதனால் உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக நூல்களைப் பெற வசதி செய்யும் ஒரு தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டமே மதுரைத் திட்டமாகும். கே. கல்யாணசுந்தரம், முனைவர் பி. குமார் மல்லிகாருசுணன் என்ற இருவரால் 1998ஆம் ஆண்டு தமிழர் திருநாளன்று தொடங்கப்பட்டது.

மதுரைத் திட்டம் நூலகமானது எவ்வித எதிர்பார்ப்புமின்றி தமிழ் அறிஞர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. தொடக்க காலத்தில் இணைமதி, மயிலை போன்ற எழுத்துருக்களில் இயங்கிய இந்நூலகம் பின் திங்கியில் செயல்பட்டு வந்துள்ளது. 2003-லிருந்து ஒருங்குறி எழுத்துருவில் இயங்கி வருகிறது.

இந்நூலகத்தில் திருக்குறள், ஔவையார் பாடல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை (நெடுநல்வாடை, திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டுப் பாடல்கள், பாரதியார், வைரமுத்து கவிதைகள் படைப்புகள், உரைநூல்கள்) சுமார் 350லிருந்து 450 நூல்கள் இடம்பெற்றுள்ளன.

இத்திட்டத்தின் சிறப்பு கூறுகள் யாதெனில் யார் வேண்டுமானாலும் தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புச் செய்து இவர்களின் அனுமதியோடு அம்மின்தொகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். இவையல்லாமல் இத்தொகுப்பில் உள்ள அனைத்து நூல்களும் ஒருங்குறியில் கிடைப்பதால் எழுத்துருப் பிரச்சனை என்பது இல்லை. மதுரைத் திட்டம் அமெரிக்கா, கனடா, இந்தியா, இலங்கை, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றது. தற்போது நூலகம் தமிழ்.நெட் இணையதளத்துடன் இணைந்து செயல்படுகிறது.

தமிழ் இணையக் கல்விக்குழுமம்
உலகு தழுவிய தமிழர்களின் அக்கறையினால் 17.02.2001 அன்று தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தோற்றம் பெற்றது. இது பல நாட்டு மாணவர்கள் தமிழ்மொழியைப் பயிலும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இவற்றில் மின்நூலகம் என்ற பகுதியில் தமிழ் நூல்கள் மட்டுமின்றி தமிழ் நூல்களின் ரோமன் வடிவம், அகராதிகள், கலைக்களஞ்சியம், கலைச்சொல் தொகுப்புகள், சுவடிக் காட்சியகங்கள், பண்பாட்டுக் காட்சியகங்கள், பயணியர் போன்ற உட்தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன.

இந்நூலகத்தில் இலக்கண நூல்கள், சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நீதிநெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியங்கள், தமிழ் உரைநடை நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. இன்று கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பரவலாக இந்நூலகத்தைப் பயன்படுத்தியே ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கின்றனர். அனைத்து நூல்களும் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

சிறப்புக் கூறுகள்

பிற மின்நூலகத்ததை விட தமிழ் இணையக் கல்விக் கழக (தற்போது பெயர் மாற்றம்) நூலகத்தில் பல சிறப்புக் கூறுகளைப் பெற்றுத் திகழ்கிறது.
1. இலக்கண, இலக்கிய நூல்களுக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள் கிடைக்கின்றன.
2. சங்க இலக்கியப் பாடுபொருள்கள் எண், சொல், பக்கம், பாடினோர், வள்ளல்கள், மன்னர்கள், திணை கூற்றும், பாடல் முதற்குறிப்பு, மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள், விலங்குகள், மீன்கள் என்னும் தலைப்புகளில் வேண்டிய செய்திகளை உடனடியாகத் தேடிப் பெற்றுக் கொள்ளலாம்.
3. அகராதிகளில், தமிழ் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களும், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் தேடிப் பெறும் வசதியுள்ளது.
4. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை உலகத்தார்க்கு எடுத்து விளக்கும் வகையில் அமைந்த சைவ, வைணவ, இசுலாமிய, கிறித்துவ கோயில்களின் ஒலி, ஒளி காட்சிப் பதிவுகள் மற்றும் நாட்டியம், பொம்மலாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம், ஜல்லிக்கட்டு முதலான பண்பாட்டுக் காட்சியகம் வியக்கத்தக்க வகையில் இடம்பெற்றுள்ளது.
5. திருத்தலங்கள் என்னும் வரிசையில் 14-சமணத் தளங்கள், 101 சைவத் தளங்கள், 93-வைணவத் தளங்கள், 9-இசுலாமிய தளங்கள், 13-கிறித்துவத் தளங்கள் காட்சியாக்கப்பட்டுள்ளன.

6. தேவாரப் பாடல்களை இசையுடன் கேட்கும் வசதி உள்ளது.

இவ்வாறு பல வசதிகளைக் கொண்ட இம்மின்நூலகம் பல ஆராய்ச்சி மாணவர்களுக்கும், தமிழ் இலக்கிய நூல்களைக் கண்டு படிப்பவர்களுக்கும் பயன்படும். இதில் 350 மேற்பட்ட தமிழ் நூல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இலக்கிய வரலாற்று அடிப்படையில் நூல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள விதம் படிப்பவர்களையும், நூல்களைத் தேடி எடுப்பவர்களையும் இலகுவாக கவர்ந்திழுக்கின்றது.

தமிழ் மரபு அறக்கட்டளை

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டூழிய நிறுவனம் 2001-ஆம் ஆண்டு உலகு தழுவிய ஒரு இயக்கமாக உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் மின் பதிப்பில் உலகில் இருக்கும் ஓலைச்சுவடிகள், அரும்பெரும் பழைய நூல்களை நகல் எடுத்து இணையத்தில் வெளியிடுவது ஆகும்.

மின்பதிப்பாக்கம், மின்னூலாக்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக இணையத்தில் மின் நூல்களுக்கான அட்டவணை ஒன்றை உருவாக்கியுள்ளது. இவற்றில் அரக்குமாளிகை நாடகம், அமெரிக்க அன்னையான பிள்ளைத் தமிழ், சபரி மோட்சம், சுபத்திரை மாலையிடு போன்ற அரிய நூல்கள் இம்மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

நூலகம்.நெட்

ஈழத்தில் வெளிவந்துள்ள தமிழ் நூல்களையும், இதழ்களையும் மின் வடிவமாக்கி பாதுகாத்து அனைவரும் காணும் வகையில் நூலகம்.நெட் செயல்படுகிறது. இஃது ஓர் இலாப நோக்கமற்ற தன்னார்வ கூட்டு முயற்சியாகும். மதுரைத்திட்டம், தமிழ்மரபு அறக்கட்டளை போலவே இதுவும் அமைந்துள்ளது. இம்மின் நூலகத்தை உருவாக்கியவர்கள் தி. கோபிநாத் மு.மயூரன் ஆகியோர் ஆவர். 2005-ல் தொடங்கி இடையே சில காரணங்களால் தடைப்பட்ட இத்திட்டம் 2006 தை மாதம் மீண்டும் புதுப்பொழிவுடன் பல புதிய மின்நூல்களைக் கொண்டு வெளிவந்தது. வாரம் ஒரு மின்னூல் என்ற குறிக்கோளுடன் செயற்பட்டு வருகிறது. 30.10.2010 முடிய 6100 நூல்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் ஆவண வகைகள், பகுப்புகள், பட்டியல்கள் என மூன்று பெரும் தலைப்புகளில் செயல்படுகிறது. ஆவண வகைகள் என்பதில் நூல்கள், சஞ்சிகைகள் பத்திரிக்கைகள், பிரசாரங்கள், ஆய்வேடுகள் என்னும் பகுப்புகள் உள்ளன. பகுப்புகள் என்பதில் எழுத்தாளர்கள், வெளியிட்ட ஆண்டு, பதிப்பகங்கள், நூல்வகை ஆகியவை இடம்பெற்றுள்ளன. பட்டியல்கள் என்ற மூன்றாவது தலைப்பில் நூறு எண்கள் கொண்ட தொகுப்புகளாக 6100 நூல்கள் உள்ளன. மேலும் பிற மின் நூல்கள் என்ற தேடலில் பிற நிறுவனங்களின் மின் நூல்களையும் இந்த நூலகம்.நெட்டில் காண முடிகிறது.

இந்திய மின்நூலகம் (Digital Library of India)

தமிழ் இணைய மாநாட்டுக் குழுவால் தோற்றுவிக்கப்பட்ட இந்திய மின் நூலகமாகும். இதில் பலதரப்பட்ட நூல்களை மின்பதிவேற்றம் செய்துள்ளனர். ஞானாமிர்தம், வேதாந்த நூல்கள், சைவசித்தாந்த நூல்கள், சோதிட நூல்கள், குணவாகடம், ஜெகசிற்பியின் புதினங்கள், பயண இலக்கிய நூல்கள் என 223-தலைப்புகளில் நூல்களை மின்பதிப்பாக்கி வெளியிட்டுள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள நூல்கள் அனைத்தும் தமிழ் வாசகர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரிதும் பயன்படும் வகையில் இருக்கும்.

சென்னை நூலகம்

கோ. சந்திரசேகரன் என்கிற தனி நபர் எந்த அமைப்புகளின் துணையுமின்றி 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய மின் நூலகம் சென்னை நூலகம். இம்மின் நூலகத்தில் சங்க கால இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை நூல்கள் உள்ளன. அதுவும் ஒருங்குறியில் இருக்கின்றன.
சில சங்க இலக்கிய நூல்களின் நூற்பா மட்டும் இடம்பெற்றுள்ளன. புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுமையாக இத்தளத்தில் பார்வையிடலாம்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், ஐஞ்சிறுகாப்பியங்கள் இடம் பெற்றுள்ளன. யாப்பருங்கலக்காரிகை, நால்வர் நான்மணிமாலை, திருவிசைப்பா, திருவுந்தியார் கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி போன்ற நூல்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன. இவற்றை எண்கள் அடிப்படையில் தேடிப்பெற்றுக் கொள்ளலாம்.

இவையன்றி கம்பர், திருஞானசம்பந்தர், திரிகூடராசப்பர், குமரகுருபரர், ஔவையார், பாரதியார், பாரதிதாசன், அண்ணா, மு. வரதராசன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன் ஆகியோரின் படைப்புகளும் இதில் கிடைக்கின்றன.

இம்மின் நூல்கள் அன்றி தெற்காசிய நூலகம் Digital South Asia Library என்ற பெயரில் சிக்காக்கோ பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவருகின்றது www.dsal.uchicago.edu. மேலும் மலாயாப் பல்கலைக்கழக மின்னியல் நூலகமும் வெளிவருகிறது.

உலகத் தமிழாராய்ச்சி

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்படும் ஆய்விதழ் தமிழியல் - Journal of Tamil Studies இல் 1972 முதல் வெளியான ஆய்வுக் கட்டுரைகளும், புத்தக மதிப்பரைகளும் சுமார் 9000 பக்கங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் நிலையில் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழியல் என்ற பக்கத்தில் இதனைப் பார்க்கலாம். இதுவரை ournal of Tamil Studies இல் 76 இதழ்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் கடைசி 4 இதழ்கள் நீங்கலாக, அதாவது முதல் (001-September 1972) இதழ் தொடக்கம் எழுபத்திரண்டாவது (072 – December 2007) வரையிலான இதழ்களில் இருந்து ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தையும் நீங்கள் தரவிறக்கம் செய்யலாம்.

306 முதன்மைக் கட்டுரையாளர்களால் எழுதப்பட்ட 611 கட்டுரைகளும் 55 கட்டுரைப் பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடைசி 4 இதழ்களில் உள்ளடக்க அட்டவணை மட்டும் கிடைக்கும். 77-வது இதழ் வெளியாகும் போது 73 இதழின் கடடுரைகள் தரவிறக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் ஆய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் பெரும் துணை புரியும்.

மின்னியல் நூலகப் பயன்பாடு

1. நூலகத்திலிருந்து பெற விழையும் தகவல்களை, நூலகத்திற்குச் செல்லாமலேயே வீட்டிலிருந்தே கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள இயலும்.
2. உலகில் எங்கு நூல்கள் உருவாகியிருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் நாம் அந்நூல்களை வாசிக்க இயலும்.
3. நூலகச் சாதனங்களை இரவல் பெறுவது போன்ற செயல்முறை மற்றும் சேவையை மேம்படுத்த உதவும்.
4. நூலகச் சாதனங்கள் பற்றிய தகவல்களை பயனீட்டாளர்கள் எளிதில் தெரியப்படுத்துவது.
5. பல உரையாசிரியர்களின் உரையை ஒரே நேரத்தில் ஒரே நூலுக்குப் பெற்றுக் கொள்ளுதல்.
6. நூல் இரவல் என்பது முற்றிலும் நிறுத்தம் பெறும்.

Friday, August 19, 2011

தமிழ் மரபு அறக்கட்டளை

|2 comments
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வத்தைக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்றான் முண்டாசுக் கவிஞன் பாரதி. அஃது இன்று நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றது. இன்றைய உலகை வெகுவிரைவாக கற்றுக்கொள்ள, அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள இன்று விஞ்ஞான வளர்ச்சி நமக்கு கொடுத்த கொடை கணிப்பொறியும் அதனுடன் இணைந்த இணையமுமாகும். இந்த இணைகள்தான் இன்று அத்தனை பணிகளையும் எளிதாகவும் விரைந்தும் செய்து முடித்திட உதவுகின்றது.

இணையம் இன்று பயன்படுத்தப்படாத துறைகளே இல்லை என்பதற்கேற்ப அதன் பயன்பாடு வளர்ந்து உள்ளது. இஃது அலுவலகப் பணிகள், வணிகம், கல்வி என இதன் பணி அனைத்திலும் விரிகிறது அவற்றில் கல்விக்கான பணிகள் பல உள்ளன. அக்கல்விப் பணியில் தமிழ்மரபு அறக்கட்டளையின் பயன்பாடுகள் மிகவும் அதிகம்.

தமிழ்மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation)
வாழ்க்கையின் மரபுகளைத் தொகுத்து வெளியிடும் தரவுதளமாக இந்த தமிழ் மரபு அறக்கட்டளை விளங்குகிறது. காலத்தின் ஓட்டம் நெடுந்தொலைவுடையது. அதன் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், இன்றும் நம்மில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் மரபு பற்றிய எண்ணங்களை மக்களிடம் தக்க வைத்திருப்பதே ஆகும். மரபுகளை வாய்வழிச் சொல்லும் பழங்கதைகள், புராணக்கதைகள், சித்திரங்கள், ஓலைச்சுவடிகள், பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலம் காணமுடிகின்றது. இவைகளைப் பாதுகாக்கும் முயற்சியிலும் மீண்டும் மக்களிடம் இவற்றை அறிமுகப்படுத்தும் முனைப்புடனும் இந்த தமிழ்மரபு அறக்கட்டளைத் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்மரபு அறக்கட்டளை உலகம் தழுவிய ஒரு அறக்கட்டளையாக விளங்குகிறது. பல்லாயிரமாண்டுகள் தொன்மையுள்ள தமிழ்மரபு இலக்கியம், கலைகள் எனப் பலவகைப்படுகிறது. இந்த மரபுச் செல்வங்கள் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்ஆப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் ஏனைய புலம் பெயர் நாடுகளான ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரந்து கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் தமிழ்மரபு அறக்கட்டளை பழைய ஓலைச்சுவடிகளையும் அவற்றில் புதைந்துள்ள தமிழ் மரபுசார் வளங்களையும் பாதுகாத்து உலக மக்களுக்கு வழங்கும் பணியையும் செய்து வருகின்றது.
இச்செயல்பாடுகள் கணினி சார் தொழில்நுட்ப வளர்ச்சியால் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை இலகுவாக பகிர்ந்து கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. ஒலி, ஒளி எழுத்து வடிவ முறைகளில் அவற்றை இலக்கப் பதிவாக்கி வெளியிட்டு வருகிறது. இன்றுள்ள இணையவசதியால் இக்கருத்து, காட்சிப் படங்களாக இருப்பதால் உலகத்தாரோடு மிக இலகுவாகப் பகிர்ந்துக்கொள்ள முடிகிறது.

உருவாக்கம்

“ஒரு முறை பின்பணிக்காலப் பொழுதில் நானும் முனைவர். கல்யாணந்தரமும் (மதுரைத் திட்டம்) சுபாஷினி ட்ரெம்மல் மரபு பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தோம். புதிதாக மலர்ந்திருக்கும் இணையத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழ்ப் பூங்கா ஒன்று அமைக்க திட்டமிட்டோம். அதுவொரு பிரமாண்டமான திட்டம். தமிழின் அனைத்து மரபு செல்வங்களையும் இலக்க வடிவில் கொண்டுவந்து விடுவது என்பது திட்டம் (Digitization of Tamil Heritage Materials) இப்படிச் செய்யும் போது ஒரு சொடுக்கில் தமிழ் செல்வங்களை நுகர விரும்புபவர்களுக்கு அளித்த விடா முயற்சி. அது ஒரு கனவு. மெகா கனவு சந்திரனுக்கு இலக்கு வைத்தால்தான் வீட்டுக் கூரையாவது ஏறமுடியும் என்பது ஒரு கணக்கு. நாங்கள் இன்னும் சந்திரனில் கால் வைக்கவில்லை, கூரை ஏறி இருக்கிறோம், எல்லோரும் தோள் கொடுத்தால் ஒரு நாள் சந்திரனில் கால் வைக்கலாம்.”

என்று தமிழ் மரபு அறக்கட்டளை 2001-ல் தோன்றிய நிகழ்வை அதன் தலைவர் முனைவர். ந.கண்ணன் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் அனைவரும் கூடி செயல்படுவோம் என்று கூறியுள்ளதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இஃது அவரது பரந்த எண்ணத்தை வெளிக்காட்டுகிறது. தமிழ் இணையம் மாநாடு 2002-ல் அமெரிக்காவில் நடைப்பெற்ற போது தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

நாம் இந்த தமிழ் மரபு அறக்கட்டளைக்குச் சென்றால் முன்பே கூறியுளளது போல் தமிழ் மரபு சார்ந்த நிகழ்வுகளையும், செய்திகளையும் காணலாம். www.tamilheritagefoundation.org என்ற இணைய முகவரிக்குள் சென்றால் முகப்பு பக்கம் தோன்றும். அந்த பக்கத்தில் ‘நுழைக’ என்ற பகுதியைச் சுட்டினால் தமிழ் மரபு சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் வலது பக்கம் தோன்றும்.

1. எங்களைப் பற்றி அறிந்து கொள்ள…!
2. பத்திரிக்கைச் செய்திகள் மற்றும் தகவல்களை இங்கே…!
3. மேல் விவரங்களும் அதிக தமிழப் பக்கங்களும் முதுசொம் சாளரத்தில் உள்ளன.
4. தமிழகக் கோயில்களின் தல புரணங்கள்
5. கருணாகரன் நூல்நிலையம் தொடர்பான செய்திகள்
6. சுவடியியல் தொடர்பானவை
7. தமிழ் மரபு அறக்கட்டளையின் உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதி (CMS)
8. தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு விளக்கி.

- என்னும் இவையில்லாமல் மரபுசேதி (Heritage News) மரபின் குரல் (Heritage Tunes) மரபுச்சுவடு Image Heritage தமிழ் நிகழ்கலை (Waiting Room) என்று பல பிரிவுகளும் இங்கு வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எங்களைப் பற்றி அறிந்த கொள்ள…! (தமிழ்மரபு அறக்கட்டளையின் தோற்றம் ஆண்டு)
இந்தப் பகுதியில் தமிழ்மரபு அறக்கட்டளையின் தோற்றம் தோற்றுவித்தவர்களான தலைவர், முனைவர். ந.கண்ணன் (தென்கொரியா), துணைத்தலைவர், திருமதி சுபாஷினி ட்ரெம்மல் (கணினிப் பொறியாளர், ஜெர்மனி) போன்றவர்கள் குறித்த தகவல்கள் இடம் இடம்பெற்றுள்ளன.

பத்திரிக்கைச் செய்திகள் மற்றும் தகவல்கள் இங்கே …!

இந்தப் பகுதியில் தமிழ் மரபு அறக்கட்டளைத் தொடர்பாக உலகில் எங்கெங்கு சென்று வந்திருக்கிறார்கள் என்கிற செய்தித்தாள், பத்திரிக்கையில் வந்த செய்திகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளனர். மேலும் சில தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

முதுசொம் சாளரம்

தமிழ்மரபு அறக்கட்டளையின் பணிகள் உலகம் முழுவதும் வரவேற்கப்பட்டு வருகின்றன. தமிழ்மொழி அறிந்த அனைவரும் இத்தளத்தைச் சென்று பார்த்துப் பயன் பெறலாம். தமிழ் மொழிக்கும், தமிழர்களின் மரபிற்கும். எதிர்கால உலக மக்களுக்கும் நம்மால் இயன்ற பங்களிப்பை இத்தளங்களில் பதிவேற்றம் செய்து வைக்கலாம். இதனைக் கருத்தில் கொண்டு, பல தலபுராணங்களை ஒலி, ஒளி-படம் கொண்டு இப்பகுதியில் இணைத்துள்ளனர்.

தல புராணங்கள்

உலக இலக்கியங்களில், பண்பாடுகளில் தமிழ் இன்றளவும் பேசப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் இலக்கண இலக்கியங்களும், புராணங்களும் ஆகும். அனைவராலும் அனைத்துக் கோயில்களுக்கும் (புண்ணியதலம்) சென்று வர இயலாது. ஆகையால் அவைகளை ஈடுகட்டத் தோன்றியவை தல புராணங்கள் ஆகும்.
இறைவன் வெவ்வேறு பிரதேசங்களில் பலவகைகளில் காட்சி தந்துள்ளான். இது ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபாடு அடையும். காசி இராமேஸ்வரம் செல்ல இயலாதவர்களுக்குத் தத்தம் ஊர்களில் இருக்கும் இறைவன் சமமானவன் என்ற உணர்வைக் கொடுத்து உள்ளூர்வாசிகளுக்கு ஒரு தன்னம்பிக்கையைக் கொடுப்பது தலபுராணங்கள் மேலும் மெய்ஞானிகளுக்கு (திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்) அருள் மூலம் இறைவன் இறைக் காட்சிகளைக் காட்ட அவர்கள் ஒவ்வொரு சிற்றூர்க் கோயில்களுக்கும் சென்று தலபுராணங்கள் எழுதி வைத்துள்ளனர். அவைகளைத் தொகுத்தும் கொடுத்துள்ளார்கள்.
இந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ள செய்தியைத் தொகுக்க ஆகும் செலவுகளை லண்டன் மாநகரில் மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர். தண்டபாணி, அதே நாட்டில் தமிழ்ப்பணிச் செய்து வரும் திரு. சுவாமிநாதன் ஆகிய இருவரும் கொடுத்து உதவி வருகின்றனர் என்று இதன் தலைவர் ந. கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

சுவடியியல்

சுவடியியல் என்ற பகுதியில் நமது பழைய ஓலைச்சுவடிகளை மின் பதிப்பாக்கம் செய்துள்ளனர். அச்சு இயந்திரம், தாள்கள் கண்டுபிடிக்காத காலத்தில் உலக அறிவை முழுவதும் தன்வயம் வைத்திருந்த தமிழர்கள் பனை ஓலைகளில் தங்கள் அறிவைப் பதிவு செய்து வைத்துள்ளனர். இவைகளில் 25 சதவிகிதம் மட்டுமே திரு. ஆறுமுகநாவலர். உ.வே.சா போன்றவர்களால் நூல் வடிவம் பெற்றுள்ளது. மீதம் இருக்கும் 75சதவிகித ஓலைச் சுவடிகளில் இருக்கும் அரிய கருத்துக்களை நூல் வடிவம் பெற இன்று சில முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகம் 21,000-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சுவடிகளைச் சுவடிப்புலம் Catalogue of Tamil paragraph manuscripts in Tamil University என்ற பெயரில் அட்டவணையினை வெளியிட்டுள்ளது. இவற்றை எத்தனை இலக்கிய ஆய்வளர்கள் கண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை? தகவல் தொடர்பு பன்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் ஏன் தமிழ்மொழியையும் அதில் ஏற்றி உலகறிய செய்ய முடியாது என்ற எண்ணம் இவர்களுக்குள் ஏற்பட்டிருக்கின்றன. அதன் விளைவுதான் ‘சுவடிபுலம்’ என்ற பகுதி உருவாகியுள்ளது. தமிழர்களுக்குப் புத்துணர்ச்சியும், விழிப்புணர்வும் தந்துள்ளது. இப்பகுதியில் ஏடுகள் என்றால் என்ன? எத்தனை வகை ஏடுகள் உள்ளன, ஏடுகளை வாசிப்பது எப்படி? தமிழ் ஏடுகளின் நூலகங்கள் எங்குள்ளன? பல்கலைக் கழகங்கள் செய்யும் சீரிய முயற்சிகள் என்ன? (பாரதிதாசன் பல்கலைக்கழகம். ஓலைச்சுவடி தரவு) போன்ற வினாக்களுக்கான விடையை மின் படிவங்களாகவும், மின் உரைகளாகவும், மின் பேசும் படங்களாகவும், மின் இணைப்புகளாகவும், பார்வைக்கு அளித்துள்ளது. எனவே உங்கள் இல்லங்களில் அரிய ஏடுகள் இருந்தால் அதனைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்குக் கொடுத்துத் தமிழ் வளர்ச்சிக்கு உதவலாம். மின் நகல் எடுத்துவிட்டு அதை உங்களிடமே மீண்டும் கொடுத்து விடுவார்கள். இதனால் தமிழின் பழமையை நீங்களும் அறிந்து கொள்வீர்கள் உங்களது அறிவையும் உலக மக்களோடு பகிர்ந்தும் கொள்வீர்கள்.

மரபு விக்கி

முதுசொம் சாளரத்தில் மரபு விக்கி என்ற பகுதியும் உள்ளது. இதில் நீங்கள் எந்த துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் அவரவர் துறை பற்றிய செய்திகளை அச்சாகவும். காட்சி ஒளி மூலமாகவும் தரலாம். இதற்கு நீங்கள் முதலில் தமிழ் மரபு அறக்கட்டளையில் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவையும் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பேருதவி செய்து வருகின்றது.

I. மரபுச் சேதி (Heritage News)
தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள் மற்றும் தமிழ்க் கலாச்சாரம் பற்றிய தகவல்கள் இங்கு வெளிவரும். இதைத் திறமையாக செயல்படுத்த ஆர்வமுள்ள தமிழர்கள் சேதிக் குறிப்புகளை அனுப்புவதுடன், அவை இணையத்தில் எங்கேனும் வெளியாகியிருந்தால் அதன் தொடுப்பைக் (web link) கொடுத்து உதவலாம்.

II. மரபின் குரல் (Heritage Tunes)
முதுசொம் இசையரங்கம் என்றொரு வலைப்பக்கம் இயங்கி வருகிறது. அதை இன்னும் (interactive) ஊடாட வைப்பதே இவ்வலைப்பதிவின் நோக்கமாகும்.
1. உங்கள் வட்டார வழக்கு, பேச்சு இவைகளை இத்தளத்தில் நேரடியாக பதிவு செய்யலாம். Voice Snap குழுவுடன் இணைந்து இதைச் செய்துள்ளொம்.
2. மழலைப் பாடல்களை பெரியோரோ, சிறுவர்களோ பாடிப் பதிவு செய்யலாம்,
3. இசைத் துக்கடா(Music Sample) வை இங்கு அனுப்பலாம்.
4. இலக்கிய உரைகளை அனுப்பலாம்.
5. உங்கள் கவிதை, உங்கள் நாவல் இவைகளை உங்கள் குரலில் காலத்தின் பதிவாக இங்கு நிரந்தரப்படுத்தலாம்.
6. தமிழின் அமுதம் போன்ற இசை இங்கு பிரவாகம் எடுக்கும் படி செய்யலாம். தமிழ் இசை என்பது பரந்த நோக்கில் ‘திராவிட இசை’ என்றே இங்கு பதிவாகிறது. எனவே தெலுங்கு, கன்னட, மலையாள, தமிழ் இசைப் பாரம்பரியம் இங்கு பதிவாகிறது. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
7. தமிழ் கிராமப்புற இசை பற்றிய பதிவுகள் அரிதாகவே உள்ளன. அவைகளை இங்கு சேகரம் செய்யலாம்.

III. மரபுச் சுவடு (Image Heritage)
படங்கள்! ஆகா! அவை சொல்லும் சேதிகள்தான் எத்தனை. அது கல்யாணக் காட்சியாக இருக்கலாம், குழந்தைப் பிறப்பாக இருக்கலாம். ஊர் தேர்த் திருவிழாவாக இருக்கலாம். பழைய படங்கள். தமிழக வீடுகள், தமிழக தெரு அமைப்பு தமிழகக் கோயில்கள், சிற்பங்கள்... அம்மம்மா! எத்தனை உள்ளன. அப்புகைப்படங்களை இங்கு தொடுப்பது நோக்கம். வேறொரு தளத்தில் அது இருந்தால், ஒரு தொடுப்பின் மூலம் அவைகளைக் இணைத்துவிட முடியும். மிக, மிக எளிய வழியில் நம் சுவடுகளை இங்கு பதிக்கலாம். புற உலகில் (வெளிநாட்டில்) தமிழ்க் கல்வி பயில்பவர்களுக்கு இம்மாதிரிப் புகைப்படங்கள் ஒரு பொக்கிஷம். ஒவ்வொரு தமிழ் இணைய மாநாட்டிலும் இதன் தேவை வலியுறுத்தப்படுகிறது.

IV. தமிழ் நிகழ் கலை (Waiting Room (Video Show))
ஒட்ட வைக்கும் (Embed) திறன் கொண்டு You Tube, Google Video மற்றும் பிற கிட்டங்களில் கிடக்கம் தமிழ் நிகழ்வு பற்றிய ஆவணங்களை மிக எளிதாக இங்கு சேர்த்து விடலாம். இங்கு அனுப்புங்கள் என்றால் யாரும் அனுப்ப மாட்டார்கள். ஆனால் கூகுளுக்கு அனுப்புவார்கள். எல்லோருக்கும் மேடையில் ஒளிவட்டத்தில் இருக்கவே ஆசை. அதைத்தான் இவ்வலைப்பூ செய்யப் போகிறது. அனுப்புவருக்கும் சிரமமில்லை. அவர்கள் பார்த்து. ரசித்த ஒரு வீடியோ கிளிப்பை எமக்கு ‘html tag’ ஆக அனுப்பினால் போதும். இந்த ஒட்டவைக்கும் திறன் கொண்டு நம் வீட்டு வீடியோ (புழக்கடை சினிமா - Garage Cinema) வையும் இங்கு வெளியிடலாம். ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் வீடியோ எடுக்கிறோம், படமெடுக்கிறோம், சிலர் பாட்டுக்களை பதிவு செய்வதுமுண்டு. அவைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். இது professional ஆக இருந்தாலும் வெளிநாட்டில் வாழும் மாணவர்களுக்கும் பிறருக்கும் அது ஏதோவொருவகையில் பயன்படும்.

உங்களிடம் அதிகமாக ஒன்றும் கேட்கவில்லை. ஒரு மின்னஞ்சல் (E.mail) அவ்வளவுதான். அம்மின்னஞ்சலில் மேற்சொன்ன அத்தனை விஷயங்களையும் அனுப்பி விடலாம். ஊர் கூடி தேர் இழுக்க ஆசையா? எளிதாக இவ்வலைப்பதிவு இணை-ஆசிரியாராக நீங்கள் சேர்ந்து தொடர்ந்து பங்களிக்கலாம்.

வலைப்பூக்கள்

தமிழ் மரபு அறக்கட்டளையின் உட்பிரிவுகளில் மரபு சார்ந்த நிகழ்வுகளை வலைப்பூக்களில் வெளியிட்டு வருகிறது. மரபு அறக்கட்டளையின் சார்பாக நான்கு வலைப்பூக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவைகளில்

மரபுச் சேதி (Heritage Tunes)

இவ்வலைப்பூவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள் மற்றும் தமிழ்க் கலாச்சாரம் பற்றிய தகவல்கள் இங்கு வெளிவருகின்றது.

படம் ( )
மரபின் குரல் (Heritage Tunes)
மின் தமிழ்

இஃது ஒரு இணையக்குழு என்று கூட கூறலாம். ஒத்தக் கருத்துடையவர்கள் இங்கு ஒன்று கூடி விவாதம் செய்து வருகின்றனர். சில கலந்துரையாடல்கள் வியக்க வைக்கின்றன. தமிழ் இலக்கணம், புதிய சொற்கள், இலக்கிய ஆய்வு, திருக்குறள் உரை, சைவ சித்தாந்த தத்துவ விளக்கம், வைணவத் தத்துவங்கள், ஆலய விளக்கம், பயணங்கள் குறித்த செய்திகள், பழமொழிகள், கலைகள், தமிழறிஞர்கள், தமிழ் தொடர்பான முக்கியச் செய்திகள் இசை, பிற கலைகள், இறை அனுபவம், பக்தி, என பல தலைப்புகளில் சிந்தனை ஓட்டத்தைத் தாங்கி ஒவ்வொரு நாளும் புதிய செய்திகளைக் கொண்டு வெளிவருகின்றது.

“அறிவை விரிவுசெய் அகன்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று கூறிய புரட்சிக்கவி பாரதிதாசனின் கூற்று நினைவில் கொள்ளத்தக்க வேண்டும். தமிழ்மொழியின் மரபுகளைக் காலத்திற்கேற்ப பாதுகாக்க வேண்டும் என்ற சீறிய எண்ணத்துடன் இத்தமிழ் மரபு அறக்கட்டளைத் தோன்றி அதில் எண்ணிலடங்கா இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் உலக மக்களின் பார்வைக்கும் அறிவுக்கும் விருந்தாக ஒளிப்படம் மூலம் எடுத்துக்காட்டி வருகிறன்றனர்.
மரபு அறக்கட்டளைத் தோற்றம், அதன் வளர்ச்சி முதுசொம் சாளரத்தின் பயன்கள், தலபுராண கதைகளை காட்சி படம் மூலம் விளக்கிக் காட்டியுள்ளன. சுவடியின் பயன், அதன் தரம் போன்றவைகளை தரவாரியாக, பொருள் வாரியாக, துறை வாரியாக பிரித்துக் கூறியுள்ளன.. மரபு விக்கி என்ற பகுதியில் துறைசார்ந்த கருத்துக்களை அவரவர் பதிவு செய்து வைக்கலாம் என்றும் நான்கு வலைப்பூக்களின் செய்தியும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மின் குழுமம் என்ற பகுதியும் இம்மரபு அறக்கட்டளையில் செயல்பட்டுவருகிறது. மொத்தத்தில் இதனைப் படிக்கும், பார்க்கும் தமிழர்கள் பல்வகைகளில் பயன்பெறுவார்கள் அதற்கு இந்த அறக்கட்ளையின் பணி மேலும் மேலும் வளர நாம் அனைவரும் ஒன்றிணைவோம். தமிழை உலக மொழிகளின் வரிசையில் முன்நிறுத்துவோம்.

Sunday, July 24, 2011

செம்மொழித்தமிழ் தரவுகள்

|0 comments
செம்மொழித் தரவுகள்

.கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி
தமிழ்குடி. என்ற பொய்யா வாக்கிற்கிணங்க உலகமொழிகளில்
தமிழ்மொழியும் செம்மொழியாகி தனக்குரிய இடத்தைப் பெற்றுத்
திகழ்கிறது. உலகச் செம்மொழிகளாக தமிழ், கிரேக்கம் (Greek),
இலத்தீன் (Latin), அரேபியம் (Arabic), சீனம் (Chineese),ஹீப்ரூ
(Hebrew), பாரசீகம் (Persian), சமஸ்கிருதம் (Sanskrit) போன்றவைத்
திகழ்கின்றன



செம்மொழித் தகுதிகள்

செம்மொழித் தகுதிக்கு மொழியியலார் பதினொரு
தகுதிப்பாடுகளை வகுத்துள்ளனர். அவை முறையே,

1. தொன்மை (Antiquity)
2. தனித்தன்மை (Individuality)
3. பொதுமைப் பண்பு (Common Character)
4. நடுவுநிலைமை (Neutrality)
5. தாய்மைத் தன்மை (Parental Kingsitd)
6. பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு
7. பிறமொழித் தாக்கமிலா தனித்தன்மை
8. இலக்கிய வளம் (Literary Prowess)
9. உயர் சிந்தனை (Noble Ideas and Ideals)
10. கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு
11. மொழிக் கோட்பாடு (Linguistic Principles)

என்பனவாகும். இந்த தகுதிப்பாடுகளை அளவுகோளாகக் கொண்டு
உலக இலக்கியங்களைச் செம்மொழித் தகுதிக்கு கொண்டு வருகின்றனர்.
இவ் அளவுகோள் தமிழுக்கும், தமிழ்மொழிக்கும் முழுக்க முழுக்கப்
பொருந்துவனவாக உள்ளன என்பதுதான் உண்மையாகும்.

தமிழ்மொழி

உலகப் பண்பாட்டிற்கு உயரிய வழிகாட்டியாக விளங்கும்
கிரேக்கம், இலத்தீன் மொழிகளைப் போல இந்தியப் பண்பாட்டிற்கும்
ஏன் உலகப் பண்பாட்டிற்கும் அணிகலன்களாக விளங்கும்
மொழிகளாகத் தமிழ் மற்றும் தமிழ் வழி வந்த சமஸ்கிருதம் திகழ்கிறன.

தமிழின் தொன்மையை நாம் காண வேண்டுமாயின்”கல்தோன்றி
மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி” என்ற பாடல்
அடியால் காணலாம். எல்லை வரையரை என்பது ”வடவேங்கடம்
தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்” என்று தொல்காப்பியப் பாயிரம்
தமிழ்மொழி பேசப்பட்டநிலப்பகுதியைச் சுட்டுகிறது. உலகில் தமிழர்கள் இல்லாத நாடே இல்லை என்றுரைக்கலாம். ஒரு சில நாடுகளில் தமிழ்மொழி ஆட்சிமொழியாக விளங்குகிறது. பி.பி.சி. தனது அலைவரிசையில் தமிழ்ச் செய்தியையும் வெளியிட்டு வருகிறது. அத்தகையச் சிறப்புடன் வாழும் தமிழ்மொழி இணையத்திலும் நல்ல வளர்ச்சி நிலைப் பெற்று வருகிறது.
செம்மொழித் தகுதிகள் என்ற தகுதிப்பாட்டு அடிப்படையில்
இணையத்தில் இத்தகுதிபாடுகளைத் தமிழ்மொழி எத்தகைய வகையில்
பெற்றுத் திகழ்கிறது? அவை எந்தெந்த இணைய முகவரியில்
கிடைக்கின்றன? என்பதனைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.

தொன்மை

தமிழர்களின் தோற்ற வரலாறு சுமார் மூவாயிரம் மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே
சென்று மொழியியலார்களின் ஆராய்ச்சிப்படி தமிழின் தோற்ற
வரலாற்றைக் கணக்கிட இயலவில்லை. ஆகையால் இதனை
தொன்மைமிகு மொழி என்றே குறிப்பிடுகின்றனர்.
குமரிக் கண்டத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி
ஆதிமொழி தமிழ் என்றே கூறிச் செல்கின்றனர். மேலும் கடல் கோள்கள்
(சுனாமி) ஏற்படும் முன் ஒரே நிலப்பகுதியாக இணைந்திருந்த
குமரிக்கண்டப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள்
பேசிய மொழி தமிழ்மொழி. இது மட்டுமின்றி தமிழை வளர்க்க இரண்டு
தமிழ்ச்சங்கங்களைத் தோற்றுவித்ததாக இறையனார் களவியல் உரை
கூறுகிறது.

கடல்கோள்களினால் தமிழர்கள் வெவ்வேறு நிலங்களுக்குச்
சென்றதால் அங்கு அவர்கள் இனக் குழுவாக பல கிளை மொழிகளில்
பேசியுள்ளனர். இன்று எஞ்சிய இந்திய நிலப்பகுதியில் மட்டும்
தமிழர்கள் வாழ்வதை,

”ப•றுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள”

என்ற சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளின் உண்மைக்
கூற்றாகும்.

உலகில் தோன்றிய முதன்மையான, மிகத்தொன்மையான
இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இது 2600 ஆண்டுகளுக்கு
முன்பே இயற்றப்பட்டு இருக்கிறது.
இலக்கண நூலைப் போன்று அது தோன்றுவதற்கு ஆதாரமான
இலக்கியங்கள் அம்மொழியில் பெருமளவில் உருவாக்கியிருக்க
வேண்டும். அந்த வகையில் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு,
எட்டுத்தொகை விளங்குகிறது.

இந்நூல் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் பல புலவர்களால்
பலப் பகுதிகளிலிருந்து தொகுக்கப்பட்ட தொகை நூல்கள் ஆகும்.
எனவே உலகிலேயே முதல் தொகுப்பு நூல் என்ற பெருமை நம்
தமிழ்மொழிக்கு உண்டு. எனவே காலத்தால் இலக்கணத்தால்
இலக்கியத்தால் மிகவும் தொன்மை வாய்ந்ததாக தமிழ் மொழி
திகழ்கிறது.
இச்செய்திகளையும் மற்றும் தரவுகளையும்
1. www.tamilvu.org
2. www.tamishinzhchi.blogspot.com
3. www.kaniyatamil.com
4. www.varalaaru.com
5. www.ta.wikibooks.org
6. www.ta.cict.in
7. www.tamilthottam.in
போன்ற இணையதளங்கள் மற்றும் வளைப்பூக்களில்
கிடைக்கின்றன.

2. தனித்தன்மை

உலகமொழிகளில் செம்மொழித் தகுதியைப் பெற்ற மொழிகளிடம்
இல்லாத தனிச்சிறப்பு தமிழ்மொழிக்கே உண்டு. அந்த வகையில் தமிழ்
மொழி மட்டுமே உலகில் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற
முத்தமிழாக வளர்ந்து, வளம் பெற்று வந்துள்ளது. இதனைச்
சிலப்பதிகாரம்,
”இயலிசை நாடகப் பொருட்தொடர் நிலைச் செய்யுள்” என்று கூறி உறுதிப்படுத்துகிறது.
சங்ககாலத் தமிழ்ப் புலவர்கள் ஒட்டு மொத்த மனித வாழ்வையும்
அகம்-புறம் என்ற அடிப்படையில் பிரித்து இலக்கியம்
படைத்துள்ளனர். சமுதாய வாழ்க்கையில் காதலை, அன்பை அகம்
என்றும், வீரம், கொடை சார்ந்த வாழ்க்கையைப் புறம் என்றும் பெரும்
பிரிவாகப் பிரித்து இலக்கியம் படைத்துள்ளனர். மேலும் அகத்தை,
திருமணத்திற்கு முன்பு நடந்த வாழ்வை களவியல் என்றும் திருமணத்திற்குப்
பின்பு வாழ்ந்த வாழ்வை கற்பியல் என்றும் தமிழர் வாழ்க்கை
நெறிகளை பகுத்து வாழ்ந்ததை இலக்கியங்கள் மூலம் பதிவு
செய்துள்ளனர். இது தமிழ்மொழியின் தனிச்சிறப்பாகத் திகழ்கிறது.
தமிழின் தனிச்சிறப்பாக உலகே வியக்க வைக்கும் அடுத்த கட்ட
பெருமை நிலத்தைப் பிரித்து அந்நிலத்திற்குரிய இலக்கியங்கள்
பாடியவையாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெல்லை, பாலை என்ற
ஐந்து வகை நிலப்பகுப்புகளாகும்.
1 www.tamilvu.org
2. www.muthukamalam.com
3. www.mintamil.com
4. www.thamizulagamviza.blogspot.com
5. www.tamil.chennaionline.com
போன்ற இணைய தளங்கள் மற்றும் வலைப்புக்கள், மின்
குழுமங்களில் தகவல்கள் விரவிக் கிடக்கின்றன்.

3. பொதுமைப் பண்புகள் (Common Character)

தமிழ் இலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள்) பொதுவாக தனி
மனித கருத்தையோ, ஒரு சமுதாயத்தின் பழக்க வழக்கங்களையோ
அல்லது ஒரு குறிப்பிட்ட இனக் குழுக்களுக்காகவோ இலக்கியம்
படைக்கவில்லை. உலகமயமாக்களின் நன்மைகளைக் கருத்தில்
கொண்டே உலகில் வாழும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும்
வகையிலும், இலக்கியத்தின்படி வாழ்ந்து உலக மக்கள் இனம்
செழித்தோங்கும் விதத்தில் பொதுமைத் தகுதிகளைப் பெற்ற
இலக்கியமாக இன்றும் தமிழ் விளங்குகிறது. இதனை உணர்ந்த காலக்
புலவன் கணியன் பூங்குன்றனார்,

”யாதும் ஊரே யாவரும் கேளீர்....”
என்ற உன்னத வைர அடியை பாடிச் சென்றுள்ளார். உலகப்
பொதுமறையாகவும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட
நூலாகவும் திகழும் திருக்குறள் இன்றளவும் பொதுமைப் பண்புகளைப்
பெற்றுத் திகழ்கிறது. எனவே உலகமே வியப்பாக காணும் வகையில்
கன்னியாகுமரியில் 133 அடி உயர சிலை ஒன்றும் உள்ளது. நாடு,
மொழி, இனம், சமயம் அனைத்து கடந்த நிலையில் மனித குல
நலன்களை மட்டுமே கருத்திற் கொண்டு படைக்கப்பட்ட
நீதிக்களஞ்சியமாக திருவள்ளுவர் பொதுமைப் பண்போடு
படைத்துள்ளார். இதுபோன்ற அறிய இலக்கியச் செய்திகள் பொதுமைப்
பண்புகளைப் பெற்றுத் திகழ்கிறது. இதனை,
1. www.tamilvu.org
2. www.tamilheritage.org
3. www.koodal.com
போன்ற இணையதளங்களில் காணமுடிகின்றன.

4. நடுவுநிலைமை (Neutrality)

உலக இலக்கியங்கள் ஒவ்வொன்றும் ஒரு மதத்தைச் சார்ந்தோ,
அல்லது அந்நாட்டு மக்களுக்குக் கூறும் அறிவுரையாகவே தான்
அமைந்துள்ளன. (எ.கா. §.¡மரின் இலியட், ஒடிசி, சமஸ்கிருதத்தில்
மகாபாரதம், இராமாயணம்) ஆனால் தமிழ்மொழியில் அமைந்த சங்கத்
தொகுப்புப் பாடல்கள், அல்லது நீதி நூல்கள் அனைத்தும் நடுவு
நிலைமையோடு படைக்கப்பட்ட இலக்கியங்கள் ஆகும்.
புறநானூற்றில் ஔவையார் நல்ல வளர்ச்சிப் பெற்ற நாடாக
இருக்க வேண்டுமெனில் அது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள்
அனைத்திற்கும் நடுநாயகமாக விளங்கும் பாடலைப்

”எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே” (புறம்-187)
என்று பாடியுள்ளார்.

அல்பர்ட் .ஸ்வைட்சர், ஏரியல் போன்ற மேலைநாட்டு அறிஞர்கள்
திருக்குறளை உலக மக்களின் ஒரே மறை நூல் என்று கூறி
வியக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், அனைத்து
வேறுபாட்டுணர்வுகட்கும் அப்பாற்பட்ட நிலையில் மனித குலத்தை
மட்டும் மனதிற் கொண்டு நடுநிலைமையில் நெறி வகுத்துச்
சொல்வதுதான் காரணமாக அமைகின்றது.
1. www.kuralamutham.blogspot.com
2. www.thinnai.com
3. www.muthukamalam.com
4. www.tamilkalanjiyam.com
5. www.santhiran.com
போன்ற இணையதளங்களில் அதிகமான நடுநிலையான தமிழ்
இலக்கியச் செய்திகள் கிடைக்கின்றன.

5. தாய்மைத் தன்மை (Parental Kingship)

இன்று உலகெங்கிலும் பேசப்படும் பல்லாயிரக்கணக்கான
மொழிகளுக்கும் தாய்மொழி என்ற ஒன்று இருக்க வேண்டும். காலம்
செல்லச் செல்ல ஒலிகளின் கூறுபாட்டால் மாறி மருவி இன்று திரிந்தும்
பேசப்படுகிறது. இத்தகைய சூழலில் ஆதி மொழியாகப் பல்வேறு
மொழிகள் இருந்திருக்க வேண்டும். எ.கா. கிரேக்கம், ரோம், இத்தாலி,
போன்றவைகள். அதன் வரிசையில் தமிழும் இடம்பெற்றிருக்கிறது.
ஒரு காலத்தில் பூமி ஒரு பகுதியாக இருந்துள்ளது. இது அறிவியல்
உண்மை. பின்பு கடல்கோள்களால் பூமிப்பந்து பிளவுப்பட்டதால் பல
பாகங்களாகப் பிரிந்துள்ளன. இவற்றில் ஆசியா கண்டத்திலிருந்து
பிரிந்து ஐரோப்பா, அமெரிக்கா, ஆ.திரேலியா எனப் பெயர் பெற்று
விளங்குகிறது. இன்று கிரேக்க மொழி உலக மொழிகளில்
முதன்மையானது என்று கூறும் போக்கில் மறுப்பேதும் இல்லை.
அப்படியானால் கி.மு.484ல் கிரேக்க வரலாற்று நூலை எழுதிய
.ரிடோ. என்பவர் தமது நூலில் கிரேக்க இலக்கியத்தில் பல தமிழ்ச்
சொற்கள் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இதனைக்
கொண்டு நோக்கும் போது கிரேக்கத்துடன் தமிழ்மொழி நல்ல
இணக்கத்துடன் இருந்துள்ளது என்பது உண்மையாகின்றன.

இன்றும் இந்திய மொழிகளில் திராவிட மொழிக் குடும்பம்
என்பதற்குத் தலைமையாக, தாய்மையாக விளங்கும் மொழி
தமிழ்மொழியே என்று திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை
எழுதிய அறிஞர் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளதையும் ஆராய்ந்தால்
தமிழ்மொழி பல மொழிகளுக்குத் தாயாக விளங்கியது தெற்றெனப்
புலப்படும். இவைப் போன்ற இன்னும் பல அறியச் செய்திகளும்
இணையத்தில் அதிகமாகக் கிடைக்கின்றன.

1. www.kaniyatamil.com
2. www.koodal1.blogspot.com
3. www.tamilanbargal.com
4. www.palkalaikazhakam.com
5. www.facebook.com

6. பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு.
(Arts and Culture)

இலக்கியங்கள் எழுதப்பட்ட அல்லது தோன்றிய காலக்
கட்டங்களில் வாழ்ந்த மக்களின் போக்கை முழுமையாக உணர்த்தும்
இலக்கியமே தலைசிறந்த இலக்கியங்களாக ஏற்றுக் கொள்ள முடியும்.
அவ்வகையில் சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கிய
படைப்புகள் அனைத்திலும் மக்களின் பண்பாடும், கலை அனுபவமும்,
பட்டறிவும் வெளிப்பட்டு நிற்கின்றன.

சங்க இலக்கியங்களில் பண்பாடு என்பது ஒரு மரபாகவே
கையாண்டுள்ளனர் சங்கப் புலவர்கள். தமிழரின் விருந்தோம்பல் பண்பு,
அனைத்து மக்களும் நல்லவர்களாக வாழும் எண்ணம், குறைவாகப்
பொருள் கிடைப்பின் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் சமதர்ம
மனநிலை, ஆடை அணிகலன்கள் என பண்பாட்டை உறுதிப்படுத்தும்
போக்கில் உள்ளன.

கலைகள், தமிழ் மக்கள் மற்றும் புலவர்களின் இலக்கியங்களால்
பரவலாகவும், மிகுதியாகவும் காணப்படுகின்றது. அந்தக் காலக்¡யகமாக விளங்கும் பாடலைப்
கட்டடக் கலையினை பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் வெளிக்
கொணர்கின்றன. மேலும் இயல், இசை, நாடகம் என்ற மூன்று
கலைகளும் ஒருங்கே பெற்று வளர்ந்து வந்துள்ளன. சிறியாழ்,
பேரியாழ், சடங்கோட்டு யாழ் என யாழ் அமைப்பும், அழகும்
வெகுவாக தமிழ் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத்
திகழ்ந்திருக்கின்றன.

பட்டறிவு என்றால் புலவர்கள் தான்கண்ட, கேட்ட பல
செய்திகளையும் பாடல்களாகப் பதிவு செய்துள்ளனர்.
இருவேந்தர்களையும் சந்து செய்வித்து கோவூர்கிழார் பாடுகிறார். மூன்று
நிலப்பரப்பு மன்னர்கள் (சேர, சோழ, பாண்டியர்கள்) தங்களுக்குள்
போரிட்டுக் கொள்வதைத் தடுக்க இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம்
இயற்றப்படுகிறது. இவை போன்று எண்ணற்ற இலக்கியங்கள்
பட்டறிவின் வெளிப்பாடாக விளங்கி தமிழைத் தலை நிமிர்த்தி
நிற்கின்றன. இவைகள் பற்றிய மேலும் பல தகவல்களை

1. www.uyirmmai.com
2. www.thirutamil.blogspot.com
3. www.ta.wikipedia.org
4. www.ulakatamizhchemmozhi.org
5. www.tamilauthors.com

போன்ற இணைய தளங்களில் காணமுடிகின்றது.

7. பிறமொழித் தாக்கமில்லா தனித்தன்மை

தமிழ்மொழி பிறமொழித் தாக்கமில்லாத மொழியாக தொடக்க
காலத்தில் இருந்து வந்துள்ளன. சங்க இலக்கியம் இதற்குச் சான்றாகத்
திகழ்கின்றது. மேலும் உலக இலக்கண ஆசிரியரான தொல்காப்பியரின்
தொல்காப்பியத்தில் பிறமொழிக் கலப்பு இல்லை. இருந்தாலும்
பிறமொழிச் சொற்களை கடன் வாங்கிக் கொண்டு மீண்டும் அதனைத்
திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
ஒரு சிலவர் இவற்றில் பிறமொழிக் கலப்பு இருக்கிறது என்பர்.
ஆனால் ஓலைச்சுவடியிலிருந்து அச்சு வடிவம் பெற்ற போது சில
இடைச்செருகல்கள் நடந்துள்ளன.
தமிழ் மொழியில் பிறமொழிக் கலப்பில்லாமல் புது சொல்லை
உருவாக்க முடியும். ஆனால் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு
மொழியில் புதிய சொல்லை உருவாக்க வேண்டுமானால் கிரேக்க
இலத்தீன், .ஹீப்ரூ, சமஸ்கிருத மொழிச் சொற்களைத்தான் நாடும் நிலை
உள்ளது.இச்சொல் ஆராய்ச்சியை ஆராய்ந்த எமனோவும், ப்ரோவோம்
”உலகத்து மொழிகளிலேயே மிக அதிகமான வேர்ச்சொற்களையுடைய
மொழியாகத் தமிழ் திகழ்கிறது” என்று கூறியுள்ளதே உண்மை
யாகின்றன.

இன்று விக்கிப்பீடியாவில் 175 மொழிகள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் தமிழ் மொழியைச் சார்ந்த கலைச் சொற்கள் உலகமொழிகளின்
வரிசையில் முதல் 10 இடத்தில் உள்ளது என்பது உண்மை. எனவே
தமிழ்மொழி பிறமொழிக் கலப்பு இல்லாமல் பன்னெடுங்காலம்
வாழ்ந்து வரும் செம்மொழியாகும்
.
1. www.kaniyatamil.com
2. www.tamilanbargal.com
3. www.infit.org
4.www.ta.wikipidia.org

8.இலக்கிய வளம் (Literary Prowy)

தமிழ் மொழி இந்தியாவில் தோன்றிய இந்திய மண்ணிற்கு
மட்டுமே தனிச்சிறப்பான இலக்கிய மரபினைக் கொண்டது. இந்த
இலக்கிய மரபு சமகிருதத்திலிருந்து பெறப்பட்டது அல்ல.
தென்னிந்தியாவில் சமஸ்கிருதமொழி செல்வாக்குப் பெறுவதற்கு
முன்னரே தமிழ்மொழியும் தமிழ் இலக்கியங்களும் தோன்றியுள்ளன.
அதிகமான இலக்கியங்கள் தோன்றிய காலத்தையே செம்மொழிக் காலம்
என்பர். அந்த வகையில் சங்க இலக்கிய காலம் மிகுதியான
இலக்கியங்களைப் பெற்ற காலம் எனலாம். இதனை செக் நாட்டு
அறிஞரும், ஆழ்ந்த தமிழ்ப்புலமையுடையவரான கமில் சுவலபில்
சங்க இலக்கியத்தை ஆய்ந்து 26,350 வரிகளில் அமைந்திருப்பதைக்
கணக்கிட்டு கூறியுள்ளார்.

அமெரிக்கப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் திரு.ஜார்ஜ்
எல்.ஹார்ட் அவர்கள் .உலக இலக்கிய வரலாற்றையும்
பலமொழிகளின் இலக்கியங்களையும் படித்துள்ளேன். ஆனால் தமிழ்
மொழியில் புறநானூற்றில் இருக்கும் வரலாற்றுக் கூறுகள் உலக
மொழிகளில் எங்குமே காணப்படவில்லை என்று தமிழ் மொழியின்
இலக்கிய வளத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறார்.
மக்களைப் பற்றிப் பாடிய இலக்கியம், குடிமக்களைப் பற்றிப்
பாடிய குடிமக்கள் இலக்கியம் எனப் பெயர் பெற்ற சிலப்பதிகாரம்
மணிமேகலையும் இலக்கிய வளத்திற்குத் தக்க சான்றாக விளங்குகிறது.

9.உயர்சிந்தனை (Noble Ideas and Ideals)

செம்மொழித் தகுதிகளில் குறிப்பிடத்தகுந்தன உயர்சிந்தனைகள்
ஆகும். இலக்கியங்களில் உயர்சிந்தனைகளாக புலவர்கள் முன் வைக்க
காரணம் அவர்கள் நிகழ்கால மக்களுக்காக இலக்கியங்கள்
படைக்கவில்லை. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு
வரும் மக்களுக்குப் பயன்படவேண்டும் என்ற உயர்சிந்தனைகளால்
படைத்துள்ளனர். அவைகளில் முடிமணியாய்த் திகழ்வன, ”யாதும்
ஊரே யாவரும் கேளீர்” என்ற கோட்பாடும், ”ஒன்றே குலம், ஒருவனே
தேவன்” என்ற வாழ்வியல் நெறியுமாகும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் எந்த
மொழியிலாவது, எந்த இலக்கியத்திலாவது இத்தகைய உயர்
சிந்தனைகள் பதிவாகி உள்ளனவா என்றால் இதுவரை இல்லை என்றே
கூறலாம்.

மேலும் உலக ஆசான் திருவள்ளுவரின் திருக்குறளும் ஒரு
மணிமகுடம். தமிழ் தமிழ்நாட்டில் எழுதப்பட்டிருப்பினும் தமிழன்
என்னும் சொற்கள் அறவே இடம் பெறவில்லை. அ•து உலகியலின்
உயரிய சிந்தனைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது
.
1. www.kaniyathamil.com
2. www.duraiarasan.blogspot.com
3. www.muthukamalam.com
4. www.tamilanbargal.com
5. www.infit.org
6. www.ta.wikipedia.org

போன்ற இணையதளங்கள் வலைப்பூக்கள் மூலம் இதன்
தரவுகளைக் காணலாம்.

10.கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு-
பங்களிப்பு

உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத ஒரு தனித்தன்மை
தமிழுக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றதாக உள்ளது. அவையே
முத்தமிழ் என்ற தனிச்சிறப்பு ஆகும்.

உலக இலக்கியங்களை ஒரே பார்வையில் ஆராய்ச்சியாளர்கள்
அணுகுவார்கள். தமிழ் மொழியை மட்டும் இயற்றமிழ், இசைத்தமிழ்,
நாடகத்தமிழ் என மூவகையாகக் காணும் போக்கு உயரிய
தனித்தன்மையாக விளங்குகிறது.

இம் முத்துறைகளும் ஒரே இலக்கியப் படைப்பில் இணைந்த
நிலையில் உருவாக்கப்பட்ட காப்பியமே தமிழில் முதன்முதலாக
உருவாக்கப்பட்ட சிலப்பதிகாரம் ஆகும். இதனைச் சிலப்பதிகாரப்
பாயிரத்திலேயே ஆசிரியர் இளங்கோவடிகள்

”இயலிசை நாடகப் பொருட் டொடர்
நிலைச் செய்யுள்”
எனக் கூறியிருப்பதைக் கொண்டு மூன்று தமிழும் ஒன்றிணைந்த
நிலையில் உருவாக்கப்பட்ட காம்பியமாக திகழ்கிறது.

11.மொழிக் கோட்பாடுகள் (Linguistic Principles)

செம்மொழித் தகுதிகளில் மொழிக் கோட்பாடுகளும் ஒன்று.
சாதாரணமாக .மொழி நூல். (Philology) அடிப்படையில் மொழியியல்
கோட்பாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அளவுகோளாகக்
கொண்டு ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. திராவிட ஒப்பிலக்கண
ஆய்வு நூல் எழுதிய கால்டுவெல் போன்றோர்கள் இந்த அடிப்படையில்
மொழியை ஆய்வு செய்தவர்களே ஆவார்.

இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் முறையிலும் அதன்
அடிப்படையிலும் மொழியியல் கொள்கையும் கோட்பாடும் மாற்றம்
பெற்றது. மொழியியல் (Linguistic) என்ற அடிப்படையில் மொழி
வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்ய முனைந்தனர்.

மொழியியலின் தந்தை எனப் போற்றப்படும் திரு எமனோ
அவர்கள் தொல்காப்பிய இலக்கண நூலை ஆய்வு செய்து வியந்து
போகின்றார். காரணம் தற்பொழுது வகுக்கப்பட்ட மொழியியலில்
கூறியுள்ள விதிகள் அச்சு மாறாமல் தொல்காப்பியர் பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளதுதான்.

எழுத்ததிகாரத்தில் சொற்கள் (சொல்) பிறப்பியலில் எப்படி
எழுத்துக்கள் பிறக்கின்றன, அதன் உச்சரிப்பு ஒலிகள், போன்றவைகளை
அறிவியல் பூர்வமாக அமைத்துள்ளார். இ•து இன்றைய மொழிக்
கோட்பாடுகளுக்கெல்லாம் தந்தையாக விளங்கிய மொழி தமிழ் மொழி
என்பதில் பெருமையே ஆகும். மேலும் இது தொடர்பான தரவுகளை,

www.kaniyatamil.com
www.tamilnool.com
www.ta.wikipedia.com
www.akshayapaathram.blogspot.com
www.youtube.com
போன்ற இணையதளங்களில் காணலாம். மேலும் செம்மொழித்
தமிழ்த் தரவுகளாகப் பல இணையதளங்கள் உள்ளன. அவைகளில்
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு நிகழ்வுகளையும், அதில்
வாசிக்கப்பட்ட கட்டுரைகளையும் www.wctc2010.org என்ற
இணையதளத்தில் காட்சிப் படம் மூலம் நாம் கண்டு கருத்தைப்
பெறலாம்.இவைபோன்று வலைப்பூக்கள், இணையதளங்களின் வாயிலாக தமிழில்
தரவுகள் கிடைக்கின்றன. இது பல வகையான ஆராய்ச்சிகளுக்கும்
தமிழ் மொழியின் தரவுகளுக்கும் பெரிதும் பயன்படுகின்றன.

Tuesday, July 19, 2011

தொடுவானம்….மதுரை மாவட்ட நிர்வாகமும்,தமிழ் உலகம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் .

|0 comments
தொடுவானம்….மதுரை மாவட்ட நிர்வாகமும்,தமிழ் உலகம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் மதுரைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்டமாக 25 ஊராட்சிகளுக்கான தொடுவானம் பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சகாயம் துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள்


தொடக்கத்தில் திரு.லதானந்த அவர்கள் மின் அட்சி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அவரைத்தொடர்ந்து திரு.தேனி.எம்.சுப்பிரமணி அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் தொற்றம் அதன் வளர்சி மற்றும் பங்களிப்புப் பற்றி விவரித்துக்கூறினார்.

திரு.லதானந்த,திரு.மாயவரத்தான்,திரு. தேனி.எம்.சுப்பிரமணி,பேராசிரியர் சரவணன்.

வலைப்பூக்களின் தொடக்கம், அதன் வகைகள் பற்றி திரு.மாயவரத்தான் உரை நிகழ்தினார். அதனைத் தொடர்ந்து முனைவர் துரை.மணிகண்டன் கணினித்தமிழும்,தமிழில் தட்டச்சுப்பயிற்ச்சிகுறித்த கருத்துக்களை தெளிவுபட எடுந்துக் கூறினார்.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊராட்சிமன்ற எழுத்தர்கள்,மற்றும் கிராம தன்னார்வ தொண்டர்கள்.


நிகழ்ச்சியில் முனைவர் துரை.மணிகண்டன்
மதுரை ஆட்சியருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு.விஜயகுமார் திரு.மணிகண்டன், திரு.நாகமணி,திரு.வி.பி.மணிகண்டன்,திரு.செல்வமுரளி,திரு.லதானந்த.



மதியம் 2-மணிக்கு ஊராட்சி அலுவலர்களும் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கும்
தொடுவானம் வலைப்பாதிவில் எவ்வாறு மக்களின் குறைகளை பதியவேண்டும்,என்பது குறித்து திரு, செலவமுரளி, திரு.நாகமணி.முனைவர் துரை.மணிகண்டன்.விளக்கம் அளித்தனர்.
இறுதியாகா ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் தொடுவானம் நிகழ்ச்சியின் பயன்களைத் தொகுத்து விளக்கினார்.
. அவர் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் 25 லட்சத்து 62 ஆயிரத்து 279 பேர் உள்ளனர். இதில் ஊரக பகுதியில் மட்டும் 11 லட்சத்து 29 ஆயிரத்து 28 பேர் உள்ளனர். ஊராட்சி ஒன்றியங்கள் 13, கிராம ஊராட்சிகள் 431, பேரூராட்சிகள் 10, நகராட்சிகள் 3, மூன்றாம் நிலை நகராட்சிகள் 3 உள்ளன. தொடுவானம் என்ற இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் புதிய முயற்சி. இது முதற்கட்டமாக 25 கிராமங்களில் செயல்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும் 5 பேருக்கு வழங்கப்படுகிறது. தொலை தூர கிராமங்களில் இருப்போர் கலெக்டரை சந்திக்க வேலை இழப்பு, பணச் செலவு, காலவிரயம் போன்றவற்றை சந்திக்கின்றனர்.

கிராமப்புற மக்கள் தங்களின் கோரிக்கை குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கொடுப்பதற்காக தொலைதூரங்களில் இருந்து இங்கு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஒரு நாள் வேலை இழப்பு, பணச் செலவு, காலவிரயம் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்கவே இந்த தொடுவானம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, கிராம மக்கள் அந்தந்த கிராம ஊராட்சிகளில் உள்ள கணினிகளில் இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல் மூலம் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கோ நேரடியாக அனுப்பலாம். அவ்வாறு அனுப்பப்படும் மனுக்களுக்கு ஒப்புதல் கடிதமும் கொடுக்கப்படும்.
இந்த மாவட்டத்தில் மொத்தம் 431 கிராம ஊராட்சிகள் உள்ளன. முதல் கட்டமாக 25 ஊராட்சிகளில் இந்த தொடுவானம் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றை இணையதளம் மூலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் 5 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இப்போது பயிற்சி அளிக்கப்படுகிறது. இது இந்த மாவட்ட நிர்வாகத்தின் ஓர் புதிய முயற்சியாகும்.
இந்தத் திட்டத்தை ஊராட்சியில் உள்ள அலுவலர்கள் திறம்பட செயல்படுத்தி கிராமப்புறத்துக்கும், நகர்ப்புறத்துக்கும் ஒரு பாலமாக செயல்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.

வாழ்க தொடுவானம் வளர்க மதுரை மக்கள்

Friday, July 15, 2011

தொடுவானமும் மதுரை மாவட்ட நிர்வாகமும்

|0 comments
தொடுவனமும் மதுரை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்தும் இணையத்தமிழ் கருத்தரங்கிற்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.

Thursday, July 14, 2011

மதுரையில் தொடுவானம் கணினி மற்றும் இணையப்பயிலரங்கம்

|0 comments
மதுடை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை 16-7-2011 அன்று கணினி மற்றும் இணையத்தமிழ் குறித்த கருத்தரங்கு நடைபெறுகின்றது.
இநிகழ்வில்
மதுரை மாவட்டம் முழுக்க இந்தத் திட்டத்தை அமல்படுத்த எண்ணி அதற்கு முன்னோடியாக மதுரைமாவட்டத்தின்
கடைக்கோடியில் அமைந்துள்ள 26 கிராமங்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கும் வகையில் 130 தன்னார்வலர்களுக்கும்,
25 கிராமநிர்வாக அலுவலர்களுக்கும்,26 ஊராட்சி எழுத்தர்களுக்கும் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தப்
பயிற்சி முடிந்த பின் அடுத்தடுத்த கட்டமாக மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் இந்தப்
பயிற்சி விரிவுபடுத்தப்படும். தமிழ் உலகம் அறக்கட்டளை மாவட்ட ஆட்சியருடன் கலந்துபேசி இதற்கான
ஏற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயிற்சி மற்ற மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும் ஒரு
எடுத்துக்காட்டாக அமையும் என்பது திண்ணம்.

தொடுவானம்....

இந்தப் பயிற்சிக்கு ”தொடுவானம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் அதிகம் படிக்காத, பள்ளி இறுதிவகுப்புவரை
பயின்றவர்களையே பெரும்பாலும் தேர்வு செய்து தன்னார்வலர்களாகப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். 40விழுக்காடுக்கு
மேல் பெண்கள் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் பார்வையற்ற,
குறைபாடுள்ளவர்களும் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்யப்பட்டு அவர்களும் கணினியைப் பயன்படுத்தி தங்கள்
கிராமக் குறைகளை மனுவாக அனுப்ப இந்தத் தொடுவானம் திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பயிற்றுநர் பட்டாளம்....

இந்தப் பயிற்சித்திட்டத்தில் மென்பொறியாளர் தகடூர் கோபி அவர்கள் முதன்மைப் பயிற்றுநராக இருந்து வழி நடத்தவுள்ளார். இவருக்கு உறுதுணையாகக்
களமிறங்கி நம் தமிழ் உலகம் உறுப்பினர் திரு.செல்வமுரளி அவரது குழுவினருடன் பயிற்சியளிக்கவும் தொழில்நுட்பப்
பணிகளையும்,அவருடன் விண்மணி இணையத்தள நிறுவனர் நெல்லை மென்பொறியாளர்.திரு.நாகமணிஅவர்களும்
கவனிக்கிறார். தன்னார்வலர்களுக்கான பயிற்சியை அளிப்பதில் நம் தமிழ் உலகம் உறுப்பினர்கள் முனைவர் துரை.மணிகண்டன் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பிலும், தேனி.எம்.சுப்பிரமணி விக்கிப்பீடியா பற்றியும் உரை நிகழ்த்த உள்ளனர்

Thursday, July 7, 2011

உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)

|0 comments
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்)

தமிழர்கள் கூடிவாழ்ந்தால் கோடி நன்மைகள் பெறுவார்கள் என்ற உயர்ந்த எண்ணத்தில் விளைந்ததுதான் உத்தமம் அமைப்பாகும். உலகத் தமிழர்களின் ஒட்டு மொத்த தமிழ் இணையக் கனவை நனைவாக்கியதுதான் இந்த உத்தமம். இது தொடங்கிய நாள் முதலாக இன்று வரை இணையத்தமிழுக்காக எண்ணிலடங்கா வளர்ச்சிப் பணிகளை செய்து வருகின்றன. இந்த அமைப்பின் தோற்றம், தோன்றக் காரணம், இதன் பயன்கள், பங்களிப்புகள், இதனால் தமிழ் தரவு தளங்கள் எந்த அளவிற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதைக் பற்றி இங்கு பதிவு செய்துள்ளேன்.

தோற்றம்

உலக்ததமிழ் தகவல் தொழில் நுட்ப மன்றம் உத்தமம் சிங்கப்பூரில் ஜுலை மாதம் 24-ஆம் தேதி 2000த்தில் தோற்றம் பெற்றது. இரண்டு தமிழ் இணைய மாநாடுகள் நடந்து முடிந்த நிலையில் 2000 ஆண்டில் முன்றாவது தமிழ் இணைய மாநாடு இலங்கையில் நடைபெற இருந்தது. இந்த மாநாடு நடைபெற முன்னேற்பாடுகள் செய்ய 2000-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12, 13, 14 தேதிகளில் இலங்கையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தரும், இந்நாள் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் துணைவேந்தருமான முனைவர் மு.பொன்னவைக்கோவும், முன்னைய துணை வேந்தரும், தமிழ் இணையப் பல்கலைக்கழகத் தலைவரும் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமியும், அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் ஆகியோருடன் சிங்கப்பூரிலிருந்து அருண்மகிழ்நனும், மலேசியாவிலிருந்து முத்து நெடுமாறனும் கலந்து கொண்டுள்ளனர்.

ஆகஸ்டு 13-ஆம் தேதி மாலை 6-00 மணியளவில் இதுபற்றிப் பேராசிரியர் வா.செ.குழந்தைசாமி, துணைவேந்தர். மு.பொன்னவைக்கோ, பேராசிரியர் மூ.ஆனந்தகிருஷ்ணன், திரு. அருண்மகிழ்நன், முத்துநெடுமாறன், சிவதாசன், சோமசுந்தரம், முத்து நெடுமாறன், குமாரதாசன் போன்றோர்கள் கலந்துரையாடிக் கொண்டிருக்கின்றனர் அப்போது அருண்மகிழ்நன் ‘International Steering Committee On Tamil Inaiyam’ என்ற அமைப்பை உருவாக்க வேண்டு என்று முனைவர் கலியாணசுந்தரம் வரைந்தனுப்பிய திட்டத்தை முன்மொழிந்துள்ளார். அது தொடர்பாக நீண்டநேரம் விவாதம் நடைபெற்றுள்ளது. இறுதியாக முனைவர் கலியாணசுந்தரத்தின் கருத்து ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் அதில் சில சிக்கல் இருந்துள்ளன Steering Committee என்று பெயரிடுவதில் யாருக்கும் உடன்பாடு இல்லை. காலம் கடந்து கொண்டிருப்பதால் அனைவரும் இரவு ஏதாவது ஒரு பெயருடன் வருவோம் என்று விவாதம் களைக்கப்பட்டு அவரவரின் அறைக்குச் உறங்கச் சென்று விட்டனர்.
துணைவேந்தர் பொன்னவைக்கோ அவர்களுக்கு விடியற்காலம் 4-00 மணிக்கு விழிப்புத் தட்ட விடியற்காலையில் ஏதாவது ஒரு தலைப்பு வேண்டுமே என்று நன்கு சிந்தித்து “International Fourm For Information Technology in Tamil – Infitt” என்றும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் - உத்தமம் என்ற பெயரை தேர்ந்தெடுத்துள்ளார். இதனைக் காலை அனைவரும் ஒன்று கூடி யார் யார் என்ன என்ன பெயர்களைக் கொணடு வந்துளளர் என முனைவர் பொன்னவைக்கோ வினவ யாரும் இதுபற்றி சிந்திக்கவில்லை என்பது புலனாகிறது. உடனே தான் சிந்தித்த உத்தமம் - உலகத் தகவல் தொழில் நுட்ப மன்றம் என்று தமிழுலும், Infitt – International Fourm For Information Technology in Tamil என்று ஆங்கிலத்தில் பெயரிடுவது என்று கூற அனைவரும் அதனை வரவேற்று அப்பெயரை ஏற்றுக் கொண்டனர் என்று அவர் எழுதிய இணையத் தமிழ் வரலாறு என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். (பக்.60) தமிழ் இணையம் 2000 மாநாடு இலங்கையில் போர் காரணமாக சிங்கப்பூரில் ஜுலை மாதம் 22-லிருந்து 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. இம்மாநாட்டில் தான் 23-07-2000 அன்று உத்தமம் தோற்றம் பெற்றது.

உத்தமத்தின் திட்டபணிகள்

உத்தமத்தின் முதன்மைப் பணியாக இணையத் தமிழின் ஆய்விற்காக எட்டு ஆய்வுப் பணிக்குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. 5 பணிக்குழுக்கள் தமிழ் இணையம் 2000 மாநாட்டிலும் எஞ்சிய 3 பணிக்குழுக்கள் பிற்காலத்திலும் நிறுவப்பட்டுள்ளன.

பணிக்குழு-1 : தமிழ்க்கலைச்சொல் தொகுப்பு.
பணிக்குழு-2 : ஒருங்குறித் தமிழ் [Unicde Tamil] ஆய்வு
பணிக்குழு-3 : இணையத்தள தமிழ் முகவரி வடிவமைத்தல்.
பணிக்குழு-4 : தமிழ் வரிவடிவக் குறியீட்டுத் தரப்பாடு
பணிக்குழு-5 : ஆங்கில வரிவடிவத் தமிழ்த் தரபாடும்
பணிக்குழு-6 : தமிழ் எழுத்துரு படிவத்தறிதல்
பணிக்குழு-7 : லினக்ஸிஸ் தமிழ் (Tamil in Linux)
பணிக்குழு-8 : தமிழ் அனைத்து எழுத்துரு 16-பிட்டு தரம்.

என்ற எட்டு பணிக்குழுவிலும் உலகில் பல்வேறு நாடுகளைச் சோர்ந்த தமிழறிந்த கணிப்பொறி வல்லுனர்கள் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

பங்களிப்பும் பணிகளும்

உத்தமம் குழு அமைக்கப்பட்ட பின் தமிழ் இணையம் 2001 என்ற தலைப்பில் மலேசியா நாட்டில் கோலாலம்பூரில் ஆகஸ்டு மாதம் 26-28 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டின் கருப்பொருளாக “வளர்ச்சிக்கான வழிகள்” என்ற ஆய்வுப் பொருண்மையில் நடத்தப்பட்டது. மின்வணிக மொழியைத் தமிழாக்கித் தமிழை வணிக மொழியாக்கல் என்ற கணிப்பொறிக் கல்வித்திட்டத்தை உருவாக்கியுள்ளனர். மலேசிய தமிழர்கள் பார்த்து பயன்பெறுமாறு தகவல் தொழில் நுட்பக் கண்காட்சியும் மாநாட்டில் நடத்தப்பட்டது. இதில் 30,000க்கும் அதிகமானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

தமிழ் இணையம் 2002 மாநாடு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் செப்டம்பர் மாதம் 27-29 தேதிகளில் நடைபெற்றுள்ளது. ‘மின் இணையப் பயன்பாட்டில் மக்களிடையே நிலவும் இடைவெளியைக் குறைத்தல் என்ற கருத்துக்களை முன் வைத்தது. இந்த இணைய மாநாட்டின் போதுதான் மாநாட்டுத் தலைவர் திரு. மணி மணிவண்ணன் முயற்சியால் ‘உத்தமம்’ அமெரிக்காவில் ஒரு பதிவு பெற்ற அமைப்பாகப் பதிவு செய்யப்பட்டது. இம்மாநாட்டில் தமிழ் ஒருங்குறி சிக்கல்கள் தொடர்பாக ஒருங்குறிக் குழும உறுப்பினர்களோடு கலந்தாய்வு நடைபெற்றது. மேலும் உலக அளவில் நடத்தப்பட்ட இணையதள வடிவமைப்புப் போட்டியும் இடம் பெற்றன. இம்மாநாட்டில்தான் ‘தமிழ் மரபு அறக்கட்டளை’ Tamil Heritage Foundation தொடங்கப்பட்டது.

தமிழ் இணையம் 2003 மாநாடு சென்னையில் ஆகஸ்டு மாதம் 22-24 ஆம் தேதிகளில் நடைபெற்றது. ‘தமிழ்க் கல்விக்குத் தகவல் தொழில் நுட்பம்’ என்ற கருப்பொருளைக் கொண்டு ஆய்வுகள் நிகழ்த்தப்பட்டன.

தமிழ் இணையம் 2004 மாநாடு சிங்கப்பூரில் டிசம்பர் மாதம் 11,12 ஆம் நாளில் நடைப்பெற்றது இதில் நாளைய தமிழ் தகவல் தொழில் நுட்பம் என்னும் கருப்பொருளில் தொழில் நுட்ப வளர்ச்சிப் பணிகள் பற்றிய கலந்தாய்வும் நடைபெற்றது.

2005-லிருந்து 2008 வரையிலான 4-ஆண்டுகள் தமிழ் இணைய மாநாடு எதுவும் நடைபெறவில்லை. அதன் பின்பு 2009-ல் ஜெர்மனியில் அக்டோபர் மாதம் 23 முதல் 25 ஆம் தேதிகளில் கொலோன் பல்கலைக் கழத்கத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் ‘கணினிவழிக் காண்போம் தமிழ்’ என்ற கருப்பொருளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழ் இணையம் 2010 தமிழ்நாட்டில் கோயமுத்தூரில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சூன் திங்கள் 23 முதல் 27ஆகிய நாட்களில் தமிழ்நாடு அரசு ஆதரவுடன் வரலாறு காணாத வகையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் உள்ள தமிழர்கள் அனைவரும் ஒரே தமிழ்க் குறியீட்டைப் பயன்படுத்த வேண்டும் அதுவும் ஒருங்குறி எழுத்துருவையே பயன்படுத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.இங்கு கணினி தொடர்பான கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இக்கண்காட்சியை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டுச் சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1997-ல் தமிழ் இணையத்தமிழ் முன்னோடி, தமிழ் இணையத்தின் தந்தை போராசிரியர் நா.கோவிந்தசாமியால் சிங்கப்பூர் மே திங்கள் 17,18 ஆம் தேதியில் நடைபெற்றது. இதில் ஒருமித்த தமிழ் எழுத்துரு தீர்வு முன் வைக்கப்பட்டது.
இரண்டாவது இணைய மாநாடு 1999-ல் தமிழ்நாட்டில் சென்னை நகரில் பிப்ரவரி 7,8,9-ஆம் நாட்களில் முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. இதற்குத் ‘தமிழ் இணையம் 99’ என்று பெயர் வைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் எழுத்துருவிற்குத் தீர்வு காணப்பட்டது. உலகம் முழுவதும் தமிழ் கணினியைப் பயன்படுத்துபவர்கள் Tam, Tab என்ற இரு தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிமுகப்படுத்தினர்.

இவ்வாறாக இதுவரை 10-தமிழ் இணைய மாநாடுகள் உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெற்றுள்ளன. அவை முறையே ஆண்டுவாரியாக
1. 1997 - சிங்கப்பூர்
2. 1999 - சென்னை, தமிழ்நாடு
3. 2000 - சிங்கப்பூர்
4. 2001 - கோலாலம்பூர் (மலேசியா)
5. 2002 - சான் பிரான்சிஸ்கோ, கலியோர்னியா,
6. 2003 - சென்னை, தமிழ்நாடு
7. 2004 - சிங்கப்பூர்,
8. 2009 - கொலோன் பல்கலைக்கழகம் ஜெர்மனி,
9. 2010 - கோயம்புத்தூர், தமிழ்நாடு
10. 2011 - அமெரிக்கா

இம்மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் இணையதளத்தில் மாநாடுகள் வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டு




2011ல் நடந்த மாநாட்டின் தொடக்கவிழா

இம்மாநாடுகளில் படிக்கப்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் இணையதளத்தில் மாநாடுகள் வாரியாக பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


உத்தமம் – தரவுகள்

தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் ஒவ்வொன்றும் கருத்து மிக்கது. சில மாநாட்டுக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. பல மாநாட்டுக் கட்டுரைகள், கருத்துரைகள் இணையத்திலேயே இடம் பெற்றுள்ளன. இணையம் தொடர்பான செய்திகளும், தமிழ் இணைய வளர்ச்சியும், எழுத்துரு, சொற்செயலிகள், பேச்சொலி, மொழிப் பெயர்ப்பு, உலாவி, அகராதிகள், புதிய நோக்கில் கல்வி, கணிப்பொறி இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தல், கணினி மொழியியல், தமிழ் சொல் திருத்திகள், தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு, தமிழ் மின் தரவுகள், தமிழ் எழுத்து உணரியின் செயல்பாடுகள், கணினியில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் வலைப்பூக்கள், தமிழ் தகவல் தொழில் நுட்பக் கருத்துக்கள், தமிழில் தேடு பொறிகள். தமிழ் ஒருங்குறி போன்ற பல்வேறு தலைப்புகளில் சுமார் 600 மேற்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் தளத்தில் கிடைக்கின்றன.
இதனை அனைத்துத் துறை மாணவர்களும் பார்வையிட்டுப் பயன் பெறலாம்.


தமிழ் இணைய மாநாட்டில் படிக்கப்பட்ட கட்டுரைகள் ஒவ்வொன்றும் கருத்து மிக்கது. சில மாநாட்டுக் கட்டுரைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. பல மாநாட்டுக் கட்டுரைகள், கருத்துரைகள் இணையத்திலேயே இடம் பெற்றுள்ளன. இணையம் தொடர்பான செய்திகளும், தமிழ் இணைய வளர்ச்சியும், எழுத்துரு, சொற்செயலிகள், பேச்சொலி, மொழிப் பெயர்ப்பு, உலாவி, அகராதிகள், புதிய நோக்கில் கல்வி, கணிப்பொறி இணையம் மூலம் கல்வி கற்றுக் கொடுத்தல், கணினி மொழியியல், தமிழ் சொல் திருத்திகள், தமிழ்ப் பேச்சு மற்றும் சொற்பகுப்பு, தமிழ் மின் தரவுகள், தமிழ் எழுத்து உணரியின் செயல்பாடுகள், கணினியில் தமிழ்த் தட்டச்சு, தமிழ் வலைப்பூக்கள், தமிழ் தகவல் தொழில் நுட்பக் கருத்துக்கள், தமிழில் தேடு பொறிகள். தமிழ் ஒருங்குறி போன்ற பல்வேறு தலைப்புகளில் சுமார் 600 மேற்பட்ட கட்டுரைகள் இந்த அமைப்பின் தளத்தில் கிடைக்கின்றன.

இதனை அனைத்துத் துறை மாணவர்களும் பார்வையிட்டுப் பயன் பெறலாம்.

Wednesday, June 29, 2011

கிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு

|0 comments
விஎம்.பவுண்டேசன் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை இணைந்து கணினித்தமிழ் கற்போம்! தமிழ் இணைய பயிலரங்கு 25-6-2011 சனிக்கிழமை காலை கிருஷ்ணகிரியில் சாந்தி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிலரங்கம் கலை 10 மணிக்கு திரு செலவமுரளி வரவேற்பு மூலம் தொடங்கியது. 10.15 மணிக்கு தமிழ் உலகம் அற்க்கட்டளையின் தலைவர் திரு பழனியப்பன் சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் வந்திருந்த மாணவர்கள்,மாணவிகள் மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுடன் உரையாடினார்.



10.30 மணிக்குத் தமிழும் தமிழ் இனையமும், தமிழில் தட்டச்சு முறை எனற தலைப்பில் முதலில் நான் உரை நிகழ்த்தினேன்.இதில் இணையத்தின் தோற்றம், தமிழ் இணையத்தின் தோற்றம், பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் பங்களிப்பு, தமிழ் இணையமாநாட்டின் பங்களிப்புகள், உத்தமத்தின் செயல்பாடுகள், தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுசெல்வத்தின் பயன்பாடுகள், தமிழ் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் பற்றிப்பேசினேன்.மேலும் ஒருசில தமிழ் இணையதளங்கள் பார்வைக்கு காட்டப்பட்டன.(திண்ணை, முத்துக்கமலம்,பதிவுகள்,வார்ப்பு,)





தமிழின் தட்டச்சு முறைகள், முரசு, இ-கலப்பை, தமிழ்99, nhm, போன்ற தட்டச்சு எழுதிகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்து காட்டப்பட்டது.



எம்மை தொடர்ந்து திரு ஒரிசா பாலு அவர்கள் தமது கடலாய்வு அனுபவங்களை படக்காட்சிகளுடன் விவரித்தார். மேலும் உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு, பரவல் மற்றும் தமிழர் தொன்மை ஆகியவை பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.



பேராசிரியர் க.சரவணன் மாற்றுத் திறனாளிகளுக்கான கணினி பயிற்சியைச் சிறப்பாக எடுத்து விளக்கினார்கள்.

காலை நிகழ்வுகள் முடிந்து மதியம் 2-மணிக்கு மென்பொருள் நிருவனர் திரு ம. சிவக்குமார் அவர்கள் பார்வையாளர்களுக்கு மின்னஞ்சல் உருவாக்கிக் காண்பித்தார். வலைப்பூவையும் மாணவ மாணவிகளுக்குத் தொடங்கிக் காட்டி பயிற்சியும் அளித்தார்.



மாலை 4 மணிக்கு ஆசிரியர் கவி.செங்குட்டுவன் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி என்ற தலைப்பில் தமிழ் இணையக் கல்விக்குழுமத்திலிருந்து நூல்களை எடுத்துக் காட்டி விளக்கினார். மற்றும் மதுரைத்திட்டம், சென்னை நூலகம் போன்ற மின்னூலகத்தினையும் பயன்படுத்தும் முறையையும் விளக்கினார்.

இறுதியாக நிகழ்வில் கலந்துகொண்ட கல்லூரிமாணவ மாணவிகளுக்கும், கிருஷ்னிகிரி மாவட்டதொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் செயலாளர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


இப்பயிலரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாளர்கள்,
ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி மற்றும்
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி ஆகியவற்றின் முதுகலைத் தமிழ் மாணவர்களும்
நந்தனம் பொறியியல் கல்லூரி மாணவர்களும்
மாத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 150 மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.



நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்.


கருத்தரங்க குழுவினர் திரு செல்வமுரளி,பேராசிரியர் சரவணன்,ஆசிரியர் கவி செங்குட்டுவன், முனைவர் துரை.மணிகண்டன்,மென்பொருள் சரவணன்.


அமெரிக்காவிலிருக்கும் கணிப்பொறியாளர் திரு ஆல்பட் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு எற்பாடுசெய்தார்கள். ஆல்பட் உடன் இணைந்து விஎம் பவுண்டேசன் நிருவனர் திரு செல்வ.முரளி அவர்களும் உருதுணையாக இருந்து நிகழ்வினைச் செம்மையாக நடத்தினார்.
இந்த நிகழ்வுகள் முழுவதும் தமிழ் உலகம் அறக்கட்டளை



மூலம் நேரடி காணொளி மூலம் www.ulagatamiloli.comஎன்ற

இணைய தளத்தில் ஒளிபரப்பப் பட்டது.

Wednesday, June 22, 2011

திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் இணையப் பயிலரங்கம்

|0 comments
திருச்சிராப்பள்ளி தேசியக்கல்லூரியில் இணையப் பயிலரங்கம் நடை பெற்றது. அதில் மாணவர்களுக்கு இணையம் குறித்த செய்திகளை விளக்கினேன்.






மாணவர்கள் மற்றும் மாணவிகள்

தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியி தமிழ் இணையதளங்கள்

|0 comments
பெரம்பலூர் தந்தைஹேன்ஸ் ரோவர் கல்லூரியி தமிழ் இணையதளங்கள் என்ற தலைப்பில் தமிழ் இலக்கிய மன்ற விழாவில் சிறப்புரையாற்றியதன் ஒருபகுதி

முனைவர் துரை மணிகண்டன், கல்லூரி முதல்வர் திரு சாமிநாதன் துறைத்தலைவர் தமிழ்மாறன் மற்றும் நாரயாண்சாமி

கருத்தரங்கில் கலந்துகொண்ட மாணவார்கள், மாணவிகள் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள்.
|0 comments

Thursday, June 9, 2011

தமிழ் விக்கிப்பீடியா

|2 comments
தமிழ் விக்கிப்பீடியா

இணையத்தில் தரவு தளங்களில் குறிப்பிட்டுச் சொல்வோமானால் அது விக்கப்பீடியாவாகத்தான் இருக்க முடியும் எந்த தலைப்புகளாக இருந்தாலும் சரி குறித்த நேரத்தில் தகவல்களை நமக்குக் கொடுக்கும் சிறந்த தளம் விக்கிப்பீடியாவாகும். இந்த தளம் இன்றைய ஆய்வாளர்கள் மற்றும் அறிவியல் செய்தியாளர்களுக்கும் கிடைத்த செய்திப் புதையல் என்றே கூறலாம். 267 மொழிகளில் இடம் பெற்றிருக்கும் விக்கிப்பீடியாவில் தமிழ் மொழியிலான தமிழ் விக்கிப்பீடியாவும் ஒன்று.

விக்கிப்பீடியா பொருள் விளக்கம்

உலகிலுள்ள எந்தப் பொருள் குறித்தும் அறிந்து கொள்ள உதவும் ஒரு புத்தகம் என்சைக்ளோபிடியா என்கிற கலைக்களஞ்சியம். இந்தப் புத்தகத்தை இணைய வழியில் கொடுக்க முயன்ற அமெரிக்காவைச் சேர்ந்த கண்னி மென்பொருள் வல்லுனர் ஜிம்மி வேல்ஸ் மற்றும் தத்துவ ஆசிரியரான லாரி சாஜ்ஞ்சர் ஆகியோர் முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒன்றுதான் விக்கிபீடியா (Wikipedia). ஹவாய் மொழியில் விக்கி (Wiki) என்ற சொல்லுக்கு “விரைவு” என்ற பொருள். விரைவாக அறிவு சார்ந்த தகவல்களை பயன்பாட்டாளர்களுக்குத் தருவதால் இந்த இணைய என்சைக்ளோபீடியாவிற்கு ‘விக்கிப்பீடியா’ எனப் பெயரிட்டுள்ளதாக இந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.



தோற்றம்

2001 ஆம் ஆண்டில் இணையதளம் அமைப்பதில் வல்லவரான ஜிம்மி வேல்ஸ் (Jimmy Wales) மற்றும் தத்துவ ஆசிரியரான திரு.லாரி சாஞ்சர் (Larry Sanger) ஆகியோர் விக்கிப்பீடியாவைத் தொடங்கினர். இந்த தளத்திற்கான இடத்திற்காக இணையத்தில் விக்கிப்பீடியாவின் பதிவை 2001 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் தேதியன்று www.wikipedia.com என்ற இணைய முகவரியையும், ஜனவரி 13-ஆம் தேதியன்று www.wikipedia.org என்ற இணைய முகவரியையும் பதிவு செய்தனர். ஆங்கிலத்தில் முதலில் செயல்படத் தொடங்கிய இத்தளம் பிற மொழிகளிலும் செயல்படுத்த லாப நோக்கமற்ற தன்னார்வலர்களைக் கொண்டு இயங்கும் ஒரு அமைப்பாக விக்கிப்பீடியாவிற்கென ஒரு தனி அமைப்பு உருவாக்கப்பட்டது. விக்கிப்பீடியா அமைப்பானது 2001 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பிரெஞ்சு மொழியிலும், மே மாதத்தில் ஜெர்மன் மொழியிலும் தனி விக்கிப்பீடியா தொடங்கப்பட்டது. இத்துடன் வேற்று மொழிகளுக்கான விக்கிப்பீடியாவை உருவாக்கிக் கொள்ள வசதிகள் செய்து தரப்பட்டன. இவ்வாறு விருப்பமுடையவர்கள் அவரவர் மொழிகளுக்கேற்ப விக்கிப்பீடியாவை அமைத்துக் கொண்டனர். இவ்வாறு உலகின் பல்வேறு நாடுகளில் பயன்பாட்டில் இருந்து வரும் சுமார் 267 மொழிகளில் விக்கிப்பீடியாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த 267 மொழிகளிலான விக்கிப்பீடியாக்களில் தர வரிசையில் முதலில் ஆங்கிலம், அடுத்தடுத்த இடங்களில் ஜெர்மனி, பிரெஞ்சு, போலீஷ் (Polish), ஜப்பான், இத்தாலி, டச்சு, ஸ்பானிஷ், போர்ச்சுக்கல், ரஷ்யா, சுவிஸ், சீனா, நார்வே, பின்னிஷ் (Finnish), கட்டாலன் (Catalan), உக்ரேனியன் ஹங்கேரி, செக் (Czech) துர்கீஸ், ரோமானியன், எஸ்பரண்டோ (Esperanto) வோலாபக் (Volapuk), கொரியன், டேனிஷ் (Danish), இந்தோனேசியா, சுலோவக் (Slovak), அராபி, வியட்நாமிஷ் ஆகிய மொழிகள் இடம் பெற்றுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா

தமிழ் மொழியில் விக்கிப்பீடியா 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதியில் “மனித மேம்பாடு” என்ற தலைப்புடன் தொடங்கியுள்ளனர். இதனைத் தொடங்கியவர் தனது பெயரைத் தெரிவிக்கவில்லை என்கிற கருத்து உள்ளது. ஆனால் இது உண்மையல்ல. இது ஒரு விளம்பரமாக இருந்ததால் அதை பிற்காலத்தில் ஒரு பயனர் நீக்கி விட்டார். இலங்கையில் பிறந்து வளைகுடா நாடு ஒன்றில் கட்டிடக்கலைப் பொறியாளராகப் பணியாற்றி வரும் இ.மயூரநாதன் என்பவர் 2003 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் தமிழ் விக்கிப்பீடியாவிற்கான முகப்புப் பக்கத்தை (முதற்பக்கம்) தமிழில் உருவாக்கியுள்ளார். இவையன்றி விக்கிப்பீடியாவும் அதன் பிற இணையத்திட்டங்களுக்கும் ஆதாரமாக உள்ள மீடியா விக்கி என்னும் மென்பொருளின் அனைத்துப் பக்கங்களையும் அதற்குரிய இடைமுகத்துக்குத் தேவையான தகவல்களையும் தமிழில் மொழி பெயர்த்து தந்துள்ளார். என்று தமிழ் விக்கிப்பீடியா நூலின் ஆசிரியர் தேனி.எம்.சுப்பிரமணி குறிப்பிட்டுள்ளார்.



இதனால் தமிழில் விக்கிப்பீடியாவின் பக்கம் உலகத் தமிழர்களின் பார்வைக்குச் சென்றது. இன்று பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் முயற்சியால் 14000 க்கும் அதிகமான பயனர்களைக் கொண்டு 32800க்கும் அதிகமான கட்டுரைகளைக் கொண்டு தமிழ் விக்கிப்பீடியா அனைத்து மொழி விக்கிப்பீடியாக்களில் 67-வது இடத்தில் உள்ளது. பிற இந்திய மொழிகளான இந்தி – 43 வது இடத்திலும், தெலுங்கு 47 வது இடத்திலும், மராத்தி 58 வது இடத்திலும், வங்காளம் 67 வது இடத்திலும், உருது 84 வது இடத்திலும், குஜராத்தி 91 வது இடத்திலும், கன்னடம் 97 வது இடத்திலும், பஞ்சாபி 144 வது இடத்திலும் பீகாரி 146 வது இடத்திலும், பஞ்சாபி 168 வது இடத்திலும், ஒரிசா 196 வது இடத்திலும், காஷ்மீர் 208 வது இடத்திலும், சிந்தி 213 வது இடத்திலும் அஸ்ஸாமி 220 வது இடத்திலும் உள்ளன. தமிழ் விக்கிப்பீடியா தோன்றியதற்குப் பிறகு தோன்றிய பல மொழிகளிலான விக்கிப்பீடியா நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ் மொழியில் முன்னேற்றம் சற்று குறைவாகவே உள்ளது. இதனைப் போக்க தமிழர்கள் பலருக்கு இணைய அறிவும், தமிழ் தட்டச்சு செய்ய முடியாமையும் குறைபாடுகளாக உள்ளன. இது ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியமாகும். இதில் யார்வேண்டுமானாலும் தன்னார்வத்துடன் எந்த தலைப்பிலும் கட்டுரையை உருவாக்கலாம். முழுக்க முழுக்க இலவசமாக செயல்படும் தன்னார்வ நிறுவனமாகும்.

தமிழ் விக்கிப்பீடியாவின் நோக்கம்

இணையத்தின் வழியாக தமிழ் தரவுகளைத் தேடுபவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் செயல்படுகிறது. எளிமையான அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய தமிழில் தரமான கட்டற்ற கலைக் களஞ்சியத்தை உருவாக்குவது போன்றவையே இதன் நோக்கமாகக் கருதப்படுகிறது.

தமிழ்த் தரவுகளின் உட்தலைப்புகள்

தமிழ் விக்கிப்பீடியாவில் தற்போது 27,000 க்கும் அதிகமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இதனைப் பல்வேறு நாட்டிலிருந்து, பலதுறை வல்லுனர்களால் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளது. அவர்களில் மயூரநாதன், கனடாவிலிருக்கும் தமிழரான. நக்கீரன், ஆஸ்திரேலியாவிலிருக்கும் தமிழரான கனக சிறிதரன், கனடாவில் இருக்கும் மின் மற்றும் கணினிப் பேராசிரியர் செல்வா என்கிற திரு. செ.ரா.செல்வக்குமார், தமிழ்நாட்டிலிருக்கும் சுந்தர், ரவிசங்கர், தேனி எம். சுப்பிரமணி, சிவக்குமார், ஜெர்மனியிலிருக்கும் சந்திரவதனா, ஜப்பானின் டெரன்சு, நோர்வேயிலிருக்கும் கலை, அமெரிக்காவிலிருந்து குறும்பன் மற்றும் கோபி, பீபிசெல்வம், நிரோஜன் சக்திவேல், டி.ரெங்கராசு, பேராசிரியர் வி.கே, கார்த்திக்பாலா, மு.மயூரன், பரிதிமதி, அராப்பத், மகிழ்நன், வைகுண்டராஜா, சோடாபாட்டில், தகவலுழவன் போன்றோர்கள் ஆவார். இவர்களுடன் மேலும் பல பயனர்களுடைய கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

இதில் கட்டுரைகளின் உட்கருத்தைக் கொண்டு ஒன்பது முக்கியத் தலைப்புகளாகப் பிரித்து வரிசைப்படுத்தியுள்ளனர். அவை முறையே

1. தமிழ்

தமிழ் என்ற தலைப்பில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் அகர வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் தமிழ் மொழியின் தோற்றம், மக்கள்தொகை, தமிழர்களின் வரலாறு, மற்றும் நூல்கள் குறித்த பல கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. தமிழ் மொழி சார்ந்த சில முக்கியக் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

2. பண்பாடு

பண்பாடு என்ற தலைப்பில் தமிழகத்தின் பண்பாட்டுக் கூறுகள் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழர்களின் கலாச்சாரம், வீரம், விளையாட்டுகள் போன்றவையும் அகரவரிசைப்படுத்தி பகுத்து வைத்துள்ளனர். மனித சமுதாயத்தின் வாழ்வியல் நடைமுறைகள் மற்றும் பண்புகள் சார்ந்த துணைப்பகுப்புகள் உள்ளன. மேலும் பண்பாடு குறித்த சில முக்கிய கட்டுரைகளின் தலைப்புகளும் கீழ் பகுதியில் தனியாக இடம் பெற்றுள்ளன.


3. வரலாறு

இந்த தலைப்பில் மொத்தம் 28 தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. முதன்மைப் பக்கத்தில் அரசு, இனம், காலம் போன்ற வரலாற்றுடன் தொடர்புடைய துணைப் பகுப்புகள் அகரவரிசையில் இடம் பெற்றுள்ளன. மேலும் உலக வரலாற்று நிகழ்ச்சிகளின் தொகுப்பும் தொகுத்துக் கொடுத்துள்ளனர்.
4. அறிவியல்

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலச் சூழலில், அறிவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பக் கருத்துக்கள் பல்கிப் பெருகி வருகின்றன. ஒரு மொழி வளர்ந்து செல்வதற்கு அந்தந்த காலக்கட்ட அறிவியல் சாதனங்களையும், கருத்துக்களையும், உள்வாங்கிக் கொள்ள வேண்டும். தமிழ் விக்கப்பீடியாவில் இதற்கென ஒரு தலைப்பில் அறிவியல் ஒப்பிரு அளவியல், அறிவியல் ஆய்விதழ்கள், இயற்பியல், அறிவியல் தமிழ் என 80 உட்தலைப்புகளில் அறிவியல் சார்ந்த முக்கியக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

5. கணிதம்

கணிதம் எனும் தலைப்பில் 35 துணைப்பகுப்பாக கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. அறிவியல், இடவியல், இயற்கணிதம், எண் கோட்பாடு, எண் கணிதம், எண்கள், கணித இயல் வகைப்பாடுகள், கணித மரபு, விரல் கணிதம் என்ற உட்தலைப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் கீழ் உள்ள பகுப்பில் பல தலைப்புகளிலும் கணிதம் தொடர்பான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.

6. தொழில்நுட்பம்

இந்தத் தலைப்பில் பல துணைப்பகுப்புகளில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. ஆற்றல், இயந்திரவியல், உயிர், தொழில் நுட்பவியல், உலோகவியல், கட்டிடக்கலை, கணினியியல், கருவிகள், தகவல் தொழில் நுட்பம், தொழிற்சாலை, தொழில்கள், நானோ தொழில் நுட்பம், பயன்பாட்டுக் கருவிகள், விண்வெளிப் பயணம் போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகள் உள்ளன.

7. புவியல்

புவியியல் எனும் தலைப்பில் புவியியலின் தோற்றம், கண்டங்கள், உலக புவியியல் அமைப்பு போன்ற செய்திகள் இடம் பெற்றிருக்கின்றன. இடம், இயற்கை அழிவுகள், எரிமலை, கடற்கரை, சுற்றுலா, சூழலியல், தீபகற்பங்கள், நாடுகள், நில அமைப்பு, நிலவியல், நீர் நிலைகள், பீடபூமிகள், புவியாளர்கள், பெருங்கடல் ஆய்வு பற்றிய செய்திகள் உள்ளன. இந்தியாவைப் பற்றிய நிலவியல் தனியாக உள்ளன. அமெரிக்க ஜக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, இலங்கை போன்ற அயல் நாடுகளின் புவி அமைப்பும் இடம் பெற்றிருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள நிலவியல், அமைப்புகளும், தமிழ்நாட்டிலுள்ள ஏரிகள், குளங்கள், கடற்கரை, ஆறுகள், ஊர்களும் நகரங்களும், மலைகள் போன்ற செய்திகளாக பல செய்திக் கட்டுரை இடம் பெற்றுள்ளன.

8. சமூகம்

சமூகத்தின் அன்றாட நிகழ்வுகளை பல துணைப் பகுப்புகளில் அகரவரிசையில் நிறுவியுள்ளனர். அன்றாட வாழ்வியல், சமூக அமைப்பு, அரசியல், இனங்கள், சமூக இயக்கங்கள், உறவுமுறை, ஊடகவியல், சட்டம், தொல்பொருள், மனித உரிமைகள், வணிகவியல் எனும் தலைப்புகளில் கட்டுரைகள் உள்ளன. மேலும் சில உள் தலைப்புகளில் சமூகம் பற்றிய கட்டுரை இடம் பெற்றுள்ளன.

9. நபர்கள்

நபர்கள் தலைப்பில் அகிம்சைவாதிகள், அரசர்கள் அறிவியளாலர்கள், ஆன்மீகவாதிகள், இசைத்துறையினர், இயல்பியலாளர்கள், எழுத்தாளர்கள், சமூகத் தலைவர்கள், மருத்துவர்கள் என்ற தலைப்புகளில் அகரவரிசையில் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஒன்பது தலைப்புகளில் தமக்குத் தேவையான கருத்தைப் பயனுள்ளவர்கள் தேடி எடுத்துக் கொள்ளலாம். கட்டுரைத் தொகுப்புகளின்றி வேறு பல திட்ட செயல்பாடுகளும் தமிழ் விக்கிப்பீடியாவில் இடம் பெற்றுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியாவின் துணைத் திட்டங்கள்

விக்சனரி

எனது தமிழ் விக்கிப்பீடியா நூலின் 161 ஆம் பக்கத்திலிருந்து 165 வரையுள்ள பக்கங்களில் உள்ள செய்திகளில் விக்சனரி, விக்கி நூல்கள், விக்கி மேற்கோள்கள், விக்கி மூலம், விக்கி இனங்கள், விக்கி செய்திகள் போன்றவற்றை அப்படியே பயன்படுத்திக் கொள்ளவும்.

தமிழில் தொடங்கப்பட உள்ள திட்டங்கள்

விக்கிப்பீடியாவின் துணைத் திட்டங்களில் விக்கி பொது, விக்கி பல்கலைக்கழகம், மேல் விக்கி போன்ற திட்டங்கள் தமிழ் மொழிக்கு மாற்றம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தமிழ் விக்கிப்பீடியாவின் பயன்கள்

1. உலகில் இருக்கும் எந்த கருத்துக்களையும் இதில் நம்மால் விரைவாக எடுத்துக் கொள்ளலாம்.
2. உலகச் செயல்பாடுகள், செய்திகள், மரபுசார்ந்த உடைகள், பண்பாடு போன்றவைகள் இதில் இடம் பெற்றுள்ளன.
4. ஆராய்ச்சி செய்வோர், பேராசிரியர்கள், மருத்துவர்கள், கட்டிடப் பணியாளர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள், சமூகவியலாளர்கள் என அனைவருக்கும் பயன்படும் தரவு தளமாக இது பயன்படுகிறது.
5. பிற மொழிகளின் வரலாற்றை எளிதில் இதன் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.
6. மொழிபெயர்ப்பு வசதிகள் உள்ளன. இது ஆய்வாளர்களுக்குப் பெரிதும் பயன்படக்கூடியது.

Monday, June 6, 2011

தமிழ் எழுத்துரு மாற்றிகள்

|4 comments
தமிழ் எழுத்துரு மாற்றிகள்



எழுத்துருக்கள்

கணிப்பொறியும் இணையமும் அறிமுகமானக் காலச்சூழலில் உலகில் இருக்கும் தமிழ் அன்பர்கள் ஏதாவதொரு எழுத்துருவில் கருத்தைப் பதிவு செய்ய தொடங்கினார்கள். அன்று அஃது அவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. இதனைப் பலர் ஒன்று கூடிக் கொண்டாடியுள்ளனர். நாளடைவில் ஒவ்வொரு நாட்டில் இருக்கும் தமிழ் நண்பர்கள் அவர்களுக்கு விருப்பப்பட்ட எழுத்துருவில் எழுதத் தொடங்கினர். இவ்வாறு எழுதியவர்கள் அவர்களுக்குள்ளேயே கருத்தைப் பரிமாறிக் கொண்டனர். இவ்வாறு உலக நாடுகளில் இருக்கும் பலரும் அவர்களுக்குத் தெரிந்த பலவகையான எழுத்துருவை உருவாக்கினர். இது சுமார் 250 எழுத்துருவாக இன்று உள்ளன.

எழுத்துருப் பிரச்சனை

தொடக்கத்தில் தமிழ்மொழியில் பலவகையான எழுத்துரு தோன்றுவது தமிழுக்குப் பெருமையாக இருந்தது. அதுவே சில வேளையில் சிக்கலையும் தந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் கச்சமங்கலம் என்னும் சிற்றூரில் பிரபாகரன் என்பவர் கணினியில் தட்டச்சு செய்து அதனை கலிபோர்னியாவில் வசிக்கும் நண்பருக்கு அனுப்புகிறார். அங்கு அவர் கணினியின் முன் அமர்ந்து நண்பர் அனுப்பிய மின் அஞ்சலை ஆர்வத்துடன் பார்க்கிறார். செய்தி அனைத்தும் கோடு கோடாக, கட்டம் கட்டமாக என்னவென்று திகைக்கின்றார; என்ன சிக்கல் என்றால் கச்சமங்கலத்திலிருந்து அனுப்பியச் தமிழ்ச் செய்தியானது ஒரு வகை உள்ளூர் எழுத்துரு (எடுத்துக்காட்டு. இளங்கோ, கம்பன்) இந்த எழுத்துரு கலிபோர்னிய நண்பர் கணிப்பொறியில் இல்லை. அவர் வேறொரு எழுத்துருவைப் பயன்படுத்துகிறார். இப்போது கலிபோர்னியா நண்பர் ஒரு செய்தியை பிரபாகரனுக்கு அனுப்புகிறார். இவர் தன் கணிப்பானைத் திறந்து பார்த்தால் அவருக்குத் தோன்றியது கட்டம் கட்டம், கோடு கோடாகத் தெரிகிறது.
இதற்குத் தீர்வு என்ன என்று யோசிக்கும் போதுதான் உலகத்திற்கெல்லாம் பொதுவான எழுத்துருவை நாம் பயன்படுத்த வேண்டும். அதுவே இதற்குத் தீர்வு என்று இருவரும் முடிவிற்கு வருகின்றனர். சரி இனி இருவரும் ஒரே எழுத்துருவில் கதைக்காலம், எழுதலாம். இதற்கு முன் அனுப்பிய வந்த செய்திகளைக் காண என்ன செய்ய வேண்டும் என்ற அடுத்த வினா இருவருக்கும் தோன்றுகிறது. இதுபோன்று உலகில் இருக்கும் அனைத்துத் தமிழுருக்கும் தோன்றுகிறது. விளைவு உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பயன்படுத்துவதற்கு ஒரு பொதுவான எழுத்துரு தேவையாக இருக்கிறது. இதற்காக தமிழ் ஒருங்குறி எழுத்துருக்களை (Unicode Font) உருவாக்குகின்றனர். இந்த ஒருங்குறி எழுத்துரு வந்த பின்பு உலகம் முழுவதும் தமிழுக்கான எழுத்துரு பிரச்சனை ஓரளவு தீர்ந்தது.

எழுத்துரு மாற்றிகள்

ஒருங்குறி எழுத்துரு வந்த பின்பு முன்பு கணினியில் உருவாக்கப்பட்ட பிற தமிழ் எழுத்துருக்களை ஒருங்குறிக்கு மாற்ற என்ன செய்வது அல்லது ஒருங்குறியிலுள்ள எழுத்துக்களை பிற எழுத்துருக்களுக்கு மாற்ற வேண்டிய அவசியமும் உருவானது. இதற்கு எழுத்துரு மாற்றிகள் தேவைப்பட பல எழுத்துரு மாற்றிகளும் உருவாக்கப்பட்டன.

இப்படி உருவாக்கப்பட்ட பல எழுத்துரு மாற்றிகளை இணையத்தில் இலவசமாக நாம் பெற்றுக் கொள்ளலாம் என்பதுதான். நீங்கள் எந்த எழுத்துருவில் செய்தியை அடித்தாலும், அல்லது உங்களுக்கு வந்த செய்தியாயினும் அதனை உங்கள் கணினியில் உள்ள எழுத்துருவிற்கே மாற்றம் செய்து கொள்ளலாம் அல்லது ஒருங்குறிக்கு மாற்றி செய்தியைப் படித்துக் கொள்ளலாம். இதுபோன்று இணையத்தில் எண்ணற்ற எழுத்துரு மாற்றிகள் இலவசமாக இயங்குகின்றன. அப்படி சில எழுத்துரு மாற்றிகள் குறித்த தகவல்கள் இங்கு அளிக்கப்பட்டுள்ளன.

பொங்கு தமிழ் எழுத்துரு
தமிழ் எழுத்துரு மாற்றியின் தலைமகன் என்றே கூறலாம். ஏன் என்றால் பலர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு இணையத்தைப் பயன்படுத்தினார்கள். ஆனால் பல எழுத்துரு பிரச்சனை ஆங்காங்கு ‘நீரு பூத்த நெருப்பு போல’ பரவியிருந்த நேரம் சுரதா யாழ்வாணன் என்பவரின் முயற்சியால் எந்த எழுத்துருவையும் ஒருங்குறி எழுத்துருவிற்கு ((Unicode Font)) மாற்றி விடலாம் என்ற புதிய மென்பொருளை கண்டுபிடித்ததுதான்.
எந்த ஒரு தெரிந்த அல்லது தெரியாது எழுத்துருவாக விருந்தாலும் அதனை மேல் தட்டில் உள்ளீடு செய்து கீழே உள்ள ஏதாவதொரு துவாரங்களில் இருக்கும் எழுத்துருவைச் சுட்டினால் நீங்கள் உள்ளிட்டதை சீராக தமிழில் வாசிக்க முடியும். சுரதா யாழ்வாணன் இந்த எழுத்துரு மாற்றியைப் பற்றிக் கூறும்போது,

“யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் எழுச்சிமிகு போராட்டமான பொங்கு தமிழின் நினைவாக இந்த செயலிக்குப் பொங்குதமிழ் எனப் பெயரிடப்படுகிறது”

என்று கூறும்போது, சுரதாவின் தமிழ்ப்பற்றை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். மேலும், இந்த தானிறங்கி எழுத்துருவைப் பயன்படுத்த அனுமதி வழங்கிய ஆவரங்கால் சீனிவாசனுக்கு எனது நன்றிகள் என்றும் கூறியுள்ளார்.
பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியில் 19-எழுத்துரு மாற்றிகள் செயல்முறையில் உள்ளன. இவை அனைத்தும் ஒருங்குறி எழுத்துருக்கு மாற்றிவிடும் வாய்ப்புடையவை. இது தரவிறக்கம் செய்து வைத்துக் கொண்டால் இணைய இணைப்பின்றி சாதாரணமான நிலையிலும் இயங்கும்படி உருவாக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பு எனச் சொல்லலாம்.

படம் – 1

அதியமான் எழுத்துரு மாற்றி

பொங்கு தமிழ் எழுத்துரு மாற்றியைப் போன்று அதியமான் எழுத்துரு மாற்றியும் இலவசமாக இணையத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த எழுத்துருவை உருவாக்கியவர் கோபி ஆவார். இவர் பொங்குதமிழ் எழுத்துருவை உருவாக்கிய சுரதா யாழ்வாணனை மேற்கோள் காட்டுகிறார். அதியமான் எழுத்துரு மாற்றியை உருவாக்க உறுதுணையாக இருந்தவர் என்றும் கூறுகிறார். மேலும் அமெரிக்காவில் நாசா விண்வெளி மையத்தில் பணிபுரியும் நா. கணேசனும் இந்த எழுத்துரு உருவாக்கத்திற்கு துணைப்புரிந்தனர் என்று கோபி நன்றி மறவாமல் தன் வலைப்பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த எழுத்துரு மாற்றியினால் இணையத்தில் ஒருங்குறி (Unicode) எழுத்துருவை மட்டும் பல இயங்கு தளங்கள் (OS) செயலிகள் (application) ஆகியன எந்த எழுத்துருவையும் கணினியில் நிறுவாமாலேயே படிக்கின்ற வசதியைத் தருகின்றன மற்ற தகுதரங்களை (Encoding standards) பயன்படுத்தும் வலைத்தளங்களைப் படிக்க உரிய எழுத்துருக்களை நிறுவ வேண்டும். மேலும் “சில அலுவலகக் கணினிகளில் எழுத்துருவை நிறவும் உரிமை மறுக்கப்பட்டிருக்கும். எந்த எழுத்துருவையும் நிறுவாமலேயெ இத்தகைய வலைத்தளங்களை ஒருங்குறிக்கு மாற்றிப் படிப்பதற்காகத்தான் இந்த எழுத்துரு மாற்றியை உருவாக்கியுள்ளேன்” என்று கூறுகிறார்.
இந்த மாற்றியில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் (TUNE) தமிழ் புதிய ஒருங்குறி தகுதரத்திலிருந்தும். TSCII தகுதரத்திலிருந்தும், ஒருங்குறிக்கு மாற்றிப் படிக்கலாம்.
இந்த எழுத்துரு மாற்றியினால் பத்துக்கும் மேற்பட்ட (திஸ்தி, டாம், டாப், TUNE, தினமணி, kalaham) எழுத்துருக்களை ஒருகுறியில் மாற்றி வாசிக்க முடியும்.

தமிழ் எழுத்துரு மாற்றி
இந்த எழுத்துரு மாற்றியும் பொங்குதமிழ், அதியமான் போன்ற நாம் வாசிக்க வேண்டிய செய்தியை இடதுபுறம் உள்ள கட்டத்தில் கொண்டு வந்து நிறுவிய பின் மேலே உள்ள எழுத்துருவான திஸ்கி, டாம், ரொமைனஸ்டு, அஞ்சல், மயிலை, முரசொலி, தினதந்தி பாமினி, டாம், பூமி, தினகரன், நக்கீரன், தினமணி என்ற பதிமூன்று எழுத்துருக்களையும் ஒருங்குறியில் மாற்றிக் கொள்ள முடியும்.

சிலம்பம் தமிழ் எழுத்துரு மாற்றி
ஒருங்குறி முறையில் எழுத்துருவை மாற்றிக் கொடுக்கும் செயலியாகும். இந்த எழுத்துரு மாற்றியில் பாமினி, தமிங்கிலிஸ் எழுத்துருவை ஒருங்குறி எழுத்துருக்களாக மாற்றிக் கொடுக்கின்றன.

இஸ்லாம் கல்வி எழுத்துரு மாற்றி
பாமினி முதல் ஒருங்குறி எழுத்துரு மாற்றி என இயங்கும் இந்த எழுத்துரு மாற்றி பாமினி, சாருகேசி, ரோஜா, சரஸ்வதி, தென்றல், அருவி, ஃபிரதவ்ஸ், ஜாஸ்மின், சிங்காரம் என்னும் எழுத்துருக்களை ஒத்த பல்வேறு எழுத்துருக்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை ஒருங்குறிக்கு மாற்றும் செயலியாகும். அப்படி மாற்றும் போது சில சின்ன சின்ன தடங்கள், இடையூறு இருந்து வந்தன எ.கா. தொடரி (,), முற்றுப்புள்ளி(.) போன்றவை இடம் பெறமால் இருந்து வந்துள்ளன. ஆனால் இந்த எழுத்துரு மாற்றியின் மூலம் சரி செய்யப்பட்டுள்ளது. பாமினி-ஒருங்குறி எழுத்துரு மாற்றியும் சுரதாவை முன்னோடியாகக் கொண்டு இயங்கி வருகின்றது.

என்.எச்.எம் எழுத்துரு மாற்றி
பத்ரி சேசாத்திரி என்பவரால் தொடங்கப்பட்ட நியூ ஹாரிசன் மீடியா பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனம் வாயிலாக நாகராஜன் எனும் மென்பொருள் உருவாக்குனரால் உருவாக்கப்பட்ட எழுத்துரு மாற்றி வழியாக தமிழ் உட்பட சில இந்திய மொழிகளிலும் இயங்கும் ஒரு மென்பொருளாகும். இதை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்வதுடன் நம் கணினியில் நிறுவிக் கொண்டால் நாம் குறிப்பிட்ட சில எழுத்துருக்களுக்கு இலகுவாக மாற்றிக் கொள்ளலாம்.
பிற எழுத்துரு மாற்றிகள் ஒரு எழுத்துருவிலிருந்து ஒருங்குறிக்கு மாற்றம் செய்ய உதவுகின்றன. ஆனால் இந்த எழுத்துரு மாற்றி ஒருங்குறியிலிருந்து பிற எழுத்துருக்கு மாற்றம் செய்து கொள்ள உதவுகிறது. இதனால் இதன் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

படம் – 6

எழுத்துரு மாற்றிகளின் நன்மைகள்

இது போன்ற தமிழ் எழுத்துரு மாற்றிகளால் பல நன்மைகள் நம் தமிழ் மொழிக்கு கிடைத்துள்ளன.

1. தொடக்கத்தில் தோற்றுவிக்கப்பட்ட இணைய தளங்கள் பல்வேறு எழுத்துருக்களைக் கொண்டு வெளிவந்தன. ஆனால் இன்று பெரும்பான்மையான இணைய தளங்கள், வலைப்பூக்கள் ஆகியவை ஒருங்குறி முறையில் செயல்பட்டு வருகின்றன. எனவே பழைய தமிழ் எழுத்துருக்களைக் கொண்ட தளங்களிலுள்ள செய்திகளை மீட்டுருவாக்கம் செய்ய இந்த எழுத்துரு மாற்றிகள் பெரிதும் பயன்படுகின்றன.
2. தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற அனைத்து தமிழ் நூல்களும் டாம், டாப், திஸ்கி எழுத்துருவில் இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால் இன்று அவை அனைத்தும் ஒருங்குறிக்கு மாற்றம் செய்யப்பட்டு விட்டன.
3. தற்போது ஒருங்குறி எழுத்துரு பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனால் உலகில் பலவேறு பகுதியிலுள்ள இணையப் பயன்பாட்டாளர்கள் இந்த எழுத்துரு மாற்றிகளின் உதவியுடன் பல தமிழ் எழுத்துருக்களைக் கொண்ட தளங்களை ஒருங்குறிக்கு மாற்றிப் படித்துத் தகவல்களைத் தெரிந்து கொள்ள உதவுகிறது.