/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, July 14, 2011

மதுரையில் தொடுவானம் கணினி மற்றும் இணையப்பயிலரங்கம்

மதுடை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை 16-7-2011 அன்று கணினி மற்றும் இணையத்தமிழ் குறித்த கருத்தரங்கு நடைபெறுகின்றது.
இநிகழ்வில்
மதுரை மாவட்டம் முழுக்க இந்தத் திட்டத்தை அமல்படுத்த எண்ணி அதற்கு முன்னோடியாக மதுரைமாவட்டத்தின்
கடைக்கோடியில் அமைந்துள்ள 26 கிராமங்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கும் வகையில் 130 தன்னார்வலர்களுக்கும்,
25 கிராமநிர்வாக அலுவலர்களுக்கும்,26 ஊராட்சி எழுத்தர்களுக்கும் பயிற்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்தப்
பயிற்சி முடிந்த பின் அடுத்தடுத்த கட்டமாக மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்துக் கிராமங்களுக்கும் இந்தப்
பயிற்சி விரிவுபடுத்தப்படும். தமிழ் உலகம் அறக்கட்டளை மாவட்ட ஆட்சியருடன் கலந்துபேசி இதற்கான
ஏற்பாடுகளை முழுவீச்சில் மேற்கொண்டுள்ளது. இந்தப் பயிற்சி மற்ற மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்கும் ஒரு
எடுத்துக்காட்டாக அமையும் என்பது திண்ணம்.

தொடுவானம்....

இந்தப் பயிற்சிக்கு ”தொடுவானம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் அதிகம் படிக்காத, பள்ளி இறுதிவகுப்புவரை
பயின்றவர்களையே பெரும்பாலும் தேர்வு செய்து தன்னார்வலர்களாகப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள். 40விழுக்காடுக்கு
மேல் பெண்கள் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் பார்வையற்ற,
குறைபாடுள்ளவர்களும் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்யப்பட்டு அவர்களும் கணினியைப் பயன்படுத்தி தங்கள்
கிராமக் குறைகளை மனுவாக அனுப்ப இந்தத் தொடுவானம் திட்டத்தின் மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

பயிற்றுநர் பட்டாளம்....

இந்தப் பயிற்சித்திட்டத்தில் மென்பொறியாளர் தகடூர் கோபி அவர்கள் முதன்மைப் பயிற்றுநராக இருந்து வழி நடத்தவுள்ளார். இவருக்கு உறுதுணையாகக்
களமிறங்கி நம் தமிழ் உலகம் உறுப்பினர் திரு.செல்வமுரளி அவரது குழுவினருடன் பயிற்சியளிக்கவும் தொழில்நுட்பப்
பணிகளையும்,அவருடன் விண்மணி இணையத்தள நிறுவனர் நெல்லை மென்பொறியாளர்.திரு.நாகமணிஅவர்களும்
கவனிக்கிறார். தன்னார்வலர்களுக்கான பயிற்சியை அளிப்பதில் நம் தமிழ் உலகம் உறுப்பினர்கள் முனைவர் துரை.மணிகண்டன் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பிலும், தேனி.எம்.சுப்பிரமணி விக்கிப்பீடியா பற்றியும் உரை நிகழ்த்த உள்ளனர்

0 comments: