/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, July 18, 2015

பேரா. மு.ஆனந்தகிருஷ்ணன்

பேரா. மு.ஆனந்தகிருஷ்ணன்
(12-07-2015 திரு.மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் 87வது பிறந்தநாள்)
நம்மில் வாழும் மிக உயர்ந்த கல்வியாளர். பண்பாளர். அவர்களின் 87வது பிறந்ததினமான இன்று வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துவோம்.
முனிரத்தினம் ஆனந்தகிருஷ்ணன், வயது 87, தமிழகத்தின் மிகச்சிறந்த
கல்வியாளர்களில் ஒருவர். கிண்டி பொறியியற் கல்லூரி மாணவர், தேசிய நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர், கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர், அமெரிக்க இந்தியத் தூதரகத்தின் அறிவியல் ஆலோசகர், ஐ.நா. மூலம் பல நாடுகளில் கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகளில் பங்காற்றியவர், 62 வயதில் மீண்டும் தமிழகம் வந்து அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப்
பொறுப்பேற்பு, தமிழ்நாடு உயர்கல்வித்துறையில் துணைத்தலைவர் பதவி, தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலமைச்சரின் ஆலோசகர், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் உயர்கல்விக்குழு தொடர்பான அரசுக்குழுக்களுக்கு வழிகாட்டி, மத்திய அரசின் பல்வேறு உயர்கல்விக் கொள்கைகள் வகுப்பதில் பெரும்பங்களிப்பு,
தமிழ்க்கணினியை உலக அளவில் வளர்த்தெடுக்கும் 20 ஆண்டுகால தொடர் பணிகள், கணித்தமிழ்ச் சங்கம், உத்தமம் அமைப்புகளின் புரவலர், தற்போது மூன்றாம் முறையாக தொடர்ந்து பதவி வகிக்கும் ஐ.ஐ.டி. கான்பூர் நிறுவனத்தின் தலைவர் ‘பத்மஸ்ரீ’ பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் 60 ஆண்டுகளுக்கும்
மேலான கல்விப்பணியால் இந்தியாவின் உயர்கல்வித்துறை மிகப்பெரிய அளவில் பயன்பெற்றுள்ளது.
நினைவூட்டி, குறிப்புகளை வழங்கியுள்ளவர் - சொ.ஆனந்தன்
சென்னை

0 comments: