/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, July 26, 2015

“இலக்கிய ஆய்வுகளில் கணினியின் பயன்பாடு”

|0 comments
அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இந்திய  மொழிகளின் நடுவண் நிறுவனம்  இணைந்து நடத்தும்  “இலக்கிய ஆய்வுகளில் கணினியின் பயன்பாடு” என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிலரங்கம் நடைபெறுகிறது. இவ்விழாவில் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத் தலைவர் முனைவர் எல்.இராமமூர்த்தி அவர்களும் துணைவேந்தர் மூ.பொன்னவைக்கோ அவர்களும் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். இவ்விழா அண்ணாமலைப்  பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் அரங்க.பாரி அவர்களின் ஆலோசனையின்கீழ்...[தொடர்ந்து வாசிக்க..]

முனைவர் எஸ். அருள்மொழி - Dr.s.Arlmozhi

|1 comments
முனைவர் எஸ். அருள்மொழி ( 1968) … தமிழ்க் கணினிமொழியியல், மொழித் தொழில் நுட்பத்துறையில் பல அரிய பணிகளை மேற்கொண்டுவரும் இன்றைய இளைய தலைமுறை ஆய்வாளர். வேதியியலில் இளங்கலைப் பட்டமும் (1988), மொழியியலில் முதுகலைப் பட்டமும் (1990) கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெற்றார். பின்னர் ஹைதராபாத் நடுவண் பல்கலைக்கழகத்தில் செயற்படுத்தமொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் ( Centre for Applied Linguistics and Translation Studies – Centre for ALTS) எம் ஃபில்...[தொடர்ந்து வாசிக்க..]

Wednesday, July 22, 2015

பேராசிரியர் வாசு ரங்கநாதன்- Dr.VASU RENGANATHAN

|1 comments
                   பேராசிரியர் வாசு ரங்கநாதன் … தமிழகத்தின் உருவாக்கம். இன்று அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணி. தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் துறையிலும் கணினித்தமிழ் ஆய்விலும் உலகறிந்த ஒரு ஆய்வாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் மொழியியலில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் (1988) பெற்றவர். அவரது ஆய்வேட்டின் சிறப்பு அடிப்படையில் அமெரிக்காவில்...[தொடர்ந்து வாசிக்க..]

Monday, July 20, 2015

முனைவர் மு. இளங்கோவன்

|2 comments
முனைவர் மு. இளங்கோவன் … தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி என்று கணினித்தமிழ் உலகில் அனைவராலும் பாராட்டப்படுகிற ஒரு இளம் தமிழாய்வாளர். மாணவப் பருவத்திலேயே மாணவராற்றுப்படை என்ற இலக்கியத்தைப் படைத்தவர். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். திருப்பனந்தாள் காசி மடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியில் தமிழில் பி.லிட்.,(1987-90) முதுகலை (1990-92) பட்டங்களையும் பாண்டிச்சேரி நடுவண் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் (1992-93) , திருச்சி பாரதிதாசன்...[தொடர்ந்து வாசிக்க..]

Saturday, July 18, 2015

பேரா. மு.ஆனந்தகிருஷ்ணன்

|0 comments
பேரா. மு.ஆனந்தகிருஷ்ணன் (12-07-2015 திரு.மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் 87வது பிறந்தநாள்) நம்மில் வாழும் மிக உயர்ந்த கல்வியாளர். பண்பாளர். அவர்களின் 87வது பிறந்ததினமான இன்று வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துவோம். முனிரத்தினம் ஆனந்தகிருஷ்ணன், வயது 87, தமிழகத்தின் மிகச்சிறந்தகல்வியாளர்களில் ஒருவர். கிண்டி பொறியியற் கல்லூரி மாணவர், தேசிய நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர், கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர், அமெரிக்க இந்தியத் தூதரகத்தின் அறிவியல் ஆலோசகர், ஐ.நா....[தொடர்ந்து வாசிக்க..]

பேராசிரியர் இரா. சீனிவாசன்

|0 comments
பேரா. இரா. சீனிவாசன் … எனது தொடரில் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த இளம் ஆய்வாளர் . ஆனால் ஆய்வில் மிகுந்த முதிர்ச்சி உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழிலக்கியத் துறையின் உருவாக்கம். தமிழில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். எழுத்தாளர் ரகுநாதன் நடத்திவந்த ‘சாந்தி’ இதழில் வெளிவந்த சிறுகதைகள்பற்றிய ஆய்வை ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக மேற்கொண்டார். தனது முனைவர் பட்டத்திற்கு ‘ தமிழ் இலக்கண மரபுகள்’ என்னும் தலைப்பில் ஆய்வு...[தொடர்ந்து வாசிக்க..]

Thursday, July 16, 2015

பேராசிரியர் ப. பாண்டியராஜா

|0 comments
தமிழறிஞர்கள்பற்றி (73) …பேராசிரியர் ப. பாண்டியராஜா ( 1943) … மிகவும் வியப்புக்குரிய ஒரு தமிழறிஞர். பட்டங்கள் பெற்றது கணிதத்துறையில் … பணியாற்றியது கணிதத்துறையிலும் கணினித்துறையிலும் …. ஆனால் தமிழறிஞர்கள் பலரும் இணைந்து செய்யவேண்டிய பணிகளை – ஒரு மிகப்பெரிய தமிழாய்வு நிறுவனம் செய்யவேண்டிய பணிகளை - தனி ஒரு ஆய்வாளராக இருந்து சாதித்துள்ளார். கணிதத்தில் இளங்கலைப் பட்டம் (1962), முதுகலைப் பட்டம் (1964), எம் ஃபில் பட்டம் ( 1972) பெற்றுள்ளார். மதுரைக் காமராசர்...[தொடர்ந்து வாசிக்க..]

தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு

|0 comments
தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு பி. சத்திய மூர்த்தி., ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302 முன்னுரை:      இலக்கியங்களில் படைக்கப்படும் பாத்திரங்கள் தன் இலக்கியச்சுவையும் , படைப்பாளிகளின் மனவுணர்வு களையும் பிரதிபலிக்கும் களமாக அமைகின்றன. அவ்வகையில் கதாப்பாத்திரங்களின் வழி வெளியாகும் பண்பாடு,வரலாறு ஆகியவை முக்கியத்துவம் பெருகின்றன. படைப்பாளன் ஒவ்வொரு...[தொடர்ந்து வாசிக்க..]
Pages (31)123456 »