/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, January 27, 2012

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் (26-01-2012)கணினிமொழியியல் பயிலரங்கம்

எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து நடத்தும் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கு இன்று ஏழாம் நாளில் காலை அமர்வில் பேராசிரியர் ந.தெய்வசுந்தரம் அவர்கள் கணினிக்கு எவ்வாறு தமிழ்மொழியின் ஒலியியல் கூறுகளை கொடுப்பது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்

கணினிப் புரிந்துகொள்ளும் வகையில் சின்னச்சின்ன தரவுகளாகப் பிரிதுக் கொடுக்கவேண்டும் என்றார். அப்பொழுதுதன் சொற்பிழைத்திருத்தியை உருவாக்கமுடியும்.அதற்கு பகுபத உறுப்புகளில் உள்ள பகுதி, விகுதி. சந்தி, சாரியை, விகாரம் இடைநிலை என்றால் என்பதை முதலில் தொகுத்து பின்பு கணினிமொழிக்குக் கொடுக்கவேண்டும்.

பேராசிரியர் ந.தெய்வசுந்தரம்

பிறகு சொற்பிழைத்திருத்தி, இலக்கணத்திருத்தி, சந்திப்பிழைத்திருத்தி போன்ற தமிழ் மென்பொருள்களை உருவாக்கி அதனை கணினிக்காட்சிமூலம் எடுத்துக்காட்டினார்.
இறுதியாக இத்தைகய செயல்பாடுகளில் தமிழ்ப்படித்தப் பேராசிரியர்கள், மற்றும் தமிழ் ஆர்வளர்களால் மட்டும் இப்பணியைச் செய்ய இயலாது. கணினி அறிவு, மொழி அறிவு, இலக்கண அறிவு மூன்றும் ஒன்றாக இணைந்திருந்தால்தான் ஒரு தமிழ் மென்பொருளை சரியாக உருவாக்கமுடியும் என்பதையும் குறிப்பிட்டார்.
பேராசிரியருடன் அவரது மாணவைகள் இருவர் வந்திருந்தனர்.

ஒருவர் கணினித்துறை ஆய்வாளர் செல்வி மு.அபிராமி மற்றொருவர் மொழியியல் துறை ஆய்வாளர் செல்வி. கி.உமாதேவி என இருவரும் இம்மூன்று தமிழ் மென்பொருள்களின் பயன்பாட்டிற்குப் பெரிதும் பங்களிப்புச் செய்துள்ளனர்.

செல்வி மு.அபிராமி , செல்வி. கி.உமாதேவி

மதியம் நடந்த கணினிக்கூடப் பயிற்சியில் கலந்துகொண்டோம்.
இதில் தமிழில் கணினியை இயக்க தமிழ்பென்பொருளை எவ்வாறு பதிவிரக்கம் செய்வது என்பது குறித்தும், வலைப்பூக்கள் உருவாக்குவது குறித்தும் கற்றுக்கொடுக்கப்பட்டது. பலர் இதில் ஆர்வமாக கலந்துகொண்டதை காணமுடிந்தது.





0 comments: