/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, February 27, 2020

தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம் - திருச்சிராப்பள்ளி

|4 comments
                                     திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கணினித் தமிழ்ப் பயிற்சி


    மேனாள் உதவி இயக்குநர் நீ. மேகநாதன் , துணை இயக்குநர் ம.சி.தியாகராஜன்.
                                          
2019-2020 ஆம் ஆண்டு தமிழ் வளர்ச்சித் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பிற்கிணங்க தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27-12-1956 ஆம் நாளை நினைவு கொள்ளும் வகையில் ஆட்சி மொழிச் சட்ட வாரம் ஆண்டுதோறும் சிறப்பாக  அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட ஆணையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஆட்சி மொழிச் சட்ட வாரத்தினை 20-3-2020 ஆம் நாளுக்குள் ஒரு வார காலத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட வேண்டுமென்று அனுப்பிய குறிப்பாணையைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது.
                      உதவியாளர் திருமதி சி.சுகன்யா, மேனாள் உதவி இயக்குநர் நீ. மேகநாதன்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 20-02-2020 முதல் 26-02-2020 வரையிலான காலத்திற்கு ஆட்சி மொழி வாரம் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக 20-2-2020 பிற்பகல் 02.00 மணி முதல் 05-00 மணி வரை  நடைபெற்றது. 

இந்த பயிற்சியில்அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட அலுவலகங்களில் பணிபுரியும் தட்டச்சர், இளநிலை உதவியாளர் ஆகியோர்களுக்குத் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் கணினித் தமிழ் வளர்ச்சி, கணினித் தமிழ் விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகளை வழங்கினேன்.

மேலும்  தமிழ் ஒருங்குறி எழுத்துரு பயன்பாடு, அம்மா மென் தமிழ் சொல்லாளர் பயன்படுத்துதல், தமிழில் விரிதிரை பயிற்சி மற்றும்  ஆட்சிமொழி குறித்துப் பயிற்சியை வழங்கினேன்.


Saturday, February 22, 2020

நவீன் உலகில் கணினித்தமிழின் இன்றையப் பயன்பாடுகள்- சேலம்

|0 comments
கல்லூரி முதல்வர் பேராசிரியர் வ.மதன்குமார் அவர்கள் எமக்குச் சிறப்புச்செய்தல்

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கல்லூரிகளில் கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னையும் இணைந்து நடத்திய ஒரு நாள் கணினித்தமிழ் பயிற்சி சிறப்பாக 11-02-2020 அன்று கல்லூரி  முதல்வர் வ.மதன்குமார் அவர்களின் தலைமையில் தொடங்கியது.
                                     நிகழ்வில் வரவேற்புரை வழங்கிய பேரா.துர்காதேவி

நிகழ்வின் தொடக்கமாக  நிகழ்வின்  ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறையில் பணியாற்றும் உதவிப்பேராசிரியர் செல்வி துர்க்காதேவி வரவேற்புரை வழங்கினார்.
                             பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள்

பயிற்சியில் சிறப்புரையாக முனைவர் துரை.மணிகண்டன் இணையத்தமிழ்க் குறித்த வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைத்தார். பிறகு பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு ஒருங்குறியில் தட்டச்சு செய்வது எப்படி என்று பயிற்சி மூலம் விள்க்கினார். மேலும் பேசினாலே தட்டச்சு செய்யும்  https://speechnotes.co/  இணையப்பக்கத்தையும் எடுத்துக்காட்டி அதில் மாணவர்களைப் பேசவைத்து தட்டச்சு இடுவதை செயல்முறையில் விளக்கம் அளித்தேன்.



அடுத்து அனைத்து மாணவர்களுக்கும் வலைப்பதிவை உருவாக்கிக் கொடுத்து அதில் தமிழில் எழுதவைத்து பயிற்சி வழங்கினேன். தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியா,  தமிழ் மென்பொருள்கள், சமூக ஊடங்களைப் பயன்படுத்தும் நெறிமுறைகள், இணையத்தில் வேலை வாய்ப்பை பெறுவது எவ்வாறு என்றும் எடுத்து விளக்கினேன்.






இணையத்தமிழ்ப் பயிற்சி - தமிழ் வளர்ச்சித்துறை- சேலம்.

|0 comments




                                                  துணை இயக்குநர் திருமதி ஜோதி
தமிழக அரசால் தமிழ் வளர்ச்சித்துறை வெகு சிறப்பாக பல நல்ல செயல்களைத் தமிழகம் முழுவது செய்துவருகிறது. அதற்குத் தமிழ்வளர்ச்சித்துறை இயக்குநராகப் பணியாற்றும் முனைவர் கோ.விஜயராகவன் அவரக்ளை நான் மனதார பாராட்டுகின்றேன்.
ஐயாவின் சீரீய முயற்சியின் விளைவாகவும் தமிழக அரசின் முழு ஒத்துழைப்புடனும் இந்த “தமிழ் ஆட்சிமொழி சட்டவாரம்” என்ற பொருண்மையில் தமிழ்கம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் அரசுத்துறையில் பணியாற்றும் தட்டச்சுப் பணியாளர்களுக்குத் தமிழ் மொழியின்  மேன்மையையும் அதில் உள்ள தமிழ்ச்சொற்களையும் பயன்படுத்த இந்த ஒருவார பயிற்சி வழங்கப்படுகிறது.
துணை இயக்குநர் ஜோதி அவர்களுடன் கல்லூரிப் பேராசிரியர்கள்

இதில் சேலம் தமிழ்வளர்ச்சித் துறையின் சார்பாக துணை இயக்குநர் திருமதி ஜோதி அவர்களின் தலைமையில் சேலம் அரசு மகளிர் கல்லூரியில் 19-02-2020 அன்று காலை நிகழ்வு தொடங்கியது. இதில் நான் இணையத்தமிழ் குறித்தும் தமிழில் எவ்வாறு கோப்புகளை உருவாக்குவது குறித்தும்,  தமிழில் குறிப்பாக ஒருங்குறியில் தட்டச்சுசெய்து அனைவருக்கும் செய்தியை அனுப்பும் நோக்கம் குறித்தும் சுமார் இரண்டு மணி நேரம் பயிற்சி வழங்கினேன். நிகழ்வில் அரசு மகளிர் கல்லூரி ஆங்கிலம், தமிழ்த்துறைத் தலைவர்கள் மற்றும் துணை முதல்வர் உள்ளிட்டோர்  கலந்துகொண்டனர்.



நிகழ்வில் தமிழ்த்துறை மாணவிகளும் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர்.

பயிற்சியில் கலந்துகொண்ட அரசு அலுவளர்கள் மற்றும் மாணவிகள்


இணையத்தமிழ்ப் பயிலரங்கம் - வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரி

|0 comments
                                                        நிகழ்வின் தொடக்கம்.
வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரித் தமிழ்த்துறையில் ஒருநாள் இணையத்தமிழ்ப் பயிலரங்கம் 16-02-2020 அன்று வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வைத் தமிழ்நாடு அரசின் தமிழ் இணையக்கல்விக் கழகம் சார்பாக இணையத்தமிழின் அவசியத்தை தமிழ்நாட்டில் உள்ள மக்களும், மாணவர்களும் பயன்படுத்த வேண்டும் என்ற உயரிய நோக்கில் ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் தலா 25000 வழங்கி இந்தச் சிறப்பு பயிலரங்கை கடந்த 2019 ஆண்டிலிருந்து தமிழ்கத்தில் பல்வேறு கல்லூரிகளில் நடத்தி வருகிறது.
அவற்றில் ஒன்றாக வாணியம்பாடி இஸ்லாமியக் கல்லூரித் தமிழ்த்துறையில் சிறப்பாக நடைபெற்றது.
                                                   பேராசிரியர் வ.தனலெட்சுமி
  இந்தப் பயிலரங்கில்  முதல் அமர்வில் பேராசிரியர் வ.தனலெட்சுமி  இணையத்தமிழ் வரலாறும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்களை எவ்வாறு உருவாக்குவது என்ற பொருண்மையில் பயிற்சி வழங்கினார்கள். இந்தப் பயிற்சியில் 25 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழில் வலைப்பதிவை உருவாக்கி பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

அடுத்த அமர்வில் முனைவர் துரை.மணிகண்டன் தமிழில் தட்டச்சுப் பயிற்சியை வழங்கினார்.
                                                     முனைவர் துரை.மணிகண்டன்
தமிழ் எழுத்துரு உருவாகிய வரலாறும் அது கடந்துவந்த பாதையையும் தெளிவுபடுத்தினார். சுரதா எழுத்துருவில் தொடங்கி, முரசு, அஞ்சல், அழகி, NHM , இன்று பேசினாலே தமிழில் தட்டச்சு செய்யும் வரை எடுத்துரைத்தார்.

அடுத்து திரு.செல்வமுரளி தமிழில் குறுஞ்செயலிகள் உருவாக்குவது எப்படி என்றும் அதனால் விளையும் நன்மைகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
                                                                  திரு,செல்வமுரளி
மேலும் இணையத்துறையில்  மாணவர்கள் எவ்வாறு வேலை வாய்ப்பை பெறமுடியும் என்ற நோக்கிலும் தன் சிறப்புரையை வழங்கினார்.

இறுதியாக திரு.நாணா அவர்கள் மாணவர்கள் எவ்வாறு இணையத்துறையிலும், திரைப்படத்துறையிலும் எழுத்துருவைப் பயன்படுத்தி  வேலைவாய்ப்பைப் பெறமுடியும் என்பதை தனது 25 ஆண்டுகால பத்திரிக்கைத்துறையின் அனுபவங்களை மாணவர்க்ளுக்கு எடுத்து விளக்கினார்.
                    திரு நாணா அவர்கள் மாணவனுக்குச் சான்றிதழ் வழங்குதல்.

இந்த நிகழ்வைத் தமிழ்த்துறையின் பேராசிரியர் முஷிப் ரகுமான் ஆவர்கள் ஒருங்கமைத்தார். மிகச்சிறந்த பண்பாளர். வந்தவர்களை உபசரிக்கும் பண்பாளர். நானும் இதுவரை எத்தனையோ கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களுக்குச் சென்று வந்துள்ளேன். சில குறிப்பிட்ட கல்லூரிகளில் இந்தக் கல்லூரி பேராசிரியரின் விருந்தோம்பல் வெகு சிறப்பாக இருந்தது.
பேராசிரியர் வ.தனலெட்சுமி, முனைவர் துரை.மணிகண்டன் நிகழ்வின் கதாநாயகன் பேராசிரியர் முஷிப் ரகுமான்.

நிறைவாக பயிர்ச்சி வழங்க வந்த நால்வரும் ஒன்றாக இணைந்து அடுத்தக்கட்டமாக நாம் இணையத்தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் பற்றியும் கலந்துரையாடினோம்.
நிகழ்வில் கலந்துரையாடியபொது தமிழ்த்துறைத் தலைவர் சிவராஜ், திரு நாணா.

Friday, January 31, 2020

செல்வம் கலை அறிவியல் கல்லூரி நாமக்கல்.- தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்வழி கல்வி.

|1 comments

தமிழ்த்துறைத் தலைவர் க,சக்திவேல், முனைவர் துரை.மணிகண்டன், தமிழ்த்துறைப் பேராசிரியர் திரு.தினேஸ்குமார்

நாமக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் புதுமையான கல்லூரிகளில் ஒன்றாக விளங்கும் “செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையில் 29/01/2020 புதன்கிழமை ”தகவல் தொழில் நுட்பத்தில் தமிழ்வழி கல்வி” என்ற பொருண்மையில் ஒருநாள் பயிற்சி வழங்கிச் சிறப்புரையாற்றினேன்.
நிகழ்விற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் ந. இராஜவேல் அவர்கள் தலைமை வகித்தார். தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.சக்திவேல் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.


நிகழ்வில் ஒரு மணிநேரம் தகவல் தொழில்நுட்பத்தின் வரலாற்றை எடுத்து விளக்கினேன். பிறகு இணையம்சார்ந்த செய்திகளையும் தமிழ்மொழி இந்த இணையத்தில் எவ்வாறு நிலைத்து நிற்கின்றன என்றும் நாம் என்ன செய்யவேண்டும் என்ற பொருளிலும் உரை முதல் அமர்வில் இருந்தது.
இரண்டாவது அமர்வில் தமிழ் எழுத்துருவின் தோற்றம்,  வளர்ச்சி. இன்றைய நிலை குறித்து விளக்கினேன். தமிழ்த்தட்டச்சு தொடங்கிப் பேசினாலே தட்டச்சு செய்யும் வளர்நிலையை மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி மூலம் விளக்கிக்காட்டினேன். பல மாணவர்கள் நல்ல முறையில் தமிழில் தட்டச்சு செய்து பழகிக்கொண்டனர்.

அடுத்துத் தமிழ் மென்பொருள்களின் வளர்நிலையையும் எடுத்து விளக்கினேன். பேராசிரியர் தெய்வசுந்தரம் அவர்களின் அம்மா மென்பொருள் மற்றும் நீச்சல்காரனின் சொற்பிழைதிருத்தி, சந்திப்பிழைதிருத்தி, பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தியின் மென்பொருள், வினோத் ராஜனின் அவலோகிதம் போன்ற தமிழ் மென்பொருள்களின் பயன்பாடுகள் குறித்து நேரடி பயிற்சிகள் வழங்கப்பட்டது.

மேலும் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் you tube வழி மாணவர்கள் எவ்வாறு வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற பொருண்மையிலும் விளக்கம் அளிக்கப்பட்டது. எந்தத் தகவல் தொடர்பு சாதனமாக இருந்தாலும் அதனைத் தமிழில் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினேன்.

நிகழ்வில் 250 தமிழ் இளங்கலை,(BA) இலக்கியவியல் இளைஞர்,(B.LIT) முதுகலை (MA) மாணவ, மாணவிகள் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
இந்நிகழ்வினை ஒருங்கமைத்த தமிழ்த்துறைப் பேராசிரியர் தினேஷ்குமார் அவர்களுக்கு நன்றி…


Saturday, January 25, 2020

திண்டுக்கல் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இணையத்தமிழ்...

|0 comments

Saturday, December 28, 2019

கணினித்தமிழ் - தமிழில் பார்க்க வேண்டிய மிக முக்கியமான காணொளி பக்கங்கள்.

|36 comments



10. மிக முக்கியமான காணொளி பக்கங்கள்.
1.                     http://keepvid.com/    you tupe downlode saftwer.

11. எவ்வாறு  குறுஞ்செயலி உருவாக்குவது?
  1. https://www.youtube.com/watch?v=qb2n5Yr_zys
3.      https://www.youtube.com/watch?v=P8kppRBmBb8)  - சொக்கனின் குறுஞ்செயலி காணொலி.

12. எப்படித் தமிழில் தட்டச்சு செய்வது?
  1. https://www.youtube.com/watch?v=UgiQXOk_M2U
  2.       https://www.youtube.com/watch?v=DFFPwucs3Bc (NHM Writter)
குரல்வழி தட்டச்சு செயலி
13. தமிழில் மின் நூல் உருவாக்குவது
  1. https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs
14. எவ்வாறு மின்னூலை கூகுள் பிளேவில் இணைபது
15. இணையம் என்றால் என்ன? அதன் பயன்பாடு

16. தமிழில் ஃபுரகிராம் உருவாக்குவது
https://www.youtube.com/watch?v=zCNPwhRw2aY
17. தமிழில் OCR முறையில் உருவாக்குவது
www.youtube.com/watch?v=Kx3XJKYVKWs
18. தமிழில் வலைப்பதிவை உருவாக்குவது
2. https://www.youtube.com/watch?v=QIsizu-Y3TY
19. தமிழில் இணையதளம் உருவாக்குவது எப்படி
2.   https://www.youtube.com/watch?v=YtXOWFMd3Uw (தமிழில்)

20. தமிழ் கற்றல் கற்பித்தல் இணையதளம் & வலைப்பதிவு
3.      www.tamilacademy.com/
7.      http://tamilcube.com/
9.      http://edu.tamilclone.com/
21. தமிழ் இணைய நூலகங்கள்
8.   http://ilakkiyam.com/
22. தமிழ் எழுத்துரு மாற்றிகள்

            23. தமிழ் கணினிச் சார்ந்த இணையப்பக்கம் & வலைப்பதிவு.
          1.   http://www.techtamil.com/
          2.   http://www.zapmeta.co.in/
          3.   http://bestkulam.blogspot.in/
          5.   www.thozhilnutpam.com
          6.   www.suduthanni.bolgspot.in
          7.   www.tvs50.blogspot.in
          8.   www.pkp.blogspot.
                       9.      www.kaniyam.com/team/
                   10.  www.tamilarwiki.blogspot.in
                    11.  http://www.gnu.org/
                   12.  http://ilawasamenporul.blogspot.in
                   13.  http://ezilnila.com/archives/3031
         24. இணையப் பயன்பாடு புள்ளிவிபரக் கணக்கு
            http://www.internetworldstats.com/facebook.htm

        25. வலைப்பதிவு மொத்த லிஸ்ட்.
              http://www.valaitamil.com/tamilsites/
        26. கணினித் தமிழ் ஆய்விற்குப் பயன்படும் இணையதளங்கள்.
1..www.cict.org

27. ஆண்ட்ராய்டு உருவாக்கம்.
28. சொற்களைக் கண்டறியும் தளம்
29. apps உருவாக்கம் வலைப்பக்கம்.
2.   https://www.appypie.com/

30. ஆங்கில மொழிபெயர்ப்பு இணையதளம்.
http://www.easyhindityping.com/tamil-to-english-translation



Sunday, December 22, 2019

மணிவானதி MANIVANATHI: காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி ...

|0 comments
மணிவானதி MANIVANATHI: காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி ...: காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி பயிலரங்கில்... காந்திகிராமம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மற்ற...

Saturday, December 21, 2019

காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி பயிலரங்கில்

|2 comments
காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்க் கணினி பயிலரங்கில்...

காந்திகிராமம், காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மற்றும் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேலைவாய்ப்புத் தகவல் மையம் இணைந்து 19-12-2019 மற்றும் 20-12-2019 ஆகிய இருநாட்களில் நடத்திய “தமிழ்க் கணினி பயிலரங்கம்” முதல்நாள்
பல்கலைக்கழக பதிவாளர், மற்றும் பேராசிரியர்கள் ஆனந்தகுமார்,  இராசரெத்தினம்

நிறைவுரையாற்றிய வேளையில்...
சிறப்பிக்கப்பட்ட வேளையில்...
பயிற்சி பெற்றோர் பின்னூட்டக் கருத்துகள் வழங்கிய வேளையில்...
சான்றிதழ்கள் வழங்கிய வேளையில்..
மேடையில், முனைவர் வி. நிர்மலாராணி (பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்த்துறை. காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகம்), முனைவர் எம்.அன்புச்செல்வன் (துணை நூலகர்
மற்றும் நூலகர் (பொ), முனைவர் சி.சிதம்பரம் (உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை), முனைவர் துரை. மணிகண்டன் (உதவிப் பேராசிரியர், பாரதிதாசன் உறுப்புக் கல்லூரி, நவலூர்குட்டப்பட்டு) ஆகியோர்.

                                                                    தேனி.சுப்பிரமணி

                                            முனைவர் துரை.மணிகண்டன்

                                                          முனைவர் சி.சிதம்பரம்

 பயிற்சியில் கலந்துகொண்டு பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழ் வழங்கியபோது
 தமிழ்த்துறைத் தலைவர் பேரா.நிர்மலாதேவி அவ்ர்கள் சான்றிதழ் வழங்கியபோது

நிகழ்வில் கலந்துகொண்ட  பிற கல்லூரி   பேராசிரியர்கள்

தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவியல்தமிழ்

|0 comments
தமிழ்ப் பல்கலைக்கழகம் அறிவியல்தமிழ் மற்றும் தமிழ்வளர்ச்சித் துறையில் 08/11/2019 அன்று அறக்கட்டளைப் பொழிவுகள் இனிதே தொடங்கியது. நிகழ்ச்சியின் தொடக்கமாக அறிவியல்தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் தியாகராஜன் அவர்கள் வரவேற்றுப் பேசினார்.

                                                      முனைவர் தியாகராஜன்

                                                  முனைவர் துரை. மணிகண்டன்

நிகழ்வின் தலைமையுரையாகப் பேராசிரியர் அன்னபூரனி இராமநாதன் அவர்கள் உரை வழங்கினார்.
முதல் பொழிவில் தேசியக்கல்லூரித் தமிழ்ததுறைத் தலைவர் முனைவர் ச. ஈஸ்வரன் அவர்கள் “அறிவியல் கலைச்சொல்லாக்க வளர்ச்சியில் மொழிபெயர்ப்பின் பங்களிப்பு” என்ற தலைப்பில் உரை வழங்கினார்.
                                                           முனைவர் ச.ஈஸ்வரன்
அடுத்து பேராசிரியர் முனைவர் துரை. மணிகண்டன் “தமிழும் இணையமும்” என்னும் தலைப்பில் உரையாற்றினார்.
நிகழ்வில் பல்கலைக்கழகப் புலத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.