/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, April 3, 2022

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக இணையத்தமிழ்ப் பயிற்சி - தஞ்சாவூர்

 

இணையத்தமிழ் ஆய்வாளர் துரைமணிகண்டனுக்குத்  தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் திரு.கா.பொ. இராஜேந்திரன் அவர்கள் பொன்னாடை அணிவித்தது.

தஞ்சாவூர் மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஆட்சிமொழிப் பயிலரங்கம் சீரும் சிறப்புமாக மார்ச் மாதம் 08, 09 - 2022 ஆகிய இரு தினங்களில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு அலுவலர்கள்  100 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு பல்வேறு துறை சார்ந்த பயிற்சிகளைப் பெற்றனர்.

இதனடிப்படையில் இரண்டாம் நாள் நிகழ்வின் தொடக்கமாக 9 -3- 2022  அன்று இணையத்தமிழ் ஆய்வாளரும் பேராசிரியருமான முனைவர் துரை மணிகண்டன் அவர்கள் இணையத் தமிழக் குறித்த உரையை பயிற்சியுடன் வழங்கினார்.



இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளராக இருந்து செம்மையாக செயல்பட்ட தஞ்சாவூர் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குனர் திரு.கா.பொ. இராஜேந்திரன் அவர்கள் அறிமுக உரை வழங்கினார்.

இப்பயிற்சியில் அரசு அலுவலர்கள் கோப்புகளை எவ்வாறு ஒருங்குறியில் தட்டச்சு செய்து தங்களது உயர் அதிகாரிகளுக்கும், மக்களுக்குப் அனுப்புவது என்பது தொடர்பாக தெளிவாக விளக்கப்பட்டது.

பயிற்சியில் ஈடுபட்டார் அரசு அலுவலர்கள் பலர்  இணையம் வழியே தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து காட்டினார்கள். மேலும் பல்வேறு தமிழ் ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தியும் காட்டினார்கள். து அங்கு வந்திருந்த மற்ற அரசு அலுவலர்களுக்கு நல்ல விளக்கமாக இருந்தது என்று குறிப்பிட்டார்கள்.

பங்கேற்ற அரசு அலுவலர்கள்


                                                      பங்கேற்ற அரசு அலுவலர்கள்

மேலும் இந்நிகழ்வில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறை தலைவரும் பேராசிரியருமான முனைவர் காமராசு அவர்கள்  கலந்துகொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.

                                                    பேராசிரியர் காமராசு அவர்கள்

0 comments: