/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, February 4, 2022

Training Programme in Tamil Computer - Open Source Software Training In chennai

 தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னை, தமிழக அரசின் தமிழ் இணைய கல்விக் கழகமும் இணைந்து வழங்கிய கணித்தமிழ் பயிற்சிப் பட்டறை இரண்டாவது முறையாக வழங்கியது.

                                                                Dr.Durai.Manikandan

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னை, தமிழக அரசின் தமிழ் இணைய கல்விக் கழகமும் இணைந்து வழங்கிய கணித்தமிழ் பயிற்சிப் பட்டறை 3-2 -2022  காலை 10:30 மணிக்குப் பல்கலைக்கழக அரங்கத்தில் மாணவர்களுக்குப் பயிற்சிகள் வழங்கப்பட்டன.


                                                    இணையத்தமிழ் ஆய்வாளர்
குறிப்பாக கட்டற்ற மென்பொருள் தொடர்பான விளக்கங்களும் அவற்றை எவ்வாறு நாம் தமிழ் ஆய்வுக்குப் பயன்படுத்த முடியும் என்பது குறித்தும் கட்டற்ற மென்பொருளை அனைவரும் பயன்படுத்த எந்தெந்த வழிமுறைகள் இருக்கின்றன என்பது குறித்தும் தெளிவாக அவர்களுக்குப் பயிற்சி மூலமாக வங்கினேன்.

அதனைத் தொடர்ந்து குறுசெயலிகளின்(Smart Applications) அறிமுகத்தைத் தொடங்கி குறுஞ்செயலிகள் இன்று தமிழில் எந்தந்த துறையில் கிடைக்கின்றன, அதை உருவாக்குவதற்கு ஒரு கணினி மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிக் கற்றுக் கொண்டால் நாமே ஒரு தமிழில் ஒரு செயலியை உருவாக்க முடியும் என்பதைப் பயிற்சி மூலம் மாணவர்களுக்குத் தொடங்கினேன்.

        
                                                                    கணினி அறையில் பயிற்சி வழங்குதல்.

பிறகு பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர், பதிவாளர், தேர்வு நெறியாளர், துணைத் தேர்வு நெறியாளர், துணைப்பதிவாளர், அலுவலகங்கள், என அனைத்துக் கணினிகளிலும் தமிழ் ஒருங்குறி எழுத்துருவை பதிவிறக்கம் செய்து அவர்களுக்குத் தட்டச்சு செய்யும் வழிமுறைகளையும் மிக நேர்த்தியாக வழங்கினேன்.

                                    குறுஞ்செயலி அறிமுக வழங்குதல்

இறுதியாக கணித்தமிழ்ப் பேரவைச் சார்பாகச் சிறந்த  தமிழ் வலைப்பக்கங்களை உருவாக்கி அவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது.

                    அலுவலகப் பணியாளர்களுக்குப் பயிற்சி வழங்கியது
இந்த நிகழ்வை மிகவும் திறம்பட நடத்திய கல்வியியல் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறை உதவி பேராசிரியரும் கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் கு.விஜயா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் நன்றிகளும்.

                    முனைவர் கு.விஜயா மற்றும் துணைவேந்தர் அவர்கள்

மேலும் பல்கலைக்கழக துணை வேந்தர் மிகுந்த மரியாதையோடு வரவேற்று இந்த பயிற்சியை முழுமையாக வழங்குங்கள். மேலும் எங்கள் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளிலும் சென்று இதுபோன்ற தமிழ் தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்து வைக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்றார். மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வு.

0 comments: