/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, January 13, 2022

பின்னலாடை நகரமாம் திருப்பூரில் இணையத்தமிழ் நுட்ப பயிலரங்கம்

 பின்னலாடை நகரமாம் திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக ஜனவரி 12,13-01-2022 ஆகிய  இரண்டு நாட்கள் நடைபெற்ற ஆட்சிமொழி பயிலரங்கம்   திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இரண்டாம் நாள் நிகழ்வில் இணையத்தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் இணையத்தமிழ் நுட்பங்கள் என்ற தலைப்பில்  உரை வழங்கினார். இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் முனைவர் அன்புச்செழியன் அவர்கள் அறிமுகவுரை  வழங்கினார்.

இயக்குநர் முனைவர் அன்புச்செழியன் அவர்கள் இணையத்தமிழ் ஆய்வளருக்குச் சிறப்புச் செய்தல்

  அதனைத் தொடர்ந்து இணையத் தமிழ் ஆய்வாளர் முனைவர் துரை.மணிகண்டன் கணினி தமிழின் தோற்றம் குறித்தும், இணையத்தில் தமிழ்மொழி வளர்ச்சி குறித்தும், இணையத்தில் தமிழ் பங்களிப்பு குறித்தும், இணையத்தில் எவ்வாறு தமிழில் தட்டச்சு செய்வது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

 பயிற்சியில்  அரசு அலுவலர்கள் எவ்வாறு ஒருங்குறி எழுத்துருவைப் பயன்படுத்தி கோப்புகளை அரசுக்கு அனுப்ப வேண்டும் என்பது குறித்தும் இரண்டு மணி நேரம் பயிற்சி வழங்கப்பட்டது.  


                            பயிற்சியில் கலந்துகொண்ட அரசு அலுவலர்கள்

விழாவின் நிறைவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவியர்களுக்கப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார்.

0 comments: