/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, June 15, 2019

“சமூக ஊடகங்களின் இன்றைய நிலை”



திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்க அரங்கில் 5/6/2019 அன்று மாலை நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் “சமூக ஊடகங்களின் இன்றைய நிலை” என்ற தலைப்பில் சிறு உரை வழங்கினேன்.
சமூக ஊடகங்கம் என்பதின் பொருளை விளக்கக்கூறி இன்று சமூக ஊடகங்களாக முகநூல், டிவிட்டர், வாட்சப் ,கூகுள் + ,ஆர்குட் ,இனஸ்டாகிராம் , யூடியூப் போன்றவைகளின் தோற்றம் அதன் பயன்பாடுகள் பற்றியும் விரிவாக எடுத்து வழங்கினேன். சமூக ஊடகங்களினால் ஏற்படும் நன்மைகளாக கருத்துக்களைப் பகிர்வது, புகைப்படங்களை பதிவேற்றம் செய்வது , குழு உரையாடல் , வேலைவாய்ப்பு உருவாக்கிக் கொள்ளல், உலக அளவில் நடப்புகளை ஏற்படுத்திக்கொள்ளுதல் போன்ற பயனுள்ள தகவல்களை வழங்கினேன். மேலும் சமூக ஊடகங்களினால் ஏற்படும் தீமைகளாக தவறானபுகைப்படங்களை பதிவேற்றம் செய்வது தேவையில்லாத விடயங்களில் சிக்கிக்கொள்வது போன்ற செய்திகளையும் எடுத்துக்கூறினேன்.
இறுதியாக சமூக ஊடகங்களை நாம் நல்வழியில் பயன்படுத்தி வாழ்வில் முன்னேற்றம்
அடையலாம் என்று கூறினேன்.

நிகழ்வில் புனித சிலுவைக் கல்லூரி மாணவிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வில் தமிழ்ச்சங்க அமைச்சர் திரு. சிவக்கொழுந்து அவர்கள் துணை அமைச்சர் திரு. உதயகுமார் அவர்களும் உடன் இருந்தனர்.





0 comments: