/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, September 29, 2017

இணையத்தில் தமிழ்ப் பயன்பாடுகள்- Tamil Usages In Internet

சிவன்காசி S.F.R. மகளிர் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் 27/09/2017 அன்று நடைபெற்ற ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கில் “ இணையத்தில் தமிழ் இணையப் பயன்பாடுகள்” என்ற தலைப்பில் சிறப்புரை வழங்கினேன்.
நிகழ்வின் தொடக்கமாக தலைமையுரை துறைத்தலைவர் முனைவர் பா.பொன்னி வழங்கினார். அடுத்து வரவேற்புரையாக தமிழ்த்துறைப் பேராசிரியர் திருமதி பத்மபிரியா வழங்கினார்.
அடுத்து நான் 10 45 லிருந்து 1 மணி வரை இணைய அறிமுகத்தையும், தமிழ்மொழியில் இணையம் பயன்படுத்தப்படும் போக்கும் குறித்து விரிவாக விளக்கினேன். ( இணையம் அறிமுகம், இணையமாநாடுகளின் பங்களிப்பு, எழுத்துரு தோற்றம் இன்றைய நிலை, தமிழ் இணைய இதழ்கள், தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தோற்றம் வளர்ச்சி, தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் மென்பொருள்கள், அதிலும் குறிப்பாக எழுத்துப்பிழைத் திருத்திகள், முகநூலின் பயன்பாடுகள் அதனை எவ்வாறு எவற்றைப் பயன்படுத்த வேண்டும், போன்ற ....)


(பேராசிரியர் பத்மபிரியா, தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.பொன்னி இடையில் Dr.durai.manikandan பேராசிரியர் ச.தனலெட்சுமி மற்றும் வளர்மதி)

மதியம் 2 மணியிலிருந்து 3.30 வரை கணினி ஆய்வகக் கூடத்தில் பயிற்சியை வழங்கினேன். மாணவிகள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.
மதியம் 2 மணியிலிருந்து 3.30 வரை கணினி ஆய்வகக் கூடத்தில் பயிற்சியை வழங்கினேன். மாணவிகள் அனைவரும் ஆர்வமுடன் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

                                           (ஆய்வகக் கூடத்தில் பயிற்சியில்)
இறுதியாக செல்வி ச.பாலமுருகேஸ்வரி நன்றியுரை வழங்கினார்.
குறிப்பு:
1. நான் இதுவரை 70 மேற்பட்ட கல்லூரிகளுக்குப் பயிற்சி வழங்க சென்றுள்ளேன். ஆனால் இக்கல்லூரியில்தான் 60 % மாணவிகளுக்குத் தட்டச்சு தெரிந்து இருந்தது. இதற்குக் காரணம் அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் ஊக்கம்.
2. அங்கு பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களுக்கும் கணினியை இயக்கி தட்டச்சை மிக இலகுவாக பாவித்ததைக் கண்டு மகிழ்ச்சியுற்றேன். எனக்கு வியப்பாகவும் இருந்தது.
3.இதற்கெல்லாம் காரணம் துறைத் தலைவர் முனைவர் பா. பொன்னி அவர்கள்தான்.
வாழ்க வளமுடன்.....
பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற்ற கல்லூரி மாணவிகள்.

1 comments: