/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, July 30, 2009

சு.தமிழ்ச்செல்வி

இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தில் எழுதி வரும் பெண் படைப்பாளிகளில் முக்கியமானவர் சு.தமிழ்ச்செல்வி. குறுகிய காலத்தில் ‘மாணிக்கம்’, ‘அளம்’, ‘கீதாரி’, ‘கற்றாழை,’ எனும் நான்கு புதினங்கள் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர். இவரது முதல் படைப்பான ‘மாணிக்கம்’ நாவலுக்கு ௨00௨ -ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருதைப் பெற்றிருக்கிறது.
இவரது ‘ கீதாரி’ நாவல் இடையர்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது. வாழ்தலின் நிமித்தம் புலம் பெயரும் அனுபவத்தின் வலியை மலையாள இலக்கிய எழுத்தாளர் பொற்றக்காட்டின் ‘விசக்கன்னி’ க்குப் பிறகு அழுத்தத்தோடு விவரித்துச் சொல்லியுள்ளார். மனித குலத்தின் நெடிய வரலாறு எங்கும் காணக்கிடைக்கும் தீராத அலச்சலும், மனக்கொதிப்பும், வாழ்தழுக்கான வேட்கையும்,இயற்கை தன்னுல் வைத்திருக்கும் உயிர்களுக்கான ஆறுதலும் இப்புனைவின் பரப்பெங்கும் காணமுடிகிறது.
இவரது மூன்றாவது புதினமான ‘அளம்’ சாகித்திய அகாடமியின் தேர்வில் கடைசிவரை பரிசிலனையில் இருந்தது.பல்வேறு சிற்றிதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது ‘அளம்’ , கீதாரி’ இரண்டு புதினங்களுமே இளங்கலை,முதுகலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன். விருத்தாச்சலம் அருகில் கார்குடல் என்ற சிற்றூரில் ஊரட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவரது கணவரான கரிகாலன் ஒரு கவிஞர். அதேப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்

0 comments: