/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, August 31, 2010

இணையத்தில் தமிழ் கருத்தரங்கம்

|0 comments
25-8-2010 புதன் கிழமை திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூரி சிதம்பரபிள்ளை மகளிர் கல்லூரியில் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில் நான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினேன். 
  கல்லூரி முதல்வர் முனைவர் கி.சேகர் தலைமையில் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் இரா.மணிமேகலை முன்னிலையில் பேசினேன்.
 இணையத்தில் தமிழ் தோற்றம், இணைய அறிமுகம் மற்றும் தமிழ் மொழொயின் சிறப்பு, தமிழ் இணைய இதழ்களின் வளர்ச்சி, தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் தோற்றம் அவற்றில் உள்ள தமிழ் நூல்கள் ,தமிழ் மரபு அறக்கட்டளையின் பயன்பாடு குறித்தும் பேசப்பட்டது.

    மாணவிகள் இணையத்தை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற காட்சிமுறையில் விளக்கிக் குறிப்பிட்டேன்.பலர் கேட்ட வினாவிற்குத் தெளிவானமுறையில் இணையத்தைக்கொண்டு பதில்கொடுத்தேள்ளேன்.

 தமிழ்த்துறைப்பேராசிரியைகள் பலர் இது குறித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டனர். எம்மோடு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறைப்பேராசிரியர் வீரமணியும் உடன் வந்திருந்தார்.

Thursday, August 19, 2010

இணையமும் தமிழும் என்ற தலைப்பில் ஒளிப்படக் காட்சிமூலம்

|0 comments
வரும் 25-08-2010 புதன் கிழமை சிதம்பரம்பிள்ளை மகளீர் கல்லூரியில் இணையமும் தமிழும் என்ற தலைப்பில் ஒளிப்படக் காட்சிமூலம் உரை நிகழ்த்தவுள்ளேன். அதுசமயம் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

டாக்டர் கலைஞர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

|0 comments

டாக்டர் கலைஞர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி[ பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி ]இலால்குடியில் தமிழ்த்துறைச் சார்பாக முத்தமிழ் மன்றத் தொடக்கவிழாவில் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கலந்துகொண்டு ”சங்க இலக்கியத்தில் மனித நேயம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சங்க இலக்கியத்தில் கூறாதா மனிதநேயச்செய்திகளே இல்லையெனக் கூறலாம் என்றார். மேலும் ஓர் அறிவு உயிர்களுக்குச் செய்த தொண்டுதான் உலகில் அதிகம் பேசப்படுகிறது. அதை சங்க இலக்கியத்தில் பாரி, பேகன் போன்றோர்களின் மூலம் எடுத்துக்காட்டினார். மேலும் வள்ளலாரையும் எடுத்துக்காட்டிப் பேசினார். ஐயாவின் உரை மாணவ மாணவிகளுக்கும் பேராசிரிய பெருமக்களுக்கும் பயனுள்ளதாக இருந்தன.
முதுமனைவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்கு கல்லூரி முதல்வர் திரு தங்க.மதியழகன் நினைவுப்பரிசை வழங்குகிறார். இடமிருந்து வலமாக மாணவர் பிரபு பேராசிரியர்கள் முனைவர் துரை.மணிகண்டன். இரா. ஜெய்சங்கர், இராசா
|0 comments

முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களுக்குத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் துரை.மணிகண்டன் நினைவுப்பரிசினை வழங்குகிறார் அருகில் கல்லூரி முதல்வர் முனைவர் தங்க. மதியழகன் உள்ளார்.