/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, May 30, 2020

பயன்பாட்டு நோக்கில் தமிழ் மென்பொருள்கள்

|0 comments
தமிழ் ஆய்வாளர்களுக்குப் புதிய தமிழ் மென்பொருள்களின் பயன்பாடு குறித்துப் பேசிய  காணொலியை இப்பதிவில் இணைத்துக்கொள்கிறேன்.

மீண்டும் எனது அடுத்த உரையினை இப்பகுதியில் இணைத்துக்கொள்ள இருக்கின்றேன்.

Sunday, May 24, 2020

|0 comments

ஐந்தாவது உலகத்தமிழ்ப் பொருளாதார மாநாடு - 2018 - பாண்டிச்சேரி
://www.youtube.com/watch?v=1fKwi53dnng

Monday, May 18, 2020

|0 comments
 இந்தியக் கல்விசார் ஆயவாளர்கள் அமைப்பு - திருச்சிராப்பள்ளியும் மனோன்மணியம் சுந்தரனார் பன்னாட்டுத் திராவிடப் பணபாட்டு ஆய்வு மையம் கேரளப்பல்கலைக்கழகமும் இணைந்து வழங்கிய  இணையத்தில் கட்டுரை எழுதுவது என்ற தலைப்பில்  இணையவழி பயிற்சியாக வழங்கிய காணொலியை இந்த 
இணைப்பில்: https://youtu.be/zGDHSM5CwI0   காணலாம்.



தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் இணைய உரை

|0 comments

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 14
17.05.2020 மாலை 5.00 மணிக்குக் கோயம்புத்தூர், ஸ்ரீகிருஷ்ணா ஆதித்யா கலை அறிவியல் கல்லூரி, தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் த. சத்தியராஜ் அவர்கள் “தமிழில் மின்னூல் உருவாக்கம்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில், தமிழ் மின்னூல்கள் உருவாக்கம், அதற்கான தேவை, பயன்பாடு, கையாவணம் (PDF) கோப்பு வடிவத்தில் சேமிக்கும் வழிமுறைகள், அமேசான் நிறுவனத்தின் கிண்டில் மென்பொருள் எளிமையான இடைமுகம் கொண்டுள்ளது என்றும் மின்னூல் வெளியிடுவதற்கான இணையதளங்கள், நூல் காப்புரிமை (ராயல்டி) குறித்த தெளிவுகள் குறித்தும் பொழிவாற்றினார்.
இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 40-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை http://tamilpanpalai.com என்னும் தளத்தில் நேரலையாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Friday, May 15, 2020

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான கணினித்தமிழ் உரை

|0 comments

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 12
15.05.2020 மாலை 5.00 மணிக்குச் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிரலாளர் முனைவர் இரா. அகிலன் அவர்கள் “சங்க இலக்கியத் தொழில்நுட்பக் கருவிகள்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில், சங்க இலக்கியத்திற்காகப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பக் கருவிகள், அவற்றின் செயல்முறைகள், அக்கருவிகள் செயலாற்றுவதற்கான பொருண்மைகள் (Content) என்பது குறித்துப் பொழிவாற்றினார்.
மொழியை அடிப்படையாகக் கொண்டு மனிதனும் கணினியும் ஊடாடுவது மொழித் தொழில்நுட்பம் என்றும் இதற்குச் செம்மொழித் தமிழ் இலக்கண, இலக்கியவியல் புலமை, மொழியியல், கணினியியல், தொழில்நுட்பவியல் போன்ற துறைசார் பங்களிப்புகள் இன்றியமையாதவை என்றும் புலப்படுத்தினார்.
குறியீடு (Annotated), குறியீடில்லாத் தரவகம் (Unannotated corpus) என்னும் இருவகைத் தரவகங்கள், தரவகங்களை உருவாக்கி வரும் நிறுவனங்கள், மூலபாடங்கள், சந்திபிரித்த பாடங்கள், சொற்கள் பிரித்த பாடங்கள் என மூன்று நிலையில் தரவுகள் உருவாக்குதல் குறித்தும் விளக்கினார்.
செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழித் தொழில்நுட்பத் துறை உருவாக்கியுள்ள இணையவழி உ.வே.சா. செம்மொழித் தரவகம், அதில் பயன்படுத்துகின்ற தரவுகள்வழி மற்றும் விதிகள்வழி கருவிகள் உருவாக்கம் என்னும் சொல் பகுப்பு முறைகள், இணையவழியாகக் கிடைக்கும் சில சங்க இலக்கியம் சார்ந்த தரவுகள் போன்றவை குறித்தும் புலப்படுத்தினார்.

நிகழ்வின் முன்னதாக இணையதளம், சமூக ஊடகங்கள், வலைதளம், தானியங்கிப் பொறி அல்லது பணம்வழங்கி (ATM), வங்கிகள், திறன்பேசி போன்ற இயந்திரக் கருவிகளைப் புழங்கும்பொழுது கூடுமான வரையில் இடைமுக மொழியாக (Interface Language) தமிழ்மொழியைப் பயன்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையையும் வைத்தார்.
இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 40-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை http://tamilpanpalai.com என்னும் தளத்தில் நேரலையாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Thursday, May 14, 2020

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் கணினித்தமிழ் உரை

|0 comments

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 11
14.05.2020 மாலை 5.00 மணிக்குச் சென்னை, அண்ணா பல்கலைக்கழக இணைப்பேராசிரியர் முனைவர் மாலா நேரு அவர்கள் “செயற்கை நுண்ணறிவு (NLP)” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயற்கைமொழி ஆய்வு ஆகியவற்றின் தேவை, உருவாக்கம், பயன்பாடு, எதிர்காலம் குறித்துப் பொழிவாற்றினார்.
செயற்கை நுண்ணறிவு மனித நுண்ணறிவைப் போன்றது; சூழலுக்குத் தக்கவாறு பயனரின் மனப்போக்கிற்கு ஏற்பத் தன்னுடைய அறிவைப் பயன்படுத்த வேண்டும் என்னும் இலக்கைக் கொண்டுள்ளது.

இயந்திரங்கள், மனிதனைப் போன்ற சிந்திக்கும் ஆற்றல் பெறவில்லை என்றாலும்கூடத் தனக்குள் இருக்கும் கட்டளைகளைக் கொண்டு மனிதர்களுக்குத் தேவைப்படும் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் செயலாற்ற வேண்டும் என்பது செயற்கை நுண்ணறிவியலின் முதன்மைக் கொள்கை.
சமூகவியல், மெய்யியல் (philosophy), உளவியல், நரம்பியல், உயிரியல், கணினி அறிவியல், கணிதவியல் போன்ற துறைசார் பங்களிப்புகள் இருந்தால் மட்டுமே செயற்கை நுண்ணறிவியல் சாத்தியம்.
காணொளி விளையாடல்களில் (Games) சிறார்களின் கவனத்தை ஈர்க்கும் செயற்கை நுண்ணறிவு ஆளுமை. மற்றும் மருத்துவம், இயந்திரவியல், நரம்பியல், திரைத்துறை மற்றும் அசைவூட்டவியல், இராணுவம், மனிந்திரன் (Robotic) உருவாக்கம் போன்ற துறைகளில் மிகுதியான பயன்பாடுகள், செயற்கை நுண்ணறிவின் நன்மை இன்னல்கள், ஆப்பிள், மைக்ரோசாப்ட், அமேசான் நிறுவனங்கள் வழங்குகின்ற செயற்கை நுண்ணறிவிகள் (Chat box) என்னும் உட்கூறுகளைத் தாங்கி உரையாற்றினார்.

இயற்கைமொழி ஆய்வு, அதில் செயற்கை நுண்ணறிவு இணைந்து செயலாற்றும் விதம், இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகள், இயற்கைமொழி ஆய்வின் குறிக்கோள், படிநிலைகள், எதிர்காலத்தில் இன்னும் எட்டவேண்டிய இலக்குகள் போன்றன குறித்தும் தெளிவாக்கினார்.
இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 40-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை http://tamilpanpalai.com என்னும் தளத்தில் நேரலையாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Wednesday, May 13, 2020

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் கணினித்தமிழ் உரை

|0 comments

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 10
13.05.2020 மாலை 5.00 மணிக்குச் சென்னை, அண்ணா பல்கலைக்கழக முதுநிலை ஆய்வாளர் முனைவர் பட்டாபி ஆர் கே ராவ் அவர்கள் “தகவல் மீட்டெடுப்பு மற்றும் கண்டுபிடிப்புகள்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில், தகவலை எவ்வாறு மீட்டெடுப்பது மற்றும் தகவலைத் தேடிக்கண்டறிதலின் செயல்முறைகளைத் துறைசார்ந்த நுட்ப அறிவுடன் எடுத்தியம்பினார்.

தகவல் மீட்டெடுப்பு (Information Retrieval) என்பது தகவல்களைப்
பல்வேறு சான்றுகளிலிருந்து திரட்டித் தேவைக்கு ஏற்ப வகைப்படுத்தி வழங்குதல் என்றும் தகவல் கண்டுபிடிப்பு (Information Extraction) என்பது தேடப்படும் சொல் வடிவங்களில் பொதிந்திருக்கின்ற மொழியியல் கூறுகளுக்கு ஏற்ப வகைப்படுத்தித் தருதல் என்றும் விளக்கியுரைத்தார்.
தகவல் மீட்டெடுப்பு மற்றும் கண்டுபிடிப்புகளின் உட்கட்டமைப்புகள், இரண்டிற்குமான ஒருமைப்பாடு மற்றும் வேறுபாடுகள், திறவுநிலைத் தேடுபொறிகள் (Open Source IR Engines) உருவாக்கப் பயன்படும் நட்ச் (Nutch), சோலர் (Solr) என்னும் மென்பொருள்கள் குறித்து விளக்கினார்.
இந்திய நடுவணரசிற்காக (Indian Search Engines) அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள searchko (http://www.searchko.co.in/), sandhan (http://sandhan.tdil-dc.gov.in/) என்னும் தேடுபொறிகளில் தமிழ்மொழி செயலாற்றும் பின்னணியை எடுத்துரைத்தார்.
தமிழ் இணையக் கல்விக்கழகம் உருவாக்கியுள்ள நிகழாய்வித் திட்டம் குறித்தும் அதன் நிரலாக்க நெறிமுறைகள் குறித்தும் நுட்பமாகப் புலப்படுத்தினார்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கணினி மொழியியல் ஆராய்ச்சிக் குழுவின் (Computational Linguistics Research Group) பணிகள், திட்டங்கள், மொழிசார் ஆய்வு மாணவர்களுக்கான ஆய்வுதவிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 40-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை http://tamilpanpalai.com என்னும் தளத்தில் நேரலையாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் கணினித் தமிழ் உரை

|0 comments

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 9
12.05.2020 மாலை 5.00 மணிக்கு இலண்டன் (UK) தமிழ்த்துறைத் தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. சிவாப்பிள்ளை அவர்கள் “கற்றல் கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில், இலண்டனின் கோவென்றி, வட ஸ்காட்லாந்து போன்ற இடங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்க் கற்பித்தல் பள்ளிகள் செயலாற்றும் விதத்தை வெளிப்படுத்தினார்.

ஐக்கிய, கனடா, ஐரோப்பிய நாடுகளில் தமிழ்க் கல்வி கற்றலைத் தூண்டுவதற்கும், தரப்படுத்துவதற்கும் ஏதுவாகப் பிரித்தானியத் தமிழ்த் தேர்வுவாரியத்திற்கு 2018 முதல் தமிழ்ப் பல்கலைக்கழகம் அங்கீகாரம் வழங்கியுள்ளதைப் பெருமைப்படுத்தினார்.
அனைத்து நாட்டிற்குமான ஒரே பாடத்திட்டம் என்பது சாத்தியமற்றது என்றும், தமிழகத்தைவிடப் பண்பாடு, உடை, பழக்கவழக்கங்கள், கருத்தாக்கங்கள், அரசியல், சமூகநிலை போன்றவற்றில் அயலகங்கள் மாற்றம் கொண்டுள்ளன என்றும் அதற்கேற்ற வகையில் பாடத்திட்டம் உருவாக்குதல் தேவையென்றும் புலப்படுத்தினார்.
பாட்டி வடை சுட்ட கதை, குரங்கு அப்பம் திருடிய கதை போன்றவை ஏமாற்றுக் கதைகளின் வரிசையில் அமைவதால் பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதையும், இவற்றைக் கற்பிக்கும் வழிமுறையில் புதிய மாற்றங்கள் நிகழ வேண்டியதையும், இலண்டனில் தமிழை இரண்டாம் மொழியாக, எளிமையாகக் கற்பிக்க ‘வாண்டு’ செயலியின் பங்கு போன்றனவற்றையும் சுட்டினார்.

புதிய கற்றல்-கற்பித்தலில் மாணவர்களுக்குச் சுய சிந்தனை, ஆற்றல், ஆக்கத்திறன், மதிப்பீடு போன்றனவற்றை வழங்குதல், மின்வழிக் கதைசொல்லல், மனப்பாடக் கல்விமுறையை விடுத்துப் பொருள்புரிந்த கற்றலை மேம்படுத்துதல், மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மொழி கற்பித்தலில் புதிய அணுகுமுறைகளை முழுமையாகப் பின்பற்றுதல் மற்றும் மாறுதல், உலகத் தமிழர்கள் தமது தாய்மொழி நாடான தமிழ்நாட்டுடன் நெருங்கிய தொடர்பில் இருத்தல் என எடுத்துரைத்தார்.
இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 45-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை http://tamilpanpalai.com என்னும் தளத்தில் நேரலையாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Monday, May 11, 2020

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கிய கணினித்தமிழ் உரை

|0 comments

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 8
11.05.2020 மாலை 5.00 மணிக்குத் திருவாடனை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்துறைத் தலைவர், பேராசிரியர், முனைவர் மு. பழனியப்பன் அவர்கள் “இணையமும் இடைவெளியும்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில், பல கண்டங்களால் தடைபட்டுக்கிடந்த தமிழ்மொழியை இணையம் இணைத்து வைத்துள்ளதை வெளிப்படுத்தினார்.

இருப்பினும், இணையத்தில் ஏற்படுகின்ற இடர்பாடுகள் தமிழ்மொழிப் பயன்பாட்டில் இடைவெளியை உண்டாக்குக்கின்றன என்றும் அதனால் தமிழ்மொழி வளர்ச்சி தடைபடுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஒருங்குறி (Unicode) எழுத்துகள் ஒருமுக வடிவம் கொண்டவை. இவற்றைக் கணினியில் எளிதாகப் பார்க்கப் பயன்படுத்திட முடியும். ஆனால் தட்டச்சுச் செய்திட மென்பொருளைத் தரவிறக்கம் செய்யவேண்டும் என்னும் எழுத்தாக்க இடர்பாட்டைக் குறித்தார்.
மதுரைத் திட்டம், சென்னை நூலகம்.காம், தமிழிணையக் கல்விக்கழகம் வழங்கும் தமிழ் மின்நூலகம் ஆகிய நூலகங்களில் காணப்படும் வகைப்பாட்டுத் தெளிவின்மையால் ஆய்வாளர்கள், ஆர்வலர்கள் எதிர்நோக்குகின்ற இன்னல்கள் என்பனவற்றை இணைய நூலக இடர்பாடுகளாக வெளிப்படுத்தினார்.
இணைய நூலகங்கள் மற்றும் இணைய இதழ்களைச் செம்மைப்படுத்துவதன் இன்றியமையாமை, இணையம் மற்றும் தமிழ்ச் செய்யுள் பகுதிகளைப் படமாக்கி (Image) இன்றைய இளந்தலைமுறைகளிடையே கொண்டு சேர்க்கும்பொழுது இடைவெளிகள் ஏற்படுவதைக் காட்டினார்.

இத்தகைய இணைய இடர்பாட்டு இடைவெளியைக் களைய புதிய ஒருங்கிணைந்த வரைவுத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
அதை அரசுக்குக் கோரிக்கையாகத் தமிழ் இணையக் கழகம் முன்வைக்க வேண்டும் என்னும் கருத்தாக்கங்களை முன்மொழிந்தார்.
இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 45-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வை http://tamilpanpalai.com என்னும் தளத்தில் நேரலையாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
காணொலி

Sunday, May 10, 2020

தமிழ் இணையக் கழகமும் தமிழ்பண்பலையும் இணைத்து நடத்திவரும் கணினித்தமிழ் சிறப்புரை

|0 comments

இன்று (10.05.2020)ஞாயிறு , தமிழ் இணையக் கழகமும் தமிழ்பண்பலையும் இணைத்து நடத்திவரும் சிறப்புச் சொற்பொழிவில் கலந்து “ தமிழ் வகுப்பறையும் கற்றல் கபித்தலில் எண்ணிம அலையும்- தமிழாசிரியர்கள் எதிர்நோக்கும் சவால்கள்” எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினேன்.
மலேசிய நேரம் : இரவு 7.30 - 8.45 வரை.
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளர் முனைவர் துரை. மணிகண்டன் அவர்களுக்கு அவர்தம் குழுவினர்க்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எமது இயங்கலை உரைக்குப் பின்
தமிழ் இணையக் கழகம் அனுப்பிய அறிக்கை பின்வருமாறு:-
தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 7
10.05.2020 மாலை 5.00 மணிக்கு மலேசியப் பள்ளி ஆசிரியர் திரு. வாசுதேவன் இலக்குமணன் அவர்கள் “தமிழ் வகுப்பறையும் கற்றல் கற்பித்தலில் எண்ணிம அலையும் - தமிழாசிரியர்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் இருபத்தியோராம் நூற்றாண்டு அதிவேக மாற்றங்களுக்கு உள்ளாகி வருதல், கற்றலுக்கான கருவிகள், குறுஞ்செயலிகளின் பெருக்கம், கற்றல் கற்பித்தலில் ஏற்பட்டுள்ள நுண்திறன்கள், புதிய கற்றல் துணைக்கருவிகளின் சாத்தியப் போக்கு, புதிய கற்றல் சூழலுக்கேற்ப ஆசிரியர்கள் தயாராதல் குறித்து விளக்கினார்.
ஹுஸ்டன் பல்கலைக்கழகம் வகைப்படுத்தியுள்ள புதிய கற்றல் துணைக்கருவிகளான ஒத்துழைப்பு, பேச்சுக்கலை, ஆக்கச்சிந்தனை, திறனாய்வுச் சிந்தனை, மறுமொழி (Feedback), புத்தாக்கம், படைப்பு, சிக்கல் கலைதல், உற்பத்தி, மீட்டுணர்தல், சமூக வலைதளங்கள் என ஆசிரியர்-மாணவர் கற்பித்தல் அமைய வலியுறுத்தினார்.
மாணவர்களின் கற்றல் தேவை அதிகரித்துக் காணப்படுவதால் அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் கற்பிப்பவரின் பயனாக்க அறிவு மேம்பட வேண்டும் என்றும், புத்தாக்கச் சிந்தை புதியபுதிய மாற்றங்களைக் கற்றலில் தோற்றுவிக்கும் என்றும், மின்நூல்கள் மாணவர்களிடையே விளைபயன்மிக்க மாற்றங்களைத் தோற்றுவிக்கும் என்றும் மாணவர்களுக்கு அவை தகவல் கருவூலமாய்ச் செயல்பட வழிவகுத்து உருவாக்கித் தரவேண்டும் என்றும் ஆசிரியர்கள் சவால்களை எதிர்கொள்ளவும் நிலையான மாற்றங்களை ஏற்படுத்தும் வழிமுறைகளையும் வழங்கிப் பொழிவாற்றினார்.
இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 50-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வைத் நேரடியாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் கணனித்தமிழ் உரை

|0 comments
தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 6

09.05.2020 மாலை 5.00 மணிக்குக் கோயம்புத்தூர், PSG கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர், முனைவர் இரா. குணசீலன் அவர்கள் “கல்விசார் காணொலி உருவாக்க வழிமுறைகள்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் NPTEL, udemy, YouTube, vimeo, TED, moodle, mahara, Blackboard, D2L போன்ற காணொளி வழங்கும் தளங்கள் குறித்து எடுத்துரைத்தார்.
பவர்பாயின்ட் (Power Point) மென்பொருளைப் பயன்படுத்திக் நல்ல காணொளிகளை உருக்குதல், திறன்பேசியில் (Smart Phone) காணொலித் திருத்தங்கள் (Video Editing) செய்வதற்குக் கிடைக்கும் செயலிகள், ஒலி மற்றும் ஒளி, ஒலி மற்றும் படம் (Image), நேரலை (Live), செயல்விளக்கத் திரைப் பதிவு (Screen Recording) என்னும் காணொலி வகைகள் குறித்தும் இலவச மற்றும் திறந்த காணொலித் திருத்த மென்பொருள் (Video Editing Software) குறித்தும் பொழிவாற்றினார்.

இணையப் பொழிஞரின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் என 55-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வைத் நேரடியாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Zoom செயலி ஊடான கணினித்தமிழ் உரை

|0 comments
தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Zoom செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 4

07.05.2020 மாலை 5.00 மணிக்குச் சிங்கப்பூர், பள்ளி ஆசிரியர், முனைவர் ஜாஸ்லின் பிரிஸில்டா அவர்கள் “ஒருங்கிணைந்த இணையவழிச் செயல்பாட்டில் ஜி சூட் (G Suite) செயலிகள்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் முனைவர் ஜாஸ்லின் பிரிஸில்டா அவர்களின் உரையும் பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
கூகுள் நிறுவனம் வழங்குகின்ற ஜி-சூட் (G Suite) பல்வகைச் செயலிகள் குறித்தும் இவற்றின் வாயிலாகத் தகவல் தொடர்பு, கூடிக்கற்றல், கற்றல் மேலாண்மை, ஈடுபாட்டுடன் கற்றல், கற்பித்தல் போன்றவை சாத்தியம் என்பதையும் தெளிவாக்கினார்.

ஜி-சூட் செயலியை விலை மற்றும் விலையில்லாமல் பெறும்முறை, இலவசமாகப் பெறும் செயலியில் 30 ஜி.பி. சேமிப்பகம் என்பதும், 24 மணி நேரத்திற்கு 2000 மின்னஞ்சல்கள் அனுப்பமுடியும் என்பதையும் பதிவுபடுத்தினார்.
கூகுள் வகுப்பறை (Google Classroom), மின்னஞ்சல் (Mail), இயக்ககம் (Drive), நாட்காட்டி (Calendar), ஆவணங்கள் (Document), விரிதாள் (Excel), படவில்லைகள் (Slides), படிவம் (Form), ஊடாடும் வெள்ளைப் பலகை (Jam Bord), இணையக்கூடுகை (Meet) என்னும் செயலிகளின் பயனாக்கத்தை எடுத்துரைத்தார்.
கூகுள் வகுப்பறையில் புதிய வகுப்பறையைத் தொடங்கி மாணவர்களை இணைத்தல், துணை ஆசிரியரை ஏற்படுத்திக் கொள்ளுதல், மாணவர்களுக்குத் திட்டக்கட்டுரை (Assignment), தேர்வுகள் கொடுத்தல், விடை மதிப்பீடு என விரிவான தன்னுடைய சொற்பொழிவை ஆற்றினார். தொடர்ந்து கருத்துரைகளும் கலந்துரையாடலும் நடைபெற்றன.

இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள் என 63-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வைத் நேரடியாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Saturday, May 9, 2020

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான கணினித்தமிழ் உரை

|0 comments

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 3
07.05.2020 மாலை 5.00 மணிக்குக் கேரளா, மத்தியப் பல்கலைக்கழக மொழியியல் துறைப்பேராசிரியர் முனைவர் கோ. பழனிராஜன் அவர்கள் “தரவகம் (Corpus)” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.

இந்நிகழ்வில் முனைவர் கோ. பழனிராஜன் அவர்களின் உரையும் பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
தரவகம் (Corpus) என்பதன் பொருள் என்ன, தரவகத்தின் வரலாறு, தரவகத்தின் வகை, தரவகத்தின் தேவைப்பாடு என்ன, ஆங்கில மொழியின் முதன்மைத் தரவகங்கள், எழுத்துத் தரவகம், பேச்சுத் தரவகம், சைகைமொழித் தரவகம் (sign language Corpus), தமிழ்த் தரவகங்கள், இந்திய மொழிகளுக்கான தரவுத் தொகுப்பியம் (LDC-IIL), செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செம்மொழித் தரவகம் என்னும் படிநிலைகளில் தனது சொற்பொழிவை வழங்கினார். அதனைத் தொடர்ந்து கருத்துரைகளும் கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள் என 55-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வைத் நேரடியாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான கணினித்தமிழ் உரை

|0 comments

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 5
08.05.2020 மாலை 5.00 மணிக்குச் சிங்கப்பூர், மின்னியல் மற்றும் மின்னணுவியல் பொறிஞர் திரு. பாலா அவர்கள் “தமிழ் விக்கிப்பீடியா” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் விக்கிப்பீடியா வழங்கும் பல்வகை அறிவுத் தொகுப்புகளான விக்சனரி, விக்கிமூலம், விக்கித்தரவு, விக்கிப்பயணம், விக்கிசெய்தி, விக்கிமேற்கோள், விக்கிப் பல்கலைக்கழகம், மீடியா விக்கி, விக்கிநூல்கள், பொதுவகம், விக்கியினங்கள், மேல்விக்கி என விக்கி சகோதரத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

விக்கியின் கொள்கைகளாகக் கட்டற்ற தன்மை, யாவரும் எளிதில் பங்களித்தல், நடுவுநிலைமை, இலாப நோக்கமின்மை போன்றவற்றைக் கூறினார்.
விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்கம், மொழிபெயர்த்தல், பிழைதிருத்துதல், பல்லூடகம் (Multimedia) சேர்த்தல், விக்கிப்பீடியாவைப் பரவலாக்கம் செய்தல் போன்ற பங்களிப்புகளைத் தன்னார்வலர்கள் மேற்கொள்ளலாம் என்று விளக்கினார்.
விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுதும்போது களஞ்சியத்திற்கு ஏற்ற எளிமையான நடை, மேற்கோள் சான்றுகள் தருதல், தற்சார்பின்மை, பிறமொழிச் சொற்கள் மற்றும் இலக்கணப் பிழை தவிர்த்தல், படித்தலுக்கேற்ற உட்தலைப்புகள் மற்றும் பத்திப் பிரிப்புகளை அமைத்தல், தொடர்புடைய கட்டுரைகள் அல்லது வெளி இணைப்புகளைச் சுட்டிக்காட்டுதல் போன்றனவற்றைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என வழிகாட்டினார்.
பின்பு சொற்பொழிவாளருக்கு ஏற்பட்ட இணையத் தொடர்பின்மையால் வாணி பிழைதிருத்தி உருவாக்குநர் திரு. ராஜாராமன் (எ) நீச்சல்காரன் அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதுவதற்கு இணையம் வழியாகப் பயிற்சி அளித்தார்.
விக்கியில் தனிக்கணக்கைத் தொடங்கிப் புதிய கட்டுரைகளை எவ்வாறு எழுதுவது?, கட்டுரைகளில் திருத்தங்கள் இருப்பின் மேற்கொள்ளுதல், புதுமுகப் பயனர்கள் கட்டுரை எழுதும் பயிற்சிக் களமான மணல்தொட்டி, பிற பயனர்களுடன் கலந்துரையாடும் ஆலமரத்தடி என்னும் பகுதி, தன்னுடைய உரிமைக்குண்டான ஒளி, ஒலிக் கோப்புகளை விக்கிப்பீடியாவிற்கு வழங்கும்முறை போன்றவற்றைச் செயல்முறையாகப் பயிற்றுவித்தார்
இணையப் பொழிஞர்களின் உரையைத் தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள் என 55-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வைத் நேரடியாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Friday, May 8, 2020

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான கணினி உரை

|0 comments

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 2
05.05.2020 மாலை 5.00 மணிக்கு விருதுநகர், கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர் ப. கருணைதாசன் அவர்கள் “மைக்ரோசாப்ட் மொழிமாற்றிக் கருவிகள்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.
இந்நிகழ்வில் ஆசிரியர் ப. கருணைதாசன் அவர்களின் உரையும் பங்கேற்பாளர்களின் கருத்துகளும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
ஆசிரியர்கள் புதிதாகக் கற்றல், கற்பித்தல் என்னும் முறையில் புத்தாக்கத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் இன்றியமையாமை, கூகுள் பிளே ஸ்டோர் வழங்கும் எண்ணற்ற கற்றல் கற்பித்தல் செயலிகள், மொழிபெயர்ப்பின் தேவை, மைக்ரோசாப்ட் மொழிமாற்றிக் கருவியின் (MicroSoft Translator) தனித்தன்மை, 60-உக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்ப்புச் சேவை, உரை (Text), குரல் (Voice), உரையாடல்கள் (Chat), நிழற்படம், ஸ்கிரீன் சாட் (Camera Images, screen shot), குறுந்தொடர் மொழிபெயர்ப்பு என்பதில் இருந்து மொழிபெயர்த்துக் கொள்ளுதல், குழு அரட்டையில் பல மொழியினர் இருந்தாலும் அவர்கள் உரை, ஒலி வடிவத்தில் கருத்துகளை உள்ளிட்டாலும் நாம் தேர்ந்தெடுக்கும் மொழியின் ஒலி வடிவத்திலேயே கேட்கலாம் என்பன போன்ற தகவல்களை இச்செயலி வழங்கும் வசதிகளாக எடுத்துக்காட்டினார்.

இந்நிகழ்வில் தமிழகம், இந்தியா, இலண்டன், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தன்னார்வலர்கள், கல்விப் புலம்சார் ஆர்வலர்கள் என 53-உக்கும் மேற்பட்டோர் பங்கேற்பாளர்களாகக் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வைத் நேரடியாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், பங்கேற்றுச் சிறப்பித்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

Thursday, May 7, 2020

தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான இணையத்தமிழ் உரை

|0 comments
Team Link செயலி வழியில் உரை மற்றும் கலந்துரையாடல் இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 1
தமிழ் இணையக் கழகம் மற்றும் தமிழ்ப் பண்பலை இணைய வானொலி இணைந்து வழங்கும் Team Link செயலி ஊடான உரை மற்றும் கலந்துரையாடல், இரண்டாம் பகுதி, இணையச் சொற்பொழிவு - 1
04.05.2020 மாலை 5.00 மணிக்கு ஆந்திர மாநிலத்தின் தேசிய தகவலியல் மையத் துணைத் தலைமை இயக்குநர் முனைவர் இனிய நேரு அவர்கள் “இணையமும் மின்னாளுமையும்” என்னும் பொருண்மையில் உரை வழங்கினார்.

இந்நிகழ்வில் முனைவர் இனிய நேரு அவர்களின் 30 நிமிட உரையும் பங்கேற்பாளர்களின் 30 நிமிடக் கலந்துரையாடலும் நடைபெற்றது.
கட்டற்ற மென்பொருள்கள் (Open Source Software) பயன்படுத்துவதால் அரசுக்கு நிதிச்சுமை குறைவு, அனைத்துத் துறைகளிலும் நடுவண் மற்றும் மாநில அரசுகள் வழங்கும் இ-சேவைகள், பொதுமக்கள் மற்றும் துறைசார் அலுவலர்களுக்கான 250-உக்கும் மேற்பட்ட செயலிகள், ஆரோக்ய சேது, டிஜி லாக்கர், வாகன்சாரதி, எம்-பரிவாகன் போன்றவை அன்றாடம் மக்களால் புழக்கத்திற்குப் பயன்படும் செயலிகள், அரசின் இணையவழிக் கிராம முன்னேற்றத் திட்டங்கள், கல்விச் சான்றிதழ்களை மின்னாக்கப்படுத்தும் போது போலிகளைக் கட்டுடைத்தல், இணையவழியாக மாணவர்கள் சான்றிதழ்கள் பெற்றுக்கொள்ளுதல் (NAD) போன்றவை குறித்தும் தமிழகத்தில் சற்றேறக்குறைய 70 விழுக்காடு அளவிற்கு மின்னாக்கப் பணிகள் நடைபெற்றது குறித்தும் கலந்துரையாடினார்.
இந்நிகழ்வைத் நேரடியாக ஒலிப்பரப்பிய தமிழ்ப் பண்பலை இணைய வானொலிக்கும், தமிழகம், இந்தியா, இலண்டன், சிங்கப்பூர், இலங்கை, மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து கலந்துகொண்ட பங்கேற்பாளர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.