/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, February 22, 2020

நவீன் உலகில் கணினித்தமிழின் இன்றையப் பயன்பாடுகள்- சேலம்

கல்லூரி முதல்வர் பேராசிரியர் வ.மதன்குமார் அவர்கள் எமக்குச் சிறப்புச்செய்தல்

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டுவரும் கல்லூரிகளில் கணேஷ் கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையும் தமிழ் இணையக் கல்விக்கழகம், சென்னையும் இணைந்து நடத்திய ஒரு நாள் கணினித்தமிழ் பயிற்சி சிறப்பாக 11-02-2020 அன்று கல்லூரி  முதல்வர் வ.மதன்குமார் அவர்களின் தலைமையில் தொடங்கியது.
                                     நிகழ்வில் வரவேற்புரை வழங்கிய பேரா.துர்காதேவி

நிகழ்வின் தொடக்கமாக  நிகழ்வின்  ஒருங்கிணைப்பாளரும் தமிழ்த்துறையில் பணியாற்றும் உதவிப்பேராசிரியர் செல்வி துர்க்காதேவி வரவேற்புரை வழங்கினார்.
                             பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகள்

பயிற்சியில் சிறப்புரையாக முனைவர் துரை.மணிகண்டன் இணையத்தமிழ்க் குறித்த வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைத்தார். பிறகு பயிற்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு ஒருங்குறியில் தட்டச்சு செய்வது எப்படி என்று பயிற்சி மூலம் விள்க்கினார். மேலும் பேசினாலே தட்டச்சு செய்யும்  https://speechnotes.co/  இணையப்பக்கத்தையும் எடுத்துக்காட்டி அதில் மாணவர்களைப் பேசவைத்து தட்டச்சு இடுவதை செயல்முறையில் விளக்கம் அளித்தேன்.



அடுத்து அனைத்து மாணவர்களுக்கும் வலைப்பதிவை உருவாக்கிக் கொடுத்து அதில் தமிழில் எழுதவைத்து பயிற்சி வழங்கினேன். தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியா,  தமிழ் மென்பொருள்கள், சமூக ஊடங்களைப் பயன்படுத்தும் நெறிமுறைகள், இணையத்தில் வேலை வாய்ப்பை பெறுவது எவ்வாறு என்றும் எடுத்து விளக்கினேன்.






0 comments: