/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, April 6, 2019

பின்ன சின்ன ஒருங்குறியைத் தமிழ் எழுதிகளில் (Tamil Editors) வெளிவர இ-கலப்பை, என்.எச்.எம் உள்ளிட்ட எழுதி ஆக்குநர் விரைந்து முயற்சி எடுக்க வேண்டும்.



அறிஞர்குழுவில் இடம்பெற்ற ஆய்வாளர்கள்.


பின்ன சின்ன ஒருங்குறிப்பணி இனிதே நிறைவேறியது. ஒருங்குறியில் ஏறவிருந்த 55 குறியீடுகளில், குறைகள் உள்ளன என்று தெரிவித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல,
தமிழக அரசு தொல்லியல் அறிஞர், தமிழறிஞர் அடங்கிய குழுவை ஏற்படுத்தி, ஏறத்தாழ ஓராண்டு ஆய்வுக்குப்பின், 33 குறியீடுகளில் திருத்தம் செய்து, ஒருங்குறிச்சேர்த்தியத்திற்கு பரிந்துரைத்தது. தற்போது, ஒருங்குறிச்சேர்த்தியம், யுனிக்கோடு 12.0 வேற்றத்தில் (version) 51 வரலாற்று தமிழ்க்குறியீடுகளை சேர்த்துள்ளது. பார்க்க: http://www.unicode.org/charts/PDF/U11FC0.pdf.
2014ல், ஒருங்குறியில் 55 வரலாற்றுக்குறியீடுகளை சேர்க்கும் ஒரு முன்னீட்டை ஆய்வு செய்து, திருத்தங்கள் தேவை என்று அடியேன் எழுதிய கட்டுரை/மடலில் தொடங்கிய இப்பணி, முனைவர் இராம.கி, முனைவர் இர.வாசுதேவன் (இரவா கபிலன்), திரு.இரா.சுகுமாரன், திரு.ஆல்பர்ட்டு பெர்னாண்டோ ஆகியோருடன் இணைந்து எங்களின் கடின உழைப்பில் அரசுக்கு முன்வைக்கப்பட்டது.
பல தொல்லியல் அறிஞர்களோடு பணிசெய்த அந்த நாள்கள் இனிமையானவை.
தொல்லியல் அறிஞர்களின் ஆய்வும் அறிவும் தொழப்பட வேண்டிய ஒன்று. (தமிழ்த்துறையும் தொல்லியல் துறையும் ஒற்றுமையாக பணியாற்றினால் தமிழுக்கு எத்தனையோ சாதனைகளை செய்ய முடியும்.)
இதற்காக உழைத்த தொல்லியல் துறையறிஞர்கள்(கீழே பட்டியல் காண்க), இதற்கு முழுமையான வழிகாட்டலையும் ஆதரவையும் நல்கிய அன்றைய தமிழிணைய கல்விக்கழகத்தின் இயக்குநரும் நிதித்துறைச்செயலருமான திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப, தகவல் நுட்பத்துறையின் செயலர் திரு.டி.கே.இராமச்சந்திரன் இ.ஆ.ப, அறிஞர் குழுவின் தலைவராக இருந்து இதற்கான கூட்டங்கள் அனைத்தையும் வழிநடத்திய பேராசிரியர் பொன்னவைக்கோ, இந்த முன்னீட்டை (proposal) சீர்செய்து அனுப்ப, பொறுப்பையும் ஒருங்கிணைப்பையும் எடுத்துக்கொண்ட சென்னைப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறைத்தலைவர் பாலாசி ஆகிய அனைவருடனும் பணியாற்றிய காலம் மிக அறிவார்ந்தது, இனிமையானது. த.இ.க சார்பாக முனைவர் சேம்சு அவர்கள் அருந்துணையாயிருந்தார்.
திரு.இரமணசர்மா முதலில் வைத்த முன்னீடு (proposal) அண்மைக்கால அதாவது 18,19,20 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் சிலர் எழுதியிருந்த நூல்களில் இருந்த சான்றுகளை அடிப்படையாகக்கொண்டது. ஆங்கிலேயர்கள் கல்வெட்டுகளை, ஓலைச்சுவடிகளை ஆராய்ச்சி செய்து எழுதிய நூல்கள் அல்ல அவை. அதனால்தான் அடிப்படையில் வேறுபாடுகள் இருந்தன. திருத்தங்கள் தேவைப்பட்டன. இதை அறிஞர் மன்றங்களில் எடுத்து வைத்து, அரசிடமும் எடுத்து வைத்தபின்னர், தமிழக அரசின் அறிஞர்குழு பொ.பி 8-9 ஆம் நூற்றாண்டில் இருந்து கல்வெட்டுகளையும் சுவடிகளையும் ஆய்வு செய்து திருத்தங்களை தந்தது. அதன் அடிப்படைகளையும் காரணங்களையும் சரியான முறையில் ஏற்றுக்கொண்டு திரு.இரமணசர்மா இறுதி முன்னீட்டை செய்து வரலாற்றின் தமிழ்க்குறியீடுகள் நல்ல முறையில் ஒருங்குறியில் சேர துணையாயிருந்தார்.
தமிழக அறிஞர் குழுவில் (Subject Experts Panel) கீழ்க்கண்ட அறிஞர்கள்/வல்லுநர்கள் இருந்தனர். இவர்களின் அரும்பணியில் குறியீடுகள் தெள்ளியதாகி திருத்தப்பரிந்துரை உருவாகியது. அந்த ஆவணத்தை அறிஞர் குழுவின் சார்பாக எழுதும் வாய்ப்பு எனக்கு அமைந்தது. பார்க்க : https://www.unicode.org/…/L20…/16062-tamil-frac-sym-fdbk.pdf
அவ்வாவணத்தின் 68ஆம் பக்கத்தில் இதில் பங்குபெற்ற அறிஞர்/வல்லுநரின் பெயர்களைக்காணலாம்.
1) முனைவர் பேராசிரியர் பொன்னவைக்கோ
2)
முனைவர் பி.டி.பாலாசி
3)
முனைவர் சு.இராசவேலு
4)
முனைவர் நடனகாசிநாதன்
5)
நாக.இளங்கோவன் (அடியேன்)
6)
முனைவர் ஆ.பதுமாவதி
7)
முனைவர் இராசகோபால்
8)
முனைவர் இராம.கி
9)
முனைவர் விசய வேணுகோபால்
10)
முனைவர் இர.வாசுதேவன் (இரவா கபிலன்)
11)
முனைவர் சாந்தலிங்கம்
12)
முனைவர் கலா சிரீதர்
13)
முனைவர் தமிழப்பன்
14)
முனைவர் சிவப்பிரகாசம்
15)
முனைவர் குழந்தைவேல்
16)
முனைவர் மார்க்சிய காந்தி
17)
முனைவர் சேம்சு
18)
முனைவர் வெங்கடாசலம்
19)
முனைவர் வெங்கடேசன்
முனைவர் சு.இராசவேலு, முனைவர் காந்திராசன், முனைவர் வெங்கடேசன் ஆகியோரொடு இணைந்து அடியேனும் மைசூரில் நடுவணரசின் தொல்லியல் நிறுவனத்தில் (ASI) மூன்று நாள்கள் கல்வெட்டுகளில் பின்ன சின்ன வரலாற்றுக்குறியீடுகளுக்கான சான்றுகளை திரட்டினோம். அது எனக்கு மறக்க முடியாத இனிமையான அறிவார்ந்த கல்வி நாள்கள் என்றால் மிகையல்ல.
அதொடு, சரசுவதி மகாலில், த.இ.கவிற்காக தமிழ்க்கணிமை சார்புடைய ஓர் ஆய்விற்கு அடியேனை திரு.உதயச்சந்திரன் பணித்திருந்தார். அங்கு கிடைத்த ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுநூல்கள் ஆவணம் எழுதுவதற்கு மிகவும் துணையாயிருந்தன.
முனைவர் இராம.கி முனைவர் இராசவேலு ஆகியோருடன் ஆவணம் ஆக்கும்போது படித்த கல்வெட்டாவணங்கள் பெரிய படிப்பினை. முனைவர் இராம.கியின் நூலகத்தில் உள்ள அத்தனை கல்வெட்டு நூல்களிலும் சான்றுகள் தேடியது எனக்கு அரிய துய்ப்பறிவு.
ஒருங்குறிச்சேர்த்தியம் வெளியிட்டிருக்கும் இந்தக்குறியீடுகள் தமிழ் எழுதிகளில் (Tamil Editors) வெளிவர இ-கலப்பை, என்.எச்.எம் உள்ளிட்ட எழுதி ஆக்குநர் விரைந்து முயற்சிகள் எடுக்க வேண்டும்.

நன்றி : நாக இளங்கோவன் முகநூல் பக்கம்.


அனைவருக்கும் மிக்க நன்றி


3 comments: