/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, March 4, 2016

திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் கணித்தமிழ் ஆய்வுகள்

|0 comments
27 - 2016 அன்று திருச்சிராப்பள்ளி ஜமால் முகமது கல்லூரியில் தமிழாய்வுத்துறை ஏற்பாடு செய்திருந்த கணித்தமிழ் ஆய்வுகள் என்ற தலைப்பில் ஆய்வியல் நிறைஞர் மாணவ மாணவிகளுக்கு கணினியில் எவ்வாறு தமிழ் ஆய்வுகளை மேற்கொள்ளலாம், இணையத்தை நாம் எவ்வாறு கையால்வது என்று உரை நிகழ்த்தினேன். மாணவிகள் ஆர்வமுடன் செய்திகளை கேட்டறிந்து கொண்டனர்.

இதில் தமிழில் தட்டச்சு
தமிழ் வலைப்பதிவை உருவாக்குவது
தமிழ் இணையதளங்களைப் பார்வையிடுதல்
தமிழ் ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வெளியிடுதல்
தரவுகளைச் சரியானதாக எடுத்து ஆய்வில் பயன்படுத்துவது  உள்ளிட்ட கருத்துக்கள் முன் வைக்கப்பட்டன.



ஜமால் முகமது கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் ஹபிபுர் ரஹுமான், பேரா.நாகூர்கனி, பேரா.இஸ்மாயில், பேரா.யூனூஸ் அவர்களுடன் Dr.Durai.Manikandan

திருச்சிராப்பள்ளி பிஷ்ப்ஹீபர் கல்லூரியில் தமிழ் இணைய அறிமுகம்

|1 comments
பிப்ரவரி 22 - 2016 திருச்சிராப் பள்ளி பிஷ்ப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறையும் கணினி அறிவியல் துறையும் இணைந்து ஒருநாள் தமிழ் இணையப்பயிலரங்கம் ஏற்பாடு செய்து இருந்தனர்.

 இதில் Dr.Durai Manikanadan தமிழ் இணைய அறிமுகத்தை வழங்கி எவ்வாறு தமிழ் தட்டச்சு செய்வது என்பதை மாணவர்கள் கொண்டு பயிற்சி வழங்கினேன். பிறகு வலைப்பதிவை உருவாக்கி மாணவர்கள் தங்கள் துறைசார்ந்த கருத்துக்களை எழுத வேண்டும் என பயிற்சி கொடுக்கப்பட்டது. அடுத்து தமிழில் குறுஞ்செயலி உருவாக்குவது எப்படி அதன் பயன்கள் என்ன என்பதையும் எடுத்து விளக்கினார்.

 நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறைத் தலைவர் பேரா.தாமைரைச்செல்வி மற்றும் கல்லூரி முதல்வர், தமிழ்த்துறைத் தலைவர் பேரா. விஜ்யராணியுடன் Dr.Durai.Manikandan.
 நிகழ்வில் கலந்துகொண்ட பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள்


கணினித் தமிழ்த் தொடக்க விழா- GTN கல்லூரி , KLN பொறியியல் கல்லூரி

|3 comments
ஜனவரி 22 - 2016 தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பாக திண்டுக்கல் GTN கல்லூரியிலும்  மதுரை KLN  பொறியியல் கல்லூரியிலும் தமிழ்க் கணினித் தொடக்கவிழா நடைபெற்றது. இதில் நானும்(Dr. Durai.Manikanadan, k.umaraj) க.உமாராஜ் அவர்களும் கலந்துகொண்டு  மாணவர்களுக்குக் கணினித்தமிழின் இன்றையத் தேவைகளை எடுத்து விளக்கினோம்.

மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கேட்டுத் தெரிந்துகொண்டனர். சிலர் உடனே தனது பங்களிப்பைச் செய்வதற்கு முன்வந்தனர்.

 GTN கல்லூரியில் நானும் பேரா.க.உமாராஜ் அவர்களும். அருகில் கல்லூரி முதல்வர் மற்றும் கல்லூரி நிர்வாகிகள்.
  GTN கல்லூரியில் மாணவ மாணவிகள்
 மதுரை  K.L.N பொறியியல் கல்லுரியில் குத்துவிளக்கு ஏற்றுதல் அருகில் பேரா.க.உமாராஜ், மற்றும் கல்லூரி முதல்வர், கணினித்துறை பேராசிரியர்கள்.
                                                             K.L.N பொறியியல்

K.L.N பொறியியல்  மாணவிகள் மற்றும் மாணவர்கள்