/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, October 14, 2015

தமிழ் இணையப் பயிலரங்கம் - பூண்டி வாண்டையார் கல்லூரி

|4 comments
தஞ்சாவூர் பூண்டி வாண்டையார் திரு புட்பம் தன்னாட்சிக் கல்லூரியில் தமிழ்த்துறையின் சார்பாக 13-10-2015  செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற ”தமிழ்க்கணினிப் பயன்பாடுகள்” என்ற பொருண்மையில் ஒருநாள் பயிலரங்கம் நடைபெற்றது. இவ்விழாவில் முதலில் தமிழ்த்துறையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் வி.சிவபாதம் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்கள். அடுத்து கல்லூரி முதல்வர் முனைவர் சோ.உதயகுமார் அவர்கள் கணினிப்பொறியின் வரலாற்றை மிகத் தெளிவாக விளக்கினார். உலகில் வளர்ந்த மொழிகளாக இருக்கும் சீனா, ஜெர்மனி, ஆங்கிலம், ஸ்பானிஸ் மொழிகளில் அவரவர் தாய்மொழியில்தான் தொழில்நுட்பத்தைக் கற்று மேலோங்கி உள்ளனர். அதைபோல நம் தாய்மொழியான தமிழில் தொழில்நுட்ப அறிவுகளை கற்கவேண்டும் என்றார்.

கல்லூரி முதல்வர் பேராசிரியர் சோ.உதயகுமார் அவர்கள்.



தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் நா.சிவாஜிகபிலன் அறிமுகம் செய்துவைக்கின்றார்.  வரிசையில் தமிழ்த்துறை ஒருங்கிணைப்பாளர்முனைவர் வீ.சிவபாதம், கல்லூரி முதல்வர் சோ.உதயகுமார், பேராசிரியர் இராபர்ட் அலைக்சாண்டர் மற்றும் நான்(Dr.Durai.Manikandan.)

அடுத்து முன்னிலை உரையாற்றி அறிவியல் புலத்தலைவர் முனைவர் இராபர்ட் அலைக்சாண்டர் அவர்கள் கணிப்பொறியின் இன்றையப் பயன்பாட்டையும் தமிழ் இணையதளங்களில் பேரா.நா.கோவிந்தசாமியின் பங்களிப்பையும் எடுத்து விளக்கினார்.
நிகழ்வில் என்னை அறிமுகம் செய்து பேசிய நிகழ்ச்சியின் ஒருங்கிணைபாளர் பேராசிரியர் நா. சிவாஜிகபிலன் அவர்கள் முனைவர் துரை.மணிகண்டன் தமிழ்த்துறைச் சார்ந்தவர். இவர் கணினித்தமிழுக்கும் இணையத்தமிழுக்கு ஆற்றிய தொண்டாக நான்கு நூல்களை எழுதி வெளியிட்டு உலக மக்களுக்கு வழங்கியிருப்பது நமக்கெல்லாம் வியப்பே என்றார். நூல் விபரங்களையும் கூறினார்.( இணையமும் தமிழும், இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள், இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள், தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள்) அடுத்து நான் உரை நிகழ்த்தினேன்.  சுமார் 40 நிமிடம் மாணவர்களுக்குச் சிறப்புரை வழங்கினேன்.

இரண்டு மணிநேரம் மாணவர்களுக்குப் பயிற்சிமுறையில் விளக்கினேன். பயிற்சியில் 100 மாணவிகள் மற்றும் 15 மாணவர்கள் 20 மேற்பட்ட பல்வேறு துறையைச் சார்ந்த பேராசிரியர்கள் கலந்துகொண்டன்ர். இதில் சுமார் பத்து மாணவிகள் தமிழ் எழுத்துருவை பதிவிறக்கம் செய்து தேடுதலில் தேடினார்கள்.  பல மாணவர்களும் இப்பயிற்சியை மேற்கொண்டனர். மிகச்சிறப்பாக மாணவார்களும் மாணவிகளும் ஆர்வமுடன் பயிற்சியில் ஈடுபட்டனர்.

 மாணவி தமிழ் எழுத்துருவைப் பதிவிறக்கம் செய்து தமிழில் வலைப்பதிவை உருவாக்கி எழுதும் காட்சி

ஒரு மாணவன் தமிழ் விக்கிப்பீடியாவில் தச்சன்வயல் என்ற அவனது ஊரைப்பற்றி எழுதினார். 

ஒரு சிறப்பாக அங்கு பணிபுரியும் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சிவாஜிகபிலன் அவர்கள் மாணவிகளுக்குப் பயிற்சி கொடுத்து வைத்துள்ளார். அஃது இப்பயிற்சிக்கு பெரும் உதவியாக இருந்தது. ஒரு மாணவனுக்கு அவனது ஊரான தச்சன்வயல் என்ற ஊரைப்பற்றி தமிழ் விக்கிப்பீடியாவில் எழுதினார். மற்றவர்களும் எங்கள் ஊரைப் பற்றி எழுதுகின்றோம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்கள். எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருந்தது.
                   நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்

இப்பயிற்சியும் எனக்கு மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. விழாவினை ஏற்பாடு செய்திருந்த பேரா. சிவாஜிகபிலன் அவர்களுக்கும் தமிழ்த்துறைத் தலைவர் அவர்களுக்கும் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், கணினித்துறை, பொருளாதாரத்துறைப் பேராசிரியர் என அனைவரும் கலந்து பயன்பெற்றனர். இவர்களுக்கு என நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்த்துறையில் பேரா.சிவாஜிகபிலனின் முயற்சியால் பல மாணவிகள் ஒருங்குறியில் தட்டச்சு செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டுகின்றனர். நன்றி திரு சிவாஜிகபிலன் அவர்களே

சிறந்த கட்டுரைக்குப் பரிசும் பாராட்டும்.

|2 comments
புதுக்கோட்டையில் நான்காம் ஆண்டு வலைப்பதிவர் திருவிழா வெகு சிறப்பாக 11/ 10/ 2015 அன்று நடைபெற்றது.  இவ்விழாவில்  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ. சுப்பையா அவர்கள், தமிழ் இணையக்கல்விக் கழக உதவி இயக்குநர் மா.தமிழ்ப்பரிதி, தமிழ் விக்கிப்பீடியா அ. இரவிசங்கர், வலைப்பதிவர் நிர்வாகிகள், கணினித்தமிழ்ச்சங்க நிர்வாகி் நா.அருள்முருகன். திரு.முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன். எழுத்தாளர் எஸ்.இரமகிருஷ்ணன் போன்றோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில்   கட்டுரை, கவிதை, மரபுக்கவிதை, சுற்றுச்சூழல் சார்ந்த படைப்புகளிக்கு விருது வழங்கி சிறப்பித்தனர். அதில்  தமிழ்க்கணனி சார்ந்த கட்டுரைப் போட்டியில் முதல் பரிசை (ரூ.5000, மற்றும் நினைவுப் பரிசும்) எனக்கு வழங்கினார்கள். நான் அதை பெருமையுடன் ஏற்றுக்கொண்டேன். 

முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் தனது வலைப்பதிவைப் பற்றி விளக்கும்போது. அருகில் கவிஞ்சர் தங்க.மூர்த்தி, எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன், திரு.முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன்.




விருதை பேராசிரியர் மா.தமிழ்ப்பரிதியிடமிருந்த (Dr.Durai.Manikandan) பெறும் காட்சி. அருகில் காரைக்குடி பல்கலைக்கழகத் துணைவேந்தர் சொ.சுப்பையா,  வலைப்பதிவர் நிர்வாகிகள், கணினித்தமிழ்ச்சங்க நிர்வாகி் நா.அருள்முருகன். திரு.முத்துநிலவன், திண்டுக்கல் தனபாலன்

Monday, October 12, 2015

திரு புட்பம் தன்னாட்சிக் கல்லூரி, பூண்டி, தஞ்சாவூர். -தமிழ்க் கணினி பயன்பாடுகள்

|4 comments
ஐந்து நூற்றாண்டுகள் அசைக்க முடியாத ஆட்சிப்புரிந்த சோழனின் தஞ்சை மண்ணில் ஏழை எளிய மக்களின் கல்விக் கண்ணைத் திறந்த பூண்டி வாண்டையார்  அவர்களால் திரு புட்பம் தன்னாட்சி  கல்லூரியில் தமிழ்க் கணினிப் பயன்பாடுகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் நடைபெறுகிறது.  தமிழ்த்துறைப் பேராசிரியர்களின் புது முயற்சியில் 12/10/2015 திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு இனிதே தொடங்க இருக்கிறது. அனைவரும் வாரீர். தமிழ் இணையத்தை அறிந்துகொள்வீர்கள்.


Thursday, October 1, 2015

Roever college tamil internet seminar

|2 comments
1-10-2015, வியாழக்கிழமை பெரம்பலூரில் உள்ள தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் தமிழ் இணையம் என்ற தலைப்பில் ஒருநாள் பயிலரங்கம் காலை 9.30 மணிக்கு கல்லூரி குளிர்மை அரங்கில் இனிதே தொடங்கியது.
தொடக்க அமர்வில் தேனி எம்.சுப்பிரமணி அவர்கள் இணையத்தமிழ் அறிமுகம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
 இணையம் அறிமுகம், தமிழ் எழுத்துரு பிரச்சனை, தமிழ் இணைய இதழ்களில் எழுதுவது எப்படி, தமிழ் விக்கிப்பீடியாவின் இன்றைய நிலை என்ன? இந்திய அளவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவே உள்ளது என பல புள்ளி விபரங்களுடன் விளக்கம் தந்தார். இறுதியில் மாணவரகள் கேட்ட வினாக்களுக்குத் தக்க பதிலும் தந்து உதவினார்.
                                                       பயிற்சியில் மாணவிகள்
தேனி எம் சுப்பிரமணியத்திடம் வினா எழுப்பும் கல்லூரி ஆசிரியர்.


அடுத்த அமர்வில் நான் (Dr.Durai.Manikandan) உரை நிகழ்த்தினேன். அதில் தமிழ் எழுத்துருவை எவ்வாறு கணினியில் பதிவிறக்கம் செய்து தமிழில் தட்டச்சு செய்வது என்பதை செய்முறைப் பயிற்சியுடன் விளக்கினேன். அதில் ஒரு மாணவர் மற்றும் இரண்டு மாணவிகள் செய்முறையில் கலந்துகொண்டனர். மேலும் தமிழ் வலைப்பதிவையும் மூவரும் உருவாக்க கற்றுக்கொடுத்தேன். மிக அருமையாக இருந்தது. இப்பயிலரங்கம் நான் பேசிய இடங்களுள் சிறப்பானதாக இருந்தது. ஏனெனில் சுமார் 59 மாணவ மாணவிகள் தமிழில் தட்டச்சு செய்வதற்குக் கற்றுக்கொண்டனர். இதுவே  இப்பயிலரங்கத்தின் வெற்றி என்றே சொல்லாம்.


பயிலரங்கில் தமிழ் எழுத்துருவையும், தமிழ் வலைப்பதிவையும் உருவாக்கும் மாணவர்கள்.


கல்லூரி பேராசிரியர்கள் பயிற்சியில்

இறுதியாக கல்லூரி முதல்வர் முனைவர் அயோத்தி அவர்கள் உரை நிகழ்த்தினார். மிக் அருமை. அவர் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களையும் பேராசிரியர்களையும் பார்த்து இந்த ஆண்டு நமது கல்லூரி தமிழ்த்துறையில் ஆய்வு மேற்கொள்ளும் அனைத்து ஆய்வாளரும் இணைய இதழைப் பற்றி ஆய்வுக்கட்டுரை  வழங்க வேண்டுமென்று கூறினார். அப்பொழுதுதான் இந்தப் பயிலரங்கம் வெற்றியடைந்ததாக இருக்கும். இதை அனைத்துப் பேராசிரியர்களும் கடைபிடிக்கவேண்டும் என்று அன்பு கட்டளை இட்டார். பயிற்சி வழங்கிய எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியாக இருந்தது.

இந்நிகழ்வை தமிழ்த்துறை தலைவர் முனைவர் ஜெ.ரஜ்ஜனி  தலைமையில் நடைபெற்றது. இதில் கல்லூரி பேராசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர். மேலும் இப்பயிலரங்கில் இளங்கலை, முதுகலை, ஆய்வியல் மாணவர்கள் மற்றும் முனைவர் பட்ட ஆய்வாளர் என எழுபது மாணவர்கள் கலந்துகொண்டனர்.