/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, July 1, 2015

தமிழ் இணையம் அறிமுகம் மற்றும் தமிழ் மென்பொருள்களின் இன்றையத் தேவைகள்

தமிழ் இணையம் அறிமுகம் மற்றும் தமிழ் மென்பொருள்களின் இன்றையத் தேவைகள் என்ற இரண்டு தலைப்புகளில் திருச்செங்கோடு K.S.R. கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் மற்றும் கணிப்பொறித்துறை மாணவ மாணவிகளுக்குத் தனித்தனியே பயிற்சி வழங்கினேன்.
பெண்கள் கல்லூரியில் உரை. முனவரிசையில் பேரா.குணசீலன்

முன்னதாக இருபாலர் படிக்கும் மொழிப்பாட மாணவ மாணவிகளுக்கு இணையம் என்றால் என்ன? அதன் தோற்றம் மற்றும் தமிழ்மொழியில் இணையத்தின் தோற்றம் அதன் வளர்ச்சி மற்றும் பல்வேறு தமிழ் இணையப்பக்கங்கள் மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் பயன்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
               ஆண்கள் கல்லூரியில் மொழித்துறை மாணவர்களிடம் உரை

அடுத்து உத்தமம் பணிகள் பற்றி மாணவர்களிடம் எடுத்துக்கூறினேன். மாணவர்கள் எவ்வாறு கணிப்பொறியில் தமிழில் தட்டச்சுச் செய்வது எவ்வாறு என்றும் விளக்கிக் கூறினேன்.

அடுத்து மதியம் இரண்டு மணிக்குப் பெண்கள் கல்லூரியில் கணிப்பொறித் துறையைச் சார்ந்த மாணவிகள் 100 பேருக்குத் தமிழ் மென்பொருள் குறித்த விழிப்புனர்வை வழங்கினேன். இதுவரைக்கும் தமிழில் தோன்றிய மென்பொருள்கள் அதன் பயன்பாடுகள் மற்றும் நாம் உருவாக்கவேண்டிய தமிழ் மென்பொருள்கள் எவை?எவை அதை மாணவிகளாகிய நீங்கள் உருவாக்க வேண்டும் என்று கூறினேன்.

                   பேராசிரியர் கண்ணன் அவர்களுக்கு எமது நூலை வழங்கியது.


நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கார்த்திகேயன் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் பேரா.குணசீலன் மற்றும் பேரா. கண்ணன் அவர்கள் உடன் இருந்தனர்.

விழா மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.

2 comments: