/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Sunday, July 26, 2015

“இலக்கிய ஆய்வுகளில் கணினியின் பயன்பாடு”

|0 comments
அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் இந்திய  மொழிகளின் நடுவண் நிறுவனம்  இணைந்து நடத்தும்  “இலக்கிய ஆய்வுகளில் கணினியின் பயன்பாடு” என்ற தலைப்பில் மூன்று நாட்கள் பயிலரங்கம் நடைபெறுகிறது.

இவ்விழாவில் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத் தலைவர் முனைவர் எல்.இராமமூர்த்தி அவர்களும் துணைவேந்தர் மூ.பொன்னவைக்கோ அவர்களும் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். இவ்விழா அண்ணாமலைப்  பல்கலைக்கழகத் தமிழ்த்துறை தலைவர் அரங்க.பாரி அவர்களின் ஆலோசனையின்கீழ் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜா.ராஜா அவர்களின் துணையோடு 28,29,30 ஜீலையில் நடைபெறுகிறது. அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கின்றேன்.







முனைவர் எஸ். அருள்மொழி - Dr.s.Arlmozhi

|1 comments
முனைவர் எஸ். அருள்மொழி ( 1968) … தமிழ்க் கணினிமொழியியல், மொழித் தொழில் நுட்பத்துறையில் பல அரிய பணிகளை மேற்கொண்டுவரும் இன்றைய இளைய தலைமுறை ஆய்வாளர். வேதியியலில் இளங்கலைப் பட்டமும் (1988), மொழியியலில் முதுகலைப் பட்டமும் (1990) கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பெற்றார். பின்னர் ஹைதராபாத் நடுவண் பல்கலைக்கழகத்தில் செயற்படுத்தமொழியியல் மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் ( Centre for Applied Linguistics and Translation Studies – Centre for ALTS) எம் ஃபில் பட்டமும் (1992) , செயற்படுத்த மொழியியலில் ( Applied Linguistics) முனைவர் பட்டமும் (1999) பெற்றார். அறிவியல் தொழில்நுட்பத்துறைக் கலைச்சொற்களின் மொழிபெயர்ப்புபற்றி ( Dynamics of Translation in Reconstructing Sc-Tec Terminilogies) எம் ஃபில் படிப்பில் ஆய்வு மேற்கொண்டார். இலக்கண உருபன்-ஒலியன் பற்றிக் ( Aspects of Inflectional Morpho-Phonology: A Computational Approach) கணினிமொழியியல் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். மைசூர் இந்தியமொழிகள் நடுவண் நிறுவனம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் சில ஆண்டுகள் பணியாற்றியபிறகு, அண்ணா பல்கலைக்கழகத்தின் AU-KBC மையத்தில் தமிழ்க் கணினிமொழியியல், மொழித்தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்கிற ஆய்வுக்குழுவில் ஒருவராக ஐந்து ஆண்டுகள் (2000-15) செயல்பட்டார். பின்னர் ஆந்திரா குப்பத்தில் அமைந்துள்ள திராவிடப் பல்கலைக்கழகத்தின் கணினிமொழியியல், திராவிடமொழிகள் ஆய்வுத் துறையில் எட்டு ஆண்டுகள் (2005-13) பணியாற்றினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ( 2013 –இலிருந்து) ஹைதராபாத் நடுவண் பல்லைக்கழகத்தின் செயற்படுத்த மொழியியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவருடைய முக்கியமான ஆய்வுத்தளமான கணினிமொழியியல் துறையில் தரவுமொழியியல் ( Corpus Linguistics) , சொல்வலை ( WordNet) , இயந்திரமொழிபெயர்ப்பு ( Machine Translation - MT) ஆகிய பிரிவுகளில் முக்கியமான ஆய்வுத்திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ளார். சொல்வலைத் திட்டத்திற்கான ( WordNet) உலக அளவிலான முறையான பயிற்சியில் தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழ் , தெலுங்கு , ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளுக்குமான ஆய்வுத் திட்டங்களை இந்திய நடுவண் அரசின் தகவல்தொழில்நுட்பத்துறையின் நிதி உதவியுடன் பல இலட்சம் மதிப்புள்ள திட்டங்கள் பலவற்றை மேற்கொண்டுள்ளார். கணினிமொழியியல், குறிப்பாக இயந்திர மொழிபெயர்ப்புக்கான சொற்களஞ்சியத்தை ( Lexical Resources) உருவாக்குவதில் முக்கியப் பங்கு ஆற்றிவருகிறார். தமிழ்ச்சொல்வலை ( Tamil WordNet) , தமிழுக்கான வினைச்சொல்வலை ( VerbNet for Tamil) , தெலுங்கு-தமிழ் இயந்திர மொழிபெயர்ப்பு ( Telugu – Tamil MT), இந்திய மொழிகளுக்கான தரவுத்தளம் உருவாக்கம் ( Indian Languages Corpora Initiative ) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். தமிழுக்கான பலவகை மென்பொருள் உருவாக்கங்களுக்கு இவரது பணிகள் பெரிதும் பயன்படும். தேசிய அளவிலான கணினிமொழியியல், மொழித்தொழில் நுட்பக் கருத்தரங்குகள், பயிலரங்குகள் பலவற்றில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகள் அளித்துள்ளார். 2012 –ஆம் ஆண்டு என்னுடன் இணைந்து மலேசியாவில் கோலாலாம்பூர் பல்கலைக்கழகத்தில் மலேசியா ஆசிரியர்களுக்கும் ஆய்வாளர்களுக்குமான கணினிமொழியியல் பயிலரங்கம் ஒன்றில் பயிற்சியாளராகப் பணி மேற்கொண்டார். தமிழகத்தில் கணினிமொழியியலில் முறையான பயிற்சிகளைப் பெற்ற விரல்விட்டு எண்ணக்கூடிய இளம் ஆய்வாளர்களில் ஒருவரான இவரைத் தமிழகப் பல்கலைக்கழகங்கள் , தமிழ்க் கணினிமொழியியல் ஆய்வு மையங்கள் முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. மின்னஞ்சல் முகவரி - arulmozi@gmail.com, arulmozi@uohyd.ac.in

நன்றி பேரா.தெய்வசுந்தரம்.

Wednesday, July 22, 2015

பேராசிரியர் வாசு ரங்கநாதன்- Dr.VASU RENGANATHAN

|1 comments
       
   

       பேராசிரியர் வாசு ரங்கநாதன் … தமிழகத்தின் உருவாக்கம். இன்று அமெரிக்காவில் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் ஆசிரியப் பணி. தமிழை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கும் துறையிலும் கணினித்தமிழ் ஆய்விலும் உலகறிந்த ஒரு ஆய்வாளர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் மொழியியலில் முதுகலைப் பட்டமும் முனைவர் பட்டமும் (1988) பெற்றவர். அவரது ஆய்வேட்டின் சிறப்பு அடிப்படையில் அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் கற்பிக்கும் பணிக்கு (1989-1994) அழைக்கப்பட்டார். பின்னர் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பணியில் (1994-96) இணைந்தார். 1997 –இலிருந்து இன்றுவரை பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பென் மொழி மையத்தில் ( Penn Language Centre - 50 மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன) பணியாற்றிவருகிறார். 

              அமெரிக்காவிலேயே ஆசிய மொழியியலில் மற்றொரு முதுகலைப் பட்டமும் , பின்னர் இடைக்காலத் தமிழ்ப் பக்தி இலக்கியங்கள்பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அமெரிக்கப் பல்கலைக்கழகங்கள் பலவற்றில் கணினி நிரலாக்கத்தில் பல சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். அமெரிக்க மாணவர்களுக்குத் தமிழ்மொழியைப் பல நிலைகளில் கற்றுக் கொடுத்து வருகிறார். இன்று தமிழ்மொழியைக் கணினிவழியே கற்றுக் கொடுப்பதற்கான பலவகை மென்பொருள்களையும் கணினிமொழியியல் துறை அறிவுகொண்டு தமிழுக்கான பல மொழிக்கருவிகளையும் உருவாக்கிவருகிறார். Web Assisted Learning and Teaching of Tamil (WALTT) என்ற ஒரு மிக முக்கியமான பணியை மேற்கொண்டு வருகிறார் http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/index.html. ஆங்கிலத்திலிருந்து தமிழுக்குக் கணினிவழி மொழிபெயர்ப்புத் திட்டம் ஒன்றையும் மேற்கொண்டு வருகிறார். தமிழ், இந்தி இரண்டு மொழிகளுக்கும் சொல்களை உருபனாகப் பகுத்து, அவற்றின் இலக்கணக் குறிப்புகளைத் தானே தரும் சொல் பகுப்பிகளை ( Morphologicall Parser and POS Tagger) உருவாக்கியுள்ளார். ரோமன் எழுத்துகளில் எழுதப்படுகிற தமிழ் உரைகளைத் தமிழ் வரிவடிவில் – எழுத்துகளில் மாற்றித் தரும் ஒரு மென்பொருளையும் உருவாக்கியுள்ளார். Tamil A to Z instructional Tamil Software for Macintosh என்ற பெயரில் தமிழை மாணவர்கள் தாமே கற்றுக்கொள்ளhttp://ccat.sas.upenn.edu/p…/tamilweb/software/tamila2z.html ஒரு சிறந்த மென்பொருளையும் உருவாக்கியுள்ளார்.

               உலகத் தமிழ்த் தொழில் நுட்பக் கழகத்தின் ( உத்தமம் – INFITT) தலைவராகவும் பணியாற்றிவருகிறார். அமெரிக்கா, தமிழ்நாடு, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உத்தமம் மாநாடுகளை நடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளார். இவருடைய Tamil Langauge in Context என்ற நூல் இவருடைய 25 ஆண்டுகால அனுபவத்தின் அடிப்படையில் உருவாகியுள்ள ஒரு மிகச் சிறந்த நூல். இந்நூல் தமிழ்மொழியை விரைவாகவும் மிகச் சிறப்பாகவும் கற்றுக்கொள்ள உதவும். இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் பல்வேறு கருத்தரங்குகளில் கலந்துகொண்டு ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளை அளித்துள்ளார். தமிழை இரண்டாம் மொழியாகவும் அந்நிய மொழியாகவும் கற்றுக்கொடுப்பதிலும் தமிழ்க் கணினிமொழியியலிலும் உலக அளவில் அரும்பணிகளைப் பேராசிரியர் செய்துவருகிறார். மேலும் விவரங்களுக்கு -http://www.sas.upenn.edu/~vasur/

நன்றி பேராசிரியர் தெய்வசுந்தரம்

Monday, July 20, 2015

முனைவர் மு. இளங்கோவன்

|2 comments
முனைவர் மு. இளங்கோவன் … தமிழ் வலைப்பூக்களின் முன்னோடி என்று கணினித்தமிழ் உலகில் அனைவராலும் பாராட்டப்படுகிற ஒரு இளம் தமிழாய்வாளர். மாணவப் பருவத்திலேயே மாணவராற்றுப்படை என்ற இலக்கியத்தைப் படைத்தவர். நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர். திருப்பனந்தாள் காசி மடத்திற்கு உரிமையான செந்தமிழ்க் கல்லூரியில் தமிழில் பி.லிட்.,(1987-90) முதுகலை (1990-92) பட்டங்களையும் பாண்டிச்சேரி நடுவண் பல்கலைக்கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் பட்டத்தையும் (1992-93) , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்தையும் (1993-96) பெற்றார். ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்கு ‘மராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்’ என்ற தலைப்பிலும், முனைவர் பட்டத்திற்கும் ‘பாரதிதாசன் பரம்பரை’ என்ற தலைப்பிலும் ஆய்வை மேற்கொண்டார். பின்னர் ஓராண்டு சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ‘தமிழியல் ஆவணம்’ என்னும் ஆய்வுத்திட்டத்தில் பணியாற்றினார். 1998-இல் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இசைமேதை வீ.ப.கா. சுந்தரம் அவர்களின் ‘தமிழிசைக் கலைக்களஞ்சியம்’ என்னும் திட்டத்தில் இணைந்து செயல்பட்டார். பின்னர் கலவை ஆதிபராசக்தி கலைக்கல்லூரியில் 1999 முதல் 2005 வரை தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றினார். 2005-இல் நடுவண் தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுவை அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இருபதுக்கும் மேற்பட்ட தமிழாய்வு நூல்களை வெளியிட்டுள்ளார். ‘அயலகத் தமிழறிஞர்கள் ‘ ‘ இணையம் கற்போம்’, ‘ நாட்டுப்புறவியல்’ ‘செவ்விலக்கியச் சிந்தனைப் புதையல்’ போன்ற பல சிறப்பான நூல்கள் இவற்றில் அடங்கும். நாட்டுப்புறவியல் ஆய்வுத்துறையில் சிறப்பாகப் பங்களித்துள்ள இவர், நாட்டுப்புறக் கலைஞராகவும் செயல்பட்டுவருகிறார். கேரள, ஈழத்து நாட்டுப்புறப் பாடல்கள்பற்றியும் ஆய்வு மேற்கொண்டுள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழாய்வு நிறுவன ‘ இளம் தமிழ் அறிஞர்’ விருதை (2006-2007 ஆண்டுக்குரியது) 2010 ஆம் ஆண்டு பெற்றார். கல்லூரி, பல்கலைக்கழகங்களில் படிக்கும்போதே பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளில் பல தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளார். ‘தமிழ்த் தகவல் கருவூலம்’ என்ற ஒரு இணையதளத்தையும், வேர்ட்பிரஸ்.காம் என்ற இணையதளத்தையும், மு. இளங்கோவன் என்ற பெயரிலான வலைப்பூ ஒன்றையும் உருவாக்கித் தொடர்ந்து, தமிழ், தமிழர் பற்றிய அரிய பல செய்திகளைத் தமிழுலகத்திற்கு அளித்துவருகிறார். உலக, தேசிய, தமிழக அளவிலான தமிழ் அறிஞர்கள் பலர்பற்றித் தொடர்ந்து கட்டுரைகள் அளித்துவருகிறார். திருச்சி வானொலிநிலையத்தின் வழியே தமிழக நாட்டுப்புறப் பாடல்கள்பற்றிய இவரது சிறப்பு இலக்கியப் பேருரைகள் பல ஒலிபரப்பப்பட்டுள்ளன. தனது பிறந்த ஊரில் வயல்வெளிப் பதிப்பகம் , பாரதிதாசன் உயராய்வு மையம், புலவர் ந. சுந்தரேசனார் நூலகம் ஆகியவற்றை நிறுவி நடத்திவருகிறார். சிங்கப்பூர், மலேசியா, இலண்டன் போன்ற பல அயல்நாடுகளுக்குக் கல்விப்பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழகத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் கணினியில் வலைப்பூ உருவாக்கம்பற்றிப் பயிலரங்குகள் பலவற்றைத் தொடர்ந்து நடத்திவருகிறார். மேலதிக விவரங்களுக்கு - http://muelangovan.blogspot.in/
https://ta.wikipedia.org/s/662 http://www.muelangovan.com/https://muelangovan.wordpress.com/ . மின்னஞ்சல் முகவரி muelangovan@gmail.com
தொலைபேசி - 9442029053

நன்றி பேராசிரியர் தெய்வசுந்தரம்.

Saturday, July 18, 2015

பேரா. மு.ஆனந்தகிருஷ்ணன்

|0 comments
பேரா. மு.ஆனந்தகிருஷ்ணன்
(12-07-2015 திரு.மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் 87வது பிறந்தநாள்)
நம்மில் வாழும் மிக உயர்ந்த கல்வியாளர். பண்பாளர். அவர்களின் 87வது பிறந்ததினமான இன்று வாழ்க பல்லாண்டு என்று வாழ்த்துவோம்.
முனிரத்தினம் ஆனந்தகிருஷ்ணன், வயது 87, தமிழகத்தின் மிகச்சிறந்த
கல்வியாளர்களில் ஒருவர். கிண்டி பொறியியற் கல்லூரி மாணவர், தேசிய நெடுஞ்சாலைத்துறைப் பொறியாளர், கான்பூர் ஐ.ஐ.டி பேராசிரியர், அமெரிக்க இந்தியத் தூதரகத்தின் அறிவியல் ஆலோசகர், ஐ.நா. மூலம் பல நாடுகளில் கல்வி மற்றும் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகளில் பங்காற்றியவர், 62 வயதில் மீண்டும் தமிழகம் வந்து அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப்
பொறுப்பேற்பு, தமிழ்நாடு உயர்கல்வித்துறையில் துணைத்தலைவர் பதவி, தகவல் தொழில்நுட்பத்துறையில் முதலமைச்சரின் ஆலோசகர், இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் உயர்கல்விக்குழு தொடர்பான அரசுக்குழுக்களுக்கு வழிகாட்டி, மத்திய அரசின் பல்வேறு உயர்கல்விக் கொள்கைகள் வகுப்பதில் பெரும்பங்களிப்பு,
தமிழ்க்கணினியை உலக அளவில் வளர்த்தெடுக்கும் 20 ஆண்டுகால தொடர் பணிகள், கணித்தமிழ்ச் சங்கம், உத்தமம் அமைப்புகளின் புரவலர், தற்போது மூன்றாம் முறையாக தொடர்ந்து பதவி வகிக்கும் ஐ.ஐ.டி. கான்பூர் நிறுவனத்தின் தலைவர் ‘பத்மஸ்ரீ’ பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் அவர்களின் 60 ஆண்டுகளுக்கும்
மேலான கல்விப்பணியால் இந்தியாவின் உயர்கல்வித்துறை மிகப்பெரிய அளவில் பயன்பெற்றுள்ளது.
நினைவூட்டி, குறிப்புகளை வழங்கியுள்ளவர் - சொ.ஆனந்தன்
சென்னை

பேராசிரியர் இரா. சீனிவாசன்

|0 comments

பேரா. இரா. சீனிவாசன் … எனது தொடரில் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த இளம் ஆய்வாளர் . ஆனால் ஆய்வில் மிகுந்த முதிர்ச்சி உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழிலக்கியத் துறையின் உருவாக்கம். தமிழில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார். எழுத்தாளர் ரகுநாதன் நடத்திவந்த ‘சாந்தி’ இதழில் வெளிவந்த சிறுகதைகள்பற்றிய ஆய்வை ஆய்வியல் நிறைஞர் பட்டத்திற்காக மேற்கொண்டார். தனது முனைவர் பட்டத்திற்கு ‘ தமிழ் இலக்கண மரபுகள்’ என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டார். நாட்டார் வழக்காற்றியல் பட்டயப் படிப்புக்காக ‘ மண்சிற்பங்கள்’ என்ற தலைப்பில் மிகச் சிறந்த ஆய்வேடு ஒன்றையும் அளித்துள்ளார். பின்னர் திருத்தணி அரசுக் கல்லூரியிலும் தற்போது சென்னை மாநிலக் கல்லூரியிலும் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். நாட்டார் வழக்காற்றியல், இலக்கணம், இலக்கியம், தெருக்கூத்து போன்ற பல துறைகளில் தனது பங்களிப்புகளை அளித்துவருகிறார். தமிழ் இலக்கண மரபுகள்பற்றிப் பல சிறப்பான ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார். தெலுங்கு, கன்னடம் மொழிகளிலும் பயிற்சிபெற்றுள்ளார். ‘பன்முக நோக்கில் திரௌபதி’ என்னும் ஆய்வைப் பல்கலைக்கழக மானியக் குழுவின் பேராய்வுக்கான நிதியுதவியைப் பெற்று, முழுமையாக முடித்துள்ளார். இந்த ஆய்வுக்காக இவர் வடநாடுகளில் பத்துக்கு மேற்பட்ட மாவட்டங்களிலும் ஆந்திராவிலும் பரந்த அளவில் கள ஆய்வை மேற்கொண்டுள்ளார். பழங்குடி மக்களின் வாழ்வைப்பற்றிய ஆய்விலும் பேராசிரியருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. இருளர் பழங்குடி மக்கள், ஏலகிரியில் உள்ள மலையாளப் பழங்குடி மக்கள், தேக்கடி மலையடிவாரத்தில் உள்ள பழியர் பழங்குடி மக்கள் ஆகியோரைப்பற்றிக் கள ஆய்வு அடிப்படையில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் பாரதம், இராமாயணம் ஆகியவற்றில் ஆன்மீகச் சொற்பொழிவுகள் ஆற்றும் சொற்பொழிவாளர்களை இனங்கண்டு, அவர்களை ஊக்குவிக்கும் வகையில் தொடர்ந்து விழாக்கள் எடுத்துவருகிறார். அவர்களுக்குச் சிறப்புப் பட்டங்களை வழங்கி ஊக்குவிக்கிறார். இவருடைய மிகப் பெரிய சாதனை, ‘ நல்லாப்பிள்ளை பாரதத்தைப்’ பதிப்பித்துள்ளதாகும். இந்நூல் தமிழிலேயே அளவில் மிகப் பெரியதாகும். பதினெட்டு பருவங்களைக்கொண்ட இந்நூலைச் சந்தி பிரித்தும், பொருளடைவு கொடுத்தும் இவர் பதிப்பித்துள்ளது உண்மையிலேயே ஒரு மிகப்பெரிய அரும்பணியாகும். இரண்டு பாகங்களாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்தப் பெரும்பணிக்காக இவருக்குக் கும்மிடிப்பூண்டி தமிழ்ச்சோலை என்ற இலக்கிய அமைப்பு ‘பாரதச் சுடர்’ என்ற விருதை அளித்துள்ளது. மேலும் ‘ தமிழ் இலக்கண மரபுகள்’, ‘ ஐந்திலக்கணம்’, ‘தமிழகத்தில் பாரதம் – வரலாறும் கதையாடலும்’, ‘மணிமேகலையில் சமயமும் மெய்யியலும்’, ‘தொல்காப்பியச் செய்யுளியல் – புலநெறி இலக்கிய வழக்கு’, ‘சுப்பிரமணிய ஐயரின் பாரத நாடகங்கள்’ ஆகிய நூல்களை வெளியிட்டுள்ளார். ஆய்வாளர்களை ஊக்குவிக்கும் வகையில் ‘புதிய பனுவல்’ என்ற ஒரு மிகச் சிறந்த ஆய்வு இதழைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறார். சிங்கப்பூர், மலேசிய ஆகிய நாடுகளிலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் நடைபெற்றுள்ள கருத்தரங்குகள், பயிரலங்குகள் ஆகியவற்றில் பங்கேற்று ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார். தற்போது பாரதக் கதைகள் முழுவதையும் இசைப்பாடல்களாகப் பாடியுள்ள ‘மகாபாரதம் நாடகம்’, வசன வடிவத்தில் 19- ஆம் நூற்றாண்டில் த. சண்முகக்கவிராயர் இயற்றிய ‘ பாரத வசன காவியம் ‘ ஆகிய நூல்களைப் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். நான் பேரா. இரா. சீனிவாசனிடம் நேரடியாகத் தொடர்பு உடையவன். அவருடைய ஆய்வுத் திறனையும் அயராத உழைப்பையும் நேரில் பார்த்து வருபவன். தமிழாய்வில் நம்பிக்கை நட்சத்திரங்களாகப் பல இளம் ஆய்வாளர்கள் இருக்கிறார்கள் என்பதற்குப் பேரா. இரா. சீனிவாசன் ஒரு எடுத்துக்காட்டு. அவர் இதுவரை செய்துள்ள பணிகளுக்குப் பாராட்டுதல்களும் மேலும் அவர் ஆய்வுப்பணி சிறக்க வாழ்த்துகளும்.இவருடைய மின்னஞ்சல் முகவரி - panuval@gmail.com

நன்றி முனைவர் தெய்வசுந்தரம்.

Thursday, July 16, 2015

பேராசிரியர் ப. பாண்டியராஜா

|0 comments
தமிழறிஞர்கள்பற்றி (73) …
பேராசிரியர் ப. பாண்டியராஜா ( 1943) … மிகவும் வியப்புக்குரிய ஒரு தமிழறிஞர். பட்டங்கள் பெற்றது கணிதத்துறையில் … பணியாற்றியது கணிதத்துறையிலும் கணினித்துறையிலும் …. ஆனால் தமிழறிஞர்கள் பலரும் இணைந்து செய்யவேண்டிய பணிகளை – ஒரு மிகப்பெரிய தமிழாய்வு நிறுவனம் செய்யவேண்டிய பணிகளை - தனி ஒரு ஆய்வாளராக இருந்து சாதித்துள்ளார். கணிதத்தில் இளங்கலைப் பட்டம் (1962), முதுகலைப் பட்டம் (1964), எம் ஃபில் பட்டம் ( 1972) பெற்றுள்ளார். மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழில் முதுகலைப் பட்டமும் (1980), மொழியியலில் சான்றிதழும் பெற்றுள்ளார். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு, 2001-ஆம் ஆண்டு பட்டம் பெற்றுள்ளார். இவரது முனைவர் பட்ட ஆய்வானது தொல்காப்பியத்திலிருந்து இன்றுவரை எழுத்துத்தமிழின் பண்புக்கூறுகளைப்பற்றிய ஒரு புள்ளியல்துறை நோக்கிலான ஆய்வாகும் ( A Statistical Analysis of Linguistic Features in Written Tamil – a Diachronic and Synchronic Study of linguistic features starting from Tolkappiyam and upto modern times). மொழியியல், புள்ளியல், கணினியியல் ஆகிய மூன்று துறைகளையும் இணைத்து 20-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை வழங்கியுள்ளார். தேசிய அளவிலான பல்வேறு கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவருடைய அரும்பெரும் சாதனையானது, பண்டைத் தமிழ் இலக்கியங்களுக்கும் தொல்காப்பிய இலக்கணத்திற்கும் இலக்கணக் குறிப்புகளோடும் ( Word class category) புள்ளியியல் விவரங்களோடும் தொடரடைவுகளைத் தருகிற மென்பொருள் உருவாக்கியுள்ளதாகும். இவ்விதத் தொடரடைவுகள் உதவிகொண்டு, தமிழ் இலக்கியங்களின் மொழிநடையைப் பல்வேறு கோணங்களில் ஆராயலாம். பல்வேறு மொழிவழிக் கருவிகளை – ஒலியனியல், உருபனியல் ஆகியவற்றை ஆராய்வதற்கான மொழிக்கருவிகளை – உருவாக்கலாம். தமிழ் லெக்சிகன் போன்ற பெரிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்குப் பயன்படுத்தலாம். தமிழுக்கான வரலாற்று இலக்கணத்தை எழுதலாம். இவர் அளித்துள்ள தமிழ் இலக்கியப் பனுவல்களைக்கொண்டு, தமிழுக்கான தரவுத்தளங்களை உருவாக்கலாம். தமிழ் இலக்கியங்களைச் சொல்பிரித்து இவர் அளித்துள்ளது கணினித்தமிழ் ஆய்விற்கு மிகவும் பயன்படும். ஒவ்வொரு இலக்கியத்திலும் பயின்றுவந்துள்ள அடிச்சொல்கள் எவ்வளவு, இலக்கண விகுதிகள் எவ்வளவு, , விகுதி ஏற்ற சொல்கள் எவ்வளவு போன்ற விவரங்களையெல்லாம் இவர் அளித்துள்ளார். தமிழ் இலக்கியங்களின் யாப்பு கட்டமைப்பு, தொல்காப்பியத்தின் அமைப்பு ஆகியவைபற்றியும் ஆய்வுக்கட்டுரைகள் வழங்கியுள்ளார். தமிழ்மொழி ஆய்வாளர் என்ற முறையிலும் கணினித்தமிழுக்கான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிற ஆய்வாளர் முறையிலும் எனக்கு அவரது இப்பணிகள் மிகுந்த உதவியாகயிருக்கிறது என்று கூறுவதில் மிகவும் மகிழ்வடைகிறேன். ஒரு கணிதத்துறை , கணினித்துறை சார்ந்த ஒரு பேராசிரியர் தமிழ்மொழிக்குச் செய்துள்ள இந்த அரிய பணிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவரது இணையதளத்தின் முகவரி - http://sangamconcordance.in/
நன்றி முனைவர் தெய்வசுந்தரம், தலைவர், தமிழ்த்துறை.

தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு

|0 comments
தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு
பி. சத்திய மூர்த்தி.,
ஆய்வியல் நிறைஞர் பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்,
காந்திகிராமம் – 624 302

முன்னுரை:
     இலக்கியங்களில் படைக்கப்படும் பாத்திரங்கள் தன் இலக்கியச்சுவையும் , படைப்பாளிகளின் மனவுணர்வு களையும் பிரதிபலிக்கும் களமாக அமைகின்றன. அவ்வகையில் கதாப்பாத்திரங்களின் வழி வெளியாகும் பண்பாடு,வரலாறு ஆகியவை முக்கியத்துவம் பெருகின்றன. படைப்பாளன் ஒவ்வொரு பாத்திரத்தையும் நுண்மையாக வடிக்கிறான் அதனின்று பண்பாட்டுச்சூழலையும், சாதிய அரசியலையும், கலாச்சார மாற்றங்களையும் அறிந்து கொள்ள முடிகிறதுஅவ்வகையில்தறிநாடா நாவலில் அமைந்துள்ள பென்னு, பரமேஸ்வரன், காசி, ரங்கசாமி, நாகமணி, அருணாச்சலம், தர்மன், ராஜாமணி, போன்ற பாத்திரப் பண்புகளை இக்கட்டுரையில் காண்போம்.
பொன்னு:
     தறிநாடா காட்டும் நெசவாளர்கள் வாழ்வியலில் எதிர்காலமாகப் பொன்னு விளங்குகிறாள். ரங்கசாமிக்கும், நாகமணிக்கும் மகனாகப் பிறந்த இவன் நெசவாளர் சமுகத்தில் முதன்முதலில் பட்டப்படிப்பு படித்தவனாகத் திகழ்கிறான் நெசவானர் அனைவரும் தறிக்குள்ளேயே தங்களுடைய காலத்தை முடித்து விடுகின்றன. இருப்பினும் பொன்னு மட்டும் சற்று உயர்ந்த நிலையில் படித்துப் பொதுவுடைமை கட்சியில் ஈடுபட்டு, தன்னுடைய திறமையை உலக மக்களின் அனைவருக்கும் எடுத்துக்காட்ட விரும்பினான். நுடிப்பதில் ஆர்வமிக்க பல்வேறு மேடை நாடகங்களில் நடித்திருக்கிறான். ஏப்பொழுதும் படித்துக்கொண்டேஇருப்பவன், இருப்பினும் அவனுக்கு வேலை எளிதாக கிடைக்கவில்லை அதனால் தன்னுடைய வாழ்க்கையைக் குடும்பம் என்னும் வட்டத்திற்குள் அடக்கிக்கொள்ளாமல் பொதுவுடைமைக் கட்சியில் சேர்ந்து பாடுபட்டான்.
பரமேஸ்வரன்:
       மில் தொழிலாளர்களிடையே நடந்த போராட்டத்தில் கலவரம் நிகழ்ந்த போது நடந்த பொது துப்பாக்கி சூட்டில் இறந்து பட்டார். இவரின் இழப்பு ஊர் மக்களுக்கு ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒருவன் இறந்தவுடன் அவன் சொர்க்கத்துக்கு செல்கிறானா, இல்லை நரகத்துக்கு செல்கிறானா, என்பது இப்பூமியிலேயே நிர்ணயிக்கப்படுகிறதுஇவன் சொர்க்கத்திற்குதான் செல்கிறான் என்பது இவ்வூர் மக்களின் பேச்சு தீர்மானித்தது. இவர் இறந்த பின்பும் இப்பூவுலகில் வாழவேண்டும் என்பதற்காக அந்தத் தெருவிற்கு  “தியாகி இல்லம்என்று பெயர் வைத்தனர் பரமேஸ்வரன் என்றப் பெயரை மறந்து தியாகி என்றே அழைத்தனர். இவரின் வீட்டைக்கடந்து செல்கிறபோது ஊர்மக்கள் அடைகிற ஆனந்தம் அளப்பறியது.
 காசி:
     தனது சம்சாரம் இறந்து போனப் பின்பு காவிஉடையை அணிந்து கொண்டார். திருமணம் செய்துவிட்டு விக்ரமாதித்யன் போல ஊரில் ஆறுமாதமும், புண்ணியஸ்தலமான காசியில் ஆறுமாதமும் என்று தனது வாழ்வைக் கழித்து வந்தார். குட்சியஜல்இருந்து திரும்பும் போழுது காசி மாலை தீர்த்தம் சாமி உருவங்கள் என்று வாங்கிவந்து அதைத் தன்னுடைய உறவினர்கள்ஜாதிக்காரர்களுக்கு விற்று அதில் வரும் பணத்தைக் கொண்டு மறுபடியும் காசிக்குச் செல்வார். இப்படித்தான் இவரின் வாழ்வு ஏகாந்தமாய் ஓடிக்கொண்டிருந்தது.
ரங்கச்சாமி:
     ரங்கசாமி தறிநெய்யும் போது சீரான தளத்திற்கேற்ப கால்களை மாற்றிக் கொண்டுசின்ன சின்ன இழை பின்னிப் பின்னி வரும் சித்திரக் கைத்தறி சேலையடிஎன்று முணுமுணுத்துக் கொள்வார். அதை ராகம் போட்டுப் பாடுவதை விட இப்படி முணுமுணுப்பதுதான் அவருக்குப் பிடிக்கும் இவருடைய உடம்பானது ஒல்லியாக இருக்கும் என்று பலர் கூறுவர். மிகவும் சிரம்மப்பட்டு தன்னுடைய மகனைப்  படிக்க வைத்தார். இவருக்கு வடிகஞ்சியானது மிகவும் பிடிக்கும்.
 நாகமணி:
       அழுக்குப் புடவையுடன் இருக்கும் நாகமணி கல்யாணம் ஆகிஇருப்பது  வருடமாகியும் ரங்கசாமியை (கணவன்) விட்டுப்பிரியாமல் கணவனுக்கும், பிள்ளைக்கும்இல்லறம் அல்லது நல்லறம் அன்றுஎன்ற ஒளவையாரின் வாக்கிற்கு இணங்க தன் வாழ்வை அர்பணித்துக்கொண்டு வாழ்ந்து வந்தாள். இல்லறத்தை மட்டும் பேணிக்காத்த அவள்
                  “சாதிகள் இல்லையடி பாப்பா-குலத்
                   தாழ்ச்சி உயர்ச்சிச் சொல்லல் பாவம்”;
என்ற பாரதியின் கூற்றை மறந்துபலசாதி பலவட்டற ஜாதிஎன்று கீழ்ச்சாதி மக்களை இழிவாகப் பேசும் தன்மை கொண்டவளாக விளங்குகின்றாள்.

அருணாச்சலம்:
    பதறிய காரியம் சதறிப்போகும் என்றப் பழமொழிக்கேற்ப அருணச்சலம் எதையும் யோசிக்காமல் முடிவெடுக்கும் அவசரபுத்தி உள்ளவன். இவன் நெசவாளர்களைப் பற்றி கூடினா கோ~ம் போடறகோஹ்டி என்று சொல்லுவான்அவன் போராட்டத்திற்குச் செல்லும்போது தறிநாடாவை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்லுவான் எதிரில் படும் முதலாளிகளைக் குத்தலாம் அப்படியாவது விடிவு காலம் பிறக்குமா என்று நினைத்தான் எங்களுடைய போராட்டத்திற்காக நான் தீக்குளிப்பேன் என்று காவல் துறையினர் இவனை எச்சரித்தனர். போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் இவனுடைய உயிர் பிரிந்ததுமக்கள் இவனைப் பற்றி பல்வேறாக பேசினர். துப்பாக்கிச்சூட்டில் இறக்கவில்லை யென்றால் தானே தீக்குளித்து இறந்து விடுவேன் என்று கூறியதாக மக்கள் கூறினர்.
தர்மன்:
       தர்மன் வீடானது நெசவாளர்களுக்குப் பொழுது போக்கு அம்சமாக திகழ்ந்தது. இவருடைய வீட்டில் எப்போதும் சீட்டாட்டம் நடந்துகொண்டே இருக்கும் தர்மன் முன்பெல்லாம் மாசம் மூணு பாவு நெய்சாச என்று கேட்பான். அதுஎன்ன மூணுபாவு முந்தியெல்லாம் மாசம் மூணு மழை பெஞ்சுதான்னு ராசா கேட்கிற கதைதா சரி அதென்ன மாசம் மூணு மழைநீதிராசாவுக்கு ஒரு மழை, பெண்ணுக்கொரு மழை, நல்லவங்களுக்கு ஒரு மழைன்னு கணக்குமாசமூணு மழை என்றால் நீதிராசாவுக்கு ஒரு மழையும் 
                நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடிப்
                புல்லுக்கு மாங்கே பொசியுமாம்-தொல்லுலகில்
                நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
                எல்லோர்க்கும் பெய்யும் மழை

என ஒளவையாரின் வாக்கிற்கு இணங்க நல்லவர் பொருட்டு ஒருமழையும் பொய்யும் என தர்மன் கூறுகிறார். இப்பொழுது நீதிராசாவும் இல்லை நல்லவரும் இல்லை மழையும் பெய்வதில்லை என்றார்.
முடிவுரை:
இந்நாவலில் குறிப்பிடும் ஒவ்வொரு பாத்திரங்களும் தனித்தன்மை வாய்ந்ததாக அமைகின்றன. பொன்னு என்பவன் பகுத்தறிவு நிறைந்தவனாகக் காணப்படுகிறான். பரமேஸ்வரன் தொழிலாளர்களிடையே நடந்த போராட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டால் உயிரிழந்து தியாகி என்னும் பட்டத்தோடு இன்றும் திகழ்கிறான். ரங்கசாமிக்குப் பல்வேறு குடும்பச் சிக்கல் இருந்தாலும் தன்னுடைய மகனைப் படிக்க வைத்துச் சமுதாயத்தில் பெரிய மனிதனாக்கி பார்ப்பதே இவருடைய கனவாகும். நாகமணி சிறந்த குடுபத் தலைவியாக இருந்த போதிலும் மற்ற சாதியைப் பற்றி இழிவாகப் பேசும் பழக்கம் அவளிடம் இருக்கிறது.

அருணாச்சலம் அவசர புத்தியுடையவன். ஏந்தவொரு செயலைச் செய்தாலும் அவனிடம் வேகம் மட்டுமே இருக்கும் விவேகம் இருக்காது. துர்மன் வீடானது பொழுதுபோக்கு அம்சமாக நெசவாளர்களுக்கு இருக்கிறது பல்வேறு தத்துவங்களை பேசக்கூடியவன்.