/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, December 24, 2012


அன்புடையீர் வணக்கம்.
அமெரிக்காவின் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும் இணைந்து புறநானூறு - பன்னாட்டு மாநாட்டினை 31.08.13 - 02.09.13 வரை நடத்துகிறது.

புறநானூறு என்பதை மையக் கருத்தாகக் கொண்டு பின்வரும் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இந்தப் போட்டிகளில் வெற்றிபெறுவோருக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும். 
  • கட்டுரைப் போட்டி          - முதற்பரிசு 1000$ இரண்டாம் பரிசு 500$
  • விநாடிவினாப் போட்டி  - முதற்பரிசு 500$ இரண்டாம் பரிசு 250$
  • இசைப் போட்டி               - முதற்பரிசு 500$ இரண்டாம் பரிசு 250$
  • ஓவியப் போட்டி             - முதற்பரிசு 500$ இரண்டாம் பரிசு 250$

விருப்பமுள்ளோர் இதில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்குப் பின்வரும் இணையதளத்தைப் பார்வையிடவும். இந்த மாநாட்டைப் பற்றிய குறிப்பு இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளில் எந்நாட்டவரும் பங்குபெறலாம். விருப்பமுள்ளோர் பயன்பெறுக.


0 comments: