/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, September 28, 2012

பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2012

|0 comments

உலகத் தமிழ்த் தகவல் தொழில் நுட்ப மன்றம் (உத்தமம்அமைப்பின் சார்பில் இந்த ஆண்டின் இறுதியில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் மொழியியல் உயராய்வு மையத்தோடு இணைந்து பதினொன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு – 2012 நடக்கவிருக்கிறதுஎன்னும் செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழ்வுகொள்கிறோம்.  உத்தம நிறுவனம்அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு அமைப்பு ஆகும்.
கணினிஇணையம் ஆகியன தொடர்பாகத் தமிழின் பயன்பாடுகள் பற்றிய ஆய்வுகள் உலகெங்கிலும்மிழர்களிடையே பரவும் வகையில் உலகத் தமிழ் இணைய மாநாடுகளைக் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக உத்தம நிறுவனம் நடத்திவருகிறது என்னும் தகவலை உங்களோடு பகிர்ந்துகொள்ள விழைகிறோம்.. உத்தம நிறுவனம் உலகத் தமிழர்களைக் கணினி வாயிலாக இணைப்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றால் அது மிகையாகாது.
இது வரை ஏழு மாநாடுகளை அமெரிக்காசிங்கப்பூர்மலேசியாஜெர்மனிஆகிய நாடுகளில்முன்னனிப் பல்கலைக் கழகங்களோடு இணைந்தும்தமிழகத்தில் மூன்று மாநாடுகளைத் தமிழக அரசின் முழு ஆதரவோடும் உத்தம நிறுவனம் நடந்தியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.. தமிழ்த்தொடர்பான கணினி சார் மொழியியல் துறையில் குறிப்பிடத்தக்க ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மொழியியல் உயராய்வு மையத்தில் வரும் திசம்பர் 28 முதல் 30 வரை உலகத் தமிழ் இணைய மாநாடு 2012”ஐ நடத்த உத்தமத்தின் செயற்குழு முடிவெடுத்துள்ளது.  அண்ணாமலைப் பல்கலைக் கழக மொழியியல்பேராசிரியர் மாகணேசன் அவர்கள்மாநாட்டின் உள்ளூர்க் குழுவுக்குத் தலைமை தாங்கவிருக்கிறார்.  உத்தமம் அமைப்பின் துணைத்தலைவர் திருஇளந்தமிழ் அவர்கள் மாநாட்டின் பன்னாட்டுக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.முந்தைய இணைய மாநாடுகளைப் போலவே வரும் 2012 மாநாடும் கருத்தரங்குகண்காட்சிமக்கள் கூடம் என்று மூன்று முனைகளில் செயல்படும்ஆய்வுக் கருத்தரங்கு நிகழ்வுகள் திசம்பர் 28,29 ஆகிய இரண்டு நாட்களில் நடக்கவிருக்கிறது.  கண்காட்சியும்  மக்கள் கூடமும் திசம்பர் 28, 29, 30 ஆகிய மூன்று நாட்களில் நடக்கும்மாநாட்டுக்குப் பதிவு செய்த பேராளர்கள் மட்டுமே கருத்தரங்கு மற்றும் பயிலரங்கில் கலந்து கொள்ளலாம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்கண்காட்சியிலும்,சமூகக் கூடத்திலும் பொதுமக்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்கலாம்.
கருத்தரங்குகளில் பல்வேறு ஆய்வாளர்கள் கணினித்தமிழ் குறித்த தங்களின் ஆய்வுகளை ஏனைய ஆய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.  மாநாட்டின் கருத்தரங்குக் குழுவுக்கு முனைவர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ளார். கருத்தரங்குக் குழு மாநாட்டுக்கான ஆய்வுக் கட்டுரைகளைத் தேர்வு செய்வதுடன்,கருத்தரங்குகளைச் செவ்வனே நடத்தும் பொறுப்பையும் வகிக்கும்இவ்வாண்டின் கருத்தரங்குக்கு செல்பேசி மற்றும் பலகைக் கணினிகளில் தமிழ்க் கணிமை” என்ற தலைமைக் கருத்தை ஒட்டிய ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம்.  இது தவிரகணினி சார் மொழியியல்திறவூற்று மென்பொருள் ஆய்வுகள்மின்வணிக முறைகள்கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் போன்ற கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பயன் தரும் பல்வேறு ஆய்வுத் துறைகளிலும் கட்டுரைகளை வரவேற்கிறோம்.
இணைய மாநாடுகள் ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல்மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல்கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  சிதம்பரத்தில் இம்மாநாட்டை நடத்துவதால் கண்காட்சிமற்றும் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகளை ஊர்ப்புற மக்களிடையே எடுத்துச்செல்ல இதுஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என எண்ணுகிறோம்.
தமிழ்நாடெங்கும் கண்காட்சிகள் நடத்திக் கணித்தமிழ் மென்பொருள்களைப் பற்றிய செய்திகளைப் பரப்பி வந்திருக்கும் கணித்தமிழ்ச் சங்கம் இம்மாநாட்டின் கண்காட்சி அரங்கைப் பொறுப்பேற்று நடத்தவிருக்கிறது.  கண்காட்சி அரங்குக் குழுவுக்குக் கணித்தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருவள்ளி ஆனந்தன் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று நடத்தவிருக்கிறார். 
இவ்வாண்டு மாநாட்டின் மக்கள் கூம் மூலம் கணித்தமிழ் நுட்பங்களை இத்துறையின்வல்லுநர்கள் மற்றும் மாணவர்களிடையே பரப்புதல்பயிலரங்குகள் நடத்திக் கணித்தமிழின் நுட்பங்களைப் பயிற்றுவித்தல்கணினி வழியாகக் கற்கும் மற்றும் கற்பிக்கும் பல்வேறுமுறைகளை ஆசிரியர்களிடம் பரப்புதல் போன்ற முயற்சிகளை எடுக்கவிருக்கிறோம்.கணித்தமிழ்ப் பயிலரங்குகளைத் தமிழ்நாடு மட்டுமல்லாமல்மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் நடத்தி வந்திருக்கும் முனைவர் முஇளங்கோவன் அவர்கள் மக்கள்கூடக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்கிறார்.
ஆய்வுச் சுருக்கங்களை அனுப்பவேண்டிய கடைசி நாள்  நவம்பர் 3- 2012 ஆகும்மாநாட்டுக் குழுஆய்வுச் சுருக்கங்களைப் பரிசீலித்து மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளைத்தேர்ந்தெடுக்கும்தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரையாளர்களுக்கு 10 நவம்பர் 2012-க்குள் தகவல்தெரிவிக்கப்படும்.

கீழ்க்கண்ட தலைப்புகளில் மாநாட்டின் அரங்குகள் நடைபெற உள்ளது:
·         செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில்முக்கியமாக ..எஸ்ஆண்டிராய்டுதளங்களில் தமிழைப் படித்தல்தமிழில் எழுதுதல்.
·         மின் புத்தகங்கள்மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவரஉதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
·         திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள்தன்மொழியாக்கல்.
·         இயன்மொழிப் பகுப்பாய்வுபிழைதிருத்திதமிழ் எழுத்துரு பகுப்பிஒலி உணர்தல்,தேடுபொறிகள்இயந்திர மொழிமாற்றம்தகவல் அகழ்தல் போன்றவை.
·         தமிழ் இணையத்தின் தற்போதைய நிலைவலைப்பதிவுசமூக வலைத்தளங்கள்,விக்கிப்பீடியாகுரல் வலை போன்றவை.
·         தமிழ் தரவுத்தளங்கள்.
·         கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
·         தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்
·         கணினி வழி தமிழ்மொழி பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றியஆய்வுகள்

கட்டுரைகளை மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பவேண்டும்ஆய்வுச் சுருக்கங்களும்இறுதிக் கட்டுரையும் திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும்இவைஉரைக் கோப்புகளாகஎச்.டி.எம்.எல் வடிவில்மைக்ரோசாஃப்டு வேர்டு அல்லது ஓப்பன் ஆஃபீஸ்கோப்புகளாக இருக்கலாம்பி.டி.எஃப் போன்ற திருத்தமுடியாத வடிவங்கள்ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பதை உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்கட்டுரைகள்ஆங்கிலத்திலோ தமிழிலோ அல்லது இரு மொழிகளும் கலந்த வகையிலோ இருக்கலாம்.தமிழில் அல்லது இருமொழியில் இருந்தால்யூனிகோட் குறியீட்டில் மட்டுமே இருக்கவேண்டும்.பிற குறியீடுகளைக் கொண்டு அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாதுஎன்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மாநாட்டு இதழ் அச்சு வடிவிலும் மின் வடிவிலும் வெளியிடப்படும்ஏற்றுக்கொள்ளப்பட்டு,மாநாட்டில் நேராகப் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டு இதழில்சேர்த்துக்கொள்ளப்படும் கட்டுரைகளை அனுப்புவோர் நேராக மாநாட்டுக்கு வந்து தங்களின் கட்டுரைகளைப் படிக்கவேண்டும் என்பதில் எந்தவித கருத்துவேறுபாடும்இருக்காதுமாநாட்டுக்கு வர இயலாதோரின் கட்டுரைகளை மாநாட்டுக்குழு ஏற்றுக்கொள்ளாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்..

(அளவில்இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை மாநாட்டு நிகழ்ச்சிகள் குழுவுக்கு ti2012-cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள்.கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாக உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும்.

மாநாடு குறித்த கூடுதல் விவரங்களுக்குக் கீழ்க்காணும் மின்முகவரிகளில் எங்களைத் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்
ti2012@infitt.org அல்லது ed@infitt.org மற்றும் chair@infitt.org

http://www.infitt.org என்ற உத்தம நிறுவனத்தின் இணையப்பக்கத்தில் இம்மாநாடு குறித்தான செய்திகளை அவ்வப்போது வெளியிட்டுவருவோம்இப்பக்கத்தில் தங்களின் மாநாட்டு வருகைக்காகப் பதிவு செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
மணி முமணிவண்ணன்
தலைவர்உத்தம நிறுவனம்

Wednesday, September 26, 2012

இணையப்பயிலரங்கு

|0 comments
நாமக்கல் செல்வம் கலை மற்றும் அறிவியல் தன்னாட்சிக் கல்லூரியில் 26-09-2012 புதன்கிழைமை காலை பத்து மணிக்குத் தமிழ் இணையப்பயிலரங்கு கல்லூரி செயலர் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்டது.



விழாவின் தொடக்கமாக கல்லூரியின் செயலர் மற்றும் கு.சின்னப்பாரதி அறக்கட்டளையின் தலைவருமான  மருத்துவர் திரு. பொ.செல்வராஜ்  அவார்கள் தனது தலைமையுரையில் இன்றைய காலக்கட்டத்தை உணர்ந்து தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு கணிப்பொறி மற்றும் இணையத்தை நாம் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்






விழாவில் திரு செல்வமுரளிக்கு கல்லூரித் தாளாலர் சிறப்புச் செய்தல். நான், கல்லூரி முதல்வர் முனைவர் கி.சி.அருள்சாமி துணைமுதல்வர் பேரா. ந.இராஜவேல், தமிழ்த்துறைதலைவர்  உள்ளனர். 


அடுத்து தமிழ் இணையம் குறித்த கருத்துரை நான் வழங்கினேன். இணையம் தோன்றிய காலம் தமிழ் இணையத்தில் தோன்றிய காலம் வரையும் தொகுத்து வழங்கினேன். தமிழ் இணைய மாநாடுகள் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு எந்த அளவுமுக்கியத்துவன் கொடுத்தது. தமிழ் இணையக்கல்விக்கழகம், தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சி, மதுரைத்திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளையின் ஓலைச்சுவடி காப்பகம் என மாணவர்களுக்குப் பல பயனுள்ள தகவல்களைத் தொகுத்து வழங்கினேன்.

அடுத்து திரு செல்வமுரளி அவர்கள் மாணவர்களுகு மின்னஞ்சல் உருவாக்கி அதன் பயன்பாடுகளை விளக்கிக் கூறினார். மேலும் தமிழ் வலைப்பதிவையும் மாணவிகளுக்குத் தொடங்கி அதனை செயல்படுத்தும் முறையினையும் தெளிவாக விளக்கிக்கூறினார்.

இறுதியாக தமிழ்த்துறைப்பேராசிரியர் பேரா. ரெ.தினேஸ்குமார்,  நன்றி கூறினார்.
இந்த நிகழ்வில் தமிழ்த்துறை மாணவர்கள், மற்றும் கணிப்பொறித் துறை மாணவர்கள் என 150 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.  
இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்தவர், தமிழ்த்துறைப்பேராசிரியர் விஜ்ய். 
திரு.மு.விஜயகுமார்
ஆசிரியர்,www.mysangamam.com,www.namakkal4u.com திருச்செங்கோடு.



பயிற்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள்.


பயிற்சியில் கலந்துகொண்ட மாணவிகள்.


Saturday, September 15, 2012

“மென்தமிழ்“ மென்பொருள் வெளியீட்டுவிழா

|2 comments


கணினித்தமிழில் நீண்டகாலமாக இருந்துவந்த ஒரு மிகப்பெரிய சவாலை சரியாகச் செய்துள்ளார் முனைவர் ந.தெய்வசுந்தரம் அவர்கள். அவரது அயராத உழைப்பில் உருவான
கணினியில் தமிழைத் தவறில்லாமல் பயன்படுத்துவதற்குரிய சொற்பிழை திருத்தி, சந்திப்பிழை திருத்தி, தமிழ்ச்சொல் சுட்டி போன்ற தமிழ்மொழியாய்வுக் கருவிகள் கொண்ட தமிழ் மென்பொருள் மென்தமிழை உருவாக்கியுள்ளார்.

 இந்த மென்பொருளை  தமிழ் உலகத்திற்குப் பல தொண்டுகளைச் செய்துவரும்   SRM பல்கலைக்கழகத்தில் 20.09.2012 வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் தமிழ்ப்பேராயத்தின்  வாயிலாக வெளியீட்டுவிழா நடைபெறுகிறது. 

முனைவர் மு.பொன்னவைக்கோ தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் இல. சுந்தரம் வரவேற்புரையாற்ற முனைவர் ந. தெய்வசுந்தரம் அறிமுகவுரையாற்றுகிறார்.

உயர்கல்வித்துறையின் முதன்மைச் செயலாளர் திரு.தி.ஸ்ரீதர் அவர்கள் மென்பொருளை வெளியிட்டுச் சிறப்புரையாற்றுகிறார். முதல் இரு படிகளை முனைவர் ப. அர. நக்கீரன் அவர்களும், முனைவர் மு. முத்தவேலு அவர்களும் பெற்றுக்கொள்கின்றனர். அதனைத்தொடர்ந்து முனைவர் நா. சேதுராமன் அவர்கள் வாழ்த்துரை வழங்குகின்றார்.கோ. பாக்கியவதி இரவி அவர்கள்  நன்றியுரை வழங்குகிறார்.


குறிப்பு: வெளியீட்டுவிழாவின்போது மட்டும் மென்தமிழ் 50% கழிவு விலையில் 1000/- ரூபாய்க்கு வழங்கப்பட உள்ளது. வாங்கிப் பயன் பெறுங்கள்.

Sunday, September 9, 2012

தமிழ் வலைப்பூ முகவரி தொகுப்பு - 8

|0 comments