/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, December 21, 2011

SRM பல்கலைக்கழத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கம்

|0 comments
அன்புடையீர் வணக்கம்

SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து தமிழ்க் கணினிமொழியியல் (Tamil Computational Linguistics) துறையில் ஆர்வமுடைய கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் பயிற்சியளிக்க, சிறப்புப் பயிலரங்கத்தை ஏற்பாடு செய்கிறது.


பயிலரங்கில் தமிழியல், பிற மொழிகள், மொழியியல், கணினியியல் துறைகளைச் சேர்ந்தவர்களே பங்கேற்கமுடியும்.

மொழித் தொழில்நுட்பம் (Language Technology), பேச்சுத் தொழில்நுட்பம் (Speech Technology) ஆகிய துறைகளைச் சார்ந்த பேராசிரியர்களும் பிற வல்லுநர்களும் பயிற்சியளிப்பார்கள்.

பயிலரங்கம் 20.01.2012 முதல் 30.01.2012 வரை 11 நாட்கள் சென்னை SRM பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
பதிவுக் கட்டணங்கள் ஏதும் இல்லை,

பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 06.01.2012-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு
பேராசிரியர் இல.சுந்தரம்
அலைபேசி எண் 9842374750


Wednesday, December 14, 2011

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வலைப்பூ உருவாக்கம்

|2 comments
14-12-2011 மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. அதில் வலைப்பூ என்றால் என்ன? அதன் பயன்பாடுகள், இணையத்தில் எவ்வாறு தமிழ் வலைப்பூக்களை உருவாக்குவது என்ற முறையையும் உருவாக்கிக் காட்டியுள்ளேன்.

கூட்டத்தில் செண்பகத்தமிழ் அரங்கு பொறுப்பாளர் திரு இராச.இளங்கோவன்,


சங்க துணை அமைச்சர் பெ.உதயகுமார்,புலவர் சி.சிவக்கொழுந்து,கீ அரங்கராசன் மற்றும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள்.



கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.


கூட்டத்தில் கலந்துகொண்ட மாரிமுத்து என்ற மாணவனுக்குப் பாரதி என்ற பெயரில் வலைப்பூ ஒன்று உருவாக்கிக்காட்டப்பட்டது. அதனை அந்த மாணவனே உருவாக்கும் படம்.





Friday, December 2, 2011

இணையத்தில் வலைப்பூக்கள் உருவாக்குதல்

|2 comments
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் வருகிற 14-12-2011 புதன் கிழமை மாலை 6-30 மணிக்கு வலைப்பூக்கள் உருவாக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளேன். பங்குபெருபவர்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.