/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Monday, November 21, 2011

சென்னையில் இணையத்தமிழ் கருத்தரங்கம்


முத்தரையர் எழுச்சிச் சங்கத்தின் இருபதாவது மாதாந்திர கூட்டம் சென்னையில் 20-11-2011 அன்று ஞாயிற்றுக்கிழமை கோடம்பாக்கத்தில் NTR சாலையில் மாலை 6-00 மணிக்குத் தொடங்கியது. கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் சங்கத்தின் தலைவர் திரு.மாறன் அவர்கள் ஆவார்.


சென்னை முத்தரையர் எழுச்சிச் சங்கத்தின் தலைவர் திரு.மாறன், செயலர் திரு. ராமன் அவர்களுடன் நான்





கூட்டத்தின் தொடக்கமாக இணையத்தில் தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன். இச் சிறப்புரையில் கலந்து கொண்டவர்கள் அரசு அலுவளர்கள், தொழிலாளர்கள், தொழில் நிருவனத் தலைவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் என நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர்.



இச் சிறப்புரையில் இணையத்தின் தோற்றம் வளர்ச்சி மற்றும் தமிழ் வலைப்பூக்களின் பயன்பாடுகள் ,எதிர்வரும் காலங்களில் இணையத்தின் உதவியுடன் தமிழை வளர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும் வழிமுறைகள் பற்றியச் செய்திகளையும் எடுத்து விளக்கினேன்.
மேலும் முத்துக்கமலம், பதிவுகள்,திண்ணை,வார்ப்பு இணைய இதழ்களைக் காட்டி இணைய இதழ்களுக்கு எவ்வாறு எழுதுவது என்று சுட்டிக்காட்டினேன்.

தமிழ் விக்கிப்பீடியாவின் இன்றைய அவசியத்தையும் அதனால் தமிழ் மொழியின் வளர்ச்சிக் குறித்தும் பேசப்பட்டது.
வலைப்பூக்களை எவ்வாறு உருவாக்குவது என்ற படிநிலைகளை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கினேன்.


மின்குழுமங்களின் பங்களிப்பையும் அதில் நாம் தொடுக்கும் வினாவிற்கு தகுந்த விடையை கொடுக்கும் உலகத்தமிழர்களையும்(மின் குழுமம், அன்புடன் குழுமம்,அழகி குழுமம், கீற்றுக்குழுமம், தமிழ் விக்சனரி குழுமம்) காணும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தேன்.
நிறைவாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இணையம் தொடர்பான வினாக்களைக் கேட்டார்கள்.


1.இணையத்தில் எவ்வாறு தமிழில் எழுதுவது?
2. இணையத்தில் எந்த தலைப்பைத் தேடினாலும் பதில் கிடைக்குமா?
3. நம் கருத்தை எவ்வாறு இணையத்தில் பதிவேற்ற இயலும்?
4.மின்னஞ்சலை உருவாக்குவது எப்படி?
5.வலைப்பூ என்றால் என்ன? அதனை உருவாக்கும் முறைகளைப் பற்றிக் கூறுங்கள்.

இதுபோன்ற பல வினாக்களுக்கு செய்முறையில் விளக்கிக் காட்டினேன்.




இறுதியாக சங்கத்தின் துணைத்தலைவர் திரு.பார்வேந்தன் அவர்கள் நன்றி கூறினார்.


இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இடம் கொடுத்த சங்கத்தின் செயலாளர் திரு ராமன், பொருளாலர் திரு.கன்னியப்பன், துணைச்செயலாளர் திரு.செந்தில்குமார் மற்றும் மனித தெய்வங்களும் மற்றும் சில சேகரிப்புகளும் வலைப்பூவின் ஆசிரியருமான சென்னையைச் சேர்ந்த திரு.சேதுபாலா அவர்களும் கலந்துகொண்டார்.



கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.


















2 comments:

  • பா, மாறன் says:
    November 23, 2011 at 6:56 AM

    அன்பு மணிகண்டன் அவர்களுக்கு முத்தரையர் எழுச்சிச்சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

  • மணிவானதி says:
    November 24, 2011 at 7:31 AM

    நன்றி திரு பா. மாறன் அவர்களே.