/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Thursday, October 27, 2011

தமிழ் மென்பொருள்களும் எழுத்துருக்களும்


சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்ற பாரதி அச்சத்திற்கு எச்சமிட்டாற்போல தொழிற்நுட்பத்திலும் தேக்கநிலைதான் ஒருசில ஆண்டுகள் இருந்தன.ஆனால் இன்று இணைய வெளியில் தமிழ் வளங்கள் கணிச்சமாக உயர்ந்துள்ளது.”காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு” என்பதுபோல தமிழுக்கும் பல மென்பொருள்கள் பொன்குஞ்சுகளாக இருந்து வருகின்றன. புதிதாக கணினி உலகிற்கு வருபவர்கள் தமிழில் உள்ள மென்பொருட்கள் பற்றி அறிந்துகொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரிக்க இந்த பதிவு பயன்படும்.
தமிழில் நீங்கள் கணினி பயன்படுத்தி ஏதேனும் எழுத விரும்பினால் முதலில் உங்களுக்கு தேவைப்படுவது ஃபான்ட்ஸ் (Fonts) என ஆங்கிலத்தில் கூறப்படும் எழுத்துரு. நவீன கணினி இயங்குதளங்களில் (ஆப்பிரேட்டிங் சிஸ்டம்களில்) தமிழில் தட்டச்சு செய்ய இது ஒன்றே போதுமானது.

தமிழ் மென்பொருள் என்றால் என்ன?

பல கணினி இயங்குதளங்கள் நேரடியாக தமிழில் உள்ளீடு செய்வதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருப்பதில்லை. ஆங்கிலத்திற்கும் தமிழ் போன்ற மொழிகளுக்கும் கணினியில் கையாள்வதில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. எளிமையாக கூறுவதென்றால், நாம் பயன்படுத்தும் விசைப்பலகைகள் ஆங்கில மொழியில் உள்ளீடு செய்வதற்கு ஏற்றவாறு, ஆங்கில எழுத்துக்களின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள்தான் ஆனால் தமிழில் 247 மற்றும் சில வடமொழி எழுத்துக்களை நாம் உள்ளீடு செய்யும் வகையில் விசைப்பலகைகளின் அமைப்பு இல்லை. இத்தகைய பிரச்சினைகளை கையாள சில உத்திகள் மென்பொருட்களின் மூலம் செய்யப்படுகின்றன. இத்தகைய மென்பொருட்களின் உதவி இல்லாமல் நம்மால் தமிழில் உள்ளீடு செய்ய முடியாது.
மேலும் அங்கிலத்திற்கு ஒரே உள்ளீட்டு முறைதான் உள்ளது (Typing method). ஆனால் தமிழுக்கு பல்வேறு உள்ளீட்டு முறைகள் (typewriter, typewriter old, phonetic, transliteration, tamilnet99, போன்றவை) உள்ளன. ஒரு முறையில் பழகியவர்களால் வேறு முறைகளில் உள்ளீடு செய்ய முடியாது. ஆகவே இவற்றிற்கு ஏற்ப எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கு மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
இவை தவிர ஆங்கில இலக்கணமும் தமிழ் இலக்கணமும் வேறானவை என்பதால், பிழைதிருத்தி, பக்க வடிவமைப்பு போன்ற தமிழ்சார்ந்த கணினி வேலைகளுக்கென சிறப்பான மென்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

முடிவாக கூறுமிடத்து எழுத்துரு என்பதும் ஒரு வகையில் ஒரு சிறு மென்பொருள்தான். அதனை நேரடியாக பயன்படுத்துவதில் குறிப்பாக வின்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்துவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை திறமையுடன் கையாள்வதற்காகவும், ஆங்கில மொழியில் உள்ளீடு செய்யும் பொழுது அது தரும் மொழிசார்ந்த துணைக்கருவிகளைப் போல் (இலக்கணத் திருத்தி, சொல்திருத்தி, போன்றவை) தமிழுக்கும் உருவாக்கப்பட்டவையே தமிழ் மென்பொருட்களாகும் என இரா. கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு என்றால் என்ன?

ஒரு மொழியில் உள்ள எல்லா எழுத்துக்களையும் விருப்பபட்ட வடிவில் (style, design) வடிவமைத்து, கணினி ஏற்றுக் கொள்ளும் முறையில் உருவாக்கப்பட்ட ஒரு சிறு மென்பொருளாகும். டிரெடில் அச்சுக்கோர்க்கும் முறையில் கூறுவதென்றால் அஞ்சறைப்பெட்டி வடிவத்தில் பல எழுத்துக்களின் பிளாக்குகளை போட்டு வைத்திருக்கும் சட்டகங்களை போன்றதே எழுத்துரு எனப்படுவது.

தொடக்கத்தில் கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளைக் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், படம் வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என கணினியில் திறமையாக பாவித்துச் சிறப்பாக இயங்குமாறு ஆங்கில மூல மென் பொருள்களை உருவாக்கி செயல்படுத்தி வந்தனர்.இம்மென்பொருள்கள் மக்களின் பல தேவைகளை மிகச் சுலபமாக செய்து முடித்தன
.
ஆதமி மென்பொருள்

ஆங்கில மென்பொருள்போல தமிழிலும் மென்பொருள்கள் உருவாக்கவேண்டுமென பல கணிப்பொறி வல்லுனர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் விளைவாக முதலில் கனடாவில் வசிக்கும் திரு.கலாநிதிசீனிவாசன் என்பவரால்1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆதமி தமிழ் மென்பொருளாகும். இதன் மூலம் கணிபொறியில் தமிழில் எழுதி அதனை அச்சுப்பதிவு செய்துகொள்ள முடிந்தது.

மயிலை

இதனைத் தொடர்ந்து1985-ஆம் ஆண்டு சுவட்சர்லாந்தில் உள்ள முனைவர் கு.கல்யாண்சுந்தரம் என்பவரால் உருவமைத்த மயிலை எனும் மென்பொருள் ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு உருவமைக்கப்பட்டது. இம்மென்பொருள் ஆங்கில எழுத்தாகிய A-வைத் தட்டினால் அது அ-என்ற தமிழ் எழுத்து தோன்றும் விதமாக உருவாக்கப்பட்டது. இதைபோன்று K-க, O- கொ என உருவாகும் முறையில் அமைந்திருந்தன.




முரசு அஞ்சல்

“தமிழ் மூலம் மின்னஞ்சல்” பிரச்சினைகளுக்குத் தீர்வு முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின. 1986 ஆம் அண்டில் மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால் முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். இதில் எழுத்துரு (font), எழுதி (editor), மின்னஞ்சல் செயலி (e-mail application), விசைப்பலகை (keyboard) என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இதன் மூலம், இந்தச் செயலியை நிறுவியுள்ள கணினிகளின் பயனர்களிடையே மின்னஞ்சல் தொடர்பாடல் போன்ற செயல்கள் இலகுவாக்கப்பட்டன.


தமிழ் லேசர்

அமெரிக்காவில் உள்ள பெர்க்லி பல்கலைகழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜார்ஜ்.எல்.ஹார்ட் என்பவர் உருவைமைத்த ’தமிழ் லேசர்’(tamil laser) எனும் குறியீட்டு முறையில் அமைந்த மென்பொருளை உருவாக்கியுள்ளார்.

ISCII-83

இந்திய அரசால் நிருவப்பட்ட Centre for Developments for Advanced Computing (CDAC)என்ற அமைப்பால் ISCII-83 என்ற தமிழ் மெபொருள் உருவாக்கப்பட்ட
.
பிற தமிழ் மென்பொருள்கள

அமெரிக்கத் தமிழர் மருத்துவர் பெரியண்ணன் குப்புசாமியால் தொடங்கப்பட்ட அணங்கு,மதுரைத்திட்டக் குழுவினரால் வடிவமைத்த TSCII,கனடாவில் வசிக்கும் தமிழ் ஆர்வலர் திரு.விஜயகுமாரின் சரஸ்வதி போன்ற தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன.
1990-இல் அமெரிக்கவைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் T.கோவிந்தராசு என்பவர் உருவமைத்த பல்லாடம், சிங்கப்பூரைச் சார்ந்த தமிழ் பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் கணியன் போன்ற மென்பொருள்கள் தமிழில் உருவாகி தமிழ் மொழி இணையத்திலும் கணிப்பொறியிலும் வளர்ந்த நிலையில் உள்ளது.

தாரகை

சிங்கப்பூரில் உள்ள ஆர்.கலைமணி என்பவரால் வடிவமைக்கப்பட்டதுதான் தாரகை எழுத்துரு மென்பொருளாகும்
இவைகள் மட்டுமன்றி தமிழகத்தைச் சார்ந்த கணிப்பொறி வல்லுனர்களும் மென்பொருள்களை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்களில் திரு.செல்லப்பனின் asian printers,க.இளங்கோவனின் CAD Graph, டாக்டர். கூப்பர் modular infotech, திரு துளுக்காணம் அவர்களின் lastech, மா.ஆண்டோபீட்டர் அவர்களின் softview(inscript fonts), திரு.தியாகராசனின் வானவில் போன்றவையும் அடங்கும்
.
இ-கலப்பை

முரசு 2000-த்தை தொடர்ந்து பெங்களூரில் பணியாற்றிவரும் மென்பொருள் தயாரிப்பாளர் திரு.முகுந்தராஜாவின் முயற்சியால் இ-கலப்பை என்னும் மென்பொருள் ஒருங்குறியீட்டில் பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் இ-கலப்பையைக் கணினியில் நிறுவுதல்,தொடர்ந்து யூனிக்கோடு எழுடத்துருக்களை நிறுவுதல் என்ற இரு செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இம்மென்பொருள் உருவாக்கப்பட்டு வெளிவந்தது.



கூகிள் தமிழ் ஒலிமாற்றி மென்பொருள்

கூகிள் தமிழ் ஒலிமாற்றிப் பற்றி அநேகமானவர்கள் அறிந்திருக்கக்கூடும். அதன் பரவிறக்க பதிப்பாக Input Method Editor [IME] என்கிற மென்பொருளை வழங்குகிறது. இதில் தமிழ் மூலபதிப்பை தரவிறக்கி விளக்கம் கூறியப்படி நிருவிக்க் கொள்ளலாம். அதன் பின் வேண்டிய இடங்களில் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம் அவை நோட்பேடோ அல்லது MS வேர்டாகவோ இருக்கலாம். தட்டச்சிடும் ரோமன் எழுத்துக்களின்[English] ஒலிகளுக்குத் தகுந்த தமிழ் எழுத்தை தட்டச்சிடும். சொந்த கணினியாக வைத்திருப்பவர்கள் இதை ஒருமுறை பதிப்பதன் மூலம் வலை தளங்கள் முதல் கணினி படங்கள் வரை தமிழில் அடிக்கலாம்.
http://www.google.com/ime/transliteration/

அகபே தமிழ் எழுதி

அகபே தமிழ் எழுதி தமிழில் எளிமையாகத் தட்டச்சு செய்ய உதவும் தமிழ் எழுதி மென்பொருள். இந்த தமிழ் எழுதியை இலவசமாக வலைப்பூக்களிலும், வலைத்தளங்களிலும் நிறுவிக் கொள்ள முடியும்

என்.எச்.எம் மென்பொருள்(new Horizon media)

சென்னையில் உள்ள கிழ்க்குப்பதிப்பக திரு.பத்திரிசேசாத்திரி அவரகளின் முழுமுயற்சியோடு திரு.கே.எஸ்.நாகராஜன் அவர்களால் இம்மென்பொருள் உருவாக்கப்பட்டது.இதுவரை வந்துள்ள தமிழ்ஒருங்குறியீட்டு மென்பொருள்களில் முதன்மையானது என்று கூறலாம்.இதனை இலவசமாக கணிப்பொறியில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.இம்மென்பொருள் தமிழ்மொழித் தவிர பிற இந்திய மொழிகளிலும் பயன்படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

அழகி மென்பொருள் (azhagi.com/docs.htm)

விஷி (எ) விஸ்வநாதன் தமிழ்க்கணினி உலகிற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல, அவரிடமிருந்து இளைய தலைமுறை கற்க எவ்வளவோ இருக்கிறது. தன்னை நோக்கிக் காலம் விடும் சவால்களை ஆன்மீகப் பலத்தோடு எதிர்நோக்கி வெற்றியடையும் இவரது மனோதிடம் வியக்கத்தக்கது.இவரது அயராத முயற்சியால் உருவான மென்பொருள்தான் அழகி ஆகும்.
மிகவும் சுலபமான, வேகமான, இடத்திற்கேற்ப மாறி அமையும் (Easy, fast and flexible) ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பே (English-to-Tamil Phonetic Key'mappings) அழகியின் தனிச்சிறப்பு* ஆகும். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த 'ஒலியியல் அமைப்பு' (transliteration scheme) மூலம், உங்கள் தமிழ் தட்டச்சு செயல்திறனை (productivity) அழகி இயல்பாய் அதிகரிக்கிறது (அதாவது, குறைந்த நேரத்தில் நிறைய தட்டச்சு செய்ய உதவுகிறது). உதாரணத்திற்கு, 'ஸ்ரீதர்' என்று தட்டச்சிட sridhar, Srithar, sreedhar, shridhar என்று பல வகைகளில் டைப் செய்யலாம் (flexible transliteration). 'நீங்க', 'விஸ்வம்', 'நன்றி', 'கஸ்தூரி', 'பொய்', 'மஞ்சு', 'கற்று' என்று தட்டச்சிட neenga, viswam, nandri, kasthoori, poi, manju, katru என்று அப்படியே இயல்பாக டைப் செய்திடலாம் (easy, natural, intuitive and straightforward transliteration).
ஒலியியல் முறையில், தமிழில் மட்டுமல்லாது, பிற இந்திய மொழிகளான ஹிந்தி (சம்ஸ்கிருதம், மராத்தி, கொங்கனி, ..., ...), தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பெங்காலி (வங்காளம்), பஞ்சாபி, ஒரியா, அசாமீஸ் முதலியவற்றிலும் தட்டச்சு செய்ய வல்லது.

செல்லினம் மென்பொருள்

என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும். இம்மென்பொருளை மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான முரசு நிறுவனம் உருவாக்கிதைப்பொங்கற் திருநாளான ஜனவரி 15, 2005 முதல் சிங்கப்பூரில் அறிமுகமாக வணிகப்பயன்பாட்டுக்காக வெளியிடபட்டது.
சர்மா சொற்பிழைச்சுட்டி மென்பொருள் (http://sarma.co.in/tamil/index.htm)
சொற்பிழைச் சுட்டிக்கான இம்மென்பொருட்கள் சொற்களின் எழுத்துப் பிழைகளை மட்டும் சுட்டுவதாக அமைந்துள்ளன.
சொற்பிழைச்சுட்டி மென்பொருள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருட்களிள் 35 வகையான (பட்டியலிலுள்ள, Unicode) எழுத்துருக்களையும் தானாகவே இனம் கண்டு சொற்பிழைகளைக் கண்டறிந்து மைக்ரோசாப்ட் வேர்டு மென்பொருளில் உள்ளவாறு (English spell checking) தவறான வார்த்தைகளின் அடியில் சிவப்பு நிறத்தில் அடிக்கோடிட்டிடும். எனவே பயனாளர் குறிப்பிட்ட எழுத்துருவில் மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. ஆங்கிலம், தமிழ் இரண்டு உள்ளீடுகளையும் இனம் கண்டு தானாகவே சொற்பிழைகளைக் கண்டறியும்.









0 comments: