/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Tuesday, July 19, 2011

தொடுவானம்….மதுரை மாவட்ட நிர்வாகமும்,தமிழ் உலகம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் .

தொடுவானம்….மதுரை மாவட்ட நிர்வாகமும்,தமிழ் உலகம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் மதுரைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்டமாக 25 ஊராட்சிகளுக்கான தொடுவானம் பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சகாயம் துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள்


தொடக்கத்தில் திரு.லதானந்த அவர்கள் மின் அட்சி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அவரைத்தொடர்ந்து திரு.தேனி.எம்.சுப்பிரமணி அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் தொற்றம் அதன் வளர்சி மற்றும் பங்களிப்புப் பற்றி விவரித்துக்கூறினார்.

திரு.லதானந்த,திரு.மாயவரத்தான்,திரு. தேனி.எம்.சுப்பிரமணி,பேராசிரியர் சரவணன்.

வலைப்பூக்களின் தொடக்கம், அதன் வகைகள் பற்றி திரு.மாயவரத்தான் உரை நிகழ்தினார். அதனைத் தொடர்ந்து முனைவர் துரை.மணிகண்டன் கணினித்தமிழும்,தமிழில் தட்டச்சுப்பயிற்ச்சிகுறித்த கருத்துக்களை தெளிவுபட எடுந்துக் கூறினார்.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊராட்சிமன்ற எழுத்தர்கள்,மற்றும் கிராம தன்னார்வ தொண்டர்கள்.


நிகழ்ச்சியில் முனைவர் துரை.மணிகண்டன்
மதுரை ஆட்சியருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு.விஜயகுமார் திரு.மணிகண்டன், திரு.நாகமணி,திரு.வி.பி.மணிகண்டன்,திரு.செல்வமுரளி,திரு.லதானந்த.



மதியம் 2-மணிக்கு ஊராட்சி அலுவலர்களும் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கும்
தொடுவானம் வலைப்பாதிவில் எவ்வாறு மக்களின் குறைகளை பதியவேண்டும்,என்பது குறித்து திரு, செலவமுரளி, திரு.நாகமணி.முனைவர் துரை.மணிகண்டன்.விளக்கம் அளித்தனர்.
இறுதியாகா ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் தொடுவானம் நிகழ்ச்சியின் பயன்களைத் தொகுத்து விளக்கினார்.
. அவர் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் 25 லட்சத்து 62 ஆயிரத்து 279 பேர் உள்ளனர். இதில் ஊரக பகுதியில் மட்டும் 11 லட்சத்து 29 ஆயிரத்து 28 பேர் உள்ளனர். ஊராட்சி ஒன்றியங்கள் 13, கிராம ஊராட்சிகள் 431, பேரூராட்சிகள் 10, நகராட்சிகள் 3, மூன்றாம் நிலை நகராட்சிகள் 3 உள்ளன. தொடுவானம் என்ற இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் புதிய முயற்சி. இது முதற்கட்டமாக 25 கிராமங்களில் செயல்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும் 5 பேருக்கு வழங்கப்படுகிறது. தொலை தூர கிராமங்களில் இருப்போர் கலெக்டரை சந்திக்க வேலை இழப்பு, பணச் செலவு, காலவிரயம் போன்றவற்றை சந்திக்கின்றனர்.

கிராமப்புற மக்கள் தங்களின் கோரிக்கை குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கொடுப்பதற்காக தொலைதூரங்களில் இருந்து இங்கு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஒரு நாள் வேலை இழப்பு, பணச் செலவு, காலவிரயம் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்கவே இந்த தொடுவானம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, கிராம மக்கள் அந்தந்த கிராம ஊராட்சிகளில் உள்ள கணினிகளில் இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல் மூலம் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கோ நேரடியாக அனுப்பலாம். அவ்வாறு அனுப்பப்படும் மனுக்களுக்கு ஒப்புதல் கடிதமும் கொடுக்கப்படும்.
இந்த மாவட்டத்தில் மொத்தம் 431 கிராம ஊராட்சிகள் உள்ளன. முதல் கட்டமாக 25 ஊராட்சிகளில் இந்த தொடுவானம் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றை இணையதளம் மூலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் 5 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இப்போது பயிற்சி அளிக்கப்படுகிறது. இது இந்த மாவட்ட நிர்வாகத்தின் ஓர் புதிய முயற்சியாகும்.
இந்தத் திட்டத்தை ஊராட்சியில் உள்ள அலுவலர்கள் திறம்பட செயல்படுத்தி கிராமப்புறத்துக்கும், நகர்ப்புறத்துக்கும் ஒரு பாலமாக செயல்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.

வாழ்க தொடுவானம் வளர்க மதுரை மக்கள்

0 comments: