/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, June 29, 2011

கிருஷ்ணகிரியில் கணினி மற்றும் இணையக்கருத்தரங்கு

விஎம்.பவுண்டேசன் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை இணைந்து கணினித்தமிழ் கற்போம்! தமிழ் இணைய பயிலரங்கு 25-6-2011 சனிக்கிழமை காலை கிருஷ்ணகிரியில் சாந்தி திருமணமண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிலரங்கம் கலை 10 மணிக்கு திரு செலவமுரளி வரவேற்பு மூலம் தொடங்கியது. 10.15 மணிக்கு தமிழ் உலகம் அற்க்கட்டளையின் தலைவர் திரு பழனியப்பன் சிங்கப்பூரிலிருந்து காணொலிமூலம் வந்திருந்த மாணவர்கள்,மாணவிகள் மற்றும் பள்ளிக்கூட மாணவர்களுடன் உரையாடினார்.



10.30 மணிக்குத் தமிழும் தமிழ் இனையமும், தமிழில் தட்டச்சு முறை எனற தலைப்பில் முதலில் நான் உரை நிகழ்த்தினேன்.இதில் இணையத்தின் தோற்றம், தமிழ் இணையத்தின் தோற்றம், பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் பங்களிப்பு, தமிழ் இணையமாநாட்டின் பங்களிப்புகள், உத்தமத்தின் செயல்பாடுகள், தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுசெல்வத்தின் பயன்பாடுகள், தமிழ் விக்கிப்பீடியாவின் செயல்பாடுகள் பற்றிப்பேசினேன்.மேலும் ஒருசில தமிழ் இணையதளங்கள் பார்வைக்கு காட்டப்பட்டன.(திண்ணை, முத்துக்கமலம்,பதிவுகள்,வார்ப்பு,)





தமிழின் தட்டச்சு முறைகள், முரசு, இ-கலப்பை, தமிழ்99, nhm, போன்ற தட்டச்சு எழுதிகளை இணையத்தில் பதிவிறக்கம் செய்து காட்டப்பட்டது.



எம்மை தொடர்ந்து திரு ஒரிசா பாலு அவர்கள் தமது கடலாய்வு அனுபவங்களை படக்காட்சிகளுடன் விவரித்தார். மேலும் உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு, பரவல் மற்றும் தமிழர் தொன்மை ஆகியவை பற்றியும் சிறப்பாக எடுத்துக் கூறினார்.



பேராசிரியர் க.சரவணன் மாற்றுத் திறனாளிகளுக்கான கணினி பயிற்சியைச் சிறப்பாக எடுத்து விளக்கினார்கள்.

காலை நிகழ்வுகள் முடிந்து மதியம் 2-மணிக்கு மென்பொருள் நிருவனர் திரு ம. சிவக்குமார் அவர்கள் பார்வையாளர்களுக்கு மின்னஞ்சல் உருவாக்கிக் காண்பித்தார். வலைப்பூவையும் மாணவ மாணவிகளுக்குத் தொடங்கிக் காட்டி பயிற்சியும் அளித்தார்.



மாலை 4 மணிக்கு ஆசிரியர் கவி.செங்குட்டுவன் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி என்ற தலைப்பில் தமிழ் இணையக் கல்விக்குழுமத்திலிருந்து நூல்களை எடுத்துக் காட்டி விளக்கினார். மற்றும் மதுரைத்திட்டம், சென்னை நூலகம் போன்ற மின்னூலகத்தினையும் பயன்படுத்தும் முறையையும் விளக்கினார்.

இறுதியாக நிகழ்வில் கலந்துகொண்ட கல்லூரிமாணவ மாணவிகளுக்கும், கிருஷ்னிகிரி மாவட்டதொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியின் செயலாளர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


இப்பயிலரங்கில் கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்களின் செயலாளர்கள்,
ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரி மற்றும்
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி ஆகியவற்றின் முதுகலைத் தமிழ் மாணவர்களும்
நந்தனம் பொறியியல் கல்லூரி மாணவர்களும்
மாத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் உட்பட 150 மேற்பட்டோர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள்.



நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள்.


கருத்தரங்க குழுவினர் திரு செல்வமுரளி,பேராசிரியர் சரவணன்,ஆசிரியர் கவி செங்குட்டுவன், முனைவர் துரை.மணிகண்டன்,மென்பொருள் சரவணன்.


அமெரிக்காவிலிருக்கும் கணிப்பொறியாளர் திரு ஆல்பட் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு எற்பாடுசெய்தார்கள். ஆல்பட் உடன் இணைந்து விஎம் பவுண்டேசன் நிருவனர் திரு செல்வ.முரளி அவர்களும் உருதுணையாக இருந்து நிகழ்வினைச் செம்மையாக நடத்தினார்.
இந்த நிகழ்வுகள் முழுவதும் தமிழ் உலகம் அறக்கட்டளை



மூலம் நேரடி காணொளி மூலம் www.ulagatamiloli.comஎன்ற

இணைய தளத்தில் ஒளிபரப்பப் பட்டது.

0 comments: