/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Saturday, April 2, 2011

கணிப்பொறியும் இணையத்தமிழும் - பயிலரங்கம்

|0 comments


திண்டுக்கல், காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் 25-3-20011 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ் ஆய்வுத்துறையில் “கணிப்பொறியும் இணையத்தமிழும்” என்ற தலைப்பில் பயிலரங்கம் ஒன்று நடைபெற்றது. இப்பயிலரங்கிற்கு தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பத்மநாபபிள்ளை தலைமை வகித்தார்.


இப்பயிலரங்கில் நான் கலந்து கொண்டு கணிப்பொறி குறித்தும், இணையத்தில் தமிழ்ப் பயன்பாடு குறித்தும் பயிற்சியளித்தேன். இந்நிகழ்வில்


1.கணிப்பொறியின் தோற்றம் அதன் வளர்ச்சி மற்றும் கணிப்பொறியின் பயன்பாடுகள்

2.கணிப்பொறியில் தமிழ் இடம் பெற்ற வரலாறு

3.கணிப்பொறியில் தமிழ் மென்பொருள்கள் மற்றும் தமிழ் சொற்செயலிகள் அவற்றின் பங்களிப்புகள்

4.இணையத்தின் தோற்றமும் அதன் வரலாறு

5.இணையத்தில் தமிழ் மொழிப் பயன்பாட்டின் தொடக்கம் மற்றும் அதன் வளர்ச்சி

6.தமிழ் இணைய முகவரிகள், தமிழ் இணையதளங்கள் மற்றும் தமிழ் இணைய இதழ்கள் குறித்த விளக்கம் அவற்றின் பயன்பாடுகள்

7.மின்நூலக வளர்ச்சி

8.தமிழ் இணையக் கல்விக்கழகம் மற்றும் மதுரை மின்நூலாக்கப் பணிகள்

9.தமிழ் ஆய்விற்கு இணையதளங்களின் பயன்பாடு

10.தமிழ் மரபு செல்வஙகளான ஓலைச்சுவடிகளின் தொகுப்பிற்கான தமிழ் மரபு அறக்கட்டளை செயல்பாடு

11.தமிழ் தரவுதளங்களில் தமிழ் விக்கிப்பீடியாவின் பங்கு

12.இயந்திர மொழிப்பெயர்ப்பின் அவசியம் மற்றும் அதன் முக்கிய பங்களிப்புகள்

போன்றவை குறித்து இணையதளம் வழியாக விளக்கமளித்தேன்.

இறுதியாக மாணவ, மாணவிகள் சிலர் இணையத்தில் தமிழ் குறித்துக் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தேன். முடிவில் முனைவர் பட்ட ஆய்வாளர் சிவா நன்றியுரை வழங்கினார்.