/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, December 21, 2011

SRM பல்கலைக்கழத்தில் தமிழ்க் கணினிமொழியியல் பயிலரங்கம்

|0 comments
அன்புடையீர் வணக்கம்

SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும் இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து தமிழ்க் கணினிமொழியியல் (Tamil Computational Linguistics) துறையில் ஆர்வமுடைய கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கும், முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கும் பயிற்சியளிக்க, சிறப்புப் பயிலரங்கத்தை ஏற்பாடு செய்கிறது.


பயிலரங்கில் தமிழியல், பிற மொழிகள், மொழியியல், கணினியியல் துறைகளைச் சேர்ந்தவர்களே பங்கேற்கமுடியும்.

மொழித் தொழில்நுட்பம் (Language Technology), பேச்சுத் தொழில்நுட்பம் (Speech Technology) ஆகிய துறைகளைச் சார்ந்த பேராசிரியர்களும் பிற வல்லுநர்களும் பயிற்சியளிப்பார்கள்.

பயிலரங்கம் 20.01.2012 முதல் 30.01.2012 வரை 11 நாட்கள் சென்னை SRM பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
பதிவுக் கட்டணங்கள் ஏதும் இல்லை,

பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் 06.01.2012-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு
பேராசிரியர் இல.சுந்தரம்
அலைபேசி எண் 9842374750


Wednesday, December 14, 2011

திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வலைப்பூ உருவாக்கம்

|2 comments
14-12-2011 மாலை திருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கத்தில் தமிழ் வலைப்பூக்கள் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தப்பட்டது. அதில் வலைப்பூ என்றால் என்ன? அதன் பயன்பாடுகள், இணையத்தில் எவ்வாறு தமிழ் வலைப்பூக்களை உருவாக்குவது என்ற முறையையும் உருவாக்கிக் காட்டியுள்ளேன்.

கூட்டத்தில் செண்பகத்தமிழ் அரங்கு பொறுப்பாளர் திரு இராச.இளங்கோவன்,


சங்க துணை அமைச்சர் பெ.உதயகுமார்,புலவர் சி.சிவக்கொழுந்து,கீ அரங்கராசன் மற்றும் தமிழ்ச்சங்க நிர்வாகிகள்.



கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.


கூட்டத்தில் கலந்துகொண்ட மாரிமுத்து என்ற மாணவனுக்குப் பாரதி என்ற பெயரில் வலைப்பூ ஒன்று உருவாக்கிக்காட்டப்பட்டது. அதனை அந்த மாணவனே உருவாக்கும் படம்.





Friday, December 2, 2011

இணையத்தில் வலைப்பூக்கள் உருவாக்குதல்

|2 comments
திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்கத்தில் வருகிற 14-12-2011 புதன் கிழமை மாலை 6-30 மணிக்கு வலைப்பூக்கள் உருவாக்கம் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்ற உள்ளேன். பங்குபெருபவர்கள் கலந்துகொண்டு பயன் பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


Friday, November 25, 2011

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி

|0 comments
தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை 850 அமெரிக்க டாலர்கள். இப்போட்டியில் முதல் பரிசாக 200 டாலர்கள், இரண்டாம் பரிசாக 100 டாலர்கள், மூன்றாம் பரிசாக 50 டாலர்கள் என பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளன. ஆறுதல் பரிசாக 25 டாலர் வீதம் இரண்டு பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. இவை தவிர தொடர்ச்சியாகப் பங்களிப்போருக்காக 100 டாலர் வீதம் மூன்று சிறப்புப் பரிசுகளும், தமிழர் தொழிற்கலைகளைப் பற்றிய சிறந்த ஊடகக் கோப்புக்காக 150 டாலர் சிறப்புப் பரிசாகவும் வழங்கப்பட உள்ளன.போட்டியில் அனைவரும் கலந்து்கொள்ள வேண்டுகின்றேன்.

போட்டி நவம்பர் 15, 2011 முதல் பெப்ரவரி 29, 2012 வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர்

http://ta.wikipedia.org/wiki/contest என்ற இணையமுகவரிக்குச் சென்று முழு விபரங்களையும் அறிந்து கொள்ளலாம். போட்டி பற்றிய சந்தேகங்கள் மற்றும் கேள்விகளை tamil.wikipedia@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

நன்றி திண்ணை.காம்

Monday, November 21, 2011

சென்னையில் இணையத்தமிழ் கருத்தரங்கம்

|2 comments

முத்தரையர் எழுச்சிச் சங்கத்தின் இருபதாவது மாதாந்திர கூட்டம் சென்னையில் 20-11-2011 அன்று ஞாயிற்றுக்கிழமை கோடம்பாக்கத்தில் NTR சாலையில் மாலை 6-00 மணிக்குத் தொடங்கியது. கூட்டத்திற்குத் தலைமை வகித்தவர் சங்கத்தின் தலைவர் திரு.மாறன் அவர்கள் ஆவார்.


சென்னை முத்தரையர் எழுச்சிச் சங்கத்தின் தலைவர் திரு.மாறன், செயலர் திரு. ராமன் அவர்களுடன் நான்





கூட்டத்தின் தொடக்கமாக இணையத்தில் தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினேன். இச் சிறப்புரையில் கலந்து கொண்டவர்கள் அரசு அலுவளர்கள், தொழிலாளர்கள், தொழில் நிருவனத் தலைவர்கள், கல்லூரி மாணவர்கள், பெண்கள் என நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்டோர்கள் கலந்துகொண்டனர்.



இச் சிறப்புரையில் இணையத்தின் தோற்றம் வளர்ச்சி மற்றும் தமிழ் வலைப்பூக்களின் பயன்பாடுகள் ,எதிர்வரும் காலங்களில் இணையத்தின் உதவியுடன் தமிழை வளர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும் வழிமுறைகள் பற்றியச் செய்திகளையும் எடுத்து விளக்கினேன்.
மேலும் முத்துக்கமலம், பதிவுகள்,திண்ணை,வார்ப்பு இணைய இதழ்களைக் காட்டி இணைய இதழ்களுக்கு எவ்வாறு எழுதுவது என்று சுட்டிக்காட்டினேன்.

தமிழ் விக்கிப்பீடியாவின் இன்றைய அவசியத்தையும் அதனால் தமிழ் மொழியின் வளர்ச்சிக் குறித்தும் பேசப்பட்டது.
வலைப்பூக்களை எவ்வாறு உருவாக்குவது என்ற படிநிலைகளை ஒவ்வொன்றாக எடுத்து விளக்கினேன்.


மின்குழுமங்களின் பங்களிப்பையும் அதில் நாம் தொடுக்கும் வினாவிற்கு தகுந்த விடையை கொடுக்கும் உலகத்தமிழர்களையும்(மின் குழுமம், அன்புடன் குழுமம்,அழகி குழுமம், கீற்றுக்குழுமம், தமிழ் விக்சனரி குழுமம்) காணும் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தேன்.
நிறைவாக கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் இணையம் தொடர்பான வினாக்களைக் கேட்டார்கள்.


1.இணையத்தில் எவ்வாறு தமிழில் எழுதுவது?
2. இணையத்தில் எந்த தலைப்பைத் தேடினாலும் பதில் கிடைக்குமா?
3. நம் கருத்தை எவ்வாறு இணையத்தில் பதிவேற்ற இயலும்?
4.மின்னஞ்சலை உருவாக்குவது எப்படி?
5.வலைப்பூ என்றால் என்ன? அதனை உருவாக்கும் முறைகளைப் பற்றிக் கூறுங்கள்.

இதுபோன்ற பல வினாக்களுக்கு செய்முறையில் விளக்கிக் காட்டினேன்.




இறுதியாக சங்கத்தின் துணைத்தலைவர் திரு.பார்வேந்தன் அவர்கள் நன்றி கூறினார்.


இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து இடம் கொடுத்த சங்கத்தின் செயலாளர் திரு ராமன், பொருளாலர் திரு.கன்னியப்பன், துணைச்செயலாளர் திரு.செந்தில்குமார் மற்றும் மனித தெய்வங்களும் மற்றும் சில சேகரிப்புகளும் வலைப்பூவின் ஆசிரியருமான சென்னையைச் சேர்ந்த திரு.சேதுபாலா அவர்களும் கலந்துகொண்டார்.



கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள்.


















Wednesday, November 16, 2011

முத்தரையர் எழுச்சி சங்க கூட்டத்தில் இணையத்தில் தமிழ் வளர்ச்சி

|1 comments
முத்தரையர் எழுச்சிச் சங்கம் அமைப்பின் கூட்டத்தில் இணையத்தி தமிழ் வளர்ச்சி சிறப்புரை.





முத்தரையர் எழுச்சிச் சங்கம் அமைப்பின் இருபதாவது மாதாந்திர கூட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை(20-11-2011) மாலை சரியாக 4-30 மணியளவில் சென்னையில், கோடம்பாக்கத்தில் இணையத்தில் தமிழ் வளர்ச்சி என்ற தலைப்பில் முனைவர் துரை.மணிகண்டன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
அவரைத்தொடர்ந்து தமிழக அரசியல் வாரப்பத்திரிக்கையின் துணை ஆசிரியர் திரு.பி. அரங்கநாதன் அவர்கள் உள்ளாட்சி தேர்தல் ஓர் விமர்சனம் என்ற தலைப்பில் உரை நிகழ்த்த உள்ளார்.
கூட்டத்தில் சென்னையைச்சேர்ந்த முத்தரையர்கள் மற்றும் இணையத்தமிழ் ஆர்வளர்கள் பலர் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

இடம்: 120/131, NTR.தெரு,ரங்கராஜபுரம்,கோடம்பாக்கம்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்

திரு.மாறன்.
அலைபேசி: 9840882829

Thursday, October 27, 2011

தமிழ் மென்பொருள்களும் எழுத்துருக்களும்

|0 comments

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்" என்ற பாரதி அச்சத்திற்கு எச்சமிட்டாற்போல தொழிற்நுட்பத்திலும் தேக்கநிலைதான் ஒருசில ஆண்டுகள் இருந்தன.ஆனால் இன்று இணைய வெளியில் தமிழ் வளங்கள் கணிச்சமாக உயர்ந்துள்ளது.”காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சு” என்பதுபோல தமிழுக்கும் பல மென்பொருள்கள் பொன்குஞ்சுகளாக இருந்து வருகின்றன. புதிதாக கணினி உலகிற்கு வருபவர்கள் தமிழில் உள்ள மென்பொருட்கள் பற்றி அறிந்துகொள்வதற்கான சாத்தியங்கள் அதிகரிக்க இந்த பதிவு பயன்படும்.
தமிழில் நீங்கள் கணினி பயன்படுத்தி ஏதேனும் எழுத விரும்பினால் முதலில் உங்களுக்கு தேவைப்படுவது ஃபான்ட்ஸ் (Fonts) என ஆங்கிலத்தில் கூறப்படும் எழுத்துரு. நவீன கணினி இயங்குதளங்களில் (ஆப்பிரேட்டிங் சிஸ்டம்களில்) தமிழில் தட்டச்சு செய்ய இது ஒன்றே போதுமானது.

தமிழ் மென்பொருள் என்றால் என்ன?

பல கணினி இயங்குதளங்கள் நேரடியாக தமிழில் உள்ளீடு செய்வதை ஏற்றுக்கொள்ளும் வகையில் இருப்பதில்லை. ஆங்கிலத்திற்கும் தமிழ் போன்ற மொழிகளுக்கும் கணினியில் கையாள்வதில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. எளிமையாக கூறுவதென்றால், நாம் பயன்படுத்தும் விசைப்பலகைகள் ஆங்கில மொழியில் உள்ளீடு செய்வதற்கு ஏற்றவாறு, ஆங்கில எழுத்துக்களின் அடிப்படையில்தான் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலத்தில் மொத்தம் 26 எழுத்துக்கள்தான் ஆனால் தமிழில் 247 மற்றும் சில வடமொழி எழுத்துக்களை நாம் உள்ளீடு செய்யும் வகையில் விசைப்பலகைகளின் அமைப்பு இல்லை. இத்தகைய பிரச்சினைகளை கையாள சில உத்திகள் மென்பொருட்களின் மூலம் செய்யப்படுகின்றன. இத்தகைய மென்பொருட்களின் உதவி இல்லாமல் நம்மால் தமிழில் உள்ளீடு செய்ய முடியாது.
மேலும் அங்கிலத்திற்கு ஒரே உள்ளீட்டு முறைதான் உள்ளது (Typing method). ஆனால் தமிழுக்கு பல்வேறு உள்ளீட்டு முறைகள் (typewriter, typewriter old, phonetic, transliteration, tamilnet99, போன்றவை) உள்ளன. ஒரு முறையில் பழகியவர்களால் வேறு முறைகளில் உள்ளீடு செய்ய முடியாது. ஆகவே இவற்றிற்கு ஏற்ப எழுத்துருக்களை பயன்படுத்துவதற்கு மென்பொருட்கள் உருவாக்கப்படுகின்றன.
இவை தவிர ஆங்கில இலக்கணமும் தமிழ் இலக்கணமும் வேறானவை என்பதால், பிழைதிருத்தி, பக்க வடிவமைப்பு போன்ற தமிழ்சார்ந்த கணினி வேலைகளுக்கென சிறப்பான மென்பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

முடிவாக கூறுமிடத்து எழுத்துரு என்பதும் ஒரு வகையில் ஒரு சிறு மென்பொருள்தான். அதனை நேரடியாக பயன்படுத்துவதில் குறிப்பாக வின்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டங்களில் பயன்படுத்துவதில் உள்ள பல்வேறு சிக்கல்களை திறமையுடன் கையாள்வதற்காகவும், ஆங்கில மொழியில் உள்ளீடு செய்யும் பொழுது அது தரும் மொழிசார்ந்த துணைக்கருவிகளைப் போல் (இலக்கணத் திருத்தி, சொல்திருத்தி, போன்றவை) தமிழுக்கும் உருவாக்கப்பட்டவையே தமிழ் மென்பொருட்களாகும் என இரா. கிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

எழுத்துரு என்றால் என்ன?

ஒரு மொழியில் உள்ள எல்லா எழுத்துக்களையும் விருப்பபட்ட வடிவில் (style, design) வடிவமைத்து, கணினி ஏற்றுக் கொள்ளும் முறையில் உருவாக்கப்பட்ட ஒரு சிறு மென்பொருளாகும். டிரெடில் அச்சுக்கோர்க்கும் முறையில் கூறுவதென்றால் அஞ்சறைப்பெட்டி வடிவத்தில் பல எழுத்துக்களின் பிளாக்குகளை போட்டு வைத்திருக்கும் சட்டகங்களை போன்றதே எழுத்துரு எனப்படுவது.

தொடக்கத்தில் கணினிகள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இயக்கக் கட்டளைகளைக் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், படம் வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என கணினியில் திறமையாக பாவித்துச் சிறப்பாக இயங்குமாறு ஆங்கில மூல மென் பொருள்களை உருவாக்கி செயல்படுத்தி வந்தனர்.இம்மென்பொருள்கள் மக்களின் பல தேவைகளை மிகச் சுலபமாக செய்து முடித்தன
.
ஆதமி மென்பொருள்

ஆங்கில மென்பொருள்போல தமிழிலும் மென்பொருள்கள் உருவாக்கவேண்டுமென பல கணிப்பொறி வல்லுனர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர். அதன் விளைவாக முதலில் கனடாவில் வசிக்கும் திரு.கலாநிதிசீனிவாசன் என்பவரால்1984 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஆதமி தமிழ் மென்பொருளாகும். இதன் மூலம் கணிபொறியில் தமிழில் எழுதி அதனை அச்சுப்பதிவு செய்துகொள்ள முடிந்தது.

மயிலை

இதனைத் தொடர்ந்து1985-ஆம் ஆண்டு சுவட்சர்லாந்தில் உள்ள முனைவர் கு.கல்யாண்சுந்தரம் என்பவரால் உருவமைத்த மயிலை எனும் மென்பொருள் ஆங்கில எழுத்துருக்களைக் கொண்டு உருவமைக்கப்பட்டது. இம்மென்பொருள் ஆங்கில எழுத்தாகிய A-வைத் தட்டினால் அது அ-என்ற தமிழ் எழுத்து தோன்றும் விதமாக உருவாக்கப்பட்டது. இதைபோன்று K-க, O- கொ என உருவாகும் முறையில் அமைந்திருந்தன.




முரசு அஞ்சல்

“தமிழ் மூலம் மின்னஞ்சல்” பிரச்சினைகளுக்குத் தீர்வு முயற்சிகளும் ஆராய்ச்சிகளும் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின. 1986 ஆம் அண்டில் மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால் முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். இதில் எழுத்துரு (font), எழுதி (editor), மின்னஞ்சல் செயலி (e-mail application), விசைப்பலகை (keyboard) என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம் பெற்றிருந்தன. இதன் மூலம், இந்தச் செயலியை நிறுவியுள்ள கணினிகளின் பயனர்களிடையே மின்னஞ்சல் தொடர்பாடல் போன்ற செயல்கள் இலகுவாக்கப்பட்டன.


தமிழ் லேசர்

அமெரிக்காவில் உள்ள பெர்க்லி பல்கலைகழகத் தமிழ்த்துறைப் பேராசிரியர் ஜார்ஜ்.எல்.ஹார்ட் என்பவர் உருவைமைத்த ’தமிழ் லேசர்’(tamil laser) எனும் குறியீட்டு முறையில் அமைந்த மென்பொருளை உருவாக்கியுள்ளார்.

ISCII-83

இந்திய அரசால் நிருவப்பட்ட Centre for Developments for Advanced Computing (CDAC)என்ற அமைப்பால் ISCII-83 என்ற தமிழ் மெபொருள் உருவாக்கப்பட்ட
.
பிற தமிழ் மென்பொருள்கள

அமெரிக்கத் தமிழர் மருத்துவர் பெரியண்ணன் குப்புசாமியால் தொடங்கப்பட்ட அணங்கு,மதுரைத்திட்டக் குழுவினரால் வடிவமைத்த TSCII,கனடாவில் வசிக்கும் தமிழ் ஆர்வலர் திரு.விஜயகுமாரின் சரஸ்வதி போன்ற தமிழ் மென்பொருள்கள் உருவாக்கப்பட்டன.
1990-இல் அமெரிக்கவைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர் T.கோவிந்தராசு என்பவர் உருவமைத்த பல்லாடம், சிங்கப்பூரைச் சார்ந்த தமிழ் பேராசிரியர் நா.கோவிந்தசாமியின் கணியன் போன்ற மென்பொருள்கள் தமிழில் உருவாகி தமிழ் மொழி இணையத்திலும் கணிப்பொறியிலும் வளர்ந்த நிலையில் உள்ளது.

தாரகை

சிங்கப்பூரில் உள்ள ஆர்.கலைமணி என்பவரால் வடிவமைக்கப்பட்டதுதான் தாரகை எழுத்துரு மென்பொருளாகும்
இவைகள் மட்டுமன்றி தமிழகத்தைச் சார்ந்த கணிப்பொறி வல்லுனர்களும் மென்பொருள்களை கண்டுபிடித்துள்ளனர்.
அவர்களில் திரு.செல்லப்பனின் asian printers,க.இளங்கோவனின் CAD Graph, டாக்டர். கூப்பர் modular infotech, திரு துளுக்காணம் அவர்களின் lastech, மா.ஆண்டோபீட்டர் அவர்களின் softview(inscript fonts), திரு.தியாகராசனின் வானவில் போன்றவையும் அடங்கும்
.
இ-கலப்பை

முரசு 2000-த்தை தொடர்ந்து பெங்களூரில் பணியாற்றிவரும் மென்பொருள் தயாரிப்பாளர் திரு.முகுந்தராஜாவின் முயற்சியால் இ-கலப்பை என்னும் மென்பொருள் ஒருங்குறியீட்டில் பயன்படும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.இதில் இ-கலப்பையைக் கணினியில் நிறுவுதல்,தொடர்ந்து யூனிக்கோடு எழுடத்துருக்களை நிறுவுதல் என்ற இரு செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இம்மென்பொருள் உருவாக்கப்பட்டு வெளிவந்தது.



கூகிள் தமிழ் ஒலிமாற்றி மென்பொருள்

கூகிள் தமிழ் ஒலிமாற்றிப் பற்றி அநேகமானவர்கள் அறிந்திருக்கக்கூடும். அதன் பரவிறக்க பதிப்பாக Input Method Editor [IME] என்கிற மென்பொருளை வழங்குகிறது. இதில் தமிழ் மூலபதிப்பை தரவிறக்கி விளக்கம் கூறியப்படி நிருவிக்க் கொள்ளலாம். அதன் பின் வேண்டிய இடங்களில் தமிழில் நேரடியாக தட்டச்சு செய்யலாம் அவை நோட்பேடோ அல்லது MS வேர்டாகவோ இருக்கலாம். தட்டச்சிடும் ரோமன் எழுத்துக்களின்[English] ஒலிகளுக்குத் தகுந்த தமிழ் எழுத்தை தட்டச்சிடும். சொந்த கணினியாக வைத்திருப்பவர்கள் இதை ஒருமுறை பதிப்பதன் மூலம் வலை தளங்கள் முதல் கணினி படங்கள் வரை தமிழில் அடிக்கலாம்.
http://www.google.com/ime/transliteration/

அகபே தமிழ் எழுதி

அகபே தமிழ் எழுதி தமிழில் எளிமையாகத் தட்டச்சு செய்ய உதவும் தமிழ் எழுதி மென்பொருள். இந்த தமிழ் எழுதியை இலவசமாக வலைப்பூக்களிலும், வலைத்தளங்களிலும் நிறுவிக் கொள்ள முடியும்

என்.எச்.எம் மென்பொருள்(new Horizon media)

சென்னையில் உள்ள கிழ்க்குப்பதிப்பக திரு.பத்திரிசேசாத்திரி அவரகளின் முழுமுயற்சியோடு திரு.கே.எஸ்.நாகராஜன் அவர்களால் இம்மென்பொருள் உருவாக்கப்பட்டது.இதுவரை வந்துள்ள தமிழ்ஒருங்குறியீட்டு மென்பொருள்களில் முதன்மையானது என்று கூறலாம்.இதனை இலவசமாக கணிப்பொறியில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.இம்மென்பொருள் தமிழ்மொழித் தவிர பிற இந்திய மொழிகளிலும் பயன்படும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

அழகி மென்பொருள் (azhagi.com/docs.htm)

விஷி (எ) விஸ்வநாதன் தமிழ்க்கணினி உலகிற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் மட்டுமல்ல, அவரிடமிருந்து இளைய தலைமுறை கற்க எவ்வளவோ இருக்கிறது. தன்னை நோக்கிக் காலம் விடும் சவால்களை ஆன்மீகப் பலத்தோடு எதிர்நோக்கி வெற்றியடையும் இவரது மனோதிடம் வியக்கத்தக்கது.இவரது அயராத முயற்சியால் உருவான மென்பொருள்தான் அழகி ஆகும்.
மிகவும் சுலபமான, வேகமான, இடத்திற்கேற்ப மாறி அமையும் (Easy, fast and flexible) ஆங்கிலம்-தமிழ் ஒலியியல் சொல் இணைப்பே (English-to-Tamil Phonetic Key'mappings) அழகியின் தனிச்சிறப்பு* ஆகும். இத்தகைய தனித்தன்மை வாய்ந்த 'ஒலியியல் அமைப்பு' (transliteration scheme) மூலம், உங்கள் தமிழ் தட்டச்சு செயல்திறனை (productivity) அழகி இயல்பாய் அதிகரிக்கிறது (அதாவது, குறைந்த நேரத்தில் நிறைய தட்டச்சு செய்ய உதவுகிறது). உதாரணத்திற்கு, 'ஸ்ரீதர்' என்று தட்டச்சிட sridhar, Srithar, sreedhar, shridhar என்று பல வகைகளில் டைப் செய்யலாம் (flexible transliteration). 'நீங்க', 'விஸ்வம்', 'நன்றி', 'கஸ்தூரி', 'பொய்', 'மஞ்சு', 'கற்று' என்று தட்டச்சிட neenga, viswam, nandri, kasthoori, poi, manju, katru என்று அப்படியே இயல்பாக டைப் செய்திடலாம் (easy, natural, intuitive and straightforward transliteration).
ஒலியியல் முறையில், தமிழில் மட்டுமல்லாது, பிற இந்திய மொழிகளான ஹிந்தி (சம்ஸ்கிருதம், மராத்தி, கொங்கனி, ..., ...), தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, பெங்காலி (வங்காளம்), பஞ்சாபி, ஒரியா, அசாமீஸ் முதலியவற்றிலும் தட்டச்சு செய்ய வல்லது.

செல்லினம் மென்பொருள்

என்பது ஒருங்குறியைப் பயன்படுத்தி செல்பேசிகளில் தமிழ் குறுஞ் செய்திகளை அனுப்பும் மென்பொருளாகும். இம்மென்பொருளை மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தலைமையிலான முரசு நிறுவனம் உருவாக்கிதைப்பொங்கற் திருநாளான ஜனவரி 15, 2005 முதல் சிங்கப்பூரில் அறிமுகமாக வணிகப்பயன்பாட்டுக்காக வெளியிடபட்டது.
சர்மா சொற்பிழைச்சுட்டி மென்பொருள் (http://sarma.co.in/tamil/index.htm)
சொற்பிழைச் சுட்டிக்கான இம்மென்பொருட்கள் சொற்களின் எழுத்துப் பிழைகளை மட்டும் சுட்டுவதாக அமைந்துள்ளன.
சொற்பிழைச்சுட்டி மென்பொருள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மென்பொருட்களிள் 35 வகையான (பட்டியலிலுள்ள, Unicode) எழுத்துருக்களையும் தானாகவே இனம் கண்டு சொற்பிழைகளைக் கண்டறிந்து மைக்ரோசாப்ட் வேர்டு மென்பொருளில் உள்ளவாறு (English spell checking) தவறான வார்த்தைகளின் அடியில் சிவப்பு நிறத்தில் அடிக்கோடிட்டிடும். எனவே பயனாளர் குறிப்பிட்ட எழுத்துருவில் மட்டுமே உள்ளீடு செய்ய வேண்டுமென்ற அவசியமில்லை. ஆங்கிலம், தமிழ் இரண்டு உள்ளீடுகளையும் இனம் கண்டு தானாகவே சொற்பிழைகளைக் கண்டறியும்.









Tuesday, October 25, 2011

தீபத்திருநாள் வாழ்த்துகள்

|0 comments
நல்லதை எண்ணவோம்
நல்லவை நடக்கும்.

தீபத்திருநாளில் உலகத் தமிழ் மக்கள் அனைவருக்கும்
என் இதயம் கனிந்த தீபத்திருநாள் வாழ்த்துகள்...








அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.




Saturday, October 1, 2011

சங்க இலக்கியப் புலவர்களின் மன ஆளுமைகள்

|2 comments



உலக இலக்கியங்களில் செம்மொழி இலக்கிய வரிசையில் தமிழ்மொழியும் ஒன்று. இத்தகு சிறப்பு வாய்ந்த மொழியில் எண்ணிலடங்கா இலக்கியங்கள் குவிந்து கிடக்கின்றன. உலகமொழிகளில் எத்தனையோ மொழி இலக்கிய வரலாற்றைப் படித்துள்ளேன். அனால் தமிழில் புறநானூற்றில் இருக்கும் வரலாற்றுச் செய்தியைப் போல வேறு எந்தமொழி இலக்கியத்திலும் காணக்கிடைக்கவில்லை என்று பெர்க்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் ஜார்ஜ்.எல்.ஹார்ட் குறிப்பிடுவதன் மூலம் உலக அளவில் தமிழ்மொழி பெற்றுள்ள செல்வாக்கினை நாம் நன்கு உணரலாம்.
நமது இலக்கிய வரலாற்றில் சங்க இலக்கியத்தை மூன்று பெரும்பிரிவாகப் பிரித்துள்ளார்கள். அவை முதல்,இடை,கடை என்பவயைகும்.இச்சங்கங்களில் உருவாகிய நூல்களின் எண்ணிக்கைக் கணக்கிட இயலாதது.இத்தகு சிறப்புப் பெற்ற தமிழ் மொழியில் இலக்கியப் பாடல்கள் பல புலவர்களால் பல காலக்கட்டத்தில் பாடப்பெற்றவையாகும். இவ் இலக்கியங்களில் பொதிந்துள்ள் கருத்துக்கள் மிக அதிகம். மனித வாழ்வு, உலகப் பண்பாடு, தமிழ் கலாச்சாரம், மனிதனின் தேவை, ஒழுக்க நெறி என பரப்பு விரிகின்றன.இருந்தாலும் சங்க இலக்கியப் புலவர்களின் மன ஆளுமைக்கோட்பாடுகள் என்ற தலைப்பில் இக்கட்டுரை விரிகிறது.

சங்கைலக்கியப் புலவர்களின் எண்ணிக்கை.

சங்ககாலம் என்பது சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் எனலாம். இச்சங்ககாலங்களில் மூன்று சங்களிலும் புலவர்களால் பாடப்பெற்ற தொகுப்பு நூல்கள் உள்ளன. இவைகளில்
முதல் சங்கத்தில் 4449 புலவர்களும்
இடைச்சங்கத்தில் 3700 புலவர்களும்
கடைச்சங்கத்தில் 449 புலவர்களும்
இருந்துள்ளனர் என்று இலக்கிய வரலாறு கூறுகிறது.
மொத்தம் 8598 புலவர்கள் சங்க இலக்கியத்தைப் பாடியுள்ளதாக வரலாறு உள்ளது.
இவற்றில் பாடிய புலவர்கள் பல இனக்குழுவைச் சார்ந்தவர்கள். இவர்களின் மனநிலை ஒவ்வொருவருக்கும் வேறுப்பட்டு இருந்திருக்க வேண்டும். இருந்தாலும் சொல்ல வந்த கருத்தை உலக மக்கள் அனைவருக்கும் பொதுவாக
கூறியுள்ளனர். இவர்களின் மன அளுமை எவ்வாறு இருந்திருக்கும். புலவர்கள் மக்களையும் ,அரசனையும் ,இயற்கையையும், காதல் வீரம் ,கொடை என பாடல்களில் பதிவு செய்துள்ளனர்.இவர்களின் மன ஆளுமையைக் கண்டு வியக்கதாவர்கள் இல்லை.

மனம்

மனம் என்பது, சிந்தனை, நோக்கு, உணர்ச்சி, மன உறுதி, கற்பனை போன்றவற்றில் வெளிப்படுகின்ற அறிவு (intellect) மற்றும் உணர்வுநிலை சார்ந்த அம்சங்களின் தொகுப்பைக் குறிக்கிறது.

சிந்தனை

சிந்தித்தல் அல்லது சிந்தனை சிந்தை அல்லது மூளையில் முதன்மையாக இடம்பெறும் ஒரு அடிப்படைச் செயற்பாடு. ஆங்கிலத்தில் இதை ஒரு cognitive process (அறிதிறன் வழிமுறை) என்று கூறுவர். சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது எண்ணங்கள் பெறப்படுகின்றன. இந்த எண்ணங்கள் மொழி, கணிதம், ஓவியம், இசை, கலைப்பொருட்கள், மனித செயற்பாடுகள் என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன.
சிந்தித்தலின் உயர்வே கணியன் பூங்குன்றனின் உலகப்பார்வையைச் சற்று உயர்வாக எண்ணத் தூண்டுகிறது. மேலும் அவரது மன அளுமையையும் இப்பாடல் வெளிக்காட்டிகிறது.இன்றைய உலகம் சுயநலம் மிக்க மனிதர்கள நிறைந்ததாகும்.இந்த உலகத்தில் சுயநலம் சிறிதும் இல்லாத மனிதர்களின் மேன்மைப் பண்பினை இப்பாடல் விளக்குகிறது.இந்த உலகம் ஏன் இன்றளவும் நிலைப்பெற்றிருக்கிறது?என்ற வினாவை எழுப்பிக்கொண்டு இவவாசிரியர் விடை கூறுகிறார். தேவர்கள் அருந்தக்கூடிய அமிழ்தம் கிடைத்தபோதும் தனக்கு மட்டும் உரியது என்று தனித்து உண்ணாமல் மனிதர்கள் உள்ளத்தால் இந்த உலகம் இன்றளவும் திகழ்கிறது. சினப்பண்பு சிறிதும் இல்லாதவர்கள், சோர்வடையாதவர்கள்,மற்றவர்களின் கருத்துக்களுடன் இயைந்து செல்பவர்கள்,புகழுக்காக உயிரயையும் தரத் தயங்காதவரகள், தமக்கு என எதனையும் பெற முயற்சி செய்யாதவார்கள், பிறருக்காகவே எப்போதும் முயற்சி செய்து உழைப்பவர்கள் போன்றன் மனிதர்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இன்றளவும் நிலைப்பெற்று உள்ளது என்ற சிந்தனையை கூறியுள்ளார். மேலும் மனித உள்ளத்தினை மேம்பாடடையச் செய்யக்கூடிய கருத்ஹ்டுக்களைக் கொண்ட பாடல்.
தீமையும் நல்லதும் அவரவரின் மனதைப்பொறுத்தது. அது மற்றவர்களால் நிகழக்கூடியது அல்ல என்கிறார்

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தரவாரா
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்




இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண் துளி தலை இ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப்படூஉம் புணை போல், ஆர் உயிர்
முறை வழிப்படூஉம்' என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே(புறம்.192)

தெளிந்த மன சிந்தனையுடையோரால் மட்டுமே இதுபோன்ற மன ஆளுமைச் செய்திகளை கூறச்செல்லமுடியும். எனவே தெளிந்த மனசிந்தனை வேண்டும்.
தன்னை ஆளுகின்றவன் எவனோ அவனால்தான் நல்ல சிந்தனைப் பிறக்கும் அப்பொழுதுதான் உலகை ஆளுகின்ற சக்தியைப் அவனால் பெறமுடியும்.
இதைப்போன்றே
“பெருமைக்கு மேனைச் சிறுமைக்குந்தத்தங், கருமமே கட்டளைக் கல்” (குறள், 505)
என்ற;உலக ஆசான் வள்ளுவன் கூறியிருக்கிறார்.அவனவன் செய்கின்றே செயலே அவனை நல்லவனாக உயர்த்துகின்றது என்ற மன் ஆளூமையை வெளிப்படுத்தியுளார்.
மேளும் தம் ஆளுமைப்பன்மை அவ்வையார் குறிப்பிடும்போது எந்த நிலமாக இருந்தாலும் அந்த நிலத்தில் நல்ல ஆடவர்கள் இருந்தால் அநிலம் வளமையடையும் என்ற உயரிய சிந்தனையை தன் ஆலுமையின் மூலம் எடுத்துக்காட்டுகிறார்

நாடா கொன்றோ; காடா கொன்றோ;
அவலா கொன்றோ; மிசையா கொன்றோ;
எவ் வழி நல்லவர் ஆடவர்,
அவ் வழி நல்லை; வாழிய நிலனே!.(புறம் 187)

நோக்கு(க்கம்)

மன ஆளுமைக்கு அடுத்த சிறப்பு என்று கூறுவோமானால் நோக்கம் நல்லவையாக அமைந்திருக்க வேண்டும்.அரசன் சட்டம் இயற்றலாம். அது மக்களுக்குப் பயன்படும் விதத்தில் அமைய வேண்டும். அதைவிடுத்து மக்களை துன்பப்படுத்தும் விதமாக இருத்தல் கூடாது. மன்னன் ஒருவன் வரி வசூல் செய்ய படைவீரர்களை அனுப்பி வைக்கின்றான். அதிகமான வரியை மக்களுக்கு விதிக்கின்றான். இதனைக்கண்டு மக்கள் மனதை நன்கு அறிந்த புலவர் மன்னனுக்குத் தன் அறிவுரையாகவும், மன ஆளுமையை
காய்நெல் லறுத்துக் கவளங் கொளினே
……… ……… ……… ……….. ……… ………. ……… ……… …….. ………. ….
யானை புக்க புலம்போலத்
தானு முண்ணா உலகமொங் கெடுமே (புறம்-184)
என்று பாண்டியன் அறிவுடைநம்பிக்கு மக்களிடம் எவ்வாறு வரிவசூல் செய்ய வேண்டும் என்று பிசிராந்தையார் தரும் உலக நோக்கு கருத்தைக் மன்னனுக்குத் தெளிவுபடுத்தும் காட்சி.இது இன்றளவிலும் நடைமுறையில் உள்ளது. உலக நாடுகள் பல இன்று பொருளாதரத்தில் சிக்கித் தவிக்கும் சூழல் நமக்கு நன்றாகத் தெரியும்.

உணர்ச்சி

மனிதர் உணரும் சிந்தனை அல்லது மன அல்லது உடல் நிலைகளை உணர்ச்சி (Emotion) எனலாம்.இலக்கியம் உணர்ச்சிகளின் விளையாட்டுக் களம் என்பதுஅனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட பேறுண்மை.
மனித உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிகளைப் பல இடங்களில் பல புலவர்கள் மன ஆளுமையாகப் பதிவு செய்துள்ளனர். பல மன்னர்களின் இறப்பை ஏற்றுக்கொள்ளாத புலவர்கள் கையறுநிலைப்பாடல்களாகப் பாடியுள்ளனர்.நம்மி நெடுஞ்செழியன் இறப்பை பேரெயின் முறுவலார் என்ற புலவர் தன் மன உணர்ச்சியின் பிழிவாகப் (புறம்-239) பாடியுள்ளார். கபிலர் பாரி மறைந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளாமல் வருந்திப்பாடிகிறார். ஒல்லையூர்கிழான் மகன் பெருஞ்சாத்தனைக் குடவாயிற் கீர்த்தனார் பாடிய பாடல்

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கி
பாணன் சூடான் பாடினி அணியாள்
ஆன்மை தோன்ற ஆடவர்க் கடந்த
வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே. (புறம் -242)
மன்னன் இறந்தபோது அவனது இறப்பை ஏற்றுக்கொள்ளாமல் மங்கலப் பொருளான மலரை-முல்லை மலரை எவரும் அணிய முன்வரவில்லை. மக்கள் இவ்வாறுகொடிய அவலத்தில் இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க இயற்கைப் பொருள்களான மலைக்கும்,நதிக்கும், மலருக்கும் செடிக்கும் என்ன தெரியும்? மலர் இயல்பாக பூக்கிறது, தென்றல் இயல்பாக வீசுகிறது, மரங்கள் இயல்பாக அசைகின்றன.இயற்கையின் இயல்பான செயல்கள் கூட மன்னனை இழந்தும் வருந்தும் குடிமக்களுக்குத் துன்பத்தைத் தருகின்றன என்று உணர்ச்சியின் உச்சக்கட்டமாக முல்லைப்பூவைப் பார்த்து கேட்கும் புலவனின் மன நிலையை நாம் என்னவென்று கூறுவது.இது புலவனின் மன ஆளுமைக்கு ஓர் எடுத்துக்காட்டாகும்
.
மன உறுதி..

ஒரு செயலை செய்துமுடிக்க மன உறுதி மிக அவசியம். இது மன ஆளுமைக்கு அடுத்த அறன். மனம் ஒரு குரங்கு என்பர் ஒரு இடத்தில் நிலையாக நிற்காது. அதனை நிலை நிறுத்தியவர்கள் வாழ்வில் பல முன்னேற்றேங்களை அடைந்துள்ளனர்.பெருஞ்சாத்தன்
என்ற புலவர் வெளிமான் துஞ்சுவான் தம்பியிடம் சென்று பாடிவிட்டு பரிசில் கேட்கிறார். அவன் சிறிது கொடுக்க அதனை வாங்காது சூழுரை செய்கின்றான். உனது பரிசிலை நீயே வைத்துக்கொள். இதனைவிட அதிகமாக பரிசிலைப்பெற்று நான் மீண்டுவருவேன்.
அவ்வாறு கூறீயப்படியே பெருஞ்சாத்தன் குமணனைப்பாடிப் பரிசில் பெற்று வருகின்றான். வந்தவன் வெளிமான் துஞ்சுவான் தம்பியிடம் சென்று இதோ நான் உனக்குத் தரும் மிக உயர்ந்த பரிசாக இந்த யானையை வைத்துக்கொள் என்று அவனது கடிமரத்தில் யானையைக் கட்டிவைத்துவிட்டு திரும்புகின்றான். இது பெருஞ்சித்திரனாரின் மன உறுதியை வெளிப்படுத்தி நிற்கிறது.
இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க்
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடு நல் யானை எம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே. (புறம்-162)


இதுபோன்றே அவ்வையார் அதியமான் நெடுமான் அஞ்சி பரிசிலை காலம் தாழ்ந்து கொடுத்தான் என்ற காரணத்திற்காகப் பரிசிலைப் பெற்றுக்கொள்ளாமல் திரும்புகிறார். அப்பொழுது எமக்கு எந்த திசைக்கு சென்றாலும் பரிசிலும் உணவும் கிடைக்கும் என்று கூறி செல்கிறார். இச்செயல் அவரின் மன உறுதியைக் காட்டுகிறது.
எத்திசைச் செலினு மத்திசைச் சோறே.(புறம் 206)
கற்பனை
கற்பனை மனிதனுக்கு இயல்பாகவே வாய்ந்த ஒரு அணிகலன். அது மனிதனிடம் செயற்கையாக உருவாக்கப்படவில்லை. கற்பனை மனிதனின் எண்ணங்களைச் செதுக்குகிறது.
மனிதனிடம் இயல்பாக புதைந்து கிடக்கின்ற கனவு காணூம் பன்புதான் கற்பனைக்கு அடிப்படை. கனவு கற்பனை இரண்டுமே நிகழ்காலத்தில் மனிதனுக்கு ஏற்படும் சொல்ல முடியாதா துன்பங்களிலிருந்து விடுதலை தருகிறது.இத்தகைய கற்பனையை சங்கப் புலவர்கள் மன ஆளுமையை வெளிப்படுத்தும் விதமாக பாடியுள்ளார்கள்.
பாலைப் பாடிய பெருங்கடுங்கோ பாலை நிலத்தில் நடந்துசெல்லும் தலைவனும் தலைவியும் காணும் நிகழ்வுகளை ஆசிரியர் தனது கற்பனைத் திறத்தினால் வெளிப்படுத்துகிறார். ஆண் மானின் நிழலில் பெண் மான் படுத்துறங்கும் நிகழ்வைக்காட்டி தலைவனின் நிழலில் தலைவி ஓய்வு எடுக்கும் அன்பினைக் காட்டுகிறார்.
குறுந்தொகையில் தேவகுலத்தார் என்னும் புலவர் காதலை இயற்கையோடும், நிலத்தைவிட பெரியது வானத்தைவிட உயரமானது,கடலைவிட ஆழமானது என காதலை உயர்வாகத் தன்கற்பனைத்திறத்தினால் செதிக்கியுள்ளார். இது புலவனின் மன ஆளுமைக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே; சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே."(குறு-3)

இவ்வாறாக சங்க இலக்கியப்புலவர்கள் மன் ஆளுமைக்கருத்துக்களை உலகிற்கு வழங்கியுள்ளனர் மனம் நல்லவையாக இருந்தால் செயல் நல்லவயாக அமையும். இதனை சங்க இலக்கியப்புலவர்களின் பாடல்கள் வழியாக நாம் கண்டுகொள்ளமுடிகின்றது
.
கட்டுரைக்குப் பயன்பட்ட நூல்கள்

1.புறநானூறு மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதர்
2.கலித்தொகை, சக்திதாசன் சுப்பிரமணியம்.
3.குறுந்தொகை மூலம்,
4.www.wikipedia.org
5.www.tamilvu.org















































.






Saturday, September 17, 2011

திரு.பாலகுருசாமியும் பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியும்(இனாம்குளத்தூர்)

|4 comments
பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரியில்(இனாம்குளத்தூர்) அண்ணாப் பல்கலைக்கழக மேணான் துணைவேந்தரும்,தமிழகத் திட்டக்குழு உறுப்பினருமான திரு.பாலகுருசாமி அவர்கள் சிறப்பு விருந்தனராக கலந்துகொண்டார்.அவரை பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் திருமதி கே.மீனா அவர்கள் வரவேற்றார். திரு பலகுருசாமி மாணவர்களிடம் உரைநிகழ்த்தும்போது நல்ல முறையில் மாணவர்களாகிய நீங்கள் படிக்கவேண்டும். இன்றைய அறிவியல் காலக்கட்டத்தோடு இணைந்து பாடங்களைப் பயிலவேண்டும் என்றார். மேலும் இக்கல்லூரியில் மூன்றாண்டு பட்டப்படிப்பின் இறுதியில் முதல் இடம் பிடித்த மாணவ மாண்வியருக்கு 25000 பணமுடிப்பு எனது சொந்த செலவிலிருந்து வழங்கப்ப்டும் என்று மாணவர்களிடம் கூறினார். இது மாணவ மாணவிகளிடம் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கியுள்ளன
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் சிறப்பு விருந்தினரை வரவேற்றல்.அருகில் பாரதிதாசன் பல்கைக்கழகத் தொலைதூர கல்வி மையத்தின் இயக்குநர் முனைவர் அறுமுகம். . அதனைத் தொடர்ந்து பாரதிதாசன் பலகலைக்கழக துணைவேந்தர் அவர்கள் உரை நிகழ்த்தினார். மாணவ மாணவியர்கள் கணிப்பொறி அறிவை நன்கு வளர்த்துக்கொள்ள வேண்டும். இன்று அனைத்துத் துறைகளிலும் கணினிப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன்.எனவே உங்கள் படிப்பு எதிர்கால தேவையைப் பூர்த்தி செய்யும் வண்ணம் அமைய வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரைக் கூறினார்.
சிறப்பு விருந்தினர் தமிழகத் திட்டக்குழு உறுப்பினரும் துணைவேந்தருமான திரு.குருசாமி அவர்கள் மாணவ மாணவியர்களுடன் கலந்துரையாடியது.
துணைவேந்தர் கே.மீனா அவர்கள் உரை நிகழ்த்திய காட்சி.

Saturday, September 3, 2011

இணையமும் தமிழும் நூல் பார்வை

|0 comments

பேரன்புடையீர் வணக்கம்.
தங்களது இணையமும் தமிழும் என்ற தலைப்பிலான நூலை வாசித்தேன்.
காலத்திற்கு ஏற்ற நூலைச் செதுக்கித்தந்துள்ள தங்களுக்கு மனமுவந்த பாராட்டுக்கள்.
இயல்களும் நன்கு வடிவமைக்கப்பட்டுள்ளன.நிறைவுப்பகுதியில் உள்ள இணையத்தமிழ் இதழ்களின் முகவரிகள் பயன்பல தரும்.புரவலர் கணிப்பொறி (server computer)என்ற சொற்றொடர் புதுமையானது.குலோத்துங்கன் கவிதை இயலினூடே மின்னுகிறது. அதிக இணையப்பக்கங்களை ஆங்கிலத்திற்கு அடுத்து தமிழ் பெற்றுள்ள செய்தியும், இணையக்கல்வி முயல்வுகள் பற்றிய(பக்.45-47)செய்திகளும் படிப்பாருக்கும் உதவும்.இன்னும் நிறைய எழுத வாழ்த்துக்கள்.
நன்றிகள் பல, வணக்கம்.

அன்புடன்
முனைவர் அ.அறிவுநம்மி
முதன்மையர்
சுப்பிரமணிய பாரதியார் பல்கலைக்கழகம்
புதுச்சேரி-605014


அன்பர் சீராசை சேதுபாலா அவர்கள் அவரது வலைப்பூவில் இணையமும் தமிழும் நூல் பற்றி எழுதியுள்ள மதிப்புரையும் கீழே உள்ளன.

முனைவர் துரை மணீகண்டன் எழுதிய இணையமும் தமிழும் புத்தகம், சென்னை-17-ல் 17/3சி மேட்லி சாலயிலிருந்து வெளியிடப் பட்டுள்ளதைப் பார்த்து வியப்படைந்தேன்.

லேனா தமிழ்வாணன் கண்ணில் படாமல் போன தலைப்பு என வியந்தேன். திருச்சிக்காரரின் துணிச்சல் பாரட்டத்தக்கது.

இணயம் ஓர் அறிமுகம், இணயத்தின் வரலாறு, இணய்த்தில் தமிழ், இணயம் தொடர்பான மாநாடுகள்-கருத்தரங்குகள், இணயத்தில் தமிழில் பயன்பாடு, இணயத்தில் தமிழ்க்கல்வி, இணையத்தில் தமிழ் மின் இதழ்கள், இணயத்தில் தமிழ் மின் நூலகம், இணயம் வழி கணினி ஆய்வுகள் என்று ஆரம்பப் பள்ளி மாணவன் கூடப் புரிந்துகொள்ளுமாறு விளக்கமாக எழுதியுள்ளார்.

இணய அகராதி குறித்த விள்க்கம் சற்றுச் சிந்திக்கத் தக்கது. விக்கி பீடியாவை கட்டற்ற களஞ்சியம் என்று மொழியாக்கம் செய்துதான் தீர வேண்டுமா? லாரி, கார், மோட்டார், ரெயில், போன்று மக்கள் மத்தியில் பழ்க்கமாகிவிட்ட சொற்களுக்குப் புதிய தமிழ்ச் சொற்களைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்ல்லை என்ற டாக்டர்.மு.வரதராசனார் காட்டிய வ்ழியைப் பின்பற்றினால் நன்றாக இருக்குமே?

சுமார் 150 இணையத் தமிழ் இத்ழ்களின் முகவரியைத் தேடித்தந்திருப்பது நல்ல சாதனை!

18 தமிழ் கணிமை நிறுவனங்களச் சுட்டியுள்ளார். இலவசங்களாகத் தருவதையும், விலைக்கு விற்பதையும் பிரித்துக் காட்டியிருக்கலாம்.

பல்கலைத்த் தளங்கள், தமிழ் இணைய நூலகங்கள், தமிழ் கணிமச் சுவடிகள், ஆய்வுக் கட்டுரை, சிறு விளக்கங்கள் கொடுத்திருந்தால் என் போன்று துவக்க நிலையில் இருப்போருக்கு பேருதவியாய் அமைந்திருக்கும்.

தமிழ் இணைய வானொலி நிறைய விடுபட்டுள்ளன். அதற்கென்றெ தனி இதழ் வருகின்றது. ஆசிரியரும் அமிஞ்சிக்கரையிதான் உள்ளார். இந்த் வலைப்பூவில் தேடினாலே கிடைக்கும் குறைவாகக் கூறவில்லை. அடுத்த நூலில் சேர்த்துக் கொள்ளலாம்.

worldtamilnews.com உலகின் முதல் தமிழ் இணைய வானொலி முகவரி சென்னை எழும்பூரிலிருந்து 8 ஆம் வ்குப்பு மட்டுமே படித்த vkt பாலன் அவர்களால் நடத்தப் படுகின்றது.9841078674

தமிழ் இணய்தளத் தேடும் எந்திர முகவரி எனக்குப் புதிய தகவல்.


நல்ல புதிய முயற்சிக்கு முனைவர். துரை மணிகண்டனுக்கு வாழ்துக்க்கள்!.

அன்புடன்
சீராசை சேதுபாலா
http://rssairam.blogspot.com/

Thursday, September 1, 2011

தமிழ் மின்னியல் நூலகம் (Digital Library)

|0 comments


பல பொருள் விரிந்த கருத்துக்களை ஒருங்கே சுருக்கிக் கூற எழுந்ததுதான் வெண்பாவும், ஆசிரியப்பாவும் ஆகும். அதைப் போன்று தமிழ் நூல்கள் அனைத்தையும் ஒருங்கே தொகுத்துத் தருவதுதான் தமிழ் மின்னியல் நூலகம் மற்றும் இணைய நூலகம் ஆகும். “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற பவனந்தி முனிவரின் கருத்திற்கேற்ப ஒரு காலத்தில் கருத்துக்களைக் கருவாக சுமந்தது ஓலைச்சுவடிகள். காலமாற்றத்தின் சூழலுக்கேற்ப அச்சு இயந்திரம் காகிதமாகின. பின்பு நூல்களைத் தொகுத்து வெளியிட அல்லது பாதுகாப்பாக படிக்க ஒரு நூலகம். அவ்வாறு பாதுகாத்து வைத்த நூல்களை, நூலகம் சென்று படிக்கும் ஆர்வம் சற்று குறைந்து வரும் இக்காலத்தில் இணையத்தில் பல மின்னியல் நூலகம் உருவாகி வருகின்றன. இந்த மாற்றம் நிகழ்கால எதிர்கால அறிவு வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரியக் கூடும்.

மின்னியல் நூலகம்

“மின்னியல் நூலகம் என்பது, தற்போது வழக்கில் உள்ள அச்சு வடிவம் அல்லது மைக்ரோபிலிம் (Micro Film)வடிவத்தில் உள்ள புத்தகங்களை அல்லது அவற்றுள் ஒரு பகுதியை மாற்று வழியாகவோ, மறு பிரதியாகவோ, துணைப் பொருளாகவோ மின்னியல் வடிவில் பாதுகாத்து வைக்கும் நூலகமாகும்” என்று மலேசியாவைச் சேர்ந்த எஸ். இளங்குமரன் என்பவர் விளக்கம் தந்துள்ளார். இவையன்று பெரிய நூல்களையும் அதிகப் பக்கங்களைக் கொண்ட நூல்களையும் ஒளி அச்சு முறையில் எடுத்தும் மின்னியல் நூலகத்தில் சேர்த்துள்ளார். மின்னியல் நூலகத்தில் அதிகமான தமிழ் நூல்களே மின்பதிப்பாக்கம் பெற்றுள்ளன என்பது நமக்கெல்லாம் பெருமையாகும்

உலக மின்னியல் நூலகம்

உலக மின்னியல் நூலகம் என்பது, UNESCO மற்றும் அமெரிக்க காங்கிரஸ் நூலகம் இணைந்து வழிநடத்தும் அனைத்துலக மின்னியல் நூலகமாகும். இதன் பயனாக

1. அனைத்துலக மற்றும் பல்வேறு கலாச்சாரப் புரிந்துணர்வை வெளிப்படுத்துதல்.
2. கலாச்சாரம் சார்ந்த தகவல்களை இணையத்தில் அதிகரித்தல்.
3. கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்குவதோடு இணை இயக்கங்களின் தரத்தை மேம்படுத்தி, நாடுகளுக்கு இடையிலான தொழில் நுட்பப் பிரிவினைகளைக் குறைத்தல்.
4. இலவசப் பன்மொழி வடிவிலான உலகளாவிய கலாச்சாரத்தின் முக்கியத் தகவல்களான எழுத்து வடிவம், வரைபடம், அரிதான நூல்கள், இசை, பதிவுகள், திரைப்படங்கள், அச்சுகள், புகைப்படங்கள், கட்டடக்கலை வரைபடங்கள், முக்கியத்துவம் வாய்ந்த கலாச்சார பதிவுகள் போன்றவற்றை இணையத்தில் கிடைக்க வழி செய்தல் போன்றவையாகும்.

உலக மின்னியல் நூலகத்திற்கு உலகளாவிய அளவில் 30 - மேற்பட்ட தேசிய நூலகங்களோடும், கல்வி நூலகங்களோடும் ஒப்பந்த இணைப்பும் உள்ளன. இவையன்றி உலக மைய நூலகத்தில் (Center for Research Libraries an International Consortium of University, College and Independent Research Libraries) http://catalog .crl.edu/171 -நாடுகளிலுள்ள 72,000 நூலகங்களை இணைத்து உலக மக்களுக்கு வழங்கி வருகிறது என்று முனைவர் கு. கல்யாணசுந்தரம் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் மின்னியல் நூலகம்

உலக மொழிகளில் கணிப்பொறியையும் இணையத்தையும் அதிகமாகப் பயன்படுத்தும் மொழிகளில் செம்மொழித் தமிழும் ஒன்று. இன்று இணையத்தில் மின்னியல் நூலகம் உருவாக்கி அதனை வெளியிட்டு உலகத் தமிழ் மக்களுக்கும் பிற மொழியாளர்களுக்கும் முன்னோடியாகத் திகழ்வது தமிழ் மொழியாகும். அந்த வகையில் தமிழ் மின்னியல் நூலகம் இணையத்தில் பரவலாக இடம்பெற்றுள்ளன.

ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்

தமிழ் மொழி ஆராய்ச்சிக்கென்று சிகாகோ பல்கலைக்கழகத்தால் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் என்ற பெயரில் 1994-ல் தொடங்கினர். இதில் பலதரப்பட்ட தமிழ் நூல்கள், இதழ்கள், தமிழ்க் கட்டுரைகள் முதலானவைகளைத் தொகுத்துத் தந்துள்ளனர். இந்த ஆராய்ச்சி நூலகத்தில் ஒரு லட்சத்திற்கும் மேலான நூல்கள் இடம் பெற்றுள்ளன. நூலாசிரியர், நூலின் தலைப்பு, நூல் வெளிவந்த ஆண்டு போன்றவைகளில் செய்திகள் இடம் பெற்றுள்ளன. இஃது இணையத்தில் 1996 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நூலகத்தின் மூலம் உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் விரைவாக நூல்களைத் தேடிக் கண்டுபிடித்து விடுகின்றனர். முக்கியமான, அரிய நூல்களும் இந்நூலகத்தில் இடம் பெற்றிருப்பது தமிழ் ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுடையதாக அமைந்துள்ளது.

மதுரைத் திட்டம் (Project Madurai)

உலகில் வாழும் 12 கோடி தமிழர்களையும் இணையம் வழி ஒன்று கூடி தமிழ் இலக்கியங்களை மின் பதிப்புகளாக உருவாக்கி அவற்றை இணையம் வழியே வெளியிட்டது இம் மதுரைத் திட்டம். இதனால் உலகெங்கிலும் உள்ள தமிழர்களும் தமிழார்வலர்களும் இலவசமாக நூல்களைப் பெற வசதி செய்யும் ஒரு தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டமே மதுரைத் திட்டமாகும். கே. கல்யாணசுந்தரம், முனைவர் பி. குமார் மல்லிகாருசுணன் என்ற இருவரால் 1998ஆம் ஆண்டு தமிழர் திருநாளன்று தொடங்கப்பட்டது.

மதுரைத் திட்டம் நூலகமானது எவ்வித எதிர்பார்ப்புமின்றி தமிழ் அறிஞர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் தொடங்கப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது. தொடக்க காலத்தில் இணைமதி, மயிலை போன்ற எழுத்துருக்களில் இயங்கிய இந்நூலகம் பின் திங்கியில் செயல்பட்டு வந்துள்ளது. 2003-லிருந்து ஒருங்குறி எழுத்துருவில் இயங்கி வருகிறது.

இந்நூலகத்தில் திருக்குறள், ஔவையார் பாடல்கள் அனைத்தும் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை (நெடுநல்வாடை, திருவாசகம், திருமந்திரம், நாலாயிர திவ்வியப்பிரபந்தம், கல்வெட்டுப் பாடல்கள், பாரதியார், வைரமுத்து கவிதைகள் படைப்புகள், உரைநூல்கள்) சுமார் 350லிருந்து 450 நூல்கள் இடம்பெற்றுள்ளன.

இத்திட்டத்தின் சிறப்பு கூறுகள் யாதெனில் யார் வேண்டுமானாலும் தமிழ் இலக்கியங்களை மின்பதிப்புச் செய்து இவர்களின் அனுமதியோடு அம்மின்தொகுப்பில் சேர்த்துக் கொள்ளலாம். இவையல்லாமல் இத்தொகுப்பில் உள்ள அனைத்து நூல்களும் ஒருங்குறியில் கிடைப்பதால் எழுத்துருப் பிரச்சனை என்பது இல்லை. மதுரைத் திட்டம் அமெரிக்கா, கனடா, இந்தியா, இலங்கை, சுவிட்சர்லாந்து, தென்கொரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் கூட்டு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றது. தற்போது நூலகம் தமிழ்.நெட் இணையதளத்துடன் இணைந்து செயல்படுகிறது.

தமிழ் இணையக் கல்விக்குழுமம்
உலகு தழுவிய தமிழர்களின் அக்கறையினால் 17.02.2001 அன்று தமிழ் இணையப் பல்கலைக்கழகம் தோற்றம் பெற்றது. இது பல நாட்டு மாணவர்கள் தமிழ்மொழியைப் பயிலும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இவற்றில் மின்நூலகம் என்ற பகுதியில் தமிழ் நூல்கள் மட்டுமின்றி தமிழ் நூல்களின் ரோமன் வடிவம், அகராதிகள், கலைக்களஞ்சியம், கலைச்சொல் தொகுப்புகள், சுவடிக் காட்சியகங்கள், பண்பாட்டுக் காட்சியகங்கள், பயணியர் போன்ற உட்தலைப்புகளில் இடம்பெற்றுள்ளன.

இந்நூலகத்தில் இலக்கண நூல்கள், சங்க இலக்கியங்கள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், நீதிநெறி நூல்கள், சித்தர் இலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கியங்கள், தமிழ் உரைநடை நூல்கள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. இன்று கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் பரவலாக இந்நூலகத்தைப் பயன்படுத்தியே ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கின்றனர். அனைத்து நூல்களும் இந்நூலகத்தில் இடம்பெற்றுள்ளன.

சிறப்புக் கூறுகள்

பிற மின்நூலகத்ததை விட தமிழ் இணையக் கல்விக் கழக (தற்போது பெயர் மாற்றம்) நூலகத்தில் பல சிறப்புக் கூறுகளைப் பெற்றுத் திகழ்கிறது.
1. இலக்கண, இலக்கிய நூல்களுக்கு ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட உரைகள் கிடைக்கின்றன.
2. சங்க இலக்கியப் பாடுபொருள்கள் எண், சொல், பக்கம், பாடினோர், வள்ளல்கள், மன்னர்கள், திணை கூற்றும், பாடல் முதற்குறிப்பு, மரங்கள், செடிகள், கொடிகள், பறவைகள், விலங்குகள், மீன்கள் என்னும் தலைப்புகளில் வேண்டிய செய்திகளை உடனடியாகத் தேடிப் பெற்றுக் கொள்ளலாம்.
3. அகராதிகளில், தமிழ் சொற்களுக்கு இணையான ஆங்கிலச் சொற்களும், ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களையும் தேடிப் பெறும் வசதியுள்ளது.
4. தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளை உலகத்தார்க்கு எடுத்து விளக்கும் வகையில் அமைந்த சைவ, வைணவ, இசுலாமிய, கிறித்துவ கோயில்களின் ஒலி, ஒளி காட்சிப் பதிவுகள் மற்றும் நாட்டியம், பொம்மலாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், நாதஸ்வரம், ஜல்லிக்கட்டு முதலான பண்பாட்டுக் காட்சியகம் வியக்கத்தக்க வகையில் இடம்பெற்றுள்ளது.
5. திருத்தலங்கள் என்னும் வரிசையில் 14-சமணத் தளங்கள், 101 சைவத் தளங்கள், 93-வைணவத் தளங்கள், 9-இசுலாமிய தளங்கள், 13-கிறித்துவத் தளங்கள் காட்சியாக்கப்பட்டுள்ளன.

6. தேவாரப் பாடல்களை இசையுடன் கேட்கும் வசதி உள்ளது.

இவ்வாறு பல வசதிகளைக் கொண்ட இம்மின்நூலகம் பல ஆராய்ச்சி மாணவர்களுக்கும், தமிழ் இலக்கிய நூல்களைக் கண்டு படிப்பவர்களுக்கும் பயன்படும். இதில் 350 மேற்பட்ட தமிழ் நூல்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் இலக்கிய வரலாற்று அடிப்படையில் நூல்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ள விதம் படிப்பவர்களையும், நூல்களைத் தேடி எடுப்பவர்களையும் இலகுவாக கவர்ந்திழுக்கின்றது.

தமிழ் மரபு அறக்கட்டளை

தமிழ் மரபு அறக்கட்டளை எனும் தன்னார்வத் தொண்டூழிய நிறுவனம் 2001-ஆம் ஆண்டு உலகு தழுவிய ஒரு இயக்கமாக உருவாக்கப்பட்டது. இதன் நோக்கம் மின் பதிப்பில் உலகில் இருக்கும் ஓலைச்சுவடிகள், அரும்பெரும் பழைய நூல்களை நகல் எடுத்து இணையத்தில் வெளியிடுவது ஆகும்.

மின்பதிப்பாக்கம், மின்னூலாக்கம் ஆகியவற்றின் தொடர்ச்சியாக இணையத்தில் மின் நூல்களுக்கான அட்டவணை ஒன்றை உருவாக்கியுள்ளது. இவற்றில் அரக்குமாளிகை நாடகம், அமெரிக்க அன்னையான பிள்ளைத் தமிழ், சபரி மோட்சம், சுபத்திரை மாலையிடு போன்ற அரிய நூல்கள் இம்மின் நூலகத்தில் இடம் பெற்றுள்ளன.

நூலகம்.நெட்

ஈழத்தில் வெளிவந்துள்ள தமிழ் நூல்களையும், இதழ்களையும் மின் வடிவமாக்கி பாதுகாத்து அனைவரும் காணும் வகையில் நூலகம்.நெட் செயல்படுகிறது. இஃது ஓர் இலாப நோக்கமற்ற தன்னார்வ கூட்டு முயற்சியாகும். மதுரைத்திட்டம், தமிழ்மரபு அறக்கட்டளை போலவே இதுவும் அமைந்துள்ளது. இம்மின் நூலகத்தை உருவாக்கியவர்கள் தி. கோபிநாத் மு.மயூரன் ஆகியோர் ஆவர். 2005-ல் தொடங்கி இடையே சில காரணங்களால் தடைப்பட்ட இத்திட்டம் 2006 தை மாதம் மீண்டும் புதுப்பொழிவுடன் பல புதிய மின்நூல்களைக் கொண்டு வெளிவந்தது. வாரம் ஒரு மின்னூல் என்ற குறிக்கோளுடன் செயற்பட்டு வருகிறது. 30.10.2010 முடிய 6100 நூல்கள் இடம் பெற்றுள்ளன.
இதில் ஆவண வகைகள், பகுப்புகள், பட்டியல்கள் என மூன்று பெரும் தலைப்புகளில் செயல்படுகிறது. ஆவண வகைகள் என்பதில் நூல்கள், சஞ்சிகைகள் பத்திரிக்கைகள், பிரசாரங்கள், ஆய்வேடுகள் என்னும் பகுப்புகள் உள்ளன. பகுப்புகள் என்பதில் எழுத்தாளர்கள், வெளியிட்ட ஆண்டு, பதிப்பகங்கள், நூல்வகை ஆகியவை இடம்பெற்றுள்ளன. பட்டியல்கள் என்ற மூன்றாவது தலைப்பில் நூறு எண்கள் கொண்ட தொகுப்புகளாக 6100 நூல்கள் உள்ளன. மேலும் பிற மின் நூல்கள் என்ற தேடலில் பிற நிறுவனங்களின் மின் நூல்களையும் இந்த நூலகம்.நெட்டில் காண முடிகிறது.

இந்திய மின்நூலகம் (Digital Library of India)

தமிழ் இணைய மாநாட்டுக் குழுவால் தோற்றுவிக்கப்பட்ட இந்திய மின் நூலகமாகும். இதில் பலதரப்பட்ட நூல்களை மின்பதிவேற்றம் செய்துள்ளனர். ஞானாமிர்தம், வேதாந்த நூல்கள், சைவசித்தாந்த நூல்கள், சோதிட நூல்கள், குணவாகடம், ஜெகசிற்பியின் புதினங்கள், பயண இலக்கிய நூல்கள் என 223-தலைப்புகளில் நூல்களை மின்பதிப்பாக்கி வெளியிட்டுள்ளனர். இதில் இடம் பெற்றுள்ள நூல்கள் அனைத்தும் தமிழ் வாசகர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் பெரிதும் பயன்படும் வகையில் இருக்கும்.

சென்னை நூலகம்

கோ. சந்திரசேகரன் என்கிற தனி நபர் எந்த அமைப்புகளின் துணையுமின்றி 2006-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கிய மின் நூலகம் சென்னை நூலகம். இம்மின் நூலகத்தில் சங்க கால இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கியம் வரை நூல்கள் உள்ளன. அதுவும் ஒருங்குறியில் இருக்கின்றன.
சில சங்க இலக்கிய நூல்களின் நூற்பா மட்டும் இடம்பெற்றுள்ளன. புதுமைப்பித்தன் சிறுகதைகள் முழுமையாக இத்தளத்தில் பார்வையிடலாம்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சிலப்பதிகாரம், ஐஞ்சிறுகாப்பியங்கள் இடம் பெற்றுள்ளன. யாப்பருங்கலக்காரிகை, நால்வர் நான்மணிமாலை, திருவிசைப்பா, திருவுந்தியார் கந்தர் அலங்காரம், கந்தர் அந்தாதி போன்ற நூல்கள் இத்தளத்தில் கிடைக்கின்றன. இவற்றை எண்கள் அடிப்படையில் தேடிப்பெற்றுக் கொள்ளலாம்.

இவையன்றி கம்பர், திருஞானசம்பந்தர், திரிகூடராசப்பர், குமரகுருபரர், ஔவையார், பாரதியார், பாரதிதாசன், அண்ணா, மு. வரதராசன், ந.பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன் ஆகியோரின் படைப்புகளும் இதில் கிடைக்கின்றன.

இம்மின் நூல்கள் அன்றி தெற்காசிய நூலகம் Digital South Asia Library என்ற பெயரில் சிக்காக்கோ பல்கலைக்கழகத்திலிருந்து வெளிவருகின்றது www.dsal.uchicago.edu. மேலும் மலாயாப் பல்கலைக்கழக மின்னியல் நூலகமும் வெளிவருகிறது.

உலகத் தமிழாராய்ச்சி

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்படும் ஆய்விதழ் தமிழியல் - Journal of Tamil Studies இல் 1972 முதல் வெளியான ஆய்வுக் கட்டுரைகளும், புத்தக மதிப்பரைகளும் சுமார் 9000 பக்கங்கள் இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் நிலையில் இணையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.
தமிழியல் என்ற பக்கத்தில் இதனைப் பார்க்கலாம். இதுவரை ournal of Tamil Studies இல் 76 இதழ்கள் வெளியாகியுள்ளன. அவற்றின் கடைசி 4 இதழ்கள் நீங்கலாக, அதாவது முதல் (001-September 1972) இதழ் தொடக்கம் எழுபத்திரண்டாவது (072 – December 2007) வரையிலான இதழ்களில் இருந்து ஆய்வுக்கட்டுரைகள் அனைத்தையும் நீங்கள் தரவிறக்கம் செய்யலாம்.

306 முதன்மைக் கட்டுரையாளர்களால் எழுதப்பட்ட 611 கட்டுரைகளும் 55 கட்டுரைப் பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. கடைசி 4 இதழ்களில் உள்ளடக்க அட்டவணை மட்டும் கிடைக்கும். 77-வது இதழ் வெளியாகும் போது 73 இதழின் கடடுரைகள் தரவிறக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் ஆய்வாளர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் பெரும் துணை புரியும்.

மின்னியல் நூலகப் பயன்பாடு

1. நூலகத்திலிருந்து பெற விழையும் தகவல்களை, நூலகத்திற்குச் செல்லாமலேயே வீட்டிலிருந்தே கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள இயலும்.
2. உலகில் எங்கு நூல்கள் உருவாகியிருந்தாலும், எந்த நாடாக இருந்தாலும் நாம் அந்நூல்களை வாசிக்க இயலும்.
3. நூலகச் சாதனங்களை இரவல் பெறுவது போன்ற செயல்முறை மற்றும் சேவையை மேம்படுத்த உதவும்.
4. நூலகச் சாதனங்கள் பற்றிய தகவல்களை பயனீட்டாளர்கள் எளிதில் தெரியப்படுத்துவது.
5. பல உரையாசிரியர்களின் உரையை ஒரே நேரத்தில் ஒரே நூலுக்குப் பெற்றுக் கொள்ளுதல்.
6. நூல் இரவல் என்பது முற்றிலும் நிறுத்தம் பெறும்.

Friday, August 19, 2011

தமிழ் மரபு அறக்கட்டளை

|2 comments
“சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வத்தைக் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்றான் முண்டாசுக் கவிஞன் பாரதி. அஃது இன்று நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கின்றது. இன்றைய உலகை வெகுவிரைவாக கற்றுக்கொள்ள, அறிந்து கொள்ள, தெரிந்து கொள்ள இன்று விஞ்ஞான வளர்ச்சி நமக்கு கொடுத்த கொடை கணிப்பொறியும் அதனுடன் இணைந்த இணையமுமாகும். இந்த இணைகள்தான் இன்று அத்தனை பணிகளையும் எளிதாகவும் விரைந்தும் செய்து முடித்திட உதவுகின்றது.

இணையம் இன்று பயன்படுத்தப்படாத துறைகளே இல்லை என்பதற்கேற்ப அதன் பயன்பாடு வளர்ந்து உள்ளது. இஃது அலுவலகப் பணிகள், வணிகம், கல்வி என இதன் பணி அனைத்திலும் விரிகிறது அவற்றில் கல்விக்கான பணிகள் பல உள்ளன. அக்கல்விப் பணியில் தமிழ்மரபு அறக்கட்டளையின் பயன்பாடுகள் மிகவும் அதிகம்.

தமிழ்மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation)
வாழ்க்கையின் மரபுகளைத் தொகுத்து வெளியிடும் தரவுதளமாக இந்த தமிழ் மரபு அறக்கட்டளை விளங்குகிறது. காலத்தின் ஓட்டம் நெடுந்தொலைவுடையது. அதன் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம், இன்றும் நம்மில் ஒட்டிக் கொண்டிருப்பதற்கு முக்கியக் காரணம் மரபு பற்றிய எண்ணங்களை மக்களிடம் தக்க வைத்திருப்பதே ஆகும். மரபுகளை வாய்வழிச் சொல்லும் பழங்கதைகள், புராணக்கதைகள், சித்திரங்கள், ஓலைச்சுவடிகள், பண்டைய மக்கள் பயன்படுத்திய பொருட்கள் மூலம் காணமுடிகின்றது. இவைகளைப் பாதுகாக்கும் முயற்சியிலும் மீண்டும் மக்களிடம் இவற்றை அறிமுகப்படுத்தும் முனைப்புடனும் இந்த தமிழ்மரபு அறக்கட்டளைத் தொடங்கப்பட்டுள்ளன. தமிழ்மரபு அறக்கட்டளை உலகம் தழுவிய ஒரு அறக்கட்டளையாக விளங்குகிறது. பல்லாயிரமாண்டுகள் தொன்மையுள்ள தமிழ்மரபு இலக்கியம், கலைகள் எனப் பலவகைப்படுகிறது. இந்த மரபுச் செல்வங்கள் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், தென்ஆப்பிரிக்கா, ஜெர்மனி மற்றும் ஏனைய புலம் பெயர் நாடுகளான ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பரந்து கிடக்கின்றன. இவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்புடன் தமிழ்மரபு அறக்கட்டளை பழைய ஓலைச்சுவடிகளையும் அவற்றில் புதைந்துள்ள தமிழ் மரபுசார் வளங்களையும் பாதுகாத்து உலக மக்களுக்கு வழங்கும் பணியையும் செய்து வருகின்றது.
இச்செயல்பாடுகள் கணினி சார் தொழில்நுட்ப வளர்ச்சியால் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் அவற்றை இலகுவாக பகிர்ந்து கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. ஒலி, ஒளி எழுத்து வடிவ முறைகளில் அவற்றை இலக்கப் பதிவாக்கி வெளியிட்டு வருகிறது. இன்றுள்ள இணையவசதியால் இக்கருத்து, காட்சிப் படங்களாக இருப்பதால் உலகத்தாரோடு மிக இலகுவாகப் பகிர்ந்துக்கொள்ள முடிகிறது.

உருவாக்கம்

“ஒரு முறை பின்பணிக்காலப் பொழுதில் நானும் முனைவர். கல்யாணந்தரமும் (மதுரைத் திட்டம்) சுபாஷினி ட்ரெம்மல் மரபு பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தோம். புதிதாக மலர்ந்திருக்கும் இணையத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தமிழ்ப் பூங்கா ஒன்று அமைக்க திட்டமிட்டோம். அதுவொரு பிரமாண்டமான திட்டம். தமிழின் அனைத்து மரபு செல்வங்களையும் இலக்க வடிவில் கொண்டுவந்து விடுவது என்பது திட்டம் (Digitization of Tamil Heritage Materials) இப்படிச் செய்யும் போது ஒரு சொடுக்கில் தமிழ் செல்வங்களை நுகர விரும்புபவர்களுக்கு அளித்த விடா முயற்சி. அது ஒரு கனவு. மெகா கனவு சந்திரனுக்கு இலக்கு வைத்தால்தான் வீட்டுக் கூரையாவது ஏறமுடியும் என்பது ஒரு கணக்கு. நாங்கள் இன்னும் சந்திரனில் கால் வைக்கவில்லை, கூரை ஏறி இருக்கிறோம், எல்லோரும் தோள் கொடுத்தால் ஒரு நாள் சந்திரனில் கால் வைக்கலாம்.”

என்று தமிழ் மரபு அறக்கட்டளை 2001-ல் தோன்றிய நிகழ்வை அதன் தலைவர் முனைவர். ந.கண்ணன் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் அனைவரும் கூடி செயல்படுவோம் என்று கூறியுள்ளதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும். இஃது அவரது பரந்த எண்ணத்தை வெளிக்காட்டுகிறது. தமிழ் இணையம் மாநாடு 2002-ல் அமெரிக்காவில் நடைப்பெற்ற போது தமிழ் மரபு அறக்கட்டளை தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

நாம் இந்த தமிழ் மரபு அறக்கட்டளைக்குச் சென்றால் முன்பே கூறியுளளது போல் தமிழ் மரபு சார்ந்த நிகழ்வுகளையும், செய்திகளையும் காணலாம். www.tamilheritagefoundation.org என்ற இணைய முகவரிக்குள் சென்றால் முகப்பு பக்கம் தோன்றும். அந்த பக்கத்தில் ‘நுழைக’ என்ற பகுதியைச் சுட்டினால் தமிழ் மரபு சார்ந்த அனைத்து நிகழ்வுகளும் வலது பக்கம் தோன்றும்.

1. எங்களைப் பற்றி அறிந்து கொள்ள…!
2. பத்திரிக்கைச் செய்திகள் மற்றும் தகவல்களை இங்கே…!
3. மேல் விவரங்களும் அதிக தமிழப் பக்கங்களும் முதுசொம் சாளரத்தில் உள்ளன.
4. தமிழகக் கோயில்களின் தல புரணங்கள்
5. கருணாகரன் நூல்நிலையம் தொடர்பான செய்திகள்
6. சுவடியியல் தொடர்பானவை
7. தமிழ் மரபு அறக்கட்டளையின் உள்ளடக்க முகாமைத்துவத் தொகுதி (CMS)
8. தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபு விளக்கி.

- என்னும் இவையில்லாமல் மரபுசேதி (Heritage News) மரபின் குரல் (Heritage Tunes) மரபுச்சுவடு Image Heritage தமிழ் நிகழ்கலை (Waiting Room) என்று பல பிரிவுகளும் இங்கு வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எங்களைப் பற்றி அறிந்த கொள்ள…! (தமிழ்மரபு அறக்கட்டளையின் தோற்றம் ஆண்டு)
இந்தப் பகுதியில் தமிழ்மரபு அறக்கட்டளையின் தோற்றம் தோற்றுவித்தவர்களான தலைவர், முனைவர். ந.கண்ணன் (தென்கொரியா), துணைத்தலைவர், திருமதி சுபாஷினி ட்ரெம்மல் (கணினிப் பொறியாளர், ஜெர்மனி) போன்றவர்கள் குறித்த தகவல்கள் இடம் இடம்பெற்றுள்ளன.

பத்திரிக்கைச் செய்திகள் மற்றும் தகவல்கள் இங்கே …!

இந்தப் பகுதியில் தமிழ் மரபு அறக்கட்டளைத் தொடர்பாக உலகில் எங்கெங்கு சென்று வந்திருக்கிறார்கள் என்கிற செய்தித்தாள், பத்திரிக்கையில் வந்த செய்திகளைத் தொகுத்துக் கொடுத்துள்ளனர். மேலும் சில தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

முதுசொம் சாளரம்

தமிழ்மரபு அறக்கட்டளையின் பணிகள் உலகம் முழுவதும் வரவேற்கப்பட்டு வருகின்றன. தமிழ்மொழி அறிந்த அனைவரும் இத்தளத்தைச் சென்று பார்த்துப் பயன் பெறலாம். தமிழ் மொழிக்கும், தமிழர்களின் மரபிற்கும். எதிர்கால உலக மக்களுக்கும் நம்மால் இயன்ற பங்களிப்பை இத்தளங்களில் பதிவேற்றம் செய்து வைக்கலாம். இதனைக் கருத்தில் கொண்டு, பல தலபுராணங்களை ஒலி, ஒளி-படம் கொண்டு இப்பகுதியில் இணைத்துள்ளனர்.

தல புராணங்கள்

உலக இலக்கியங்களில், பண்பாடுகளில் தமிழ் இன்றளவும் பேசப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் இலக்கண இலக்கியங்களும், புராணங்களும் ஆகும். அனைவராலும் அனைத்துக் கோயில்களுக்கும் (புண்ணியதலம்) சென்று வர இயலாது. ஆகையால் அவைகளை ஈடுகட்டத் தோன்றியவை தல புராணங்கள் ஆகும்.
இறைவன் வெவ்வேறு பிரதேசங்களில் பலவகைகளில் காட்சி தந்துள்ளான். இது ஒவ்வொரு பகுதிக்கும் வேறுபாடு அடையும். காசி இராமேஸ்வரம் செல்ல இயலாதவர்களுக்குத் தத்தம் ஊர்களில் இருக்கும் இறைவன் சமமானவன் என்ற உணர்வைக் கொடுத்து உள்ளூர்வாசிகளுக்கு ஒரு தன்னம்பிக்கையைக் கொடுப்பது தலபுராணங்கள் மேலும் மெய்ஞானிகளுக்கு (திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர்) அருள் மூலம் இறைவன் இறைக் காட்சிகளைக் காட்ட அவர்கள் ஒவ்வொரு சிற்றூர்க் கோயில்களுக்கும் சென்று தலபுராணங்கள் எழுதி வைத்துள்ளனர். அவைகளைத் தொகுத்தும் கொடுத்துள்ளார்கள்.
இந்தப் பகுதியில் இடம் பெற்றுள்ள செய்தியைத் தொகுக்க ஆகும் செலவுகளை லண்டன் மாநகரில் மருத்துவராகப் பணியாற்றும் டாக்டர். தண்டபாணி, அதே நாட்டில் தமிழ்ப்பணிச் செய்து வரும் திரு. சுவாமிநாதன் ஆகிய இருவரும் கொடுத்து உதவி வருகின்றனர் என்று இதன் தலைவர் ந. கண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

சுவடியியல்

சுவடியியல் என்ற பகுதியில் நமது பழைய ஓலைச்சுவடிகளை மின் பதிப்பாக்கம் செய்துள்ளனர். அச்சு இயந்திரம், தாள்கள் கண்டுபிடிக்காத காலத்தில் உலக அறிவை முழுவதும் தன்வயம் வைத்திருந்த தமிழர்கள் பனை ஓலைகளில் தங்கள் அறிவைப் பதிவு செய்து வைத்துள்ளனர். இவைகளில் 25 சதவிகிதம் மட்டுமே திரு. ஆறுமுகநாவலர். உ.வே.சா போன்றவர்களால் நூல் வடிவம் பெற்றுள்ளது. மீதம் இருக்கும் 75சதவிகித ஓலைச் சுவடிகளில் இருக்கும் அரிய கருத்துக்களை நூல் வடிவம் பெற இன்று சில முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகம் 21,000-க்கும் மேற்பட்ட தமிழ்ச் சுவடிகளைச் சுவடிப்புலம் Catalogue of Tamil paragraph manuscripts in Tamil University என்ற பெயரில் அட்டவணையினை வெளியிட்டுள்ளது. இவற்றை எத்தனை இலக்கிய ஆய்வளர்கள் கண்டிருப்பார்கள் என்று தெரியவில்லை? தகவல் தொடர்பு பன்மடங்கு வளர்ச்சி பெற்றுள்ள நிலையில் ஏன் தமிழ்மொழியையும் அதில் ஏற்றி உலகறிய செய்ய முடியாது என்ற எண்ணம் இவர்களுக்குள் ஏற்பட்டிருக்கின்றன. அதன் விளைவுதான் ‘சுவடிபுலம்’ என்ற பகுதி உருவாகியுள்ளது. தமிழர்களுக்குப் புத்துணர்ச்சியும், விழிப்புணர்வும் தந்துள்ளது. இப்பகுதியில் ஏடுகள் என்றால் என்ன? எத்தனை வகை ஏடுகள் உள்ளன, ஏடுகளை வாசிப்பது எப்படி? தமிழ் ஏடுகளின் நூலகங்கள் எங்குள்ளன? பல்கலைக் கழகங்கள் செய்யும் சீரிய முயற்சிகள் என்ன? (பாரதிதாசன் பல்கலைக்கழகம். ஓலைச்சுவடி தரவு) போன்ற வினாக்களுக்கான விடையை மின் படிவங்களாகவும், மின் உரைகளாகவும், மின் பேசும் படங்களாகவும், மின் இணைப்புகளாகவும், பார்வைக்கு அளித்துள்ளது. எனவே உங்கள் இல்லங்களில் அரிய ஏடுகள் இருந்தால் அதனைத் தமிழ் மரபு அறக்கட்டளைக்குக் கொடுத்துத் தமிழ் வளர்ச்சிக்கு உதவலாம். மின் நகல் எடுத்துவிட்டு அதை உங்களிடமே மீண்டும் கொடுத்து விடுவார்கள். இதனால் தமிழின் பழமையை நீங்களும் அறிந்து கொள்வீர்கள் உங்களது அறிவையும் உலக மக்களோடு பகிர்ந்தும் கொள்வீர்கள்.

மரபு விக்கி

முதுசொம் சாளரத்தில் மரபு விக்கி என்ற பகுதியும் உள்ளது. இதில் நீங்கள் எந்த துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் அவரவர் துறை பற்றிய செய்திகளை அச்சாகவும். காட்சி ஒளி மூலமாகவும் தரலாம். இதற்கு நீங்கள் முதலில் தமிழ் மரபு அறக்கட்டளையில் உங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இவையும் தமிழ்மொழி வளர்ச்சிக்குப் பேருதவி செய்து வருகின்றது.

I. மரபுச் சேதி (Heritage News)
தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள் மற்றும் தமிழ்க் கலாச்சாரம் பற்றிய தகவல்கள் இங்கு வெளிவரும். இதைத் திறமையாக செயல்படுத்த ஆர்வமுள்ள தமிழர்கள் சேதிக் குறிப்புகளை அனுப்புவதுடன், அவை இணையத்தில் எங்கேனும் வெளியாகியிருந்தால் அதன் தொடுப்பைக் (web link) கொடுத்து உதவலாம்.

II. மரபின் குரல் (Heritage Tunes)
முதுசொம் இசையரங்கம் என்றொரு வலைப்பக்கம் இயங்கி வருகிறது. அதை இன்னும் (interactive) ஊடாட வைப்பதே இவ்வலைப்பதிவின் நோக்கமாகும்.
1. உங்கள் வட்டார வழக்கு, பேச்சு இவைகளை இத்தளத்தில் நேரடியாக பதிவு செய்யலாம். Voice Snap குழுவுடன் இணைந்து இதைச் செய்துள்ளொம்.
2. மழலைப் பாடல்களை பெரியோரோ, சிறுவர்களோ பாடிப் பதிவு செய்யலாம்,
3. இசைத் துக்கடா(Music Sample) வை இங்கு அனுப்பலாம்.
4. இலக்கிய உரைகளை அனுப்பலாம்.
5. உங்கள் கவிதை, உங்கள் நாவல் இவைகளை உங்கள் குரலில் காலத்தின் பதிவாக இங்கு நிரந்தரப்படுத்தலாம்.
6. தமிழின் அமுதம் போன்ற இசை இங்கு பிரவாகம் எடுக்கும் படி செய்யலாம். தமிழ் இசை என்பது பரந்த நோக்கில் ‘திராவிட இசை’ என்றே இங்கு பதிவாகிறது. எனவே தெலுங்கு, கன்னட, மலையாள, தமிழ் இசைப் பாரம்பரியம் இங்கு பதிவாகிறது. தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
7. தமிழ் கிராமப்புற இசை பற்றிய பதிவுகள் அரிதாகவே உள்ளன. அவைகளை இங்கு சேகரம் செய்யலாம்.

III. மரபுச் சுவடு (Image Heritage)
படங்கள்! ஆகா! அவை சொல்லும் சேதிகள்தான் எத்தனை. அது கல்யாணக் காட்சியாக இருக்கலாம், குழந்தைப் பிறப்பாக இருக்கலாம். ஊர் தேர்த் திருவிழாவாக இருக்கலாம். பழைய படங்கள். தமிழக வீடுகள், தமிழக தெரு அமைப்பு தமிழகக் கோயில்கள், சிற்பங்கள்... அம்மம்மா! எத்தனை உள்ளன. அப்புகைப்படங்களை இங்கு தொடுப்பது நோக்கம். வேறொரு தளத்தில் அது இருந்தால், ஒரு தொடுப்பின் மூலம் அவைகளைக் இணைத்துவிட முடியும். மிக, மிக எளிய வழியில் நம் சுவடுகளை இங்கு பதிக்கலாம். புற உலகில் (வெளிநாட்டில்) தமிழ்க் கல்வி பயில்பவர்களுக்கு இம்மாதிரிப் புகைப்படங்கள் ஒரு பொக்கிஷம். ஒவ்வொரு தமிழ் இணைய மாநாட்டிலும் இதன் தேவை வலியுறுத்தப்படுகிறது.

IV. தமிழ் நிகழ் கலை (Waiting Room (Video Show))
ஒட்ட வைக்கும் (Embed) திறன் கொண்டு You Tube, Google Video மற்றும் பிற கிட்டங்களில் கிடக்கம் தமிழ் நிகழ்வு பற்றிய ஆவணங்களை மிக எளிதாக இங்கு சேர்த்து விடலாம். இங்கு அனுப்புங்கள் என்றால் யாரும் அனுப்ப மாட்டார்கள். ஆனால் கூகுளுக்கு அனுப்புவார்கள். எல்லோருக்கும் மேடையில் ஒளிவட்டத்தில் இருக்கவே ஆசை. அதைத்தான் இவ்வலைப்பூ செய்யப் போகிறது. அனுப்புவருக்கும் சிரமமில்லை. அவர்கள் பார்த்து. ரசித்த ஒரு வீடியோ கிளிப்பை எமக்கு ‘html tag’ ஆக அனுப்பினால் போதும். இந்த ஒட்டவைக்கும் திறன் கொண்டு நம் வீட்டு வீடியோ (புழக்கடை சினிமா - Garage Cinema) வையும் இங்கு வெளியிடலாம். ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் வீடியோ எடுக்கிறோம், படமெடுக்கிறோம், சிலர் பாட்டுக்களை பதிவு செய்வதுமுண்டு. அவைகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம். இது professional ஆக இருந்தாலும் வெளிநாட்டில் வாழும் மாணவர்களுக்கும் பிறருக்கும் அது ஏதோவொருவகையில் பயன்படும்.

உங்களிடம் அதிகமாக ஒன்றும் கேட்கவில்லை. ஒரு மின்னஞ்சல் (E.mail) அவ்வளவுதான். அம்மின்னஞ்சலில் மேற்சொன்ன அத்தனை விஷயங்களையும் அனுப்பி விடலாம். ஊர் கூடி தேர் இழுக்க ஆசையா? எளிதாக இவ்வலைப்பதிவு இணை-ஆசிரியாராக நீங்கள் சேர்ந்து தொடர்ந்து பங்களிக்கலாம்.

வலைப்பூக்கள்

தமிழ் மரபு அறக்கட்டளையின் உட்பிரிவுகளில் மரபு சார்ந்த நிகழ்வுகளை வலைப்பூக்களில் வெளியிட்டு வருகிறது. மரபு அறக்கட்டளையின் சார்பாக நான்கு வலைப்பூக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவைகளில்

மரபுச் சேதி (Heritage Tunes)

இவ்வலைப்பூவில் தமிழ் மரபு அறக்கட்டளையின் வெளியீடுகள் மற்றும் தமிழ்க் கலாச்சாரம் பற்றிய தகவல்கள் இங்கு வெளிவருகின்றது.

படம் ( )
மரபின் குரல் (Heritage Tunes)
மின் தமிழ்

இஃது ஒரு இணையக்குழு என்று கூட கூறலாம். ஒத்தக் கருத்துடையவர்கள் இங்கு ஒன்று கூடி விவாதம் செய்து வருகின்றனர். சில கலந்துரையாடல்கள் வியக்க வைக்கின்றன. தமிழ் இலக்கணம், புதிய சொற்கள், இலக்கிய ஆய்வு, திருக்குறள் உரை, சைவ சித்தாந்த தத்துவ விளக்கம், வைணவத் தத்துவங்கள், ஆலய விளக்கம், பயணங்கள் குறித்த செய்திகள், பழமொழிகள், கலைகள், தமிழறிஞர்கள், தமிழ் தொடர்பான முக்கியச் செய்திகள் இசை, பிற கலைகள், இறை அனுபவம், பக்தி, என பல தலைப்புகளில் சிந்தனை ஓட்டத்தைத் தாங்கி ஒவ்வொரு நாளும் புதிய செய்திகளைக் கொண்டு வெளிவருகின்றது.

“அறிவை விரிவுசெய் அகன்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை” என்று கூறிய புரட்சிக்கவி பாரதிதாசனின் கூற்று நினைவில் கொள்ளத்தக்க வேண்டும். தமிழ்மொழியின் மரபுகளைக் காலத்திற்கேற்ப பாதுகாக்க வேண்டும் என்ற சீறிய எண்ணத்துடன் இத்தமிழ் மரபு அறக்கட்டளைத் தோன்றி அதில் எண்ணிலடங்கா இலக்கியச் செல்வங்களைப் பாதுகாத்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் உலக மக்களின் பார்வைக்கும் அறிவுக்கும் விருந்தாக ஒளிப்படம் மூலம் எடுத்துக்காட்டி வருகிறன்றனர்.
மரபு அறக்கட்டளைத் தோற்றம், அதன் வளர்ச்சி முதுசொம் சாளரத்தின் பயன்கள், தலபுராண கதைகளை காட்சி படம் மூலம் விளக்கிக் காட்டியுள்ளன. சுவடியின் பயன், அதன் தரம் போன்றவைகளை தரவாரியாக, பொருள் வாரியாக, துறை வாரியாக பிரித்துக் கூறியுள்ளன.. மரபு விக்கி என்ற பகுதியில் துறைசார்ந்த கருத்துக்களை அவரவர் பதிவு செய்து வைக்கலாம் என்றும் நான்கு வலைப்பூக்களின் செய்தியும் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள மின் குழுமம் என்ற பகுதியும் இம்மரபு அறக்கட்டளையில் செயல்பட்டுவருகிறது. மொத்தத்தில் இதனைப் படிக்கும், பார்க்கும் தமிழர்கள் பல்வகைகளில் பயன்பெறுவார்கள் அதற்கு இந்த அறக்கட்ளையின் பணி மேலும் மேலும் வளர நாம் அனைவரும் ஒன்றிணைவோம். தமிழை உலக மொழிகளின் வரிசையில் முன்நிறுத்துவோம்.

Sunday, July 24, 2011

செம்மொழித்தமிழ் தரவுகள்

|0 comments
செம்மொழித் தரவுகள்

.கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி
தமிழ்குடி. என்ற பொய்யா வாக்கிற்கிணங்க உலகமொழிகளில்
தமிழ்மொழியும் செம்மொழியாகி தனக்குரிய இடத்தைப் பெற்றுத்
திகழ்கிறது. உலகச் செம்மொழிகளாக தமிழ், கிரேக்கம் (Greek),
இலத்தீன் (Latin), அரேபியம் (Arabic), சீனம் (Chineese),ஹீப்ரூ
(Hebrew), பாரசீகம் (Persian), சமஸ்கிருதம் (Sanskrit) போன்றவைத்
திகழ்கின்றன



செம்மொழித் தகுதிகள்

செம்மொழித் தகுதிக்கு மொழியியலார் பதினொரு
தகுதிப்பாடுகளை வகுத்துள்ளனர். அவை முறையே,

1. தொன்மை (Antiquity)
2. தனித்தன்மை (Individuality)
3. பொதுமைப் பண்பு (Common Character)
4. நடுவுநிலைமை (Neutrality)
5. தாய்மைத் தன்மை (Parental Kingsitd)
6. பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு
7. பிறமொழித் தாக்கமிலா தனித்தன்மை
8. இலக்கிய வளம் (Literary Prowess)
9. உயர் சிந்தனை (Noble Ideas and Ideals)
10. கலை, இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு
11. மொழிக் கோட்பாடு (Linguistic Principles)

என்பனவாகும். இந்த தகுதிப்பாடுகளை அளவுகோளாகக் கொண்டு
உலக இலக்கியங்களைச் செம்மொழித் தகுதிக்கு கொண்டு வருகின்றனர்.
இவ் அளவுகோள் தமிழுக்கும், தமிழ்மொழிக்கும் முழுக்க முழுக்கப்
பொருந்துவனவாக உள்ளன என்பதுதான் உண்மையாகும்.

தமிழ்மொழி

உலகப் பண்பாட்டிற்கு உயரிய வழிகாட்டியாக விளங்கும்
கிரேக்கம், இலத்தீன் மொழிகளைப் போல இந்தியப் பண்பாட்டிற்கும்
ஏன் உலகப் பண்பாட்டிற்கும் அணிகலன்களாக விளங்கும்
மொழிகளாகத் தமிழ் மற்றும் தமிழ் வழி வந்த சமஸ்கிருதம் திகழ்கிறன.

தமிழின் தொன்மையை நாம் காண வேண்டுமாயின்”கல்தோன்றி
மண்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தக்குடி” என்ற பாடல்
அடியால் காணலாம். எல்லை வரையரை என்பது ”வடவேங்கடம்
தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்” என்று தொல்காப்பியப் பாயிரம்
தமிழ்மொழி பேசப்பட்டநிலப்பகுதியைச் சுட்டுகிறது. உலகில் தமிழர்கள் இல்லாத நாடே இல்லை என்றுரைக்கலாம். ஒரு சில நாடுகளில் தமிழ்மொழி ஆட்சிமொழியாக விளங்குகிறது. பி.பி.சி. தனது அலைவரிசையில் தமிழ்ச் செய்தியையும் வெளியிட்டு வருகிறது. அத்தகையச் சிறப்புடன் வாழும் தமிழ்மொழி இணையத்திலும் நல்ல வளர்ச்சி நிலைப் பெற்று வருகிறது.
செம்மொழித் தகுதிகள் என்ற தகுதிப்பாட்டு அடிப்படையில்
இணையத்தில் இத்தகுதிபாடுகளைத் தமிழ்மொழி எத்தகைய வகையில்
பெற்றுத் திகழ்கிறது? அவை எந்தெந்த இணைய முகவரியில்
கிடைக்கின்றன? என்பதனைப் பட்டியலிட்டுக் காட்டுகிறது.

தொன்மை

தமிழர்களின் தோற்ற வரலாறு சுமார் மூவாயிரம் மில்லியன்
ஆண்டுகளுக்கு முன்னதாக இருக்கிறது. இன்னும் ஒரு படி மேலே
சென்று மொழியியலார்களின் ஆராய்ச்சிப்படி தமிழின் தோற்ற
வரலாற்றைக் கணக்கிட இயலவில்லை. ஆகையால் இதனை
தொன்மைமிகு மொழி என்றே குறிப்பிடுகின்றனர்.
குமரிக் கண்டத்தை ஆராய்ந்த ஆய்வாளர்களின் கருத்துப்படி
ஆதிமொழி தமிழ் என்றே கூறிச் செல்கின்றனர். மேலும் கடல் கோள்கள்
(சுனாமி) ஏற்படும் முன் ஒரே நிலப்பகுதியாக இணைந்திருந்த
குமரிக்கண்டப் பகுதியில் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள்
பேசிய மொழி தமிழ்மொழி. இது மட்டுமின்றி தமிழை வளர்க்க இரண்டு
தமிழ்ச்சங்கங்களைத் தோற்றுவித்ததாக இறையனார் களவியல் உரை
கூறுகிறது.

கடல்கோள்களினால் தமிழர்கள் வெவ்வேறு நிலங்களுக்குச்
சென்றதால் அங்கு அவர்கள் இனக் குழுவாக பல கிளை மொழிகளில்
பேசியுள்ளனர். இன்று எஞ்சிய இந்திய நிலப்பகுதியில் மட்டும்
தமிழர்கள் வாழ்வதை,

”ப•றுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள”

என்ற சிலப்பதிகார ஆசிரியர் இளங்கோவடிகளின் உண்மைக்
கூற்றாகும்.

உலகில் தோன்றிய முதன்மையான, மிகத்தொன்மையான
இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இது 2600 ஆண்டுகளுக்கு
முன்பே இயற்றப்பட்டு இருக்கிறது.
இலக்கண நூலைப் போன்று அது தோன்றுவதற்கு ஆதாரமான
இலக்கியங்கள் அம்மொழியில் பெருமளவில் உருவாக்கியிருக்க
வேண்டும். அந்த வகையில் சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு,
எட்டுத்தொகை விளங்குகிறது.

இந்நூல் ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் பல புலவர்களால்
பலப் பகுதிகளிலிருந்து தொகுக்கப்பட்ட தொகை நூல்கள் ஆகும்.
எனவே உலகிலேயே முதல் தொகுப்பு நூல் என்ற பெருமை நம்
தமிழ்மொழிக்கு உண்டு. எனவே காலத்தால் இலக்கணத்தால்
இலக்கியத்தால் மிகவும் தொன்மை வாய்ந்ததாக தமிழ் மொழி
திகழ்கிறது.
இச்செய்திகளையும் மற்றும் தரவுகளையும்
1. www.tamilvu.org
2. www.tamishinzhchi.blogspot.com
3. www.kaniyatamil.com
4. www.varalaaru.com
5. www.ta.wikibooks.org
6. www.ta.cict.in
7. www.tamilthottam.in
போன்ற இணையதளங்கள் மற்றும் வளைப்பூக்களில்
கிடைக்கின்றன.

2. தனித்தன்மை

உலகமொழிகளில் செம்மொழித் தகுதியைப் பெற்ற மொழிகளிடம்
இல்லாத தனிச்சிறப்பு தமிழ்மொழிக்கே உண்டு. அந்த வகையில் தமிழ்
மொழி மட்டுமே உலகில் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற
முத்தமிழாக வளர்ந்து, வளம் பெற்று வந்துள்ளது. இதனைச்
சிலப்பதிகாரம்,
”இயலிசை நாடகப் பொருட்தொடர் நிலைச் செய்யுள்” என்று கூறி உறுதிப்படுத்துகிறது.
சங்ககாலத் தமிழ்ப் புலவர்கள் ஒட்டு மொத்த மனித வாழ்வையும்
அகம்-புறம் என்ற அடிப்படையில் பிரித்து இலக்கியம்
படைத்துள்ளனர். சமுதாய வாழ்க்கையில் காதலை, அன்பை அகம்
என்றும், வீரம், கொடை சார்ந்த வாழ்க்கையைப் புறம் என்றும் பெரும்
பிரிவாகப் பிரித்து இலக்கியம் படைத்துள்ளனர். மேலும் அகத்தை,
திருமணத்திற்கு முன்பு நடந்த வாழ்வை களவியல் என்றும் திருமணத்திற்குப்
பின்பு வாழ்ந்த வாழ்வை கற்பியல் என்றும் தமிழர் வாழ்க்கை
நெறிகளை பகுத்து வாழ்ந்ததை இலக்கியங்கள் மூலம் பதிவு
செய்துள்ளனர். இது தமிழ்மொழியின் தனிச்சிறப்பாகத் திகழ்கிறது.
தமிழின் தனிச்சிறப்பாக உலகே வியக்க வைக்கும் அடுத்த கட்ட
பெருமை நிலத்தைப் பிரித்து அந்நிலத்திற்குரிய இலக்கியங்கள்
பாடியவையாகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெல்லை, பாலை என்ற
ஐந்து வகை நிலப்பகுப்புகளாகும்.
1 www.tamilvu.org
2. www.muthukamalam.com
3. www.mintamil.com
4. www.thamizulagamviza.blogspot.com
5. www.tamil.chennaionline.com
போன்ற இணைய தளங்கள் மற்றும் வலைப்புக்கள், மின்
குழுமங்களில் தகவல்கள் விரவிக் கிடக்கின்றன்.

3. பொதுமைப் பண்புகள் (Common Character)

தமிழ் இலக்கியங்கள் (சங்க இலக்கியங்கள்) பொதுவாக தனி
மனித கருத்தையோ, ஒரு சமுதாயத்தின் பழக்க வழக்கங்களையோ
அல்லது ஒரு குறிப்பிட்ட இனக் குழுக்களுக்காகவோ இலக்கியம்
படைக்கவில்லை. உலகமயமாக்களின் நன்மைகளைக் கருத்தில்
கொண்டே உலகில் வாழும் அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளும்
வகையிலும், இலக்கியத்தின்படி வாழ்ந்து உலக மக்கள் இனம்
செழித்தோங்கும் விதத்தில் பொதுமைத் தகுதிகளைப் பெற்ற
இலக்கியமாக இன்றும் தமிழ் விளங்குகிறது. இதனை உணர்ந்த காலக்
புலவன் கணியன் பூங்குன்றனார்,

”யாதும் ஊரே யாவரும் கேளீர்....”
என்ற உன்னத வைர அடியை பாடிச் சென்றுள்ளார். உலகப்
பொதுமறையாகவும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட
நூலாகவும் திகழும் திருக்குறள் இன்றளவும் பொதுமைப் பண்புகளைப்
பெற்றுத் திகழ்கிறது. எனவே உலகமே வியப்பாக காணும் வகையில்
கன்னியாகுமரியில் 133 அடி உயர சிலை ஒன்றும் உள்ளது. நாடு,
மொழி, இனம், சமயம் அனைத்து கடந்த நிலையில் மனித குல
நலன்களை மட்டுமே கருத்திற் கொண்டு படைக்கப்பட்ட
நீதிக்களஞ்சியமாக திருவள்ளுவர் பொதுமைப் பண்போடு
படைத்துள்ளார். இதுபோன்ற அறிய இலக்கியச் செய்திகள் பொதுமைப்
பண்புகளைப் பெற்றுத் திகழ்கிறது. இதனை,
1. www.tamilvu.org
2. www.tamilheritage.org
3. www.koodal.com
போன்ற இணையதளங்களில் காணமுடிகின்றன.

4. நடுவுநிலைமை (Neutrality)

உலக இலக்கியங்கள் ஒவ்வொன்றும் ஒரு மதத்தைச் சார்ந்தோ,
அல்லது அந்நாட்டு மக்களுக்குக் கூறும் அறிவுரையாகவே தான்
அமைந்துள்ளன. (எ.கா. §.¡மரின் இலியட், ஒடிசி, சமஸ்கிருதத்தில்
மகாபாரதம், இராமாயணம்) ஆனால் தமிழ்மொழியில் அமைந்த சங்கத்
தொகுப்புப் பாடல்கள், அல்லது நீதி நூல்கள் அனைத்தும் நடுவு
நிலைமையோடு படைக்கப்பட்ட இலக்கியங்கள் ஆகும்.
புறநானூற்றில் ஔவையார் நல்ல வளர்ச்சிப் பெற்ற நாடாக
இருக்க வேண்டுமெனில் அது இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள்
அனைத்திற்கும் நடுநாயகமாக விளங்கும் பாடலைப்

”எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே” (புறம்-187)
என்று பாடியுள்ளார்.

அல்பர்ட் .ஸ்வைட்சர், ஏரியல் போன்ற மேலைநாட்டு அறிஞர்கள்
திருக்குறளை உலக மக்களின் ஒரே மறை நூல் என்று கூறி
வியக்கிறார்கள். இதற்கு அடிப்படைக் காரணம், அனைத்து
வேறுபாட்டுணர்வுகட்கும் அப்பாற்பட்ட நிலையில் மனித குலத்தை
மட்டும் மனதிற் கொண்டு நடுநிலைமையில் நெறி வகுத்துச்
சொல்வதுதான் காரணமாக அமைகின்றது.
1. www.kuralamutham.blogspot.com
2. www.thinnai.com
3. www.muthukamalam.com
4. www.tamilkalanjiyam.com
5. www.santhiran.com
போன்ற இணையதளங்களில் அதிகமான நடுநிலையான தமிழ்
இலக்கியச் செய்திகள் கிடைக்கின்றன.

5. தாய்மைத் தன்மை (Parental Kingship)

இன்று உலகெங்கிலும் பேசப்படும் பல்லாயிரக்கணக்கான
மொழிகளுக்கும் தாய்மொழி என்ற ஒன்று இருக்க வேண்டும். காலம்
செல்லச் செல்ல ஒலிகளின் கூறுபாட்டால் மாறி மருவி இன்று திரிந்தும்
பேசப்படுகிறது. இத்தகைய சூழலில் ஆதி மொழியாகப் பல்வேறு
மொழிகள் இருந்திருக்க வேண்டும். எ.கா. கிரேக்கம், ரோம், இத்தாலி,
போன்றவைகள். அதன் வரிசையில் தமிழும் இடம்பெற்றிருக்கிறது.
ஒரு காலத்தில் பூமி ஒரு பகுதியாக இருந்துள்ளது. இது அறிவியல்
உண்மை. பின்பு கடல்கோள்களால் பூமிப்பந்து பிளவுப்பட்டதால் பல
பாகங்களாகப் பிரிந்துள்ளன. இவற்றில் ஆசியா கண்டத்திலிருந்து
பிரிந்து ஐரோப்பா, அமெரிக்கா, ஆ.திரேலியா எனப் பெயர் பெற்று
விளங்குகிறது. இன்று கிரேக்க மொழி உலக மொழிகளில்
முதன்மையானது என்று கூறும் போக்கில் மறுப்பேதும் இல்லை.
அப்படியானால் கி.மு.484ல் கிரேக்க வரலாற்று நூலை எழுதிய
.ரிடோ. என்பவர் தமது நூலில் கிரேக்க இலக்கியத்தில் பல தமிழ்ச்
சொற்கள் இடம்பெற்றுள்ளன என்று குறிப்பிட்டுள்ளார். இதனைக்
கொண்டு நோக்கும் போது கிரேக்கத்துடன் தமிழ்மொழி நல்ல
இணக்கத்துடன் இருந்துள்ளது என்பது உண்மையாகின்றன.

இன்றும் இந்திய மொழிகளில் திராவிட மொழிக் குடும்பம்
என்பதற்குத் தலைமையாக, தாய்மையாக விளங்கும் மொழி
தமிழ்மொழியே என்று திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூலை
எழுதிய அறிஞர் கால்டுவெல் குறிப்பிட்டுள்ளதையும் ஆராய்ந்தால்
தமிழ்மொழி பல மொழிகளுக்குத் தாயாக விளங்கியது தெற்றெனப்
புலப்படும். இவைப் போன்ற இன்னும் பல அறியச் செய்திகளும்
இணையத்தில் அதிகமாகக் கிடைக்கின்றன.

1. www.kaniyatamil.com
2. www.koodal1.blogspot.com
3. www.tamilanbargal.com
4. www.palkalaikazhakam.com
5. www.facebook.com

6. பண்பாடு, கலை, பட்டறிவு வெளிப்பாடு.
(Arts and Culture)

இலக்கியங்கள் எழுதப்பட்ட அல்லது தோன்றிய காலக்
கட்டங்களில் வாழ்ந்த மக்களின் போக்கை முழுமையாக உணர்த்தும்
இலக்கியமே தலைசிறந்த இலக்கியங்களாக ஏற்றுக் கொள்ள முடியும்.
அவ்வகையில் சங்க இலக்கியம் தொடங்கி இக்கால இலக்கிய
படைப்புகள் அனைத்திலும் மக்களின் பண்பாடும், கலை அனுபவமும்,
பட்டறிவும் வெளிப்பட்டு நிற்கின்றன.

சங்க இலக்கியங்களில் பண்பாடு என்பது ஒரு மரபாகவே
கையாண்டுள்ளனர் சங்கப் புலவர்கள். தமிழரின் விருந்தோம்பல் பண்பு,
அனைத்து மக்களும் நல்லவர்களாக வாழும் எண்ணம், குறைவாகப்
பொருள் கிடைப்பின் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் சமதர்ம
மனநிலை, ஆடை அணிகலன்கள் என பண்பாட்டை உறுதிப்படுத்தும்
போக்கில் உள்ளன.

கலைகள், தமிழ் மக்கள் மற்றும் புலவர்களின் இலக்கியங்களால்
பரவலாகவும், மிகுதியாகவும் காணப்படுகின்றது. அந்தக் காலக்¡யகமாக விளங்கும் பாடலைப்
கட்டடக் கலையினை பட்டினப்பாலை, சிலப்பதிகாரம் வெளிக்
கொணர்கின்றன. மேலும் இயல், இசை, நாடகம் என்ற மூன்று
கலைகளும் ஒருங்கே பெற்று வளர்ந்து வந்துள்ளன. சிறியாழ்,
பேரியாழ், சடங்கோட்டு யாழ் என யாழ் அமைப்பும், அழகும்
வெகுவாக தமிழ் மக்களிடையே செல்வாக்குப் பெற்றுத்
திகழ்ந்திருக்கின்றன.

பட்டறிவு என்றால் புலவர்கள் தான்கண்ட, கேட்ட பல
செய்திகளையும் பாடல்களாகப் பதிவு செய்துள்ளனர்.
இருவேந்தர்களையும் சந்து செய்வித்து கோவூர்கிழார் பாடுகிறார். மூன்று
நிலப்பரப்பு மன்னர்கள் (சேர, சோழ, பாண்டியர்கள்) தங்களுக்குள்
போரிட்டுக் கொள்வதைத் தடுக்க இளங்கோவடிகளால் சிலப்பதிகாரம்
இயற்றப்படுகிறது. இவை போன்று எண்ணற்ற இலக்கியங்கள்
பட்டறிவின் வெளிப்பாடாக விளங்கி தமிழைத் தலை நிமிர்த்தி
நிற்கின்றன. இவைகள் பற்றிய மேலும் பல தகவல்களை

1. www.uyirmmai.com
2. www.thirutamil.blogspot.com
3. www.ta.wikipedia.org
4. www.ulakatamizhchemmozhi.org
5. www.tamilauthors.com

போன்ற இணைய தளங்களில் காணமுடிகின்றது.

7. பிறமொழித் தாக்கமில்லா தனித்தன்மை

தமிழ்மொழி பிறமொழித் தாக்கமில்லாத மொழியாக தொடக்க
காலத்தில் இருந்து வந்துள்ளன. சங்க இலக்கியம் இதற்குச் சான்றாகத்
திகழ்கின்றது. மேலும் உலக இலக்கண ஆசிரியரான தொல்காப்பியரின்
தொல்காப்பியத்தில் பிறமொழிக் கலப்பு இல்லை. இருந்தாலும்
பிறமொழிச் சொற்களை கடன் வாங்கிக் கொண்டு மீண்டும் அதனைத்
திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என வலியுறுத்துகிறார்.
ஒரு சிலவர் இவற்றில் பிறமொழிக் கலப்பு இருக்கிறது என்பர்.
ஆனால் ஓலைச்சுவடியிலிருந்து அச்சு வடிவம் பெற்ற போது சில
இடைச்செருகல்கள் நடந்துள்ளன.
தமிழ் மொழியில் பிறமொழிக் கலப்பில்லாமல் புது சொல்லை
உருவாக்க முடியும். ஆனால் ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு
மொழியில் புதிய சொல்லை உருவாக்க வேண்டுமானால் கிரேக்க
இலத்தீன், .ஹீப்ரூ, சமஸ்கிருத மொழிச் சொற்களைத்தான் நாடும் நிலை
உள்ளது.இச்சொல் ஆராய்ச்சியை ஆராய்ந்த எமனோவும், ப்ரோவோம்
”உலகத்து மொழிகளிலேயே மிக அதிகமான வேர்ச்சொற்களையுடைய
மொழியாகத் தமிழ் திகழ்கிறது” என்று கூறியுள்ளதே உண்மை
யாகின்றன.

இன்று விக்கிப்பீடியாவில் 175 மொழிகள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் தமிழ் மொழியைச் சார்ந்த கலைச் சொற்கள் உலகமொழிகளின்
வரிசையில் முதல் 10 இடத்தில் உள்ளது என்பது உண்மை. எனவே
தமிழ்மொழி பிறமொழிக் கலப்பு இல்லாமல் பன்னெடுங்காலம்
வாழ்ந்து வரும் செம்மொழியாகும்
.
1. www.kaniyatamil.com
2. www.tamilanbargal.com
3. www.infit.org
4.www.ta.wikipidia.org

8.இலக்கிய வளம் (Literary Prowy)

தமிழ் மொழி இந்தியாவில் தோன்றிய இந்திய மண்ணிற்கு
மட்டுமே தனிச்சிறப்பான இலக்கிய மரபினைக் கொண்டது. இந்த
இலக்கிய மரபு சமகிருதத்திலிருந்து பெறப்பட்டது அல்ல.
தென்னிந்தியாவில் சமஸ்கிருதமொழி செல்வாக்குப் பெறுவதற்கு
முன்னரே தமிழ்மொழியும் தமிழ் இலக்கியங்களும் தோன்றியுள்ளன.
அதிகமான இலக்கியங்கள் தோன்றிய காலத்தையே செம்மொழிக் காலம்
என்பர். அந்த வகையில் சங்க இலக்கிய காலம் மிகுதியான
இலக்கியங்களைப் பெற்ற காலம் எனலாம். இதனை செக் நாட்டு
அறிஞரும், ஆழ்ந்த தமிழ்ப்புலமையுடையவரான கமில் சுவலபில்
சங்க இலக்கியத்தை ஆய்ந்து 26,350 வரிகளில் அமைந்திருப்பதைக்
கணக்கிட்டு கூறியுள்ளார்.

அமெரிக்கப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் திரு.ஜார்ஜ்
எல்.ஹார்ட் அவர்கள் .உலக இலக்கிய வரலாற்றையும்
பலமொழிகளின் இலக்கியங்களையும் படித்துள்ளேன். ஆனால் தமிழ்
மொழியில் புறநானூற்றில் இருக்கும் வரலாற்றுக் கூறுகள் உலக
மொழிகளில் எங்குமே காணப்படவில்லை என்று தமிழ் மொழியின்
இலக்கிய வளத்தை உலகுக்கு எடுத்துக் காட்டுகிறார்.
மக்களைப் பற்றிப் பாடிய இலக்கியம், குடிமக்களைப் பற்றிப்
பாடிய குடிமக்கள் இலக்கியம் எனப் பெயர் பெற்ற சிலப்பதிகாரம்
மணிமேகலையும் இலக்கிய வளத்திற்குத் தக்க சான்றாக விளங்குகிறது.

9.உயர்சிந்தனை (Noble Ideas and Ideals)

செம்மொழித் தகுதிகளில் குறிப்பிடத்தகுந்தன உயர்சிந்தனைகள்
ஆகும். இலக்கியங்களில் உயர்சிந்தனைகளாக புலவர்கள் முன் வைக்க
காரணம் அவர்கள் நிகழ்கால மக்களுக்காக இலக்கியங்கள்
படைக்கவில்லை. இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு
வரும் மக்களுக்குப் பயன்படவேண்டும் என்ற உயர்சிந்தனைகளால்
படைத்துள்ளனர். அவைகளில் முடிமணியாய்த் திகழ்வன, ”யாதும்
ஊரே யாவரும் கேளீர்” என்ற கோட்பாடும், ”ஒன்றே குலம், ஒருவனே
தேவன்” என்ற வாழ்வியல் நெறியுமாகும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் எந்த
மொழியிலாவது, எந்த இலக்கியத்திலாவது இத்தகைய உயர்
சிந்தனைகள் பதிவாகி உள்ளனவா என்றால் இதுவரை இல்லை என்றே
கூறலாம்.

மேலும் உலக ஆசான் திருவள்ளுவரின் திருக்குறளும் ஒரு
மணிமகுடம். தமிழ் தமிழ்நாட்டில் எழுதப்பட்டிருப்பினும் தமிழன்
என்னும் சொற்கள் அறவே இடம் பெறவில்லை. அ•து உலகியலின்
உயரிய சிந்தனைக்கு எடுத்துக் காட்டாக விளங்குகிறது
.
1. www.kaniyathamil.com
2. www.duraiarasan.blogspot.com
3. www.muthukamalam.com
4. www.tamilanbargal.com
5. www.infit.org
6. www.ta.wikipedia.org

போன்ற இணையதளங்கள் வலைப்பூக்கள் மூலம் இதன்
தரவுகளைக் காணலாம்.

10.கலை இலக்கியத் தனித்தன்மை வெளிப்பாடு-
பங்களிப்பு

உலகில் வேறு எந்த மொழியிலும் இல்லாத ஒரு தனித்தன்மை
தமிழுக்கு மட்டுமே கிடைக்கப் பெற்றதாக உள்ளது. அவையே
முத்தமிழ் என்ற தனிச்சிறப்பு ஆகும்.

உலக இலக்கியங்களை ஒரே பார்வையில் ஆராய்ச்சியாளர்கள்
அணுகுவார்கள். தமிழ் மொழியை மட்டும் இயற்றமிழ், இசைத்தமிழ்,
நாடகத்தமிழ் என மூவகையாகக் காணும் போக்கு உயரிய
தனித்தன்மையாக விளங்குகிறது.

இம் முத்துறைகளும் ஒரே இலக்கியப் படைப்பில் இணைந்த
நிலையில் உருவாக்கப்பட்ட காப்பியமே தமிழில் முதன்முதலாக
உருவாக்கப்பட்ட சிலப்பதிகாரம் ஆகும். இதனைச் சிலப்பதிகாரப்
பாயிரத்திலேயே ஆசிரியர் இளங்கோவடிகள்

”இயலிசை நாடகப் பொருட் டொடர்
நிலைச் செய்யுள்”
எனக் கூறியிருப்பதைக் கொண்டு மூன்று தமிழும் ஒன்றிணைந்த
நிலையில் உருவாக்கப்பட்ட காம்பியமாக திகழ்கிறது.

11.மொழிக் கோட்பாடுகள் (Linguistic Principles)

செம்மொழித் தகுதிகளில் மொழிக் கோட்பாடுகளும் ஒன்று.
சாதாரணமாக .மொழி நூல். (Philology) அடிப்படையில் மொழியியல்
கோட்பாடுகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அளவுகோளாகக்
கொண்டு ஆராய்ச்சிகள் நடைபெற்று வந்தன. திராவிட ஒப்பிலக்கண
ஆய்வு நூல் எழுதிய கால்டுவெல் போன்றோர்கள் இந்த அடிப்படையில்
மொழியை ஆய்வு செய்தவர்களே ஆவார்.

இருபதாம் நூற்றாண்டில் அறிவியல் முறையிலும் அதன்
அடிப்படையிலும் மொழியியல் கொள்கையும் கோட்பாடும் மாற்றம்
பெற்றது. மொழியியல் (Linguistic) என்ற அடிப்படையில் மொழி
வல்லுநர்கள் ஆராய்ச்சி செய்ய முனைந்தனர்.

மொழியியலின் தந்தை எனப் போற்றப்படும் திரு எமனோ
அவர்கள் தொல்காப்பிய இலக்கண நூலை ஆய்வு செய்து வியந்து
போகின்றார். காரணம் தற்பொழுது வகுக்கப்பட்ட மொழியியலில்
கூறியுள்ள விதிகள் அச்சு மாறாமல் தொல்காப்பியர் பல ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே கூறியுள்ளதுதான்.

எழுத்ததிகாரத்தில் சொற்கள் (சொல்) பிறப்பியலில் எப்படி
எழுத்துக்கள் பிறக்கின்றன, அதன் உச்சரிப்பு ஒலிகள், போன்றவைகளை
அறிவியல் பூர்வமாக அமைத்துள்ளார். இ•து இன்றைய மொழிக்
கோட்பாடுகளுக்கெல்லாம் தந்தையாக விளங்கிய மொழி தமிழ் மொழி
என்பதில் பெருமையே ஆகும். மேலும் இது தொடர்பான தரவுகளை,

www.kaniyatamil.com
www.tamilnool.com
www.ta.wikipedia.com
www.akshayapaathram.blogspot.com
www.youtube.com
போன்ற இணையதளங்களில் காணலாம். மேலும் செம்மொழித்
தமிழ்த் தரவுகளாகப் பல இணையதளங்கள் உள்ளன. அவைகளில்
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு நிகழ்வுகளையும், அதில்
வாசிக்கப்பட்ட கட்டுரைகளையும் www.wctc2010.org என்ற
இணையதளத்தில் காட்சிப் படம் மூலம் நாம் கண்டு கருத்தைப்
பெறலாம்.இவைபோன்று வலைப்பூக்கள், இணையதளங்களின் வாயிலாக தமிழில்
தரவுகள் கிடைக்கின்றன. இது பல வகையான ஆராய்ச்சிகளுக்கும்
தமிழ் மொழியின் தரவுகளுக்கும் பெரிதும் பயன்படுகின்றன.

Tuesday, July 19, 2011

தொடுவானம்….மதுரை மாவட்ட நிர்வாகமும்,தமிழ் உலகம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் .

|0 comments
தொடுவானம்….மதுரை மாவட்ட நிர்வாகமும்,தமிழ் உலகம் அறக்கட்டளையும் இணைந்து நடத்திய கணினித்தமிழ் பயிலரங்கம் மதுரைமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதற்கட்டமாக 25 ஊராட்சிகளுக்கான தொடுவானம் பயிலரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. சகாயம் துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள்


தொடக்கத்தில் திரு.லதானந்த அவர்கள் மின் அட்சி என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.அவரைத்தொடர்ந்து திரு.தேனி.எம்.சுப்பிரமணி அவர்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் தொற்றம் அதன் வளர்சி மற்றும் பங்களிப்புப் பற்றி விவரித்துக்கூறினார்.

திரு.லதானந்த,திரு.மாயவரத்தான்,திரு. தேனி.எம்.சுப்பிரமணி,பேராசிரியர் சரவணன்.

வலைப்பூக்களின் தொடக்கம், அதன் வகைகள் பற்றி திரு.மாயவரத்தான் உரை நிகழ்தினார். அதனைத் தொடர்ந்து முனைவர் துரை.மணிகண்டன் கணினித்தமிழும்,தமிழில் தட்டச்சுப்பயிற்ச்சிகுறித்த கருத்துக்களை தெளிவுபட எடுந்துக் கூறினார்.



நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊராட்சிமன்ற எழுத்தர்கள்,மற்றும் கிராம தன்னார்வ தொண்டர்கள்.


நிகழ்ச்சியில் முனைவர் துரை.மணிகண்டன்
மதுரை ஆட்சியருடன் நிகழ்ச்சியில் பங்கேற்ற திரு.விஜயகுமார் திரு.மணிகண்டன், திரு.நாகமணி,திரு.வி.பி.மணிகண்டன்,திரு.செல்வமுரளி,திரு.லதானந்த.



மதியம் 2-மணிக்கு ஊராட்சி அலுவலர்களும் மற்றும் தன்னார்வ தொண்டர்களுக்கும்
தொடுவானம் வலைப்பாதிவில் எவ்வாறு மக்களின் குறைகளை பதியவேண்டும்,என்பது குறித்து திரு, செலவமுரளி, திரு.நாகமணி.முனைவர் துரை.மணிகண்டன்.விளக்கம் அளித்தனர்.
இறுதியாகா ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் தொடுவானம் நிகழ்ச்சியின் பயன்களைத் தொகுத்து விளக்கினார்.
. அவர் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் 25 லட்சத்து 62 ஆயிரத்து 279 பேர் உள்ளனர். இதில் ஊரக பகுதியில் மட்டும் 11 லட்சத்து 29 ஆயிரத்து 28 பேர் உள்ளனர். ஊராட்சி ஒன்றியங்கள் 13, கிராம ஊராட்சிகள் 431, பேரூராட்சிகள் 10, நகராட்சிகள் 3, மூன்றாம் நிலை நகராட்சிகள் 3 உள்ளன. தொடுவானம் என்ற இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் புதிய முயற்சி. இது முதற்கட்டமாக 25 கிராமங்களில் செயல்பட உள்ளது. ஒவ்வொரு ஊராட்சியில் இருந்தும் 5 பேருக்கு வழங்கப்படுகிறது. தொலை தூர கிராமங்களில் இருப்போர் கலெக்டரை சந்திக்க வேலை இழப்பு, பணச் செலவு, காலவிரயம் போன்றவற்றை சந்திக்கின்றனர்.

கிராமப்புற மக்கள் தங்களின் கோரிக்கை குறித்த மனுக்களை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கொடுப்பதற்காக தொலைதூரங்களில் இருந்து இங்கு வருகின்றனர். இதனால் அவர்களுக்கு ஒரு நாள் வேலை இழப்பு, பணச் செலவு, காலவிரயம் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்கவே இந்த தொடுவானம் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, கிராம மக்கள் அந்தந்த கிராம ஊராட்சிகளில் உள்ள கணினிகளில் இணையதளத்தைப் பயன்படுத்தி மின்னஞ்சல் மூலம் தங்களது கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியருக்கோ அல்லது சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கோ நேரடியாக அனுப்பலாம். அவ்வாறு அனுப்பப்படும் மனுக்களுக்கு ஒப்புதல் கடிதமும் கொடுக்கப்படும்.
இந்த மாவட்டத்தில் மொத்தம் 431 கிராம ஊராட்சிகள் உள்ளன. முதல் கட்டமாக 25 ஊராட்சிகளில் இந்த தொடுவானம் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று அவற்றை இணையதளம் மூலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதற்கான பணியை மேற்கொள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் 5 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இப்போது பயிற்சி அளிக்கப்படுகிறது. இது இந்த மாவட்ட நிர்வாகத்தின் ஓர் புதிய முயற்சியாகும்.
இந்தத் திட்டத்தை ஊராட்சியில் உள்ள அலுவலர்கள் திறம்பட செயல்படுத்தி கிராமப்புறத்துக்கும், நகர்ப்புறத்துக்கும் ஒரு பாலமாக செயல்பட வேண்டும் என்றார் ஆட்சியர்.

வாழ்க தொடுவானம் வளர்க மதுரை மக்கள்