/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, October 29, 2010

வகுப்பறை: தமிழ்மணம் நடத்திய பயிலரங்கம்!

|0 comments
வகுப்பறை: தமிழ்மணம் நடத்திய பயிலரங்கம்!
தமிழ் மணம் நடத்திய பயிலரங்க ம் நல்ல முன்மாதிரி. உண்மையில் அதில் கலந்துகொண்ட அனைவருகும் என் பாராட்டுக்கள்.
அன்புடன்
முனைவர் துரை.மணிகண்டன்.

Tuesday, August 31, 2010

இணையத்தில் தமிழ் கருத்தரங்கம்

|0 comments
25-8-2010 புதன் கிழமை திருச்சிராப்பள்ளி மாவட்டம் மண்ணச்சநல்லூரி சிதம்பரபிள்ளை மகளிர் கல்லூரியில் இணையத்தில் தமிழ் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைப்பெற்றது. இதில் நான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினேன். 
  கல்லூரி முதல்வர் முனைவர் கி.சேகர் தலைமையில் கல்லூரித் தமிழ்த்துறைத்தலைவர் இரா.மணிமேகலை முன்னிலையில் பேசினேன்.
 இணையத்தில் தமிழ் தோற்றம், இணைய அறிமுகம் மற்றும் தமிழ் மொழொயின் சிறப்பு, தமிழ் இணைய இதழ்களின் வளர்ச்சி, தமிழ் இணையப்பல்கலைக்கழகத்தின் தோற்றம் அவற்றில் உள்ள தமிழ் நூல்கள் ,தமிழ் மரபு அறக்கட்டளையின் பயன்பாடு குறித்தும் பேசப்பட்டது.

    மாணவிகள் இணையத்தை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்ற காட்சிமுறையில் விளக்கிக் குறிப்பிட்டேன்.பலர் கேட்ட வினாவிற்குத் தெளிவானமுறையில் இணையத்தைக்கொண்டு பதில்கொடுத்தேள்ளேன்.

 தமிழ்த்துறைப்பேராசிரியைகள் பலர் இது குறித்துக் கேட்டுத் தெரிந்துகொண்டனர். எம்மோடு பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கணிதத்துறைப்பேராசிரியர் வீரமணியும் உடன் வந்திருந்தார்.

Thursday, August 19, 2010

இணையமும் தமிழும் என்ற தலைப்பில் ஒளிப்படக் காட்சிமூலம்

|0 comments
வரும் 25-08-2010 புதன் கிழமை சிதம்பரம்பிள்ளை மகளீர் கல்லூரியில் இணையமும் தமிழும் என்ற தலைப்பில் ஒளிப்படக் காட்சிமூலம் உரை நிகழ்த்தவுள்ளேன். அதுசமயம் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.

டாக்டர் கலைஞர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

|0 comments

டாக்டர் கலைஞர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி[ பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி ]இலால்குடியில் தமிழ்த்துறைச் சார்பாக முத்தமிழ் மன்றத் தொடக்கவிழாவில் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் கலந்துகொண்டு ”சங்க இலக்கியத்தில் மனித நேயம்” என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். சங்க இலக்கியத்தில் கூறாதா மனிதநேயச்செய்திகளே இல்லையெனக் கூறலாம் என்றார். மேலும் ஓர் அறிவு உயிர்களுக்குச் செய்த தொண்டுதான் உலகில் அதிகம் பேசப்படுகிறது. அதை சங்க இலக்கியத்தில் பாரி, பேகன் போன்றோர்களின் மூலம் எடுத்துக்காட்டினார். மேலும் வள்ளலாரையும் எடுத்துக்காட்டிப் பேசினார். ஐயாவின் உரை மாணவ மாணவிகளுக்கும் பேராசிரிய பெருமக்களுக்கும் பயனுள்ளதாக இருந்தன.
முதுமனைவர் இரா.இளங்குமரனார் அவர்களுக்கு கல்லூரி முதல்வர் திரு தங்க.மதியழகன் நினைவுப்பரிசை வழங்குகிறார். இடமிருந்து வலமாக மாணவர் பிரபு பேராசிரியர்கள் முனைவர் துரை.மணிகண்டன். இரா. ஜெய்சங்கர், இராசா
|0 comments

முதுமுனைவர் இளங்குமரனார் அவர்களுக்குத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் துரை.மணிகண்டன் நினைவுப்பரிசினை வழங்குகிறார் அருகில் கல்லூரி முதல்வர் முனைவர் தங்க. மதியழகன் உள்ளார்.

Sunday, July 18, 2010

|0 comments
|0 comments
|0 comments
|0 comments

தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்

|3 comments
தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்


முனைவர். துரை. மணிகண்டன்.

உதவிப் பேராசியர், தமிழ்த்துறை,

டாக்டர் கலைஞர் கலை அறிவியல் கல்லூரி (பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி)

இலால்குடி, திருச்சிராப்பள்ளி.

மின்னஞ்சல்: mkduraimani@gmail.com

___________________________________________________________

முன்னுரை

21ஆம் நூற்றாண்டு அறிவியல் வளர்ச்சியில் அசைக்கமுடியாத இட்தைப் பெற்றிருப்பது இணையமாகும்.தகவல் தொழில் நுட்ப உலகில் இணையம் மிகப்பெரிய உதவிகளை மொழி, இனம், பாராமல் உலக மக்களுக்குச் செய்து வருகின்றது. இது விஞ்ஞானம், அறிவியல்,கணக்குகள் என்ற ஒரு குறிப்பிட்ட சிலவற்றிற்குப் பயன்படாமல் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் பங்காற்றி வருகின்றது. நெடிய பாரம்பரிய மிக்க தமிழ்மொழியும் இவ் இணையத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பெற்று வளர்ந்து வருகின்றது. இணையத்தில் எண்ணிலடங்கா இலக்கிய வகைகளைப்பெற்று வளர்ந்து வரும் தமிழ் மொழிக்கு ’வலைப்பூக்கள்’ என்ற புதிய இலக்கிய வகை தோன்றி பெரும் பங்காற்றிவருகிறது.வலைப்பூக்கள் என்றால் என்ன?அதன் தோற்றம், தமிழில் தோன்றிய வரலாறு,மற்றும் அதன் வகைகளாக இலக்கியம் சார்ந்த வலைப்பூக்கள்,பக்தி, ஆன்மீகம், கணிப்பொறி, மருத்துவம், பல்சுவைச் சார்ந்த வலைப்பூக்கள் என பகுக்கப்பட்டு ஒவ்வொன்றின் தமிழ் பயன்பாட்டையும் எடுத்து விளக்க இக்கட்டுரை விளைகிறது.

வலைப்பூ

ஒரு சமுதாயம் இன்றைய பணிகளை இன்றைய கருவி கொண்டு செய்ய வேண்டும்.இன்றைய பணியை நேற்றைய கருவிகொண்டு செய்யும் இனத்தின் நாளைய வாழ்வு நலியும். இது தவிர்க்க முடியாதது” என்று டாக்டர் வா.செ.குழைந்தைசாமி அவர்களின் கூற்றின்படி நாம் இன்றையப் பணியை இன்றைய கருவிக்கொண்டு செய்ய வேண்டும். அதன் அடிப்படையில்தான் நாம் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோம். அதில் வலைப்பூக்கள் என்ற ஒரு தனி இலக்கிய வகைத்தோன்றியுள்ளன. ஒருவரிடமிருந்து பிறருக்குத் தெரிவிக்கப் பயன்படுத்தப்படும் தகவல் தொடர்புக்கான எழுத்துக்கள், ஒலி, ஒளி வடிவக் கோப்புகள், ஓவியம், படங்கள் என்று அனைத்தையும் இணையம் வழியே தனிப்பட்ட ஒருவர் உலகில் இருக்கும் பிறருக்குத் தெரிவிக்க உதவும் இணைய வழியிலான ஒரு சேவையே வலைப்பூ என்பதாகும்.

வலைப்பூ என்பதை ஆங்கிலத்தில் பிளாக் (Blog) என்கிறார்கள். இதன் மூலம் வெப்பிளாக் (Webblog) என்பதாகும். 17-12-1997-ல் ஜார்ன் பெர்கர் (John Barger) என்பவர்தான் வலைப்பூவிற்கு ஆங்கிலத்தில் Webblog என்ற பெயரை உருவாக்கிப் பயன்படுத்தினார். இதன் பின்பு இதன் சுருக்க வடிவமான Blog எனும் பெயரை பீட்டர் மெர்ஹால்ஸ் (Peter Merholz) என்பவர் 1999 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பயன்படுத்தத் தொடங்கினார். இவரது வலைப்பதிவின் பக்கப் பட்டையில் Webblog எனும் சொல் இரண்டாக உடைக்கப்பட்டு We blog என்று பிரித்துக் கையாளத் தொடங்கினார். இப்படியே வலைப்பூவிற்கு Blog எனும் பெயர் நிலைத்து விட்டது.

தமிழ் வலைப்பூ

இந்த blog எனும் ஆங்கிலச் சொல்லிற்கு இணையாகத் தமிழில் ஒரு பெயர் உருவாக்க விரும்பிய போது தமிழ் உலகம் மற்றும் ராயர் காபி கிளப் மடலாடற் குழு (மின் குழுமம்) உறுப்பினர்கள் தங்கள் கலந்துரையாடல்களின் வழியாக blog-க்கு வலைப்பூ என்று தமிழில் பெயர் உருவாக்கினர். இன்று தமிழில் இந்த வலைப்பூ என்ற பெயரே பயன்பாட்டில் இருந்து வருகிறது.

வலைப்பூ சேவை

வலைப்பூ வசதிக்கான சேவையை முதன்முதலாக 1996 ஆம் ஆண்டில் எக்ஸான்யா (Xanya) எனும் நிறுவனம் வழங்கத் தொடங்கியது. 1997 ஆம் ஆண்டில் சுமார் 100 நாட்குறிப்பேடுகள் இடம் பெற்றன. அதன் பிறகு சில நிறுவனங்கள் வலைப்பூவிற்கான இலவச இடவசதியைச் செய்து கொடுத்தன. இந்நிறுவனங்களில் ஒன்று பிளாக்கர்ஸ்.காம் எனும் பெயரில் வலைப்பூ அமைப்பதற்கான சேவையை இலவசமாக அளித்து அதிகமான வலைப்பூக்களை அமைக்க வாய்ப்பளித்தது. இதன் மூலம் ஆங்கிலத்தில் பலர் தங்களுக்கான வலைப்பூக்களை உருவாக்கத் தொடங்கினர். இதன் வளர்ச்சியைக் கண்ட கூக்ளி (Google) நிறுவனம் இந்நிறுவனத்தை விலைக்குப் பெற்றது. அதன் பிறகு அனைத்து மொழிகளிலும் வலைப்பூ அமைப்பதற்கான சேவை அளிக்கப்பட்டது.

முதல் தமிழ் வலைப்பூ

தமிழ் மொழியிலான முதல் வலைப்பூவை நவன் என்கிற வலைப்பதிவர் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி 26-ல் உருவாக்கினார் என்று அவருடைய வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2003 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் தேதியன்றே கார்த்திக் ராமாஸ் என்பவர் முதல் வலைப்பூவை உருவாக்கினார் என்று சிந்தா நதி எனும் இணைய இதழில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இந்த இரு வலைப்பூக்களில் நவன் வலைப்பூ பிளாக்கர்ஸ்.காம் தளத்திலும்,(www.navan.name/blog/?p=18) கார்த்திக் ராமாஸ் வலைப்பூ பிளாக்டிரைவ் எனும் தளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கார்த்திகேயன் ராமசாமி (கார்த்திக் ராமாஸ்) எனும் வலைப்பதிவர் தமிழில் செய்த முதல் வலைப்பூ என்று பேராசிரியர் மு. இளங்கோவன் எட்டாவது தமிழ் இணைய மாநாட்டு மலரில் குறிப்பிட்டுள்ளார். தமிழ் விக்கிப்பீடியாவிலும் கார்த்திகேயன் ராமசாமி வலைப்பூதான் முதல் தமிழ் வலைப்பூ என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. (karthikramas.blogdrive.com/archive/21.html)

தமிழ் வலைப்பூக்கள் வளர்ச்சி

தமிழ் வலைப்பூக்கள் உருவாக்கம் மற்றும் பயன்கள் குறித்த கட்டுரை ஒன்று திசைகள் எனும் இணைய இதழில் வெளியானதைத் தொடர்ந்து தமிழ் வலைப்பூக்கள் குறித்துப் பலருக்கும் தெரியத் தொடங்கியது. தமிழ் வலைப்பூக்களின் தொடக்கக் காலத்தில் தமிழ் எழுத்துருப் பிரச்சனைகள் இருந்ததால் இதன் வளர்ச்சி சற்றுக் குறைவாகவே இருந்தது. 2003 ஆம் ஆண்டிலிருந்து 2005 ஆம் ஆண்டு வரை சுமார் 1000 வலைப்பூக்கள் வரையே தோன்றியிருந்தன. அதற்கடுத்து 2005 முதல் 2007 ஆம் ஆண்டு வரையான காலத்தில் இந்த எண்ணிக்கை 4000 ஆக அதிகரித்தது என்று பேராசிரியர் க.துரையரசன் எழுதிய இணையமும் இனிய தமிழும்” என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அதற்கடுத்து தமிழ் வலைப்பூக்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து 12000-ஐத் தாண்டிவிட்டது. இது இன்னும் பன்மடங்காக உயரக் கூடும்.

தமிழ் வலைப்பூக்களின் வகைப்பாடுகள் வளர்ச்சியும்

தமிழ் வலைப்பூக்களின் உள்ளடக்கத்தைக் கொண்டு முக்கியமான சில தலைப்புகளின் கீழ் அவற்றை வகைப்படுத்தலாம்.

1. தமிழ் வலைப்பூக்களில் அதிகமாக கவிதைகளுக்கான வலைப்பூக்கள் இருக்கின்றன. வலைப்பூக்களை உருவாகியிருக்கும் பல வலைப்பதிவர்கள் தங்கள் கவிதைகளை அவர்களுக்கான வலைப்பூக்களில் அதிக அளவில் வலையேற்றம் செய்து வருகிறார்கள்.

எடுத்துக்காட்டாக கவினுலகம் என்னும் வலைப்பூ முனைவர் நா. கண்ணன் அவர்களால் உருவாக்கப்பட்டது. இந்த வலைப்பூவில் இலக்கியம் சார்ந்த பல்வேறு கருத்துக்கள் கட்டுரை வடிவிலும், கருத்துரையின் மூலமும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. ஜுலை 2003-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டுள்ளது. (www.emadal.blogspot.com)

2. இந்தக் கவிதைகளுக்கான வலைப்பூக்களைத் தவிர தமிழாசிரியர்களாகவும், பேராசிரியர்களாகவும் பணியாற்றி வரும் சிலர் தமிழ் இலக்கியம் சார்ந்த கருத்துக்களைப் பதிவேற்றி வருகின்றனர். மானிடன் என்ற பெயரில் தமிழ் இணைப் பேராசிரியருமான முனைவர் மு. பழநியப்பன். அவர்களால் இவ்வலைப்பூ 25.04.06-ல் உருவாக்கப்பட்டது. இவ்வலைப்பூவில் அதிக அளவில் கவிதைகளும் கட்டுரைகளும் இருக்கின்றன. தமிழ் இலக்கியங்களின் பரிமாணங்களைத் தனக்கே உரிய புதிய சிந்தனைகளுடன் இங்கு பதிவேற்றம் செய்துள்ளார். (www.manidar.blogspot.com) மு இளங்கோவன் என்ற பெயரில் ஒரு வலைப்பூ 1.5.2007 முதல் இயங்கி வருகிறது.பேராசிரியர் மு.இளங்கோவனால் வெளியிடப்படுகிறது. இதில் 300 இடுகைகள் வரை இடம் பெற்றுள்ளன. இவர் நாள்தோறும் புதிய புதிய இடுகைகளைப் பதிவேற்றம் செய்த வண்ணம் உள்ளார். இவரது கட்டுரைகள் இலக்கியத்தரம் வாய்ந்ததும் தெளிந்த நடையுடையதுமாக அமைந்துள்ளன. இவ்வலைப்பூவிலிருந்து பிற வலைதளங்களுக்குச் செல்லும் இணைப்பு வசதியும் செய்யப்பட்டுள்ளது. இங்கு பழம்பெரும் இலக்கியவாதிகளின் தொகுப்புகள் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது. (mwww.mvelangovan.blogspot.com)

3. ஆன்மீக ஈடுபாடுடைய பலர் அவரவர்க்குப் பிடித்த ஆன்மீகக் கருத்துக்களை வலியுறுத்தும் விதமாக இந்து, இசுலாம், கிறித்தவம், பவுத்தம் மற்றும் பிற ஆன்மீகக் கருத்துக்களைக் கொண்டு தமிழில் வலைப்பதிவு செய்து வருகின்றனர். கந்தர் அலங்காரம் என்ற பெயரில் கண்ணதாசன் மற்றும் ரவிசங்கர் என்பவர்களால் 2005-ல் தொங்கப்பட்ட இவ்வலைப்பூ உலக்த தமிழர்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டதாகும். இந்த வலைப்பூ தவிர இந்து மதத்தின் மேல் கொண்ட ஆர்வத்தின் காரணமாக திருப்பள்ளியெழுச்சி என்று மற்றொரு வலைப்பூவையும் இவர் உருவாக்கியுள்ளார். முருகப் பெருமானின் புகைப்படங்கள், பெருமைகள், விஷ்ணு பகவான் குறித்த பல செய்திகளும் சுப்ரபாதம், தோத்திரங்கள் என்று பக்தியின் உயர்வு நிலையைத் தாங்கி வெளிவந்து கொண்டிருக்கிறது. (www.murugaperuman.blogspot.com)

4. இணையப் பயன்பாட்டில் அதிகமாகப் பங்கு கொள்ளும் கணினிக்கான தொழில்நுட்பப் பணியிலிருக்கும் பலர் கணினி தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் விதமாக உருவாக்கிய பல தமிழ் வலைப்பூக்கள் இருக்கின்றன. அவைகளில் சில மென்பொருட்கள் ஏப்ரல் 2005 முதல் தொடங்கப்பட்ட இவ்வலைப்பூவில் தமிழில் கணிப்பொறியை எவ்வாறு இயக்குவது, தமிழ் மென்பொருட்களின் பட்டியல்கள், என பல தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் உள்ளன. கணினி, இணையம் பற்றிய சில செய்திகளும் இந்த வலைப்பூவில் தரப்பட்டுள்ளன. (www.tamiltools.blogspot.com)

5. விண்வெளி, அறிவியல், கணிதம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தும் சில வலைப்பூக்களையும் தமிழில் சிலர் உருவாக்கியுள்ளனர்.

குருவிகள் என்ற பெயரில் ஜுலை 2003லிருந்து தொடங்கப்பட்ட இவ்வலைப்பூவில் அறிவியல் செய்திகள் குறித்த கட்டுரைகளும், புகைப்படங்களும் அதிகமாக இடம் பெற்றுள்ளன. இந்த வலைப்பதிவர் குறித்த தகவல்களை அறிய முடியவில்லை. தமிழ் சினிமா செய்திகள் அவை குறித்த விமர்சனங்கள், நகைச்சுவை, அரிய புகைப்படங்கள் எனும் பார்வையிலான செய்திகளுடன் பல தமிழ் வலைப்பூக்கள் இருக்கின்றன.

மருத்துவக் குறிப்புகள், மருந்துகள் அதைப் பயன்படுத்தும் முறைகள் என்று மருத்துவம் சார்ந்த சில வலைப்பூக்கள் தமிழில் உள்ளன. இந்த தமிழ் வலைப்பூக்களில் சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் இயற்கை மருத்துவங்களிலான வலைப்பூக்களே இருக்கின்றன. மூலிகை வளம் என்ற பெயரில் குப்புசாமி என்பவரால் 2007-ல் உருவாக்கப்பட்டுள்ள இந்த வலைப்பூவில் பல மூலிகைச் செடிகள் குறித்தும் அவற்றின் தாவரப் பெயர், தாவரக் குடும்பம், வழக்கத்திலிருக்கும் அதற்கான வேறு பெயர்கள், பயன் தரும் பாகங்கள் போன்றவைகளைப் புகைப்படத்துடன் தந்துள்ளார். இவை தவிர பல நோய்களுக்கு மூலிகை மருந்துகள் குறித்த தகவல்களும் கொடுத்திருப்பது நல்ல பயனுள்ளதாக இருக்கிறது. (wwwww.mooligaivazam-kuppusamy.blogspot.com)

6. பெண் உடல் நலம், பெண்களுக்கான சுதந்திரம், வேலைவாய்ப்பு போன்ற ஒரு சில பெண்களுக்கான சிறந்த வலைப்பூக்களும் தமிழில் உருவாகியிருக்கின்றன.

சாதனைப் பெண்கள் என்ற பெயரில் ஜெர்மனியிலிருக்கும் திருமதி. சந்திரவதனா செல்வகுமாரால் உருவாக்கப்பட்ட சில வலைப்பூக்களில் இதுவும் ஒன்று. இந்த வலைப்பூவில் பல அச்சிததழ்களில் வெளியான சில முக்கியப் பெண்மணிகளைப் பற்றிய செய்திகளைத் தொகுத்தளித்துள்ளார்.. (www.vippenn.blogspot.com)

தமிழ் வளர்ச்சியில் வலைப்பூக்கள்

I. வலைப்பூக்களின் வருகையால் தமிழ் மொழி இலக்கியங்கள் வெளியுலக மக்களுக்குத் தெரிய வருகின்றன.

II. தமிழில் இணையத்தில் எழுதுபவர்கள் பெறுகியுள்ளனர். இதனால் தமிழின் வளர்ச்சி உயர்ந்துள்ளது.

III. வலைப்பூக்களால் உலக நாடுகள் பலவற்றில் வாழும் தமிழ் மக்களின் கருத்துக்கள் மிக விரைவாக கிடக்கின்றன.

IV. இலங்கை,மலேசியா, கனடா,தென்கொரியா, சிங்கப்பூர், அரபு நாடுகள் போன்றவற்றில் வாழும் மக்களின் படைப்புகள் தமிழ்மொழியில் இருப்பதால் அனைவரும் கருத்தைப் பகிர்த்துகொள்ள முடிகிறது.

V. தமிழ் மொழியின் இலக்கண, இலக்கியங்களானா சங்க இலக்கியம் முதல்கொண்டு இக்கால இலக்கியங்கள் வரை வலைப்பூவினால் உலகத் தமிழ்ர்களுக்குக் கிடக்கிறது. இதனால் தமிழ் மொழி வளர்ச்சிப் பெற்றுவருகிறது.

VI. இவைகள் அன்றி கணிப்பொறிச் சார்ந்த தகவல்கள் அதிகம் கிடைக்கின்றன.

அறிவியல், விஞ்ஞாணக் கருத்துக்களும் அது தொடர்பான புதிய கண்டுபிடிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றது.

VII. உலக நாடுகளில் உள்ள சைவ மடாலயங்களும், திருத்தலங்களும் பற்றியச் செய்திகள் இடம்பெற்றுள்ளன்.

VIII. தமிழ் ஆய்வுக்கட்டுரைகள் அதிகம் வலைப்பூக்களில் வெளிவருகின்றன. இதனால் தமிழ் ஆய்விற்குப் பல வழிகளில் பயன்படுகின்றன.

IX. வலைப்பூவினால் தொழில் நுட்ப வளர்ச்சிச் பெற்றுத் தமிழ்மொழி வளர்ந்து வருகின்றது.

X. வலைப்பூகளில் வெளிவரும் படைப்புகளும், கட்டுரைகளும், கவிதைகளும், பிற கருத்துக்களுக்கும் உடனுக்குடன் பின்னூட்டம் என்ற பெயரில் விமர்சனங்கள் பல நாடுகளிலிருந்து எழுதுகின்றனர். இது தமிழ் மொழிக்குக் கிடைத்த விமர்சன இலக்கியம் என்றே கூறலாம். மேலும் பல துறைகளைச் சார்ந்த அறிஞர் பெருமக்களும் தமிழ் மொழிக்குத் தன்னால் இயன்ற பனிகளையும் செய்து வருகின்றனர்.

முடிவுரை

எப்படி இலக்கிய வரலாற்றில் சங்க காலம், சங்கம் மருவிய காலம், பக்தி இலக்கிய காலம், காப்பியக் காலம், சிற்றிலக்கிய காலம், ஐரோப்பியர் காலம் என்கின்றோமோ அதனைப் போன்று இன்றைய காலக் கட்டத்தைக் “கணினியுக காலம்” அல்லது “தமிழ் இணையக் காலம்” எனலாம்.புதிய இலக்கிய வகையாக வலைப்பூ உருவாகி உலக மொழிகளில் தமிழின் பெருமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறது. iஇதனால் பலவகைப்ப்ட்ட தமிழ் இலக்கியங்கள் வெளி உலகுக்கு விரைவாகக் கொண்டுசெல்லப்படுகிறது. இதனால் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வலைப்பூக்களின் பங்களிப்பு அளப்பரியாத் தொண்டினைச் செய்து வருகிறது எனலாம்.

.நன்றி.

Tuesday, March 30, 2010

புறநானூற்றில் மனித நேய கொள்கைகள்

|0 comments
உலக இலக்கிய வரலாற்று நூல்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த நூலகக் கருதப்படுவது புறநானூறு என்ற எட்டுத்தொகை நூலாகும். அமெரிக்கப் பல்கலைக் கழகப் பேராசிரியர் திரு. ஜார்ஜ்.எல்.ஹார்ட் என்பவர் “நானும் உலக இலக்கியங்களில் பல வரலாற்று நூல்களைப் படித்துள்ளேன். இருந்தாலும் புறநானூற்றில் உள்ள வரலாற்றுச் செய்திகளைப் போல வேறு எந்த நாட்டு இலக்கியங்களிலும் காண முடியவில்லை” என்று கூறுகிறார். அத்தகைய சிறப்பப் பொருந்திய இப் புறநானூற்றில் பல்வகை இலக்கிய வரலாற்று கூறுகள் இடம் பெற்றிருந்தாலும் மனித நேய கொள்கைகளும் இவற்றில் பொதிந்துள்ளதை இக்கட்டுரையில் காணலாம். மனித நேயம் [Humanism]மனித நேயம் என்பது பிறர் துயர் கொண்ட போது உதவுதலும் பிறருக்காக வாழ்தலுமாகும். நாடு, இனம், மொழி வேறுபாடு கருதாது அனைவருக்கும் பொதுவாக வாழும் வாழ்வே மனித நேய வாழ்வாகும்.“ ‘மனித நேயம’ என்ற சொல் மனிதர்களிடையே காணப்படும் நேயத்தைச் சுட்டும். ‘நேயம’; என்ற சொல் ‘நேசம’; என்றும் வழங்கப்படுகிறது. நேயம், நேசம் என்ற சொல்லுக்கு ‘அன்பு’ என்று தமிழ்ப் பேரகராதி பொருள் தருகிறது”.‘அன்பு’ என்பதற்கு “ஒருவரின் மனம் நெகிழும்படியாக மற்றொருவர் அவர் மேல் வெளிப்படுத்தும் நேசமும் நட்பும் கலந்த உணர்வு” என்று க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகிறது.இரா. சக்குபாய் “உலகம் போரின்றி வாழவும், உலக மக்களிடையே அன்பு தழைக்கவும் ஏற்றத் தாழ்வுகள் இல்லாதது ஒழிந்து ஒப்புரவு நிலைக்கவும் வழிவகுக்கும் ஓர் உயரிய கோட்பாடே மனித நேயம்” என விளக்கம் தருகிறார். மனித நேயக் கொள்கைகள் [Theory of Humanism]உலகம் முழுக்க செஞ்சிலுவைச் சங்கம் [Red Cross Society] என்ற ஓர் அமைப்பு உண்டு. இதனை நிறுவியர் ஹென்றி டூணாண்ட் என்ற சுவிஸ் நாட்டு அறிஞர். மனித குலத்திற்கு எவ்வகையில் துன்பம் நேர்ந்தாலும் உடனே அங்கு சென்று முதலுதவி செய்து அம்மக்களின் மறுவாழ்வு வரையிலும் உதவி செய்யும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் தான்.இரு நாடுகளுக்கிடையே ஏற்படும் போராக இருந்தாலும், பூகம்பமாக இருந்தாலும் ஆழிப்பேரலையாக இருப்பினும் எரிமலை வெடிப்பாக இருப்பினும் தீவிரவாதத் தாக்குதலாக இருப்பினும் மக்கள் பாதிப்பிற்கு ஆளாகும் போது உடனே சென்று உணவு, உடை, தங்குவதற்குத் தேவையான குழல்கள் போன்றவைகளை மனிதாபிமான முறையில் உதவி புரிகிறது. இதற்கு நாடு, இனம், மொழி பாராமல் இப்பணித் தொடர்கிறது. இச்செயலை சுமார் 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் செஞ்சிலுவைச் சங்கத்தைவிடப் பெரிய அளவில் உதவி புரியும் நோக்கில் சேரமான் பெருஞ்சோற்று உதியன் செயல் புரிந்துள்ளான். இவன் ஆட்சி புரிந்ததோ தென்னிந்தியாவைச் சேர்ந்த அக்காலத் தமிழகம் பாரத போர் நடைபெற்றதோ வட இந்தியாவில் ஜகுருஷேத்திரம்ஸ பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் படை வீரர்களுக்கும், போரில் காயம்பட்டவர்களுக்கும் உணவு அளித்து உபசரித்துள்ளான் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடல் மூலம் அறிய முடிகிறது.“அலங்குனைப் புரவி ஐவரோடு சினைவிநிலந்தலைக் கொண்ட பொலம் ப+ந்தும்பைஈரைம் பதின்மரும் பொழுது களத்து ஒழியப்பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்” (புறம் - 2)உணவு அளிப்பது என்பது ஒரு கொடை செயல்தான் என்றாலும், மனித நேய அடிப்படையிலான இச்செயலாகப் பார்க்க முடிகின்றது. போர்க்களத்தில் இம்மன்னன் உணவு அளித்தது வேறு எந்த உள்நோக்கம் கருதியதாக பாடலில் சான்றாதாரம் இல்லை. எனவே இம்மன்னனின் உதவி கைம்மாறு கருதாத மாண்புரும் மனித நேயமே என்று கொள்ளலாம். ஒற்றுமைக் கொள்கைகள் [Principles of Unity]உலக இனம் ஒற்றுமையுடனும், மகிழ்ச்சியாகவும் வாழத்தான் விரும்புகிறது. ஆனால் இடையில் மதம், இனம், நாடு, மொழி என்ற பிரிவினைவாத நோய் மக்களை ஆட்கொண்டுவிட்டது. இதிலிருந்து விடுதலை அடைய வேண்டும். அப்பொழுதுதான் மக்கள் சமூகம் உயர்ந்த நிலையை அடைய முடியும்.இதனைக் கருத்தில் கொண்டுதான் என்னவோ பழந்தமிழ்ப் புலவன் உலக ஒற்றுமைக்கு முதன் முதலில் வித்திட்ட உலகப் புலவன் கணியன் பூங்குன்றனனின்,“யாதும் ஊரே யாவரும் கேளீர்தீதும் நன்றும் பிறர்தர வாரா” (புறம் - 192)என்ற பொன்னெழுத்துக்களால் இன்று உலக மனிதநேய ஒற்றுமைக்கு வித்திட்ட ஒப்பற்றவன் என்பது புலனாகிறது. அனைவரும் நம் உறவினர். நாம் அனைவரும் ஒரே நாட்டைச் சார்ந்தவர் என்று மக்களிடத்தே எடுத்தியம்பியுள்ள கொள்கைகள் ஆகும். இதனை அடியொற்றியே வெண்டல் வில்கி என்ற அமெரிக்க அரசியல் அறிஞர் எழுதி வெளியிட்ட ‘ஓர் உலகம்’ எனும் நூலில் வருங்காலத்தில் நம் சிந்தனை உலகளாவிய முறையில் பரந்திருத்தல் வேண்டும் [In future our thinking be world wise) என்ற கருத்தை யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற வரியிலிருந்து எடுத்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.சோழ மன்னர்களாகிய நலகிள்ளி, நெடுகிள்ளி இருவரும் பகைவர்கள். நலங்கிள்ளியின் நாட்டிலிருந்து நெடுங்கிள்ளி ஆட்சி செய்யும் உறைய+ருக்கு இளந்தத்தன் என்னும் புலவர் வருகிறார். பகை நாட்டிலிருந்து வந்ததால் இளந்தத்தனை ஒற்றன் எனக் கருதி நெடுங்கிள்ளி அவனை கொல்ல முற்பட்டான். இதனைக் கேள்வியுற்ற கோவ+ர்க் கிழார் அவ்விடம் சென்று,“வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகிநெடிய என்னாது சுரம்பல கடந்து............. ............... ................. ..................வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைபிறர்க்குத் தீதறிந் தன்றோ (புறம் 47 – 1 – 7)எனப் பாடினார். இளந்தத்தனை விடுவிப்பது நல்லது. இல்லையேல் உங்களுக்குள் போர் தொடங்குவதை யாரும் தடுக்க முடியாது என்று கூறி அவனை விடுதலை செய்ய வைத்து இருவரையும் சேர்த்து வைத்து ஒற்றுமைக் கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார். அறக்கொள்கைகள் [Doctrinrs of Morality)ஒருவன் சேர்த்து வைத்த அல்லது சம்பாதித்த பொருள்களையோ, செல்வத்தையோ மற்றவர்களுக்குக் கொடுத்து உதவும் பாங்கே அறக்கொள்கைகள் ஆகும். இன்று உலகில் 55மூ பேர் ஒருவேளை உணவு இல்லாமல் வாழ்கிறார்கள் என்று ஐ.நா. கணக்கெடுப்புக் கூறுகிறது. (பார்க்க. தமிழ்விக்கிபீடியா) இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் புறநானூற்றுப் புலவர்களும், மன்னர்களும் பாடல்களாக உலகமக்களுக்குக் கருத்தை வழங்கியுள்ளனரோ என்ற வினா எழும்புகிறது.வறுமையுற்ற நிலையில் பெருஞ்சித்திரனார் என்ற புலவன் பொருள் தேடி பரிசில் பெற செல்கிறான். அவன் குடும்பச்சூழலோ மிகவும் பரிதாபத்திற்குரியதாக உள்ளது. குமணனிடம் சென்று தன் குடும்ப வறுமையை எடுத்துரைக்கிறார். மன்னனும் பொன்னும் பொருளும் பரிசாகத் தந்து அனுப்பி வைக்கின்றான். வந்தவன் தான் மட்டும் அப்பரிசுப் பொருளை அனுபவிக்காமல் தன் மனைவியிடம் கூறும் பாங்கு உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் உரைக்கும் அறக் கொள்கையாக குறிப்பிடுகிறார்.நின்னயந் துறைநர்க்கும் நீநயந் துறைநர்க்கும்பன்மாண் கற்பினின் கினைமுத லோர்க்கும்கடும்பின் கடும்பசி தீர யாடி நின்நெடுங்குறி யெதிர்ப்பை நல்கி லோர்க்கும்இன்னேர்க் கென்னது என்னேடுஞ் சூடியதுவல்லாங்கு வாழ்து மென்னது நீயும்கொடுமதி மனைகிழ வோயே...” (புறம்.173)என்று உண்ண விரும்பியவர்க்கும், நீ விரும்பியவருக்கும், உன் உற்றார் உறவினர்களுக்கும், பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று முன்பு உனக்குக் கொடுத்தவருக்கும,; கொடுமையான கொடும் பசிதீர எல்லோருக்கும் இன்னார்க்கும் என்று இல்லாமல் என்னிடமும் கேளாமல் இப்பொருளை வைத்துக் கொண்டு வளமாக வாழ்வோம் என்று எண்ணாமல் மன்னர் கொடுத்த பிரிசிலை எல்லோருக்கும் கொடு என்று தன் மனைவியிடம் கூறும் பெருஞ்சித்திரனாரின் கருத்து உலக மக்களுக்குச் சொல்லபட்டவையாக அமைந்துள்ளன.மன்னர்களும் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர். உலகத்தில் அரிதாகக் கிடைக்கக் கூடிய இறைவனே வந்து கொடுத்த சிறப்பு பொருந்திய உணவாக இருந்தாலும் அதனைத் தான் மட்டும் உண்ணாமல் உலகில் உள்ள அனைவருக்கும் கொடுத்து உண்ணுவேன் என்று கூறிய அறக் கொள்கையைக் கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி,உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர்அமிழ்தம் இயைவதாயினும் இனிது எனத்தமியர் உண்டலும் இலரே (புறம்.182-1-3)என்ற பாடல் அடிகளின் மூலம் அமிழ்தமாக இருந்தாலும் அனைவருக்கும் பகிர்ந்தளிப்பேன் என்ற செய்தியைப் புறநானூறு பதிவு செய்துள்ளது. பிறர் உயிர்களைப் பேணும் கொள்கைகள் [Paying respect in the theory]மனிதன் மனிதனுக்கு உதவுதல் உலகில் பல இடங்களில் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. அது மனிதநேயம் என்றாலும், ஆறரிவு மக்கள் இன்றி ஓர் அறிவு உயிர் முதல் ஐந்தறிவு உயிர்வரை உள்ள பிற உயிர்களுக்கு மனித நேயத்தோடு தொண்டுகள் செய்யும் உயரிய நோக்கத்தைக் கொண்டவர்கள் நம் தமிழர்கள்.கடையெழு வள்ளல்கள் என்று அழைக்கப்படுகின்ற பாரி, காரி, ஓரி, ஆய், அதியமான், பேகன், நள்ளி போன்றவர்களில் ஒருசிலர் பிற உயிர்களுக்கும் மனிதநேய அடிப்படையில் உதவிகள் செய்துள்ளனர்.முல்லைக் கொடிக்குத் தேர்க்கொடுத்த பாரி மன்னன் பற்றி படர்வதற்கு ஒரு கொழுக்கொம்பு இல்லையென்பதை பார்த்த பாரியின் மனம் துனுக்குற்று உடனே தான் ஏறிவந்த தேரைக் கொடிப்படர்வதற்கு வி;;ட்டு விட்டு வந்துள்ளான். மன்னன் எதிர்பார்த்து இதனைச் செய்யவில்லை. முல்லைக்கொடியின் பரிதவிப்பு மன்னனை எந்த அளவிற்கு மனம் மாற்றியுள்ளது! இதைவிட மனிதநேயத்திற்கு உலகில் எங்கும் எடுத்துக்காட்டு இல்லை.மயில் குளிரில் நடுங்குவதாக எண்ணி அதற்குப் போர்வைத் தந்த மன்னன் பேகன். என்ன ஒரு நிகழ்ச்சி. பிற உயிர்களிடத்தும் மனிதன் எப்படி மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையைப் புறநானூறு படம் பிடித்துக் காட்டியுள்ளது.உலக இனம் தழைக்க, மனித நேயம் வளர்ந்து அனைவரும் மனிதநேயத்தோடு வாழவேண்டும். இல்லையென்றால் உலகம் போரிலும், இனச் சண்டையாலும் மாய்ந்துவிடும் இல்லை அழிந்து போகும். இதனைத் தடுத்து நிறுத்தும் வகையில் உலக மக்களுக்கு மனிதநேயக் கொள்கைகளாகவும், ஒற்றுமை உணர்வுடன் அனைவரும் வாழவேண்டும் என்றும், பிறருக்குக் கொடுத்து உதவும் மனப்பாங்கைப் பெற்று வளர அறக்கொள்கைகளைப் பின்பற்றி வாழ வேண்டும். இவை மட்டுமல்லாமல் பிற உயிரினங்களையும் பேணுதல், பாதுகாத்தல் மனித இனத்தின் தலையாய கடமைகளாக இருக்கின்றன. இவையாவும் புராதான நூலான, திராவிட இலக்கியமானப் புறநானூற்றில் காணப்படும் கருத்துச் செய்திகளாகும். இவ்வழியைப் பின்பற்றி கருத்தை மனத்தில் இருத்தி பிறருக்கு உதவிகள் புரிந்து மகிழ்ச்சியோடு வாழ வேண்டியது நமது கடமையாகும்.
ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள் மற்றும் இணையத்தளங்கள்
1. புறநானூறு மூலமும் உரையும், டாக்டர். உ. வே.சா.
2. தமிழ் இலக்கியங்களில் காணலாகும் மனிதநேயமும் மத நல்லிணக்கமும், தமிழாய்வுத்துறை, தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.
3. மார்ச்சு மாதம் காலச்சுவடு, 2007.
4. www.ta.wikipidia.ஒர்க்
5. www.pathivukal.கம
6. www.muthukumalam.கம