/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Wednesday, July 29, 2009

கவிஞர் திலகபாமா


கவிஞர் திலகபாமா


நவீன தமிழ் இலக்கியச் சூழலில் பெண் கவிஞர்களில் இன்று பலர் எழுதத் தொடங்கிவிட்டனர். அவர்களில் திலகபாமாவும் ஒருவர்.

” எட்டாவது பிறவி”, ’கூர்ப்பச்சையங்கள்’,’கண்ணாடி பாதரட்சைகள்’, சூரியனுக்கும் கிழக்கே’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும்;’ நனைந்த நதி’என்ற சிறுகதைத் தொகுப்பும்;’புதுமைப்பித்தனில் பூமத்தியரேகை’ என்ற கட்டுரைத் தொகுப்பும் எழுதியுள்ளார்.’வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு’ என்றொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளார். இவரது கவிதைத்தொகுப்பிற்குக் கோவை சிற்பி இலக்கியப் பரிசு கிடைத்துள்ளது. ஏர்வாடி ராதாகிருஷ்ணன் வழங்கிய கவிதை உறவு பரிசையும் பெற்றுள்ளார். இலங்கையில் இருந்துவரும் தமிழ் தினசரியான ‘வீரகேசரி’ பத்திரிக்கையும், லண்டனில் உள்ள பூபாள ராக அமைப்பும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை முதல் பரிசைப் பெற்றுள்ளது.

ஐரோப்பியாவில் நடந்த இலக்கியக்கூட்டங்கள் பலவற்றில் சொற்பொழிவாற்றியுள்ளார். மேலும் இன்றைய அறிவியல் வளர்ச்சியான இணையத்திலும் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.

0 comments: