/// / /// எமது நூல்களான “தமிழ்க் கணினி இணையப் பயன்பாடுகள்”, “இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்”, “இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்”, “இணையமும் தமிழும்” "ஊடகவியல்” ஆகிய நூல்கள் சைவ சிந்தாந்தாந்த நூற்பதிப்புக்கழகம், சத்திரம் பேருந்து நிலையம், திருச்சிராப்பள்ளி : - முருகன் புக் ஸ்டோர், தஞ்சாவூர். வி.கே .என் புக் ஹவுஸ் டி.நகர், சென்னை தொடர்பிற்கு :9486265886. ///

Friday, November 6, 2009

இணைய எழுத்து

|1 comments
மீள்பிரசுரம்: http://www.sramakrishnan.com/இணைய எழுத்து -
எஸ். ராமகிருஷ்ணன் --
மதுரையில் ஆகஸ்ட் 30ல் அன்று நடைபெற்ற உயிரோசை இணையஇதழின் ஒராண்டு விழாவில் பேசுவதற்காக நான் எழுதிய குறிப்புகள் இவை. இதில் ஒரு பகுதியை அந்த விழாவில் உரையாற்றினேன். -நான் இணைய எழுத்தை தொடர்ந்து வாசித்து வருபவன். தினம் இதற்காக குறைந்தது ஒரு மணி நேரம் செலவிடுகிறேன். வலைப்பக்கங்கள். இணையதளங்கள், இணைய இதழ்கள், என்று தேடித்தேடி வாசிக்கிறேன். புதிதாக யார் எழுதுகிறார்கள், என்ன எழுதுகிறார்கள். அது எப்படி வாசிக்கபடுகிறது என்பதில் என் அக்கறை எப்போதுமே அதிகமானது.இணையத்தில் இரண்டு வகையான எழுத்துகள் வாசிக்க்கிடக்கிறது. ஒன்று தங்களுக்கு பிடித்த சினிமா, புத்தகம், இசை சார்ந்த ரசனைகள் பாதித்த நிகழ்வுகள், நடப்புகளின் மீதான அவதானிப்பு . ஆன்மீகம். சமையல், வேடிக்கை, கிசுகிசு, அரசியல், ஆவேசம், என்று அவரவர் வலைப்பக்கங்களில் எழுதப்படுபவை. அதில் பெரும்பான்மை வலைப்பக்கங்களின் வழியே முதன்முறையாக எழுத துவங்கியவர்கள்.. மற்ற வகை. எழுத்தாளர்கள் இணையத்தில் எழுதுவது. இணைய தளங்கள் நடத்துவது.நான் இதில் இரண்டாவது வகையை சேர்ந்தவன். நான், சாருநிவேதிதா, ஜெயமோகன், நாகார்ஜ�னன், மனுஷ்யபுத்திரன், உள்ளிட்ட பல எழுத்தாளர்கள் இணையத்தளங்கள் நடத்திவருகிறோம். இன்று தமிழின் முக்கிய படைப்பாளிகள் பலரும் இணையதளங்களில் கட்டுரைகள், பத்திகள் எழுதுகிறார்கள். ஈழத்து இலக்கியம் குறித்து அதிகம் இணையதளங்களின் வழியாக மட்டுமே அறிந்து கொள்ள முடிகிறது. அச்சு ஊடகங்களில் காணமுடியாத அரசியல் சமூக கலாச்சார பிரச்சனைகள் பற்றிய விவாதங்கள், பத்திகள், நேரடியான கருத்துமோதல்கள், உடனடி எதிர்வினைகள் என்று இணையம் பன்மடங்கு வீரியமாக செயல்படுவதை உணர்ந்தவன் நான். அதே நேரம் அசட்டுதனமான கருத்துகளை கொண்டாடுதல், மலிவான சண்டைகள், தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் மிதமிஞ்சிய சுயபாராட்டுதல்கள். குப்பையாக கொட்டப்படும் அபிப்ராயங்கள், கவிதை என்ற பெயரில் எழுதி தள்ளப்படும் சுயபுலம்பல்கள். தமிழ்சினிமா கிசுகிசுக்களை கவர்ச்சிபடங்களுடன் வெளியிடுவது என்று அதன் இன்னொரு பக்கம் களைப்படையவும் செய்கிறது.இணைய எழுத்திற்கு என்று இன்னமும் தனி அடையாளம் உருவாகவில்லை. இரண்டாயிரத்திற்கும் மேல் உள்ள தமிழ் வலைப்பக்கங்களில் மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே தரமாகவும், ஆக்கபூர்வமான அக்கறைகளுடனும், விவாதிக்க கூடிய படைப்புகள் காணக்கிடைக்கின்றன. இதே நிலை தான் அச்சு ஊடகங்களிலும் உள்ளது. ஆனால் அச்சு ஊடகங்களில் தேர்வு செய்யபடுதல் என்று முறை இருப்பதால் கொஞ்சமாவது வடிகட்டபடுகிறது. இணையம் அப்படியில்லை. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக சுஜாதா கணிணியை பயன்படுத்தி தமிழில் எழுதுகிறார் என்பது நாளிதழ்களில் செய்தியாக வந்தது. அதற்காகவே அவரை தேடி போய் எப்படி தமிழில் எழுதுகிறார் என்று வியப்புடன் பார்த்து வந்தேன். கணிணியில் தமிழில் உள்ளீடு செய்வதற்கான மென்பொருட்கள் அதிகம் வராத நாட்கள் அவை. அந்த வியப்பு தான் என்னை கணிணி நோக்கி உந்தியது. நானும் கணிணியில் தமிழில் எழுத வேண்டும் என்று முனைப்பு கொண்டேன். நண்பர் எழுத்தாளர் இரா. முருகன் முரசு மென்பொருளை ஒரு பிளாப்பியில் தந்து அதை பயன்படுத்தும் முறை பற்றி சொன்னார்; அப்படி தான் கணிணியில் தமிழில் எழுத துவங்கினேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக அட்சரம் என்றொரு வலைப்பதிவை தொடங்கி சில ஆண்டுகள் நடத்தினேன். அதன் பிறகு இரண்டு வருசங்களாக எனது பெயரிலே இணையதளம் நடத்திக் கொண்டிருக்கிறேன்.இணையத்தில் உள்ள இதழ்களில் திண்ணை தான் முன்னோடியான முயற்சி. திண்ணையில் கட்டுரை வந்திருக்கிறது வாசித்தீர்களா என்று கேட்பார்கள். புதிய ஊடக வெளியாக திண்ணை அமைந்திருந்தது. அதன் பிறகு ஆறாம்திணை. அம்பலம், சிபி.காம் துவங்கி இன்று உயிர்மை. காலச்சுவடு, போன்ற அச்சு இதழ்களின் மின்வடிவங்களும், கீற்று, அதிகாலை. தமிழ்மணம், மாற்று என்று இணைய எழுத்துகளை ஒரு சேர வாசிக்கும் கூட்டு தளங்களும் வந்துவிட்டன. உயிரோசை, சொல்வனம், பதிவுகள் போன்ற இலக்கிய இதழ்களும் வெளியாகின்றன. வார இதழ்கள், நாளிதழ்கள் கூட இணையத்தில் முழுமையாக வாசிக்க கிடைக்கினறன.உயிரோசை இணைய இதழ் ஒரு ஆண்டு வெளிவந்து அதில் எழுதிய முக்கிய படைப்பாளிகளின் பத்து புத்தகங்கள் ஒரே நேரத்தில் வெளியாவது சந்தோஷம் தருகிறது. இணையத்தில் எழுதப்பட்ட முக்கிய கட்டுரைகள் ஒரு சேர புத்தகமாவது இதுவே முதல்முறை . உயிரோசை இணையத்தில் சிறந்த இலக்கிய இதழாக வளர்ச்சிபெற்று வருகிறது. நான் அதன் தொடர்ந்த வாசகன். அதில் வரும் பத்திகளை தொடர்ந்து வாசிக்கிறேன். நான் அறிந்தவரை மற்றமொழிகளில் எழுத்தாளர்கள் தங்களது இணையதளங்களை ஒரு விசிட்டிங் கார்டு போல தான் பயன்படுத்துகிறார்கள். அதில் அவர்களை பற்றிய சுயவிபரங்கள் , அவர்கள் எழுத்தின் சில மாதிரி பக்கங்கள் இடம் பெற்றுள்ளன. நேரடியாக இணையத்திற்கு என்றே எழுதுவதுதில் தமிழ் எழுத்தாளர்களே முன்னோடியாக இருக்கிறார்கள். உலகெங்கும் இலக்கிய இதழ்களோ அல்லது பதிப்பகங்களோ தான் எழுத்தாளர்களுக்கான வலைப்பக்கங்கள், இணையதளங்களை நடத்துகின்றன. தங்களது இதழில் எழுத்தாளர் எழுதும் பத்தியை அதில் உள்ளீடு செய்கின்றன. அதிலும் தமிழில் நடந்துள்ள மாற்றம் முக்கியமானது, எழுத்தாளர்களே தங்களுக்கான இணைய தளத்தினை, வலைப்பக்கத்தை நடத்துகிறார்கள். அல்லது அவர் மீது அக்கறை கொண்ட வாசகர் அவருக்கான இணைய தளத்தை உருவாக்கி தந்து நடத்துகிறார். இந்த முயற்சி வேறு மொழிகளில் அதிகம் இல்லைபெரும்பான்மையான இணைய இதழ்களின் பொது உள்ளடக்கம் சிற்றிதழ் ஒன்றின் வடிவம் போலவே உள்ளது. கதை கவிதை கட்டுரை ஒரு சினிமா பத்தி, கொஞ்சம் அரசியல் அல்லது விஞ்ஞானம் என்ற மரபான சிறுபத்திரிக்கை வடிவமே இன்றும் இணையத்தில் அதிகம் காணப்படுகிறது. இதை ஒரு குறையாகவே கருதுகிறேன். இணையத்தின் முழுமையான பலத்தை அறிந்துகொள்ளாமலே தான் இவை செயல்படுகின்றன.வீடியோ, ஆடியோ மற்றும் ஒவியங்கள், கூடுதல் தரவுகளுக்கான இணைப்புகள், நேர்காணல்களின் தரவிறக்க வசதி, நேரடியாக எழுத்தளாருடன் தொடர்பு கொண்டு உரையாடுதல் என்று இணையத்தின் முக்கிய வசதிகள் இன்றும் இலக்கிய முயற்சிகளுக்காக மேற்கொள்ள படவில்லை.இணையத்தில் எழுதுவதால் நிறைய சம்பாதிக்கிறார்கள் என்ற பொது வதந்தி தமிழகம் எங்கும் காணமுடிகிறது. நான் அறிந்த பல எழுத்தாளர்கள் அதை நேரடியாக என்னிடமே கேட்டிருக்கிறார்கள். உண்மையில் இணையத்தில் எழுதி சம்பாதிக்கின்றவர்கள் என்று எவரையும் இன்று வரை நான் காணவில்லை. மாறாக ஒவ்வொருவரும் தன் கையில் இருந்து ஆண்டிற்கு குறைந்தபட்சம் பதினைந்தாயிரம் செலவிட்டே இணைய தளங்களை நடத்துகிறார்கள். கடுமையான எதிர்வினைகள், வசைகளை நேரடியாக மின்னஞ்சல்கள் பின்னூட்டங்கள் வழியாக பெருகிறார்கள் என்பதே உண்மை. உலகெங்கும் உள்ள வாசகர்களுடன் தனது படைப்புகளை பகிர்ந்து கொள்வது என்ற எத்தனிப்பே பல எழுத்தாளர்களையும் இணையதளங்களில் எழுத வைத்துள்ளது.இணையத்தில் நான் கண்ட முக்கிய அம்சம். இங்கே வாசகர்கள் என்று யாரும் கிடையாது. வாசிப்பவரும் ஒரு எழுத்தாளரே. அவர் என்ன எழுதுகிறார் என்பதில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அவர் நிச்சயம் ஒரு வலைப்பக்கம் வைத்திருப்பார். தொடர்ந்து எழுதி வருபவராக இருப்பார். அது தான் இதன் பலம் அதுவே இதன் பலவீனம். தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளபடும் எத்தனங்களையே அதிகம் காணமுடிகிறது. அதற்காக எந்த அளவும் செயல்பட தயங்காத பலர் இணையத்தில் எழுதுகிறார்கள். பல வலைப்பக்கங்கள் அவர்களது டயரிகுறிப்புகள் என்ற அளவில் தான் உள்ளன.சமீபமாகவே இணைய எழுத்தாளர்கள் தங்களது ரசனையை , எழுத்தாற்றலை மேம்படுத்திக்கொள்ள நேரடியாக சந்தித்து கொள்கிறார்கள். உலக சினிமாவை திரையிடுவது. சிறுகதை பயிலரங்கம் நடத்துவது. குறும்படங்கள் உருவாக்குதல் என்று தங்களின் செயல்தளங்களை விரிவு படுத்தி வருகிறார்கள். இது பாராட்டுக்குரிய முயற்சி.இணையம் அச்சு ஊடகங்களை தாண்டிய நவீன ஊடக வெளி. அதை எப்படி பயன்படுத்தி கொள்ள போகிறோம் என்பது எழுதுபவரின் கையில் தானிருக்கிறது. பக்க கட்டுபாடு இல்லை என்று பொதுவாக சொல்லிக் கொண்டாலும் இரண்டு பக்கங்களுக்கு மேலாக எழுதப்படும் பதிவுகளை பலரும் படிப்பதில்லை என்பது தான் உண்மை. பின்நவீனத்துவக் கருத்துகள், மொழியாக்கங்கள், தத்துவம் சார்ந்த உரையாடல்கள், விஞ்ஞானம் பற்றிய ஆழ்ந்த கட்டுரைகள் இணையத்தில் வெளியாகின்றன. ஆனால் அவை வாசகர்களை கவனிப்பதேயில்லை. அது போலவே தொடர்ந்து தமிழ் வலைப்பக்கங்களை வாசித்து வரும்போது பத்துக்கும் குறைவானவர்களே தீவிரமாக தொடர்ந்து பல்வேறு துறை சார்ந்து எழுதி வருவதை காணமுடிகிறது. மற்றவர்கள் மிதமிஞ்சிய வேகத்தில் எழுத துவங்கி சில மாதங்களில் இணையத்தை விட்டே போய்விடுகிறார்கள். அல்லது ஒதுங்கி கொண்டு விடுகிறார்கள். சலிப்படைந்து திட்ட துவங்குகிறார்கள். சிலருக்கு வலைப்பக்கம் என்பது அன்றாட செயல்படாகியிருக்கிறது. எழுத வேண்டும் என்ற கட்டாயத்திற்காக எதையாவது உள்ளிடுகிறார்கள்.சமீபமாக இணையத்தில் எழுத துவங்கிய சிலர் இதிலிருந்து அச்சு ஊடகங்களுக்கு தாவியிருக்கிறார்கள். பத்தி எழுதுகிறார்கள். அது போலவே பல ஆண்டுகளாக எழுதாமல் ஒதுங்கிய இருந்த இலக்கியவாதிகள் இணையத்தின் வருகையால் அச்சு ஊடகங்களை விலக்கி நேரடியாக இணையத்தில் எழுத வந்திருக்கிறார்கள். வார மாத இதழ்கள் இணைய எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்து அடையாளம் காட்டுகின்றன. பெண்கள் வேறு எந்த ஊடகங்களையும் விட இணையத்தின் வழியே தங்களை வெளிப்படுத்திக் கொள்வதில் அதிக ஈடுபாடு காட்டுகிறார்கள். அது மிக முக்கியமான வரவு. இது போலவே ஒய்வு பெற்றவர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலருக்கும் வலைப்பக்கம் தங்களுக்கான தொடர்பு வெளியாக மாறியிருக்கிறது. வலைப்பக்கங்கள் பொதுவாக மேடைப்பேச்சை போன்ற உடனடி கைதட்டல்களுக்கானவையாக கருதப்படுகின்றன. அப்படி இருக்க வேண்டியது அவசியமில்லை. அதனால் தான் பின்னூட்டம் இடுவதை இவ்வளவு பரபரப்பாகவும் நான் தான் முதலில் என்று கொண்டாட்டத்துடனும் செயல்படுகிறார்கள். பின்னூட்டம் ஒரு எதிர்வினை மட்டுமே. அதை விரும்புவதும் விலக்குவதும் படைப்பாளியின் சுதந்திரம். பிரிண்ட் அவுட் செய்து கையில் வைத்து மறுபடி படிக்க செய்யும் படியாக பல கட்டுரைகள் இணையத்தில் வெளிவந்துள்ளன. அவை இணையத்திலும் அதிகம் கண்டுகொள்ளப்படாமலே தானிருக்கின்றன.சுற்றுசூழல், சமகால அரசியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம், தமிழ் மரபு சார்ந்த சிலரது வலைப்பதிவுகள் காத்திரமானவை. ஆனால் அதனை வாசிக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை பார்த்தால் மிக குறைவு. இணைய எழுத்திலும் சினிமாவே பிரதானமாக உள்ளது. அதிலும் கிசுகிசு, அதிரடி விமர்சனம், கவர்ச்சிபடங்களுக்கு அதிகமான வருகை காணமுடிகிறது.அச்சு இதழ்களில் இல்லாத ஒரே வித்தியாசம் தமிழ்சினிமாவை தாண்டி பலரும் வெவ்வேறு மொழி படங்களை பற்றி எழுதுகிறார்கள் என்பதே. ஆனால் அவை அந்த படங்களை பற்றிய தங்களது ரசனையை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. ஆய்வு மிக குறைவே.லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான போர்ஹேயின் வாழ்க்கை வரலாற்றை பற்றி ஏதாவது ஆவணப்படம் இருக்கிறதா என்று தேடினால் மறுநிமிசம் அவரது நேர்காணல், ஆவணப்படம். கவிதை பற்றிய அவரது சொற்பொழிவுகள் என்று நாலைந்து மணி நேரம் காணும் அளவிற்கு இணையத்தில் கிடைக்கின்றன. ஆனால் தமிழ் எழுத்தளார்களை பற்றிய ஆவணப்படங்கள், அவர்களது நேர்காணல்களின் வீடியோ பதிவுகள், மற்றும் அவர்களது சொற்பொழிவுகளின் ஆடியோ என எதையும் காண முடிவதில்லை. அரிதாக ஒன்றிரண்டு பதிவுகள் காணப்படுகின்றன. ஆனால் அவை தரவிறக்கம் செய்ய இயலாது. அத்துடன் அவை நேரலையாக காணவும் போராட வேண்டியிருக்கிறது. வெவ்வேறு இலக்கிய கூட்டங்கள், கருத்தரங்கங்கள் என்று எழுத்தாளர்கள், விமர்சகர்கள் ஆய்வாளர்கள் தொடர்ந்து உரையாற்றி வருகிறார்கள். ஆனால் அவை அந்த நிகழ்வோடு காற்றில் கரைந்து போய்விடுகின்றன. அதை முறையாக பதிவு செய்து இணையத்தில் தர முன்வந்தால் தமிழின் மாற்று சிந்தனை வெளி அதிகம் பேரை சென்று அடையும்.கல்வி புலங்கள் தங்களது செயல்பாடுகளை இணையத்தில் தொடர்ந்து தரவேற்றம்செய்வதன் வழியே பொது வாசகர்கள் அதை அறிந்து கொள்ள செய்யய இயலும். அது போலவே சாகித்ய அகாதமி தமிழ் வளர்ச்சி துறை, கலை பண்பாட்டு துறை உள்ளிட்ட முக்கிய அரசு அமைப்புகள் தங்களது கருத்தரங்கங்கள், நிகழ்ச்சிகள், படைப்பாளிகளை பற்றிய ஆவணப்படங்கள் இணையத்தில் எளிதாக பார்வையிட வசதி செய்து தருவதன் வழியே அவை இன்னும் அதிகம் பார்வையாளர்களை சென்றடைய கூடும்ஈழத்து படைப்பிலக்கியங்களை உலகின் எந்த மூலையில் இருந்தாலும் எளிதாக வாசிக்க கிடைக்கும் விதத்தில் ஈழம்.நெட் என்ற இணையம் உருவாக்கபட்டிருக்கிறது. இதில் முக்கிய படைப்பாளிகளின் நூல்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள வசதி உள்ளது. இது ஒரு முன்னோடியான முயற்சியாகும். தமிழில் இது போன்ற கூட்டு முயற்சி அவசியம் தேவையானதாக உள்ளது.தமிழ் இணையத்தில் உள்ளீடு செய்யப்பட்ட பல முக்கிய தகவல்கள், கட்டுரைகள், விவாதங்கள், இன்று வரை ஒருமித்து சேகரமாக்கபட்டு ஆவணப்படுத்தபடுதல் வேண்டும். தமிழ் எழுத்தாளர்கள் பற்றி சுயவிபரங்கள், புகைப்படங்கள், முக்கிய புத்தகங்கள், அதன் பதிப்பகங்கள், விமர்சனங்கள் என்று அடங்கிய விரிவான தகவல் சேமிப்பு தளங்கள் உருவாக்கபடவேண்டும். இதற்கான ஒன்றிரண்டு முயற்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. தமிழ் விக்கிபீடியா போன்றவற்றில் உள்ள தகவல்பிழைகள் முறையாக சரி செய்யப்படல் வேண்டும்.இணையத்தில் புதிதாக எழுத வருகின்ற பலரும் எதை படிப்பது. என்ன சினிமாவை பார்ப்பது.எந்த இணைய தளங்களை வாசிப்பது என்று வழிகாட்டுதலை விரும்புகிறார்கள். அது அச்சு இதழில் காணமுடியாத வசதி. அதை எளிதாக பலரும் செயல்படுத்த முடியும். நான் தொடர்ந்து நான் வாசிக்கும் இணையதளங்கள், புத்தகங்கள், திரைப்படங்களை சிபாரிசு செய்கிறேன். இதற்காகவே எவராவது முன்வந்து ஒரு இணைய தளம் தொடங்கப்பட்டால் அது அதிகம் உதவிகரமாக இருக்க கூடும்.தமிழ் வலைப்பக்கங்களுக்கான இன்டெக்ஸ் ஒன்று உருவாக்கபடுதல் வேண்டும். அதன்வழியே எவரும் எந்த இணையதளத்தையும் உடனடியாக பார்வையிட முடியும். அது போலவே வாசிக்க கிடைக்காத பல முக்கிய புத்தகங்கள் ஆங்கிலத்தில் ஆன்லைனில் வாசிக்க கிடைக்கின்றன. தமிழில் அது இன்றும் சாத்தியமாகவில்லை.நுண்கலை, பண்பாடு சார்ந்து ஒவ்வொரு ஊரிலும் உள்ள முக்கிய இடங்கள், நிகழ்வுகள் குறித்த பதிவுகள் எண்ணிக்கையற்று ஆங்கிலத்தில் உள்ளன. தமிழகத்தின் பண்பாட்டு புள்ளிகள் இணையத்தில் இன்னமும் ஒருங்கிணைக்கபடவில்லை.இணைய எழுத்து நாளை இன்னமும் அதிகமான முக்கியத்துவம் கொண்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. புதிதாக எழுத வருகின்றவர்கள் இணையத்தின் வழியே அறிமுகமான போதும் தனித்த படைப்பாளியாக உருவாக அதிக சாத்தியங்கள் உள்ளன. அது போலவே மாற்று சிந்தனைகளுக்கு இணையம் இன்னமும் கூடுதலான முக்கிய ஊடகமாக அமையும். ஆவணபடுத்துதல், அறிமுகம் செய்வது. பல்துறைகளை ஒன்றிணைத்தல், புதிய வாசக தளங்களை உருவாக்குதல், அடிப்படை மாற்றங்கள் குறித்த விவாதங்களை உருவாக்குதல், குறும்படங்கள், ஆவணப்படங்களை எடுப்பவர்கள் இணையத்தின் வழியே அதை வெளியிடுவது என்று இணையம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. அதன் ஒருபகுதியாகவே இணையத்தில் எழுதுவதும் இருக்கிறது.கசடுகளை நீக்கி தேவையானதை அறிந்து கொள்வது வாசகனின் கையிலே உள்ளது. இணையம் புதிய வாசகபரப்பை, எழுத்தை உருவாக்கும் தடையற்ற சாத்தியங்களை தருகிறது. அதன் வளர்ச்சியும் செயல்பாடும் கூட்டுமுயற்சிகளால் மட்டுமே மாறுதல் அடையும் என்று தோன்றுகிறது.நன்றி: http://www.sramakrishnan.com/
நன்றி பதிவுகள்.கம.

Tuesday, August 11, 2009

முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை

|0 comments

முனைவர், புலவர் த.கோடப்பிள்ளை

முத்தமிழ் மூதறிஞராகிய கோடப்பிள்ளை, திருச்சிராப்பள்ளி மாவட்டம் சாலக்காடு என்னும் சிற்றூரில் தோன்றியவராவர். தந்தை தம்மனான். தாய் வள்ளியம்மை. தோன்றிய ஆண்டு ௧௯௩௪.

திருவையாறு அரசர் கல்லூரியில் தமிழ் பயின்றவர். திருச்சிராப்பள்ளி, நெய்வேலி,கல்லக்குடித் தால்மியாபுறம் அகிய இடங்களில் உயர் நிலை, மேனிலைப்பள்ளிகளில் முப்பதைந்தாண்டுகள் தமிழ் ஆசிர்ரியராகப் பணியாற்றி வந்தவர்.

கல்லூரியில் படித்தக் காலத்திலேயே நாடகம் எழுதும் போட்டியில் ப்ரிசு பெற்ற இவர் இளமையிலிருந்தே நாடகங்கள் எழுதியுள்ளார்.

வானொலியில் பல நாடகங்களை ஒலிப்பரப்பியுள்ளார். மேடை நாடகங்கள் சிறிதும் பெரிதுமென முப்பத்தொரு நாடகஙகளை வெளியிட்டுள்ளார். கதை, கட்டுரை, கவிதை, ஆய்வுக்கட்டுரை பலவும் படைத்துள்ளார். மேடை சொற்பழிவாற்றலும் மிக்கவர். ஆராய்ச்சி வல்லுனர். தமிழ் எழுத்து சீற்திருத்தம் பற்றிக் கோலாலம்பூர் ஆறாவது உலகத் தமிழாராச்சி மானாட்டில் கட்டுரைப் படித்து, அதை நூலாகவும் வெளியிட்டவர். உலகத்தமிழர் கருத்தருங்குகளில் ஆராய்ச்சிக் கட்டுரகளையும் படித்துள்ளார்.

மலேசிய, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் இலக்கியப் பணியாற்றியுள்ளார்.அங்குள்ள வானொலி நிலையங்களில் சொற்பொழிவாற்றியுள்ளார்.


இவரது படைப்புகளான அன்புத்தங்கை, அம்மை ஆண்டாள், தமிழ் எழுத்தமைப்பு, வான்வழி வள்ளுவம், மருத நாயகம் என்னும் கம்மந்தன் பூசுபுகான், வான்வழி விருந்து, வான்வழி நாடகங்கள், நாடக நருமலர்கள், சிந்தனைச் செல்வர் சாக்கரட்டீஸ், எளிமைத் தமிழ், தமிழ்ப்பூக்கள், பூவே பூவே, மனக்குரங்கு, கோடப்பிள்ளை குறள் ஆவேரா உரை/ கதிரேசனார் உரை நடைச்சிறப்பு ஆகிய நூலகளைப் படைத்துள்ளார்.

பேரும் புகழ்பெற்ற எழுத்தாளர் அன்மயில் திருச்சியில் காலமானர். இவரது படப்புகள் படைப்புலகில் நிலைத்த இடத்தைப் பிடித்திருக்கும்.

Thursday, July 30, 2009

சு.தமிழ்ச்செல்வி

|0 comments
இன்றைய நவீன தமிழ் இலக்கியத்தில் எழுதி வரும் பெண் படைப்பாளிகளில் முக்கியமானவர் சு.தமிழ்ச்செல்வி. குறுகிய காலத்தில் ‘மாணிக்கம்’, ‘அளம்’, ‘கீதாரி’, ‘கற்றாழை,’ எனும் நான்கு புதினங்கள் மூலம் தமிழ் புனைகதை வெளியின் கவனத்தை ஈர்த்தவர். இவரது முதல் படைப்பான ‘மாணிக்கம்’ நாவலுக்கு ௨00௨ -ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான தமிழக அரசு விருதைப் பெற்றிருக்கிறது.
இவரது ‘ கீதாரி’ நாவல் இடையர்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டது. வாழ்தலின் நிமித்தம் புலம் பெயரும் அனுபவத்தின் வலியை மலையாள இலக்கிய எழுத்தாளர் பொற்றக்காட்டின் ‘விசக்கன்னி’ க்குப் பிறகு அழுத்தத்தோடு விவரித்துச் சொல்லியுள்ளார். மனித குலத்தின் நெடிய வரலாறு எங்கும் காணக்கிடைக்கும் தீராத அலச்சலும், மனக்கொதிப்பும், வாழ்தழுக்கான வேட்கையும்,இயற்கை தன்னுல் வைத்திருக்கும் உயிர்களுக்கான ஆறுதலும் இப்புனைவின் பரப்பெங்கும் காணமுடிகிறது.
இவரது மூன்றாவது புதினமான ‘அளம்’ சாகித்திய அகாடமியின் தேர்வில் கடைசிவரை பரிசிலனையில் இருந்தது.பல்வேறு சிற்றிதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது ‘அளம்’ , கீதாரி’ இரண்டு புதினங்களுமே இளங்கலை,முதுகலை பட்டப்படிப்பிற்கான பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன். விருத்தாச்சலம் அருகில் கார்குடல் என்ற சிற்றூரில் ஊரட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவரது கணவரான கரிகாலன் ஒரு கவிஞர். அதேப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார்

Wednesday, July 29, 2009

கவிஞர் திலகபாமா

|0 comments

கவிஞர் திலகபாமா


நவீன தமிழ் இலக்கியச் சூழலில் பெண் கவிஞர்களில் இன்று பலர் எழுதத் தொடங்கிவிட்டனர். அவர்களில் திலகபாமாவும் ஒருவர்.

” எட்டாவது பிறவி”, ’கூர்ப்பச்சையங்கள்’,’கண்ணாடி பாதரட்சைகள்’, சூரியனுக்கும் கிழக்கே’ ஆகிய கவிதைத் தொகுப்புகளும்;’ நனைந்த நதி’என்ற சிறுகதைத் தொகுப்பும்;’புதுமைப்பித்தனில் பூமத்தியரேகை’ என்ற கட்டுரைத் தொகுப்பும் எழுதியுள்ளார்.’வெற்றிகளின் மறைவிலிருந்து வெளிச்சத்திற்கு’ என்றொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளார். இவரது கவிதைத்தொகுப்பிற்குக் கோவை சிற்பி இலக்கியப் பரிசு கிடைத்துள்ளது. ஏர்வாடி ராதாகிருஷ்ணன் வழங்கிய கவிதை உறவு பரிசையும் பெற்றுள்ளார். இலங்கையில் இருந்துவரும் தமிழ் தினசரியான ‘வீரகேசரி’ பத்திரிக்கையும், லண்டனில் உள்ள பூபாள ராக அமைப்பும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது சிறுகதை முதல் பரிசைப் பெற்றுள்ளது.

ஐரோப்பியாவில் நடந்த இலக்கியக்கூட்டங்கள் பலவற்றில் சொற்பொழிவாற்றியுள்ளார். மேலும் இன்றைய அறிவியல் வளர்ச்சியான இணையத்திலும் கட்டுரைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.

Monday, June 29, 2009

தமிழச்சி தங்கபாண்டியன்

|0 comments
தமிழச்சி தாங்கபாண்டியான்
தமிழ்ச் சூழலை இயல்,இசை, நாடகம் என மூன்றாகப் பிரிப்பார்கள். இந்த மூன்றிலும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் தமிழச்சி. கவிதை எழுதுகிறார். பரதத்தை முழுமையாகக் கற்றிருக்கிறார். நவீன நாடகங்களில் நடிக்கிறார்.இப்படி பன்முகத் தன்மையுடன் இயங்கும் இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளராகப் பணியற்றுகிறார். மிகப்பெரிய திராவிடப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்.விருது நகர் மாவட்டம், மல்லாங்கிணறு என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அந்த கிராமத்தின் மண்வாசனைய இவரது பேச்சிலும், எழுத்திலும் காணமுடிகிறது
இவரது ‘எஞ்சோட்டுப்பெண்’எனும் முதல் கவிதைத் தொகுப்பு நூல் ‘தமிழ் இலக்கியம் 2004 என்கிற இலக்கிய விழாவில் வெளியிடப்பட்டது.இந்த தொகுப்பிற்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருதும், மகாகவி பாரதியார் விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பிலிருந்து சில கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்ப் பட்டப் படிப்பிற்கான பாடத்திட்டத்திலும் இணைக்கப்பட்டுள்ளது.இலக்கிய விமர்சன கட்டுரகளை த.சுமதி என்ற பெயரில் எழுதுகின்ற இவர், மொழிபெயர்ப்பு இலக்கியத்திலும் முனைப்புக் கொண்டு புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களது சிறுகதைகள் சிலவற்றை மொழிபெயர்த்து, சென்னை பல்கலைக்கழகத்திலும், ப்ன்னாட்டு தேசியக்கருத்தரங்கிலும் அவை குறித்த ஆய்வுக் கட்டுரகளைச் சமர்பித்துள்ளார். தமிழ் நாடகச் சூழலில் இன்குலாப் அவர்களது ‘குறிஞ்சிப்பாட்டு’ எனும் நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக பழம்பெரும் எழுத்தாளர் கு.பா.ராவின் ‘அகலிகை’ நாடகத்தில் அகலிகை பாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர். இவை மட்டுமல்லாது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம் பெயர்ந்த ஈழ
த்தமிழர்களது வாழ்வு குறித்து ஆய்வுத் தொகுப்பு வெளியிட்டுள்ளார்.
|0 comments

Thursday, June 25, 2009

எழுத்தாளர் திலகவதி

|0 comments

இலக்கியப் படைப்பாளியின் மனம் மென்மையான உணர்வுகளால் ஆனது. காவல் துறையினரின் மனம் ஒருவித இறுக்கமான உணர்வுடயது. அதிலும் பெண் என்றால் தாய்மை குணம் கொண்டதாக இருக்கும். இங்கு ஒரு பெண் படைப்பாளியாகவும், காவல் துறையில் உயர் பதவியிலும் இருப்பவர் திலகவதி ஐ.பி.எஸ்.

காடந்த ௨0 வருடங்களாகத் தொடர்ந்து எழுதிவரும் படைப்பாளி. உதவி என்று வருபவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதில் அவருக்கு நிகர் அவரே என்று கூறலாம்.கலை மற்றும் இலக்கியம் சம்பந்தமாக அமெரிக்கா,லண்டன்,மலேசியா, சிங்கப்பூர்,சீனா மற்றும் இந்தியாவின் பல மானிலங்களுக்கும் சுற்றுப்பயணங்கள் செய்திருக்கிறார்.சாகித்திய அகாடமி பொதுக்குழு உறுப்பினராகவும்,மானில மகளிர் அணையக்க்குழு உறுப்பினராகவும் தொடர்ந்து இயங்கிவருகிறார். நல்ல மேடைப்பேச்சாளர்.இதுவரை அருபதுக்கும் மெற்பட்ட புதினங்கள், குறு நாவல்கள், சிறுகதைகள்,கவிதகள்,கட்டுரைகள்,மொழிப்பெயர்ப்பு புத்தக வடிவமாக வெளிவந்துள்ளன். இவருடைய பத்தினிப் பெண் புதினம் திரைப்படமாக வெளிவந்துள்ளது. இந்தப்படத்துக்கு நான்கு விருதுகள் கிடத்துள்ளது. முப்பது கோடி முகங்கள், வார்த்தை தவறிவிட்டாய்,இனிமேல் விடியும் போன்ற தொலைக்காட்சித் தொடர்களும் வெளிவந்துள்ளன.

இவருடைய புதினம் பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வு செய்து பட்டங்கள் பெற்றிருக்கின்றனர்.

தமிழக அரசின் 1988, 1989 ஆகிய ஆண்டுக்கான சிறந்த கதாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது, இலக்கியச்சிந்தனைப் பரிசு, புதுவை மானில இலக்கிய விருது,கலைமகள் நாராயணசுவாமி குறு நாவல் பரிசு, அமுதசுரபி மற்றும் சிராம் நிருவனங்களி இணைந்து வழங்கிய போட்டியில் சிறந்த புதிந்த்திர்க்கான முதல் பரிசு, வி. ஜி.பி.சந்தனம்மாள் ஆறக்கட்டளை பரிசு, தாய் பத்திரிக்கையின் சிறந்த சிறுகதைக்கான விருது j.c.s(junior chamber) சங்கத்தின் 1990 ம் ஆண்டிற்கான சிறந்த பெண்மணி விருது, திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் சிறந்த புதின ஆசிரியருக்கான் விருது, சிறந்த சிறுகதையாசிரியைக்கான் ஜொதிவினாயகம் பரிசு, சினிமா கலைமன்ற விருது, இலக்கிய சக்தி 2005 படைப்புக்கான விருது என்று பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்றுள்ளார்.

இந்தியாவின் உயரிய விருதான சாகித்திய அகாடமி விருதை இவரது கல்மரம் என்ற புதினத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

Thursday, June 11, 2009

பணம்

|0 comments
பணிக்குத்தேவையானப் பட்டங்கள் இருக்கிறது
கற்றுக்கொடுக்க கல்வியும் ஆற்றலும் இருக்கிறது
பிறகு ஏன் பணிக்கிடைக்கவில்லை?
ஓ... புரிகிறது
அவர்கள் எதிர்பார்க்கும் பணம் என்னிடம் இல்லை

Tuesday, April 28, 2009

இணைய உதவியில் முதல் தமிழ் ஆய்வேடு

|3 comments

Monday, April 6, 2009

இணைய இதழில் முத்துக்கமலம்[www. muthukamalam.com]

|0 comments
செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலானவற்றைத் தகவல்தொடர்பு ஊடகங்கள் என்று கூறுவர். அவ்வரிசையில் இணையத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டும். பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழு வீச்சில்இணையம் வளர்ச்சியுற்று வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில் பிறஊடகங்களைப் புறந்தள்ளிவிட்டு இது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில்ஐயமில்லை.இத்துணை சிறப்பு வாய்ந்த இணையத்தின் வழி இதழ்கள் வெளி வருகின்றன. இதனைஇணைய இதழ்கள் அல்லது மின்னிதழ்கள் (e- journals /e-zines) என்றுகுறிப்பிடுவர். அச்சு வடிவில் வெளி வருகின்ற இதழ்களைப் போலவே காலம்(நாளிதழ், வார இதழ்) மற்றும் பொருண்மை அடிப்படையில் (அரசியல் இதழ், பக்திஇதழ்) மின்னிதழ்களையும் வகைப்படுத்தலாம். அனைத்து வகை மின்னிதழ்களைப்பற்றியும் இங்குக் குறிப்பிடின் இக்கட்டுரை மிக நீளும் என்பதால் தமிழ்இலக்கியம் சார்ந்த படைப்புகளைத் தாங்கி, அச்சில் வெளிவராமல் இணையத்தில்மட்டுமே வெளிவருகின்ற முத்துகமலம் மின்னிதழ் பற்றி மட்டும் இக்கட்டுரைவிளக்க முற்படுகிறது.முத்துகமலம் இணைய இதழ் 1.6.2006ல் தேனியிலிருந்த்து திரு.எம்.சுப்பிரமணிஎன்பவரால் தொடங்கப்பட்டு மிக நேர்த்தியாக செயல்பட்டு வருகிறது. மாதத்தில்இருமுறைப் புதிபிக்கப்பட்டு வெளிவருகிறது. இதில்இலக்கியம் தொட்டு இக்காலம்வரையில் உள்ள அனைத்து நிகழ்வுகளையும்வெளியிட்டு வருகிறது.அறிவிப்புகள் என்று தொடங்கி விளம்பரம் செய்திடல் முடிய 29தலைப்புகளில் உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது.அறிவிப்புகள்.தமிழ் கருத்தரங்கம், கவியரங்கம், தமிழ்ச் சங்க கூட்டங்கள், தமிழ் நூல்,குறும்படம் மற்றும் ஆவணப்பட வெளியீடுகள் என்று தமிழ் வளர்ச்சிக்குஉதவும் அனைத்து நிகழ்ச்சிகள் குறித்த அறிவிப்புகள் இங்கு வெளியிடப்படும்.மேலும் தமிழ் இதழியலாளர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் பாராட்டு
நிகழ்ச்சிகள் என்று அனைத்து விதமான அறிவிப்புகளும் இடம் பெற உள்ளது.மேற்காணும் அனைத்து விதமான நிகழ்ச்சிகள் உலகில் எங்கு நடக்கவிருந்தாலும்அது குறித்த செய்திகளை இந்த அறிவிப்புகள் பகுதிக்கு அனுப்பி வைக்கலாம்.இந்த அறிவிப்புகள் முற்றிலும் இலவசமாக இப்பகுதியில் வெளியிட்டுவருகின்றனர்.ஆன்மீகம் ஆன்மீகம் ஆன்மீகம் சார்ந்த நிகழ்வுகள் இப்பகுதியில் வெளியிடுகின்றனர். இந்துகிறிஸ்த்து, இஸ்லாம் மதம் என்ற அனைத்து மதக்கருத்துக்களையும் இதில்நம்மால் காணமுடியும். பகுத்தறிவு பகுத்தறிவு ஆன்மீகச்செய்தியை வெளியிட்டுவரும் இவ்விதழில் பகுத்தறிவுச் செய்திகளும்பரவலாக வெளியிட்டுவருகிறது.மூடப்பழக்கங்களை கடுமையாகச் சாடுகின்றன. இதில்ஒரு சில கட்டுரைகள் நல்லமுறையில் எழுதப்பட்டுள்ளன். ஆராயப்பட்டுள்ளன.பொன் மொழிகள்- பழமொழிகள்- ஆன்மீக மொழிகள் பொன்மொழிகள் எனற தலைப்பிலும் பல மொழிகளைச்சார்ந்த அறிஞர் பெருமக்களின்பொன்மொழிகள் இடம்பெற்றுள்ளன்.அடையாளம்,கதைகள் என்ற தலைப்பில் உலக பேராசிரியர்களின் வாழ்க்கை வரலாறும்,சிறுகதைகளும் வெளியிட்டு வருகிறது.கட்டுரைகள் தரமான கட்டுரைகள் இந்த இணைய இதழில் வெளிவருகின்றன.அவறில் சொற்பொழிஞர்-அண்ணா -முனைவர் சே.கல்பனா. மின் குழுமம் ஒரு பார்வை-முனைவர் துரை. மணிகண்டன் முடிவில்லாப் போராட்டம்-உருத்திரன் கணபதிபிள்ளை. அகப்பாடல்களில் புறச் செய்திகள் -முனைவர் மு. பழனியப்பன் உண்மை என்ன? - தொடர்-வேந்தன் சரவணன். மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீட்சிதர் -அப்பையா கணபதி. நகரத்தார் உறவு முறைப்பெயர்கள்-முனைவர் மு. பழனியப்பன் என பலர் கட்டுரைகள் எழுதிவருகின்றனர். கவிதைகள் இன்று வெளிவரும் அனைத்து இதழ்களிலும் கவிதை இல்லாமல் இல்லை. அந்தவகையில் முத்துக்கமலம் இணைய இதழில் கவிதைகள் வெளிவருகின்றன. வேண்டும்! அமைதி வேண்டும்!! -மாரிமுத்து காதல் உண்மையானது...? -மு.சந்திரசேகர். நாளை நன்மை இல்லை...! -
சக்தி சக்திதாசன். வெட்கம் கொண்டு வெண்ணிலா... -ஆர். கனகராஜ்.இவர்களைப்போன்று இன்னும் பலர் எழுதி வரிகின்றனர்.சிரிக்க சிரிக்க இப்பகுதில் முழுக்க முழுக்க சிரிப்பு மட்டுமே வெளியிடப்படுகிறது. அவனுக்கு சுத்தமா படிப்பு வரலீங்க...- குரு.சுப்ரமணியன் கண்ணதாசனின் நகைச்சுவைகள் அப்பாவி சுப்பையா பதில்கள். -தொடர்- தேனி.எஸ்.மாரியப்பன் கல்யாணம் ஆனதும் சொல்லி அனுப்பு. -குரு.சுப்ரமணியன் மாமியாரைத் தீர்க்கனும்னா...?-தஞ்சை தாமு. உங்க தாத்தாவைக் குதிரை விரட்டுதே... -குரு.சுப்ரமணியன் மருத்துவ நகைச்சுவைகள் -தேனி.எஸ்.மாரியப்பன் காந்திஜியின் நகைச்சுவை -தேனி.எஸ்.மாரியப்பன் மற்றும்பலர் எழுதிவருகின்றனர். மகளிர் மட்டும் மகளிர் மட்டும் பகுதியில் பெண்களுக்கு மட்டுமே உரிய சிறப்பான செய்திகளைவெளியிட்டு வருகிறது.குறிப்பாக, இந்துமதம் சொல்லும் உயரிய பெண்களின் கடமைகள், மணமக்களுக்கு எய்ட்ஸ் சோதனை, ஆக்ரோஷமான பெண்களுக்கு ஆண் குழந்தை பெண் குழந்தை பெற்றால் பரிசு. போன்ற பல அறியச்செய்திகளையும்வாசகர்களுக்கு வழங்குகிறது.சமையலறை இப்பகுதியில் சமையல் தொடர்பான அனைத்துச் செய்திகளும் இடம்பெற்றூள்ளன். இனிப்புகள் சில இனிப்பான சமையல் செய்முறைக் குறிப்புகள் கார வகைகள் சில காரமான சமையல் செய்முறைக் குறிப்புகள்மனம் திறந்து என்ற பகுதியி வாழ்க்கையில் வெளிப்படையாக இருந்த்துவிட்டால்எந்த துயரும் வராது. அதனைப்போக்கவே இப்படி ஒரு தலைப்பைத்தேர்ந்த்தெடுத்துள்ளனர். வாழ்க்கையைச் சுவையாக மாற்றிக் கொள்ள... -சக்தி சக்திதாசன் நாளிதழ்களுக்கு சில ஆலோசனைகள்... -சித்தூர்.எஸ்.முருகேசன் மீதமாகும் சாப்பாட்டை வீணாக்கலாமா? -மணிகண்டன் அட நமக்குத் தெரியாமப் போச்சே... -தாமரைச்செல்வி போன்றோர்கள் எழுதிவருகின்றனர்.விவாதக்களம்நாணயத்திற்கு இரண்டு பக்கங்களிருப்பது போல் எதை எடுத்தாலும், இன்றையசமுதாயத்தில் இரு வேறு நிலைகள் இருக்கின்றன. இந்த இரண்டுக்குமே ஆதரவும்
இருக்கிறது, எதிர்ப்பும் இருக்கிறது. இந்த இரண்டையும் விவாதக்களம் என்றசிறப்புப் பகுதியில் வெளியிட்டு வருகிறது. அரசியல், சினிமா மற்றும்பிறர் மனம் வருந்தக் கூடிய தலைப்புகளைத் தவிர்த்து பிற தலைப்புகளில்விவாதக்களம் காண இருக்கிறது. வாசகர்கள் தெரிவிக்கும் இரண்டு நிலையிலும்சிறப்பான விவாதக் கருத்துக்கள் தேர்வு செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது..புத்தகப் பார்வைஇப்பகுதில் புதிய நூல்கள் பற்றிய முழு விபரங்களும் இடம் பெற்றுவருகின்றன. புத்தகப் பார்வைக்கு புத்தகங்கள் அனுப்ப விரும்பும்பதிப்பாளர்கள் / ஆசிரியர்கள் புத்தகத்தின் இரண்டு பிரதிகளாக அனுப்பிவைக்க வேண்டும். இப்பகுதியில் புதிதாக வெளியிடப்படும் குறும்படங்கள் /ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் போன்றவைகளுக்கான மதிப்புரைகளும் இடம்பெறுகிறது. குறும்படங்கள் / ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் அனுப்பவிரும்பும் வெளியீட்டாளர்கள் / இயக்குனர்கள் / விற்பனையாளர்கள்,தங்களுடைய குறும்படங்கள் / ஒளி-ஒலியுடனான தமிழ் பாடங்கள் அடங்கியகுறுந்தகட்டை (CD) இரண்டு பிரதிகளாக அனுப்பி வைக்க வேண்டும். இவையில்லாமால் ,கல்லூரிவாசல்,குறுந்தகவல்,மருத்துவம்,கிறுக்குத்தனம்,குறும்புகள்,தமிழ் வலைப்பூ,உதவிக்களம்,சுவையானத்தீர்ப்புகள்,நிகழ்வுகள்,கிடைக்கப்பெற்றோம்,உங்கள்கருத்து,ஆசிரியர்குழு, விளம்பரம்செய்திட என பல்வேறுத்தலைப்புகளில் கருத்துக்கள் இந்த முத்துகமலம் இதழில்வெளியிடப்படுகிறது.மற்றய இணையத்தலத்தினைவிட பல புதிய தலைப்புகளில் கருத்துக்களைவெளியிட்டுத் தமிழின் புகழைஉலக நாடுகளுக்கு அனுப்பும் ஒப்பற்ற பணியைச்சிறப்புடன் செய்துவருகிறது.பயன்பட்ட நூல்கள்1.முனைவர் துரை.மணிகண்டன், இணையமும் தமிழும், நல்னிலம் பதிப்பகம், சென்னை.2008.2 .தமிழ் இணையம்,தொழில் உலகம் வெளியீடு,2000,சென்னை.3.www.muthukamalam.com4.www.pathivukal.com5.www.wikipedia.org.

புதுக்கவிதைகளில் இளைஞர்கள்

|0 comments
புதுக்கவிதைகளில் இளைஞர்கள்
துரை. மணிகண்டன்,விரிவுரையாளர்,தமிழாய்வுத் துறை,தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி,பெரம்பலூர்.
20-ஆம் நூற்றாண்டின் இலக்கியக் காலத்தை ஆய்வாளர்கள் நாவல் இலக்கியம், சிறுகதை இலக்கியம், புதுக்கவிதை இலக்கியம் என்பர்;. இந்நூற்றாண்டில் புதுக்கவிதையே வானளாவிய வளர்ச்சியடைந்துள்ளது. இப்புதுக்கவிதைகளில் இளைஞர்களின் நம்பிக்கைகளையும் வெற்றிகளையும் குறித்த செய்திகளை இக்கட்டுரையில் காணலாம்.

கவிதை:
மனிதன் உணர்ச்சிகளின் மொத்த உருவம். சூழ்நிலைக்கு ஏற்றவாறு உணர்ச்சி அலைகள் எழுகின்றன. மலையைப் பார்க்கும்பொழுது மனம் உயர்வு பெறுகின்றது, விம்முகிறது. வறுமையைக் காணும்போது வாடி வதங்குகிறது. இது போன்ற உணர்ச்சி அலைகள்தான் கவிதைகளாக மலர்கின்றன. கவிதைகளில் பாடுபொருள்கள் ஆண்டிற்கு ஆண்டு மாற்றம் பெற்று வருகிறது. குறிப்பாக இப்பத்தாண்டு கால எல்லைக்குள் அதிகமாக இளைஞர்களின் கனவுகளைப் பற்றியும் அவர்களின் எதிர்கால இலக்குகளையும் குறிவைத்து எழுதி குவித்துள்ளனர்.
நம்பிக்கை:
ஏழைகளின் எல்லையில்லா சொத்து நம்பிக்கை. இதனை இன்றைய இளைய சமுதாயத்திற்கு ஏசுவிற்கு விழுந்த சாட்டையடியாக இளைஞனைப் பார்த்து கவிஞர் சிற்பி,
'இளைஞனேபருவ நெருப்பில்காய்ச்சிய வாளே!
நாளை என்பதுஉன்
திருநாளேநினைவிருக்கட்டும்
உன்புருவ நெருப்பில்
பூகம்பங்கள்இமையைத் திறந்தால்சூர்யோதயங்கள் ...'என்று ஆசிரியர் இளைஞனின் நம்பிக்கைக்குத் தூபம் இட்டுள்ளதைக் காண முடிகின்றது. மேலும் நம்பிக்கையை மட்டும் இழந்து விடக்கூடாது என்பதனை,
'நீதலை நிமிர்ந்து நடந்தால் நீல வானம்
குடைபிடிக்கும்தாழ்ந்து இழிந்து குனிந்தால் கைக்குட்டையும் எட்டாதவானமாகும்'
என்ற வரிகளைப் படிக்கும் ஒவ்வொரு இளைஞனும் தன்னையறியாமல் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொண்டு பூமித்தாயை முத்தமிடுவான்.
சிறுத்தையே வெளியே வா!
சோம்பித் திரிபவர்களையும் வாழ்க்கையின் பயனை அறியாதவர்களுக்கும் துப்பாக்கியிலிருந்து புறப்படும் தோட்டாக்களாக சிற்பி இளைஞனை விழித்து அழைக்கின்றார்.
'வாநீ வெல்லவிண்வெளி
காத்திருக்கிறதுநீ பந்தாட கிரகங்கள்

பிரளயமாக்க விழி திற!வெற்றி உனக்குமுன்கொடியெடுத்துப் போகிறதுவருக இளைஞனே! வருக'என்ற வரிகள் நம்பிக்கை முடமானவனை நன்னம்பிக்கை முனையாக தட்டி எழுப்புகிறது.தவறவிட்டதைப் பிடித்துக்கொள்:இன்றைய இளைஞர்கள் வயதில் வாலிப விளையாட்டுகளிலும் திரைப்படச் சுருளிலும், கலர் கனவுகளிலுமே காலத்தை தொலைத்து விடுகின்றனர். மேலும் தொலைப்பதற்கு என்ன இருக்கிறது? தயங்காதே என்று தமிழன்பன்,'சந்தனம் மணத்தைச்சந்தைகளில் தேடுவதில்லைதென்றல் குளிர்ச்சியைத் தெருக்களில் பெறுவதில்லைஉன் வாழ்வை உன்னைத் தவிர்த்துவேறெங்கு தேடுகிறாய்'என கேட்கும்பொழுது கவிஞரும் ஒரு சில காலங்களில் தன் வாழ்வை தொலைத்து விட்டுத்தான் பின்பு தேடிக் கண்டுள்ளார் என்பதை இவ்வரிகளில் காண முடிகின்றது.இவர் இளைஞர்களின் கடமையாக, குறிப்பிடும்போது,'கடமை வாக்கியத்தில் வார்த்தைகளாய்இருப்பவர் மட்டுமேஉரிமை உதடுகளால் உச்சரிக்கப்படுவார்கள்'என்று இளைஞர்களின் மனநிலையை உளவியல் பார்வைக் கொண்டு தெளிவுபடுத்துகிறார்.ஏமாறாதே:வாழ்க்கையில் ஏமாறாமல் வெற்றி பெற்றவர்கள் ஒரு சிலரே. ஏமாறியவர்கள் பல. எனவே இளைஞனைப் பார்த்து மேலும் சில நம்பிக்கை மழையைத் னவுகிறார்.
'உன் கிழக்கில் கூடஅஸ்தமனம் தான்விதைக்க மறந்தவனேஉனக்கேன் அறுவடை ஞாபகம்'
என்னும் போது ஊமை இளைஞனும் கண்ணீர் விடுகிறான். இனிநாம் ஏமாறலாமா? என தன்னைத்தானே வினா எழுப்பிக் கொள்கிறான்.இளைஞன் இளைஞிகளின் ஒற்றுமை:இன்றைய இந்திய இளைஞர்களின் ஒற்றுமையும் முன்னேற்றமும் மேலோங்கிய நிலையில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதனை கவிஞர் மீரா தம் கவிதைகளில் பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார். அவைகளில்,
'இந்திய இளைஞனேஇந்திய இளைஞியேகாந்தி நேருஅப்துல்கலாம் அடிகளார்அருகா டேவீஸ் அருணா ஆசப் இந்திரா சரோஜினிஇவர்களையெல்லாம்நெஞ்சில் பச்சைக்குத்திநிறுத்துங்கள்'என்று குறிப்பிடுகிறார். இவ்வரியைப் படிக்கும் ஒவ்வொரு இளைஞனின் இதயத்திலும் ஏதோ ஒன்று கனக்கிறது. மேலும் வாழப்பிறந்தவனுக்கும் சாதிக்கத் துடிக்கும் இளைஞனுக்கும் வானம், கிரகம், பூமி, கடல் இவையெல்லாம் ஏணிப்படிகளாக உள்ளது என்பதனை கவிஞன் தமிழன்பன்,'உன்னுள் கடல் கடலுள் நீ.இந்தப் பெருமிதத்தோடுஎழுந்து நில்உன் உச்சிக்கான ஏணி கேட்டுநாணிக் குனியும'என்று இளைஞனின் மனதில் நம்பிக்கைப் பாலை ஊட்டும் கவிஞரின் வரிகள் முடமானவர்களையும் முழு மனிதனாக்கும் என்பது உறுதி.
முடிவு:21-ஆம் நூற்றாண்டின் இளைஞர்களைப் பூமிப்பந்தையே புரட்டிப்போடும் புத்தி கூர்மையுடையவர்களாக உருவாக்க புதுக்கவிதைகள் பல வழிகளில் ஏணிப்படியாக உள்ளன. இளைஞன் இளைஞியர்கள் ஒற்றுமையுடன் ஏமாறாமல் நம்பிக்கையோடு முன்னேற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
'இன்றையஇளைஞர்கள்இடி மின்னலையும்காலடியில் வைப்பார்கள்' என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை ஆகும்.துணை நூல்கள்:1. நா. வல்லிக்கண்ணன், புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்.2. டாக்டர் நா. சுப்புரெட்டியார், புதுக்கவிதையின் போக்கும் நோக்கும்.3. கவிஞர் சிற்பி, கவிதைத் தொகுதிகள்.4. கவிஞர் தமிழன்பன், சிற்பியின் சிகரம்.5. கவிஞர் மீரா, சிநேக புஸ்பங்கள்.

Sunday, April 5, 2009

இணையமும் தமிழும் (கருத்தரங்க செய்திச்சுருக்கம்.)- முனைவர் துரை.மணிகண்டன் -பெரம்பலூரில்

|2 comments
தமிழில் இணைய இதழ்கள்!- முனைவர் க.துரையரசன்,
தமிழ் இணைப்பேராசிரியர் -
முன்னுரை;
செய்தித்தாள், வானொலி, தொலைக்காட்சி, திரைப்படங்கள் முதலானவற்றைத் தகவல் தொடர்பு ஊடகங்கள் என்று கூறுவர். அவ்வரிசையில் இணையத்தையும் இணைத்துக் கொள்ள வேண்டும். பிற தகவல் தொடர்பு ஊடகங்களைக் காட்டிலும் முழு வீச்சில் இணையம் வளர்ச்சியுற்று வருகிறது என்றே கூற வேண்டும். எதிர்காலத்தில் பிற ஊடகங்களைப் புறந்தள்ளிவிட்டு இது முன்னணி இடத்தைப் பிடிக்கும் என்பதில் ஐயமில்லை. இத்துணை சிறப்பு வாய்ந்த இணையத்தின் வழி இதழ்கள் வெளி வருகின்றன. இதனை இணைய இதழ்கள் அல்லது மின்னிதழ்கள் (e- journals /e-zines) என்று குறிப்பிடுவர்.
அச்சு வடிவில் வெளி வருகின்ற இதழ்களைப் போலவே காலம் (நாளிதழ், வார இதழ்) மற்றும் பொருண்மை அடிப்படையில் (அரசியல் இதழ், பக்தி இதழ்) மின்னிதழ்களையும் வகைப்படுத்தலாம். அனைத்து வகை மின்னிதழ்களைப் பற்றியும் இங்குக் குறிப்பிடின் இக்கட்டுரை மிக நீளும் என்பதால் தமிழ் இலக்கியம் சார்ந்த படைப்புகளைத் தாங்கி, அச்சில் வெளிவராமல் இணையத்தில் மட்டுமே வெளிவருகின்ற குறிப்பிடத்தக்க மின்னிதழ்கள் பற்றி மட்டும் இக்கட்டுரை விளக்க

முற்படுகிறது.திண்ணை; வீட்டில் திண்ணை வைத்துக் கட்டுவது தமிழர் மரபு. நாகரிக உலகில் இம்மரபு மெல்ல அற்றுப் போய்விட்டது என்றே கூற வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் கிராமத்தில் கட்டப்படுகின்ற வீடுகளில்கூட திண்ணைகளைக் காணோம். இத்திண்ணைகளில் அமர்ந்து உள்ளூர் செய்தி முதல் உலகச் செய்தி வரை பேசப்படும். இது வெறும் திண்ணைப் பேச்சாக (வெட்டிப் பேச்சு) இல்லாமல் அறிவார்ந்த செய்திகளை ஆராய்கின்ற பேச்சாக இருக்கும். திண்ணையில் அமர்ந்து பலரும் பல விதமான செய்திகளைப் பேசுவதைப் போல திண்ணை மின்னிதழிலும் யார் வேண்டுமானாலும் எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். இதன்பொருட்டுத்தான் இவ்விதழுக்குப் இப்பெயர் ஏற்பட்டதாக அறியமுடிகிறது. இம் மின்னிதழில் கலை, அரசியல், அறிவியல், சமூகம், கதை, கட்டுரை, கவிதை, இலக்கியம் சார்ந்த செய்திகள் எனப் பல்வகைச் செய்திகள் இடம் பெறுகின்றன.இவ்விதழ் இலாப நோக்கமின்றி செய்திகளைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் மட்டுமே செயற்படுகிறது. இதனைப் பார்வையிடுவதற்கோ, படைப்புகளை வெளியிடுவதற்கோ கட்டணம் கிடையாது. அதுபோல படைப்பாளிகளுக்கும் இவ்விதழ் எவ்விதமான கட்டணங்களும் வழங்குவதில்லை. அதாவது வாங்குவதும் இல்லை; கொடுப்பதும் இல்லை.இம்மின்னிதழ் ஒருங்குறியீட்டு (Unicode) முறையில் இயங்குதல், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று புதுப்பிக்கப்படுதல், தொடர்ந்து எட்டு ஆண்டுகளாக வெளிவருதல், பழைய இதழ்களைப் பார்வையிடும் வசதி வழங்கல், பிற இணைய தளங்கள் மற்றும் மின்னிதழ்களுக்குச் செல்ல இணைப்பு வழங்கல் உள்ளிட்டவை இதன் சிறப்புகளாக அமைந்துள்ளன. இதன் இணைய முகவரி; www.thinnai.comதட்ஸ் தமிழ்; திண்ணையைப் போல முழுக்க முழுக்க இலக்கிய இதழாக இல்லாமல் நாளிதழைப் போல இம்மின்னிதழ் வெளி வருகிறது. இதில் பல்துறைச் சார்ந்த விரிவான செய்திகள் வெளிவந்தாலும்கூட இலக்கியச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிடுவது குறிப்பிடத்தக்கது. இது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய ஆறு மொழிகளில் வெளிவருகிறது என்பதும், இதில் செய்திகள் உடனுக்குடன் வெளியிடப்படுகின்றன (Update) என்பதும் வியத்தகு செய்தியாகும். இதில் தமிழகச் செய்திகள் மட்டுமின்றி இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலகச் செய்திகளும் கவிதை, கட்டுரை, சிறுகதை முதலான இலக்கியச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன. மேலும், திரைத்துறை உள்ளிட்ட ஒளிக்காட்சிகளையும் இதில் காணலாம். இதன் இணைய முகவரி; www.thatstamil.oneindia.inவார்ப்பு;இது, கவிதைக்கென்று வெளிவருகின்ற இணைய இதழ்; வாரம் தோறும் வெளிவருகின்றது. இது 1998 ஆம் ஆண்டு ‘நிக்குமோ நிக்காதோ’ என்ற பெயரில் இணைய இதழாக வெளிவந்தது. கவிஞர் இசாக் அவர்களின் ஆலோசன்ப்படி கவிஞர் மாலியன் அவர்களால் வார்ப்பு என்ற பெயர் மாற்றம் பெற்றது. இவ்விதழின் பதிப்பாசிரியர் பா.மகாதேவன். இதுநாள் (21-03-2008) வரை இதன்கண் 285 கவிஞர்களின் 1195 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. கவிஞர்கள், கவிதைகள், விமர்சனங்கள், நேர்காணல்கள், கட்டுரைகள் என்னும் தலைப்புகளில் செய்திகளைப் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் அறிவுமதி, கனிமொழி போன்ற புகழ் பெற்ற கவிஞர்களின் கவிதைகள் வெளிவந்துள்ளமை கொண்டு இதன் சிறப்பை வெளிப்படுத்தும். இதன்கண் அமைந்துள்ள நூலகம் என்ற இணைப்பின் வழி சென்று புதிதாக வெளிவந்துள்ள தமிழ் நூல்களைப் பற்றிய விமர்சனத்துடன் கூடிய தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம் என்பது மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதலாம். இவ்விதழ் ஒருங்குறியீட்டு முறையில் வெளிவருவதால் எழுத்துரு (Fonts) சிக்கல் ஏதுமில்லை. நாட்டுப்புறப் பாடல்களை நாட்டின் சொத்து என்று கருதுகின்ற இவ்விதழின் பதிப்பாசிரியர் பா.மகாதேவன் அதனைப் பாதுகாத்து வைக்க வேண்டிய கட்டாயமும் அவருக்கு இருப்பதாகக் குறிப்பிடுகிறார். எனவே எதிர்காலத்தில் நாட்டுப்புறப் பாடல்களையும், மொழிபெயர்ப்புக் கவிதைகளையும் வகை தொகைப்படுத்தி எளிதில் பெறுகின்ற வகையில் வெளியிடுகின்ற திட்டமும் இவருக்கு இருப்பதை அறிய முடிகிறது. இதன் இணைய முகவரி; www.vaarappu.comபதிவுகள்; 2000 ஆம் ஆண்டிலிருந்து கனடாவிலிருந்து வெளிவருகின்ற இந்த இதழின் ஆசிரியர் வ.ந.கிரிதரன். இது ஒருங்குறியீட்டு முறையில் மாதந்தோறும் வெளிவருகின்ற மின்னிதழ் ஆகும். அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம் என்ற முழக்கத்துடன் வெளிவருகின்ற இதன்கண் கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை, நூல் விமர்சனம், அறிவியல், நூல் அங்காடி ஆகிய இலக்கியம் சார்ந்த செய்திகளைக் காண இயலும். தமிழ்க் கலைக்களஞ்சியம் போன்று இணையத்தில் தகவல் களஞ்சியமாக திகழ்கின்ற விக்கிபீடியா, மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க தமிழ் இணைய தளம் மற்றும் இணைய இதழ்களுக்கான இணைப்புகளும் இதன்கண் வழங்கப்பட்டுள்ளன. இலவசமாக கிடைக்கின்ற இவ்விதழில் ஆக்கங்களை வெளியிடவும், பார்வையிடவும் கட்டணம் ஏதுமில்லை. ஆயினும் இதன் வளர்ச்சிக்காக ஆண்டுக் கட்டணமாக 24 டாலர்களை விருப்பமுடையவர்கள் வழங்குமாறு கோருகின்றனர். இதன் இணைய முகவரி; www.pathivukal.comமரத்தடி;மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறலாம். வெட்டிக் கதை பேசலாம். உருப்படியான கதைகளைப் பேசி அறிவைப் பெருக்கலாம். மரத்தடி என்ற இம்மின்னிதழ் இளைப்பாறவும், உருப்படியான தகவல்களைப் பரிமாறிக்கொள்ளவும் வகை செய்கிறது. மரத்தடிக் குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர் மட்டுமே இதில் தங்கள் படைப்புகளை இட முடியும். ஆயினும் வரும்பும் எவரும் இதில் உறுப்பினராகலாம். கட்டணம் எதுவும் கிடையாது. கதை, கவிதை, கட்டுரை முதலியவற்றை இவ்விதழ் வெளியிடுகிறது. படைப்புகளை ஒருங்குறியீட்டு முறையில் வெளியிடுவது இதன் சிறப்பாகும். ஆயினும் இது குறித்த காலத்தில் வெளிவருவதில்லை. இதன் இணைய முகவரி; www.maraththadi.comதமிழம் நெட்;மாதந்தோறும் வெளிவரும் இம்மின்னிதழைப் பொள்ளாச்சி நசன் நடத்தி வருகிறார். இவ்விதழ் பல அரிய செய்திகளைத் தாங்கி வெளிவருகிறது. தமிழறிஞர்களின் வாழ்க்கைக் குறிப்புகள். தமிழறிஞர்களின் படங்கள் (இதுவரை 276 படங்கள்), அரிய புகைப்படங்கள், நூல் மதிப்புரை, இலக்கிய நிகழ்வுகள் உள்ளிட்ட செய்திகள் இதன்கண் இடம் பெற்றுள்ளன. ஆங்கிலம் வழியாக தமிழ் கற்பிக்கின்ற அரும்பணியையும் இவ்விதழ் செய்து வருகிறது. கட்டணம் ஏதுமின்றி நடைபெற்றுவரும் இப்பணி அனைவராலும் பாரட்டப்படுகின்ற பயனுள்ள பணியாக அமைந்துள்ளது. இதன் இணைய முகவரி; www.tamizham.netதமிழ்க்கூடல்;இம்மின்னிதழ் தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் வகையில் அமைந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் இவ்விதழில் இடம் பெற்றுள்ளன. கட்டுரைகளை இலக்கியம், சமூகம், அரசியல், பொருளாதாரம் என்றும் கவிதைகளை மரபுக் கவிதை, புதுக் கவிதை, ஹைக்கூ கவிதை என்றும் வகைப்படுத்தி வெளியிடுவதன் மூலம் இது பிற இதழ்களினின்றும் வேறுபட்டு விளங்குகிறது. ஐம்பதுக்கும் மேற்பட்ட தமிழ்ச் சான்றோர்கள் பற்றிய சுருக்கமான தகவல்களைக் கொண்ட பட்டியல் ஒன்றையும் இது வெளியிட்டுள்ளது. இதன் இணைய முகவரி; www.koodal.comநிலாச்சாரல்; இம்மின்னிதழ் ஒவ்வொரு திங்கட்கிழமையன்றும் வெளிவருகிறது. இது ஒருங்குறியீட்டு எழுத்துரு முறையைப் பயன்படுத்துகிறது. தொடர்கள், கதைகள், கவிதைகள், சுவடுகள், பூஞ்சிட்டு முதலிய வகையில் இலக்கியச் செய்திகளை இவ்விதழ் வழங்குகிறது. பூஞ்சிட்டு என்ற பகுதியில் சிறுவர்களுக்கான கதைகள் வெளிவருகின்றன. பல்சுவை என்ற பகுதியில் கைமணம், கைமருந்து, சுவடுகள் ஆகிய தலைப்புகளில் செய்திகள் வெளிவருகின்றன. இதன் இணைய முகவரி; www.nilacharal.comதமிழோவியம்; இம்மின்னிதழின் ஆசிரியர் மீனாக்ஷி. ஒருங்குறியீட்டு எழுத்துருவைப் பயன்படுத்தி வாரந்தோறும் இவ்விதழ் வெளிவருகிறது. கவிதை, கட்டுரை. சிறுகதை, திரை விமர்சனம், நூல் விமர்சனம் உள்ளிட்ட செய்திகளைத் தாங்கி இவ்விதழ் வெளிவருகிறது. தமிழ் ஈபுக் (Tamil e -books) என்ற இணைப்பும் இதன்கண் உள்ளது. இதன் மூலம் தமிழில் வெளிவருகின்ற மின் நூல்களையும் காண முடிகிறது. இதன் இணைய முகவரி; www.tamiloviam.comமுடிவுரை;இலக்கியச் செய்திகளை வெளியிடுகின்ற இணைய இதழ்களில் மேற்காட்டியவை குறிப்பிடத் தக்கவையாகும். இவை போன்ற இன்னும் பல நூற்றுக்கணக்கான இதழ்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன. இவ்விதழ்களை எல்லாம் ஆய்வாளர்களும், ஆர்வலர்களும், ஆசிரியர்களும் கண்டு பயனுற வேண்டும். ‘சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்குச் சேர்ப்பீர்’ என்பது பாரதியின் அமுத வரிகள். ஆனால் இன்று எட்டுத் திக்கும் செல்ல வேண்டியதில்லை; இணையத்திற்குச் சென்றாலே எல்லாத் திக்குகளும் நம்மை நோக்கி இணையக் கரம் நீட்டும். http://duraiarasan.blogspot.com/2008/04/blog-post.html

காலச்சுவடு!கணித்தமிழ்: தமிழ் இணைய இதழ்கள்: ஓர் அறிமுகம்!- பத்ரி சேஷாத்ரி -இணையம் நன்கு வளர்ச்சி அடைந்த நிலையில் இன்று பல நாளேடுகள், வார, மாதத் தமிழ் இதழ்கள் இணையத்தில் வருகின்றன. தமிழகத்தில் அச்சில் வரும் செய்தித்தாள்களும் பெரும் வணிக இதழ்களும் சிறிது சிறிதாக 1990களிலிருந்தே இணையத்தில் வர ஆரம்பித்தன. இன்று தினத்தந்தி (www.daily thanthi.com), தினகரன் (www. dinakaran.com), தினமலர் (www.dinamalar.com), தினமணி (www. dinamani.com), தமிழ்முரசு (www.tamilmurasu.in), மாலைமலர் (www.maalaimalar.com) போன்ற அனைத்தும் இணையத்தில் கிடைக்கின்றன.இவற்றுள் தினமலர் (http://epaper.dinamalar. com), தினகரன் (www.dinakaran.com/epaper/default.asp), தமிழ் முரசு ஆகியவை மின்-தாள் வடிவில் வருகின்றன. அதாவது அச்சில் எப்படி இருக்குமோ அதைப் போலவே அந்தந்தப் பக்கங்களில் லே-அவுட் மாறாமல், விளம்பரங்கள் மாறாமல் வெளியாகின்றன.விகடன் (www.vikatan.com), குமுதம் (www. kumudam.com), கல்கி (www.kalkionline.com) ஆகியவை தமது குழும இதழ்கள் அனைத்திற்கும் வலையங்களை வைத்துள்ளன. விகடன், கல்கி இரண்டுமே காசு கொடுத்துப் படிக்கும் இதழ்கள். குமுதம் இப்போதைக்கு இலவசம்.இவை அனைத்திலுமே ஒரு பெரும் பிரச்சினை உள்ளது. இந்தத் தளங்களின் பக்கங்கள் ஒன்று மின்-தாள்களாக, அதாவது முழுவதுமே படங்களாக உள்ளன அல்லது ஒவ்வொன்றுமே தமக்கு உரித்தான எழுத்துரு (font) ஒன்றைப் பயன்படுத்துகின்றன. இந்த எழுத்துருக்கள் எவையும் யூனிகோடு கிடையாது. இதனால் இலவசமான தளங்கள்கூடத் தேடு பொறிகளான கூகிள், யாஹூ!, எம்எஸ்என் ஆகியவற்றில் அகப்படா. வலையகங்களின் அடிப்படையே யாராவது எதையாவது தேடும்போது 'டக்'கென்று கிடைப்பதுதான்.மின்-தாள்களாக வெளியாகும் செய்தித் தாள்களைத் தவிர்த்துப் பிற அனைத்திலுமே வடிவமைப்பு மோசமாகத்தான் உள்ளது. தமது அச்சு இதழ்களில் கவனம் செலுத்தும் அனைத்து நிறுவனங்களும் மின்னிதழ்களுக்கு அதே அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதன் காரணம், இதுநாள்வரையில் இந்த மின்னிதழ்கள் மூலம் வருமானம் பெறச் சரியான, நிலையான வழிகள் இல்லாமையே.இதே நேரத்தில் சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் தமிழ் முரசு (தமிழக இதழுக்கும் சிங்கை இதழுக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை போல) முழுவதும் யூனிகோடில் வெளிவருகிறது (http://tamil murasu.asia1.com.sg). அதேபோலவே இலங்கையிலிருந்து வெளியாகும் தினக்குரல் (www.thinakural.com), வீரகேசரி (www.vira kesari.lk) முதலியன முழுவதும் யூனிகோட் எழுத்துருவிலேயே வருகின்றன.இணையம் வளர்ச்சி அடைந்த காலத்தில் உருவான வலைவாசல்கள் (போர்ட்டல்கள்) பலவும் தமிழில் தினசரிச் செய்திகள், சிறப்புச் செய்திகள், இலக்கிய, பல்சுவை இதழ்கள் என்று ஆரம்பித்தன. இணையக் குமிழ் வெடித்தபோது இவ்வாறு உருவான பல வலையகங்களும் தமது சேவையைக் குறைத்துக்கொள்ள நேரிட்டது. சில காணாமல் போயின. சில இன்றும் இருந்துவருகின்றன. இவை அனைத்துமே இணையத்தில் மட்டுமே உள்ளன என்பது முக்கியம். அவற்றில் வணிக நோக்கில் நடந்துவரும் இதழ்கள் கீழ்க்கண்டவை:சிஃபி (sify.com) நிறுவனத்தின் தமிழ் வலையகம்: http://tamil.sify.com. அதே நிறுவனம் நடத்தும், தினசரிகளிலிருந்து செய்திகளைச் சேகரித்து ஒரே பக்கத்தில் வழங்கும் சேவை: www.samachar.com/tamil/index.php. Thats Tamil: http://thatstamil.oneindia.in, ஆறாம் திணை: www.aaraamthinai.com, வெப் உலகம்: www.webulagam.com.இவை தினசரிகள். என்றாலும் தினசரி அச்சு இதழ்களுடன் போட்டிபோட முடியாமல் மிகக் குறைந்த நிருபர்களையும் வசதிகளையும்கொண்டு, முடிந்தவரை அலுவலகத்தின் நான்கு சுவர்களுக்குள் அமர்ந்துகொண்டே தமது இணைய இதழ்களைக் கொண்டுவருகின்றன. இந்த நிறுவனங்கள்கூட யூனிகோடில் தமது இதழ்களைத் தருவதில்லை. வணிக நோக்கில்லாத சில இணைய இதழ்களும் உருவாகியுள்ளன. திண்ணை (www.thinnai.com), தமிழோவியம் (www. tamiloviam.com) வாராவாரமும், திசைகள் (www.thisaigal.com) மாதம் ஒரு முறையும், பதிவுகள் (www. pathivukal.com), நிலாச்சாரல் (www.nilacharal.com) ஆகியவை எப்பொழுதெல்லாம் வர முடியுமோ அப்பொழுதும் வெளிவருகின்றன. இவை அரசியல், சமூகம், இலக்கியம், சினிமா எனப் பல விஷயங்களை விவாதிக்கின்றன. இந்த இதழ்களின் சிறப்பம்சம் இவற்றில் எழுதுபவர்கள் பலரும் இணையத்தில் மட்டுமே எழுதுபவர்கள். திண்ணை, பதிவுகள், நிலாச்சாரல் ஆகியவை யூனிகோட் எழுத்துருவைப் பயன்படுத்துவதில்லை; திசைகளும் தமிழோவியமும் பயன்படுத்துகின்றன.சிஃபி தமிழ்ப் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாகப் பல சிற்றிதழ்கள், நடுத்தர இதழ்களை முழுவதுமாக ஆவணப்படுத்திவருகிறது.
அவை :காலச்சுவடு: http://tamil.sify.com/kalachuvadu/index.php, உயிர்மை: http://tamil.sify.com/uyirmmai/index.php, அமுதசுரபி: http://tamil.sify.com/amudhasurabi/index.php, கலைமகள்: http://tamil.sify.com/kalaimagal/index.php, மஞ்சரி: http://tamil.sify.com/kalaimagal/index.php, தலித்: http://tamil.sify.com/dalit/index.php, பெண்ணே நீ: http://tamil.sify.com/pennaenee/index.phpஇவை எதுவும் யூனிகோடில் இல்லை.ஆனால் கீற்று என்னும் வலையகம் (www.keetru. com) பல்வேறு சிற்றிதழ்களை அழகாக யூனிகோடில் வெளியிடுகிறது. இங்குக் கிடைக்கும் இணைய இதழ்கள்:தலித் முரசு: www.dalithmurasu.com, புதிய காற்று: www.puthiyakaatru.keetru.com, புது விசை: www.puthuvisai.com, கூட்டாஞ்சோறு: www.koottanchoru.com, அநிச்ச: www.anicha.keetru.com, புரட்சி பெரியார் முழக்கம்: www.puratchiperiyarmuzhakkam.com, விழிப்புணர்வு: www.vizhippunarvu.keetru.com, தாகம்: http://keetru.com/thaagam/index.html, தமிழ்ச் சான்றோர் பேரவை செய்தி மடல்: http://www.keetru.com/anaruna/index.html.இவை அனைத்திலும் உள்ள விஷயங்கள் கூகிள் தேடலின்போது கிடைக்கும்.குறிப்பிட்ட ஒரு வகுப்பினரை மட்டும் குறிவைக்கும் niche magazines தமிழில், அச்சில், நிறைய வருகின்றன. பெண்களுக்காக மட்டும், குழந்தைகளுக்காக, பங்குச் சந்தை/தொழில் தொடர்பானவை, மோட்டார் வாகனங்களுக்காக என்று. தோழி (www.thozhi.com) என்ற தளம் பெண்களுக்காக என்று பிரத்யேகமாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தளம் நல்ல வடிவமைப்புடன் உள்ளது. நின்னை (www.ninnay.com) என்றொரு தளம், கவிதைகள், மாற்று சினிமா ஆகியவற்றுக்காக உருவாகியுள்ளது. ஆனால் முழுக்க முழுக்க எழுத்துகளால் அல்லாமல் பட வடிவில் (png கோப்புகளாக) அமைத்திருக்கிறார்கள்.நான் இதுவரை குறிப்பிட்டவற்றைத் தவிர இன்னமும் பல சிறு மின்னிதழ்கள் இருக்கலாம்.தொழில்நுட்ப வகையில் பார்க்கும்போது வெகு சிலவற்றைத் தவிரப் பிற அனைத்துமே யூனிகோடை ஏற்காமல் இருப்பதால் அவற்றின் பயன் குறைவே. இதைத் தவிர, RSS feed, வாசகர்களிடமிருந்து கருத்துகளைக் கேட்பது, tagging போன்ற பலவற்றைப் பற்றி அறியாமலே இருக்கிறார்கள். பல சிற்றிதழ்களுக்கும் அச்சு இதழ்களை நடத்துவதே போராட்டமாக இருக்கும் போது இணைய இதழ்களில் அதிகக் கவனம் செலுத்துவார்கள் என்று சொல்ல முடியாது. பெரிய வணிக இதழ்களுக்கோ, இப்பொழுது வலையகங்களை அவர்கள் உருவாக்கும் பாணியை மாற்றுவது என்பது மிக அதிகமான அளவு வேலையை இழுத்தடிக்கும்.வலைப்பதிவுகள் (blogs) எனப்படும் தனியார் இணையக் குறிப்பேடுகள் இன்று மிகவும் பிரபலமாக உள்ளன. இவற்றை இணைய இதழ்களோடு நேரடியாக ஒப்பிட முடியாவிட்டாலும் வரும் வருடங்களில் இவை இணைய இதழ்களைவிட அதிகமாக மிளிர வாய்ப்புகள் நிறைய உள்ளன. ஒவ்வொரு துறையிலும் உள்ள நிபுணர்கள் பலரும் தமக்கெனத் தமிழில் வலைப்பதிவுகளை உருவாக்கும்போது அவற்றில் காணக்கிடைக்கும் செய்திகளும் செய்தி அலசல்களும் இணைய இதழ்களில் காணக் கிடைப்பதைவிட வலுவாக இருக்கும். இந்நிலை ஏற்கெனவே உலகளாவிய ஆங்கில வலைப் பதிவுகளில் எட்டப்பட்டுவிட்டது. ஒரு நல்ல விஷயம் - தமிழ் வலைப்பதிவுகள் ஆரம்பிக்கும் போதே உயர் தொழில்நுட்பங்களான யூனிகோட், RSS feeds, tagging போன்ற பலவற்றையும் பாவித்தே உருவாக்கப்படுகின்றன.இணைய இதழ்கள் வருவதால்தான் இன்று நம்மால் பல்வேறு இதழ்களையும் படிக்க முடிகிறது. காசு கொடுத்து 30-40 இதழ்களை நாம் வாங்கிப் படிக்கப் போவதில்லை. இதனால் மாற்றுக் கருத்துகள் நம்மை வந்தடைகின்றன. இன்று வாசகர்கள் சில ஆயிரங்களே இருந்தாலும், இணையம் வளர வளர, நாளை இந்த வாசகர் வட்டம் பத்து மடங்கு அதிகரிக்கும் என்பதை மனத்தில் வைத்து இது வரையில் இணையத்தைத் தொடாத இதழ்களும் இணையத்தைத் தொட வேண்டிய தேவையை உணர வேண்டும்.அதைப் போலவே சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தைச் சிற்றிதழ்கள் வெளியிடுவதில் செலவழித்துவிடும் பலரும்கூட இணையத்தில் மட்டுமே இருக்கக் கூடிய இதழ்களை உருவாக்குவதன் மூலம் காசை மிச்சப்படுத்தலாம். நிறையச் செலவுசெய்து 300-1000 வாசகர்களை அச்சு மூலம் அடைவதைவிடச் சில ஆயிரம் வாசகர்களைச் செலவே இல்லாமல் அடைந்துவிட முடியும்![கட்டுரையாளர் கிழக்குப் பதிப்பகத்தின் பதிப்பாளர். இவரது வலைப்பதிவு: http://thoughtsintamil.blogspot.com ]

மீள்பிரசுரம்: திண்ணை.காம்.தமிழ் இணைய இதழ்கள் - ஒரு முன்னோட்டம்! - சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., -உலகம் தன் பரப்பில் இருந்துச் சுருங்கி இன்று ஒரு கிராமமாக மாறிவிட்டது, இதற்குக் காரணம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி. இத்துறையின் பெரும்பகுதி வளர்ச்சிக்குக் காரணம் கணினித்துறை. அறிவியல் துறையின் முன்னேற்றத்திற்கும், புரட்சிகரமான செயல்பாட்டிற்கும் காரணமாக விளங்கி வருவது கணினித்துறை என்பது கண்கூடான உண்மை. அறிவியல், தொழில்நுட்பத்தின் வழியில் கணினித்துறையும், தகவல் தொழில் நுட்பத்துறையும் இணைந்து மனித சமுதாயத்திற்குத் தந்துள்ள புதிய வழிமுறைதான் இணையம். அதன் விரிவும், அது ஏற்படுத்தியுள்ள வாய்ப்புகளும் எண்ணிலடங்காதவை. மனித அறிவுத்திறனின் எல்லையே அதன் எல்லை; மனித படைப்புத்திறனின் வரம்பே அதன் வரம்பு. உலகு முழுவதும் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இணையத்தின் செயல்பாடு அண்மையில்தான் பல்வேறு வழிகளில் பெரும்¢ மாற்றத்தையும் வளர்ச்சியையும் கண்¢டுள்ளது. தொடக்க காலத்தில் அஞ்சல் செய்திகளை அனுப்ப மட்டுமே பயன்பட்டுவந்த இணையம் தற்போது மின்வணிகம், மின் அரசான்மை, மின் பொழுதுபோக்கு, மின்நூலகம், மின்னிசை எனப் பல வகைகளில் தன் பயன்பாட்டுத்தளத்தை விரிவாக்கிக் கொண்டே செல்கிறது. அண்மைக்காலம் வரையில் இணையத்தின் செயல்பாடு, பயன்பாடு ஆகியவற்றில் பெரும்பாலும் ஆங்கில மொழியே பயன்படுத்தப்பட்டு வந்தது. பல்வேறு நாடுகள் இணையத்தைப் பலவழிகளில் பயன்படுத்தத் தொடங்கியபின் அந்தந்த நாட்டு மொழிகள் இணையத்தில் இடம் பெறும் தேவை ஏற்பட்டது. எந்தத் துறையின் அறிவும் மக்கள் பேசும் மொழியில் இருந்தால் அது மக்களை எளித்¤¢ல் சென்றடையும்; மக்களால் பெரிதும் பயன் படுத்த முடியும் என்ற அடிப்படையி¢ல் தமிழ் மொழி இயைத்தில் இடம் பெற வேண்டி தேவையைக் காலம் ஏற்படுத்தித் தந்தது. தமிழும் கணினிப் பயன்பாடும்
தமிழ் மொழியைப் பொறுத்த மட்டில் ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பே அது இயைத்தில் இடம் பெறத் தொடங்கிவிட்டது. இதன் வழியாக உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் தமிழர்களும் இணையத்தை, கணினியை அதிகமாகப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டது. மின் அஞ்சலில் தமிழ் முதலில்¢ இடம் பெற்றது. மெல்ல மற்ற துறைகளிலும்¢ கால்பதி¢த்தது. தமிழ் இணையம் 99 மாநாட்டிற்கு முன்வரை உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் பல குழுவினராக இருந்து அவரவருக்கான தனித்தனியான தமிழ் எழுத்துருக்களை உருவாக்கிக் கொண்டு அவ்வற்றை மின்னஞ்சலிலும் இணைய தளங்களிலும் பயன்படுத்தி வந்தனர். இதனால் ஒரு குழுவினர்¢ அனுப்பிய மின்னஞ்சலையோ, இணையதளத் தகவலையோ ஏனையோர் படித்து அறிய இயலாத நிலை நிலவியது. தமிழ்மொழி ஒன்றுதான் என்றபோதிலும் அது இணையத்தில் பல வடிவங்களில் வலம் வந்து கொண்டிருந்தது. மேற்கண்ட சிக்கலில் இருந்து மீள தமிழக அரசு நடத்திய தமிழ் இணையம் 99 மாநாட்டில் தமிழ் எழுத்துருக்கள் தரப்படுத்தப்பட்டு டாம் (TAM), டாப் (TAM) என்ற எழுத்துருக்கள் பயன்படுத்தப்பட அறிவிக்கப்பட்டன. இதனால் அச்சிக்கல் ஓரளவிற்கு அந்நேரத்தில் தீர்க்கப்பட்டது. இருப்பி¢னும் இந்த எழுத்துருக்களை ஒரு கணினியில் உள்ளீடு செய்தபின்னேதான் பயன்படுத்தமுடியும் என்ற சிக்கல் நீடித்தது. தமிழில் யுனிகோடு முறைமை
தற்போது உலகமொழிகள் எல்லாவற்றிற்கும் ஓர் ஒருங்கிணைந்த குறியீட்டு முறைதான் இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் அமைக்கப்பட்ட தகுதரமான யுனிகோடு (UNICODE) என்ற எழுத்துருவால் உலக மற்றும் இந்திய மொழிகளின் இடையில் தமிழுக்கு என்று தனியிடம் கிடைத்துள்ளது. இம்மாற்றம் குறிப்பிடத்தக்கது. இதிலும் சில கயைப்பட வேண்டிய குறைபாடுகள் உள்ளன என்ற கருத்தும் இங்கு சுட்டத்தக்கது. இந்த யுனிகோடு முறை மூலம் பதிக்கப்பட்ட தகவல்களைத் தமிழிலேயே தேடவும், பெறவும், மின்னஞ்சல்களை அனுப்பவும் எளிதாக முடியும். மேலும் இத்தகுதரம் உலகில் உள்ள பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டமையால் தமிழ் மொழிக்கு இணையத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறப்பான ஏற்றம் உண்டு என்பதில் ஐயமில்லை. யுனிகோட் முறை தமிழ் இணையப் பயன்பாட்டில் ஒரு மைல்கல். இவ்வளர்ச்சியால் தமிழ் மொழியிலேயே கணினி பயன்பாடு அமைவது மிகச் சிறந்த மாற்றத்தைத் தற்போது ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் தமிழின் இடம் இன்று இணையத்தில் உலகின் பல மொழிகள் இடம் பெற்றுவருகின்றன. ஆயினும் ஆங்கில மொழியை அடுத்து மிகுதியாகப் பயன்படுத்தப்படும் மொழி தமிழ் என்பது பெருமைக்குரிய செய்தி. மேலும் இதனால் வளர்ந்துவரும் கணினித்துறை நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவ எளிதான வழி பிறந்¢துள்ளது. தமிழ் இணைய இதழியல் இன்று கல்வி, வணிகம், வங்கி, வேளாண்மை, பொறியியல், மருத்துவம், அறிவியல் போன்ற பல்வேறு துறைகள் கணினி தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி முன்னேறி வருகின்றன. இவ்வரிசையில் இதழியல் துறையும் முன்னேறி வருகிறது. அச்சு இதழியல் தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய மாற்றத்தை கணினி விளைவித்துள்ளது. இது தவிர இணையத்தில் இதழியல் என்ற புதிய பிரிவும் தற்போது தொடங்கியுள்ளது. தமிழ் மொழியிலும் பல இணைய இதழ்கள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இது ஒரு புதிய முயற்சியாகும். தமிழ் இணைய இதழ்கள் உலக அளவில் உள்ள தமிழ் வாசகர்களை உடன் எட்டுகின்றன ; உலக அளவில் வாசகர்களைப் பெறுகின்றன. உடனடியாக மின்னஞ்சல் மூலமாக வாசகர் கருத்துப் பரிமாற்றமும் நடைபெற்று விடுகிறது. இதன்மூலம் தமிழ் மொழியின் கலை, பண்பாட்டுப் பகிர்வுகள், தேடல்கள், பார்வைகள் பன்முக நோக்கில் பரவிவருகின்றன. உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் இடத்தால் வேறுபட்டு, பண்பாட்டு நாகரிக மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும் தமிழால் தமிழ் இணையத்தால் இன்று ஒன்றுபட முடிகிறது. இதற்குப் பெரும் பங்காற்றி வருவன தமிழ் இணைய இதழ்கள். தமிழ் இணைய இதழ்கள் சிலவும் அவற்றின் வகைப்பாடும் தமிழில் பல இணைய இதழ்கள் தற்போது எழுந்து வளர்ந்து வருகின்றன. அவற்றுள் பின்வருவன குறிக்கத்தக்கன. அம்பலம், திண்ணை, தமிழோவியம், வார்ப்பு, திசைகள், ஊடறு, நிலாச்சாரல், ஆறாந்திணை, மரத்தடி, பதிவுகள், வெப் உலகம், தமிழ்சிபி தோழி.காம் போன்ற இதழ்கள் வாசகர்களைப் பெருமளவில் பெற்றவை. இவ்விதழ்களில் சில மாத இதழ்கள், சில வார இதழ்கள். இவை பெரும்பாலும் இலக்கியம் சார்ந்த இதழ்கள் என்பது இவற்றின் பொதுப்பண்பாக உள்ளது. இந்த இதழ்களில் பெண்களுக்கானவை, கவிதைக்கானவை, செய்திகளுக்கானவை என்ற பிரிவுகளும் உண்டு. கட்டணம் கட்டி படிக்கவேண்டியவை, கட்டணம் தேவைப்படாதவை என்ற பிரிவுகளும் உண்டு. இவை தவிர தமிழ் நாட்டில் வெளியாகும் அச்சு இதழ்களி¢ல் பேர்போன இதழ்களும் தங்கள் இதழ்ப்பகுதிகளை இணையவழியாகத் தந்து வருகின்றன. அவற்றை மீள்பிரசுரம் என்பதாகக் கருத இயலுமே தவிர இணைய இதழ்களாகக் கருதத் தகாது. மேலும் இணைய இதழ்களைச்¢ சிற்றிதழ்கள் போன்றவை/ தரத்தவை என்று கருதினாலும் தவறாகாது. இதனடிப்படையில் தமிழ் இணைய இதழ்களின் தரத்தையும் அவற்றின் பங்களிப்பையும் ஆராய ஏற்ற காலம் இதுவேயாகும். தமிழ் இணைய இதழ்களின் உள்ளடக்கம் மேற்சுட்டிய இணைய இதழ்களின் உள்ளடக்கத்தை அறிந்து கொள்வது அவற்றின் தரத்தை உணர்ந்து கொள்வதற்கு ஈடானது. அவவ்கையில் சில இதழ்களின் உள்ளடக்கம் இங்கு தரப்படுகின்றன. திண்ணை இந்த இதழ் அரசியலும் சமூகமும், கதைகள், கவிதைகள், அறிவியலும் தொழில் நுட்பமும், கலைகள், சமையல், இலக்கியக்¢ கட்டுரைகள், நகைச்சுவையும் வித்தியாசமானவையும், கடிதங்கள் அறிவிப்புகள் போன்ற பல பகுதிகளை உள்ளடக்கி அமைகிறது. இது ஒரு வார இதழாகும். பதிவுகள் இந்த இதழில் அரசியல், கவிதை, சிறுகதை, கட்டுரை, நூல்விமர்சனம், நிகழ்வுகள், அறிவியல் , திரைப்படம், வாசகர் எதிரொலி, நாவல், உங்கள் நலம், விவாதம், தமிழ் வர்த்தக் கையேடு, இலவச வரிவிளம்பரம், நூல் அங்காடி போன்ற பகுதிகள் இடம் பெறுகின்றன. தோழி. காம் இந்த இதழ் பெண்களுக்கான இதழ் ஆகும். இதனுள் விவாதம், அழகு, தாய்மை, பயணம், திரை, உங்கள் நாட்குறிப்பு முதலிய இடம்பெற்று வருகின்றன. அம்பலம் இந்த இதழில் செய்திகள், வார இதழ், கவிதைகள், சிறப்பிதழ்கள், மகளிர்பக்கம், வாழ்த்துகள், மின்னஞ்சல், இளையர், திரை முதலிய பகுதிகள் உள்ளன. வார்ப்பு இது கவிதைகளுக்கான இதழாக வெளிவருகிறது. இதில் கவிதைகள், கவிதைத்தொகுதி அறிமுகம், கவிதை விமர்சனங்கள், கவிஞர்களின் பட்டியல் முதலியன இடம் பெற்றுள்ளன. இவ்வாறு வகைக்கு ஒன்று இங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவைதவிர மற்றவையும் கணக்கில் கொள்ளப்பட வேண்டியவையே. இடங்கருதி இவை மட்டும் எடுத்துக் கொள்ளப்பட்டன. தமிழ் இணையஇதழ்கள் ஆய்வின் தேவை தமிழ் இணைய இதழ்கள் என்பவை தமிழ் இதழியல் வரலாற்றில் புதுமையானவை. அவற்றிற்கு என்று சில வரையறைகள் தற்போது உள்ளன ; பொதுப்பண்புகள் உள்ளன. அவை இணைய இதழ்களுக்கு மட்டுமே உரித்தானவை. இவை ஆராயப்படவேண்டும். தமிழ் இணைய இதழ்களில் உள்ள குறை நிறைகள் ஆராயப்பட வேண்டும். இதன்மூலம் இணையஇதழ்கள் சரியான பாதையை நோக்கிப் பயணிக்க முடியும். தமிழ் இணைய இதழ்களின் தரம், வாசகர் கருத்து ஆகியவையும் ஆராயப் படவேண்டிய களங்கள். இதன்மூலம் இணையஇதழ்களின் தரம் மேம்பாடு அடையும். தமிழ் இணைய இதழ்கள் ஒரு குறிப்பிட்ட வட்ட மக்களை மட்டுமே சென்றடைகின்றன. அவை அனைத்து வட்ட மக்களையும் சென்றடைவதற்கான வழிமுறைகள் ஆராயப்பட வேண்டும். தமிழ் இணைய இதழ்களுக்கும் மற்ற துறை இதழ்களுக்குமான ஒற்றுமை வேற்றுமை அளந்தறியப்பட வேண்டும். இதன்மூலம் இணைய இதழ் வளர தனித்த வழி உருவாகும். சு. துரைக்குமரன் பி.லிட்., எம்.ஏ., ஆசிரியப் பயிற்றுநர், வட்டார வளமையம், புதுக்கோட்டை குறிப்புபாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள இந்தக் களத்தை எடுத்துக்கொண்டுள்ளேன். இதற்கு ஆய்வு நெறியாளராக முனைவர் மு. பழனியப்பன் எம்.ஏ., எம். பில்., பிஎச்.டி., பிஜிடிசிஏ., முதுநிலை தமிழ் விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி, (த), புதுக்கோட்டை, 622 001 அமைகிறார். இது குறித்தத் தகவல்கள் ஏதேனும் இருப்பினும் கீழ்க்காணும் மின்னஞ்சலில் தெரிவிக்க வேண்டுகிறேன். muppalam2003@yahoo.co.in நன்றி: திண்ணை.காம்

இணைய இதழ்களில் பெண்ணியப் படைப்புகள்!
- முனைவர் துரை. மணிகண்டன் -விரிவுரையாளர் , தமிழாய்வுத்துறை, தேசியக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி.இலக்கிய உலகில் எண்ணிலடங்கா இலக்கியங்களைப் பிரசவம் செய்யும் மொழிகளுள் தமிழ் மொழியும் ஒன்று. இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்குச் சொந்தம் கொண்டாடியத் தமிழ் இன்று நான்காம் தமிழாக .......உள்ளே

தமிழில் இணைய இதழ்கள்!- முனைவர். மு. இளங்கோவன் -[புதுச்சேரி வலைப்பதிவு பயிலரங்கில் (09.12.2007) வெளியிடப்பெற்ற மலரில் இடம்பெற்றுள்ள இக்கட்டுரை இங்கு ஒரு பதிவுக்காக மீள்பிரசுரம் செய்யப்படுகிறது. இணைய இதழ்கள் பற்றி அவ்வப்போது வெளிவரும் அல்லது ஆய்வரங்குகளில் வாசிக்கப்படும் கட்டுரைகளை அல்லது புதிய ஆய்வுக் கட்டுரைகளை அனுப்பி வையுங்கள். பதிவுகளில் பிரசுரிக்கிறோம்.- பதிவுகள்]இருபதாம் நூற்றாண்டு வழங்கிய தகவல்தொடர்புக்கருவிகளுள் இணையம் குறிப்பிடத் தகுந்த,தவிர்க்க முடியாத ஒன்றாக இன்று விளங்குகிறது.செய்திகளை உடனுக்குடன் பரிமாறிக்கொள்ள உதவும் இதன் சிறப்புகள் பலவாக உள்ளன. அச்சுவடிவிலும், ஒலி, ஒளி வடிவிலும் தகவல்களைப் பெறக்கூடிய, வழங்கக் கூடிய இருவழிக் கருவியாக இது விளங்குகிறது.இணையம் பயன்பாட்டுக்கு வந்த பிறகு தகவல்களைப் பல முனைகளில் இருந்து பல வடிவங்களில் பெற்றுக்கொள்ள,அனுப்ப முடிகிறது. எனவே அச்சுவடிவில் ஒரு குறிப்பிட்ட நில எல்லைக்குள் கிணற்றுத் தவளையாக இருந்த ஊடகங்களும், ஒலி,ஒளி வடிவில் இருந்த ஊடகங்களும் இணையத்தின் வழியாக இன்று உலகம் முழுவதற்கும் பயன்படத்தக்க படைப்புகளை,தகவல்களை உலகச்சொத்தாக்க முனைந்துள்ளன.உலகப்போட்டிக்கு ஈடு கொடுத்து ஒவ்வொருவரும் தங்கள் நலனுக்காக இணையத்தை ஒவ்வொரு வகையில் சார்ந்து நிற்கின்றனர்.அவ்வகையில் அச்சில் வந்த,வரும் இதழ்கள் பலவும் தங்கள் இதழ்களை மின்னிதழ்களாகவும்(e-zines) வெளியிடுகின்றன.அவ்வகையில் உலக மொழிகள் பலவற்றுள்ளும் மின்னிதழ்கள் வெளிவருகின்றன.இக்கட்டுரை தமிழில் வெளிவரும் இணைய இதழ்கள் சிலவற்றை அறிமுகம் செய்கின்றது.தரவுதளம் (Database site) இணையதளம்,இணைய இதழ், வலைப்பூ வரையறைதமிழில் வெளிவரும் இணைய இதழ்களைப்பற்றி அறிவதற்கு முன்பாக தரவுதளம் (Database site), இணையதளம்,இணைய இதழ்,வலைப்பூ என்னும் சொற்களைப்பற்றிய வரையறையைச் செய்துகொள்வது நன்று. ஏனெனில் இவை யாவும் தொடர்புடையனவாக இருப்பதால் ஒன்றுபோல் தோன்றும்.தரவுதளம் என்பது பல்வேறு தகவல்களைச் சேகரித்து நிரல்படுத்திக் கட்டமைக்கப்பட்ட தொகுப்பு இணையதளம்.ஆங்கிலத்தில் பல தரவுதளங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக உலகளாவிய திரைப்படங்கள் தொடர்பில் அனைத்துத் தகவல்களும் www.imdb.com தளத்திலும், மட்டைப்பந்து விளையாட்டினைப் பற்றிய தகவல்களுக்காக www.cricinfo.com தளமும் உள்ளன.தமிழில் முதலாவது தரவு தளமாக www.viruba.com உள்ளது. இத்தளத்தில் தமிழில் வெளியாகும் நூல்களைப் பற்றியும், அவற்றைப் பதிப்பித்த பதிப்பகங்கள் பற்றியும், நூல்களை எழுதியுள்ள எழுத்தாளர்களைப் பற்றிய தகவல்களுடன் தமிழ் ஊடகங்கள் பற்றிய வெளியீட்டுத் தகவல்கள், புத்தகங்களுக்கான மதிப்புரைகள் ஆகியவற்றுடன் தமிழில் வெளியாகும் பல சிற்றிதழ்கள் பற்றிய வெளியீட்டுத் தகவல்களும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தளம் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. தமிழ் ஆர்வலர்கள்,தமிழ் ஆய்வுமாணவர்கள் மற்றும் வாசகர்களின் பேராதரவைப் பெற்ற தளமாக இது விளங்குகிறது.இணையதளம் என்பது ஒரு நிறுவனம் அல்லது அமைப்பு, அல்லது தனிநபர் தமது விவரங்கள், தகவல்கள்,செய்திகள்,சேவைகள் முதலானவற்றை,எழுத்தாகவோ, படமாகவோ ஒலி, ஒளி வடிவிலோ தருவது இணையதளமாகக் கருதலாம்.எ.கா. அப்பல்லோ மருத்துவமனையின் தளம் (www.apollohospitals.com) அதன் சேவை,மருத்துவர்கள் பற்றிய விவரம், வசதிகள் இவற்றைத் தாங்கியுள்ளமையை நினைவிற்கொள்க.இணைய இதழ்கள் என்பவை அச்சுவடிவ இதழ்களைப் போலவே பல்வேறு செய்திகள், படைப்புகள்,படங்கள் இவற்றைக்கொண்டு வெளிவருவனவாகஉள்ளன.எ.கா.கீற்று, திண்ணை. பதிவுகள்,நிலாச்சாரல், எழில்நிலா, அந்திமழை முதலியன.வலைப்பூ என்பது தம் விருப்பத்தை எழுத்தாகவோ,படமாகவோ,ஒலி,ஒளி வடிவாகவோ வழங்குவது. கட்டணம் கட்டியும்,இலவசமாகவும் வலைப்பூக்களை உருவாக்கமுடியும்.பல நிறுவனங்கள் இலவசமாக இச்சேவையை வழங்குகின்றன. Google நிறுவனத்தின் www.blogger.com என்னும் வலைப்பூ சிறந்த நூல்கள், சிறந்த தளங்கள், இலக்கிய நிகழ்ச்சிகள், பதிப்பு, நூல் தொர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்திகளை வெளியிட்டு வருவதை அத்தளத்திற்குச் சென்று பார்வையிடலாம்.இணைய இதழ்கள்
தமிழ்மொழியில் பல்வேறு இணைய இதழ்கள் வெளிவருகின்றன. இவ்விதழ்கள் இலவசமாகவும், கட்டணம் கட்டியும் படிக்கும் படியாக உள்ளன.அதுபோல் அனைவரும் எளிதில் படிக்கும்படியாக ஒருங்குகுறி(unicode) எழுத்திலும், எழுத்துகளைப் பதிவிறக்கம் செய்துபடிக்கும் படி தனிவகை(டாம்,டேப்) எழுத்திலும் வெளிவருகின்றன. ஒருங்குகுறியில் வெளிவரும் இதழ்களையே அனைவரும் விரும்பிப் படிக்கின்றனர்.தொடக்கத்தில் டாம்,டேப் எழுத்துகளைப் பயன்படுத்திய இதழ்கள்கூட உலக ஓட்டத்திற்கு ஈடுகொடுத்து ஒருங்கு குறிக்கு மாறிவிட்டன.தனிவகை எழுத்தில் தொடக்கத்தில் வெளிவந்த தினபூமி,தினமணி இதழ்கள் இன்று ஒருங்கு குறியில் வருகின்றமையைக் கவனத்தில் கொள்ளவேண்டும். எழுத்துருக்களைப் பதிவிறக்கம் செய்து படிக்கவேண்டிய தளத்திற்கோ, இதழிற்கோ படிப்பாளிகள் செல்லத் தயங்குகின்றனர்.தினத்தந்தி இதழ் ஒருங்குகுறியில் இல்லாமையால் படிக்கும் சிக்கல் உள்ளது.இணைய இதழ்களின் வகைப்பாடு
இணைய இதழ்களை அதன் வெளியீட்டு முறைகளுக்கு ஏற்ப நாளிதழ்,வார இதழ்,மாத இதழ் என்றெல்லாம் வகைப்படுத்த முடியும். நாளிதழையும் காலை இதழ்,மாலை இதழ் என வகைப்படுத்தலாம்நாளிதழ்பெரும்பாலான அச்சு இதழ்கள் இன்று மின்னதழ்களை வெளியிடுகின்றன. தினமலர், தினமணி, தினபூமி, விடுதலை, தினத்தந்தி, தினகரன், மாலைமலர் முதலியன இணைய இதழ்களாக வெளிவருவதில் குறிப்பிடத்தக்கன.இவற்றுள் தினமலர் நாளிதழ் மின்னிதழாக வெளிவருவதுடன் குறிப்பிட்ட மணி நேரத்தில் செய்திகளைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கின்றது.மேலும் அயல்நாட்டுத் தமிழர்களைக் கவரும் பல்வேறு உத்திகளையும் பின்பற்றி அயலகத் தமிழர்களைத் தன் இதழைப் படிக்கும்படி செய்கின்றது. உலகத்தமிழர் செய்திகள், பிற மாநிலச் செய்திகள், மாவட்டங்கள் என்றெல்லாம் பல்வேறு வகையில் வாசகர்களைக் கவர்ந்திழுக்கின்றது. இவ்வகையில் சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆத்திரேலியா, சீனா,சப்பான் முதலான நாடுகளில் நடைபெறும் செய்திகளை அந்த அந்த நாட்டிலிருக்கும் செய்தியாளர்கள் திரட்டி அனுப்புகின்றனர்.இது தவிர புதினம்.காம்,சங்கதி,பதிவு,லங்காசிறீ,தினக்குரல்,உதயன், தாட்சுதமிழ்,வெப் உலகம், சிபி.காம், பி,பி.சி.தமிழ்,வணக்கம் மலேசியா முதலான தளங்கள் பல்வேறு வகையில் அன்றாடச் செய்திகளைத் தருகின்றன.வார இதழ்கள்
தமிழகத்தில் அச்சில் வெளிவரும் வார இதழ்கள் பலவும் மின்னிதழாகவும் வெளிவருகின்றன. மின்னிதழின் தரம் படிப்பாளிகளை மனத்தில்கொண்டு சிறப்புப் பகுதிகளைத் தேர்ந்தெடுத்தும் சில இதழ்கள் வழங்குகின்றன. ஆனந்தவிகடன், குமுதம், மங்கையர்மலர், கல்கி,நக்கீரன்(வாரம் இருமுறை) முதலிய இதழ்கள் இணைய இதழ்களாகவும் கிடைக்கின்றன.இவற்றுள் சிலவற்றை இலவசமாகவும்,சிலவற்றைக் கட்டணம் கட்டியும் படிக்கவேண்டியுள்ளது.திண்ணை வாரந்தோறும் புதுப்பிக்கப்படுகின்றது.இதன் வடிவமைப்பும்,வகைப்பாடும் கண்ணைக்கவரும் வண்ணம் உள்ளது. முகப்பு,அரசியலும் சமூகமும்,கதைகள், கவிதைகள், அறிவியலும் தொழில்நுட்பமும்,கலைகள்-சமையல் என்னும் வகைப்பாட்டில் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. எட்டாண்டுகளாகத் தொடர்ந்து வாரந்தோறும் இவ்விதழ் புதுப்பிக்கப்பட்டுத் தரமான படைப்புகளைத் தாங்கி வெளிவருகின்றமை பாராட்டிற்கு உரியது. உலகம் முழுவதும் இவ்விதழுக்கு வாசகர்கள் உள்ளனர்.அதுபோல் படைப்பாளிகளும் உள்ளனர்.உலகம் முழுவதும் நடைபெறும் தமிழ் சார்ந்த இலக்கிய நிகழ்வுகளைத் திண்ணை வழங்குவதில் ஓர் உலகப்பார்வை உள்ளமை புலனாகும். அனைத்துத்தர மக்ககளும் அமர்ந்துபேசும் இடமாகத் திண்ணை இருப்பதுபோல் திண்ணை இணையதளமும் அனைத்துக் கொள்கைகளையும், கருத்துகளையும் கொண்டவர்களைத் தம் எண்ணங்களை வெளிப்படுத்த வாய்ப்பை உருவாக்கித் தந்துள்ளமை திண்ணையின் தனிச்சிறப்பாகும்.திண்ணையில் பல வகையான படைப்பாளிகளும் தங்கள் படைப்புகளை வந்து வழங்குகின்றனர். கதை, கட்டுரை,கடிதம், ஆய்வுகள், நாட்டு நடப்புகள், இலக்கியச் சந்திப்புகள், விவாதங்கள்,உலக அரசியல் முதலியன பற்றிய பல தரமான படைப்புகள் திண்ணையில் வெளியிடப்பட்டுள்ளமையை அதன் முந்தைய ஆவணப்பகுதிக்குச் சென்று பார்வையிடும்படி பழைய இதழ்கள் தொகுத்தும் திண்ணையில் வைக்கப்பட்டுள்ளன.திண்ணையில் கி.இராசநாராயணன், அம்பை, கோபால்இராசாராம், அ.மார்க்சு, விக்கிரமாதித்தியன், காஞ்சனாதாமோதரன், வாசந்தி, பாவண்ணன்,வ.ந.கிரிதரன், பழ.நெடுமாறன், இன்குலாப், சா.கந்தசாமி, இந்திராபார்த்தசாரதி, தேவமைந்தன், செயபாரதன், பிச்சினிக்காடு இளங்கோ முதலானவர்கள் பலவகையில் தங்கள் படைப்புகளை வழங்கியுள்ளனர்.மாத இதழ்கள்
தமிழ் இணைய இதழ்கள் மாதஇதழாகவும் சில வெளிவருகின்றன. அவற்றுள் கனடாவிலிருந்து வெளிவரும் பதிவுகள் இதழ் குறிப்பிடத்தக்க ஒன்றாகும் (www.pathivugal.com). பதிவுகள் இலவசமாக வெளிவரக்கூடிய இதழாக இருப்பினும் ஆண்டுக்கு 24 டாலர் கட்டணம் கட்டும்படி வேண்டுகிறது. ['பதிவுகள் இலவசமாக வெளிவரக்கூடிய இதழாக இருப்பினும் ஆண்டுக்கு 24 டாலர் கட்டணம் கட்டும்படி வேண்டுகிறது' என்பது பிழையான அர்த்தத்தைத் தந்துவிடுகிறது. 'இலவசமாக வெளிவரக் கூடிய இதழாக இருப்பினும்' என்னும் சொற்தொடர் தற்பொழுது பதிவுகள் அவ்வாறில்லையென்னுமொரு அர்த்தத்தைத் தந்துவிடுகிறது. உண்மையில் தற்பொழுதும் பதிவுகள் இலவசமாகவே வெளிவருகிறது. பதிவுகளைச் சந்தா செலுத்திப் படிக்க வேண்டியதில்லை. ஆயினும் சந்தா செலுத்த விரும்பினால் செலுத்தலாமென்றுதான் கூறியிருக்கிறோம். 'பதிவுகள் இலவசமாக வெளிவரும் இதழாக இருப்பினும்' என்றிருந்திருக்க வேண்டும். - பதிவுகள்] ஆசிரியர் வ.ந.கிரிதரன். 2000 ஆம் ஆண்டில் கனடாவிலிருந்து தொடங்கப்பட்டது.தொடக்கத்தில் முரசுஅஞ்சல் (இணைமதி) எழுத்துரு பயன்படுத்தப்பட்டது. இப்பொழுது ஒருங்குகுறி எழுத்து பயன்படுத்தப்படுகிறது.அரசியல்,கவிதை,சிறுகதை,கட்டுரை,நூல்விமர்சனம்,நிகழ்வுகள்,அறிவியல்,திரைப்படம்,வாசகர் எதிரொலி, நாவல்,உங்கள் நலம், விவாதம், தமிழ் வர்த்தக கையேடு, இலவச விளம்பரம்,நூல் அங்காடி, சமூகம் என்னும் தலைப்புகளில் செய்திகள் வெளியாகின்றன.இலக்கிய இதழ்கள்
இலக்கியம், இலக்கணம், படைப்புகள் சார்ந்த செய்திகளைக்கொண்டும் இதழ்கள் வெளிவருகின்றன. திண்ணை என்னும் இணைய இதழ் பல்வேறு படைப்பாளிகள், எழுத்தாளர்கள்,ஆய்வாளர்களின் படைப்புகளைத் தாங்கித் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தோறும் வெளிவருகின்றது.புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தெளிதமிழ் என்னும் மாத இதழ் இலக்கியம், இலக்கணம் தமிழ்வளர்ச்சி சார்ந்த செய்திகளைத் தாங்கி வெளிவருகின்றது.பதிவுகள் என்னும் இதழ் கனடாவிலிருந்து வ.ந.கிரிதரன் அவர்களால் சிறப்பாக இலக்கியம் சிறுகதை,கவிதை,கட்டுரை முதலான பலதரப்பட்ட செய்திகளுடன் வெளிவருகின்றமை குறிக்கத்தக்க ஒன்றாகும். இந்த இதழில் திண்ணை, தமிழ்மணம், விக்கிபீடியா, வார்ப்பு, நூலகம்,கீற்று,மதுரைத்திட்டம், சென்னை நூலகம் முதலான இதழ்,தளங்களுக்கான இணைப்புகளைக் கொண்டிருப்பது தனிச்சிறப்பு.படைப்பாளிகளுடன், இலக்கிய ஆர்வலர்களுடன் தம் சிந்தனையைப் பகிர்ந்து கொள்ளவும், எல்லைகளைக் கடந்து அனைவருடனும் தொடர்புகொள்ளவும் பதிவுகள் தோற்றுவிக்கப்பட்டது என்ற் இதன் நோக்கம் பதிவாகியுள்ளது. குழுமனப்பான்மையின்றி, அனைவரும் கலந்து பங்காற்றும் இதழாகவும், உலகில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகளை இலவசமாக வெளியிடும் இதழாகவும் இது உள்ளது. இவ்விதழில் இந்திரன், செயபாரதன், கா.சிவத்தம்பி, செயமோகன், சுப்பிரபாரதிமணியன், அ.முத்துலிங்கம், பிச்சினிக்காடு இளங்கோ, நளாயினி, சோலைக்கிளி கிரிதரன் முதலானவர்கள் பல்வேறு பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.வடஅமெரிக்கா,ஆத்திரேலியா,ஐரோப்பா,சிங்கப்பூர்,சப்பான்,மலேசியா,இலங்கை,இந்தியா உட்பட பலநாடுகளின் வாசகர்கள் இந்த இதழுக்கு உண்டு.பதிவுகள் தமிழில் வெளிவந்தாலும் ஆங்கிலப் படைப்புகளும் இதில் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.மாத இதழாகப் பதிப்பிக்கப்பட்டு அனைவராலும் விரும்பிப்படிக்கப்படுகின்றது.பொள்ளாச்சியிலிருந்து பொள்ளாச்சிநசன் அவர்களால் வெளியிடப்படும் தமிழம்.நெட் (www.thamizham.net) என்னும் இதழ் தமிழில் வெளிவரும் இதழ்களுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்(இதனைத் தளமாகவும் கொள்ளலாம்).தமிழறிஞர்களின் படங்கள்,அறிஞர்களின் வாழ்க்கைக்குறிப்பு,பொள்ளாச்சி நசன் அவர்களுக்கு வரும் இதழ்கள் மடல்கள் பற்றிய விவரம்,நூல் மதிப்புரை,தமிழ்ப்பாடம்,திருக்குறள்,இலக்கிய நிகழ்வுகள்,அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.இதில் இடம்பெற்றுள்ள பாடங்கள் உலக அளவில் மதிக்கப்படுகின்றன. மாதந்தோறும் புதுப்பிக்கப்படுகின்றது.புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தெளிதமிழ் தலைசிறந்த தமிழறிஞர்களின் பாடல்கள், இலக்கண,இலக்கியம் சார்ந்த கட்டுரைகள்,நூல்மதிப்புரை,தமிழ்சார்ந்த நிகழ்வுகள்,பாடல் எழுதும் பயிற்சி முதலியவற்றைக்கொண்டு மூன்று இதழாக இணைய இதழாக வெளிவருகிறது.இணைய இதழ்களின் பயன்
இணைய இதழ்களைப் படிப்பவர்கள் உலக அளவில் உள்ளதால் படைப்பாளியின் படைப்பு உலக அளவில் செல்கிறது.உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியை இணைய இதழ்கள் செய்கின்றன.ஒரு படைப்பாளியின் படைப்புகளை எளிதில் திரட்டமுடிகிறது. பின்னூட்டங்களின் வழி நம் படைப்புகளின் தன்மையை உணரமுடியும்.அச்சு வடிவ இதழ்களைப் படித்த பிறகு சேமிக்க வீட்டில் இடம் தேவை.அச்சுவடிவ இதழ்கள் நம்மை அடைய கால தாமதம் ஏற்படலாம்.இதழ்களை வாங்க தொகை தேவை.ஒரு இதழை ஒரு இடத்திலிருந்து ஒருவர்தான் படிக்கலாம்.ஆனால் இணைய இதழை உலகின் பல பகுதிகளிலிருந்து பலர் படிக்கலாம்.பி.பி.சி. போன்ற தளங்களில் செய்திகைளைப் படிப்பதுடன் செய்திகளை ஒலிவடிவில் கேட்கவும் முடிகிறது.இணைய இதழ்களைப் பலர் தொடங்கி நடத்தினாலும் சில இதழ்கள்தான் தொய்வின்றி வருகின்றன.தரமாக இதழ்கள் வெளிவந்தாலும் போதிய ஆதரவு இன்மையாலும்,பொருள் நெருக்கடியாலும்,குழு மனப்பான்மையாலும் பல இதழ்கள் வெளிவராமலும் பராமரிக்கமுடியாமலும் போய்விட்டன.வெளிவந்த,வெளிவரும் சில இதழ்களைத் திரட்டித்தர இக்கட்டுரை முனைகிறது (இப் பட்டியல் முழுமையானதல்ல.விடுபட்ட இதழ்களைத் தெரிவிக்கப் பட்டியலை முழுமைப்படுத்தலாம்).
தமிழில் சில இணைய தளங்களும், இதழ்களும்1. தினமலர் www.dinamalar.com2. தினகரன் www.dinakaran.com3. தினதந்தி www.dailythanthi.com4. குமுதம் www.kumudam.com5. தட்சு தமிழ் http://thatstamil.oneindia.in/6. மாலைமலர் www.maalaimalar.com7. தினமணி www.dinamani.com8. பதிவு.காம் www.pathivu.com9. தமிழ் சினிமா.காம் www.tamilcinema.com10. தமிழ் ஈ11. ஆனந்தவிகடன் www.vikatan.com12. நிதர்சனம் www.nitharsanam.com13. வீரகேசரி ஆன்லைன் www.virakesari.lk14. யாழ்இணையம் www.yarl.com15. அறுசுவை www.arusuvai.com16. வெப்உலகம் www.webulagam.com17. பி.பி.சி தமிழ் www.bbc.co.uk/tamil18. சிபிதமிழ் www.tamil.sify.com19. மாலைச்சுடர் www.maalaisudar.com20. உதயன் தமிழ்நாளிதழ் www.uthayan.com21. தமிழன் எக்சுபிரசு www.tamilanexpress.com22. தமிழ்.நெட் www.tamil.net23. தமிழ்க்கூடல் www.koodal.com24. தமிழ்பிலிம் மியூசிக் www.tfmpage.com25. சினிமா எக்ச்பிரசு(ஒருங்குகுறி) www.cinemaexpress.com26. தேனி.இலங்கை www.thenee.com27. தினபூமி www.thinaboomi.com28. தமிழ்மணம் www.thamizmanam.com29. தமிழ் பிலிம் கிளப் www.thamilfilmclub.com30. விக்கிபீடியா (மேலே உள்ளவை அலெக்சா பட்டியல்) www.wikipedia.org31. புதினம் www.puthinam.com32. பதிவுகள் www.pathivukal.com33. சங்கதி www.sankathi.com34. அதிர்வு www.athirvu.com35. சுடரொளி www.sudaroli.com36. யாழ் இணையம் www.yarl.com37. தமிழ்ஆர் www.tamilr.com38. சுவிசு முரசம் www.swissmurasam.com39. மட்டுஈழநாதம் www.battieezanatham.com40. ஈழநாதம் www.eelanatham.com41. தினக்குரல் www.thinakural.com42. ஒரு பேப்பர் www.orupaper.com43. பரபரப்பு www.paraparapu.com44. முழக்கம் www.muzhakkam.com45. கனடாமுரசு www.canadamurasu.com46. சுதந்திரன் www.suthanthiran.com47. ஈழமுரசு www.eelamurasu.com48. தமிழ்முரசு49. விடுதலை www.viduthalai.com50. தமிழ்நாதம்51. லங்காசிறீ www.lankasri.com52. தமிழர்தகவல் மையம் www.maalaisudar.com53. சுரதா www.suratha.com54. தமிழ்நியூசு டி.கே www.tamilnews.dk55. சற்றுமுன் www.sarumun.com56. கல்கி www.kalkiweekly.com57. வணக்கம் மலேசியா www.vanakkammalaysia.com58. அலைகள் www.alaikal.com59. தென்செய்தி www.thenseide.com60. நோர்வே தமிழ் www.norwaytamil.com61. ஈழதமிழ் www.eelatamil.com62. நெருடல் www.nerudal.com63. தமிழ்விண் www.tamilwin.net64. விருபா www.viruba.com65. அறுசுவை www.arusuvai.com66. சோதிடபூமி www.jothidaboomi.com67. மதுரைத்திட்டம் www.projectmadurai.com68. குவியம் www.kuviyam.com69. நாதம் www.natham.com70. தமிழோவியம் www.tamiloviam.com71. காலச்சுவடு www.kalachuvadu.com72. உயிர்மை73. அப்பால் தமிழ் www.appal-tamil.com74. வார்ப்பு(கவிதை இதழ்) www.vaarppu.com75. நெய்தல் www.neithal.com76. கவிமலர் www.kavimalar.com77. இளமை78. தமிழமுதம்79. நிலாச்சாரல் www.nilacharal.com80. தமிழம் www.thamizham.net81. எழில் நிலா www.ezhilnila.com82. வானவில் www.vaanavil.com83. தமிழ்த்திணை(ஆய்வுஇதழ்) www.tamilthinai.com84. தோழி.காம்85. திசைகள்86. அம்பலம் www.ambalam.com87. ஆறாம்திணை www.araamthinai.com88. மரத்தடி www.maraththadi.com89. தமிழ் எழுதி www.http://tamileditor.org90. தமிழ்முரசு(சிங்கப்பூர்-ஒருங்குகுறி) www.tamilmurasu.asia1..com.sg91. அமுதசுரபி92. கலைமகள்93. முரசொலி www.murasoli.in94. கீற்று www.keetru.com95. தமிழகம்.காம் www.thamizhagam.com96. மஞ்சரி97. ஈழவிசன்98. தமிழ் ஆசுதிரேலியா www.tamilaustralian.com99. எரிமலை www.erimalai.com100. இன்தாம் intamm101. வரலாறு www.varalaaru.com102. மொழி www.mozhi.net103. செம்பருத்தி www.semparuthi.org104. தமிழமுதம் www.tamilamutham.com105. தாயகப்பறவைகள் www.thayakaparavaikal.com106. தமிழ் இணையப்பல்கலைக்கழகம் www.tamilvu.org107. சூரியன் www.sooriyan.com108. திண்ணை www.thinnai.com109. புதுச்சேரி.காம் www.pudhucherry.com110. நக்கீரன் www.nakkheeran.com111. தி.க.பெரியார் www.periyar.com112. தமிழ் அரங்கம் www.tamilcircle.com113. தமிழ்வாணன் www.tamilvanan.com114. திராவிடர் www.dravidar.org115. உண்மை www.unmaionline.com116. புதுவிசை www.puthuvisai.com117. முத்தமிழ்மன்றம் www.muthamilmantram.com118. தமிழகம்.நெட் www.thamizhagam.net119.மங்கையர்மலர் www.mangayarmalarmonthly.com120. கல்கி www.kakionline.com121. கீற்று வழங்கும் இணைப்புகள்(www.keetru.com)கவிதாசரன்கருஞ்சட்டைத் தமிழர்புதிய காற்றுஅணிஅணங்குகுதிரைவீரன்பயணம்விழிப்புணர்வுதீம்தரிகிடகதைசொல்லிபுதுவிசைகூட்டாஞ்சோறுஅநிச்சபுதுஎழுத்துஉங்கள் நூலகம்புதியதென்றல்வடக்குவாசல்புன்னகைஉன்னதம்புரட்சி பெரியார்முழக்கம்தலித்முரசு122. கணித்தமிழ் www.kanithamizh.com123. முத்தமிழ்ச்சங்கம் www.muthamilsangam.co.nz124. கருத்து www.karuthu.com125. சித்தர்கோட்டை www.chittarkottai.com126. பொய்கை www.poikai.com127. கௌமாரம் www.kaumaram.com128. தமிழோவியம் www.tamiloviam.com129. தமிழ்வலை www.http://kanaga-sritharan.tripot.com.com130. மலேசியநண்பன்131. கணையாழி132. கணியத்தமிழ் www.kaniyatamil.com133. தமிழ்முதுசொம் www.tamilheritage.org134. தென்றல் www.tamilonline.com/thendral135. பதியம் www.pathiyam.com136. தமிழ்வெப்துணிமா www.tamil.webdunia.com137. ஊடறு www.oodaru.com138. முத்துக்கமலம் http://www.muthukamalam.com139. வரலாறு www.varalaru.com140. தென்னிந்திய ச.வ.ஆ.நிறுவனம் www.sishri.orgபுதுச்சேரி வலைப்பதிவு பயிலரங்கில்(09.12.2007) வெளியிடப்பெற்ற மலரில் இடம்பெற்றுள்ளஇக்கட்டுரையை வலைத்தள நண்பர்களுக்கு வழங்கியுள்ளேன்.கட்டுரைச் செய்திகளைப் பயன்படுத்துவோர் இணைப்பு வழங்கவும்.முனைவர் மு.இளங்கோவன் அவர்களால் 2007ஆம் ஆண்டு இயற்றபப்பட்டதுhttp://www.geotamil.com/pathivukal/dr_mu_elangovan_on_internet_magazines.htmhttp://tooriga.wordpress.com/2008/06/01

இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்? இணைய இதழா, அச்சிதழா? எது நீடிக்கும்?- பேராசிரியர் அ.பசுபதி(தேவமைந்தன்)ஓர் இதழ் மிகுந்த விற்பனையுள்ளதா, குறைந்த விற்பனை உள்ளதா, அப்படியாயின் அது பேரிதழா சிற்றிதழா என்ற வினா மறைந்துபோய், இணைய இதழா அச்சிதழா இன்றைய வளர்ச்சியில் எது நீடிக்கும் என்ற வினா உலகம் முழுதும் எழுந்துள்ளது.. இணைய இதழ், அச்சிதழ் - இவற்றுள் எது சிறந்தது? என்ற வினாவைத் திண்ணை இணைய இதழில் (ஆகஸ்ட் 10, 2006;வியாழன்) எழுப்பியுள்ளார் ஜெர்மனியில் வாழும் சந்திரவதனா செல்வகுமாரன்.இணைய இதழ்களின் வரவால் இன்றைய ஜெர்மனிய இதழ்கள் ஆட்டம் கண்டுள்ளன என்கிறார் அவர். இந்த நிலையில் நமது இதழ்கள் நாளேடுகளின் எதிர்காலம் எப்படி அமையப் போகிறது என்று ஆர்வமுறுகிறார். ஈழத் தமிழர்கள், பன்னாட்டுத் தொடர்பும் இடையூடாட்டங்களும்[interactions] கொண்டவர்கள் என்பதால் அவர் எழுப்பியுள்ள வினா, அவர்களைப் பொறுத்தவரை பொருள் மிகுந்ததுதான். கரணியம், அவர் விதந்தோதியுள்ள 'பூவரசு' என்ற இதழ், தன் பதினேழாவது ஆண்டில் தொடர்ந்து அச்சுப் பதிப்பாக வருவதா அல்லது இணைய இதழாகி விடுவதா என்ற இக்கட்டுக்கு உள்ளாகி இருக்கிறது.புலத்தில் படைப்பாளரும் இதழ் வெளியீட்டாளரும் மிகுந்த பணநெருக்கடிக்கு ஆளாகிறார்கள். உள்ளூரில் வெளியாகும் பேரிதழ்கள்தாம் படைப்புகளுக்குப் பணம் தர முடியும். வேறுவகையில் சொன்னால் புலத்தில் வெளியாகும் பரவலான வாசிப்புடைய இதழின் வெளியீட்டாளருக்கு உள்ள பொருளியல் நிலையும் உள்ளூரில் நடத்தப்பெறும் சிற்றிதழ் வெளியீட்டாளருக்குள்ள பொருளியல் நிலையும் ஒன்றேதான். இணைய இதழ் நடத்துவோர் ஆண்டுக்குச் செலவிடும் தொகை, பரவலான சிற்றிதழொன்றுக்கு மாதமொன்றுக்குத்தான் சரிவரும். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் இப்பொழுது ஒரு காசும் செலவு செய்யாமல் இணைய இதழை நடத்தும் வாய்ப்பை இணைய நிறுவனங்கள் தர முன்வந்திருப்பதுதான். பணத் தட்டுப்பாட்டுடன் இணைய இதழை நடத்தி மாய்வதைவிட, வருமானத்துக்குரிய பணியொன்றைச் செய்துகொண்டே மனநிறைவுடன் தொடர்ந்து தன்னிதழை, மேலதிகமான வாசகர்ப் பரப்புடன் நடத்தக்கூடிய வாய்ப்பு வருகிறதெனில் விடுவாரா, அவ்வாறு இக்கட்டில் உள்ள ஓர் இதழாசிரியர்? 'பூவரசு' இதழாசிரியரைக் குறித்து நான் இவ்வாறு சொல்லவில்லை. ஏனெனில், அவர் அதை வாசகரிடம் விட்டிருக்கிறார். அவர்கள் எவ்வாறேனும் அவ்விதழைத் தொடர்ந்து நடத்தவே வேண்டும் என்று கருத்துரைத்திருக்கின்றனர்.பழகிவிட்ட கண்களுக்கு, அச்சுப்பதிப்பாக வரும் இதழ் தரும் மனநிறைவு இணைய இதழால் வராது. இது உண்மையே என்றாலும், தொடர்புடையதே. பொதுவாக இன்றைய தலைமுறையில் உள்ள வளரிளம் பருவத்தினர் இணைய இதழை வாசிக்கவே விரும்புகின்றனர். நான் வழக்கமாக இணையமுலவும் நடுவத்தில், அதை நடத்துபவர் ஒழுங்குக்கு முதன்மை கொடுப்பவரென்பதால், ஆக்கவழியில் இணையமுலவும் வளரிளம்பருவத்தினர் பலர் வந்து செல்கின்றனர். அவர்களுள் பல்கலை மாணவர் ஒருவரிடம் இது குறித்துக் கேட்டபொழுது, தமிழ்நாட்டில் விற்பனையில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் வார இதழ் ஒன்றை, நாள்தோறும் பகுதி பகுதியாக அவர் படிக்கிறார் என்றும் ஏணைய இணையம் உலவும் பொழுதைத் தன் ஆய்வுப் பணித்திட்டம் உருவாக்கச் செலவிடுகிறார் என்றும் அறிந்து கொண்டேன்.அந்த வார இதழ் விலை பத்துரூபாவுக்கும் குறைவுதானே, ஒரு முறை வாங்கிக் கொண்டால் போதுமே, கையிலோ பையிலோ வைத்துக் கொண்டு இதேபோல் வாரம் முழுதும் வாசிக்கலாமே என்று கேட்டேன். அவர் சொன்ன மறுமொழி என்னைப் பெரிதும் ஆச்சரியப்பட வைத்தது. "ஒரு மணிநேரத்துக்கு இங்கு இணையம் உலவப் பதினைந்து ரூபா. இதே சாலையில் மேல்நிலைப் பள்ளியருகில் பன்னிரண்டு ரூபாதான். சூழ்நிலை, அப்பா வழங்கும் கைப்பணம் ஆகியவற்றைப் பொறுத்து அங்கும் இங்கும் இணையமுலவுவேன். பணித்திட்டத்தைத் தரவுகளிலிருந்து தட்டெழுதும்பொழுது சலிப்பு வரும். அப்பொழுது, வந்தவுடன் முகவரியிட்டு வரவழைத்து சுருக்கி(minimise)வைக்கும் அவ்விதழை விரிவாக்கி வாசித்துவிட்டு மீண்டும் பணித்திட்டத்தில் இறங்குவேன். இதனால் எனக்கு வேலையும் நடக்கிறது. நான் விரும்பும் இதழை இலவசமாகவே வாசிக்கவும் முடிகிறது. அதை வாங்கி, அடுத்தவர் கேட்டு, அவருக்குக் கொடுத்து, திரும்பப் பெற துன்பப்படவும் வேண்டியதில்லை. தூசியுமில்லை. பழையதாள் கடைக்குச் சுமந்து சென்று தொல்லைப்பட வேண்டியதுமில்லை" என்றார் அவர். என் அடுத்த வினாவையும் கேட்டேன். "நீங்கள் வாசிக்கும் இதழ் முழுவதையும் இலவசமாகத் தருவதில்லையே! கதை, கட்டுரைகளின் முதற்பகுதியைத்தானே தருகிறார்கள்..'மேலும் வாசிக்க' என்று கேட்டால், நம் மின்னஞ்சல் முகவரி கேட்கிறார்கள். தொகை அனுப்பச் சொல்கிறார்களே..." என்றேன். அவர் மர்மமான புன்னகையொன்றை உதிர்த்தார். "குறிப்பிட்ட சாவி மட்டும்தான் பூட்டைத் திறக்குமா?" - என்று விக்கிரமாதித்தன் கதையில் வரும் வேதாளத்தின் பாணியில் வினாவொன்றை உதிர்த்துவிட்டு, தன் ‘டூவீல’ரைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டார்."இணையங்களின் வரவுக்குப் பின், குறிப்பாக வலைப்பதிவுகளின் வரவுக்குப்பின் [அச்சுப்] பதிப்புகளோடான ஊடாடல் வாசகர்களிடையே குறைந்துவிட்டதுதான் அப்பட்டமான உண்மை" என்று சொல்லும் சந்திரவதனா, "எப்போதுமே [அச்சுப்] பதிப்பாக வரும் ஒன்றுக்கு இருக்கும் தனித்தன்மை இணைய இதழ்களுக்கு இல்லை.." என்ற தெளிவான கருத்துடையவர் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.அதனால்தான், நானும், எனக்கென்று மூன்று இணைய வலைப்பதிவுகள் உள்ளபொழுதும் அவற்றை விடாது இடுகைகளிட்டு நிகழ்த்துவதுடன், தொடர்ந்து அச்சிதழ்களுடன் ஊடாடியும் படைப்புகள் தந்தும் வருகிறேன்.இளந்தலைமுறையினரில் விதிவிலக்கானவர்களைத் தவிர எல்லோரும் வகைவகையான ‘மொபைல்’களுக்குச் செலவிடுகிறார்கள்; ‘ஸ்ப்ரே’க்களுக்குச் செலவிடுகிறார்கள்; திரைப்படங்களுக்குச் செலவிடுகிறார்கள்.[திரைப்படம் ஒன்றுக்குச் சீட்டு, நொறுக்குத் தீனி, ‘சாஃப்ட் டிரிங்ஸ்’ ஆகியவற்றுக்கு ஆகக்குறைவாக ஐம்பது ரூபாவாவது தனக்குச் செலவாவதாக தொ.கா.'வில் ஓரிளைஞர் குறிப்பிட்டார். தான் நண்பர்களுக்குச் செலவிடுவதோ, கெட்ட பழக்கங்களுக்குச் செலவிடுவதோ இல்லை என்றார். தனக்குப் பிடித்த படத்தை இவ்வாறு குறைந்தது ஏழு,எட்டு முறையாவது பார்த்துவிடுவாராம். "ஒரு வாரத்துக்கு எத்தனைப் படம் பார்ப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, "எப்படியும் ஏழுக்குக் குறையாது!" என்றார். வாரத்துக்கு ஏழு நாட்கள்தாமே!...] ஆனால் புத்தகத்தையோ, இதழையோ காசு கொடுத்து வாங்க விரும்புவதில்லை. தரமான இதழ் என்றால் சொல்ல வேண்டுவதே இல்லை. பணிக்குச் செல்லும் பெண்டிரும், இல்லத்தரசியருள் பலரும் வாடகை நூலகங்களையே பெரிதும் பயன்படுத்துகின்றனர். எட்டு ரூபா இதழை இரண்டு ரூபா வாடகைக்குத் தரும் அத்தகைய நூலகங்களுக்குப் போட்டியாக, ஒரு ரூபாவுக்கே தரும் ‘மொபைல்’ வாடகை நூலகங்களும் உள்ளன. ‘டி.வி.எஸ். டூவீலர்’ அதற்கு வசதியாக உள்ளதாம். இணையம் உலவுவோரில் தொண்ணூறு சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள், இதழ்களை விலைகொடுத்து வாங்கி வாசிக்கும் மனம் இல்லாதவர்கள் என்பதே உண்மை. எதிர்வரும் 2010ஆம் ஆண்டளவில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள - ஐம்பது அகவைக்கு மேற்பட்டவர்களே இதழ்களை வாசிப்பார்கள் என்கிறது ஆராய்ச்சி.இதழ்கள் சிலவற்றுக்குப் படைப்புகளை அனுப்புவோர், தம் படைப்பு அதில் வெளிவந்துள்ளதா என்பதை அறிய, அவற்றை விலை கொடுத்து வாங்கிப் பார்த்தே அறிந்தாக வேண்டும் என்று கேள்விப்படுகிறேன். அதே பொழுது, மூன்று உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால், சேர்த்து விடுபவருக்கு இலவசமாக இதழைத் தொடர்ந்து அனுப்பும் இதழ்களும் உள்ளன. படைப்பாளருக்கும் புரவலருக்கும் தனித்தனியே இதழ்களைப் பொறுப்பாக அனுப்பித் தரும் இதழ்கள் உள்ளன. இணைய இதழ் எனில் இந்தச் சிக்கல் எதுவுமில்லை.காலாண்டிதழ் ஒன்று. அதன் ஐந்தாவது இதழை வாசித்து முடித்துவிட்ட பின்பு, அதன் முன்னிதழ்கள் பாதுகாப்பாக வைக்கப்பெற்றுள்ள[ஓதமில்லாமல் வறண்ட]இடத்துக்குச் சென்று பார்த்தேன். முதலாம் இதழும் இரண்டாம் இதழும் பழுப்பாகி அச்செழுத்துகள் மங்கித் தெரிந்தன. இணைய இதழ் அவ்வாறில்லை. மின்னூலும் அப்படியே. இப்பொழுது கூகிள் தேடுதளத்தில் 'மரபுத் தொடர்கள்' என்று தட்டெழுதித் தேடினால் இலவசமாகக் கிடைக்கும் சோலைக்கிளி அவர்களின் 'காகம் கலைத்த கனவு' என்ற முழு மின்னூல், மதுரை மின் நகலகத் திட்டத்தாரால் உருவாக்கப் பெற்றுள்ளது. அதன் தலைவர், சுவிட்சர்லாந்தில் வாழும் டாக்டர் கல்யாணசுந்தரம் அவர்கள். ஜெர்மனியில் வாழும் திரு கண்ணன் அவர்கள், அத்திட்டத்தின் செயலாக்க ஆசிரியர். வடிவான நூல். என் மேசையின் சிறிய இழுவியுள் அது போன்ற இருநூறு நூல்களை வைத்துக் கொள்ள முடியும். இணைய இதழ்கள் பலவற்றை, "எதைக் கொண்டு போனோம்! அதைக் கொண்டு வருவதற்கு!" என்ற எதிர்மறை முறையில், உலவுபுலங்களில் வாசித்துவிட்டு வந்து விடுகிறேன். 'புதுச்சேரி' மின்னிதழை வாசிக்கும்பொழுதே கூடல், வார்ப்பு, திசைகள், தமிழோவியம், மரத்தடி, முத்தமிழ் மன்றம், திருக்குறள், எழில்நிலா, தமிழம், அன்புடன் புகாரி, அம்பலம், ஆறாம் திணை, கதம்பம், தமிழமுதம், தமிழ்மண், பதிவுகள், நிலாச்சாரல், நம் நாடி, சிஃபி, இ-சங்கமம், தமிழன் எக்ஸ்பிரஸ், கல்கி, மங்கையர் மலர், விகடன், குமுதம், திண்ணை, கீற்று ஆகிய இணைய இதழ்களையும் சுட்டிசொடுக்கி வாசித்துவிட முடிகிறது. இவற்றுள் கூடல், முத்தமிழ் மன்றம், திருக்குறள், தமிழம், தமிழமுதம், நிலாச்சாரல், சிஃபி தமிழ் ஆகியவை இணைய தளங்களும் கூட. குமுதம்(=குமுதம் குழும இதழ்களான தீராநதி முதலியவை), விகடன்(+ விகடன் குழும இதழ்களாகிய சுட்டி விகடன் முதலியவை), தமிழன் எக்ஸ்பிரஸ், மங்கையர் மலர், கல்கி ஆகியவை அச்சிதழ்களாகவும் இணைய இதழ்களாகவும் ஒரே நேரம் வெளிவருபவை. ஏன் இவை அச்சிதழ்களாக மட்டும் வெளிவரவில்லை? இவ்வாறு இணைய இதழ்களாகவும் வந்தால்தான் மேலும் பரவலான பன்னாட்டு வாசகர் வட்டத்தைப் பெறமுடியும் என்பதே விடை. இன்னும் மின்னிதழ்களாக வரும் நாளேடுகளும் உள்ளன அல்லவா? தினகரன், தினத்தந்தி, தினமலர் முதலானவையும் அவ்வகையில் குறிப்பிடத் தகுந்தவை.ஆகவே, மேற்குறிப்பிட்ட செய்திகளை வைத்துப் பார்க்கும்பொழுது, இன்றைய நிலையில் தரமானதோர் அச்சிதழாக வரும் ஒன்று, நீடித்து எதிர்காலத்திலும் தொடர்வதோடு நிலையாகவும் இருக்க வேண்டும் என்றால், மின்வெளியில்(Cyber Space)நுழைந்து இணைய இதழாகவும் திகழ வேண்டும் என்பது தெளிவாகிறது.நன்றி: http://kalapathy.blogspot.com/2006/10/blog-post_116106401618516138.html

வலைப்பூ இலக்கியத்தின் வளமை! முனைவர் மு. பழனியப்பன்,தமிழ் விரிவுரையாளர், மா. மன்னர் கல்லூரி, புதுக்கோட்டைஇணையம் தகவல்களின் சரணாலயம் என்ற நிலையில் மிகக் குறிப்பிடத்தக்க இடத்தைத் தற்காலத்தில் பெற்றுவருகிறது. இணையதளம், இணையச் சந்திப்ப, இணையக் கடிதம், இணையப் படங்கள், இணைய திரைப்படம், இணையக் குறும் படம், இணைய இதழ், இணைய அகராதி, இணைய நூலகம், இணையக் கல்வி, இணைய விளையாட்டு, இணைய வணிகம், இணையச் சுற்றுலா, இணைய வரைபடம், இணையக் குழுமம், இணைய நட்பு, இணையக் காதல், இணைய வங்கி, இணைய அலுவலகம் என்று எல்லாத் துறைகளுடனும் இரண்டற கலந்து விட்ட ஒரு காலம் இக்காலம். இத்தகைய அத்தனை வசதிகளையும் இந்தியா போன்ற வளர்ந்துவரும் நாடுகளிலும் ஓரளவு குறைந்த பணச்செலவில் பெற முடிகிறது என்பது ஒரு ஆறுதலான செய்தி.இணையத்தைப் பயன் கொள்ளுதல் என்பது ஒருமுறை. அம்முறையின் வளர்ச்சி ஒவ்வெரு இணையப் பயனாளியும் இணைய நிர்வாகியாக மாறுவது என்பதுதான். இணைய நிர்வாகியாக மாறி இணையதளம் ஒன்றைப் பொறுப்பேற்று நடத்துதல் என்பது சற்று கடினமான செயல். அதற்கென ஒரு பெயரைப் பதிவு செய்து அதை நிர்வகிக்கப் பணம் கொடுத்து அதில் இடம் பெற வேண்டிய செய்திகளை அவ்வப்போது தயாரித்து, வடிவமைத்து அதன்பின் இதனைப் பயன் படுத்துபவர்களின் எண்ணங்களை ஏற்று மேலும் அதனை வளப்படுத்துதல் என்பதை வெற்றிரமாகச் செயல்படுத்துதல் என்பது ஒரு சாதனையாகும்.இந்த இணைய தளத்தை விளம்பரங்கள் முலமாக அல்லது நண்பர்களின் தொடர்பகள் முலமாக பரவலாக்கம் செய்தல், தேடு பொறிகளுக்கு தயாரிக்கப் பெற்ற இணையதளத்தை வழங்குதல் என்பது இன்னும் பெரிய கலை. இதற்குப் பல நிறுவனங்கள் இலவசமாக இணைய தளம் அமைக்க வசதி செய்து தந்தன. அவ்வசதிகளைப் பயன் படுத்தி இணைய தளம் ஆரம்பித்து அவற்றில் செய்திகளைப் படங்களை உள்ளீடு செய்து கொண்டிருக்கும் நேரத்தில் இணைய இணைப்பில் ஏதேனும் தகராறு தோன்ற மீண்டும் முதலில் இருந்து வரவேண்டும். எனவே வலையேற்றம் செய்வது என்பது மிகக் கடினமான செயல். அதைவிடக் கடினமான செயல் வலையேற்றம் செய்தவற்றில் தவறு நேர்ந்தாலோ அல்லது மாற்றி அமைக்க நேர்ந்தாலோ அவ்வ மாற்றங்களை உடன் செய்வது என்பது ஏறக்குறைய இயலாத ஒன்று.இச்சூழலில் ஒரு இணையப் பக்கம் வெற்றிகரமாக நடத்த, அவற்றில் செய்திகளை நினைத்த நேரத்தில் வலையேற்றம் செய்ய, வலையேற்றியவற்றை உடன் நிறுத்த, வலையேற்றப் பெற்ற செய்திகளுக்கு பின்னூட்டம் என்ற நிலையில் பிரதிபலிப்பகளைப் பெற ஒரு அருமையான வசதி தற்போது கிடைத்துள்ளது. இதற்குப் பெயர் வலைப்பூ என்பதாகும். இது முழுக்க முழுக்க இலவசமாகக் கிடைக்கிறது. ஒரு மனிதருக்கு எத்தனை வலைப் பூக்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அவற்றிற்கான பின்னூட்டங்களை அவர் தன் மின்னஞ்சல் முகவரியில் பெறலாம். அப்பின்னூட்டங்களும் அவ்வலைப் பக்கத்திலேயே தெரியும். மேலும் ஒரு செய்தியை வலைப்பக்கத்தில் வலையேற்றி விட்டால் அச்செய்தி நிரந்ததரமாக சேமிக்கப் பெற்றுவிடும். தேவையான போது அவற்றை எவரும் பார்க்க இயலும். அவற்றில் உள்ள செய்திகளைச் சொல், தொடர், தலைப்பு வாரியாகத் தேடிப் பெறமுடியும். கணினியில் சேமித்து வைக்கப்பெற்ற கோப்பு அழிந்து போனாலும் வலைப்பூவில் உள்ள பதிவு வழியாக மீண்டும் அந்தச் செய்தியைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது வுடுதல் வசதி. அது மட்டும் இல்லை. என் சொந்தக் கணினி என் சொந்த ஊரிலேயே இருக்க அதில் உள்ள கோப்புகளில் தேவையானவற்றை வலைப் பூவில் பதிவு செய்துவிட்டால் எந்நேரத்திலும் எவர் கணினியிலும் இணைய இணைப்ப பெற்றவடனேயே பெற்றுவிடமுடியும்.வலைப்பூ வசதியை வழங்கும் நிறுவனங்கள்வலைப்பூ வசதியைத் தற்போது பல நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன. ஒருகாலத்தில் இதில் இணைந்தபின் இந்த வசதி பணமயமாக்கப்படுமோ என்ற ஐயம் இருந்தது. ஆனால் தற்போது இந்த ஐயம் இல்லை என்ற அளவிற்குப் பெரும்பாலான நிறுவனங்கள் இவ்வசதியை வழங்கத் தயாராகி விட்டன. குறிப்பாக வுகிள் நிறுவனத்தின் தொடர்பில் பிளாக்கர் (டடிபபநச) என்ற தொடுப்பின் வழியாக ஒவ்வெருவரும் ஒரு வலைப்பூவைப் பெறமுடியும். யாகூ, எம்எஸ்என், ரீடிப் மெயில் போன்ற பரவலாகத் தெரிந்த நிறுவனங்கள் இவ்வசதியை வழங்கி வருகின்றன. இருப்பினும் பிளாக்கர் என்பதே ஏறக்குறைய பல நிலைகளில் பலராலும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.வலைப்பூ வடிவமைப்புவலைப்பூ வடிவமைப்பில் ஏற்றப்படும் வலைச்செய்திக்கு அதிக இடம் முக்கியஇடம் தரப்படும். அதன்பின் இதனை ஏற்படுத்தியவர் பற்றிய குறிப்ப ஓரிருவரிகளில் தரப்பெற்றிருக்கும். அத்தொடர்பை அபுத்தி ஏற்படுத்தியவரின் தகவல்களை அதிகமாகப் பெறஇயலும். மேலும் வலைச் செய்திகளைப் பார்க்கும் வண்ணம் ஆவணக் காப்பகத் தொடுப்ப ஒன்றும் இருக்கும். இத வார வாரியாகத் தலைப்பு வாரியாக, அடுக்கிக் கொள்ளவம் வசதி உண்டு. வலைச்செய்திகளுக்கு வரும் பின்னூட்டங்களை அதன் அடிப்பக்கத்தில் காமாண்ட்ஸ் என்ற நிலையில் அடுக்கி வைக்கப் பெற்றிருக்கும். இவற்றைத் திறந்து வந்தப் பின்னூட்டங்களுக்குத் தக்கவகையில் ஏற்படுத்தியவர் பதிலும் வழங்கலாம்.யாவு, எம்எஸ்என், ரீடிப் மெயில் போன்ற பரவலாகத் தெரிந்த நிறுவனங்கள் இவ்வசதியை வழங்கி வருகின்றன. இருப்பினும் பிளாக்கர் என்பதே ஏறக்குறைய பல நிலைகளில் பலராலும் பயன்படுத்தப் பட்டு வருகின்றது.மேலும் இவ்வலைப்பவில் பாடல்கள் ஒலிபரப்படலாம். குறும் படங்களைக் காட்சிப்படுத்தலாம். பகைப்படங்களை இணைக்கலாம். அசை படங்களை இணைக்கலாம். வலைப்பூவைத் திறந்ததும் பூமாரி பொழியச் செய்யலாம். ஓடும் வகையில் செய்திகளை ஓடவிடலாம். தற்போது எந்தக் குறிப்பிட்ட நாட்டவர் அக்குறிப்பிட்ட வலைப்பூவைப் பார்த்துக் கொண்டுள்ளார் என்பதனை அறியலாம். எத்தனை பேர்கள் இவ்வலைப்பூவைப் பார்க்கின்றனர் என்ற எண்ணிக்கையை அறியலாம். இவையெல்லாம் வுடுதல் முயற்சிகள்.மேற்வுறியவை குறிப்பிட்ட ஒருவர் ஏற்படுத்திய வலைப்பூவில் அவர் பெறும் தகவல்கள். அவ்வலைப்பூ முலம் மற்றவலைப் பூக்களைத் தொடர்ப கொள்ள இயலும். அதற்கான தொடுப்பகள் லிங்ஸ் (டமேள) என்ற அமைப்பில் பெறலாம். குறிப்பிடத்தக்க ஒருவரின் முகவரியை மற்றவர்கள் இதில் தந்து அவர் பக்கத்திற்குச் செல்லச் செய்யலாம். இவைதவிர இந்தத் தொடுப்பில் தினம் பார்க்கவிரும்பம் ஏற்பாட்டாளரின் விருப்ப தளங்களை வரிசைப்படுத்திக் கொள்ளலாம். இதன் முலம் வேறுபக்கங்களுக்கு இதன்வழியே சென்று சேர இயலும்இதற்கு அடுத்த நிலையில் வலைப்பூவை இலவசமாக வழங்கும் நிறுவனங்கள் ஏற்பாட்டாளரின் அனுமதியோடு விளம்பரங்களை இணைக்க ஒரு இடத்தை வைத்துள்ளன. அவ்விடம் அதற்கான வாடகை போன்றன வலைப் பூவை வழங்கும் நிறுவனங்களுக்குச் சென்று சேரும் வகையில் அமைக்கப்பெற்றுள்ளது. இதன் காரணமாகவே வலைப்பூக்களை இலவசமாக அளிக்கப் பெற்று வருகின்றன.வலைப்பூ முகவரிவலைப்பூவின் முகவரி விருப்பத் தேர்விற்கு உரியது. அவரவர் சுய விருப்பம் கருதி அவரவர் அவரவர் வலைப்பூவிற்குத் தமிழிலேயோ அல்லது ஆங்கிலத்திலேயே அல்லது அவரவர் மொழியிலேயே வைத்துக் கொண்டு அம்மொழியிலேயே தெரியவம் செய்யலாம். அப்பெயருக்குப் பின்னால் வழங்கும் நிறுவனத்தின் பெயர் அமையும். அதன்பின் வகைமை அமையும். எடுத்துக்காட்டிற்கு ஆயனையட. டெடிபளிடிவ.உடிஅ என்பது கட்டுரையாளரின் வலைப்பூ முகவரி. இதனடிப்படையிலேயே எல்லா வலைப்பூக்களும் முகவரியைப் பெறுகின்றன.வலைப்பூ வடிவமைக்க உதவிவலைப்பூவை இலவசமாக வழங்கும் நிறுவனங்கள் வலைப்பூவினை வடிவமைத்துக் கொள்ள அதற்கேற்ற கருவிகளையும் வழங்குகின்றன. இக்கருவிகளைக் கொண்டு முன்று படிநிலைகளில் ஒரு வலைப்பூவை வடிவமைத்துவிடலாம். ஒரே பக்கம் தான் வலைப்பூ. இது அதன் வலிமையும் கொடுமையும் வுட. எனவே அந்த ஒரே பக்கம் அழகாக இருந்தால் மட்டுமே வாசிப்பவரைக் கவரும். அதே நேரத்தில் அது ஏற்பாட்டாளரின் சுவைக்கு ஏற்ப அமைந்திருக்கவேண்டும். இவ்வகையில் ஒன்றைத் தேர்வ செய்து கொள்ளலாம். இல்லையானால் வேண்டும் போது மாற்றிக் கொள்ளலாம். மாறிக் கொள்ளலாம்.வலைப்பூவில் வலையேற்றம் செய்ய வழிகள்பிறரது வலைப்பூவை யார் வேண்டுமானலும் பார்க்கலாம். ஆனால் யார் வேண்டுமானாலும் மற்றொருவர் வலைப்பூவள் நுழைந்து வலையேற்றம் செய்துவிட முடியாது. வலைப்பூ ஏற்படுத்தியவரே தன் வலைப்பூவக்குள் நுழைந்து வலையேற்றம் செய்யமுடியும். அவருக்கு என ஒதுக்கப் பெற்றுள்ள கடவச் சொல்லைப் பயன்படுத்தி அவர் குறிப்பிட்ட வலைப்பூ வலையேற்ற உதவம் பகுதிக்குள் நுழையவேண்டும். அங்கு பதிய செய்தியை ஏற்றும் வசதி, ஏற்றிய செய்தியை அழிக்கும் வசதி, செய்திக்கு வண்ணம் பூச, படம் சேர்க்க, எழுத்துகளை பட்டை தீட்ட, சாய்க்க, உருவ ஒபுங்கு செய்ய எனப்பல கருவிகள் இருக்கும். அவற்றை இணைத்து ஒரு செய்தியை வலையேற்றம் செய்க என்ற தொடர்பை அபுத்தினால் வலையேற்றிவிடலாம். வலையேற்றிய அழகை ஏற்பாட்டாரே பார்த்து ரசிக்கலாம்.வலைப்பூவின் வரலாறுவலைப்பூ என்பதன் ஆங்கில முலம் பிளாக் (டடிப ) என்பதாகும். இதன்முலம் வெப்பிளாக் (றநடெடிப) என்பதாகும். இதுவே சுருங்கி பிளாக் ஆனது. 1994ல் பிளாக்கை உருவாக்கிய சஸ்டின் ஹால் என்பவர் பிளாக்கின் தோற்றக் காரணர்களுள் முன்நிற்பவர் ஆவார். அதன்பின் பல முயற்சிகள் தொடர்ந்துள்ளன. ஆக்ஸ்போர்டு அகராதி வெப் பிளாக், வெப்பிளாக்கர் ஆகிய சொற்களை 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தன் சொற்குபுமங்களுடன் இணைத்துக் கொண்டுள்ளது. பிளாக்கிற்கான ஏற்பாட்டுக் கருவிகளைக் கண்டுபிடித்தவர்கள் இவான் வில்லியம்ஸ், மற்றம் மெக்ஹாரிக்கான்ஸ் ஆவர். இவர்களின் குழமமான பைரா லாப்ஸ் என்பதுதான் முதன்முதலில் பிளாக்கர் என்பதை உருவாக்கியது. இவ்வசதி பின்னால் வுகிள் நிறுவனத்தால் காப்பரிமை செய்யப் பெற்று அந்நிறுவனத்திற்கு ஆக்கப் பெற்றுவிட்டது. (நுஎய றுடைடயைஅள யனே ஆநப ழடிரசரைய;ள உடிஅயலே லசய டுயளெ டயரஉநன டடிபபநச (றாஉ றயள ரசஉயளநன லெ புடிடிபடந 2004)) (வவி//றறற.தரஉநநநேறளனயடைல.உடிஅ/0505/நேறள/ளைவடிசலஸ்ரீடெடிபள.வஅட)தமிழில் வலைப்பூதமிழில் ஒருங்குறி முறை என்ற எழுத்துவடிவ முறை அறிமுகமானது மிகப் பெரிய உதவியாக வலைப்பூ ஏற்பாட்டாளர்களுக்கு அமைந்துவிட்டது. ஏறக்குறைய முதன் முதல் தமிழ்ப்பதிவு என்பது எது எனக் கண்டறியமுடியாத ஆதி அந்தமில்லா இலக்கிய வரலாற்றுச் ழலே இதற்கும். ஆனால் 2001 ஆம் ஆண்டு முதல் தமிழ் பதிவுகள் வேகம் பெற்று விட்டன என்பது மட்டும் உறுதி. வலைப்பூ ஏற்பாட்டாளர்களின் தகுதிகள்வயது, கல்வி, மொழி, இனம், பால், பெயர் என எவ்வகையிலும் கட்டுப்பாடு தேவையில்லா கட்டுப்படுத்த முடியாத அனைவரும் இதனுள் நுழையலாம். தமிழ் படிக்க வலையேற்றத் தெரிந்தால் போதும். வலைப்பூக்களின் அரங்கம்வலைப்பூவில் செய்தியை வலையேற்றம் செய்தாகிவிட்டது. அதனை எவ்வாறு மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வது. அதற்கெனத் தொடங்கப் பெற்றவைதான் அரங்கம் என்ற அமைப்பகள். இவற்றில் உறுப்பினர்களாக இணையவேண்டும்.ஒவ்வெரு வலையேற்றமும் வலைப்பூவில் நிகழ்த்தியபின் இவ்வரங்கங்களில் தேவையான இடத்தில் வலைப்பூ முகவரியைத் தந்து அற்றைநாள் முன்னேற்றத்தை ஏற்க எனக் கட்டளையிட்டால் வலைப்பூ அரங்கத்தின் பொருளடக்கம் போன்ற பக்கத்தில் இரண்டுவரிகளில் அச்செய்தி தெரிய ஆரம்பிக்கும். அதன்பின் மேலும் என்ற தொடர்பை அபுத்தினால் வலைப்பூவின் பக்கத்திற்கே சென்று சேரலாம்.இவ்வசதியை வழங்குவதில் தமிழில் குறிக்கத்தக்கவை இரண்டு. ஒன்று தேன்வுடு, மற்றொன்று தமிழ்மணம் இவற்றில் தமிழ்மணம் தனக்குத் தரப்பெற்ற வலைப்பூ வலையேற்றச் செய்திகளை வகைமை செய்து பூங்கா என்ற வலைப்பூ அரங்க இதழாக மாதம் ஒருமுறை வெளியிட்டு வருகிறது. இது மீள்வாசிப்பக்கு மேலும் உதவகிறது. இவை ஒரு வரையறை வைத்துள்ளன. கவர்ச்சி, பாலியல் செய்திகள் படங்கள் ஆகியன இடம் பெறும் தளங்களைத் தவிர்த்தலை முக்கியமாகக் கொண்டுள்ளன. இது ஒரு இன்றியமையாத நல்ல செய்திவலைப்பூ இலக்கியம்எல்லா வலைப்பூக்களும் இலக்கியச் செய்திகளைக் கொண்டிருப்பதில்லை. வாழ்க்கை, அனுபவம், கவிதை, கதை, கட்டுரை, ஆராய்ச்சிக் கட்டுரை, கடிதம் இவை போன்ற வடிவங்களில் இலக்கியம் வலைப்பூக்களில் பரவிக்கிடக்கின்றது. தமிழ்மணம் வலைப்பூஅரங்கம் வலையேற்றச் செய்திகளை இலக்கியம், சிறுகதை, கவிதை, நூல்நயம் என்ற பலபிரிவகளில் செய்திகளைத் தொகுக்கிறது. இதனை வகைப்படுத்தும் முறை ஏற்பாட்டாளரைச் சார்ந்தது என்றாலும் அதனைச் செய்ய அவர் மறந்துவிட்டால் படிப்பவர் அதனை வகைப்படுத்த இயலும்.வலைப்பூ இலக்கியங்களுக்கு என்று தனித்த நடை கிடையாது. தணிக்கை கிடையாது. அவரவர் போக்கில் அவரவர் எழுதலாம். எழுதப்படும் செய்திகளைப் பின்னூட்டத்திற்கு அளிக்கும்போது மட்டுமே அச்செய்திகளின் உண்மை பொய்மை தெரியவரும். அப்படி உண்மைக்கு மாறான செய்திகள் வழங்கப் பெற்றிருந்தாலும் அது குறித்து மன்னிப்ப வேண்ட அவசியமில்லை. கட்டற்ற இலக்கிய வகையாக இது விளங்குகிறது.அதே நேரத்தில் இதன் வசாகர்கள் சற்று வித்தியாசமானவர்கள். ஓரளவ தமிழறிவ, அதைவிட அதிக அளவ கணினி அறிவ என்ற நிலையில்தான் பல வசாககர்கள் அமைந்துள்ளனர். வலைப்பூ ஏற்பாட்டாளர்களும் அமைந்துள்ளனர். இவர்களில் தேர்ந்த இலக்கிய விமர்சகர்களும் இல்லாமல் இல்லை. அவர்கள் அவ்வப்போது இதன் நடை குறித்துச் சில செய்திகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். இருப்பினும் வலைப்பூ இலக்கியம் எவ்விதக் கட்டுப்பாடும் அற்ற இலக்கியவகையாகும். தமிழறிவ மிகுந்தவர்கள் இதனுள் அதிகம் இடம் பெறல் வேண்டும். அதன் காரணமாக இவ்வகை மேலும் உயர்வ பெறும்.திலகபாமா முதல் மாலன் வரை பெரும்பான்மை எழுத்தாளர்கள் இவ்வலைப்பூ வசதியை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். இருப்பினும் வலைப்பூ அரங்கங்கள் இலக்கியத்திற்கென தனியே வரவேண்டும். மேலும் ஆய்வக் கட்டுரைகளின் அரங்கம் என்பதாக பதியநிலையில் மற்றொரு அரங்கமும் துவக்கப் பெறலாம். இதற்குக் கணினி அறிவ சார்ந்தவரகள் உதவலாம்.மேலும் இவ்வலைப்பூ இலக்கியங்கள் பெரும் மீள்பிரதி செய்யப் பெறுவனவாகவே உள்ளன. இணைய இதழ்கள் அல்லது வெகுஜன இதழ்களில் வெளியான படைப்பகள் பல மீள்வாசிப்பக்கு இங்கு வருகின்றன. அப்படி வருகின்ற நிலையில் அதன் வெளிவந்த செய்திகளைத் தருவது தேவையானதாகும்.வலைப்பூ இலக்கியம் எல்லா இலக்கிய வகை போன்று அமைந்திருந்தாலும் இது உடனுக்கு உடன் பலரால் பார்வையிடப் பெற்று அவர்களின் மௌனத்தின் மீதோ அல்லது விமர்சனத்தின்மீதோ பின்னூட்டங்களைப் பெறுகிறது என்பதுதான் இதன் வலிமை. இப்பின்னூட்டங்கள் உண்மையான பெயரில் இடம் பெறலாம். அல்லது போல(டோண்டு டு) என்ற மறைபெயரில் பின்னூட்டத்தைத் தரலாம். இதனை ஏற்பதோ மறுப்பதோ ஏற்பட்டாளரின் கடமையாகும்.மேலும் பெண்களுக்கு உரிய இடமும் வலைப்பூவில் உண்டு. தோழி .காம் என்ற இதழ் பெண்களுக்கான தனித்த வலைப்பூக்களை வழங்கிவருகிறது. இவைதவிர இலக்கிய வலைப்பூக்கள் பல உள்ளன. இவற்றை இணைத்துப் பார்க்கும்போது வலைப்பூ இலக்கியம் என்பது தற்போது வளர்ந்து வருகிறது என்பது தெரியவருகிறது. மேலும் இதற்கான விடுதலை மற்ற ஊடகங்களில் இருந்து மாறுபட்டது. "ஆனால் தமிழில் வலைப்பதிவுகளின் அதிவேகப் பரவலுக்கு இந்த அதிகார உடைப்பதான் காரணம்'' என்ற இந்தக் குறிப்பு இங்கு கவனிக்கத் தக்கது.இவ்வாறு தனித்த நிலையில் வலைப்பூவக்கென எழுதப்படாமல் இணைய இதழ் போன்ற எதற்கோ புதியவை இங்கு ஒருங்கிணைக்கப்படுகின்றன என்பது இதன் தரத்தைச் சற்றுக் குறைக்கிறது.இலக்கியம், ஆய்வுக்கட்டுரை அடங்கிய தனித்தனி வலைப்பூ அரங்கங்கள் தோன்றிடின் சிறப்பாய் இருக்கும். இவ்வழிகாட்டுதல்கள் எதிர்காலக் கணினித் தமிழ் உலகத்தின் வளமை கருதி இங்குப் பகிர்ந்து கொள்ளப் பெறுகின்றன.palaniappan,muppalam2003@yahoo.co.in http://www.tamilthinai.com/palani/blogdrive.htm
© காப்புரிமை 2000-2008 Pathivukal.COM முகப்புDisclaimerவ.ந,கிரிதரன்

Friday, April 3, 2009

மின் குழுமம் ஒரு பார்வை

|0 comments
மின் குழுமம் ஒரு பார்வை
-முனைவர் துரை. மணிகண்டன்
தொடக்கக் காலத்தில் மனிதன், மற்றொருவனுக்கு ஒலி எழுப்பித் தன் கருத்தைத் தெரிவித்தான். இந்த ஒலிகளில் செய்யப்பட்ட ஏற்ற இறக்க முறை மொழியாக உருவானது. இந்த மொழி ஒவ்வொரு பகுதியில் வாழ்ந்த இனக்குழுவிற்கும் வேறுபட்டது. இந்த மொழி துவங்கப்பட்ட போதே தகவல் தொடர்பும் துவங்கி விட்டது. கல்வெட்டுக்கள், ஓலைச்சுவடிகள், செப்பேடுகள், இயல், இசை நாடகங்கள் போன்றவற்றின் மூலம் வளர்ச்சியடைந்த இந்தத் தகவல் தொடர்பு குறிப்பிட்ட குழுக்களுக்கானதாக இருந்தது. இதுவே அறிவியல் வளர்ச்சியின் வேகத்தில் புத்தகம், பத்திரிகை, திரைப்படம் என்று தனது எல்லையை சற்றி விரிவாக்கியது. இப்போது இணையம் எனும் புது வலைப்பின்னல் மூலம் உலகத்தை உள்ளங்கைக்குள் சுருக்கிக் கொண்டு விட்டது. இந்த இணையத்தில் குறிப்பிட்ட கருத்துக்களை உடையவர்கள், குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பிட்ட தொழிலைச் செய்து வருபவர்கள் என்று குறிப்பிட்ட ஏதாவது ஒன்றை மையமாகக் கொண்டு ஒரு குழுவாக இணைந்து அவர்களுக்குள் ஒரு கலந்துரையாடலை இணையத்தின் வழியே எழுத்துக்களின் மூலம் பகிர்ந்து கொள்ள அமைக்கப்பட்ட முறைதான் குழுமங்கள். இந்தக் குழுமங்களில் அங்கத்தினராகிக் கொள்பவர்களுக்கிடையே மட்டும் கருத்துப் பரிமாற்றம் செய்யப்படுகிறது. இந்தக் கருத்துப் பரிமாற்றங்களால் வெளிப்படுத்தும் தகவல்கள் இந்தக் குழுமத்திற்கான இணையப் பக்கங்களில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இதே கருத்து குறித்த தகவல்களை இணையத் தேடுபொறிகளில் மற்றவர்கள் தேடும் பொழுது அவர்களுக்கும் இந்த கருத்துக்கள் காணக் கிடைக்கின்றன. இப்படி கருத்தொற்றுமையால் இந்தக் குழுமங்களில் புதிய அங்கத்தினர்கள் இணைந்து விடுகின்றனர். இப்படி இந்தக் குழுமம் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
தமிழ்க் குழுமங்கள்தமிழ் மொழியிலும் இப்படி சில குழுமங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த குழுமங்கள் அமைப்பதற்கான வசதிகளை மின்னஞ்சல் வசதிகளை வழங்கி வரும் சில இணையதள நிறுவனங்கள் இலவசமாகவே அளிக்கின்றன.
1. மின் தமிழ் குழுமம்2. அன்புடன் குழுமம்3. அழகி குழுமம்4. கீற்று குழுமம்5. நம்பிக்கை குழுமம்6. தமிழ் விக்சனரி குழுமம்7. தமிழ்-நண்பர்கள்(தமிழ் நண்பர்கள் என்று தனியாக ஒன்றும் இருக்கிறது.)8. தமிழன்ஸ்29. தமிழ்மன்றம்_பி.எஸ்.ஜி10. தமிழ்மிட்பைல்ஸ்11. தமிழ் முஸ்லீம்12. தமிழ்ச்சங்கம் (தமிழ்சங்கம் என்று தனியாக ஒன்றும் இருக்கிறது.)13. தமிழ்ச்சங்கம்_பிட்ஸ்கோவா14. தமிழ்ப் பாடல்கள்15. தமிழ்ஸ்டார்ஸ்16. தமிழ்-உலகம்17. தினம் ஒரு கவிதை18. டி.எம்.ஓ. நண்பர்கள்19. துக்ளக்20. துவக்கு21. உலகத்தமிழ்22. யங்தண்டர்ஸ் 23. தமிழ்_குழு (தமிழ்க் குழு என்று தனியாகவும் ஒன்று உள்ளது.)24. தமிழ் கவிதை25. தமிழ் கிறுக்கல்கள்26. தமிழ் மீடியா27. தமிழ் கம்ப்யூட்டர்28. தமிழ் என்சைக்ளோபீடியா
இவற்றில் கூக்ளி நிறுவனத்தின் மின்னஞ்சல் வசதி அளிக்கும் ஜி-மெயில் எனும் அமைப்பில் அதிக அங்கத்தினர்களைக் கொண்டதாக ஆறு மின் குழுமங்கள் இருக்கின்றன. அவை,
1. மின் தமிழ் குழுமம்2. அன்புடன் குழுமம்3. அழகி குழுமம்4. கீற்று குழுமம்5. நம்பிக்கை குழுமம்6. தமிழ் விக்சனரி குழுமம்
மின் தமிழ் குழுமம்மின் தமிழ் குழுமம் செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் 2006 ல் தொடங்கப்பட்டது. இதன் தலைமை இடம் தென்கொரியாவாகும். இதனைத் தொடங்கியவர் தமிழ் மரபு அரக்கட்டளையின் தலைவர் திரு. நா.கண்ணன் ஆவார். இவருக்கு ஜெர்மனியைச் சார்ந்த திருமதி சுபாசினி அவர்கள் இக் குழுமம் அமைய உதவினார். இம்மின் குழுவில் தமிழ் மரபு சார்ந்த விடயங்களான ஓலைச்சுவடிகள், பழங்கால சிறப்பு மிக்க புராண இதிகாசப் பேழைகள் மற்றும் அரிதான புகைப்படங்கள், அறிவு சார்ந்த இலக்கிய, இலக்கணங்கள் போன்றவைகள் கலந்துரையாடப்படுகின்றன. இந்தக் குழுமத்தில் இதுவரை 612 பேர் அங்கத்தினராகி உள்ளனர். இவர்கள் மூலம் இக்குழுமத்தில் 15660 செய்திகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை இக்குழுமத்தின் கருத்துக்களை 90000 பேர் பார்வையிட்டுள்ளனர்.இந்த மின் தமிழ் குழுமத்தில் அதிகமாக எழுதுபவர்களில் இதன் தலைவர் நா.கண்ணன், சுபாசினி, முனைவர் இளங்கோவன், முனைவர் தி. நெடுஞ்செழியன், முனைவர். துரை.மணிகண்டன், தமிழ்த்தேனீ ஆகியோர் குறிப்பிடத்தக்கவராக இருக்கின்றனர். இவர்கள் இங்கு அதிகமான கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர்.அன்புடன் குழுமம்அன்புடன் குழுமம் யுனித்தமிழில் மட்டுமே இயங்க வல்லது. இதனை உருவாக்கியவர் கனடாவைச் சேர்ந்த திரு புகாரி ஆவார். இக்குழுமம் 2005-ம் ஆண்டு மார்ச் மாதம் ஏழாம் நாள் திங்கள் கிழமைத் தொடங்கப்பட்டுள்ளது.இக்குழுமத்தில் தமிழ் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள் பற்றிய எண்ணங்கள், தமிழ் கற்கும் பயிற்சிகள் போன்ற ஆக்கப்பூர்வமானத் தலைப்புகளில் இங்கே பகிர்ந்து கொள்ளப்பட்டிருக்கின்றன.இக்குழுமத்தில் இதுவரை 1266 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 78 அங்கத்தினர்கள் மட்டும் அதிகமாக எழுதுகின்றனர். இக்குழுமத்தில் ஒரு லட்சம் மடல்களைத் தாண்டி கருத்தாடல்கள் நடந்துள்ளது. தொடர்ந்து நடந்தும் வருகின்றன. இதில் எழுதுபவர்களில் புகாரி, பூங்குழலி, வேந்தன் அரசு, வாணி, விசாலம், கிரிஜா மணாளன் போன்றோர்கள் குறிப்பிடக் கூடியவர்கள்.அழகி குழுமம்.அழகி குழுமத்தை உருவாக்கியவர் திரு.விஸ்வநாதன் ஆவார். சென்னையிலிருந்து இக்குழுமம் செயல்படுகிறது. தமிழ் மொழி பெயர்ப்பு, தமிழில் விசைப்பலகையின் செயல்பாடு, தமிழில் அச்செடுக்கும் வழிமுறைகள், இணையம் தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் இங்கே விடை பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.இதில் 730 உறுப்பினர்கள் உள்ளனர். இதைல் 25 உறுப்பினர்கள் அதிகமாக எழுதி வருகின்றனர். அழகி குழுமத்தில் எழுதுபவர்களில் விஸ்வநாதன், ராகவன், தமிழ்த்தேனீ திரு.அன்பன், முனைவர். துரை. மணிகண்டன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருக்கின்றனர்.கீற்று குழுமம்கீற்று குழுமம் கீற்று ஆர்குட் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ளது. கீற்று குழுமத்தில் அதிகமாக பகுத்தறிவுச் சிந்தனைகள் அலசி ஆராயப்படுகின்றன. ஒப்பற்ற சுயசிந்தனையைத் தூண்டும் களமாகவும் இது செயல்படுகிறது. இதில் கீற்று இணைய இதழில் வெளியான படைப்புகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது.இதில் 319 உறுப்பினர்கள் உள்ளனர். இத் தளம் கீற்று இணைய இதழ் வாசகர்களுக்கும் ஆசிரியர் குழுவிற்கும் இடையில் ஒரு பாலமாகவே செயல்பட்டு வருகின்றது. இதில் மகிழ்னன், கலா போன்றவர்கள் அதிகமாக எழுதுகின்றனர்.நம்பிக்கை குழுமம்நம்பிக்கைக் குழுமம் 2005 ஆம் ஆண்டு ஏப்பரல் 23 நாள் தொடங்கப்பட்டுள்ளது. இக்குழுமத்தில் இறை நம்பிக்கையும், ஆன்மீகச் செய்திகளும் கலந்துரையாடப்பட்டு வருகிறது. பக்தி தொடர்பான செய்திகளும், தேவாரத் திருமுறைகளும், அர்த்தமுள்ள இந்து மதம் போன்ற இந்து மதக் கருத்துக்களை வலியுறுத்தும் செய்திகள் இடம்பெற்று வருகின்றன.இந்த நம்பிக்கை குழுமத்தில் சங்கர்குரு, விஜி சுதன், விசாலம்ராமன் சாதுக்கள், யோகிகள் போன்றவர்கள் அதிகம் எழுதுபவர்களாக இருக்கின்றனர்.தமிழ் விக்சனரி குழுமம்இக்குழுமம் தமிழ் விக்கிபீடியாவுடனும், தமிழ் விக்சனரி தளத்துடனும் சேர்ந்து உருவாக்கப்பட்ட குழுமம் ஆகும்.தமிழ் கலைச் சொல்லாக்கம், மொழிபெயர்ப்பு உரையாடல்கள் போன்றவை முக்கியமானதாகக் கொண்டு இக்குழுமம் இயங்குகிறது.விக்சனரி குழுமத்தில் 120 உறுப்பினர்கள் உள்ளனர். பத்து பேர் அதிகமாக எழுதுகின்றனர். விக்சனரி குழுமத்தில் மயூரன், செல்வா, சத்தியா, ரவிசங்கர், முனைவர். துரை.மணிகண்டன் போன்றவர்கள் எழுதுகின்றனர்.
பயன்பாடுகள்
1. இக்குழுமங்களின் மூலம் நாம் கலந்துரையாட முடிகிறது. 2. இங்கே நாகரிகமான விடயங்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. 3. விளம்பரங்கள், ஆபாசங்கள் போன்றவற்றிற்கு இங்கே அனுமதி இல்லை. 4. தமிழ் கவிதைகள், கட்டுரைகள், கதைகள், தமிழ் வளர்ச்சி, தமிழ் உறவுகள், இலக்கண இலக்கியச் செய்திகள், கணிப்பொறி சார்ந்த செய்திகள் எளிதில் பரிமாற்றம் செய்து கொள்ள முடிகிறது.மேற்காணும் குழுமங்கள் தவிர வேறு சில பெயர்களிலும் தமிழ் குழுமங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவைகளும் பல கருத்துக்களை குழு உறுப்பினர்களுக்குள் பகிர்ந்து கொண்டிருக்கின்றன. நேரடியாகப் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டிய பல சந்தேகங்களுக்கு இந்தக் குழுமங்கள் எழுத்து மூலமாகவே விடை தந்து கொண்டிருப்பதுடன் ஒத்த கருத்துக்களை உடையவர்களிடையே நட்பை உருவாக்கும் தளமாகவும் இந்தக் குழுமங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.